ஞாயிறு
20 செப்டம்பர் 2026
65-0118
முரண்பாட்டின் வித்து
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள ஒலிநாடா ஊழியத்தில் உள்ள ஒருவரே,

ஜனங்கள் நம்மிடம் கேட்கும்போது:

கே: தேவனுடைய மணவாட்டியை அழைப்பதற்காக தேவன் வில்லியம் மரியன் பிரான்ஹாமை அனுப்பினார் என்று விசுவாசிக்கிற, “இயங்கு பொத்தானை அழுத்தி” ஒலிநாடாக்களை இயக்கும் ஜனங்களில் நீங்களும் ஒருவரா?

ப: ஆம், நான் அவர்களில் ஒருவன்.

கே: அந்த ஒலிநாடாக்களில் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

ப: கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் அவர்களில் ஒருவன்.

கே: அப்படியானால், கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்றும் விசுவாசிக்கிறீர்களா?

ப: மகிமை, அதுதான் நான், அதுதான் என் அடிமனதின் அடிப்படை...நான் அவர்களில் ஒருவன்.

கே: நீங்கள் உண்மையிலேயே அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட, ராஜரீக வித்து என்றும், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கும், அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கும், அவருடைய பார்வையில் எந்தப் பாவமும் இல்லாமல் பரிபூரணமானவராக இருப்பதற்கும் முன்னரே முன்குறிக்கப்பட்டவர் என்றும், நீங்கள் எளிதில் வஞ்சிக்க பட முடியாது என்றும் விசுவாசிக்கிறீர்களா?

அ: அல்லேலூயா, நீங்கள் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள், அது நான்தான் 110%, நான் அவர்களில் ஒருவன்.

இயேசுவின் கூற்றுப்படியே, நாம் அவருடைய வார்த்தையின் வியாக்கியானமாக இருக்கிறோம். இராஜ்யத்தின் பிள்ளைகள். பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதல். இந்தக் காலத்தின் இராஜ்யத்தின் வித்து.

என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு தவறும் இல்லாதிருக்கிற நாம் யார் என்பதை அனைவரும் துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவே. தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலமாகப் பேசி, உங்களுக்காக எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க நாம் அனுமதிப்போம்.

வார்த்தையைப் பேசி உலகத்தை உண்டாக்கின அதே வல்லமைதான், பரிசுத்த ஆவியைப் பெற்ற ஜனங்களுக்குள்ளும் உள்ளது. அது உண்மை. புருஷர்களே, ஸ்திரிகளே நீங்கள் யாரென்று கண்டறிந்துள்ள நேரம் இதுதான். பிசாசு உங்களை மறைத்து வைக்க முயற்சித்துக் கொண்டு, நீங்கள் ஏதோ அடங்கிப்போனவர்கள் என்று சொல்கிறான். நீங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நீங்கள் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள்.

தெய்வத்துவம் பரலோகத்தில் இல்லை, அது உங்களுக்குள் இருக்கிறது. அல்லேலூயா!

ப: தெய்வத்துவம் பரலோகத்தில் இல்லை, அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஜீவித்துக் கொண்டும், வாசம் செய்து கொண்டும் இருக்கிறதே!

ஒவ்வொரு புதிய நாளிலும், நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும், நாம் யார் என்பதைப் பற்றிய அவர் நமக்குக் கொடுத்த வெளிப்பாடு மேலும் மேலும் பெரிதாகிறது. நாம் மாம்சத்தில் வாசம் செய்யும் ஜீவ வார்த்தை.

இதை நாம் அறிவோம், ஏனென்றால் நம்முடைய காலத்தில் அவர் அனுப்பிய வெளிப்பாட்டை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்; வெளிப்படுத்தல் 22-ல், தம்முடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் போதிக்கவும் அனுப்புவதாக தேவனே கூறியவர் அவரே.

சபைகளில் இந்த காரியங்களை உங்களுக்குச் சாட்சியாகக் கூறும்படி, இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பியிருக்கிறேன்.

அவர் தம்முடைய தூதனான வில்லியம் மரியன் பிரான்ஹாமை, தம்முடைய சபைகளில் பேச அனுப்பினார்... என் நண்பரே, அதன் அர்த்தம் உங்கள் சபைகளில் ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யுங்கள் என்பதாகும். அதற்கு வெளிப்பாடு கூட தேவையில்லை, நீங்கள் வாசித்தால் மட்டும் போதும்.

வார்த்தையின்படி, இது உலக வரலாற்றிலேயே மிகவும் வஞ்சகமான காலம். அது கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையே வஞ்சிக்குமளவுக்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான ஆவி மிகவும் நெருக்கமாக இருக்கும்.

தேவன் தம்முடைய தூதனை சபைகளுக்கு அனுப்பினார். அவருடைய சத்தம் நம் விரல் நுனியில் இருக்கிறது. அவர் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை நம்மால் துல்லியமாகக் கேட்க முடியும். இதற்கு எந்த விளக்கமோ வியாக்கியானமோ தேவையில்லை, மணவாட்டி செய்ய வேண்டியதெல்லாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்டு, விசுவாசிப்பது மட்டுமே.

அவர் நம்மை எச்சரித்தார், ஒலிநாடாக்களில் ஒரு சிறு எழுத்தையாகிலும், எழுத்தின் உறுப்பையாகிலும் மாற்றாதீர்கள். உங்கள் புரிதலையோ உங்கள் கருத்துக்களையோ திணிக்காதீர்கள், என் சத்தத்தைக் கேட்டு விசுவாசியுங்கள். இன்றுவரை, அது சாத்தியமாகவில்லை; ஆனால் இன்று அது சாத்தியமாகியுள்ளது, ஏனென்றால் இது இன்றைய நாளுக்காக தேவன் அருளியுள்ள வழியாகும்.

ஏழு சபைக் காலங்களைப் பற்றியும், ஒவ்வொரு காலத்திலும், மக்களை மெய்யான வார்த்தையிலிருந்து விலக்கிச் செல்ல அந்த ஆவிகள் எப்படி எழுந்தன என்பதையும் நாம் இப்போதுதான் கேட்டோம். எப்படியாய் ஒவ்வொரு காலத்திலும், செய்தியாளன் சென்ற பிறகு, மக்களை ஒரு கோட்பாட்டிற்கோ அல்லது கொள்கைக்கோ, அதாவது தங்களுக்குள்ளும் மனிதனின் கருத்துக்குள்ளும் இழுத்துச் செல்ல அவர்கள் என்ன செய்தார்கள்.

இன்று அவர்கள் நமது செல்வாக்கைக் கொல்ல முயற்சி செய்து, “ஓ, நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில்தான் உள்ளது என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். உங்கள் சபையில் நீங்கள் ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்ய வேண்டும்... அது முட்டாள்தனம். சகோதரன் பிரான்ஹாம் சபையில் ஒலிநாடாக்களை ஒலிக்கச் சொல்லவில்லை. இப்போது நீங்கள் ஊழியத்தின் சத்தத்தைத்தான் கேட்க வேண்டும்” என்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, அதுவே முரண்பாட்டின் வித்தாகும்! அது மாத்திரமே தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாயிருக்கிறபடியால், நீங்கள் கண்டிப்பாக இயங்கு பொத்தானை அழுத்தி, உங்கள் சபைகளில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க வேண்டும். தேவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.

சபைகளில் இந்த காரியங்களை உங்களுக்கு சாட்சியாக சொல்லும்படி, இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பியிருக்கிறேன்.

ரூபகாரப்படுத்தப்பட்ட அந்தத் தூதன் நம்முடைய சபையில் பேசுகிறார். எனவே, 65-0118- “முரண்பாட்டின் வித்து” என்ற செய்தியைக் கேட்க ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு நடைபெறும் இந்த இணைப்பில், உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாட்டியுடன் அந்த சத்தத்தைக் கேட்க எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்