அன்புள்ள விசுவாசியே,
சகலத்தையும் உண்டாக்கி, ஒழுங்குபடுத்திய தேவன், நம்மை மீட்பதற்காக, நம்மிடையே மாம்சமானார், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அதன்பின்னர் அவர் கடைசி நாட்களில் இந்த பாவ பூமியில் இங்கே நின்று, அவருடைய வார்த்தையை அப்படியே நிரூபிக்க வேண்டும் என்றே, அவர் தம்முடைய மகத்தான பிரசன்னத்தால் நம்மை மிகவும் கனப்படுத்துகிறார், ஏனென்றால் அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவர்.
பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிர்ப்பித்திருக்கிறார். அது ஜீவனுள்ளதாகிவிட்டது. விசுவாசத்தினால் நாம் அதைக் காண்கிறோம். வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறியுள்ளபடியால் அது அவ்வண்ணமாகவே உள்ளது என்பதை நாம் அறிவோம், மேலும் ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிரப்பிக்கிறார். தேவனுடைய வார்த்தை மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் என்று தீர்க்கதரிசி கூறினதுபோலவே, இப்பொழுது நாம் அதனால் இணைக்கப்பட்டிருக்கிறோம்.
விசுவாசி அதை விசுவாசிக்கிறான், (எதை?) வார்த்தையை விசுவாசிக்கிறான். சபைக் கோட்பாட்டை அல்ல; வார்த்தையையே! வேறு யாரோ ஒருவர் கூறுகிறதை அல்ல; வார்த்தை என்ன கூறுகிறது என்பதையே! இப்பொழுது, நினைவிருக்கட்டும், அதுதான் விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி, “அது எப்படி இருக்க முடியும்? அது எனக்கு விளக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்குமே!” என்று கூறுவதில்லை. அதுதான் அவிசுவாசி, அதாவது, அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், “அது வார்த்தையாயிருந்தால், அது வார்த்தையே! அது உண்மையே.” அதுதான் விசுவாசி.
நீங்கள் ஒவ்வொரு சிறு எழுத்தையும், ஒவ்வொரு எழுத்தின் சிறு உறுப்பையும், அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் விசுவாசிக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள், “நான் அதை விசுவாசிப்பதில்லை. சில வார்த்தைகள் தேவனுடையது, சில வார்த்தைகள் மனிதனுடையது, அவைகளில் சில வேட்டையாடுதலின்போது நிகழ்ந்த கட்டுக் கதைகள்” என்று கூறினால், பாருங்கள், அப்படியானால் நீங்கள் ஒரு அவிசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி அதை விசுவாசிக்கிறான், அது எப்படித் தென்பட்டாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன கூறினாலும், அது எவ்வளவுதான் சாத்தியமற்றது என்பதாய் தென்பட்டாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசிக்கிறோம்!
இங்குள்ள ஒவ்வொரு நபரும், தற்போது, இந்த ஒலி நாடாவைக் கேட்கிற ஒவ்வொரு நபரும்; என்றோ ஒரு நாளில் நான் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், இந்த ஒலிநாடாக்கள் அப்பொழுதும் ஜீவனுள்ளதாயிருக்கும். அது உண்மையே. புரிகிறதா? நீங்கள் இந்த வகுப்பினரில் ஒருவராயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளில் ஒருவராயிருக்கத்தான் வேண்டும்.
நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் எந்த வகுப்பின ஜனங்களாய் இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க, உங்களுடைய ஜீவியத்தையே பார்க்க வேண்டும். நீங்கள், “அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படிக்கு அவர் எங்களிடம் கூறினார். சரியாக ஒலிநாடாவில் உள்ளதையே சொல்ல வேண்டும், ஒரு வார்த்தையையும் மாற்ற வேண்டாம். அவர் என்ன கூறினார் என்பதனால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, அவர் என்ன கூறினார் என்று யாரோ ஒருவர் கூறினதினாலுமல்ல, அவர் என்ன பொருட்படுத்தி கூறினார் என்று யாரோ ஒருவர் கூறுவதானாலும் அல்ல, ஆனால் ஒளிநாடாக்கள் என்ன கூறுகிறது என்பதன் மூலமேயாகும்.
இல்லையென்றால், நீங்கள், "அவர் மட்டும் பரிசுத்த மனிதன் அல்ல. அவர் செய்த இந்தக் காரியங்களைச் செய்ய மற்ற ஜனங்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியை மிக மிஞ்சின ஸ்தானத்தில் பொருத்துகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு வித்தியாசமான காலம்" என்று கூறுகிற, கோரா மற்றும் தாத்தானோடும் போகப் போகின்றீர்களா?
நீங்கள் இந்த வகுப்பினர்களில் ஒருவராய் இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுடைய தற்போதைய நிலையில், உங்களுடைய தற்போதைய மனநிலையில், அதாவது, காணக்கூடிய இந்த கூட்டத்தாரில் இங்கு இருக்கிற நீங்கள், இந்த ஒலி நாடாவை கேட்க போகும் காணமுடியாத கூட்டத்தாரில் இருக்கப்போகும் நீங்களும், இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு உங்களுடைய தற்போதைய மனநிலை, நீங்கள் எந்த வகுப்பினராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறது. இது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் வார்த்தையில் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா, அதனோடு தரித்திருப்பீர்களா, நீங்கள் வெளியே நடந்து செல்வீர்களா அல்லது அந்த ஒலிநாடாவை நிறுத்திவிடுவீர்களா என்பதை உங்களுக்கு சரியாக சொல்கிறது.
கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம், நாம் உண்மையான விசுவாசிகள், வேறு யாரோ ஒருவரால் சம்மதிக்கவைக்கப்பட்டவர்கள் அல்ல; வேறு ஏதோவொன்றாலும் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வார்த்தையைத் தாமே வெளிப்படுத்தினார். நாம் வார்த்தை தெளிவாக்கப்பட்டதையும், ரூபகாரப்படுத்தப்பட்டதையும், வெளிப்படுத்தப்பட்டதையும் காண்கிறோம்.
சோதனைகளினால், கடுமையான பாதைகளினால், கடுமையான உபத்திரவத்தினால் நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம், ஆனால் நம் இருதயங்களின் விசுவாசம் அந்த வார்த்தையின் பொருளுக்கே துடிக்கிறது. நாம் இப்பொழுது வனைவதற்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயும், அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டவர்களாயும் இருக்கிறோம். நாம் ஜீவனுள்ள உதாரணங்களாயிருக்கிறோம், தேவனுடைய வார்த்தை நம் மூலமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறது. நாம் எங்கு நிற்போம் என்பதைப் பார்க்க, நம்மை மிக அடிமட்டத்தில் கீழே தள்ள, நம்மை உலுக்கும்படி சோதனைகள் உண்டாகின்றன. ஆனால் நாம் அசைக்கப்பட முடியாது, நாம் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் நிற்கிறோம்.
நீங்கள் யார் என்பதை அவர் சொல்லும்போது கேளுங்கள்.
தேவன் உலகத்தை வார்த்தையை உரைத்து சிருஷ்டித்தபோது, உங்களுடைய ஒவ்வொரு பாகமும் இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுதே உங்களுடைய சரீரத்தை அவர் இங்கே வைத்தார். தேவனைத் தவிர வேறு எதுவும் அதைப் பறித்துக்கொள்ள முடியாது.
அதை உங்களிடமிருந்து எதுவும் பறிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்களோ, "நான் வெறுமனே ஒரு இல்லத்தரசி" என்று கூறுகிறீர்கள். உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாதே! தேவன், தம்முடைய மகத்தான நடைமுறை திட்டத்தில், கிறிஸ்துவின் சரீரத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறார், உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர் எவருமே இல்லை.
மகிமை...அல்லேலூயா...தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரத்தைக் கேட்பது இன்னும் அதிகமாகவும் மகத்தானதாகவும் இருக்கிறது. நாம் யார் என்பதை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளர் மூலம் நமக்குச் சொல்லி அவர் பேசுகிறதை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய விசுவாசம் அதிகமாகிறது. தெரிந்துகொள்வதினால் உண்டாகும் மகிழ்ச்சியோ:
- நாம் “உண்மையான விசுவாசிகள்”
- நாம் “அவர்களில் ஒருவர்”
- நாம் “மணவாட்டி”
கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நாம் கூடும்போது, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரமே மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டியின் பாகமானவர்களே, என்னுடன் இயங்கு பொத்தானை அழுத்தி: மூன்று வகைகளான விசுவாசிகள் 63-1124E. என்ற செய்தியை கேட்கும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன். இதைத்தான் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுவே நமக்கான, தேவனுடைய திட்டமாயிருக்கிறது.
- தேவன் உங்களுடைய இருதயத்தில் எந்த ஒலிநாடாவை வைத்தாலும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
- நீங்கள் தெரிந்து கொள்ளும் நேரத்தில் கேட்க: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
- உங்களுக்கான என்னுடைய செய்தியாயிருக்கிறபடியால்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி.யோவான் 6:60-71
தொடர்புடைய சேவைகள்
அன்பான கழுகுகளே, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நாம் யாவரும் ஒன்று கூடி கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? - 63-1124M என்ற செய்தியைக் கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான உயரிய விசுவாசமுள்ள மணவாட்டியே,
இது முறையற்ற இலக்கணத்துடன் கூடிய ஒரு எளிமையான கடிதம் என்பதை நான் அறிவேன், ஆனால் நம்முடைய தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிந்ததுகொள்ள நான் விரும்புகிறேன். ஒலிநாடாவில் அவர் ஏதேனும் ஒன்றைக் கூற நாம் கேட்கும்போது, நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், அதன்பின்னர் தேவன் தாமே நேரடியாக நம்மிடம் பேசுவதுபோல அதைத் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்கிறோம்.
இது பிரசங்கிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இது மனிதனாயிருக்க முடியாது, இது தேவனாயிருக்க வேண்டும்.
இயேசுவானவர் இங்கே இருந்தபோது தோன்றினதான காணக்கூடிய அதே அடையாளங்கள் இன்றைக்கு பூமியில் தோன்றியுள்ளன என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் கண்ட அதே அக்கினி ஸ்தம்பம், அதே தன்மையுடன்,நம்முடைய நாளில் வந்து, அதே காரியத்தைச் செய்கிறது. இது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறதாயுள்ளது:
அவர் தம்மை மேசியாவாக அடையாளங்காட்டின அதே ஆவிக்குரிய அடையாளம், இன்றைக்கும் அவரை அடையாளங்காட்டியுள்ளது. அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறாரே!
இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவதாயுள்ளது என்று நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே உங்களால் இந்த மகத்தான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை விசுவாசிக்காத ஒருவராக இருந்து, "இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறுமனே சகோதரன் பிரான்ஹாம் பேசுகிறது," என்று அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்றால்: அப்படியானால் இது உங்களுக்கானது அல்ல.
மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவன் இருந்தான், அது மோசே. மீதமுள்ளவர்கள் அந்த செய்தியைப் பின்பற்றினர். புரிகிறதா?
ஆனால் இன்றைக்கு, அந்த விதமாக இதை விசுவாசிக்கிற நமக்கு, நம்முடைய இருதயங்கள் மிகுந்த சந்தோஷத்தினால் நிறைந்து, பொங்கி வழிகிறபடியால், நம்மால் நம்மைக் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அவர் நம்மை மீட்டுள்ளார் என்பதை நான் உணருகிறேன். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் இருக்கின்றன என்பதை நான் உணருகிறேன். நாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.
இந்தச் செய்தி தேவனுடைய சத்தம் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்றே நாம் விசுவாசிக்கிறபடியால், தேவன் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவது போன்றே நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
நான் இதை இந்த விதமாக கூறுவேனாக, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் தோன்றி அவருடைய சபையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம். நானும் உங்களோடு விசுவாசிக்கிறேன்.
நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மாம்சத்தில் தோன்றி, அவருடைய மணவாட்டியிடம் ஒலிநாடாவின் மூலம் பேசுகிறார்.
ஒவ்வொரு முறையும் நாம் இயங்கு பொத்தானை அழுத்தும்போது நம்முடைய விசுவாசம் புதிய உச்சங்களை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவன் தாமே நம்மிடம் பேசிக்கொண்டிருப்பதாகும். நமக்கு 100% சுத்தமான வார்த்தை மாத்திரமே வேண்டும்.
நான் உங்களிடம் ஒன்றை கேட்கட்டும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் உங்களுடைய மேய்ப்பரா? அவர் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாவது தூதனாகிய செய்தியாளனா? அவர் தேவனிடம் செய்யும்படி கேட்டுக்கொண்டதை, தேவன் செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஞாயிற்றுக்கிழமை வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி நீங்கள் மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப்போகிறீர்கள்.
நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசித்தாலொழிய, உங்களால் வேறெந்த வழியிலும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்றே அவர் கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
நான், உங்களுடைய மேய்ப்பன், உங்களுடைய சகோதரன் என்ற முறையில், எனக்குள்ள விசுவாசத்தைக்கொண்டு, நான் அதை உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொண்டேன். நான் கேட்டுக்கொண்டதை நான் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதை என்னுடன் சேர்ந்து விசுவாசித்தால்; எனக்குள்ள விசுவாசத்தை, நான் இந்த வேளையில் அதை உங்களுக்குக் அளிக்கிறேன்.
நமக்கு, அவர் நம்முடைய மேய்ப்பர். நம்முடைய மேய்ப்பரான, தேவனுடைய தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிதான விசுவாசம் உலகில் வேறு யாருக்குமே இல்லை. இப்பொழுது தேவனுடைய தீர்க்கதரிசி அவருடைய பெரிதான விசுவாசத்தை நமக்குக் கொடுக்கும்படி தேவனிடம் கேட்டுக்கொண்டார். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்பொழுது உங்களுடைய விசுவாசமாயுள்ளது...மகிமை, நாம் விசுவாசிக்கிறோமே!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி அவ்வாறிருக்காது, ஏனென்றால் இப்பொழுது நாம் அவருடைய விசுவாசத்தை பெற்றுள்ளோம்.
இப்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய துன்பத்தையும், உங்களுடைய சுகவீனத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அதனிடம், "நீ போகத்தான் வேண்டும்" என்று கூறுங்கள், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையோடு, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தையும், அதனோடு சேர்த்து என்னுடைய விசுவாசத்தையும் பெற்றுள்ளீர்கள், அதை ரூபகாரப்படுத்தி, அவர் இங்கே இருக்கிறார் என்று நீரூபிக்க அவருடைய சர்வவல்லமையானது இங்கே இருக்கிறபடியால், அது உங்களை இந்த நேரத்தில் சுகமாக்கும்.
நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு இந்த பெரிதான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து நான் என்ன கூற முடியும்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும், நீங்கள் வந்து அதைக் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மணவாட்டியுடன் வந்து கேளுங்கள்: உங்களிலிருக்கிறவர் 63-1110E, என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் எங்களிடம் சொல்லி,கர்த்தர் உரைக்கிறதாவது எங்களிடம் பேசப்போகிறபடியால், கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம்.
ஞாயிற்றுக்கிழமை அதே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், பரவாயில்லை, எந்த நேரத்திலும் இயங்கு பொத்தானை அழுத்தி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்துக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பிதாவே, உம்முடைய விலையேறப்பெற்ற மணவாட்டியை ஊக்குவிக்க, ஏதோ சில சிறிய வழியில், நீர் என்னை பயன்படுத்தும்படியாக, இன்றைக்கு என்னால் என்ன எழுத முடியும்?
தேவன் நம்முடைய நாளில் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று பெயரிடப்பட்ட ஒரு மனிதனுக்குள் வந்து, மானிட சரீரத்தில் ஜீவித்தார், அதனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி நிறைவேற்ற முடிந்தது. அதுவே நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயுள்ளது.
அந்த சத்தத்தைக் கேட்பதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதுமே இன்றைக்கு தேவன் அருளியுள்ள ஒரே வழியாயுள்ளது. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், அவருடைய மணவாட்டியை வழிநடத்தவும் ஒரு மனிதனை மாத்திரமே அனுப்பி, அவர் மூலமாக மட்டுமே பேசினார்.
அவர் தம்முடைய திட்டத்தை அல்லது காரியங்களை செய்யும் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் அதை முதல் முறை எப்படிச் செய்தாரோ, அவர் ஒவ்வொரு முறையும் அதை அவ்வாறே செய்கிறார். அவர் தாமே தம்முடைய ஜனங்களை, அக்கினி ஸ்தம்பத்தினால் வழிநடத்துகிறார்.
நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, பிசாசு எதையும் செய்யவோ அல்லது உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளும்படி எதையும் கூறவோ முடியாது, ஒன்றுமே செய்ய முடியாது! அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களை முன்குறித்தார். அப்பொழுதே அவர் உங்களை அறிந்திருந்தார், அப்பொழுதே நீங்கள் அவருடன் இருந்தீர்கள். அவர் உங்கள் பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருந்தார். அவர் உங்களுடைய ஏற்றத் தாழ்வுகளை அறிந்திருந்தார். அவர் உங்களுடைய தோல்விகளை, உங்களுடைய தவறுகளை அறிந்திருந்தபோதிலும், அவர் உங்களை நேசித்தார், ஏனென்றால் நீங்கள் அவருடைய பாகமாக இருந்தீர்கள்.
உங்களுடைய ஆத்துமாவால் அவருடைய வார்த்தையை மட்டுமே புசிக்க முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து, அவர் பேரில் தியானித்து, உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அவருடைய சத்தம் உங்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்கும்போது, அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. அவர் உங்களிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசி, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி, நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று நினைப்பூட்டுகையில், நீங்கள் அவரோடு கூட உன்னதங்களில் வீற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பிசாசு உங்களைத் தாக்கி, தாக்கி, தாக்கிக்கொண்டேயிருக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் தாழ்ந்து போய், நீங்கள் ஒரு முற்றிலுமான தோல்வியை உணரலாம்; மற்ற எவருமே அந்த அளவிற்கு தோல்வியுறாததுபோல நீங்கள் அவரிடத்தில் தோல்வியுற்றிருப்பதுபோல் உணரலாம். நீங்கள் மிகவும் மோசமாகிவிட்டாலும், எங்கோ, உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்தில், "எதுவுமே உங்களை என்னுடைய வார்த்தையிலிருந்து வேறுபிரிக்க முடியாது, நீங்கள் என்னுடைய வார்த்தையாயிருக்கிறீர்கள். நான் தானே உங்களுடைய பெயரை என்னுடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தேன்:" என்று உங்களிடம் சொல்லுகிற அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள்.
இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்? ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது: என்று உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் அந்த அமர்ந்த மெல்லிய சுத்தமான: 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள் என்ற செய்தியை கேட்க நாங்கள் கூடி வருகையில், நீங்கள் மணவாட்டியோடு சேர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஆதியாகமம் 15:16
பரி. மத்தேயு 23: 27-34
பரி. யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1 பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6
தொடர்புடைய சேவைகள்
அன்பான தேவனுடைய இரத்தத்தால்- பிணைக்கப்பட்ட, அடையாளத்தால்-பிணைக்கப்பட்ட, உடன்படிக்கை ஜனங்களே,
நினைவிருக்கட்டும், நாம் ஏவாள் அல்ல, நாம் சாத்தானுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த சந்தேகக்காரர்களில் ஒருவர் அல்ல. நமக்கு இந்த வார்த்தையில் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கிறது! அவர் எழுதின மற்றும் ஒலிநாடாக்களில் பேசின ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் நாம் பற்றிக்கொண்டிருக்கிறோம். இது நமக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.
நாம் நமக்குள்ளாக சுதந்தரித்துக்கொள்ள வேண்டிய ஏதோ மகத்தான விசுவாசத்திற்காக நாம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கவில்லை. நாம் போதியளவு நல்லவர்களாயிருக்க முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை; நாம் ஒருபோதும் போதியளவு நல்லவர்களாக இருக்கமாட்டோம், நாம் எப்பொழுதுமே தோல்வியுறுவோம். அவர் நம்மிடம் விசுவாசங்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னது அதுவல்ல. அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்பி விசுவாசங்கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாம் அதை விசுவாசிக்கிறபடியால், அது நமக்கு அவருடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.
பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பற்றி பிதாவிடம் என்ன சொல்லி அறிக்கை கொடுத்து வருகிறார் என்பதை நாம் கேட்போமாக.
“நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளேன். உலகம் முழுவதும் சிதறியுள்ள சில சிறிய குழுக்களை நான் தேடி கண்டுபிடித்துள்ளேன். நான் சில பையன்களை அவர்களுடைய வீட்டிற்கு ஒலிநாடாக்களோடு அனுப்பி, சில ஒலிநாடாக்களை இயக்கச் செய்தேன். அவர்கள் அந்த ஒலிநாடாக்களைக் கேட்டபோது, அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தனர். இப்போது அவர்கள் செய்தியைப் பெறுவதற்காக தங்களுடைய வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். அவர்கள் உம்முடைய வார்த்தையைக் கேட்கக் கூடிவரும் உம்முடைய முன்குறிக்கப்பட்ட கழுகுகளாயிருக்கின்றனர்.
அடையாளத்தின் கீழ், இந்த மணி நேரத்தின் செய்தியின் கீழ் வரும் அனைவரும் இரட்சிக்கப்படுவர் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உம்மோடும் உம்முடைய வார்த்தையோடும் ஒன்றாகிவிடுவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இது அவர்கள் பேரில் கிரியை செய்திருந்தால், அப்பொழுது அந்த அடையாளத்தை அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பயன்படுத்துங்கள். அதை அவர்களுடைய அன்பார்ந்தவர்களுக்குப் பயன்படுத்தி, அவர்களையும் அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள், அவர்களும் கூட இரட்சிக்கப்படுவார்கள்.
ஒலிநாடாவை கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் நான் சொன்னேன்: நான் அவர்களை தேவனுக்காக உரிமை கோருகிறேன். நான் அதைக் கூறினபோது, அவர்கள் அதை முழு இருதயங்களோடும், முழு ஆத்துமாக்களோடும் விசுவாசித்தனர். அவர்கள் என்னுடைய ஜனங்கள், ஒலிநாடாக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிற அவர்களே நான் நேசிப்பவர்கள்.
ஏழு முத்திரைகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனிக்கும்படி நான் அவர்களிடம் சொன்னேன்: ஜனங்களை ஒன்றிணைத்தல், ஒன்றுபட்ட அடையாளங்கள், கடைசி நாட்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு, இந்த ஒரு காரியத்தில் மூடப்பட்ட, அடையாளம்.”
ஓ, சபையே, எழும்பி உன்னை அசைத்துக்கொள்! உன்னுடைய மனசாட்சியே உன்னைக் குத்தட்டும், இந்த வேளையில், நீயே விழித்தெழு! நாம் பதறல் கொள்ள வேண்டும், இல்லையேல் அழிந்துபோக வேண்டும்! ஏதோ ஒன்று கர்த்தரிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறதே! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் அறிவேன். ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது, நாம் பதறல் கொள்வது நல்லது. அது மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையேள்ளது. அது நம்மூடாக கடந்து செல்லுகையில், நாம் அதை காணமாட்டோம்.
ஏதோ நடக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். கர்த்தருடைய வருகை திடீரென, இரகசியமாக சென்றுவிடுவதாயிருக்கும். நாம் பதற்றமடைந்துள்ளோம். நேரம் சமீபித்துவிட்டது. நம்முடைய நாளுக்கான அடையாளத்தை நாம் அடையாளங்கண்டுகொண்டோம், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பதறலின் நேரங்களில், துரிதமாக எடுக்கப்பட்ட பாஸ்காவின் அடையாளங்களை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். நாம் உலகம் முழுவதும், அவருடைய வார்த்தையின் பேரில் கூடிவருகிறோம்.
நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, ஜெபர்ஸன்வில் நேரப்படி, 63-0901E - பதறல்கள்: என்ற செய்தியின் வார்த்தையைக் கேட்க கூடி வருகையில், இந்த மகத்தான நிகழ்வின் ஒரு பாகமாயிருக்க வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிப்பதற்கான வேத வாக்கியம்:
யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16