அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,
நாம் என்னே மகிமையான நேரங்களை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். வார்த்தையும் மணவாட்டியும் ஒன்றாயும் மாறாததாயும் உள்ளது. ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் நாம் திரைக்குப் பின்னால் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் தோலுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். தேவன், மீண்டும் ஒருமுறை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் மனித தோலுக்குப் பின்னால் தம்மை மறைத்துக் கொள்கிறார். இனி எந்த கேள்வியும் இல்லை. நாம் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, வார்த்தை மாம்சமான, பரிபூரண வார்த்தை மணவாட்டி என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை.
உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றிணையும்போது, அவருடைய சத்தம் பேசி, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்ற முழுமையான வெளிப்பாட்டை நமக்கு முழுமையாக வெளிப்படுத்துகிறதற்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வார்த்தையின் வெளிப்பாடு, எலோஹிம், மாம்சத்தில் உள்ள தேவன் தம்முடைய மணவாட்டியிடம் பேசுகிறார். மாம்சத்தில் உள்ள தேவன் நம் ஒவ்வொருவரிலும் ஜீவித்து வாசம் செய்கிறார். தேவனுடைய முடிவான திட்டம் இப்பொழுது நம் ஒவ்வொருவரிலும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
விசித்திரமான தோற்றமுடைய திருகாணிகளை கொண்ட விநோதமானவர்கள் மற்றும் முட்டாள்கள் என்று அழைக்கப்படுவதற்கு நாம் கர்த்தருக்கு மிகவும் மகிழ்ச்சியாயும், நன்றியுள்ளவர்களாயும் இருக்கிறோம். ஆனால் நாம் யாருடன் இணைக்கப்பட்டுள்ளோம் என்றும், யார் என்பதும் நமக்குத் தெரியும்: தேவனுடைய ஒலிநாடாவுடன் இணைக்கப்பட்டுள்ள மணவாட்டி; அது நம்மை அவரிடம் இழுத்து, நாம் அவருடன் ஒன்றாக மாறும்போது மேலும் மேலும் இறுக்கமாகி வருகிறது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
நாம் திரையைக் கடந்து அக்கினி ஸ்ம்பத்துக்குள் சென்று தேவனுடைய ஆசீர்வாதங்களுடன் வெளியே வந்துள்ளோம்! ஜனங்களால் அதைக் காண முடியாது. அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நமக்கு, அது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் நாம் நமது இசையமைப்பாளர் மற்றும் இயக்குநரின் அதே ஆவியில் இருக்கிறோம். அது தம்முடைய மணவாட்டியை வழிநடத்துகிற ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயுள்ளது.
நாம் சமுகத்தப்பத்தினாலும், வேறு பிரிக்கப்பட்ட ஜனங்களுக்கு மாத்திரமே அளிக்கப்படுகிற மன்னாவினாலும் நாம் ஜீவித்து கொண்டிருக்கிறோம். அதுவே நாம் சாப்பிடக்கூடிய ஒரே காரியமாயுள்ளது. அது நாம் புசிக்கும்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே காரியமாயுள்ளது. மேலும் அது அனுமதிக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, அது என்ன என்பதை அறிந்த மக்களுக்கு மட்டுமேயாகும்.
நாம் யார் என்று அவர் நமக்குச் சொல்வதைக் கேட்க நான் விரும்புகிறேன்:
பெந்தெகொஸ்தே நாளன்று இறங்கிய அதே பரிசுத்த ஆவி இன்றைக்கு வெளிப்பட்டு, மகிமைக்கு, மகிமையின் மேல் மகிமையடைகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன், அதே அடையாளங்களுடனும், அதே அற்புதங்களுடன், அதே ஞானஸ்நானத்துடனும்; அதேவிதமான ஜனங்களுடன், அதே விதமாக நடந்து, அதே வல்லமையோடு, அதே உணர்வோடு அதனுடைய மூல வித்திற்குத் திரும்பி, அது மகிமையின் மேல் மகிமையடைகிறது.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு நாம் மூல வித்திற்கு திரும்புகிறோம். அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஞானஸ்நானம், அதே வகையான மக்கள், அதே வழியில், அதே வல்லமையுடன், அதே உணர்வுடன் செயல்படுகிறோம்.
நாம் அவருடைய பரிபூரணமான, முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட, வார்த்தை ஒலிநாடா மணவாட்டி!
நாம் ஜெயங்கொள்கிறோம். நிலைத்திருக்கிறோம். நிற்கிறோம். அவருடைய மணவாட்டிக்காகச் சேமிக்கப்பட்டிருக்கிற அவருடைய தூய வார்த்தையில் நிலைத்திருக்கிறோம். அது நாளுக்கு நாள் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது. நாம் யார் என்பதை அறிந்து நமது விசுவாசம் புதிய உயரங்களை எட்டியுள்ளது, அது இதுதான்:
மறுக்க முடியாதது, பேரம் பேச முடியாதது, எல்லாவற்றிற்கும் மேலாக, அது நிபந்தனையற்றது.
நீங்கள் எப்போதையும் விட மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா?
கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதில் 1000% திருப்தி அடைய விரும்புகிறீர்களா?
தேவனுடைய வார்த்தையால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட விரும்புகிறீர்களா?
அப்படியானால், வல்லமையுள்ள தேவன் நமக்கு முன்பாக திரைநீக்கப்பட்டார் 64-0629: என்ற செய்தியில் தேவனுடைய சத்தம் நித்திய ஜீவனின் வார்த்தைகளை எங்களிடத்தில் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, பிரான்ஹாம் கூடாரத்தில், எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்