காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 30 ஜூலை, 2022

அன்பான எழுதப்பட்ட வார்த்தையே,

ஒவ்வொரு வாரமும் மகத்தானதாகிக்கொண்டே போகிறது. ஞாயிற்றுக்கிழமை, நாம் நோக்கிப் பார்த்து தீர்மானம் செய்யும்படியான ஒரு தருணம் உண்டாயிருந்தது, நாம் எதைப் பார்த்தோம்? நாம் ஒரு ஊழியக்காரரைப் பார்த்தோமா, இல்லையே! நாம் நம்முடைய மேய்ப்பரைப் பார்த்தோமா, இல்லையே! நாம் மாம்ச சரீரத்தின் திரைக்கப்பால் நோக்கிப் பார்த்தபோது, நாம் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துகிறதையும், தம்மை வெளிப்படுத்தினதையும் கண்டோம்.

அவர்கள் தொடர்ந்து ஒலிநாடாக்களை நாம் கேட்டுக்கொண்டு வருவதுபோல் கேட்டிருந்தால், உங்களுக்கு கேட்பதற்கு காதுகளும், பார்ப்பதற்கு கண்களும் இருந்தால், அது மிகத் தெளிவாகிவிட்டிருக்கும். இப்போது நாம் தேவனை வெளிப்படையாகக் காண்கிறோம். திரையானது கிழிக்கப்பட்டு, தேவன் நமக்கு முன்பாக வெளிப்படையாக நிற்பதையும், அக்கினி ஸ்தம்பம் தம்மை தெளிவான காட்சியில் வெளிப்படுத்துகிறதையும் நாம் காண்கிறோம்.

இது சிலரைக் குருடாக்கியுள்ளது, ஆனால் நமக்கு, அது சத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேவன் மோசேக்கு செய்ததைப் போலவே, அவர் நமக்கு முன்பாக அவருடைய செய்தியாளரை மகிமைப்படுத்தியிருக்கிறார்.

சிறியோரே, நீங்கள் இனி அந்த திரைக்கு பின்னால் இல்லை, தேவன் உங்களுடைய முழு காட்சியில் வந்துள்ளார்.

அது என்ன? தெய்வீகத்தன்மை மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. தேவன், ஒரு மனித ரூபத்தில், அவர்களுடைய பார்வையிலிருந்து தம்மை மறைத்துக் கொள்ளுதல். அவர்களால் ஒரு மனிதனை மாத்திரமே பார்த்து, தேவனுடைய தீர்க்கதரிசி தவறுகளைச் செய்கிறார் என்று சொல்ல முடியும், ஜனங்களுக்கு போதிக்க முயற்சிக்கிற இந்த ஒலிநாடாக்களில் தவறுகள் இருக்கின்றன என்று அவரும் தாமே கூறினார். ஆனால் நமக்கு, அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியான, நாம் தேவன் பேசுவதை கேட்டு, அதில் தவறுகளே இல்லை என்பதை புரிந்துகொள்ளுகிறோம்.

ஒருவன் ஒரு மனிதனைப் பார்த்தான், மற்றொருவன் தேவனைப் பார்த்தான். புரிகிறதா? அது தேவன் ஒரு மானிட சரீரித்தில் திரையிடப்பட்டு, இருவர் செய்வதும் சரியென்றே காண்பிக்கிறார், ஆனால் நீங்கள் காணாததில் உங்களுடைய விசுவாசம் உள்ளது.

நம்மைப் பொறுத்தவரை, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் தவறுகள் ஏதேனும் இருந்தால், நாம் அவர்கள் கூறுகிற அவைகளை ஏற்று அவர்களுடைய கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை விசுவாசிப்பதற்கு முன்பே, நாம் தீர்க்கதரிசியினுடைய தவறுகளையே விசுவாசித்து பின்தொடருவோம்.

மோசே இரண்டாவது முறை கன்மலையை அடித்திருக்க வேண்டியதில்லை. அதே ஆவி அந்நாளில், “பாருங்கள், மோசே தவறு செய்கிறான்” என்று கூறியிருக்கும். ஆனால் எப்படியும் தண்ணீர் வந்தது, நீங்கள் தவறு செய்வதாக அழைத்த மோசேயிடமிருந்து வந்த தண்ணீரை குடித்திருக்கவில்லையென்றால், நீங்கள் மரித்துவிட்டிருப்பீர்கள். அது இன்றைக்கும் அவ்ண்ணமாகவே உள்ளது. எவ்வளவோ குற்றச்சாட்டுகள்.

மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். புரிகிறதா? ஆனால் அளிக்கப்படும்படியான அந்த வார்த்தை அவனுக்குள் இருந்தபோது, அவன் தேவனாயிருந்தான்; பாருங்கள், அப்பொழுது அவன் மோசேயாயிருக்கவில்லை.

சகோதரன் பிரான்ஹாம் வார்த்தையை உடையவராயிருந்தார். வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட பிறகு, சகோதரன் பிரான்ஹாம் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமாயிருந்தார், ஆனால் அந்த வார்த்தை ஒலிநாடாவில் ஜனங்களுக்கு அளிக்கப்படும்படியாக அவருக்குள் இருந்தபோது, அவர் தேவனாயிருந்தார்; அப்பொழுது அவர் சகோதரன் பிரான்ஹாமாக இல்லை. இவ்வாறு நாம் கற்றுக்கொள்கிறோம், ஒலிநாடாக்களில் இருப்பது தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை.

நாம் அதை விசுவாசிப்பது மாத்திரமல்ல, ஆனால் அதன் மூலம் ஜீவிக்கிறோம். அவர்கள் அனைவரும் அதைவிட்டு விலகிச் செல்லும்போது, நாம் அதனுடன் தரித்திருக்கிறோம்! நாம் அதை விசுவாசிக்கிறோம்! வேறுயாரும் என்ன செய்தாலும் அல்லது கூறினாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசித்து, அதன்பின்னர் அதன் பேரில் செயல்படுகிறோம். நீங்கள் அவ்வாறு செயல்படவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை.

எனவே நான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூறுகிறேன்: ஒரு காரியத்தையும் நீங்கள் கூட்டவோ, எடுத்துப்போடவோ, உங்களுடைய சொந்தக் கருத்துக்களை அதில் நுழைக்கவோ வேண்டாம், ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கூறுங்கள், என்ன செய்யவேண்டுமென்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாரோ, அதை சரியாக அப்படியே நீங்கள் செய்யுங்கள்; அதோடு கூட்டாதீர்கள்!

தேவன் செய்யும்படி நமக்கு கட்டளையிட்டிருக்கிறபடியால் இயங்கு பொத்தானை அழுத்தி ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசியுங்கள். இது தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசிக் கொண்டிருக்கிறதாயுள்ளது.

தேவன் திரையிட்டுக்கொள்வதனால், தம்மை அதே அக்கினியினால், அதே அக்கினி ஸ்தம்பத்தினால் இறங்கி வந்து திரையிட்டுக் கொள்வதனால், மீண்டும் திரையிட்டு மோசையை ரூபகாரப்படுத்தினார். அப்பொழுதிலிருந்து-இருந்து…அவர்களிடத்திலிருந்து, எனவே அவர்களால் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே கேட்க முடிந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? வார்த்தையை மாத்திரம், அவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு, ஜீவிக்கிற வார்த்தையாய் இருந்தான்.

தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை, அவரால் மாற்ற முடியாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறார். இதனால், நம்மைப் பொறுத்தவரை, அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம் நம்முடைய தேவசத்தமாயும், நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையாயுமிருக்கிறார்.

இப்பொழுது அது நமக்கு வெறும் எழுதப்பட்ட வார்த்தை அல்ல, அது மெய்மையாயுள்ளது. நாம் அவருக்குள் இருக்கிறோம். இப்பொழுது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் அவரை காண்கிறோம். இப்பொழுது நாம் அவரை, வார்த்தையாக, தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அது அங்கு வெளியே, மறைக்கப்பட்டுள்ளது, காரணம் (ஏன்?) அது மானிட சரீரத்தில் திரையிடப்பட்டுள்ளது. புரிகிறதா?

என்னவாயிருந்தாலும், அவர்கள் அதைப் பார்ப்பதில்லை. ஏன்? அது அவர்களுக்கு அனுப்பப்படவில்லை.

நீங்கள் அதைப் பார்ப்பதால், நீங்கள் யார் என்று அவர் மீண்டும் ஒருமுறை உங்களிடத்தில் சொல்வதைக் கேட்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? அவர் மகிமையின் பாதுகாப்பு அரண்களிலிருந்து கீழே நோக்கி பார்த்து, உங்களைக் காணும்போது, அவர் யாரைக் காண்கிறார்?

  • வார்த்தை வெளிப்பட்டதை நான் காண்கிறேன். இந்தக் கடைசி நாட்களில் அவர் என்ன செய்வேன் என்று கூறினாரோ, அது வளருவதை நான் காண்கிறேன். அந்த முதிர்ச்சியடைந்த வார்த்தையிலிருந்து வரும் ஷெகினா அப்பத்தை, அதை விசுவாசிக்கிற, பிள்ளைகள் புசிப்பதை நான் காண்கிறேன். ஆமென்!

  • நீங்கள் அவரை மறைக்கும் திரையாயிருக்கின்றபடியால், அப்பொழுது நாம் அவருடைய பாகமாகிவிடுகின்றோம். ஏனெனில். கிறிஸ்து தேவனுடையவராயிருந்தது போல, நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் வரை, அவருடைய பாகமாய் இருக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்ததினால், அவரை தேவனாக்கினார். கிறிஸ்து உங்களுக்குள்ளாக, மகிமையின் நம்பிக்கையாக இருக்கின்றபடியால், நீங்கள் கிறிஸ்துவின் பாகமாகிவிடுகிறீர்கள்.

  • "நீங்கள்," அது, "நீங்கள் எழுதப்பட்ட நிரூபங்கள்" அல்லது, "நீங்கள் எழுதப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை," என்று கூறப்பட்டுள்ளது, அதனுடன் ஒன்றையும் கூட்ட முடியாது. "நான் ஒரு எழுதப்பட்ட நிரூபம்" என்று நீங்கள் கூறிவிட்டு, ஏற்கனவே எழுதியுள்ளதைத் தவிர வேறு எந்தவிதமாகவும் ஜீவிக்க முடியாது, ஏனெனில் எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப்போடவோ முடியாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம். அவர் நம்மைப் பார்க்கிறார். நாம் அவரைப் பார்க்கிறோம். நாம் இந்நாளில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையாயிருக்கிறோம்.

நாங்கள் இந்த நாளில் ஜீவிக்க வேண்டிய வார்த்தையை எங்களிடம் பேசுகிற, தேவன் எங்களுக்கு முன்பாக நிற்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஜெபர்சன்வில் நேரப்படி, 12:00 மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். இது ஷெகினா மகிமை நம்மை முதிர்ச்சியடையச் செய்கிறதாயிருக்கிறது. விசுவாசிகளுக்கான சமுகத்தப்பம்.

தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

மத்தேயு 24:24
பரி. லூக்கா 17: 28-29
பரி. யோவான் 14:14
1 கொரிந்தியர் 12:13
2 கொரிந்தியர் 3:6 – 2 கொரிந்தியர் 4:3
பிலிப்பியர் 2:1-8
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:7 & 19:13 யாத்திராகமம் 19 & 20, அதிகாரங்கள்
யோவேல் 2:28
மல்கியா 4:5

 


சனி, 23 ஜூலை, 2022

அன்பான வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சங்களே,

நாம் யாவரும் இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி ஒன்று கூடி 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி.யோவான் 14:12

 


சனி, 16 ஜூலை, 2022

அன்புள்ள இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பே,

கண்ணாடியைப் பார்த்து, தன்னைப் பார்ப்பதை உணராத சிறு பையனைப் போல, நாம் இப்பொழுது தேவனுடைய கண்ணாடியை, அவருடைய வார்த்தையைப் பார்த்துக்கொண்டு, பிதாவே, அது நான்தான், நான் உம்முடைய வார்த்தையின் பிரதிபலிப்பாயிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம். நான் வெளிப்படுத்தப்பட்ட உம்முடைய வார்த்தையாயிருக்கிறேன். நான் ஒரு விசுவாசி, நான் உம்முடைய மணவாட்டி!

நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும் நம்முடைய விசுவாசத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. விசுவாசிகள், பாவனை விசுவாசிகள் அல்லது அவிசுவாசிகள்: ஆகிய மூன்று வகைகளில் ஒன்றிற்குள் நாம் பொருந்த வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார். நாம் அவருடைய கண்ணாடியில் பார்த்தபோது, "நான் காண்கிறேன், எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமில்லாமல், நாம் விசுவாசிகள். ஒரு விசுவாசி மட்டுமே ஒரு சிறு எழுத்தையும், ஒரு சிறு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பான்; பிதாவே, அது நான்தான்” என்று நாம் சத்தமிட்டோம்.

ஒலிநாடாவில் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைத் தவிர, நம்மைத் திருப்திப்படுத்தி, ஜீவனைத் தரக்கூடியது எதுவுமே இல்லை. ஜீவன் வரக்கூடிய ஒரே வழி, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமான, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமேயாகும்.

ஆயத்தமாகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2022 அன்று இன்னும் நிறைய வரவிருக்கிறது. விளக்கைப் போடப்போகிற ஒரு மனிதன் இங்கே இருக்கிறார், அவர் அதைச் செய்யும்போது, தேவன் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசி, அவருடைய வார்த்தையைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தப்போகிறபடியால், ஆமென், அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை என்று சத்தமிட்டு, கூச்சலிடுவதனால் நம் அனைவருக்கும் தொண்டை வலி உண்டாக்கும்.

இன்றுள்ள அதே சூரிய வெளிச்சம், ஜூலை மாதத்தில் அறுவடைக்கென்று தானியத்தை முதிர்வடையச் செய்வது போல. நான் கூறுவதன் அர்த்தம் புரிகிறதா? இப்பொழுது டிசம்பர் மாதத்தில் உள்ள சூரிய வெளிச்சம் ஜூலை மாதத்தில் இருந்தால் பயனில்லை. அது அதிக வெப்பமுள்ளதாயிருக்க வேண்டும். ஏனெனில் கோதுமை முதிர்ச்சியடைந்து, அதை ஏற்றுக்கொள்ள தயாராயுள்ளது. ஆமென்! நிச்சயமாக அது அப்படித்தான் உள்ளது.

அறுவடை ஆயத்தமாயுள்ளதே! நாம் மிகவும் வளர்ச்சியடைந்து, அதை உட்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறோம். இயேசு ஒரு பந்தியை வைத்துள்ளார், அங்கே தேவனுடைய பரிசுத்தவான்கள் இந்நாளின் பரிபூரணமான ஆகாரத்தை புசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் இன்றைக்கு நம்முடன் இருக்கிறார் என்பதை சுவிசேஷ ஒளி ரூபகாரப்படுத்தி நிரூபிக்கிறது. பரிசுத்தவான்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய ஆதாரத்தைப் புசித்துக்கொண்டு, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.

நம்முடைய மேய்ப்பர், பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி மூலம் பேசும்போது, அந்த திருப்பானைத் திருப்பி, வெளிப்படுத்தலின் ஒளியை பிரகாசிக்கச் செய்யும்போது, அவர் நம்முடைய நாளில் யாராயிருக்கிறார் என்று அவர் நமக்குச் சொல்வார். அவர் சத்தமிட்டு நம்மை எச்சரிப்பார், நீங்கள் உறக்கத்தில் இல்லை என்றே நான் நம்புகிறேன்.

நோவா தன்னுடைய நாளில் ஒளியாக இருந்தான். மோசே தன்னுடைய காலத்தின் ஒளியாக இருந்தான், இப்பொழுது நான் உங்களுடைய நாளில் ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியை உங்களுக்கு அனுப்பியுள்ளேன், அவர் மூலம் என்னுடைய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவர் உங்களுடைய நாளில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அவரே இந்நாளின் வெளிச்சமாய் இருக்கிறார்.

கடந்த முறை நான் இங்கே பூமியில் மாம்சத்தில் இருந்தபோது, நான் அசலான ஐந்து அப்பங்களை எடுத்து, அந்த அப்பங்களை பிட்க ஆரம்பித்தேன். அந்த அசலானதிலிருந்து, நான் அப்பமுண்டாக்கி, அதினால் ஐயாயிரம் பேரைப் போஷித்தேன்.

அதன்பின்னர் நான் ஒரு மீனைப் பெற்றுக்கொண்டு, அந்த மீனிலிருந்து இன்னொரு மீனையும் இன்னொரு மீனையும் உண்டாக்கி ஐயாயிரம் பேரைப் போஷித்தேன்.

ஆனால் உங்களுடைய நாளில், என்னிடம் எதுவுமே இல்லை. நான், "அது அங்கே உண்டாகக்கடவது என்று கூறுங்கள்" என்று உரைத்தேன், அங்கே எதுவுமே இல்லாமலிருந்தும், அது உண்டானது. எனக்கு ஒரு அணிலும் இல்லாதிருந்தது; அங்கு ஒன்றுமே இல்லாதிருந்தது. நான், “உண்டாகக்கடவது" என்று கூறின போது, அங்கே உண்டாயிருந்தது. என்னுடைய வார்த்தை தவறாதது, அது நிறைவேற வேண்டும்.

இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, அவர்கள் தங்களுடைய பிரயாணத்தின்போது, அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய மன்னாவைப் புசித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தனர். அந்த அக்கினி ஸ்தம்பம் இயேசு கிறிஸ்துவாயிருந்தது.

இன்றைக்கு அவர் அதே அக்கினி ஸ்தம்பமாய், அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற இங்கே பூமியில் இருந்தபோது செய்த அதே காரியங்களை செய்துகொண்டு மீண்டும் நம்முடன் இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00., மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 63-1229M “விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்”, என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், எங்களுடைய மேய்ப்பர், பரிசுத்த ஆவியானவர், அக்கினி ஸ்தம்பம், அவருடைய வெளிப்பாட்டின் ஒளியை பிரகாசிக்கச் செய்யவுள்ளபடியால், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

ஆதியாகமம் 1:3, அதிகாரம் 2
சங்கீதம் 22
யோவேல் 2:28
ஏசாயா 7:14, 9:6, 28:10, 42:1-7
பரி. மத்தேயு 4:12-17, அதிகாரங்கள் 24 மற்றும் 28
பரி. மாற்கு 16-ம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம்

 


சனி, 9 ஜூலை, 2022

அன்புள்ள விசுவாசியே,

சகலத்தையும் உண்டாக்கி, ஒழுங்குபடுத்திய தேவன், நம்மை மீட்பதற்காக, நம்மிடையே மாம்சமானார், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அதன்பின்னர் அவர் கடைசி நாட்களில் இந்த பாவ பூமியில் இங்கே நின்று, அவருடைய வார்த்தையை அப்படியே நிரூபிக்க வேண்டும் என்றே, அவர் தம்முடைய மகத்தான பிரசன்னத்தால் நம்மை மிகவும் கனப்படுத்துகிறார், ஏனென்றால் அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவர்.

பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிர்ப்பித்திருக்கிறார். அது ஜீவனுள்ளதாகிவிட்டது. விசுவாசத்தினால் நாம் அதைக் காண்கிறோம். வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறியுள்ளபடியால் அது அவ்வண்ணமாகவே உள்ளது என்பதை நாம் அறிவோம், மேலும் ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிரப்பிக்கிறார். தேவனுடைய வார்த்தை மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் என்று தீர்க்கதரிசி கூறினதுபோலவே, இப்பொழுது நாம் அதனால் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

விசுவாசி அதை விசுவாசிக்கிறான், (எதை?) வார்த்தையை விசுவாசிக்கிறான். சபைக் கோட்பாட்டை அல்ல; வார்த்தையையே! வேறு யாரோ ஒருவர் கூறுகிறதை அல்ல; வார்த்தை என்ன கூறுகிறது என்பதையே! இப்பொழுது, நினைவிருக்கட்டும், அதுதான் விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி, “அது எப்படி இருக்க முடியும்? அது எனக்கு விளக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்குமே!” என்று கூறுவதில்லை. அதுதான் அவிசுவாசி, அதாவது, அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், “அது வார்த்தையாயிருந்தால், அது வார்த்தையே! அது உண்மையே.” அதுதான் விசுவாசி.

நீங்கள் ஒவ்வொரு சிறு எழுத்தையும், ஒவ்வொரு எழுத்தின் சிறு உறுப்பையும், அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் விசுவாசிக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள், “நான் அதை விசுவாசிப்பதில்லை. சில வார்த்தைகள் தேவனுடையது, சில வார்த்தைகள் மனிதனுடையது, அவைகளில் சில வேட்டையாடுதலின்போது நிகழ்ந்த கட்டுக் கதைகள்” என்று கூறினால், பாருங்கள், அப்படியானால் நீங்கள் ஒரு அவிசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி அதை விசுவாசிக்கிறான், அது எப்படித் தென்பட்டாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன கூறினாலும், அது எவ்வளவுதான் சாத்தியமற்றது என்பதாய் தென்பட்டாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசிக்கிறோம்!

இங்குள்ள ஒவ்வொரு நபரும், தற்போது, இந்த ஒலி நாடாவைக் கேட்கிற ஒவ்வொரு நபரும்; என்றோ ஒரு நாளில் நான் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், இந்த ஒலிநாடாக்கள் அப்பொழுதும் ஜீவனுள்ளதாயிருக்கும். அது உண்மையே. புரிகிறதா? நீங்கள் இந்த வகுப்பினரில் ஒருவராயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளில் ஒருவராயிருக்கத்தான் வேண்டும்.

நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் எந்த வகுப்பின ஜனங்களாய் இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க, உங்களுடைய ஜீவியத்தையே பார்க்க வேண்டும். நீங்கள், “அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படிக்கு அவர் எங்களிடம் கூறினார். சரியாக ஒலிநாடாவில் உள்ளதையே சொல்ல வேண்டும், ஒரு வார்த்தையையும் மாற்ற வேண்டாம். அவர் என்ன கூறினார் என்பதனால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, அவர் என்ன கூறினார் என்று யாரோ ஒருவர் கூறினதினாலுமல்ல, அவர் என்ன பொருட்படுத்தி கூறினார் என்று யாரோ ஒருவர் கூறுவதானாலும் அல்ல, ஆனால் ஒளிநாடாக்கள் என்ன கூறுகிறது என்பதன் மூலமேயாகும்.

இல்லையென்றால், நீங்கள், "அவர் மட்டும் பரிசுத்த மனிதன் அல்ல. அவர் செய்த இந்தக் காரியங்களைச் செய்ய மற்ற ஜனங்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியை மிக மிஞ்சின ஸ்தானத்தில் பொருத்துகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு வித்தியாசமான காலம்" என்று கூறுகிற, கோரா மற்றும் தாத்தானோடும் போகப் போகின்றீர்களா?

நீங்கள் இந்த வகுப்பினர்களில் ஒருவராய் இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுடைய தற்போதைய நிலையில், உங்களுடைய தற்போதைய மனநிலையில், அதாவது, காணக்கூடிய இந்த கூட்டத்தாரில் இங்கு இருக்கிற நீங்கள், இந்த ஒலி நாடாவை கேட்க போகும் காணமுடியாத கூட்டத்தாரில் இருக்கப்போகும் நீங்களும், இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு உங்களுடைய தற்போதைய மனநிலை, நீங்கள் எந்த வகுப்பினராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறது. இது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் வார்த்தையில் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா, அதனோடு தரித்திருப்பீர்களா, நீங்கள் வெளியே நடந்து செல்வீர்களா அல்லது அந்த ஒலிநாடாவை நிறுத்திவிடுவீர்களா என்பதை உங்களுக்கு சரியாக சொல்கிறது.

கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம், நாம் உண்மையான விசுவாசிகள், வேறு யாரோ ஒருவரால் சம்மதிக்கவைக்கப்பட்டவர்கள் அல்ல; வேறு ஏதோவொன்றாலும் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வார்த்தையைத் தாமே வெளிப்படுத்தினார். நாம் வார்த்தை தெளிவாக்கப்பட்டதையும், ரூபகாரப்படுத்தப்பட்டதையும், வெளிப்படுத்தப்பட்டதையும் காண்கிறோம்.

சோதனைகளினால், கடுமையான பாதைகளினால், கடுமையான உபத்திரவத்தினால் நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம், ஆனால் நம் இருதயங்களின் விசுவாசம் அந்த வார்த்தையின் பொருளுக்கே துடிக்கிறது. நாம் இப்பொழுது வனைவதற்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயும், அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டவர்களாயும் இருக்கிறோம். நாம் ஜீவனுள்ள உதாரணங்களாயிருக்கிறோம், தேவனுடைய வார்த்தை நம் மூலமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறது. நாம் எங்கு நிற்போம் என்பதைப் பார்க்க, நம்மை மிக அடிமட்டத்தில் கீழே தள்ள, நம்மை உலுக்கும்படி சோதனைகள் உண்டாகின்றன. ஆனால் நாம் அசைக்கப்பட முடியாது, நாம் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் நிற்கிறோம்.

நீங்கள் யார் என்பதை அவர் சொல்லும்போது கேளுங்கள்.

தேவன் உலகத்தை வார்த்தையை உரைத்து சிருஷ்டித்தபோது, உங்களுடைய ஒவ்வொரு பாகமும் இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுதே உங்களுடைய சரீரத்தை அவர் இங்கே வைத்தார். தேவனைத் தவிர வேறு எதுவும் அதைப் பறித்துக்கொள்ள முடியாது.

அதை உங்களிடமிருந்து எதுவும் பறிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்களோ, "நான் வெறுமனே ஒரு இல்லத்தரசி" என்று கூறுகிறீர்கள். உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாதே! தேவன், தம்முடைய மகத்தான நடைமுறை திட்டத்தில், கிறிஸ்துவின் சரீரத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறார், உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர் எவருமே இல்லை.

மகிமை...அல்லேலூயா...தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரத்தைக் கேட்பது இன்னும் அதிகமாகவும் மகத்தானதாகவும் இருக்கிறது. நாம் யார் என்பதை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளர் மூலம் நமக்குச் சொல்லி அவர் பேசுகிறதை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய விசுவாசம் அதிகமாகிறது. தெரிந்துகொள்வதினால் உண்டாகும் மகிழ்ச்சியோ:

  • நாம் “உண்மையான விசுவாசிகள்”
  • நாம் “அவர்களில் ஒருவர்”
  • நாம் “மணவாட்டி”

கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நாம் கூடும்போது, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரமே மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டியின் பாகமானவர்களே, என்னுடன் இயங்கு பொத்தானை அழுத்தி: மூன்று வகைகளான விசுவாசிகள் 63-1124E. என்ற செய்தியை கேட்கும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன். இதைத்தான் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுவே நமக்கான, தேவனுடைய திட்டமாயிருக்கிறது.

  • தேவன் உங்களுடைய இருதயத்தில் எந்த ஒலிநாடாவை வைத்தாலும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
  • நீங்கள் தெரிந்து கொள்ளும் நேரத்தில் கேட்க: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
  • உங்களுக்கான என்னுடைய செய்தியாயிருக்கிறபடியால்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

பரி.யோவான் 6:60-71

 


சனி, 2 ஜூலை, 2022

அன்பான கழுகுகளே, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நாம் யாவரும் ஒன்று கூடி கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? - 63-1124M என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்