அன்புள்ள செதுக்கப்பட்ட மணவாட்டியே,
இன்றைக்கு, சபையானது தங்களுடைய தீர்க்கதரிசியை மறந்துவிட்டது. தங்களுடைய சபைகளில் பிரசங்கிக்க இனி அவர் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு பிரசங்கிக்கவும், வசனத்தை மேற்கோள் காட்டி விளக்கவும் தங்களுடைய போதகர்கள் இருப்பதாக அவர்கள் உரிமை கோருகிறார்கள். அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை விட, பிரசங்கிப்பதே அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
ஆனால் தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை உடையவராய் இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார்; அப்படித்தான் அவர் எப்பொழுதும் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைத்து வழி நடத்தியுள்ளார்.
அவர் தம்முடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தாலும், தம்முடைய பரிசுத்த ஆவியினாலும், தம்முடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தம்முடைய சத்தத்தினாலும், மற்ற தேசங்களிலிருந்து நம்மைப் பிரித்து எடுத்தார்.
அந்தச் சத்தத்தினாலேயே அவர் நம்மைச் செதுக்கியிருக்கிறார். அதனால்தான் அவர் அதை ஒலிப்பதிவு செய்து ஒலிநாடாக்களில் வைத்திருந்தார். வெளிப்பாட்டின் மூலம் வேதாகமம் எவ்வளவு பரிபூரணமானது என்பதை நாம் காண்கிறோம்! குமாரன் அதை முதிர்ச்சியடையச் செய்யாவிட்டால், மணவாட்டி முதிர்ச்சியடைய முடியாது.
நீங்கள் எவ்வளவுதான் பிரசங்கித்தாலும், நீங்கள் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது முதிர்ச்சியடைப்பட முடியாது, அது வெளிப்படுத்தப்பட முடியாது, அது ரூபகாரப்படுத்தப்பட முடியாது; "நானே உலகத்தின் ஒளி" என்று சொன்ன அவராலேயே, அதாவது அந்த வார்த்தையினாலேயே அது நடக்கும்.
பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து ரூபகாரப்படுத்தும்படிக்கு, தம்மை வெளிப்படுத்தி நிரூபிக்கும்படி நம்மை முதிர்ச்சிடையச் செய்வார் என்று வார்த்தை நமக்கு சொன்னது. சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது. தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க தேவன் மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்.
தம்முடைய பரிசுத்த ஆவியினாலும், தம்முடைய வார்த்தையினாலும், தம்முடைய சத்தத்தினாலும் உங்களை அழைத்திருக்கிற ஒருவர் அவரே. உங்களைத் தெரிந்து கொண்ட ஒருவர் அவரே. உங்களுக்குப் போதிக்கிற ஒருவர் அவரே. உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிற ஒருவர் அவரே. எதனால்? அவருடைய பரிசுத்த ஆவியினால், உங்களிடம் நேரடியாகப் பேசும் அவருடைய சத்தத்தினாலே.
ஆனால் இந்த நாட்களில் அது அவர்களுக்கு மிகவும் பழமையானதாகத் தெரிகிறது. அவர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்கும் வழக்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் அதை அங்கீகரிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் இந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு, அதுவே தேவன் அருளியிருக்கிற வழி என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அதுவே உங்களுக்குக் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் தாமே, இந்த நாளில் என்ன நடக்கும் என்று அவர் முன்னுரைத்தாரோ அதை முதிர்ச்சியடையச் செய்ய, அல்லது ரூபகாரப்படுத்த, அல்லது நிரூபிக்க, அல்லது வெளிப்படுத்த ஒரு-ஒரு-ஒரு வல்லமை வெளிப்பட வேண்டும். சாயங்கால வெளிச்சம் அதை உருவாக்குகிறது. என்னே ஒரு நேரம்!
நாம் தேவனுடைய பரிபூரண வார்த்தையின் மணவாட்டி, அவருடைய தீர்க்கதரிசி தரிசனத்தில் கண்டார். அவருடைய வார்த்தையின் மூலம் அழைப்பதற்காக அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பியது நமக்குத்தான், இப்போது நாம் ஒரு எழுப்புதலைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம், ஏனென்றால் நாம் யார் என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம்.
உயிர்ப்பித்தல், அங்கே, வேறு எங்கும் பயன்படுத்தப்படும் அதே வார்த்தையாயுள்ளது, நான் இப்போதுதான் அது என்னவென்று பார்த்தேன், அதன் பொருள், "ஒரு எழுப்புதல்." "இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்." அதாவது, "அவர் நம்மைச் சிதறடித்து, நம்மை குருடாக்கி, நம்மைப் பீறினப் பிறகு, மூன்றாம் நாளில் அவர் நம்மை மீண்டும் உயிர்ப்பிப்பார்" என்பதாகும்.
பிதாவானவர் தம்முடைய மணவாட்டி வழி விலகி செல்லாதபடி, அவளைக் கண்காணிக்கத் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு தரிசனமாயிருந்தது!
மணவாட்டி அவள் ஆரம்பத்தில் இருந்த அதே நிலையில் கடந்து சென்றாள். ஆனால் அவள் வழி விலகிச் செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன், அவளைத் திரும்ப இழுக்க முயற்சித்தேன்.
ஆனால் இன்று "அவளை" எப்படி "அவனால்" திரும்ப இழுக்க முடியும்? "அவன்", அந்த மனிதன், பூமியில் இல்லை. வார்த்தையின் மூலமாக! இன்றைய நாளுக்கான ஒரே ரூபகாரப் படுத்தப்பட்ட வார்த்தை எது? ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம்.
தீர்க்கதரிசி பேசியதை அப்படியே மேற்கோள் காட்டி வார்த்தையைப் பிரசங்கிக்க ஊழியர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசியின் கூற்றுப்படி, அவர்கள் வேறு எதையும் சொல்லக்கூடாது.
உண்மையில், அந்த வார்த்தையைக் கற்பிக்கவும் பிரசங்கிக்கவும் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயிருக்கும்படி தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உண்டு.
ஆகையால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் கூறுகிறேன்: நீங்கள் ஒரு காரியத்தையும் சேர்க்காதீர்கள், எதையும் எடுக்காதீர்கள், அதில் உங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் புகுத்தாதீர்கள், அந்த ஒலிநாடாக்களில் கூறப்பட்டிருக்கிறதை அப்படியே கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் செய்யும்படி கட்டளையிட்டதை நீங்கள் அப்படியே செய்யுங்கள்; அதனுடன் எதையும் சேர்க்காதீர்கள்!
உங்களுடைய மேய்ப்பர் அல்லது ஊழியர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் "ஆமென்" என்று சொன்னால், நீங்கள் இழக்கப்பட்டுப் போனவர்கள். ஆனால் தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஒலிநாடாக்களில் உரைத்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் "ஆமென்" என்று கூறினால், நீங்கள்தான் மணவாட்டி, நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசி, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்காகத் தெரிந்துகொண்ட மனிதர். தம்முடைய வார்த்தையைப் பேசுவதற்கும், மணவாட்டி எப்போதும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கேட்பதற்காக அதை ஒலிநாடாக்களில் பதிவு செய்வதற்கும் அவரைப் பயன்படுத்தியது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலேயாகும்.
மற்ற மனிதர்கள் என்ன கூறுகிறார்களோ, அல்லது அவருடைய வார்த்தையின் அவர்களுடைய வியாக்கியானத்தையோ தம்முடைய மணவாட்டி சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தம்முடைய மணவாட்டி தம்முடைய உதடுகளிலிருந்து தங்களுடைய செவிகளுக்கு நேரடியாகக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தம்மைத் தவிர வேறு யாரையும் தம்முடைய மணவாட்டி சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை.
நாம் காலையில் எழுந்திருக்கும்போது, அவர் நம்மிடம், “காலை வணக்கம் நண்பர்களே. இன்று நான் உங்களிடம் பேசப் போகிறேன், நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும், நீங்களும் நானும் எப்படி ஒன்றாய் இருக்கிறோம் என்பதையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நான் நித்திய ஜீவனைக் கொடுக்கப்போகும் அநேகர் இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் மட்டும்தான் நான் தெரிந்துகொண்ட மணவாட்டி. உலகத்தோற்றத்திற்கு முன்பே உங்களுக்கு மட்டும்தான் நான் இந்த வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறேன்.
வேறு அநேகர் எனக்கு செவி கொடுக்க விரும்புகிறார்கள், ஆனால் என் மணவாட்டியாக இருப்பதற்கு நான் உங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன். ஏனென்றால், நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு, என் வார்த்தையுடன் நிலைத்திருக்கிறீர்கள். நீங்கள் சமரசம் செய்துகொள்ளவில்லை, நீங்கள் சுற்றி சரசமாடியிருக்கவில்லை, ஆனால் என்னுடைய வார்த்தையோடு உண்மையாக தரித்திருக்கிறீர்கள்.
காலம் சமீபித்துவிட்டது. நான் வெகு சீக்கிரத்தில் உங்களுக்காக வருகிறேன். முதலாவதாக, இப்போது என்னுடன் இருப்பவர்களை நீங்கள் காண்பீர்கள். ஓ, அவர்கள் உங்களைக் காணவும் உங்களுடன் இருக்கவும் எவ்வளவு ஏங்குகிறார்கள். என் சிறியவர்களே, கவலைப்படாதீர்கள், ஒவ்வொரு காரியமும் சரியான நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறது, தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள்.” என்று சொல்வதை நாம் விரும்புகிறோம். சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரனாக, மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுவதைத் தவிர ஒரு காரியமும் விடப்பட்டிருப்பதாக என்னால் காணமுடியவில்லை.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
செய்தி: 64-0726M "உன்னுடைய நாளையும் அதன் செய்தியையும் அடையாளங்கண்டுகொள்ளுதல்"
நேரம்: பிற்பகல் 12:00, மணி, ஜெபர்சன்வில் நேரம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதப்பகுதிகள்:
ஓசியா: அதிகாரம் 6
எசேக்கியேல்: அதிகாரம் 37
மல்கியா: 3:1 / 4:5-6
II தீமோத்தேயு: 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம்: அதிகாரம் 11