ஞாயிறு
29 அக்டோபர் 2023
63-0717
ஒரு சிறைவாசி

அன்புள்ள சிறைவாசிகளே

நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கை நோவா, அல்லது மோசேயின் நாட்களில் நீங்கள் வாழ்ந்திருந்தால் நீங்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும், ஏனென்றால் நீங்கள் அதே ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள். இப்போது உங்களிடம் இருக்கும் அதே ஆவி அப்போது மக்களிடம் இருந்தது.

நீங்கள் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், அப்போது யாருடைய பக்கம் இருந்திருப்பீர்கள்? பேழையைக் கட்டுவதற்கும் மக்களை வழிநடத்துவதற்கும் தேவன் தெரிந்து கொண்டவர் நோவா என்று நீங்கள் விசுவாசித்து அவருடன் பேழைக்குள் பிரவேசித்திருப்பீர்களா அல்லது “என்னாலும் கூட ஒரு பேழையைக் கட்ட முடியும். நான் ஒரு தலைவனையும், பேழையை கட்டுபவரையும் போல் நல்லவன்”? என்று கூறியிருந்திருப்பீர்களா?

நீங்கள் மோசேயின் காலத்தில் வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் மோசேயுடன் தரித்திருந்து, மக்களை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்டவர் அவரே என்று விசுவாசித்திருப்பீர்களா, அல்லது தாத்தானும் கோராகும் "நாங்களும் பரிசுத்தமானவர்கள், நாங்களும் ஏதாவது சொல்ல வேண்டும். தேவன் எங்களையும் கூட தெரிந்துகொண்டாரே" என்று அவர்கள் கூறினபோது அவர்களுடன் சென்றிருப்பீர்களா”?

நாம் ஒவ்வொருவரும், இந்த நாளை, மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையே தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்தப் பக்கம் என்று கூறினாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே, ஒவ்வொரு நாளும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்கிறது. நாம் ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கிறோம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் வார்த்தையில் இருக்கிறீர்களா? நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தருடைய பரிபூரண சித்தத்தைத் தேடி, ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பது முற்றிலும் அவசியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் இன்றைக்கான தேவனுடைய சத்தமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

நம்மைப் பொறுத்தவரை, பதிலோ ஆம் என்பதாகவே உள்ளது. நாம் நம்முடைய நாளுக்கான தேவனுடைய வார்த்தைக்கும், அவருடைய செய்திக்கும், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்திற்கும் சிறைவாசிகளாய் இருக்கிறோம் என்று உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆம், 7-ம் சபைக் கால செய்தியாளரே மணவாட்டியை வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆம், ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தமே கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமாய் இருக்கிறது.

தேவனுடைய அன்பும், அவருடைய சத்தமும், இந்தச் செய்தியும், மிகவும் பிரமாண்டமானதாயும், நமக்கு அப்பேர்ப்பட்ட ஒரு வெளிப்பாடாயும் உள்ளது, அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. நாம் இதற்கு ஒரு சிறைவாசியாகிவிட்டோம்.

நாம் மற்ற எல்லாவற்றுக்கும் விற்றுவிட்டோம். மற்றவர்கள் என்ன கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல், நாம் சேணம் பூட்டப்பட்டிருக்கிறோம். நாம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாதபடிக்கு இதைக் குறித்து ஏதோ ஒரு காரியம் உள்ளது. இது நம்முடைய ஜீவியங்களின் சந்தோஷமாக இருக்கிறது. இது இல்லாமல் நம்மால் ஜீவிக்க முடியாது.

நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், கர்த்தருக்கும் அவருடைய செய்திக்கும் ஒரு சிறைவாசியாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்; ஏனெனில் அவை ஒன்றே. இது நமக்கு ஜீவனை விட மேலானது. ஒவ்வொரு நாளும் நாம் அவருடைய மணவாட்டி என்பதை இது தெளிவாகவும் அதிக உண்மையுமாக்குகிகிறது. நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம். நாம் வார்த்தையைப் பேச முடியும், ஏனென்றால் நாம் மாம்சமான வார்த்தையாயிருக்கிறோம்.

கிறிஸ்துவோடும் இந்த மணிநேரத்திற்கான அவருடைய செய்தியையும் தவிர வேறு எதனுடனும்; நம்முடைய தந்தை, நம்முடைய தாய், நம்முடைய சகோதரன், நம்முடைய சகோதரி, நம்முடைய கணவன், நம்முடைய மனைவி, யாரேனும் கூட நாம் இணைக்கப்பட்டிருக்கவில்லை. நாம் கிறிஸ்துவோடு மாத்திரமே இணைக்கப்பட்டிருக்கிறோம், அவருடன் மட்டுமே. நாம் இந்த செய்திக்கும், இந்த சத்தத்திற்கும் இணைக்கப்பட்டு, நுகத்திலே பூட்டப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் இது இந்த நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது, வேறு வழியே இல்லை.

நாம் இனி நம் சுயநலத்திற்கும், நமது லட்சியத்திற்கும் சிறைவாசிகள் அல்ல. நாம் நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, அவரிடம் நுகத்தில் பூட்டப்பட்டிருக்கிறோம். உலகத்தில் உள்ள மற்றவர் என்ன நினைத்தாலும், உலகத்தில் உள்ள மற்றவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், நாம் அவருக்கும் அவருடைய சத்தத்திற்கும் அன்பின் சங்கிலிகளினால் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

சிறைவாசிகளாக இருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பிதாவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். நாங்கள் செய்கிற, நாங்கள் கூறுகிற ஒவ்வொரு காரியத்திலும், மற்றும் எப்படி செயல்பட வேண்டும் என்றும் உம்முடைய சத்தம் எங்களுக்கு அறிவுறுத்தட்டும். நாங்கள் உம்மைத் தவிர வேறு எதையும் அறிய விரும்பவில்லை.

எப்படி சிறைவாசியாக வேண்டும் என்பதற்காக: ஒரு சிறைவாசி 63-0717 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சத்தத்திற்கும் சேணம் பூட்டப்படும்படிக்கு எங்களோடு வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்

பிலேமோன் 1:1

பிற்சேர்க்கை: சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் பிலேமோன் என்று உச்சரிக்கும் விதத்தை நாங்கள் விரும்புகிறோம், அது மணவாட்டிக்கு பரிபூரணமாயுள்ளது.