ஞாயிறு
22 அக்டோபர் 2023
63-0714M
முறையிடுகிறது என்ன? சொல்!

அன்புள்ள தேவனுடைய கூடாரங்களே,

நான் அவருடைய சபையாயிருக்கிறேன். நீங்கள் அவருடைய சபையாயிருக்கிறீர்கள். நாம் தேவன் வாசம் செய்கிற கூடாரமாயிருக்கிறோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கிறோம்; நம்முடைய உள்ளத்தில் ஜீவனுள்ள தேவன் ஜீவிக்கிறார். நமது செய்கைகள் தேவனுடைய செய்கைகளாயிருக்கின்றன. மகிமை!!

உலகம் முழுவதிலுமிருந்து சிறிய இடங்களில், நாம் அனைவரும் ஒன்று கூடுகிறோம்; இன்றைக்கான அவருடைய வார்த்தையான தேவனுடைய சத்தத்தின் பேரில் அனைவரும் ஒன்றுசேர்கின்றனர்.

இது மிகவும் அற்புதமாயுள்ளது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் மட்டுமேயன்றி, வேறு எதனோடும் இதற்கு இணைப்பு இல்லை. அது தான், முற்றிலுமானதே. நாம் தேவனுடைய சத்தத்தால் பரிபூரணப்படுத்தப்பட்டு உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் முழுமையாக முடிவுவரைக்குமாய் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவருமே! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும், வயதான பெண்ணாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் அல்லது ஒரு இளைஞனாக இருந்தாலும், நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, நாம் அனைவருமே சென்று கொண்டிருக்கிறோம். நம்மில் ஒருவரும் கைவிடப்படப்போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்கிறோம், மேலும் "நாம் வேறெதற்காகவும் நிற்கப்போவதில்லை."

நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு மகத்தான ஒன்றுபட்ட குழு, அந்த மகிமையான வருகைக்காக காத்திருக்கிறது. நாம் பிரிக்கப்படக்கூடாது, ஆனால் மனிதன் சுவிசேஷத்தின் போதனையின் பாதையிலிருந்து வெளியேறிவிட்டான்.

எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காட்ட ஏதாவது வழி இருக்க வேண்டும். நீங்கள் எப்போதுமே செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த வியாக்கியானத்தையும் கொடுக்காமல், அதை அப்படியே படித்து, அதை அப்படியே விசுவாசியுங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வியாக்கியானத்தை முன்வைக்கிறான், அது வித்தியாசமான ஏதோக் காரியத்தை கூற வைக்கிறது. மணவாட்டிக்கு ஒரே ஒரு தேவனுடைய சத்தம் மாத்திரமே உள்ளது. இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்!

இந்த கூட்டத்தினருக்காக, நான் இதை இந்த ஒலிநாடாவில் கூறுகிறேன், நான் பரிசுத்த ஆவியின் ஏவுதலின் கீழ் இதைச் சொல்கிறேன்: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர் யார், அவர் இந்த வார்த்தையின் கீழ் வரட்டும்!

நம்முடைய நாளுக்கான வார்த்தைக்கு ஒரு சத்தம் உள்ளது. நம்முடைய தீர்க்கதரிசியே அந்த சத்தம். அந்த சத்தம் நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையாயிருக்கிறது. அந்தக் சத்தத்தைக் கேட்பதற்கும் இந்த மணிநேரத்தைப் பார்ப்பதற்கும் நாம் முன்குறிக்கப்பட்டிருந்தோம், மேலும் அந்த சத்தத்தைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுக்கப்போவது எதுவுமேயில்லை.

நம்முடைய விசுவாசம் அதைக் கண்டு, யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல் அதைக் கேட்கத் தேர்ந்தெடுக்கிறது. நாம் ஒரு வித்தியாசமான வழியில் நோக்கிப் பார்க்கும்படிக்கு நம்முடைய பார்வைகளை கீழ் நோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் வார்த்தையின் பேரிலான நடு மையத்தில் குறி வைத்து, நம்முடைய செவிகளை அந்த சத்தத்திற்கு செவி கொடுக்கிறோம்.

கர்த்தாவே, உம்மிடத்தில் ஒரு அர்ப்பணிப்புடன், எங்களுடைய இதயங்களிலிருந்து உம்முடைய செவிகளுக்கு ஏறெடுக்கும், இதுவே எங்களுடைய உத்தமமான ஜெபமாயுள்ளது.

இந்தநாள் முதற்கொண்டு, நம்முடைய ஜீவியங்கள் மாற வேண்டும் என்றும், அதாவது நம்முடைய சிந்தனையில் நாம் அதிக உறுதியாயிருப்போம் என்று அர்ப்பணிப்போமாக. நாம் இனிமையானவர்களாய், தாழ்மையுள்ளவர்களாய் ஜீவிக்க முயற்சித்து, அதாவது, நாம் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறதை, தேவன் ஒவ்வொருவருக்கும் அருளுவார் என்று விசுவாசிப்போமாக. நாம் ஒருவருக்கொருவர் விரோதமாக, அல்லது எந்த மனிதனுக்குமே விரோதமாக பொல்லாங்காய் பேசாதிருப்போமாக. நாம் நம்முடைய சத்துருக்களுக்காக ஜெபித்து, அவர்களை நேசித்து, நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நன்மை செய்வோமாக. யார் சரி என்றும், யார் தவறு என்பதையுங் குறித்து தேவனே நியாதிபதியாயிருக்கிறார்.

முறையிடுகிறது என்ன? சொல்! 63-0714M என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தை கேட்பதனால் உங்களுடைய விசுவாசத்தை அபிஷேகிக்கும்படிக்கு எங்களோடு வரும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்