ஞாயிறு
17 மே 2026
65-0725M
கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

அன்புள்ள கழுகுக் கூட்டமே,

இந்த வாரச் செய்தியின் தலைப்பே, மணவாட்டியின் மீதுள்ள பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய அத்தகைய ஒரு விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. நம்முடைய தீர்க்கதரிசியின் மீது இருந்த அதே பரிசுத்த ஆவியானவரின் உண்மையான அபிஷேகத்தைப் பெற்ற, உண்மையான அபிஷேகம் செய்யப்பட்ட மனிதர்கள் இந்தக் காலத்தில் எழுவார்கள், ஆனால் அவர்கள் பொய்யானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்றும், உண்மையான தீர்க்கதரிசியைப் போலவே அதே மாரியையும், அதே ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள் என்றும் வார்த்தை நமக்குச் சொல்கிறது. மக்கள், இந்தக் காலத்தின் உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையிலிருந்து விலகி, செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொள்ளுவார்கள். அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கிட்டத்தட்ட வஞ்சிக்குமளவிற்கு உண்மையான வார்த்தைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.

அந்த அபிஷேகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கும்? எது உண்மை, எது பொய் என்பதைப் பகுத்தறிவது எளிதாக இருக்குமா? தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதரும், அபிஷேகம் பெற்றவருமான தாவீது ராஜா, ஒரு உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றார்; ஆனால் அது தவறானது என்று தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்.

என்ன!! இதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ராஜாவுக்கு உண்மையான அபிஷேகமும் உண்மையான வெளிப்பாடும் இருந்தது, ஆனால் தவறாய் இருந்தது! தாங்கள் கேட்பது உண்மையான அபிஷேகமா அல்லது பொய்யான அபிஷேகமா என்பதை அறிந்துகொள்ள, தேவனின் ஆட்டுக்குட்டிகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏனெனில் அவர்களுடைய நித்திய முடிவு இந்தத் தீர்மானங்களையே சார்ந்துள்ளது.

தேவன் தம்முடைய மணவாட்டியை வார்த்தையில் வழிகாட்டவும் அவரைக் காக்கவும் பல உண்மையான அபிஷேகம் பெற்ற ஊழியர்களை நியமித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவருடைய வார்த்தை அவ்வாறே கூறுகிறது, மேலும் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் நாம் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ப்பர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மந்தைகளை வார்த்தையில் காக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தங்கள் மந்தைகளுக்குக் தேவனின் ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஒலிக்கச் செய்வதில் தவறக்கூடாது.

உண்மையான அபிஷேகமும் உண்மையான வெளிப்பாடும் இருந்தபோதிலும், ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தவறு செய்ய முடியும் என்பதை நாம் சற்று முன்பு கேட்டோம். ஆனால் மணவாட்டி உறுதியாக இருக்க முடியும், ஏனென்றால் அவர்கள் எப்போதும் உண்மையான அபிஷேகத்தையும், உண்மையான வெளிப்பாட்டையும், கர்த்தர் உரைக்கிறதாவது என்ற உண்மையான வார்த்தையையும் கேட்க ஒரு சரியான வழியை தேவன் அருளியுள்ளார்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதுதான்.

பிணமானது எங்கே இருக்கிறதோ,” மன்னா என்பது, வார்த்தையாய் உள்ளது, “அங்கே கழுகுகள் கூடும்”

பிணமானது எங்கே இருக்கிறதோ, அங்கேதான் கழுகுகளாகிய நாமும் கூடுவோம். எங்கே புதிய மாம்சம் இருக்கிறதோ, அந்தந்தக் காலத்தின் வார்த்தை, அந்த நேரத்தின் செய்தி உள்ளது. அந்த மன்னாவை உண்பதற்கு, தேவனுடைய சத்தம் தாமே பேசுவதைக் கேட்பதை விடப் புத்துணர்ச்சியான இடம் வேறில்லை.

அது அவருடைய வார்த்தை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பார்த்தீர்களா? முன்குறிக்கப்பட்டவர்கள் இதை அறிவார்கள். “ஒரு அந்நிய வார்த்தையையோ அல்லது ஒரு அந்நிய சத்தத்தையோ பின்பற்றமாட்டார்கள்.

நாம் வஞ்சிக்கப்பட மாட்டோம், வஞ்சிக்கப்பட முடியாது என்பதற்குக் காரணம், இந்த வெளிப்பாட்டின் மூலம் நாமே அந்த வார்த்தையாக இருப்பதுதான். நாம் வேறு எதுவும் ஆக முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நாம் வேறு எதையும் அறியமாட்டோம்.

நான் இருக்கிறேன்!” “இருந்தேன் அல்லது இருப்பேன்” என்றல்ல. “நான் இருக்கிறேன்,” நிகழ்காலம், இப்பொழுது வார்த்தை. இருந்த வார்த்தையல்ல, வரப்போகும் வார்த்தையல்ல; இப்பொழுதுள்ள வார்த்தை. பார்த்தீர்களா? உங்களுக்கு அது புரிகிறதா? “நான் இருக்கிறேன்!” “நான் இருக்கிறேன்” என்ற வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது.” அது சரியா? “நான் இருக்கிறேன்.” “இது உண்மையென்று ரூபகாரப்படுத்த, தேவன் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக அனுப்பினார். நான் இங்கே வந்து இதைச் செய்யும்படி என்னிடம் கூறின, இந்த வார்த்தைக்கான பதிலாயிருக்கிறேன்.”

அவன் அதைச் செய்தபோது, பார்வோன், “சரி, அதைச் செய்யக்கூடிய ஏராளமான பையன்கள் எங்களுடைய குழுவில் உள்ளனர்” என்றான், போலியாக பாவனை செய்பவர்கள்.

இயேசு, “இப்பொழுது, கடைசி நாட்களில் அது மீண்டும் நிகழப்போகிறது” என்று கூறினார், பாருங்கள், அதே காரியத்தை உரிமை கோருகிறார்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மணவாட்டியின் மீதான ஒரு உறுதிப்பாட்டைப் பற்றிப் பேசலாம். இந்த வெளிப்பாட்டை நீங்கள் பெறும்போது, நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட இனிய இருதயமான மணவாட்டி என்பதை அறிந்துகொள்வீர்கள்.

ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், நாம் மனுஷ குமாரனாகிய கிறிஸ்துவுக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை போஷித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவரே. நாம் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதனின் வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நாம் தவறிப் போகாத மனுஷகுமாரனுடைய சரீர-வார்த்தையையே புசித்துக் கொண்டு வருகிறோம்.

கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றவர்கள் என்பதை குறித்து எல்லாவற்றையும் எங்களுக்கு தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துகிறதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்ப்படி, நீங்கள் 100 % கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு செவிகொடுக்க வேண்டுமென்று விரும்பினால் மணவாட்டி ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-0725M

வேதவசனங்கள்:

மத்தேயு 5:44-45 / 7:21 / 24:15-28
லூக்கா 17:30 / 18:1-8
யோவான் 14:12
எபேசியர் 1:5
2 தீமோத்தேயு 3:1-8
எபிரெயர் 6:1-8 / 11:4
வெளிப்படுத்துதல் 10:1-7 / 16:13-14
மல்கியா 4:5
1 இராஜாக்கள் 22:1-28
எரேமியா: அதிகாரங்கள் 27 & 28