காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 11 ஏப்ரல், 2026

அன்புள்ள உயிர்ப்பிக்கப்பட்டவர்களே,

இந்த ஈஸ்டர் வார இறுதியில் நம்முடைய இருதயங்கள் கழுகுகளைப் போலப் பறந்தன. நாளுக்கு நாள், அவருடைய அபிஷேகம் மகத்தானதாகிக்கொண்டே போனது. இராப்போஜனம், அடக்கம், பரிபூரணம், பின்னர் அவர் நம்மை ஆயத்தப்படுத்தியிருந்த அந்த மாபெரும் உச்சக்கட்டம்: இது சூரிய உதயம்...மகிமை, அவர் உயிர்த்தெழுந்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிரோடு இருக்கிறார். நாம் இதற்கு முன் கேட்டிராத விதத்தில் அவர் தம்முடைய வார்த்தையை நம் ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அபிஷேகம் நம்முடைய இருதயங்களை நிரப்பியது, அவருடைய பிரசன்னம் நிரம்பி வழிந்தது; ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் நெருங்கிவிட்டது போலத் தோன்றியது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதையும், பின்னர் 2026-ல் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவர் நமக்குச் சொன்னார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட தேவனுடைய முதல் கோதுமை மணி இயேசுவே. அவர் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையால் உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தார். தேவன் அவருடைய ஜீவனை உயிர்ப்பித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், மேலும் அவரே அந்த நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். முதிர்ச்சியடைந்த முதல் நபர் அவரே; நம்மில் மற்றவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன், தேவனுக்கு நன்றி செலுத்தும் நினைவாக அசைவாட்டப்பட்ட தேவனுடைய கதிர்க்கட்டு அவரே. அது ஒரு அடையாளமாக இருந்தது.

பின்னர் இன்று என்ன சம்பவித்துள்ளது என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்தினார். பெந்தேகோஸ்தே நாளில், வானத்திலிருந்து அசைவாட்டுவது போன்ற ஒரு சத்தம் வந்தபோது, ஜனங்கள் மீது ஒரு பலத்த காற்று வீசியது போல, அவர் அசைவாட்டப்பட்டார். மீண்டும் ஜனங்களுக்கு முன்பாக அசைவாட்டப்பட்டவிதமாக, லூக்கா 17:30 மற்றும் மல்கியா 4-ல் அவர் வாக்களித்தபடியே, மனுஷ கு-மா-ர-ன் வெளிப்படுத்தப்படும்போது, ஜனங்கள் மீது மீண்டும் அசைவாட்டப்படும்.

இப்பொழுது, மனுஷகுமாரன் யார்? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” நாம் பெற்றுள்ள எல்லா உபதேசங்களும், தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுத்துதலும்; தேவனுடைய வார்த்தையினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், நாம் மேற்கோள் காட்டியபடி, அதை இங்கே லூக்காவின்—புத்தகத்தில், அல்லது லூக்கா 17-ம் அதிகாரம் 30-ம் வசனம்; மல்கியா 4-ம் அதிகாரத்தையும், நாம் அறிந்திருக்கிற வெவ்வேறு வேத வாக்கியங்களையும், அந்த வார்த்தை மீண்டும் ஜனங்களின் மேல் அசைவாடப்படுகிறது என்றும், மரித்துப்போன மனிதனின் பாரம்பரியங்கள் மரித்துவிட்டன என்றும், தேவனுடைய குமாரன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நமக்கு மத்தியிலே மீண்டும் உயிரோடிருந்து, நமக்கு ஜீவனை அளித்துக் கொண்டிருக்கிறார் என்றும், இன்றைக்கு நாம் காண்கிறோம்.

பரிசுத்த ஆவியானவர் நம்மேல் தொடர்ந்து அசைவாடிக் கொண்டே, அசைவாடிக் கொண்டே இருந்தார், தமது வார்த்தையை வெளிப்படுத்தி, வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்... இயங்கு சக்தியாய், இயக்கவியலாய், உயிர்ப்பிக்கும் வல்லமையாய்...

பின்னர், இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியபோது, அவர் நம்மிடம் கூறினார்:

அவர் என்னை திரைக்குப் பின்னால் காணும்படி செய்தார், நான் உங்கள் எல்லோரையும் அங்கே கண்டேன்… “நீ எப்போதும் நேசித்தவை, உன்னிடத்தில் அன்பு கூர்ந்த யாவும், அவைகள் உனக்கு அளிக்கப்படுகின்றன. பார்த்தீர்களா? அந்தவிதமாக அவர்கள் எல்லோரையும் நான் கண்டேன். அது என்னவாயிருந்தது? உயிர்ப்பிக்கும் வல்லமை.

அவர் நம்மை அங்கே கண்டார்!! காலத்தின் திரைக்கு அப்பால்…நாம் அவருடன் அங்கே இருந்தோம்; நமக்கு முன்பாகச் சென்ற நம் அன்புக்குரியவர்கள் அனைவரும்… தந்தையர்கள், தாய்மார்கள், பிள்ளைகள். நாம் அவர்களுடனும், நாம் ஒருபோதும் சந்திக்காத அனைவருடனும் அங்கே இருந்தோம்: மோசே, எலியா, பேதுரு, பவுல்…நாம் அனைவரும் ஒன்றாக அங்கே இருந்தோம்.

பின்னர், அவர் ஒரு அருமையான பரிசுத்த ஆவியானவர் என்பதால், நோய்வாய்ப்பட்ட, மனச்சோர்வுற்ற மற்றும் அடிபட்ட நம்மை அவர் மறக்க விரும்பவில்லை. எனவே, நமக்குத் தேவையான அனைத்திலிருந்தும் அனைவரும் குணமடைய வேண்டும் என்பதற்காக, அவர் மீண்டும் தம்மையே நம் மீது அசைவாட்டினார்.

இந்த ஜனங்கள், அவர்கள் இராஜ்ஜியத்தின் சக குடிமக்களாக, உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாக இருக்கிற, இவர்களுக்கு அதை இப்பொழுதே, கர்த்தாவே, உயிர்ப்பியும். ஆவியானவர் ஒரு கழுகிலிருந்து மற்றொரு கழுகுக்கு, வார்த்தையிலிருந்து மற்றொரு வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் ஒவ்வொரு சரீரங்களிலும் வெளிப்படும் வரை, சரீரப்பிரகாரமாகவோ, ஆவிக்குரிய பிரகாரமாகவோ, அல்லது அவர்களுக்கு எந்த தேவையிருந்தாலும், எங்களுடையடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்வராக.

அந்த வார்த்தை. அந்த சத்தம். மணவாட்டியே, நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியமும் அந்தப் ஒலிநாடாக்களில் உள்ளன. தேவன் தமது வார்த்தையைக் குறித்துத் தமது சிந்தையை மாற்றிக்கொள்வதில்லை. அதில் ஒரு சிறு புள்ளியோ அல்லது ஒரு சிறு எழுத்தோ மாற்றப்பட முடியாது, எனவே அவருடைய மணவாட்டி தங்களுடைய சொந்த செவிகளில் அவர் அவர்களுக்கு என்ன கூற விரும்பினாரோ அதை சரியாக கேட்கும் படிக்கு அவர் ஒரு வழியை உண்டு பண்ணினார்.

தேவன் நம்முடைய மணவாட்டியிடம் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது. மணவாட்டி மணவாளனிடம் வர வேண்டும்; அதுவே இன்றைய நாளுக்காக ஏற்படுத்தப்பட்ட, அவர் அருளின பரிபூரணமான வழியாகும். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.

தேவன் தமது வார்த்தையைக் குறித்துத் தமது சிந்தையை எப்போதாவது மாற்றிக்கொள்கிறாரா? இல்லை. அவருக்கு ஒரு பரிபூரண சித்தமும், அனுமதிக்கும் சித்தமும் உண்டு. மணவாட்டி அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். தேவனிடமிருந்தே நேரடியாக அவருடைய சத்தத்தைக் கேட்பதை விடப் பரிபூரணமான சித்தமோ, பரிபூரணமான இடமோ வேறு எதுவும் இல்லை.

ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தம் நமக்குத் சுத்தமான வார்த்தையைக் கொண்டு வருவதைக் கேட்க, எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் இதுவே என்னுடைய அழைப்பாய் உள்ளது. ஊகிக்கத் தேவையில்லை, சும்மா உட்கார்ந்து ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்லுங்கள்... இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலமேயன்றி வேறெந்த இடத்திலும் அது செய்யப்பட முடியாது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்.

 

செய்தி: 65-0418E — தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா?

நாம் பத்தி 61-லிருந்து தொடங்குவோம்.

 

செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யாத்திராகமம் 19-ஆம் அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி.மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17-ஆம் அதிகாரம்

 

 

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, 65-0418M இது சூரிய உதயம் என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெஃபர்சன்வில் நேரப்படி காலை 9:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பாகும்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

தொடர்புடைய சேவைகள்
சனி, 4 ஏப்ரல், 2026

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, 57-0420 கல்லறையிலிடுதல் எனும் செய்தியைக் கேட்போம். இது ஜெஃபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பாகும், ஆனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், உங்கள் குடும்பத்தின் நேர அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்கலாம்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

தொடர்புடைய சேவைகள்
வெள்ளி, 3 ஏப்ரல், 2026

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, 57-0419 பரிபூரணம் எனும் செய்தியைக் கேட்போம். இது ஜெஃபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பாகும், ஆனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், உங்கள் குடும்பத்தின் நேர அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்கலாம்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

தொடர்புடைய சேவைகள்
செவ்வாய், 31 மார்ச், 2026

அன்புள்ள இராஜ்யத்தின் சக பிரஜைகளே,

இந்த ஈஸ்டர் மணவாட்டிக்கு இதுவரை எப்போதும் இருந்து வந்ததிலேயே மகத்தான ஈஸ்டராக இருக்கும் என்று வாக்களிக்கிறது. நாம் குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து, முதிர்ச்சியடைந்து, நாம் யார் என்பதை அடையாளங் கண்டு கொள்கிறோம். அவருடைய வார்த்தையும், அவருடைய சத்தமும், கழுகு கழுகுக்கு உரக்கக் சத்தமிட்டு, நம்மை நமது கலியாண விருந்துக்கு அழைக்கிறபோது, இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வெளிப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில், மணவாட்டி வரவிருக்கும் ஈஸ்டர் வார இறுதியை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கிறாள். அவர் உயிர்த்தெழுந்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஜீவித்துக் கொண்டிருப்பதால், அவர் உலகெங்கிலும் உள்ள நம்மை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைத்து, அவரை ஆராதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும், அவரைத் துதிக்கவும் செய்வார். மணவாளனும் மணவாட்டியும் ஒன்றாக ஆகிறார்கள்.

நம்மைச் சுற்றியுள்ள உலக காரியங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, அவருடன் மட்டும் நேரத்தைச் செலவிட அவர் இந்த விசேஷமான நேரத்தை நமக்குத் அளித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் நமக்கென ஒரு உலகத்தை உருவாக்கும்போது, இவ்வுலகின் கவனச்சிதறல்கள் எதுவும் வேண்டாம். நம்முடைய கதவுகளை மூடி, நம் மின்னணு சாதனங்கள் அனைத்தையும், அவரிடமிருந்து நம்முடைய கவனத்தைத் திசை திருப்பும் எதையும் அணைத்துவிடுவோம்.

நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிக மகத்தான வாஞ்சை, அவருக்கு இன்னும் நெருக்கமாக இருப்பதேயாகும். நாம் அவருக்காக இன்னும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்: எப்போதும் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். அவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருக்க விரும்புகிறோம். இந்த உலகத்திலோ, அல்லது நம்முடைய ஜீவியத்திலோ, இதைவிட முக்கியமானது ஒன்றுமில்லை.

அவருடன் நேரத்தை செலவிடவும், அவருடன் பேசவும், அவர் பேரில் தியானிக்கவும் அவர் நமக்கு இந்த விசேஷமான சந்தர்ப்பத்தை அளித்துள்ளார். அவருடைய பிரசன்னத்தில் பிரவேசிக்க, நம்முடைய இருதயங்களை அவருக்குத் திறக்க வேண்டும். இது அவருடைய மணவாட்டியின் ஜீவியத்தை மாற்றுமே!

குழந்தைகள், குடும்பம் மற்றும் பிற கடமைகளுடன் உங்களில் சிலருக்கு இது கடினமாக இருக்கலாம் என்பதை அவர் அறிவார், ஆனால், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ஓய்வு வினாடியையும் அவருடன் பேசவும், அவருக்கு இன்னும் நெருக்கமாக வரவும், நம்முடைய இருதயங்களை அவருக்குத் திறக்கவும் நாம் பயன்படுத்தினால், நாம் முன்பிருந்ததைப் போல ஒருபோதும் இல்லாமலிருக்குமளவிற்கு, அவருடனான நம்முடைய சஞ்சரிப்பில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்.

மோசேயின் நாளில், அவர் தம்முடைய பிள்ளைகளை அவர்களுடைய வீடுகளுக்குள் கொண்டு வந்தபோது, இரத்தம் பூசப்பட்டு, அவர்கள் தங்கள் யாத்திரைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது போல, அவர் ஆயத்தப்படுத்தியிருக்கும் இந்த விசேஷமான ஈஸ்டர் வார இறுதியும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

 

வியாழக்கிழமை

இஸ்ரவேல் புத்திரர் வெளியேறுவதற்கு முன்பு, பாஸ்கா பண்டிகையை நினைவுகூரும் விதமாக, கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனத்தை வியாழக்கிழமை இரவு உண்டார். நமது புனிதமான வார இறுதிக்கு முன்பு, நம்முடைய வீடுகளில் கர்த்தருடன் ஐக்கியமாகி, நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படியும், நமது பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்படியும் அவரிடம் கேட்க நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது!

பரலோகத் பிதாவே, நித்தியத்திற்கு இந்த பக்கத்தில், மீண்டும் ஒருமுறை நாங்கள் ஒன்றாகக் கூடிவரும் இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், வரவிருக்கும் பயணத்திற்கு எங்களுக்குத் தைரியம் அளிப்பதற்காக, உம்மிடமிருந்து வரும் பெலத்தின் புதுப்பித்தலுக்காக இன்று காலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். எபிரெயப் பிள்ளைகள் அதிகாலையில், இரவு முழுவதும் தங்களுக்கு வழங்கப்பட்ட மன்னாவைப் பெற்று, வரவிருக்கும் நாள் முழுவதும் தங்களைத் தாங்குவதற்காகக் கூடிவந்தது போல, நாங்களும் கூடிவந்திருக்கிறோம். இந்தப் பயணத்திற்கு எங்களுக்குப் பெலத்தை அளிக்க, இன்று காலை நாங்கள் ஆவிக்குரிய மன்னாவுக்காகக் கூடிவருகிறோம்.

நாம் அனைவரும் மாலை 6:00 மணிக்குத் துவங்கி, உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில் இராப்போஜனம் 62-0204-என்ற செய்தியைக் கேட்போமாக, பின்னர் அந்த ஒலிநாடாவின் முடிவிலே, தீர்க்கதரிசி நம்மை நமது விசேஷ இராப்போஜனத்திலிருந்து மற்றும் பாதங்களைக் கழுவும் ஆராதனைக்குள் அழைத்துச் செல்வார். இந்த ஆராதனை லைஃப்லைன் செயலியில் (ஆங்கிலத்தில்) ஒலிபரப்பப்படும், அல்லது கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் இந்த ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

வெள்ளிக்கிழமை

நாம் காலை 9:00 மணிக்கும், பின்னர் மீண்டும் மதியம் 12:00 மணிக்கும் நம்முடைய குடும்பங்களுடன் ஜெபத்திற்குச் செல்வோமாக. நாம் நம்மை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, கர்த்தர் நம்முடன் இருந்து, பரிசுத்த ஆவியானவரால் நம் வீடுகளை நிரப்பும்படி அவரை அழைப்போம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வாரியில் நடந்த அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்குவதைக் காண்போமாக. நமக்காக அவர் செலுத்திய மகத்தான கிரயத்தை நாம் நினைவுகூருவோமாக. அவர் பாவமற்ற தேவனுடைய குமாரனாக இருந்தார், ஆனால் வேறு எந்த மனிதனும் அனுபவிக்க முடியாத அளவுக்கு அவர் துன்பப்பட வேண்டியிருந்தது, ஏனென்றால் நம்முடைய பாவங்கள் அவர்மேல் சுமத்தப்பட்டன.

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்ததால், அவரை நரகத்திற்கு ஆக்கினைக்குட்பட்டவராக அனுப்ப வேண்டியிருந்தது (புரிகிறதா?), கிறிஸ்து நீதிமானாக மரிக்கவில்லை; கிறிஸ்து ஒரு பாவியாக மரித்தார். பார்த்தீர்களா? கிறிஸ்து தாமே ஒருபோதும் பாவம் செய்யவில்லை, ஆனால் அவர் நம்முடைய பாவங்களைத் தம்மேல் சுமந்தார்.

பின்னர் மதியம் 12:30 மணிக்கு, நம்முடைய வீடுகளில் நாம் ஒன்றுகூடி, 57-0419 பரிபூரணம் என்ற செய்தியைக் கேட்போமாக.

பின்னர், ஆராதனை முடிந்தவுடன், நம் கர்த்தருடைய சிலுவையேற்றத்தை நினைவுகூரும் விதமாக, நாம் அனைவரும் மீண்டும் ஜெபத்தில் ஒன்றுகூடுவோமாக.

 

சனிக்கிழமை

காலை 9:00 மணிக்கும் மதியம் 12:00 மணிக்கும் நாம் அனைவரும் மீண்டும் ஜெபத்தில் ஒன்றுகூடுவோமாக, மேலும் நம் மத்தியில் அவர் நமக்காகச் செய்யப்போகும் மகத்தான காரியங்களுக்காக நம்முடைய இருதயங்களைத் ஆயத்தப்படுத்துவோமாக.

அவர், “சாத்தானே, இங்கே வா!” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் இப்பொழுது எஜமானாயிருக்கிறார். சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய அந்தத் திறவுகோலை அவர் தம்முடைய கரம் நீட்டி பற்றிப் பிடிக்கிறார். “நான் உனக்கு முன்னறிவிப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீ இவ்வளவு காலம் முழுமையாக பொய்யுரைத்து ஏமாற்றி வந்தாய், நான் ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரனாயிருக்கிறேன். என்னுடைய இரத்தம் இன்னமும் சிலுவையில் ஈரக்கசிவோடு உள்ளது. முழு கடனும் செலுத்தப்பட்டாயிற்றே! உனக்கு இனிமேல் எவ்வித உரிமையுமே கிடையாது. நீ துகிலுரியப்பட்டிருக்கிறாய். அந்தத் திறவுகோல்களை என்னிடம் கொடு!” என்கிறார்.

பின்னர் மதியம் 12:30 மணிக்கு, நாம் அனைவரும் ஒன்றுகூடி 57-0420 கல்லறையிலிடுதல் என்ற செய்தியின் வார்த்தையைக் கேட்போமாக.

உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாட்டிக்கு இது எவ்வளவு ஒரு மறக்க முடியாத முக்கிய நாளாக அமையப்போகிறது.

பின்னர், ஆராதனை முடிந்தவுடன் நாம் மீண்டும் ஜெபத்தில் இணைவோமாக.

 

ஞாயிறு

சகோதரன் பிரான்ஹாமின் சிறிய நண்பனான ராபின் பறவை, அதிகாலை 5:00 மணிக்கு அவரை எழுப்பியபோது, அவர் அதிகாலையில் எழுந்தது போல, நாமும் முதலில் அதிகாலையில் எழுவோமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோமாக:

இன்று காலை ஐந்து மணிக்கு, ஒரு சிவப்பு மார்புடைய என் சிறிய நண்பன் ஜன்னலுக்கு அருகே பறந்து வந்து என்னை எழுப்பியது. "அவர் உயிர்த்தெழுந்தார்" என்று சொல்லும்போது, அதன் சிறிய இருதயம் வெடித்துவிடும் போலத் தோன்றியது.

காலை 9:00 மணிக்கு, நாம் மீண்டும் நம்முடைய சங்கிலி ஜெபத்தில் இணைந்து, ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்க நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.

காலை 9:30 மணிக்கு, 65-0418M இது சூரிய உதயம் என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்றுகூடுவோமாக.

மதியம் 12:00 மணிக்கு உயிர்ப்பிக்கும் வல்லமைக்காக அவருக்கு நன்றி செலுத்தி, நாம் நம்முடைய சத்தங்களை அவரிடம் உயர்த்துவோமாக.

மாலை 3:00 மணிக்குஅவரோடும், உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டியோடும் அவர் நமக்கு அளித்த இந்த அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி செலுத்தி, நாம் மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் இணைவோம்.

வெளிநாட்டில் உள்ள என் சகோதர சகோதரிகளே, கடந்த ஆண்டைப் போலவே, இந்த அட்டவணையில் உள்ள அனைத்து ஜெப நேரங்களிலும் ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் இணைய உங்களை அழைக்க விரும்புகிறேன். இருப்பினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை மதியம் ஜெபர்சன்வில் நேரப்படி ஒலிநாடாக்களை இயக்குவது உங்களில் பலருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்தச் செய்திகளை இயக்க தயங்க வேண்டாம். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நமது ஞாயிறு செய்தியை ஒன்றாகக் கேட்க நாம் அனைவரும் ஒன்று சேர விரும்புகிறேன்.

மேலும், உங்கள் முழு குடும்பமும் ஒன்றாக அனுபவிக்கக்கூடிய படைப்புகள் திட்டங்கள், நாட்குறிப்பு எழுதுதல் மற்றும் சமையல் குறிப்புகளில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறேன். அவை யாவும் இந்த வார இறுதியில் நாம் கேட்கப்போகும் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

வார இறுதி நிகழ்ச்சி நிரல், இராப்போஜன ஆராதனைக்குத் தயாராவதற்கான தகவல்கள், படைப்புகளின் திட்டங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

புகைப்படங்கள் எடுப்பதற்கும், அனுதின மேற்கோளைக் கேட்பதற்கும், செய்தித் தொகுப்பு என்ற டேபிள் செயலி, லைஃப்லைன் செயலி அல்லது பதிவிறக்கக்கூடிய இணைப்பிலிருந்து ஒலிநாடாக்களை இயக்குவதற்கும் தவிர, ஈஸ்டர் வார இறுதியில் நமது தொலைபேசிகளை அணைத்து வைப்போம்.

உலகெங்கிலும் உள்ள மணவாட்டியின் துணையுடன், ஆராதனை, துதி மற்றும் சுகமளித்தல் நிறைந்த ஒரு வார இறுதிக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஒன்றுகூட அழைப்பது எனக்குப் பெரும் பாக்கியமாகும். இது உங்கள் ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் ஒரு வார இறுதி என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


ஆராதனை ஒலிநாடா

ஈஸ்டர் வார இறுதிக்கான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இராப் போஜனம் / பாதங்களைக் கழுவும் ஆராதனை, இந்தப் பதிவிறக்கத்தின் ஒரு பகுதியாகும்.

வியாழக்கிழமை- மாலை 6:00 மணி (உள்ளூர் நேரம்)

62-0204
இராப்போஜனம் (விசேஷித்த இராப்போஜனமும் & பாதங்களைக் கழுவும் ஆராதனையும்)
1 மணி 51 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு


வெள்ளிக்கிழமை - பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)

57-0419
பரிபூரணம்
1 மணி 16 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு


சனிக்கிழமை- பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)

57-0420
கல்லறையிலிடுதல்
1 மணி 4 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு


ஞாயிறு- காலை 9:30 (ஜெஃபர்சன்வில் நேரம்)

65-0418M
இது சூரிய உதயம்
2 மணி 25 நிமிடங்கள் ஆராதனை பார்வைக்கு
தொடர்புடைய சேவைகள்