ஞாயிறு
21 டிசம்பர் 2025
64-0719E
பாளையத்திற்கு புறம்பே செல்லுதல்
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்பான பிரியமானவர்களே,

தேவன் மாறுகிறதில்லை. அவருடைய வார்த்தை மாறுகிறதில்லை. அவருடைய திட்டம் மாறுகிறதில்லை. அவருடைய மணவாட்டியும் மாறுகிறதில்லை; நாம் வார்த்தையுடனே நிலைத்திருப்போம். அது நமக்கு ஜீவனை விட மேலானது; அது ஜீவத் தண்ணீர்களின் ஊற்றாயுள்ளது.

நாம் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருக்கிற ஒரே காரியம், வார்த்தையைக் கேட்பதுதான், அதுவே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாக பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாக்களில் வைக்கப்பட்டிருக்கிறது. நாம் பார்க்கிற ஒரே காரியம் ஒரு கோட்பாட்டை அல்ல, மனிதருடைய ஒரு குழுவை அல்ல, இயேசுவைத் தவிர வேறு எதையும் நாம் காண்கிறதில்லை, அவரே நம்முடைய நாளில் மாம்சமான வார்த்தையாயிருக்கிறார்.

தேவன் நம்முடைய பாளயத்தில் இருக்கிறார். நாம் மகிமைக்கு செல்லும் பாதையில் அக்கினி ஸ்ம்பத்தினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம், அது அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியான மல்கியா 4-ன் மூலமாக தேவன் தாமே பேசிக் கொண்டிருப்பதாக இருக்கிறது. நாம் அந்த மறைவான மன்னாவைப் புசித்துக் கொண்டும், மணவாட்டி மாத்திரமே பருகக்கூடிய ஜீவனுள்ள தண்ணீரைப் பருகிக் கொண்டிருக்கிறோம்.

தேவன் தம்முடைய வழிகளை மாற்றுகிறதில்லை, பிசாசும் தன்னுடைய வழிகளை மாற்றுகிறதில்லை. அவன் இன்னும் அதிக தந்திரசாலியாகிவிட்டதைத் தவிர, 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவன் என்ன செய்தானோ, அவன் இன்றைக்கும் அதே காரியத்தையே செய்து கொண்டிருக்கிறான்.

இப்பொழுது, நானூறு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் தேவன் அவர்கள் மத்தியில் நடந்து வந்தார். வேதவாக்கியத்தின்படியே, அவர் மாமிசமாகி அவர்கள் மத்தியில் வாசம் பண்ண வேண்டும், ''அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்.'' ஆனால் அவர் ஜனங்களின் மத்தியில் தோன்றின்போதோ, அவர்கள், “நாங்கள் இந்த மனிதனை எங்கள் மீது ஆளுகை செய்யவிட மாட்டோம்!...” என்றனர்.

வேதவசனத்தின்படி, மனுஷகுமாரன் மீண்டும் ஒருமுறை வந்து, மானிட மாம்சத்தில் ஜீவித்து, தம்மை வெளிப்படுத்துவார். அவர் அவ்வாறே செய்தார், அவர்களும் அதே காரியத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் செய்தியை மேற்கோள் காட்டிப் பிரசங்கிக்கிறார்கள், ஆனால் அந்த மனிதன் அவர்களை ஆள அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.

சரியாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது:

அப்பொழுது எப்படி இருந்ததோ, அப்படியே இப்பொழுதும் இருக்கிறது! லவோதிக்கேயா சபை அவரை வெளியே தள்ளிவிடும் என்று வேதாகமம் கூறியது, அவர் உள்ளே வர முயற்சி செய்து, கதவைத் தட்டிக்கொண்டிருந்தார். எங்கோ ஏதோ தவறு இருக்கிறது. இப்போது, ஏன்? அவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனிப் பாளயத்தை அமைத்துக்கொண்டார்கள்.

ஒரு மனிதன், “சகோதரரன் பிரான்ஹாம் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அவர் ஏழாம் தூதனாய் இருந்தார். அவர் எலியாவாயிருந்தார். நாங்கள் செய்தியை விசுவாசிக்கிறோம்” என்று கூற முடியும். தங்களுடைய சபையில் ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்தை ஒலிக்கவிடாமல் இருப்பதற்கு, அது என்னவாயிருந்தாலும், அதன் பின்னர் ஏதோ ஒரு விதமான சாக்குபோக்கினை உண்டாக்கிக்கொள்கின்றனர்…எங்கோ ஏதோ தவறு இருக்கிறது. இப்போது, ஏன்? அவர்கள் தங்களுடைய சொந்த பாளையத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

நான் இந்த காரியங்களை சபையைப் பிரிப்பதற்காகச் கூறவில்லை, தேவனுடைய வார்த்தையே அதைச் செய்கிறது. நாம் ஒன்றாக இணைய வேண்டும், ஒருவருக்கொருவர் மற்றும் அவருடன் ஒரே ஐக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அதைச் செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது: ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே. அது தேவனுடைய கர்த்தர் உரைக்கிறதாவது என்பது மாத்திரமேயாகும்.

தேவன் தம்முடைய பரிபூரண வழியை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அது மிகவும் மகிமையானது, அதே சமயத்தில் மிகவும் எளிமையானது. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய மணவாட்டி என்று அவர் நமக்குச் சொல்லகிறதையும், நமக்கு உறுதியளிக்கிறதையும், நம்மை உற்சாகப்படுத்துகிறதையும் நாம் கேட்கிறோம். நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம். அவருக்குச் செவிகொடுங்கள் என்பதன் மூலம் நாம் நம்மைத் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்தச் செய்தி நாளைய செய்தித்தாளைவிட தற்காலத்திற்குப் பொருத்தமானது. நாம் நிறைவேற்றப்படும் தீர்க்கதரிசனமாக இருக்கிறோம். நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியின் மூலமும், இந்த நாளில், இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது என்பதை தேவன் நமக்கு நிரூபிக்கிறார்.

இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும். கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது...அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, அல்லது நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்கள் இருதயங்களில் காணப்படும் உத்தமத்தை இன்று காலை நோக்கிப் பார்த்து, கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் அவர்களுக்கு என்ன தேவையோ அவர்களுக்கு அவைகளை அளிப்பாராக.

ஒரு நிமிடம் பொறுங்கள்... உலகத்திற்கான தேவனுடைய சத்தம் இப்போது என்ன தீர்க்கதரிசனம் உரைத்துச் சொன்னது?...ஜனங்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சபைகளிலோ ஒலிநாடாக்களை இயக்குவார்கள்.

ஆனால் நாம் வீடுகளில் ஒலிநாடா ஆராதனை நடத்த முடியாதா என்று கூறுவதன் மூலம் நாம் விமர்சிக்கப்பட்டு, கடிந்துகொள்ளப்படுகிறோமா? சகோதரன் பிரான்ஹாம் உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று ஒருபோதும் கூறவில்லையா?

தேவனுக்கே மகிமை, அதைக் கேளுங்கள், அதைப் படியுங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. அவர் அதைக் கூறினது மட்டுமல்லாமல், உங்கள் வீடுகளிலும், சபைகளிலும் ஒலிநாடாக்களைப் இயக்குவதன் மூலம், பரலோகத்தின் மகத்தான தேவன் நம்முடைய இருதயங்களின் உத்தமத்தை கனம்பண்ணி, தேவையுள்ளவர்களைக் குணமாக்கி, நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பார்!!

ஜனங்கள் தங்களுடைய போதகர்களுக்குச் செவிகொடுத்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தையைக் கேட்பதில்லை என்பதை இந்த ஒரு மேற்கோள் நிரூபிக்கிறது அல்லது நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும், தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவது அவருடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது என்று வார்த்தையின் மூலம் அவர்களுக்கு நிரூபித்து, அவர்களுக்கு அவர்கள் சவாலிடலாம்.

அநேகர் கூறுவதுபோல நான் வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது தவறாக மேற்கோள் காட்டிக்கொண்டோ இருக்கவில்லை. நீங்களாகவே அதைக் கேட்டுப் படித்துப் பாருங்கள்.

இது மிகவும் எளிமையானதும், மிகவும் பரிபூரணமானதுமாயுள்ளது, இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்" என்று கூறுங்கள். நீங்கள் அதை முழுமையாகக் கூட புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, நீங்கள் அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும்.

“நான் பாளயத்துக்குப் புறம்பே செல்ல விரும்புகிறேன். அது என்னை கிரயமாக்கினாலும் பொருட்படுத்தாமல், நான் என்னுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு அனுதினமும் அதை சுமப்பேன். நான் பாளயத்துக்குப் புறம்பே செல்வேன். ஜனங்கள் என்னைக் குறித்து என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், பாளயத்துக்குப் புறம்பே அவரைப் பின்பற்ற விரும்புகிறேன். நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்.”

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்து ஒலித்தடையைத் தாண்டி தேவனுடைய வார்த்தைக்குள் வாருங்கள். மனிதனின் பாளயத்திற்கு அப்பால் செல்லத் தயாராக இருக்கும் ஒரு மனிதனைக் கொண்டு தேவன் செய்யக்கூடியதும் செய்யப்போவதுமான காரியங்களுக்கு எல்லையே இல்லை.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 64-0719E பாளயத்திற்கு புறம்பே செல்லுதல்

வேதவசனங்கள்: எபிரேயர் 13:10-14 / மத்தேயு 17:4-8