காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 28 ஜனவரி, 2023

அன்புள்ள கிறிஸ்துவினுடைய எளிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே,

நாம் வேறு ஒன்றாக இருக்க முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நமக்கு வேறு எதுவும் தெரியாது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம். சுத்தமான மாமிசம் எங்கு உள்ளதோ, அந்தக் காலத்தின் வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்த, கழுகுகள் ஒன்று கூடும். வார்த்தை நமக்குள் உயிர்ப்பிக்கிறது.

நாம் எல்லோரையும் போல் இல்லை! நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ஜனமாய், கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்களாய், இந்த நாளுக்காக அவருடைய வாக்குத்தத்தத்தின் பலனைக் கொடுப்பதற்காக, வார்த்தைக்கும் தேவனுடைய ஆவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்பதனால் நாம் தொடர்ந்து முழு வளர்ச்சியுடன் முதிர்ச்சியடைந்து வருகிறோம்.

இந்த ஒலிநாடாக்களை மீண்டும் ஆலோசித்துப் பார்க்குமாறு தீர்க்கதரிசி நமக்குக் கூறினார். நீங்கள் ஒரு ஒலிநாடா பதிவு செய்யும் கருவியை வைத்திருந்தால், ஒரு ஜனக் குழுவை ஒன்று சேர்த்து, அதை இயக்கி, மிக கவனமாக கூர்ந்து கேளுங்கள். அவர் நமக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற, அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை; அவரே தம்முடைய சொந்த வியாக்கியானத்தை செய்கிறார். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்."

இதுதான் வேதாகமமாக உள்ளது, இதிலிருந்து ஒரு வார்த்தை எடுக்கப்படவோ அல்லது இதனோடு கூட்டப்படவோ கூடாது. அப்படியே அந்த சத்தத்தோடு தரித்திருங்கள். "அவர்கள் ஒரு அந்நியனுக்குப் பின்செல்லமாட்டார்கள்."

இன்றைக்கு தேவன் அருளியுள்ள வழியை எப்படி யாரும் காணாமல் இருக்க முடியும்? ஆனால் தேவனுக்கு மகிமை, நாம் அதைக் காண முடியும், ஏனென்றால் நாம் அதைக் காணும்படி தெரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். நாம் வஞ்சிக்கப்படமாட்டோம், நாம் வஞ்சிக்கப்பட முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, அது அப்படியே ஒரு நிமிடம் பதியட்டும், நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறோம்!! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று தேவன் தாமே, மானிட உதடுகள் மூலமாக பேசி, நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் பயப்படுவதற்கு முற்றிலுமாக ஒன்றும் இல்லை. நமக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் நம்முடையதாய் இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் கர்த்தர் நம்மிடத்திற்கு வருகை தர வேண்டும் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். எல்லோரையும் உட்கார வைக்க நம்மிடத்தில் இங்கு இடமில்லை, எல்லோரும் ஜெபர்சன்வில்லுக்கு வர முடியாது, எனவே நாம் அவர்களுக்கு இணையதள ஊடகம் மூலம் வார்த்தையை அனுப்ப வேண்டும்.

நாம் நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், நம்முடைய கார்களில், உலகம் முழுவதிலுமிருந்து நம்முடைய சிறிய ஒலிபெருக்கிகளை சுற்றிக் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

அவர்கள் நம்முடன் ஆப்பிரிக்காவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் மெக்சிகோவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா என்று, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

நாம் இங்கே வீட்டில் கூட்டப்படுகிற சபையில், கூடாரத்தில் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் ஒரே குழுவினராக, விசுவாசிகளாக ஒன்று சேர்ந்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய நாமத்திற்காக இப்பொல்லாத காலத்திலிருந்து தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாக இருக்கிறோம். நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று சாத்தானுக்கு சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த மூல மணவாட்டி மரத்தின் பாகமாக இருக்கிறோம். அந்த வார்த்தையினால் நம்முடைய ஜீவியம் வெளிப்படுத்தப்படுகின்றதை நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

அவரில் சம்பவிக்கவிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் இயேசு நேரடியான பதிலாய் இருந்தார் என்று நம்புவது அனைவருக்கும் எளிதானது, ஏனென்றால் அது சம்பவித்ததைக் காண அவர்கள் பின்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பொல்லாத காலத்தில், அதை மற்றொரு விதத்தில் வியாக்கானிப்பதன் மூலம், அப்பொழுது அவர்கள் செய்த அதே காரியத்தை இவர்களும் செய்துகொண்டு, ஒரு பொய்யை விசுவாசிக்கும்படி கொடிய வஞ்சகத்திற்குள்ளாக ஜனங்கள் செல்ல காரணமாகியுள்ளனர். இந்தக் காலத்திற்காக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிற அதே வார்த்தையாக இது உள்ளது என்பதை அவர்கள் மாத்திரம் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்கும்.

இந்த செய்தியே, மணவாட்டியை ஒன்று சேர்க்கக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. இந்த செய்தியே, நாம் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தமே, கர்த்தர் உரைக்கிறதாவது என்று ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தமாய் உள்ளது.

இப்பொழுது, ​​வெறுமனே ஒரு குளிர்ந்த, சம்பிரதாயமான, வெற்றச்சார முறையான சபைகள், முதலியன, மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரம், அது நிலைக்காது; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதற்கு எந்த கவனத்தையும் ஒருபோதும் செலுத்த மாட்டார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட அங்கே ஒரு உண்மையான காரியத்தைப் போலவே இருக்கிறது. நீங்கள் யாவரும் செய்ய வேண்டியது ஒரு வார்த்தையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதேயாகும். வாக்களிக்கப்பட்ட காலமாயும்; மிக மகத்தான நேரமாயுமுள்ளதே! கிறிஸ்தவர்கள், எங்கும், நாம் ஜீவித்துகொண்டிருக்கிற வேளையை கவனித்துக் கொண்டிருக்கிறார்களே! குறித்துக் கொண்டு, வாசித்து, மிகவும் கூர்ந்து செவி கொடுங்கள்.

இப்பொல்லாத காலத்தின் தேவன் அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஜனங்கள் கேட்பதை தடுப்பதன் மூலம் அவர்களை வஞ்சிக்கும்படி அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறான். ஆதியிலே அவன் ஏவாளிடத்தில் செய்ததுபோல, அவர்கள் வெறுமனே ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்யவே அவன் முயற்சிக்கிறான்.

ஆனால் கிறிஸ்துவினுடைய வார்த்தை-மணவாட்டியோ ஒரு தலையண்டைக்கு வந்து கொண்டிருக்கிறாள். நாம் எங்கிருந்து ஆரம்பித்தோமோ அந்தத் துணையுடன் நாம் மீண்டும் இணைந்துகொண்டிருக்கிறோம். யாத்திரையின் நேரம் சமீபித்துவிட்டது. தேவன் தம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிற அவருடைய மணவாட்டிக்காக வருகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இங்கே கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை அழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த காலத்திற்காக, அவளுக்கென அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை ரூபுகாரப்படுத்துவதன் மூலம் அவர் அதைச் செய்துகொண்டு, அது கிறிஸ்து என்று காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

உங்களிடத்தில் நேரடியாக பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்க, உலகெங்கிலுமுள்ள மணவாட்டி ஒன்றிணைவதை விட மகத்தானது எதுவுமில்லை. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சத்தியம் என்று நம்பும்படிக்கு, வியப்புறவோ அல்லது ஜெபிக்கவோ கூட வேண்டியதில்லை. ஏனென்றால் அது மாத்திரமே ரூபகாரப்படுத்தப்பட்ட, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற சத்தமாகும்.

கேட்கும்படிக்கு எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள்:

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M: என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு., ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் கேட்கப்போகிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24-வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14-வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7-வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14

 


சனி, 21 ஜனவரி, 2023

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே, நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0725E மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 14 ஜனவரி, 2023

அன்புள்ள செம்மறியாடுகளை தொழுவத்தில் கூட்டிச்சேர்ப்பவர்களே,

ஒவ்வொரு வாரமும் தேவனுடைய ஆட்டுத் தொழுவத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் கூடிவருவதில் நான் மிகவும் திருப்தியடைந்து, கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன், அங்கு நாம் நம்முடைய மறைவான இடத்தில் மறைந்திருந்து, அந்த மறைவான ஆகாரத்தை உண்டு, ஜீவிப்பவர்களாக இருக்கிறோம். இது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாகவும், ரூபகாரப்படுத்துதலாகவும் மற்றும் அவரையே நமக்கு வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாயும் உள்ளது.

மற்றவர்கள் அதை நோக்கிப் பார்த்தும், அதைப் புரிந்துகொள்ளாதபடிக்கு அவர் தம்மையே மறைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாகிய, நமக்கோ, நாம் அதை தெளிவான காட்சியில் கண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தையும், அவருடைய தீர்க்கதரிசியும் ஒன்றாகவும் மற்றும் மாறாதது என்பதாலும், நாம் அவைகளுடன் தரித்திருக்கிறோம்.

நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் இந்த வேதாகம தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். இது வார்த்தையாயுள்ளது.

இன்றைக்கு பல அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள், "நீங்கள் தரித்திருக்க வேண்டியது பரிசுத்த ஆவியானவரோடேயல்லாமல், தீர்க்கதரிசியோடல்ல" என்று கூறுகிறார்கள். பண்டைய தீர்க்கதரிசிகளைப்போலவே, நமக்கு ஒரு கேள்வி இருந்தால், அதற்கு சரியான பதில் இருக்க வேண்டும். நமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி என்ன கூறினார் என்று பார்க்க நாம் வார்த்தைக்குச் செல்ல வேண்டும்.

ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி உண்டு, அது அவர் அதைச் செய்வதாக வாக்களித்ததுபோல வார்த்தை மாம்சமானதாயுள்ளது.

அவர் வாக்களித்த ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி, மல்கியா 4, லூக்கா 17, மனுஷகுமாரன் தம்மை மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்துதல்.

ஆம், அபிஷேகம்பண்ணப்பட்ட மனுஷர் உள்ளனர். ஆம், அவர்களுக்கு ஒரு அழைப்பு உள்ளது. ஆம், அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆம், அவர்களுக்கு சரியான நோக்கமும், குறிக்கோளும் உள்ளது.

அப்படியானால் எது சரி, எது தவறு என்று எப்படி தெரிந்துகொள்வது?

கவனியுங்கள், அவர்கள் ஒரேவிதமாக காணப்படுகின்றனர். அவர்கள் ஒரே விதமாக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கவனியுங்கள், "அவர்களுடைய கனி..."

இந்தக் காரியங்களைக் கூற நான் வெறுக்கிறேன், ஆனால் வேளையோ தாமதமாகி, நேரமோ விரைந்தோடிக்கொண்டிருக்கிறது. பவுல் சபையைக் குறித்து எச்சரித்த அந்த கொடிதான ஓநாய்களால் இன்றைக்கு சொல்லப்படுவதும் பிரசங்கிக்கப்படுவதும், கள்ள அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் வருவார்கள் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறினதும் இதுதான். அவர்கள் கூறியதுபோலவே, இவர்கள் இங்கே நமக்கு மத்தியில் இருக்கிறார்கள்.

ஒரு ஊழியக்காரரிடத்திலிருந்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஒரு பகுதி இதோ உள்ளது. தேவனுடைய தீர்க்கதரிசியின் மேல் சந்தேகத்தைப் போட அவர்களுடைய கனி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசியை பின்பற்றி, இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் நாம் தெய்வீகத் தன்மை கொண்ட ஜனங்கள் என்று அவர்கள் தங்களுடைய ஜனங்களை எச்சரிக்கிறார்கள்.

இது எவ்வளவு வஞ்சனையாயுள்ளது என்பதை கவனியுங்கள்.

வில்லியம் பிரான்ஹாமினுடைய பிரசங்கங்களின் வெளியீடுகளை இப்பொழுது நாம் தேவனுடைய சத்தம் என்று அழைக்கும் வகையில் இந்த பிசாசு நம்முடைய செய்தி வரிசையில் ஊடுருவியுள்ளதால் நான் புண்படுத்தப்பட்டேன். வில்லியம் பிரான்ஹாம் உண்மையில் தேவனுடைய சத்தமாயிருக்கவில்லை, ஆனால் சரியாகக் கூறினால் தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனித சத்தமாய் இருந்தார். அவர் தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று வேதம் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் சரியாகக் கூறினால் வேதம் அவரை 7-ம் தூதனுடைய சத்தமாகவே அடையாளப்படுத்துகிறது. (வெளி. 3:14; 10:7).

நாம் வார்த்தைக்குச் செல்வோம், தேவனுடைய தீர்க்கதரிசியே இந்தக் கள்ள உபதேசத்தை வெளிப்படுத்தட்டும்.

"நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டேன், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்."

இப்பொழுது நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள், இந்த கள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியையா, அல்லது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட செய்தியாளராகிய ஏழாம் தூதனையா? இதுபோன்ற காரியங்களை நம்பும் அல்லது உங்களுக்குக் கற்பிக்கும் எந்த ஊழியக்காரனின் கீழும் நீங்கள் எப்படி அமர்ந்திருக்க முடியும்? இன்னும் நேரம் இருக்கும்போதே நீங்கள் வார்த்தைக்குள் வந்துவிடுவது நல்லது.

வில்லியம் பிரான்ஹாமை முற்றிலுமானவராக்குவதாலும், அவரை தெய்வீகத் தன்மை கொண்டவராக இந்த செய்திக் குழுவினர் ஆக்குவதாலும் ஒரு பயங்கரமான தவறு நடந்துள்ளது. வில்லியம் பிரான்ஹாம் ஒருபோதும் முற்றிலுமானவராயிருக்கவில்லை! தேவனுடைய வார்த்தையே முற்றிலுமானது.

ஆமென், தேவனுடைய வார்த்தையே நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளது, வார்த்தை யாரிடம் வந்தது, உங்களிடத்திற்கா அல்லது அவரிடத்திற்கா? தேவனுடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி யார், நீங்களா அல்லது அவரா? கர்த்தர் உரைக்கிறதாவது என்று யாரை அக்கினி ஸ்தம்பம் ரூபகாரப்படுத்தினது, உங்களையா அல்லது அவரையா?

ஏனெனில் உங்களுக்கு இரண்டு மனிதர் இருந்தால், நீங்கள் இரண்டு கருத்துக்களைப் பெற்றிருப்பீர்கள்.

நமக்கு இரண்டு மனிதர்களோ, அவர்களுடைய கருத்துகளோ தேவையில்லை, ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி என்ன கூறியுள்ளார் என்பதே நமக்குத் தேவை.

மேலும் இது ஒரு முடிவான முற்றிலுமானதற்கே வர வேண்டும், மேலும் என்னுடைய முற்றிலுமானது வார்த்தையாய், வேதாகமமாக உள்ளது.

நீங்கள் கூறினதுபோல, அது இருக்கிறது, வேதம் அவருடைய மற்றும் நம்முடைய முற்றிலுமானதாய் இருக்கிறது, ஆனால் அதன்பின்னர் அவர் கூறுவதோ:

நம்முடைய சகோதரர்களே, நீங்கள், நீங்கள் என்னை ஒருவிதமான உங்களுடைய முற்றிலுமானவராக பார்க்கிறீர்கள் என்று நான் அறிவேன்.

எனவே ஒரு நிமிடம் காத்திருங்கள், அது நீங்கள் கூறினதற்கு முரணாகத் தெரிகிறது. நாங்கள் அவரை எங்களுடைய முற்றிலுமானவராக நோக்கிப் பார்க்க வேண்டும் என்றே அவர் கூறினார்.

நான் தேவனைப் பின்பற்றும் வரை என்று, பவுல் வேதத்தில் கூறியதுபோல், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல் நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்."

அது அபிஷேகிக்கப்பட்டிருக்கவில்லையா? அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

கடந்த வாரம் தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு என்ன சொன்னார்?

ஒரு மனிதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையாகவே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, செய்தியும் செய்தியாளனும் ஒன்றாகவும், ஒரே விதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம்.

நீங்கள் அவைகளைப் பிரிக்க முடியாது என்று அவர் கூறினார், அவை ஒன்றுதான், ஆனால் நாம் பிரிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

வில்லியம் பிரான்ஹாம் எந்த அழிவுள்ள மனிதனைக் காட்டிலும் வித்தியாசமானவர் அல்ல, ஏனெனில் அவர் எலியா இருந்ததைப் போலவே, பாடுள்ள ஒரு மனிதனைப் போல இருந்தார்.

ஆமென், அவர் நிச்சயமாக ஒரு மனிதராக இருந்தார், ஆனால் தேவன் தம்முடைய எல்லா வார்த்தைகளையும் வெளிப்படுத்தவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்தவும் தெரிந்துகொண்ட மனிதனாக அவர் இருந்தார். ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய் என்று தேவன் கூறின ஒருவராய் அவர் இருந்தார்.

அதே காரியம், அபிஷேகம்பண்ணப்பட்ட, பெந்தெகொஸ்தேவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆனால் "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்ற ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையின் தற்போதைய வாக்குத்தத்தத்தை மறுதலித்தல்.

அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களா என்ற வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? உண்மையான தீர்க்கதரிசியிலிருந்து கள்ள தீர்க்கதரிசிகளை நாம் அறிந்துகொள்ள அவர் நமக்கு உதாரணங்களைத் தருகிறார்.

பிலேயாம் மற்றும் மோசே. மிகாயா மற்றும் சிதேக்கியா. எரேமியா மற்றும் அனனியா. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருவரும் தேவனுடைய தீர்க்கதரிசிகளாக அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தனர், ஆனால் அவர் நம்மை என்ன செய்யும்படி கூறினாரென்றால், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியோடு தரித்திருங்கள் என்பதேயாகும். நீங்கள் தேவன் அருளியுள்ள வழியை பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதற்குமான ஒரே வழியாய் அது உள்ளது.

அவர் அதைச் செய்கிறபோது அவர் அருகில் இருக்கிற ஒருவனாய் மாத்திரமே நான் இருக்கிறேன். அதைக் கூறும்படி அவர் உபயோகித்த ஒரு சத்தமாக மாத்திரமே நான் இருந்தேன். நான் என்ன அறிந்திருந்தேன் என்பதாய் அது இருக்கவில்லை; அவர் அதை என் மூலமாக உரைக்க நான் என்னையே அர்ப்பணித்ததாகவே அது உள்ளது.

மணவாட்டிக்கு விருப்பமும், தேவையுமாயிருக்கிறதும் அவ்வளவுதான். ஒரே சத்தம். ஒரே தீர்க்கதரிசி. ஒரே செய்தி. ஒரே செய்தியாளர்.

ஓ பிதாவே, உம்முடைய கிருபை இரக்கம் எங்களிடத்தில் இருப்பதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களால் கூடாதது ஒன்றுமேயில்லை என்று நீர் எங்களுக்கு சொன்னீர். நம்மால் கூடாதது ஒன்றுமேயில்லை. விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று, நாம் விசுவாசிக்கிறோம்.

கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-0725M என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் நாம் பெற்றுள்ள தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சத்தம் நமக்கு சொல்லவிருக்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வந்து எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 7 ஜனவரி, 2023

அன்புள்ள விலையேறப்பெற்றதை ஆய்பவர்களே,

இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நமக்குள் பொங்கி வழிந்துகொண்டிருக்கும் வெளிப்படுத்தலின் ஆர்ட்டீசியன் ஊற்று ஒன்று உண்டு. இந்தச் செய்தியை நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் கேட்டிருக்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் எப்பொழுதும் விசுவாசித்து வருகிறோம், ஆனாலும் இப்பொழுது அது இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நமக்குள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிற தேவனின் இரகசியமான காரியங்களை நாம் புசித்துக்கொண்டிருக்கிற காலமாய் இப்பொழுது இது உள்ளது, இப்பொழுதே அந்த நேரமாய் உள்ளது. ஜனங்கள் சிரிக்கிற காரியமே நாம் ஜெபம் செய்கிற காரியத்தைக் குறித்துதான். ஜனங்கள் "பைத்தியம்" என்று அழைக்கும் காரியத்தை நாம் "மகத்தானது!" என்று அழைக்கிறோம். அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு ஒரே ஒரு அருளப்பட்ட வழி மாத்திரமே உண்டு என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், அது இயங்கு பொத்தானை அழுத்துவதே.

ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நாம் மறைவான மன்னாவை, ஆவிக்குரிய ஆதாரத்தைப் பெற்றுக்கொண்டோம், அதாவது இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் தம்மை ரூபகாரப்படுத்துகிற, இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலின் நன்மை மற்றும் கிருபையின் பேரில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.

மணவாட்டி கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், அது அவருடைய பரிபூரண சித்தம் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்துகிறார். அது நாம் என்ன நினைக்கிறோம் என்பதையே அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதல்ல, அது என்ன பொருள்படுகிறது என்று நாம் நினைக்கிறோம் என்பதுமல்ல, அவர் கூறிக்கொண்டிருக்கிறது சரியாகத்தான் இருக்கிறது, மற்றவர்களால் அதை எளிதாக புரிந்துகொள்ள முடியவில்லை; அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றனர். தேவன் அதை மறைத்திருக்கிறார். அவர்கள் அதை சரியாகப் பார்க்கிறார்கள், ஆனால் அதைப் புரிந்துகொள்ளுகிறதில்லை. நம்மைப் பொறுத்தவரை, அதுவோ நாம் புரிந்து கொள்ளுகிற எல்லாமுமாயிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் நாம் கூடிவரும்போது, அவர் என்ன சொல்லப் போகிறார் மற்றும் நமக்கு என்ன வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் கேட்பதற்கு நம்மால் காத்திருக்க முடியவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் நமக்கு சில சிறிய மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகளை தரப் போவதில்லை, அவர் நமக்கு முழு தங்கத்தையே அளிக்கப்போகிறார் மற்றும் நாங்கள் அதைப் பெறுவதை உறுதிசெய்ய மீண்டும் மீண்டும் அதை முழங்குவார்.

தீர்க்கதரிசி நீண்ட காலமாக தேவனுடைய சமுகத்தில் இருந்து வந்தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளோ, அல்லது வேறு எந்த காலத்திலுமே, அவர்கள் வார்த்தையாகி, அவர்களுடைய செய்தி வார்த்தையாகவே மாறுகின்ற வரையில், அவர்கள் தேவனுடைய சமூகத்தில் ஜீவித்தனர். மேலும், நினைவிருக்கட்டும், அவன், "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறினான்.


ஒரு மனிதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையாகவே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, செய்தியும் செய்தியாளனும் ஒன்றாகவும், ஒரே விதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம்.


அப்பொழுது ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, அவனும் செய்தியும் ஒன்றே.


பரலோகம் அதை அறிவிக்கிறது, வேதாகமம் அதை அறிவிக்கிறது, செய்தி அதை அறிவிக்கிறது, எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது.


தீர்க்கதரிசி, வார்த்தை, செய்தி; செய்தியாளர், செய்தி மற்றும் செய்தி, ஒரே மாதிரியாக இருந்தது.


எந்த மனிதனும் அவனுடைய செய்தியும் ஒன்றாயிருக்கிறது.

ஒரு தங்கச் சுரங்கத்தைப் பற்றி பேசுவோம்.

நீங்கள் ஏதேனும் வெளிப்பாட்டை உடையவராய் இருந்தால், அவர் அதை அழகாக தெளிவுபடுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்; செய்தியும் செய்தியாளரும் ஒரே மாதிரியாயிருக்கின்றனர். அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா…அதையே!! அதன்பின்னர் நீங்கள் செய்தியிலிருந்து செய்தியாளரை, ஊழியர்களை பிரிக்க முடியாது.

நீங்கள் செய்தியாளரை உங்களுடைய சபையில் அவர் கொண்டு வந்த செய்தியோடு அந்த ஸ்தானத்தில் வைக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் முழு செய்தியையும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் மணவாட்டி அல்ல.

ஓ! மீண்டும், இது செய்தியையும் செய்தியாளரையும் ஒன்றாக்குகிறது. ஆவிக்குரிய ஆகாரம் ஆயத்தமாக இருக்கிறது, அது இப்பொழுது இந்த காலமாய் உள்ளது.

நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய வேளையை விசுவாசிக்கிற, நமக்காக, அவர் அனுப்பிய செய்தியாளர், அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும்; இந்த காரியங்கள் மறைவான ஆகாரமாய் இருக்கின்றன.

இந்தச் செய்தியை நாம் எப்படியாய் நேசிக்கிறோம், மேலும் “இதற்குமேல் வேறு எப்படி இருக்க முடியும்?” என்று நீங்கள் நினைக்கும்போது, நாம் இப்பொழுது யார் என்று சொல்வதன் மூலம் அவர் அதில் ஒரு தலைக்கல்லைப் பொருத்துகிறார்.

மணவாட்டியான, ஜீவனுள்ள சபையில் ஜீவனுள்ள தேவனின் அதிகாரத்தை நீங்கள் காணவில்லையா? வியாதியஸ்தர் சுகமாக்கப்படுகின்றனர், மரித்தோர் உயிரோடெழுப்பப்படுகின்றனர், முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் காண்கிறார்கள், சுவிசேஷம் அதனுடைய வல்லமையோடு புறப்பட்டுச் செல்கிறது, ஏனென்றால் செய்தியும் செய்தியாளனும் ஒரே விதமாக இருக்கிறார்கள். வார்த்தை சபையில், அந்த நபரில் இருக்கிறது.

அந்த வார்த்தை நமக்குள் இருக்கிறது. நாம் தான் செய்தி. நாம் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். இந்த செய்தியும் நாமும் ஒன்றாயிருக்கிறோம்!! மேலும் மேலும் மேலும் பொங்கி வழிவதைக் குறித்தேப் பேசுகிறோம்.

மணவாட்டி கணவனின் பாகமாக இருக்கிறாள், சபை அதேவிதமாக கிறிஸ்துவைப் போன்றுள்ளது. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்."

நாம் கணவனின் பாகமாக இருக்கிறோம்!!

நாமும் அதே விதமாக கிறிஸ்துவைப் போன்றவர்கள்!!

இப்பொழுது இது மகத்தானதாய் தொனிக்கிறது என்றும், இந்த மேற்கோள்களை வெறுமனே படிப்பதே உங்களுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி: 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் என்ற செய்தியை நாம் கேட்கும் போது, தேவனுடைய சத்தம் அவைகளை உங்களுக்கு உதட்டிலிருந்து செவிக்கு சொல்வதைக் கேட்கும் வரை காத்திருங்கள்.

நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். உங்களால் சேர்ந்துகொள்ள முடியாவிட்டால், எந்த நேரத்திலாவது இயங்கு பொத்தானை அழுத்தி, எந்த செய்தியையாவது, எங்காவது, தேவனுடைய செய்தியாளர் உங்களுக்கு தேவனுடைய செய்தியைக் கொண்டு வருகிறதைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்.

 

இன்றைக்கும் அது அவ்விதமாகவே உள்ளது, பஞ்ச காலத்தில் பிள்ளைகளை ஆதரிக்கும்படி, தேவனுடைய செய்தியை பின்தொடருகிற, ஜீவ அப்பத்தையே அவர்கள் புசிக்கிறார்கள்.

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்

1 இராஜாக்கள் 17:1-7
ஆமோஸ் 3:7
யோவேல் 2:28
மல்கியா 4:4
லூக்கா 17:30
பரி. யோவான் 14:12

 


சனி, 31 டிசம்பர், 2022

அன்புள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்றுகொண்டிருக்கிற மணவாட்டியே,

இந்தப் புத்தாண்டில் என்ன நடக்கப் போகிறது?

மணவாட்டி வார்த்தையுடன் தரித்திருப்பதன் மூலம் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். நாம் இராப்போஜனம் எடுத்து, நம்முடைய வீட்டிற்கு அடையாளத்தைப் போட்டு, உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் நம்மை முத்தரையிட்டுக்கொண்டோம். நாம் சமரசம் செய்யப்படவில்லை, ஆனால் தேவனுடைய உண்மையான சத்தத்திற்கு நம்மை கன்னிகைகளாகக் காத்துக் கொண்டுள்ளோம்.

நாம் என்னே ஒரு மகிமையான நேரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசிகள் யாவரும் காணும்படி வாஞ்சித்திருந்த ஒரு நேரம் இதுவே; இந்த வேளையே. இயல்பாகவே சபையானது புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். கடைசியான முடிவின் நேரங்கள் அணுகிக்கொண்டிருக்க, நாமோ நித்தியத்திற்குள்ளாக செல்ல துரிதமாக மங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஒழுங்கில் தரித்திருந்து; நம்முடைய நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியில் நம்முடைய பார்வையை வைத்திருக்க வேண்டும்: அவருடைய வார்த்தை, அவருடைய தீர்க்கதரிசி, நம்முடைய நாளுக்கான வார்த்தையாயிருக்கிறார்.

அவர் கிறிஸ்துவை இங்கு எப்படிக்கொண்டு வந்தார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாகவே. அது சரிதானே? அவர் இங்கு தன்னுடைய மணவாட்டியை எப்படிக் கொண்டு வருவார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாகவே.

என்ன செய்யப்பட முடியும்? என்ன செய்ய வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார்: தீர்க்கதரிசியினிடத்தில் கலந்தாலோசிக்க வேண்டும், வேதாகமத்தில், நாம் அதிலிருந்து எதையும் கூட்டவோ அல்லது எடுக்கவோ முடியாது. நாம் அவ்வாறு செய்தால் தேவன் ஜீவ புஸ்தகத்தில் இருந்து நம்மை எடுத்துப்போடுகிறார்.

காலமானது மிகவும் தாமதமாகிவிட்டது, நாம் அவருடைய மணவாட்டியாக இருக்க நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக அவருக்கு ஒரு சேவையை செய்ய ஒருபோதும் விரும்புவதில்லை, அது எவ்வளவு நன்றாக தென்பட்டாலும் சரி. தேவன் அதை இன்றைக்கு எப்படி செய்யப் போகிறார் என்ற ஒரு வாக்குத்தத்தை அவர் உண்டுபண்ணினார். தேவன் அதை எப்படி செய்வார் என்று அவருடைய வார்த்தையில் அவர் இங்கே சரியாக கூறிவிட்டார்.

அவர் தன்னுடைய மணவாட்டியை எப்படி எடுத்துக்கொள்வார்? வார்த்தை மூலமாகவே; ஒரு புதிய வண்டியின் மூலமாயல்ல, ஏதோ ஒரு வேதபண்டிதனுடைய கருத்தின் மூலமாக அல்ல. ஆனால் அவருடைய வார்த்தையின்படியே அவர் அவளை அடையாளங் கண்டுகொள்வார். எனவே அதிலிருந்து ஒரு காரியத்தை கூட்டவோ அல்லது இப்பொழுது அதிலிருந்து ஒரு காரியத்தை எடுக்கவோ கூடாது. அது இருக்கிற விதமாகவே அதை விட்டுவிடுங்கள். புரிகிறதா?

இன்றைக்கான கர்த்தருடைய சித்தம் என்ன என்று கூறுகிற பல அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள் இருப்பதால் சில ஜனங்களுக்கு, இது மிகவும் குழப்பமாக இருக்கக் கூடும். அவர்கள், "சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாகும், சகோதரன் பிரான்ஹாம் அதை ஒருபோதும் கூறினதேயில்லை. ஊழியமே இப்பொழுது மிகவும் முக்கியமானது, அது இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாயுள்ளது. உங்கள் போதகருடன் தரித்திருங்கள்" என்று கூறுகிறார்கள்.

எனவே, ஒலிநாடாக்களைக் கேட்பது சரிதான், ஆனால் சபையில் கேட்கக் கூடாது அல்லவா? ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்க வேண்டியதில்லை, எது வார்த்தை, எது வார்த்தை இல்லை என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு சொல்கிறதையே விசுவாசிக்க வேண்டும். ஊழியத்திற்கு செவிகொடுப்பது மணவாட்டியை பரிபூரணப்படுத்துமா? நான் என்னுடைய மேய்ப்பரோடு தரித்திருக்கவில்லையென்றால் என்னால் மணவாட்டியாய் இருக்க முடியாது. நான் ஒலிநாடாக்களை இயக்கினால், நான் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கிறேனா?

ஒவ்வொரு விசுவாசியும் சரியானதைச் செய்து, தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறார். யாரும் தவறு செய்ய விரும்பவில்லை அல்லது அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க விரும்பவில்லை. ஒரு சீரான, சரியான வழி இருக்க வேண்டும்.

எந்த ஊழியக்காரர்களுக்கு…அவர்கள் எல்லோருக்கும் நாம் செவி கொடுக்க வேண்டுமா? நாம் வீட்டிற்குச் சென்று ஒலிநாடாக்களை கேட்பதன் மூலம் அவர்கள் கூறுகிறது வார்த்தையாக இருக்கிறதா என்று ஆய்ந்து பார்க்க வேண்டுமா அல்லது நாம் கேட்காமலேயே அவர்களுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் எது முற்றிலுமானது, நம்முடைய மேய்ப்பருடைய வார்த்தையா, அல்லது ஒலிநாடாவில் சகோதரன் பிரான்ஹாம் என்ன கூறினார் என்பதா?

அவர்கள் வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும், ஆமென். அவர்கள் வார்த்தையை ஜனங்களுக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டும், ஆமென். ஆனால் அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் காட்டிலும் அவர்கள் முக்கியமானவர்களாக இருக்கவில்லை. ஒலிநாடாக்களில் என்ன உள்ளது என்பதை மாத்திரமே அவர்கள் கூற வேண்டும். அதுவே மணவாட்டியினுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது.

உங்களுக்கு ஐந்து கட்டாயங்கள் உள்ளன. அது அந்த விதமாகத்தான் இருக்க வேண்டும். அவருடைய நேரம், அவருடைய காலம், அது இருக்கும் என்று அவர் கூறினபோது; அவர் தெரிந்துகொண்ட மனிதன்; அது தீர்க்கதரிசிக்கு வரவேண்டும்; தீர்க்கதரிசியோ ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.

நான் ஊழியத்தை கண்டிக்கவோ அல்லது அவர்களுக்கு ஒரு ஸ்தானம் இல்லை என்று கூறவோ முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை, அப்படி இல்லையே. ஊழியத்தில் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஜனங்களுக்கு ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தை இயக்குவது என்பதையே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறுகிற எந்த காரியமாயினும், அல்லது ஒரு ஊழியக்காரர் கூறுகிற எந்த காரியமாயினும், அல்லது ஒரு சாதாரண அங்கத்தினர் கூறுகிற எந்த காரியமாயிருந்தாலும் கூட, அது வார்த்தைக்கு வார்த்தை தேவனுடைய தீர்க்கதரிசி என்ன கூறியுள்ளார் என்பதன் பேரில் இருக்க வேண்டும்.

நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை நான் வெறுக்கிறேன், நான் உங்களுடைய மேய்ப்பருக்கு எதிரானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது என் இருதயத்தில் இல்லை. இந்த செய்தியில், நாம் ஒன்றிணைய முடிந்த இந்த ஒரே காரியத்தினால் மாத்திரமே மணவாட்டி ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

.

இப்படிப்பட்ட பிரிவினை, குழப்பம், மக்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள ஒரு காலத்தில், ஞாயிற்றுக்கிழமை நாம் கேட்கப்போகும் இந்தச் செய்தி நமது நாளுக்கான மிக முக்கியமான செய்திகளில் ஒன்று என்றே நான் விசுவாசிக்கிறேன்.

நம்முடைய இருதயத்தைத் திறந்து, சபைக்கும், ஒலிநாடாவில் கேட்கப்போகும் ஜனங்களுக்கும், எல்லா நாடுகளிலும் இணையதள இணைப்பில் உள்ள ஜனங்களுக்கும் தேவன் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போமாக.

வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நாம் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. தேவனுடைய சத்தம் உண்மையாகவே நாம் மிகவும் கூர்ந்து செவிகொடுக்க வேண்டும் என்றும், அவர் கூறிக்கொண்டிருக்கிறதை புரிந்துகொள்ளத் தவறக்கூடாது என்றும் விரும்புகிறது.

மோசே தேவனாலும் அக்னி ஸ்தம்பத்தாலும் ரூபகாரப்படுத்தப்பட்டிருந்த பிறகு, அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லும்படியான தேவனுடைய ஊழியக்காரனாயிருக்க அவன் நிரூபிக்கப்பட்டான் என்று அறிந்த பிறகே, மோசே இஸ்ரவேலரிடம் பேசிக் கொண்டிருந்ததுபோலவே அவர் பேசினார். ஆனால் அவர்கள் அந்த தேசத்திற்குள் செல்வதற்கு முன், அவன் அவர்களிடம்: "நான் உங்களுக்கு எதிராக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன், நான் கூறியுள்ளதில் ஒன்றையும் சேர்க்காதீர்கள் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையையும் எடுத்துப்போடாதீர்கள்" என்று சொன்னான்.

எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்டவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களை அதில் சேர்க்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாகச் செய்யுங்கள்; இதனோடு கூட்டாதீர்கள்!

ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை மாத்திரமே நாம் கூறும்படிக்கு தேவனாகிய கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறதாய் இது உள்ளது. நம்முடைய கருத்துக்களையோ, நம்முடைய எண்ணங்களையோ, அல்லது நம்முடைய வியாக்கியானத்தையோ அதனுடன் சேர்க்கவோ, எடுத்துப்போடவோ, நுழைக்கவோ முடியாது. ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே கூறுங்கள்.

தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் சத்தியமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசித்தால், அப்பொழுது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியமான இயங்கு பொத்தானை அழுத்துவது என்றில்லாமல் எப்படி இருக்க முடியும்?

அவர் வந்தபோது, எப்படி தம்மை அடையாளங் காட்டினார்? வனாந்தரத்திலிருந்து வந்த, எலியாவின் ஆவியை தன் மீது கொண்டிருந்த ஒரு மனிதன் மூலமாகவே. அவர் தம்முடைய மணவாட்டியை எப்படி அடையாளம் காட்டுவார்? சோதோமின் நாட்களில் இருந்ததைப்போலவே, அவர் பூமியை அழிப்பதற்கு முன்பே, அதே காரியத்தை அவர் மல்கியா 4-ல் வாக்களித்தார்.

அன்புள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேச மணவாட்டியே, உங்களிடம் உண்மையான வெளிப்பாடு உள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் யாரென்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளீர்கள். இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் தேவனுடைய திட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையாய் இருக்கிறீர்கள். நீங்கள் மணவாளனின் பாகமாக இருக்கிறீர்கள். மகிமை!!!

புத்தாண்டைத் தொடங்க என்னே ஒரு வழி, இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய கட்டளையை பின்பற்றி, மணவாட்டி ஒன்றாக இணைக்கப்படுகின்றாள்.

நாங்கள்: 65-0718M தேவசித்தமாயில்லாமல் அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களோடு எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

உபாகமம் 4:1-4 / 4:25-26
1 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரி. மாற்கு 7:7
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 3
பரி. மத்தேயு 11:1-15
1 கொரிந்தியர் 13:1