காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 3 செப்டம்பர், 2022

அன்பான வெட்டியெடுக்கப்பட்டவர்களே,

நாம் ஏன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!!

நாம் கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டோம். தேவனுடைய தீர்க்கதரிசியான மல்கியா 4-ன் மூலம் உரைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. நாமே அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்திற்கு உண்மையாக தரித்திருக்கிறவர்களாய் இருக்கிறோம். நாமே அவர் அளித்திருக்கிற மகத்தான கிரயத்தின் முத்தான, அவருடைய செய்திக்கும், அவருடைய செய்தியாளனுக்குமான உண்மையான வெளிப்பாடாக இருக்கிறோம்.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் வார்த்தையை எடுத்து, ஒவ்வொரு சிறு எழுத்தையும் ஒவ்வொரு சிறு உறுப்பையும் விசுவாசிக்கிற ஒரு மணவாட்டியை வெட்டியெடுத்துள்ளார். அவர் செய்வதாக வாக்களித்தபடியே அவர் நம்மை வெட்டியெடுத்துள்ளார். நாம் தேவனுடைய ஆடுகளாயும், தேவனுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறவர்களாயும் இருக்கிறோம்! "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது" என்றவாறே, நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கிறோம்.

நாம் தேசம் முழுவதிலுமிருந்து; நியூயார்க், மாசசூசெட்ஸ், பாஸ்டன், மைனே, டென்னசி, ஜார்ஜியா, அலபாமா மற்றும் தேசம் முழுவதிலிருந்துமே உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து மெக்சிகோ, ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, நாம் ஒரே செய்தி, ஒரே சத்தத்தின் கீழே ஒன்றுகூடிக்கொண்டிருக்கிறோம், இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான மணவாட்டியை இணைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தீர்க்கதரிசி, தேவனுடைய செய்தியாளர், மனுஷகுமாரன் தன்னை மாம்சத்தில் வெளிப்படுத்தி, "சாத்தானே, என்னுடைய வழியை விட்டு விலகு, நான் ராஜாவின் செய்தியை உடையவனாயிருக்கிறேன். நான் ராஜாவினுடைய செய்தியாளன். நான் இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை உடையவனாயிருக்கிறேன். நான் அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து, வழிநடத்த முன்குறிக்கப்பட்டிருக்கிறேன்.

"நான் ஒரு ஜனத்தை வெளியே இழுத்து, இந்தக் காரியங்களிலிருந்து அவர்களை வெட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் ரூபகாரப்படுத்துதலோடு; தேவன் இங்கு நின்றுகொண்டிருக்கிறார் என்று, வேத வாக்கியங்களினால், அவர்களுக்கு காண்பிக்கும்படி; அவர்களை வெளியே இழுக்கிறேன்.

அவர் ஜீவனுக்கு முன்குறித்திருந்த ஜனங்கள் பூமியின் மேல் இருக்கிறதை தேவன் அடையாளம் கண்டு கொண்டார். அவர் தம்முடைய செய்தியாளனை அனுப்பி தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க இதுவே நேரம் என்பதை அடையாளம் கண்டு கொண்டார், எனவே அவர் அதை செய்தார். நாமே அதை அடையாளம் கண்டு கொண்டவர்களாக இருக்கிறோம். நாமே ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்போம் என்று அவர் அறிந்திருந்தார்.

தேவன் மானிட சரீரத்திலிருந்து தன்னிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதை ஆபிரகாம் அடையாளம் கண்டு கொண்டான். அவன் அவருடைய அடையாளத்தை அடையாளம் கண்டு கொண்டு அவரை ஆ-ண்-ட-வ-ரே, எலோஹிம் என்று அழைத்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான். அது அந்த நாளில் இருந்தது போலவே, மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படும்போது, எலோஹிம், மானிட சரீரத்தினூடாக பேசுகிறார் என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டோம்.

நாம் அவருடைய பாகமாயும், அவருடைய குமாரனின் பாகமாயும் இருக்கிறோம், நாம் அவருடன் என்றென்றும் நிலைத்திருப்போம். இது நம்முடைய அழைப்பினாலோ அல்லது நம்முடைய தெரிந்துகொள்ளுதலினாலோ அல்ல, ஆனால் அவருடைய தெரிந்துகொள்ளுதலினாலே. நமக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. அவரே உலகத் தோற்றத்திற்கு முன்னர் நம்மைத் தெரிந்துகொண்டவராய் இருக்கிறார்.

நீங்கள் எவ்வளவுதான் பிரசங்கித்தாலும், நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது முதிர்ச்சியடையப்பட முடியாது, அது வெளிப்படுத்தப்பட முடியாது, அது ரூபகாரப்படுத்தப்பட முடியாது; "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்ற வார்த்தையை கூறினவரால் மாத்திரமே முடியும். இந்த நாளில் சம்பவிக்கும் என்று அவர் முன்னுரைத்திருக்கிறதை வெளிப்படுத்தும்படியாக அல்லது நிரூபிக்கும்படியாக அல்லது ரூபகாரப்படுத்தும்படியாக ஒரு-ஒரு-ஒரு வல்லமை, பரிசுத்த ஆவியானவர் தாமே வர வேண்டியதாய் இருக்கிறது. சாயங்கால வெளிச்சம் அதை உருவாக்குகிறது. என்னே ஒரு நேரம்!

நாம் அவருக்கு முன்னால் கடந்து சென்ற போது அவர் நம்மை ஒரு தரிசனத்தில் கண்டார். மணவாட்டி ஆரம்பத்தில் இருந்த அதே நிலையில், அல்பாவும் ஒமேகாவுமாக, நாம் இருந்தோம். சிலர் அணிவகுப்பின் வரிசையை விட்டு விலகுவதை அவர் கவனித்துகொண்டிருந்து, அவளை திரும்பவும் அணிவகுப்புக்குள் இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார், ஆனால் நாமே "நாங்கள் அதன்பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்" என்று சத்தமிட்டவர்கள்.

கவனியுங்கள், "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல," அவன் தொடர்ந்து வருவான், அவர்களைப் போன்ற சிலர். இப்பொழுது இல்லை, அவர் இங்கு மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட்டைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை; அவர்கள் காட்சியிலேயே இல்லை. புரிகிறதா? “ஆனால், யந்நேயும் யம்பிரேயும் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து நின்றதுபோல, அவர்களும் எதிர்த்து நிற்பார்கள்; சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிற துர்பத்தியுள்ள மனிதர்,” வேதாகமத்திற்கு பதிலாக, சபையின் உபதேசங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் தாறுமாறாக்கப்பட்டுள்ளனர்.

நம்முடைய நாளுக்கான உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையுடன் நாம் எவ்வளவு கவனமாக தரித்திருக்க வேண்டும். வார்த்தை யாரிடம் வருகிறது என்பதை நாம் எப்போதும் அடையாளம் கண்டு கொண்டு, நினைவில் கொண்டிருக்க வேண்டும். வார்த்தையின் ஒரே தெய்வீக வியாக்கியானி யார்? நம்முடைய நாளுக்கான வார்த்தை யார்?

"என் வார்த்தையே ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது" என்ற தேவனுடைய வார்த்தையான, தேவ ஆவியானவர், மணவாட்டியை அவளுடைய ஸ்தானத்தில் பொருத்துவார். காரணம், அவள் வார்த்தையில் தன்னுடைய ஸ்தானத்தை அடையாளம் கண்டுகொள்வாள், அப்பொழுது அவள் கிறிஸ்துவில், அவளுடைய ஸ்தானத்தில் அவள் பொருத்தப்படுவாள்.

உன்னுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல் 64-0726M என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஏலோகிம் அவருடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி எங்களுக்கு அதைக் கொண்டு வருவதை நாங்கள் கேட்கையில், வார்த்தையில் உங்களுடைய ஸ்தானத்தை அடையாளம் கண்டு கொண்டு உங்களுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட, நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தத்தை நீங்கள் கேட்க வரும்படி அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

ஓசியா: அதிகாரம் 6
எசேக்கியேல்: அதிகாரம் 37
மல்கியா: 3:1 / 4:5-6
11தீமோத்தேயு: 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம்: அதிகாரம் 11

தேவனே, ஒரு எழுப்புதலை எனக்குள்ளாக சிருஷ்டியும். நானே அந்த எழுப்புதலாய் இருக்கட்டும். நாங்கள் ஒவ்வொருவரும் அந்த எழுப்புதலாய் இருப்போமாக, அந்த எழுப்புதல் எனக்குள்ளாக இருக்கட்டும். கர்த்தாவே, என்னை பசியுள்ளவனாக்கும், என்னை தாகமுள்ளவனாக்கும். கர்த்தாவே, எனக்குள்ளாக தேவைப்படுகின்றதை, எனக்குள்ளே சிருஷ்டியும். இந்த மணி நேரம் முதற்கொண்டு, நான் உம்முடையவனாய் இருக்கட்டும்; அதிக அர்ப்பணிக்கப்பட்ட ஊழியக்காரனாய், ஒரு மேலான ஊழியக்காரனாய், உம்மால் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவனாயும் இருப்பேனாக; அதிக ஆற்றலுள்ளவனாய், அதிக தாழ்மையாயுள்ளவனாய், அதிக தயவுள்ளவனாய், ஊழியம் செய்ய அதிக உற்சாகமுள்ளவனாய் இருப்பேனாக; அதிக உறுதியான காரியங்களையே எதிர்நோக்கி, பின்னானவைகளையும், எதிர்மறையான காரியங்களையும் மறப்பேனாக. நான் கிறிஸ்துவின் பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர்வேனாக. ஆமென்.

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்

 


சனி, 27 ஆகஸ்ட், 2022

அன்புள்ள கழுகுகளே, நாம் யாவரும் ஒன்று சேர்ந்து இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 64-0719E பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல் என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 20 ஆகஸ்ட், 2022

அன்பான இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும் மணவாட்டியே,

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் ஒன்றுகூடி உலக சரித்திரத்திலேயே மிக மகத்தான ஜீவனுள்ள ஊழியத்திற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய சத்தத்தை கேட்பதற்கு நாம் ஒன்றுகூடி சந்திக்கையில் நாம் மிகவும் மகிமையான நேரத்தை உடையவர்களாய் இருந்து கொண்டிருக்கிறோமே! இது தேவ குமாரனாகிய, இயேசுவே, வேத வாக்கியங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்தி, இந்நாளுக்கென முன்குறிக்கப்பட்டிருந்த வேதவாக்கியத்தை, அவருடைய நாளிலும், மற்ற எல்லா நாட்களிலும் இருந்தது போலவே, ஜீவனுள்ளதாக்குகிறதாய் இருக்கிறது. இதை விசுவாசிப்பதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாக இருக்கிறது.

பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதற்கான உண்மையான அத்தாட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்கு செல்வது அல்ல; அது "நானே அவர்" என்றும், உங்களுடைய நாளுக்கான வார்த்தையை நீங்கள் விசுவாசிப்பதுமேயாகும். இன்றைக்கான வார்த்தை என்னவாயிருக்கிறது? மணவாட்டி தன்னுடைய கணவனை அறிந்துகொள்ளும்படியாக, தன்னுடைய துணையை, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை அறிந்து கொள்ளும்படியாக, தேவனுடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான வார்த்தையாய் இருந்து, அவரே ஜனங்களை திரும்ப வார்த்தைக்கு கொண்டுவர வேண்டியதாய் உள்ளது.

அவருடைய சொந்த ஜீவியமும், அவருடைய சொந்த கிரியைகளும், இந்த நாளின் வார்த்தையை வெளிப்படுத்தி ரூபகாரப்படுத்துகிறது.

இது மீண்டும் பரிசுத்த ஆவியானவர் சபையில்; கிறிஸ்து, அவர் செய்வதாக வாக்களித்தபடியே, சாயங்கால நேரத்தில், மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தினதாயுள்ளது. அது அவர்களை சற்று மூச்சுத் திணற வைக்கும் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் வரிகளுக்கிடையே உள்ள மறைபொருளை படித்து புரிந்துகொள்ள வேண்டும், அதுவே அந்த காட்சியை தோன்றச் செய்கிறது.

நாம் மணவாட்டியாய், ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாய் இருக்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளம் என்னவாயிருந்தது? தேவன், ஒரு மனித சரீரத்தின் ரூபத்தில், ஜனங்களின் சிந்தனைகளை வகையறுக்க முடிந்தது. ஒரு மனிதன், ஒரு டஜன் அல்ல, ஒரு மனிதனே.

அநேகர் இவ்விஷயத்தில் என்னுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளனர் என்று நானறிவேன், ஆனால் இது தான் அது என்பதை நான் அறிவேன். எனக்கு அது தெரியும். நீங்கள் அவ்வாறு கூறுவதனால் நான் கூறுகிறேன் என்றல்ல; ஏனெனில், இது என் சொந்த கருத்தல்ல. என்னுடைய சிந்தனை என்—என் சொந்த சிந்தனையல்ல. என்னிடம் சொன்னது எதுவாக இருந்தாலும், அது தவறு என்றால், அப்பொழுது அது தவறே. நான் சொந்தமாக இதைக் கூறிக்கொண்டிருக்கவில்லை, வேறொருவர் கூறியுள்ளதையே நான் எடுத்துக் கூறிக்கொண்டிருக்கிறேன். அந்த வேறொருவர், நம்முடன் பேசி, இந்த காரியங்கள் அனைத்தையும் செய்து, நம்மிடம் பிரத்தியட்சமான தேவனே, பாருங்கள், எனவே அது சரியென்று எனக்குத் தெரியும்.

நாம் தேவனுடைய சிந்தனைக்கே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்; ஒரு மனிதனுடைய சிந்தனைக்கு அல்ல, ஆனால் தேவனுடைய சிந்தனைக்கே. நம்முடைய தீர்க்கதரிசி எழுதப்பட்டுள்ள வார்த்தையை வெளிப்படுத்துபவர்.

உங்களுடைய வீடுகளிலோ அல்லது உங்களுடைய சபைகளிலோ ஒலிநாடாக்களை போட்டுக் கேட்பது அனைவருக்குமானதல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எங்களுக்கான, ஒரே வழி இதுவேயாகும். தேவனுடைய சத்தம் நேரடியாக எங்களிடம் பேசுவதைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு எந்த வியாக்கியானமோ அல்லது விளக்கமோ தேவையில்லை; அது தேவன் எங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதாயுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் பேசி, மறுபக்கத்தில் நம்முடைய ஒரு முன் காட்சியை அவர் தம்முடைய தீர்க்கதரிசிக்கு எப்படி காண்பித்தார் என்பதை நமக்கு சொல்வதையும் நாம் கேட்போம். அந்த மணவாட்டி எப்படி அவரை சரியாகப் பார்த்துக் கொண்டிருந்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள், நாம் அவருடன் ஒன்றாக நின்றுகொண்டிருந்தோம். நாம் கர்த்தருக்கு முன்பாகப் பரிபூரணமாக நடந்துகொண்டிருந்தோம்.

அப்பொழுது தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, மீண்டும் ஒருமுறை தீர்க்கதரிசனமுரைத்து, இவ்வாறு கூறுகிறார்:

இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும், கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது…அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது-அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்களுடைய இருதயத்தின் இந்த உத்தமத்தை இன்று காலை கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் என்ன தேவையோ அவைகளை அவர்களுக்கு அளிப்பாராக என்றே நாங்கள் ஜெபிக்கிறோம்.

நீங்கள் ஒலிநாடாக்களை கேட்டுக் கொண்டிருந்தால், இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுக்கு எது தேவையாக இருந்தாலும், தேவன் தம்முடைய செய்தியாளர் மூலம் பேசி, "நமக்கு என்ன தேவையாய் இருந்தாலும் அவைகளை அளியும்" என்றே கூறுவார்.

என் நண்பனே இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதன் மூலம் மாத்திரமே அது சம்பவிக்க முடியும்.

எக்காளங்களின் பண்டிகை 64-0719M என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், தேவன் எங்களிடத்தில் பேசுகிறதை கேட்கிறபடியால், தேவன் பேசி தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கினிப்பதையும், மானிட சரீரத்தின் மூலமாக தம்மை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்டு, உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும் அதை பெற்றுக்கொள்ள விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8

 


சனி, 13 ஆகஸ்ட், 2022

அன்புள்ள சிறந்த வேலைப்பாடே,

கடந்த ஞாயிற்றுக்கிழமை நம் ஒவ்வொருவரைப் பற்றியும் நம்முடைய மேய்ப்பர் கூறினதை நினைவுபடுத்தாமல் இன்று எப்படி என்னால் எழுத முடியும்?

ஆனால் நான் எங்கு சென்றபோதிலும்...என்னுடன் இணைந்திருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த ஒரு-ஒரு குழுவும் இப்புவியில் இல்லை என்பதை நான் அறிவேன். தேவன் நம்மை இணைபிரியாதவர்களாக்கி, வரவிருக்கும் அந்த இராஜ்யத்திலும், நாம் இணைபிரியாதவர்களாகவே இருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது.

தேவன் ஒலிநாடாவில் பேசிய செய்தியோடும், தேவனுடைய தீர்க்கதரிசியோடும், நம்மைப் போல் இணைந்திருக்கும் ஒரு குழு பூமியில் இல்லை. நாம் இணைந்திருக்கிறபடியால், தீர்க்கதரிசி யோடும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் அந்தப் புதிய இராஜ்யத்தில் நாம் பிரிக்க முடியாதவர்களாக இருப்போம். அதைப் பார்க்கிலும் சிறப்பானது வேறெதுவுமேயில்லையே!

இவைகள் நம்முடைய ஜீவியத்தின் மிக மகத்தான நாட்களாயிருக்கின்றன. நாம் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய கடைசி கால செய்திக்காகவும் ஒரு முட்டாளாக இருப்பதில் நாம் முழுமையாக திருப்தியடைந்திருக்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள் என்று கூறுகிறபடியால் நாம் ஒரு பைத்தியம் என்றே அழைக்கப்பட வேண்டும்.

நாம் ஒரே சபையைச் சேர்ந்தவர்கள். நாம் அதில் சேரவில்லை, நாம் அதில் பிறந்தோம். ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூடி கிறிஸ்துவை நேசித்து, “ஓ, 'இயேசுவே,' நான் உம்மை எப்படியாய் நேசிக்கிறேன்!” என்று கூறுகிறோம்.

நாம் உலகத்திற்கு ஒரு பைத்தியமாக இருக்கலாம், ஆனால் பிதாவானவர் நம்முடைய நாளில் தம்மைப் பற்றிய வெளிப்பாட்டை நமக்குக் கொடுத்துள்ளார், தேவன் அதன்மேல் தோலை உடுத்தியிருக்க, அது அவருடைய மணவாட்டியாகிய நம்மை அவரிடம் இழுத்துள்ளது.

இது எவ்வளவு எளிமையானது என்பதை நாம் நேசிக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், இது எவ்வளவு ஆழமானது. ஆனால் அதைப் பார்க்க நீங்கள் ஒரு வெளிப்பாட்டை பெற்றிருக்க வேண்டும், நாம் பெற்றிருக்கிறோம்.

அவர் தம்மை தம்முடைய சபையில், மனித திரையில் மறைத்துக்கொண்டு, உங்கள் விசுவாசமும் என் விசுவாசமும் ஒன்றுசேர்ந்து தேவனுடைய ஒரே பிரிவாகும்போது, அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். என்னால் உங்களையல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; நாம் தேவனில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. எனவே, அது ஒன்றுசேர்ந்த பிரிவாகிறபோது, அது இணைப்பாகிறது. தேவன் அந்த நோக்கத்துக்காகவே என்னை அனுப்பினார்; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்; அது நடக்கிறது. பாருங்கள், அது அப்படித்தான் என்று முற்றிலுமாக உறுதிபடுத்தப்படுகிறது.

அந்த நாளில் எம்மாவுக்கு சாலையில் நடந்து சென்ற மனிதர்களைப் போன்று நாம் இருக்கிறோம். இந்நாளில் அவர் நம்மிடம் பேசுவதை நாம் கேட்கிறோம். பின்னர் நாம் அவருடன் மட்டுமே ஒருங்கிணைந்திருக்கும்படியாக அவரை நம்முடைய வீடுகளுக்கு அழைக்கிறோம். அப்பொழுது அவர் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்கிறார், நித்திய ஜீவ அப்பத்தை பிட்கிறார். நாம் அவரை உடனடியாக அடையாளங் கண்டுகொள்கிறோம். அப்போது வழியில் அவர் நம்முடன் பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று நாம் கூறுகிறோம்.

ஒவ்வொரு வாரமும் நாம் "இந்த வாரம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்றும், நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்றும்" மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிவந்து, ஆச்சரியப்படுகிறோம். நாம் ஒருவரோடொருவர் மேற்கோள்களைப் பகிர்ந்துகொண்டு, "அவர் கூறினபோது நீங்கள் கேட்டீர்களா": என்று அதைக் குறித்து வாரம் முழுவதும் பேசுவோம்.

“என்னுடைய சிறந்த வேலைப்பாட்டை உருவாக்க எனக்கு நான்காயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன; ஆனால் இப்போது நான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக மற்றொரு சிறந்த வேலைப்பாட்டை உருவாக்கி வருகிறேன், நீங்கள், என்னுடைய மணவாட்டி. என்னுடைய முதல் சிறந்த வேலைப்பாட்டை, என்னுடைய வார்த்தையை, உருவாக்கியதைப் போலவே, அவருடைய ஒருபோதும் மாறாத முறையால் அதைச் செய்துள்ளேன். அந்தவிதமாகத்தான் நான் என்னுடைய சிறந்த வேலைப்பாடுகளை உருவாக்குகிறேன், ஏனென்றால் அது பரிபூரணமான வார்த்தையாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் ஒரு பரிபூரணமான சிறந்த வேலைப்பாடாய் இருக்க முடியும்.”

என் சகோதரனே இதைக் குறித்து மோசமாக எண்ண வேண்டாம். ஒரு நிமிடம் சிந்தனை செய்து பார். மணவாட்டியை அவருக்கென்று பெற்றுக்கொள்ள அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒன்றை எடுத்திருப்பாரானால், அவர் வேறொரு சிருஷ்டிப்பை ஒருபோதும் சிருஷ்டிக்கவில்லை. அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டார். அப்படியானால், அவர் வார்த்தையாயிருந்தால், அவருடைய மணவாட்டி என்னவாயிருக்க வேண்டும்? அவளும் மூல வார்த்தையாக அமைந்திருந்து, வார்த்தையில் உள்ள ஜீவிக்கும் தேவனைக் கொண்டிருக்க வேண்டும்.

ருசித்து புசிக்கிற ஒரு குதூகலத்தைப் பற்றிப் இங்கே பேசுகிறோம். நாம் மூல சிருஷ்டிப்பின் பாகமாக இருக்கிறோம். நாம் மூல வார்த்தையின் பாகமாக இருக்கிறோம். தேவன் நம்மில் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். நாம் அவருடைய சிறந்த வேலைப்பாடாய் இருக்கிறோம். நாம் அவருடைய தீர்க்கதரிசியுடன் இணைந்திருக்கும் குழுவாக இருக்கிறோம். நாம் அவருடைய தீர்க்கதரிசியோடும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் பிரிக்க முடியாதவர்களாய் இருக்கிறோம். நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம்.

அவர் எங்களுக்கு சிறந்த வேலைபாடு 64-0705 என்ற செய்தியைக் கொண்டு வருகையில், நித்திய ஜீவ வார்த்தைகளை தேவன் பேசி எங்களுக்கு வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கையில், அது எங்களுக்குள் கொழுந்துவிட்டு எறிவது போல உங்களுடைய இருதயமும் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்று நீங்களும் கூட விரும்பினால், மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்றுசேர்ந்து கூடிவந்து அவரை எங்களுடைய வீடுகளிலும், எங்களுடைய சபைகளிலும் வரவேற்கையில், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஏசாயா 53:1-12
மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19

 


சனி, 6 ஆகஸ்ட், 2022

அன்பான ஷெகினா மகிமை மணவாட்டியே,

உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூட்டப்பட்டு, அவருடைய செய்தியாளர் மூலம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, நாம் யார் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளபடியால், நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் எப்படியாய் புதிய உயரங்களுக்கு உயர்த்தப்பட்டன.

இன்றைக்கு அவர் ஷெகினாவுடன் தம்மை, மண்பாண்டங்களில் திரைமறைத்துக்கொள்கிறார். வெளிப்புறமானது ஒரு கூட்ட பரிசுத்த- உருளையர்களாக, பழைய தகசுத் தோல்களாக காணப்படுகிறது, ஆனால் உள்ளே ஷெகினா மகிமையை மறைக்கிறது.

தேவனுக்கு மகிமை! நம்முடைய உட்புறத்தில் ஷெகினா மகிமையை மறைத்துக்கொள்கிறோம். நாம் திரைக்குப் பின்னால் சென்றுவிட்டோம், கிறிஸ்துவை நாம் தெளிவான பார்வையில் பார்க்க முடியும்.

இன்றைக்கு, தேவன் மனிதனில் செயல்பட்டுக்கொண்டிருக்கவில்லை, அவர் மனிதன் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் இயேசு என்ற ஒரு மனிதனில் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இப்பொழுதோ, அவர் இந்த நோக்கத்திற்காகத் தெரிந்தெடுத்துள்ள மனிதன் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேவன், மனித ரூபத்தில்; அவர் தன்னை தேவனுடைய ரூபத்திலிருந்து, மனிதனின் ரூபத்திற்கு மாற்றினார்.

தேவன் அழிவுக்கு முன்பாக, ஆபிரகாமினுடைய மாம்சப்பிரகாரமான சந்ததிக்கு, ஒரு மானிட சரீரத்தின் ரூபத்தில் பிரசன்னமானார், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் திரும்ப வருவதற்கு முன்பு இந்த ராஜரீக சந்ததிக்கு அதே காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார்.

தேவன் பிரசன்னமாவதாக வாக்களித்தபடியே, அவர் மீண்டும் ஒருமுறை ஒரு மானிட சரீரத்தின் ரூபத்தில் பிரசன்னமாகியிருக்கிறார். அது வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற ஒரு மாம்சத்தின் திரைக்குப் பின்னால் மறைந்துள்ள தேவனாகும். நீங்கள் அந்தத் திரைக்குப் பின்னால் சென்று தேவனைப் பார்த்தாலொழிய, மனிதனை அல்ல, நீங்கள் தேவனின் முழு திட்டத்தையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

சில ஜனங்கள், “நீங்கள் சகோதரன் பிரான்ஹாமை ஒரு தேவனாக்குகிறீர்கள்” என்று கூறுகிறார்கள். சரி, அது சரியான விதமாகத்தான் தென்படுகிறது என்று நாம் கருதுகிறோம். அவர்கள் நம்மை விமர்சிக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். நாம் அதைச் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை என்பதையும் கூட நாம் அறிவோம், ஏனென்றால் அவர்கள் தோலின் மறுபக்கத்தில் இருப்பதால், அவர்கள் திரைக்குப் பின்னால் வரவில்லை.

நாம், “சரி, அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அது அவ்வாறிக்கிறதா?” என்று தெளிவாகக் கேட்க முடியும். நாம் இழக்கப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்யவே விரும்புகிறோம். நாம் எந்நிலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். நாம் எந்த விதமான கடற்பயணத்தில் உள்ளோம் என்றும், எந்தவிதமான காற்று நமக்கு வீசிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். நம்முடைய திருகு மறைகள் என்னவாயிருக்கின்றன என்பதையும், நம்முடைய திருகாணிகள் என்னவாயிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம்.

தேவன் உலகில் வெளிப்பட்டபோது, அவர் ஒரு திரைக்குப் பின்னால், இயேசு என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் தோலுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். அவர் திரையிடப்பட்டு, மோசே என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் தோலுக்குப் பின்னால் மறைந்துகொண்டிருந்தார், அவர்கள் தேவர்களாயிருந்தனர், தேவனாய் அல்ல; ஆனால் அவர்கள் தேவர்களாயிருந்தனர், ஒரே தேவன், தன்னுடைய முகமூடியை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் அதே காரியத்தை செய்து, இந்த வார்த்தையைக் கொண்டு வந்தார்.

நாம் வார்த்தைக்கும், செய்திக்கும் மற்றும் இந்த மணி நேரத்தின் தீர்க்கதரிசியுடனும் இணைக்கப்பட்டுள்ளோம், அது நம்மை இழுத்து, நம்முடைய பரலோக வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் உலகிற்கு வினோதமானவர்களாக இருக்கிறோம், ஆனால் தேவன் தம்முடைய மணவாட்டியை இந்த குழப்பத்திலிருந்து, தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக இழுக்கும் ஒரு திருகு மறையாக நம்மை அனுப்பினார். நாம் வார்த்தையினால் இணைக்கப்பட்டுள்ள ஒரு திருகு மறையாய் இருக்கிறோம்.

தேவன், தோலை உடுத்தியுள்ளாரே! அது உலகத்திற்கு ஒரு பைத்தியம் போல தென்படலாம், ஆனால் அதுவோ எல்லா மனிதரையும் அவரண்டை இழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் செய்தி பரலோகத்திலிருந்து வருகிற மன்னாவாகும், நமக்கான விசுவாசிகளின் ஆகாரமாய் மாத்திரமே உள்ளது, அது அவருடைய மனவாட்டியை அவரண்டை இழுத்துக் கொண்டிருக்கிறது. ஷெகினா மகிமையானது, சமுகத்தப்பத்தின் மேல், அது கெட்டுப்போகாமல் பாதுகாத்தது.

இந்த செய்தியும் அவருடைய செய்தியாளனுமே, இன்றைக்கான தேவன் அருளியுள்ள ஒரு வழியாகும்; தேவன் அதன்மேல் தோலினால் திரையிட்டுக்கொண்டார். இப்பொழுது அக்னி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட சுத்தமான தேவனுடைய சத்தத்தை மாத்திரமே போஷிக்கும்படியாக, தேவன் தம்முடைய மணவாட்டியான, நம்மில் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் ஐந்து வகையான ஊழியத்திற்கு எதிரானவர்கள் அல்ல, எதிரானவர்களல்லவே, தேவன் அவர்களை ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை எப்படி வழிநடத்துகிறாரோ அதன்படியே பின்பற்றி செய்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பது போலவே நாம் செய்து கொண்டிருக்கிறோம், மேலும் அவர் நம்மை ஒலிநாடாக்களோடு மாத்திரமே தரித்திருக்கும்படி வழிகாட்டிக்கொண்டும் வழிநடத்திக்கொண்டுமிருக்கிறார்.

ஆகையால், இப்பொழுது, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேளுங்கள். அதைப் பற்றிக்கொள்ளுங்கள். மேலும்-மேலும் இதை நீங்கள் ஒலிநாடாக்களிலிருந்து எடுத்தாலோ, அல்லது எந்தக் காரியமாயினும், ஒலிநாடாக்களிலுள்ள போதனையில் நிலை கொண்டிருங்கள். ஒலிநாடாக்கள் கூறுவதைத்தவிர வேறொன்றையும் கூறாதீர்கள். சரியாக ஒலிநாடாக்கள் கூறுவதை மாத்திரம் அப்படியே சொல்லுங்கள்.

எங்களைப் பொறுத்தவரை, கேட்பதற்கான ஒரே வழி: “ஒவ்வொரு வார்த்தையுமே, ஒலிநாடாக்கள் கூறுவதை தவிர வேறொன்றும் இல்லை,” “ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றன என்பதை சரியாக,” இயங்கு பொத்தானை அழுத்தி அந்த ஒலிநாடாக்களை கேட்பதேயாகும்.

எனவே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, வினோதமானவன் 64-0614E என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது, ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றன என்பதை நீங்கள் வந்து கேட்டு, எங்களோடு வினோதமானவர்களாக மாற, நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

I கொரிந்தியர் 1:18-25
II கொரிந்தியர் 12:11

 


தொடர்புடைய சேவைகள்