அன்பான தேவனுடைய சிந்தையே,
இந்த ஞாயிற்றுக்கிழமைக்காக நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வீடுகளிலும் சபைகளிலும் வழிநெடுகிலும் அவர் நம்முடன் பேசுகிறபோது நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே எப்படி கொழுந்துவிட்டு எரியப் போவதாயிருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவோம்...சற்று காத்திருங்கள்!
இந்த கடந்த மாதத்தில், நாம் சரியான கப்பலில் ஏறுவதை உறுதிசெய்யுமாறு அவர் நம்மிடம் கூறியிருக்கிறார்…நாம் அதில் உறுதியாய் இருக்கிறோம். தேவனுடைய உண்மையான வித்து பதரோடு சுதந்திரவாளியாக இருக்காது என்று அவர் நம்மிடத்தில் கூறினார்…அதன்பின்னர், நாமே அந்த வித்தாயிருக்கிறோம் என்று அவர் கூறினார். அதன்பின்னர் நாம் நம்முடைய செவிகளில், இன்றைய தினம், இந்த வேதவாக்கியம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று என்று, தேவன் ஒரு மனிதனின் மூலமாக நம்மிடத்தில் பேசி வலியுறுத்திக் கூறினதை நாம் கேட்டோம்.
அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாம் தேவனால் அருளப்பட்ட ஆராதனை ஸ்தலத்தில் இருக்கிறோம் என்று அவர் நம்மிடத்தில் கூறினார், ஏனென்றால் நாம் அந்த இடத்தில் இருக்கிறோம், நாம் அவருடைய வார்த்தையோடு விபச்சாரம் செய்திருக்கவில்லை. இதனால், நாம் அவருடைய சுத்தமான கன்னிகை வார்த்தையான மணவாட்டியாய் இருக்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் ஒருமுறை நம் அனைவரையும் ஒன்றிணைத்து, தம்முடைய மகத்தான தூதனான தீர்க்கதரிசி மூலம் நம்மிடத்தில் பேசி, நானே இந்த மெல்கிசேதேக்கு என்றும், நான் என்னுடைய வார்த்தையில் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளது போலவே, நான் மானிட சரீரத்தில் என்னையே உங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறவிருக்கிறார்.
மகிமை! நீங்கள் உற்சாகமடைந்துள்ளீர்களா? நீங்கள் விவரிக்க முடியாத வார்த்தைகளுக்கு அப்பால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்களா? பாருங்கள், இன்னும் அதிகமாகக் கூட வரவிருக்கிறது. அவர் இந்த மகத்தான காட்சியை முடிக்கப் போகிறார்.
அது குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் ஆதியிலிருந்தே தேவனுடைய சிந்தையில் இருந்தோம். இயேசு பூமிக்கு வருவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீங்கள் பூமிக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இயேசு, தேவனுடைய சிந்தையில், நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். அப்பொழுதே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
அது உங்களுடைய சிந்தையில் பதிந்துகொண்டிருக்கிறதா? நம்முடைய பெயர்கள் தேவனால் நியமிக்கப்பட்டு உலகத் தோற்றத்திற்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. அவர் நம்முடைய கண்களை, நம்முடைய பூரண வளர்ச்சியை, நாம் என்னவாகவெல்லாம் இருக்கிறோம் என்பதை அறிந்திருந்தார். நாம் ஆதியிலேயே அவருடைய சிந்தையில்…தேவனுடைய சிந்தையில் இருந்தோமே! அப்படியானால், நாம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையான ஒரே காரியமாய் இருக்கிறோம். அவர் அதை சிந்தையில் கொண்டிருந்த பிறகே, அவர் அதை உரைத்தார், இங்கே நாம் இருக்கிறோம்.
இதுவோ புரிந்துகொள்ள கடினமாயுள்ளது. தேவன் எல்லா காரியங்களையும் நம்மிடத்தில் சொல்லுகிறார். அவர் நம்மை அவ்வளவாய் நேசித்து, நாம் அதை நேரடியாக அவரிடத்திலிருந்தே கேட்டு உறுதி செய்துகொள்ளும்படி விரும்பி, இவ்விதமாக அவர் அதை டிசம்பர் 4, 2022, ஞாயிற்றுக்கிழமைக்காக பதிவு செய்திருந்தபடியால், அவரால் மீண்டும் ஒருமுறை தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து நம்மிடத்தில்: “நான் இவை யாவற்றையும் உங்களுக்காக செய்தேன். நீங்கள் இதை நேரடியாக என்னிடத்திலிருந்து கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் என்னுடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். நான் வெகுசீக்கிரத்தில் உங்களுக்காக வருகிறேன்" என்று சொல்ல முடியும்.
அதனால்தான் நாம் தேவனின் பிரசன்னத்திற்குள்ளாக சஞ்சரிக்கும்போது, நமக்குள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று நாம் எங்கிருந்தோ வந்திருக்கிறோம் என்றும், நம்மை இழுத்துக்கொண்டிருக்கிற அந்த வல்லமையினால் நாம் மீண்டும் அங்கே திரும்பி சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
தேவன் அந்த முழு காரியத்தின் திரையையும் நீக்கிவிட்டபடியால், நம்மால் அதைக் காண முடிகிறது. தேவன், என் மார்பி, அக்கினி ஸ்ம்பத்தில், தேவன், என் மார்பி, இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனில், என் மார்பி, தம்முடைய சபையில் திரையிடப்பட்டிருந்தார். தேவன் நமக்கு மேலே இருந்தார், தேவன் நம்மோடு இருந்தார், தேவன் நமக்குள்ளாக இருக்கிறார்; தேவன் கீழ்நோக்கி இறங்குதல்.
நாம் பயப்பட முற்றிலும் ஒன்றுமேயில்லை. மரணத்தைப் பற்றிக் கூட, கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் இங்கிருந்து பிரிந்து செல்லும்போது, நாம் மரிப்பதும் கூட இல்லை. இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், நமக்காக ஏற்கனவே ஒன்று காத்திருக்கிறது, என் மார்பே.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி அவர் எங்களுடன் பேசுவதையும், இவை அனைத்தையும் வெளிப்படுத்துவதையும் கேட்க நான் மிகுந்த ஆவலாயிருக்கிறேன். அவர் யாராய் இருக்கிறார் என்பதையும், நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும், ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் உதட்டிலிருந்து செவிக்கு உங்களிடத்தில் சொல்வதை உங்களால் கேட்க முடிந்த அந்த ஒரே இடத்திற்கு எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
யார் இந்த மெல்கிசேதேக்கு? 65-0221E
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
ஆதியாகமம் 18வது அதிகாரம்
யாத்திராகமம் 33:12-23
பரி. யோவான் 1:1
ரோமர் 8:1
2 கொரிந்தியர் 5:1
2 தெசலோனிக்கேயர் 4:13-18
முதலாம் தீமோத்தேயு 3:16 / 6:15
எபிரேயர் 7:1-3 /13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7 / 21:16
தொடர்புடைய சேவைகள்
அன்பான தீர்க்கதரிசியினுடைய மந்தையே,
நினைவிருக்கட்டும், நான் இதை என்னுடைய குழுவிற்கு மாத்திரமே கூறுகிறேன். தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, நான் என்னை பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் இங்கு என்ன கூறப்போகிறேனென்றால், இந்த செய்தி அவர்களுக்கு மாத்திரமே.
எந்த ஊழியக்காரரும், அவர், அதாவது அவருடைய, ஆம், அவர் மந்தையின் மேய்ப்பன், அவர் விரும்புகிற எதை வேண்டுமானாலும் அவர் செய்யட்டும். அது அவருக்கும் தேவனுக்கும் இடையே உள்ளது. எந்த குருவானவரும், எந்த பிரசங்கியாரும், என் சகோதரனே, அது உங்களைப் பொறுத்தது.
நான் இங்கே ஜெபர்சன்வில்லில் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறேன், இந்த இடத்தில் மாத்திரமே நான் பேசுவேன், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மந்தையாய் இருக்கிறது. இதுவே பரிசுத்த ஆவியானவர் கண்காணியாய் இருக்கும்படி எனக்கு கொடுத்திருக்கிறதை புரிந்து கொள்ளும்படியான மந்தையாக இருக்கிறது, அவர் அதற்காக என்னை பொறுப்பாளியாக்குவார். நான் மனமாற்றமடைந்திருக்கிற என்னுடைய இந்த ஜனங்களை தேசம் முழுவதிலுமிருந்து, நான் கிறிஸ்துவினிடம் வழி நடத்தியிருக்கிறேன்.
ஒரு நன்றி செலுத்தும் வார இறுதிக்கு என்ன ஒரு தலைக்கல். அவர் இன்னும் உங்கள் ஒவ்வொருவருடனும் கண்காணித்துக்கொண்டிருக்கும் அந்த சிறிய மந்தையின் பாகமாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் செல்லக் கூடிய வேறெந்த இடமும் இல்லை.
பிதாவானவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த ஒரு மகத்தான பறக்கும் கழுகினை நமக்கு அனுப்பியிருக்கிறார். அவருடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டிருக்கிற வார்த்தைகளை பேசி, ஜனங்களை ஊக்கமூட்டுகிற அநேக சத்தங்கள் இருக்கின்றன, ஆனால் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தவும், ஒருங்கிணைக்கவும் அனுப்பப்பட்டதோ ஒரே ஒரு சத்தமாக மாத்திரமே உள்ளது.
ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகளே நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளன. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் என்று கூறுகிறபடியால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளோம், ஆனால் அதை சரியாக செய்யும்படிக்கு தேவனுடைய தீர்க்கதரிசியால் நாம் கட்டளையிடப்பட்டோம்.
எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்டவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களை அதில் சேர்க்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்யுங்கள்; இதனோடு கூட்டாதீர்கள்!
உலகமே விழித்துக்கொள். காலம் சமீபத்துவிட்டது. தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகள், ஒலிநாடாக்களில் அவர் கூறியுள்ளதையே சரியாக, விசுவாசிக்கும்படி, கூறும்படிக்கு, செய்யும்படிக்கு; தேவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். நான் கூறுவதை அல்ல, உங்களுடைய குருவானவர் அல்லது பிரசங்கியார் என்ன கூறுகிறார் என்பதை அல்ல, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறினதையே.
ஒலிநாடாவில் உள்ள அந்த சத்தத்தைக் கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறொன்றுமில்லை, வேறுொன்றுமே யில்லை. ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ளதைக் கொண்டே நாம் நியாயத்தீர்க்கப்பட போகிறோம். நான் என்ன கூறினேன் என்பதைக் கொண்டல்ல, ஆனால் அவர் என்ன கூறினார் என்பதைக் கொண்டேயாகும்.
நான் உங்களுக்கான மிகச் சிறந்ததையே அளிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும் என்று கூறுகிற எந்த போதகரையும் போலவே, என்னுடைய சில வார்த்தைகள் உங்களுக்கு ஊக்கமூட்டுதலாக இருக்கின்றன. ஒலிநாடாவில் நீங்கள் கேட்கிற எந்த காரியத்தையும் சந்தேகிக்கும்படிக்கும், ஒலிநாடாக்களில் தவறுகள் இருக்கின்றன என்றும், நீங்கள் தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்கும் அளவிற்கு எனக்கும் செவிகொடுக்க வேண்டும் என்றும்: நான் உங்களுக்குப் போதிக்கவில்லை. இயங்கு பொத்தானை அழுத்தி, மூல வார்த்தையோடு தரித்திருக்கும்படி நான் உங்களை ஊக்கப்படுத்தவே சில வார்த்தைகளை உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் தூய்மையான, மாசற்ற வார்த்தை மணவாட்டியாக இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
இந்த நாளிலே ஒவ்வொரு ஜீவனுள்ள சிருஷ்டியும் அவருடைய சத்தத்தை கேட்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தைகளை பதிவு செய்திருந்தார். பவுலின் நாட்களில், அவர் என்ன பிரசங்கித்துக்கொண்டிருந்தார் என்பதை எழுதுவதற்கு அவர்களுக்கு வேதபாரகர்கள் இருந்தனர், அதுவே வேதாகமமாக உள்ளது. ஆனால் இன்றைக்கோ, அது இன்னும் மகத்தானதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இயங்கு பொத்தானை அழுத்தி, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம்மிடம், உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை, நம்முடைய சொந்த செவிகளினால் கேட்க முடியும்.
நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் உலகம் உண்மையில் வீழ்ச்சியடைந்து வருவதால், நாம் சென்று இளைப்பாறும்படியாக நமக்கு ஓர் இடம் அருளப்பட்டுள்ளது. நாம் அதை ஒலிநாடாவில் பெறுகிறோம். நம்முடைய சௌகரியமான அறைகளில் அமர்ந்து பண்டக சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சேமிக்கப்பட்ட ஆகாரத்தை விருந்துண்டு மகிழ்கிறோம். நம்முடைய தீர்க்கதரிசி மிக நீண்ட தொலைவில் இருக்கலாம், ஆனால் இந்தக் காரியங்கள் உண்மையென்றும், நம்மை செய்யும்படி தேவன் கட்டளையிட்டிருக்கிறதை செய்யும்படிக்கும், ஒலிநாடாக்களோடு தரித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொண்டுள்ளோம்.
விவாகமும் விவாகரத்தும் 65-0221M என்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் பேசவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நீங்கள் எப்போதும் புசித்ததிலேயே மிகச் சிறந்த நன்றி செலுத்தும் விருந்தினை உண்டு மகிழ வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
p>
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 5: 31-32 / 16: 18 / 19: 1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திருமதி. இயேசு கிறிஸ்துவே,
நம்முடைய பெயர்கள் அழைக்கப்படுவதை கேட்க நாம் எவ்வளவு விரும்புகிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர் யாருக்கு வரப்போகிறாரோ அவர்களாகவே நாம் இருக்கிறோம். வாக்குத்தத்தமபண்ணப்பட்ட ராஜரீக குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி. அவருடைய மேம்பட்ட ராஜரீக ஆபிரகாமின் வித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாயும் விசுவாசமுள்ளதாகவும் இருந்து வருகிறது.
நாம் வேறு எந்த வார்த்தையுடனும் விபச்சாரம் செய்திருக்கவில்லை, அல்லது சரசமாடவும் கூட இல்லை; நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையோடும் தரித்திருக்கிறோம்.
இன்றைக்கு உலகில் பல அருமையான கிறிஸ்தவ பெண்கள், விசுவாசமுள்ள பெண்கள் உள்ளனர்; ஆனால் திருமதி இயேசு கிறிஸ்துவாக ஒருவள் மட்டுமே இருக்கிறாள். அவருடன் பரமவீட்டிற்குப் போகிறவர்கள் நாம்தான். நாமே அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மனைவியாய் இருக்கிறோம்.
அவர் முன்பு வந்தவிதமாகவே, மீண்டும் ஒருமுறை வருவார் என்று அவருடைய வார்த்தையில் சொன்னார். அவர் நின்று, மானிட சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தி, வார்த்தையை வாசித்து, "இந்த வேதவாக்கியம் உங்களுடைய பார்வையில் இன்றைய தினம் நிறைவேறிற்று," என்று நம்மிடத்தில் கூற, நாம் அவரை அடையாளங்கண்டுகொண்டு, அவருடைய மணவாட்டியாக திருமதி. இயேசு கிறிஸ்துவானோம்.
மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், மேற்கு அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ர-னா-க நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, தம்மை தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அடையாளம் காண்பித்திருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.
நான் எந்தக் காரியத்தை குறித்தாவது ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட சரியான பதிலாக ஏதாவது இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உண்மையான, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, நம்முடைய ஜீவியங்களில் எழுகின்ற ஒவ்வொரு கேள்விக்கும், உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நம்முடைய நாளில் ஜனங்களுக்கு மத்தியில் பல கேள்விகளும், கருத்து மாறுபாடுகளும் உள்ளன.
- தேவனுடைய தீர்க்கதரிசியின் ஒலிநாடாக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?
- ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?
- நம்முடைய முற்றிலுமானது எது? அவர் ஒலிநாடாவில் கூறினதா, அல்லது எது வார்த்தை, எது வார்த்தையல்ல என்று பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் தீர்மானிக்கும்படி வழிநடத்துகிறதா?
- நமக்கு ஒரு மனிதனோ, அல்லது மனிதக் குழுவோ, அதை நமக்காக விளக்கிக் கூற இருக்க வேண்டுமா?
- அவர் எலியா தீர்க்கதரிசியை அனுப்பிய பிறகு, அதை உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டிய ஒரு கூட்ட மனிதரை அவர் அனுப்புவார் என்று வார்த்தை கூறுகிறதா?
- வார்த்தையை வியாக்கியானிக்க அல்லது அதை நமக்காக விளக்கிக் கூற யாராவது நமக்கு தேவைப்படுகிறதா?
- நாம் நம்முடைய வீடுகளில், கார்களில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரம் ஒலிநாடாக்களை கேட்டுவிட்டு, நாம் சபைக்கு செல்லும்போது போதகரின் பிரசங்கத்திற்கே செவிகொடுக்க வேண்டுமா?
- நம்முடைய சபைகளில் ஒலிநாடாக்களை நாம் இயக்க வேண்டுமா?
- இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமா அல்லது இல்லையா?
இப்பொழுது, இது ஒரு வேதாகம கேள்வியாயிருந்தால், அப்பொழுது அது ஒரு வேதாகம பதிலை உடையதாய் இருக்க வேண்டும். அது ஒரு கூட்ட மனித குழுவிலிருந்தோ, எந்த குறிப்பிட்ட ஐக்கியத்தில் இருந்தோ அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ, அல்லது சில ஸ்தாபனத்தில் இருந்தோ வரக்கூடாது. அது வேதத்திலிருந்தே நேரடியாக வரவேண்டும்...
எனவே நாம் நம்முடைய கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறிய வேண்டுமானால், நாம் வேதவாக்கியங்களிடத்திற்கே செல்ல வேண்டும். அடுத்து, வேத வாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானி யார் என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனக்காக தீர்மானிக்கிறானா?
ஒரு தீர்க்கதரிசி என்பது வார்த்தையைப் பேசுவதற்கு மாத்திரமே என்று பொருள்படாமல், முன்கூட்டியே அறிவிப்பவராயும், எழுதப்பட்ட தெய்வீக வார்த்தையின், வார்த்தையின் ஒரு தெய்வீக வியாக்கியானியாயும் கூட இருக்கிறார்.
ஆகவே, தீர்க்கதரிசி வேதவாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானியாய் இருந்தால், அப்பொழுது அந்த தீர்க்கதரிசி கூறினதே தம்முடைய மணவாட்டிக்கு ஏற்கனவே வியாக்கியானிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, அவ்வளவுதான்.
இது ஊழியத்திலிருந்தோ, அல்லது தேவன் அவர்களை அழைத்திருக்கிற ஸ்தானத்திலிருந்தோ எடுத்துப் போடுகிறதில்லை. தங்களுடைய மந்தைக்கு முன்பாக தேவனுடைய தீர்க்க தரிசியினால் உரைக்கப்பட்ட அந்த வார்த்தையை கடைபிடிக்கும்படிக்கு அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜனங்களுக்கு அந்த செய்தியாளனையும், அந்த மணி நேரத்தின் செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறின வார்த்தைகளால் நிதானித்தறியப்பட வேண்டும். அவர்கள் ஒரு வார்த்தையும் மாற்றக் கூடாது, அல்லது அவர்கள் சொந்தமாக வியாக்கியானிக்கவும் கூட கூடாது. தேவனுடைய வேதவாக்கியங்கள் அவருடைய தீர்க்கதரிசியால் மாத்திரமே வியாக்கியானிக்கப்படுகின்றன.
இப்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரும், நிச்சயமாகவே, உங்களால் அவர்களுடைய கருத்தினைப் புரிந்துகொள்ள முடியும், நான் அவர்களைக் குறை கூற முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் அவை சத்தியம் என்றும், அவர்கள் சத்தியத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் உரிமை கோருகிறார்கள். அந்த சபைகளைச் சேர்ந்த ஜனங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய-தங்களுடைய இலக்கை, தங்களுடைய நித்திய இலக்கை, அந்த சபையின் போதனையின் மீது குறியிலக்காக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கேள்விகளை உண்டாக்குமளவிற்கு, ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாய் இருக்கிறார்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லையென்றால், யாரோ ஒரு மனிதனோ அல்லது மனிதர்களோ கூறுகிற வார்த்தையே உங்களுடைய முற்றிலுமானதாய் இருந்தால், அப்பொழுது உங்களுடைய நித்திய இலக்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் பேரிலேயே நிலைத்திருக்கிறது.
என்னுடைய வார்த்தைகள் எவருக்கும், எல்லா ஊழியங்களுக்குமே முற்றிலும் எதிராக இருப்பதாக தென்படுகிறது. நான் எதிராக இல்லை. தேவன் உண்மையான மனிதர்களை தம்முடைய சபையில், தம்முடைய மந்தைகளின் மீது வைத்து, அவர்களுக்கு முன்பாக இந்த செய்தியை காத்துக்கொள்ளும்படி செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கித்து விசுவாசிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஏன் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய பிரசங்க பீடங்களில் வைத்து கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தத்தைக் கேட்க வைப்பதில்லை? அவர்கள் ஏன் தங்களுடைய ஊழியத்தை அந்தக் சத்தத்திற்கு, சமமாகவும் முக்கியமானதாகவும் வைக்கிறார்கள்?
மல்கியா 3-ல், "வழியை ஆயத்தப்படுத்த என் முகத்திற்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புவேன்" என்று கூறப்பட்டிருந்தது. வழியை ஆயத்தப்படுத்த அனுப்பப்பட்ட அந்த ஒருவனே அவரை, அந்த ஸ்தலத்தை அடையாளம் காட்டினான். "அது அவரே! எந்த தவறும் இல்லை. அது அவரே! அவரைப் பின்தொடருகிற அடையாளத்தை நான் காண்கிறேன். அது அவர் என்று எனக்குத் தெரியும்; ஒரு ஒளி வானத்திலிருந்து இறங்கி அவர்மீது செல்கிறது." அது அவர்தான் என்பதற்கு, அது உறுதியாய் இருந்தது.
ஆகையால், என் சகோதரனே, முடிவிலே, நான் உங்களிடத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நாம் இதை இப்படிக் கூறலாம். மல்கியா 4-ல் அவர், "நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று எபிரெயர் 13:8-ல் உள்ளதை தவறிழைக்கும் சபைக்குக் காண்பிக்கும்படியாகவும், ஒரு அக்கினி ஸ்தம்பம் பின்தொடரும்படியான, மற்றொரு கழுகானது நமக்கும் கூட வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா"? இன்னொருவர் வனாந்தரத்திலிருந்து பறந்து வருவார் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா?
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? அந்த அக்கினி ஸ்தம்பத்தையே. யார் அந்த அக்கினி ஸ்தம்பம்? அந்தக் கழுகு, மல்கியா 4. அவர் யாராயிருந்தார் என்பதை ரூபகாரப்படுத்தும்படியாக தன்னுடைய தலைக்கு மேல் அக்கினி ஸ்தம்பத்தை உடையவராயிருந்தது யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
ஒவ்வொரு முறையும் நாம் கூடும்போது, நாம் அந்த சத்தத்தை ஜனங்களுக்கு முன்பாக வைக்க வேண்டும். நாம் தேவனுடைய சத்தத்தையே முதலில் வைக்க வேண்டும், அந்த மனிதனை ஆராதிக்காமல், அந்த மனிதனுக்குள் இருக்கிற தேவனையே ஆராதிக்க வேண்டும்.
அந்த மனிதனே தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தத் தெரிந்துகொண்ட மனிதனாய் இருக்கிறார். தேவன், "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்," வேறு யாரோ ஒருவரை அல்ல அல்லது வேறு யாரோ ஒருவர் கூறுகிறதையும் அல்ல, வில்லியம் மரியம் பிரான்ஹாமாகிய, உன்னையே என்று கூறின ஒருவராய் இருக்கிறார். அந்த மனிதனே இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தும் ஒருவராய் இருக்கிறார்.
நான் கூறுகிற எந்த காரியத்திற்கும் மாறாக எதையாவது எந்த மனிதனோ அல்லது ஸ்திரீயோ கூட்டிக் கூறினால், அதை நான் கூறுகிறதாக நம்பவேண்டாம்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட வாயானது எங்களிடத்தில் பேசி 65-0220 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் என்ன என்பதை சொல்ல நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, திருமதி இயேசு கிறிஸ்துவாக மாற எங்களுடன் வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
உபாகமம் 16:1-3
யாத்திராகமம் 12:3-6
மல்கியா 3-வது & 4-வது அதிகாரங்கள்
லூக்கா 17:30
ரோமர் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:7
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குரிய வித்தே,
எந்த சபைக்குச் சென்று, நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி அறிந்துகொள்ள முடியும்? தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் உங்களிடத்தில் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தாலொழிய, வேறெங்குமே கண்டறிய முடியாது.
நாம் தேவனுடைய கழுகுகளாயும், ஒரு வார்த்தையையும் விட்டுக் கொடுக்காதவர்களாயும் இருக்கிறோம். ஒவ்வொரு ஆராதனையிலும் புதிய மன்னா மாத்திரமே நமக்குத் தேவை, தேவனிடத்திலிருந்தே அதை நேரடியாகக் கேட்பதைத்தவிர வேறெங்கிருந்தும் அதற்குமேல் தூய்மையாய் வருகிறதில்லை. நாம் ஒவ்வொரு செய்தியைக் கேட்கும்போதும் நாம் மேலும் மேலும் உயரப் பறக்கிறோம். நாம் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் பார்க்க முடியும். இந்த சபையில் மன்னா இல்லையென்றால், தேவனுடைய கழுகுகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை சற்று மேலே எழும்பிக்கொண்டிருக்கின்றன.
தேவன் நம்மிடத்தில் பேசுவதையும், நாம் அவருடைய அசலான, மீண்டும் பிறந்த, தேவனுடைய சபை என்று நம்மிடம் சொல்வதையும் கேட்கும்போது, நம் இருதயங்கள் எப்படி மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றன, அது என்னவாக இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளாமல் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் நாம் அவருடைய கலப்படமற்ற கன்னிகையான வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம்.
இத்தகைய குழப்பம் இன்றைக்கு ஜனங்கள் மத்தியில் உள்ளது. இயேசுவின் நாட்களில் இருந்ததைப் போலவே, விசுவாசிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வேதத்தைப் பற்றி ஆசாரியர் என்ன கூறினார் என்பதை குறித்து வியாக்கியானத்தையே ஏற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வார்த்தைக்கு மனிதனுடைய வியாக்கியானத்தையே விசுவாசித்துக் கொண்டிருந்தனர். அந்த காரணத்தினால் அவர்கள் தேவனுடைய சத்தியத்தை புரிந்துகொள்ள தவறிப்போயினர், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் அளிக்கப்பட்ட பல வியாக்கியானங்கள் இருந்தன. தேவனுக்கு தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க எவருமே தேவைப்படுகிறதில்லை. அவரே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார்.
நீங்கள் இயேசுவின் காலத்தில் ஜீவித்திருந்தால், உங்களுடைய ஆசாரியர் என்ன கூறியிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், இயேசுவானவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசித்திருப்பீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் இயேசுவானவருக்கு செவி கொடுப்பதே என்று உங்களுடைய ஆசாரியரிடத்தில் நீங்கள் சொல்லியிருப்பீர்களா? இயேசுவினுடைய வார்த்தைகளுக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று நீங்கள் ஆசாரியனிடத்தில் சொல்லியிருப்பீர்களா? இயேசுவானவர் பிரசங்கிக்கிற ஒலிநாடாக்கள் அவர்களிடம் இருந்திருந்தால், இயேசுவானவர் என்ன கூறினார் என்பதையும், அவர் அதை எவ்வாறு கூறினார் என்பதையும் சரியாக நீங்கள் கேட்கும்படியாக அந்த ஒலிநாடாவை ஆசாரியர் இயக்கும்படி நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அவரிடத்தில் சொல்லியிருப்பீர்களா?
சரி, அது உங்களுடைய காலமாய் இருக்கவில்லை; இதுவே உங்களுடைய காலம், இதுவே உங்களுடைய நேரம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளது. இப்பொழுது நீங்கள் என்ன செய்துகொண்டும், கூறிக்கொண்டும் இருக்கிறீர்களோ, அதையே நீங்கள் அப்பொழுது சரியாக செய்திருப்பீர்கள்.
மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ரன், மேற்கத்திய அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ரனாக தம்மை நமக்கு மத்தியில் அடையாளம் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நமக்கு முன்பாக நிறைவேறிற்று என்று நாம் விசுவாசிக்கிறோம்.
இது அநுக்கிரக வருஷம் என்றும், யூபிலி வருஷம் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நீங்கள் அடிமையாகவே நிலைத்திருக்க வாஞ்சித்தால், இந்த செய்தி கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை; இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லயென்றால்; இந்த செய்தியை வியாக்கியானிக்க ஒரு மனிதன் தேவை என்று நீங்கள் நம்பினால்; உங்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாயுள்ளது என்று நீங்கள் நம்பினால்; அப்பொழுது நீங்கள் கொண்டு செல்லப்பட்டு, ஒரு கம்பியினால் உங்களுடைய காதில் ஒரு துளை போடப்படும், அதன்பிறகு உங்களுடைய எஞ்சியுள்ள நாட்களெல்லாம் நீங்கள் அந்த அடிமையின் எஜமானையே சேவிக்க வேண்டும்.
ஆனால் உண்மையான அசலான மணவாட்டி சபை தேவனுடைய முழு வார்த்தையை அதனுடைய பரிபூரணத்திலும் அதனுடைய வல்லமையிலும் விசுவாசித்துக் கொண்டிருக்கிறது. நாம் வெளியே இழுக்கப்பட்டு, அந்தக் காரியங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, தேவனுடைய வெளிப்படுத்துதல் நம்முடைய கவனத்தை கவர்ந்துள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சபையாக இருக்கிறோம். நாம் ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குரிய வித்தாயிருக்கிறோம்.இந்த ஐக்கியத்தில் எங்களோடு மகிழும்படி நீங்கள் இங்கு இருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும், இந்தக் கூட்டத்தில் தேவன் எங்களுக்கு அருளப்போகிறதற்கான எதிர்பார்ப்புகளோடும் நாங்கள் இருக்கிறோம்.
எனவே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0219 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். இந்தக் கூட்டங்களில் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கான பெரிய எதிர்பார்ப்போடு நாங்கள் இருக்கிறோம். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டியே,
நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். காலம் சமீபித்துவிட்டது. பதறானது வித்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. நாம் குமாரனின் பிரசன்னத்தில் கிடத்தப்பட்டு, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். நாம் அவருடைய மேஜையில் அப்பமாகுமளவிற்கு, நம்முடைய சிறிய குழு கிறிஸ்துவுக்கு அவ்வளவாய் முதிர்ச்சியடையும் அளவிற்கு நாம் அந்தப் பிரசன்னத்தில் தரித்திருப்போம். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!
இந்தச் செய்தி மல்கியா 4-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, லூக்கா 17:30-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, எபிரேயர் 13:8-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, பரி. யோவான் 14:12-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, வெளிப்படுத்தின விசேஷம் 10-வது அதிகாரத்தை, ஏழு முத்திரைகள் திறக்கப்படுதலை, தேவனுடைய ரகசியங்களை, சர்பத்தினுடைய வித்தை, விவாகமும் விவாகரத்தும் மற்றும் இத்தனை ஆண்டுகளாக முழுவதுமாக தூண்களுக்கு கீழே மறைக்கப்பட்டிருந்த மற்ற இந்த எல்லா ரகசியங்களையும் ரூபகாரப்படுத்தியுள்ளது.
நாம் வார்த்தைக்கு கன்னிகைகளாயிருக்கிறோம். நாம் வெறெந்த காரியத்தையும் தொட முடியாது, தொடவும் மாட்டோம். நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும், தூய்மையானதாகவும், புதியதாகவும் இருக்கிறது; வானத்திலிருந்து விழுந்த புதிய மன்னாவாகவும் இருக்கிறது.
ஆனால் கடைசி காலத்தில் இரண்டு ஆவிகள் மிக நெருக்கமாக இருக்கும் என்றும், அது கூடுமானால் தெரிந்து கொள்ளபட்டவர்களையும் வஞ்சிக்கும் என்றும் அவர் நம்மை எச்சரித்தார். இதனால், அது மணவாட்டியாய் இருப்பது போன்று தென்படும் என்ற காரணத்தால் அந்த ஆவியின் பேரில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனியுங்கள், அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று பாருங்கள். மத்தேயு கூறினார், பரிசுத்த மத்தேயு 24:24, "கடைசி நாட்களில் இரு ஆவிகள் இருக்கும்," என்றும், சபை ஜனங்களின் சபையின் ஆவியும், மணவாட்டி ஜனங்களின் மணவாட்டி ஆவியும், இருக்கும் என்றும், "கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக இரண்டும் ஒன்றாய் இருக்கும்" என்றும் கூறியுள்ளது. அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும்.
சபை ஜனங்களின் ஆவியும் மணவாட்டி ஜனங்களின் ஆவியும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாய் இருக்கும் என்று அவர் கூறினார். அதாவது சபை ஜனங்களுடைய ஆவி அந்த மணி நேரத்தின் செய்தியை அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்று கூறுமளவிற்கு அந்த விதமாக நெருக்கமாக இருக்கும் என்பதே அதன் பொருளாகும்.
அது மெத்தோடிஸ்ட்டாய், பாப்டிஸ்ட்டாய், பிரஸ்பிடேரியனாய் அல்லது பெந்தேகோஸ்தேவாகக் கூட இருக்காது; அவர்கள் வார்த்தையிலிருந்து வெகுதூரம் விலகி, செய்தியைக் கூட நிராகரிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் எவருமே மணவாட்டிக்கு நெருக்கமான ஒரு ஆவியைப் பெற்றிருக்கவில்லை.
சாத்தான் மிகவும் வெற்றிகரமாக இருந்து, அவ்வளவாய் வஞ்சிக்கும் படிக்கு, முயற்சித்துள்ளான். ஆதியில் இருந்தே கூட, அவன் எளிமையாக, "நிச்சயமாகவே" என்றும், இந்தவிதமாக ஏவாளிடத்தில் கூறி அவளுடைய தர்க்க அறிவை உபயோகித்து அவள் தனக்கு செவிகொடுக்க வேண்டுமேயன்றி வார்த்தைக்கு அல்ல என்று கூறினான். ஆனால் அவள் செய்யும்படி கட்டளையிடப்பட்ட ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு: வார்த்தையோடு தரித்திருத்தல்.
உண்மைகள்:
உங்களுக்கு ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்க வேண்டும். அதைத்தான் தீர்க்கதரிசி நமக்கு சொன்னார். அந்த பதில் வார்த்தையில் இருந்து வர வேண்டும். வார்த்தையானது ஒரு தீர்க்கதரிசியினிடத்திற்கு மாத்திரமே வருகிறது. தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். எந்த மனிதனாவது அல்லது எந்த ஸ்திரீயாவது உங்களுக்கு ஒரு பதிலை அளித்தால், அது தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியிருக்கிறதாய் இருக்க வேண்டும். அது அவர்களுடைய வியாக்கியானமாய், கருத்தாய் அல்லது புரிந்து கொள்ளுதலாய் இருக்க முடியாது. அவர்கள் அதை தேவனுடைய ரூபாகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வார்த்தையோடு ஆதரிக்க வேண்டும். அது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையுடன் கூட்டப்பட்டதாயில்லாமல், அது தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பதாய் மட்டுமே இருக்க வேண்டும்.
இப்பொழுது இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.
1: நீங்கள் கேட்க வேண்டிய செய்திகள் மிக முக்கியமானதாய் இருக்கிறபடியால் ஒலிநாடாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
2: ஒலிநாடாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை, மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகளை இப்பொழுது உள்ள ஊழியமானது கொண்டுள்ளது.
இரண்டாவது கருத்திற்கு பல, பல மாறுபாடுகள் உள்ளன: பரிசுத்த ஆவியானவர் என்னை அல்லது என்னுடைய போதகரை எது வார்த்தை, எது வார்த்தை இல்லை என்று நமக்கு சொல்ல வழிநடத்துவார். சகோதரன் பிரான்ஹாம் ஒலிநாடாவில் கூறினதைப் பார்க்கிலும் அதிகம் நமக்குத் தேவை. அந்த வார்த்தையை விளக்கிக் கூற அல்லது தெளிவுபடுத்திக் கூற உங்களுக்கு ஒரு ஊழியம் இருக்க வேண்டும். அந்த ஊழியம் இல்லாமல் நீங்கள் மணவாட்டியாய் இருக்க முடியாது.
இன்னும் பல முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது. ஆனால் முதல் பிரிவினருக்கு எந்த மாறுபாடுகளும் முரண்பாடுகளும் இல்லை. இது எளிமையாக, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதாயுள்ளது.
இந்த கடைசி-கால செய்தியில் விசுவாசிகளாக இருக்கின்றபடியால், நீங்கள் உங்களையே இந்த கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
1: ஒலிநாடாக்களில் தீர்க்கதரிசி கூறியது உங்களுடைய முற்றிலுமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அல்லது உங்கள் மூலமாகவோ அல்லது உங்களுடைய போதகர் மூலமாகவோ பரிசுத்த ஆவியானவர் பேசுவதே முற்றிலுமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
2: ஐந்து வகையான ஊழியத்தில் மணவாட்டி கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகள் இருக்கிறதா, அல்லது ஒலிநாடாவில் உள்ள செய்திகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன என்று விசுவாசிக்கிறீர்களா?
உங்களுடைய மேய்ப்பர், பிரசங்கி, போதகர், சுவிசேஷகர் அல்லது தீர்க்கதரிசி, ஒலிநாடாவில் உள்ள மிக முக்கியமான செய்திகளை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையென்றால், அவர் போலியானவர், மேலும் அந்த ஆவி வரும் என்று தீர்க்கதரிசி நம்மை எச்சரித்தார்.
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான செய்திகள் அவை என்று அவர் கூறி, அவருடைய சபையில் அந்த ஒலிநாடாக்களை இயக்க இன்னமும் மறுத்துக்கொண்டிருப்பாரானால், ஏதோ தவறு உள்ளது. ஒலிநாடாக்களைக் கேட்பதே நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று அவர் உண்மையிலேயே விசுவாசித்தால், அவர் முதலில் ஒலிநாடாக்களை இயக்குவார், அதன்பின்னர் அவர் பிரசிங்கிக்க வழி நடத்தப்படுகிறதை உணர்ந்தால் பிரசிங்கப்பார்.
எளிய உதாரணம்:
தூய்மையான குடிதண்ணீரே உங்களுடைய ஆரோக்கியத்திற்காக நீங்கள் பருகக்கக்கூடிய மிக முக்கியமான ஒன்று என்று நான் உங்களிடத்தில் கூறியிருந்தால், சான்றளிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் என்று நிரூபிக்கப்பட்டது ஒன்று மாத்திரமே இருந்தால்…ஆனால் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு இரவு உணவிற்கு வரும்போது, நான் அந்த சான்றளிக்கப்பட்ட தண்ணீரை உங்களுக்கு பரிமாறுகிறதில்லை. நான் உங்களிடத்தில், "நீங்கள் அந்த தண்ணீரை உங்களுடைய வீட்டிலிருந்து பருகலாம், ஆனால் என்னுடைய வீட்டிலே, நான் உங்களுக்குக் கொடுப்பதையே நீங்கள் பருக வேண்டும் என்று சொல்கிறீர்கள்" என்று சொல்லுகிறேன்.
அந்தத் தண்ணீர்தான் உங்களுடைய ஆரோக்கியத்திற்காக நான் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த ஒன்றாகவும், அதுவே உங்களுக்கு ஜீவனைத் தரும் என்றால், அப்படியானால் நீங்கள் என்னுடைய வீட்டிற்குள் நுழையும்போது நான் உங்களுக்கு முதலில் கொடுக்கப்போவது அந்த தூய்மையான குடிநீரேயாகும்.
நான், “உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள், என்று கூறுவதனால் தவறாக இருக்கிறேனா, இதுவே உங்களுடைய ஜனங்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியமாய் உள்ளது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.”
இல்லையென்றால், "சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாகும், உங்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் கூறினதேயில்லை. எனவே நாங்கள் ஜனங்களிடத்தில் ஒலிநாடாக்களை அவர்களுடைய வீடுகளில், உங்களுடைய கார்களில், எல்லா நேரத்திலும் இயக்குங்கள், ஆனால் சபையிலே அவர்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டும்" என்று கூறுவதனால் அவர்கள் தவறாக இருக்கிறார்களா.
எந்த ஆவி உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது? நீங்கள், "ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளதே என்னுடைய முற்றிலுமானது என்றும், மற்றும் நான் கேட்கக்கூடிய மிக முக்கியமான காரியம் அதுவே" என்றும் நீங்கள் கூறுகிறீர்களா? இல்லையென்றால், நீங்கள், "ஒலிநாடாக்கள் போதுமானதாக இருக்கவில்லை. அது என்னுடைய முற்றிலுமானது அல்ல மற்றும் கேட்கக்கூடிய மிக முக்கியமான காரியமும் அல்ல, ஊழியமே முக்கியம்" என்று கூறுகின்றீர்களா?
இப்பொழுது இது வித்தின் நேரம், அதாவது மணவாட்டியின் நேரம். பதர்கள் மரித்துப் போய்விட்டன. பதர்கள் காய்ந்துபோய்விட்டன. தொடப்படாத கன்னிகையான வார்த்தையின் நேரம். இது ஒரு கன்னிகை, நினைவிருக்கட்டும், ஒரு கன்னிகையான வார்த்தையின் நேரம்.
நாங்கள்: 65-0218 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியை கேட்கப்போகையில், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி பரலோகத்திலிருந்து விழுகின்ற புதிய மன்னாவைக் கேட்க வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்