ஞாயிறு
01 ஜூன் 2025
62-1014M
ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சி
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்பான ஜீவனுள்ள நினைவுச்சின்னங்களே,

நாம் ஒலிநாடாவில் கேட்டுக் கொண்டிருக்கிற சத்தம் அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாய் உள்ளது. அது இப்போது ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு உண்மையான சபையாக இருக்கும் படியாக ஒரே இருதயமாய் ஒரு மனப்பட்டு இப்பொழுது அவருடைய மணவாட்டியை பொருத்தமாக ஒன்றிணைத்து, தேவனுடைய வல்லமை நிறைந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, ஆவிக்குரிய பலிகளை, தேவனுடைய துதிகளை செலுத்த, பரிசுத்த ஆவியினால் நமக்கு மத்தியிலே அசைவாடுகிறது.

நாம் அவருடைய வார்த்தையினால் வல்லமை நிறைந்த வீடாகவும், பரிசுத்த ஆவியின் வாசஸ்தலமாகவும் இருக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட நபர்களை உருவாக்கும்படிக்கு அவருடைய ஏழாம் தூதன் மூலமாக பேசவே கிறிஸ்து நமக்கு தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பினார்.

நாம் ஒவ்வொரு காரியத்திற்கும் சுந்தரவாளியாயிருக்கிறோம். இது நம்முடைய தனிப்பட்ட சொத்து, அது நமக்குச் சொந்தமானது. இது நமக்கு தேவனுடைய வெகுமதி. அதை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. அது நம்முடையது.

"என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினனிடத்தில் கேட்டுக் கொள்வதை நான் செய்வேன்." அங்கே யாரால் எதையும் மறுக்க முடியும்? நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘தள்ளுண்டு போ’ என்று சொல்லி உங்கள் இதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நீங்கள் கூறியுள்ளது நிறைவேறும் என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் கூறியுள்ளது என்னவாயிருந்தாலும் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.” என்னே வாக்குத்தத்தங்கள்! சுகமளித்தலுக்கு மட்டுமல்லாமல் எதற்குமே.

தேவனுக்கு மகிமை...நாம் எதைக் கேட்டாலுமே!

காலத்தின் தொடக்கம் முதற்கொண்டே, தேவனுடைய முழு சிருஷ்டியும் பெருமூச்சுவிட்டு, பூரண தேவ புத்திரர்கள் வெளிப்படுத்தப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறது. அந்த நாள் வந்துவிட்டது. இதுவே அந்த நாள். இதுவே அந்த நேரம். நாமே அந்த வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.

தேவன் உள்ளே நடந்து கொண்டும், அவர் உள்ளே பார்த்துக் கொண்டும், அவர் உள்ளே பேசிக் கொண்டும், அவர் உள்ளே கிரியை செய்து கொண்டும் இருக்கிற, அவருடைய ஜீவனுள்ள கருவிகளாக நாம் இருக்கிறோம். அது தேவன் நமக்குள்ளே இரண்டு கால்களிலும் நடந்து கொண்டிருக்கிறதாயுள்ளது.

நாம் எல்லா மனிதராலும் வாசிக்கப்படுகிற எழுதப்பட்ட அவருடைய நிருபங்களாக, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன் குறிக்கப்பட்ட, ஒரு ஜீவனுள்ள மனிதனுக்குள்ளாக அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிற புத்திர சுவிகாரமாக்கப்பட்ட குமாரரும் குமாரத்தி களுமாய், ஒரு ஜீவனுள்ள சாயலாய், ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சியாய் இருக்கிறோம்.

ஜீவிக்கிற தேவனிடத்தினின்று வரும் ஜீவிக்கின்ற வல்லமை, ஜீவிக்கிற ஞானம், ஜீவிக்கிற பொறுமை, ஜீவிக்கிற தேவபக்தி, ஜீவிக்கிற தேவனிடமிருந்து வருகின்ற ஜீவனுள்ள வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது, நம்மை ஜீவனுள்ள மனிதனாக, தேவனுடைய பரிபூரணத்தின் ஜீவ சாயலாக உருவாக்குகிறது.

அது பரிசுத்த ஆவியின் நபராக நம்மீது, அவருடைய பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகத்துடன், அவருடைய அனைத்து வல்லமைகளும் நம்மில் முத்திரையிடப்பட்ட கிறிஸ்துவே. கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒரு கூடாரத்தில் நமக்குள்ளாக ஜீவிக்கிற, தேவன். ஒரு ஜீவனுள்ள கூடாரம், ஜீவனுள்ள தேவனுடைய வாசஸ்தலம்; ஒரு பரிபூரண சபை, நம்மை மூடுவதற்கான ஒரு பரிபூரண தலைக்கல்.

தேவன் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அது அவருடைய முதல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட ஆதாமாக இருந்தது, நம்முடைய நாளில் ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சியாய், அவருடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தியது. அதிலிருந்து நான் நகர முடியாது. எதுவும் என்னை நகர்த்த முடியாது. யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை; அது என்னை சிறிதும் அசைக்கவில்லை. நான் அங்கேயே தரித்திருப்பேன்.

நான் காத்திருப்பேன், காத்திருப்பேன், காத்திருப்பேன். எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை. அது அங்கேயே தரித்திருக்கிறது. பின்னர், ஒரு நாள், நான் மற்ற எல்லா பரிசுத்தவான்களோடும் ஒருமனதாக சத்தமிடுவேன்: "நாங்கள் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் உறுதியுடன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்! பின்னர் நீர் எங்களை அவரிடம் அளிப்பீர். அதன்பின்னர் நாம் அனைவரும் என்றென்றுமாய் ஜீவிக்க மீண்டும் பூமிக்குத் திரும்புவோம்."

இன்று காலை, அவருடைய உதவியாலும் அவருடைய கிருபையாலும், இந்த தேவைகள் ஒவ்வொன்றும் என்னுடைய இந்த சிறிய பழைய வளர்ச்சியில் பாய்வதை நான் உணரும் வரை, நான் ஜீவனுள்ள கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலாய் இருக்க முடியும் வரை, நான் தினமும் இடைவிடாமல் ஜெபித்து தேடுவேன் என்று நான் அவரிடம் முழு மனதுடன் உறுதியளிக்கிறேன்.

என்னைப் பொருத்தவரையில், ஒலிநாடக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதே இந்த நாளுக்கான தேவனுடைய திட்டமாகும். அது இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள வார்த்தையாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையின்படி அதுவே என்னுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது. அதுவே இந்நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியாயிருக்கிறது.

எனவே, ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சி 62-1014M: கிறிஸ்துவின் மணவாட்டி எவ்வாறு மாற வேண்டும் என்று கற்பிக்கும் நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருப்பதாக நான் விசுவாசிக்கிற இன்னாராகிய, வில்லியம் மரியன் பிரான்ஹாமுக்கு நான் செவி கொடுக்கப் போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு என்னுடன் சேர உங்களை அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 5:48
பரி. லூக்கா 6:19
பரி. யோவான் 1:1 / 3:3 / 3:16 / 5:14 / 14:12
அப்போஸ்தலர் 2:38 / 7:44–49 / 10வது அதிகாரம் / 19:11 / 28:19
எபேசியர் 4:11-13
கொலோசெயர் 3வது அதிகாரம்
எபிரெயர் 10:5 / 11:1 / 11:32-40
யாக்கோபு 5:14
2 பரி. பேதுரு 1-7
ஏசாயா 28:19