அன்புள்ள நெஞ்சார நேசிக்கப்பட்ட மணவாட்டியே,
நேரம் கடந்துவிட்டது. காலம் சமீபித்துவிட்டது. தீர்மானமானது எடுக்கப்பட வேண்டும். தேவன் தம்முடைய பிள்ளைகளை எச்சரித்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய தேவனாகிய கர்த்தர், தம்முடைய வார்த்தையினாலும், தம்முடைய ஆவியினாலும், தம்முடைய சத்தியம் என்னவென்று நமக்கு அறிவித்து, அதை ரூபகாரப்படுத்தியிருக்கிறார். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும், உம்முடைய வசனமே சத்தியம்.
இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவர் இன்றைக்கு மணவாட்டிக்கு முழுமையாக ரூபகாரப்படுத்தியிருக்கிறார். இந்த நேரத்தின் செய்தியும், செய்தியாளனும் ஒருவரே என்பதை அவர் நமக்குக் காண்பித்து வெளிப்படுத்தியுள்ளார். வார்த்தையில் மறைக்கப்பட்டிருந்த தம்முடைய எல்லா இரகசியங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தம்முடைய பரிசுத்த ஆவியினால் அதை நமக்கு நிரூபித்துள்ளார். நம்முடைய மனதிலோ, இருதயத்திலோ, அல்லது ஆத்துமாவிலோ எந்தக் கேள்வியும் இல்லை. ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய சத்தம் அவருடைய மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகவே உள்ளது.
தேவன் தம்மிடம் வருவதற்கு எப்போதும் பல வழிகளை அனுமதித்திருக்கிறார். அவர் தம்முடைய பரிபூரண சித்தத்திற்காகத் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை அமைத்துக்கொள்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளுக்காக எப்போதும் ஒரு பரிபூரண சித்தத்தையும், பரிபூரண வழியையும் அருளியிருக்கிறார். பலர் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு மாறாக, அவருக்கு ஊழியம் செய்வதன் மூலம் வேறு வழியில் வர முயற்சிக்கிறார்கள். அது அவருடைய பரிபூரண சித்தம் போலத் தோன்றலாம், ஆனால் அது அவருடைய வார்த்தையின்படி இல்லை.
தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வந்த, புதிதாக அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு பெரிய மனிதர் கூட, தேவனுக்காக ஏதாவது செய்ய ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார், அதைச் செய்ய விரும்பினார்; ஆனால் அவர் பெற்ற வெளிப்பாடு தவறானதாயிருந்தது.
நம்மில் ஒவ்வொருவரும் அவர் அருளின பரிபூரண வழியைக் கண்டறிய வேண்டும். தேவனுடைய பிரசன்னத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டுடன் புதிதாக வந்த, உண்மையாகவே அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவர் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறார் என்றால், நாமும் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது?
நிச்சயமாக அறிந்துகொள்ள ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது, தேவன் அந்த வழியைத் தம்முடைய மணவாட்டிக்காக அருளியுள்ளார்.
தேவனுடைய சத்தமே இந்தச் சபைக்கும், ஒலிநாடாக்களில் உள்ள உங்கள் அனைவருக்கும், உலகின் பிற பகுதிகளில் உள்ள இணைப்புகளில் உள்ள மக்களுக்கும், அப்போதும் இப்போதும் சொல்லியிருக்கிறது. அவர் கூறிக் கொண்டிருந்ததை மிகவும் கவனமாகக் கேட்கும்படியும், நாம் தோல்வியடையக் கூடாது என்றும் அவர் நமக்குக் கூறினார்.
ஆகையால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் இவ்வாறு கூறுகிறேன்: இதனுடன் எதையும் கூட்டாதீர்கள், எதையும் எடுத்துப் போடாதீர்கள், உங்கள் சொந்தக் கருத்துக்களை இதனுள் புகுத்தாதீர்கள்; அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே நீங்கள் சொல்லுங்கள்; தேவனாகிய கர்த்தர் செய்யும்படி கட்டளையிட்டதை அப்படியே செய்யுங்கள்; இதனுடன் எதையும் கூட்டாதீர்கள்!
பிரசங்கிமார்கள் வார்த்தையைப் பிரசங்கிக்கக்கூடாது என்றோ, போதகர்கள் வார்த்தையைப் போதிக்கக்கூடாது என்றோ, அல்லது மேய்ப்பர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் தாங்கள் அழைக்கப்பட்ட ஊழியத்தைச் செய்யக்கூடாது என்றோ அவர் கூறவில்லை; அவ்வாறு செய்வது தவறு என்றும் அவர் கருதவில்லை. அவர்கள் அதைச் செய்தே ஆகவேண்டும்; நானும் அதைச் செய்தே ஆகவேண்டும். அவ்வாறு செய்வதற்கென்றே நாம் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மக்களுக்கு இந்தச் செய்தியையும், இந்தச் செய்தியாளரையும் சுட்டிக்காட்டி, மேற்கோள் காட்ட வேண்டும், ஏனெனில், இதுவே நம்முடைய காலத்திற்கான வார்த்தையாகும்.
ஆனால், நாம் அனைவரும் அபிஷேகம் பெற்றவர்களாகவும், அதுவும் உண்மையான அபிஷேகம் பெற்றவர்களாகவும், அவருடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாகவும், மாசுபடாத வெளிப்பாடுகளைப் பெற்றவர்களாகவும் இருந்தபோதிலும், அவருடைய சித்தத்திற்குப் புறம்பாகச் செயல்படக்கூடும் என்று அவர் நமக்குத் தெளிவாகக் கூறுகிறார். நம்முடைய நாளில், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது தேவனுடைய சத்தம்தான் என்பதையும், அதுவும் தேவன்தாமே நேரடியாகப் பேசும் சத்தம்தான் என்பதையும், நிச்சயமாக அறிந்துகொள்வதற்கு அவர் ஒரு பூரணமான வழியை அருளியிருக்கிறார். அது மாத்திரமே பூரணமான வழியாகும்.
ஊழியமானது இந்தச் செய்தியை மேற்கோள் காட்டிப் பிரசங்கிப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அந்த ஒலிநாடாக்கள் வாயிலாக ஒலிக்கும் தேவனுடைய சத்தத்தையே நாம் மக்களுக்குக் கேட்கச் செய்ய வேண்டும். தேவனுடைய சத்தத்தைத் தங்கள் காதுகளால் கேட்பதைவிடச் சிறந்த மகத்தான அபிஷேகம் வேறெதுவும் இல்லை. நாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியாக தேவன் கூறிய வார்த்தைகளேதான் என்பதை சற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துகொள்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை.
உலக வரலாற்றின் வேறெந்தக் காலத்திலும் இல்லாத வகையில், நம்முடைய இந்தக் காலத்தில் தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். நீங்கள் அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாக இருப்பீர்களேயானால், இந்த வழியைத் தவறவிடுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். இது தேவனுடைய சத்தம் தாமே தம்முடைய சபையினிடத்தில் நேரடியாக பேசுவதாக இருக்கும்படிக்கு அக்கினி ஸ்ம்பத்தினால் தாமே ரூபகாரப்படுத்தி, வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக, தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய சத்தத்தைத் தாங்களே கேட்க ஏங்கித் தவித்திருக்கிறார்கள். இயேசு மலையில் ஆயிரக்கணக்கானோருக்குப் பிரசங்கம் செய்த அந்த நாளில், தாங்களும் அங்கே இருந்திருக்க வேண்டும் என்று அவர்கள் எவ்வளவு ஆசைப்பட்டார்கள். எப்படியாய் அவர் தமது வார்த்தையை அன்போடும் இரக்கத்தோடும் பேசியதைக் கேட்கவே. எப்படியாய் அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்ததைக் கேட்கவே. அது அவர்களுடைய இருதயங்களில் பேசி, அவர்களை உற்சாகப்படுத்தியதைக் கேட்கவே.
நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம், தேவனுடைய பிரசன்னத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
மிக விரைவில் ஒரு நாள் நாம் மீண்டும் இந்த வகையான வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோம். நாம் ஒரு அழியாத ஜீவனாகத் திரும்புவோம். பாவம் ஒழிக்கப்படும். சாத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கட்டப்படுவான், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுத்திருந்த இந்தப் பூமியில் நாம் ஜீவிப்போம்.
நாம் 100% பூரணமானவர்கள். நம் வாழ்வில் நாம் இவ்வளவு மகிழ்ச்சியாகவோ அல்லது சந்தேகத்திற்கு இடமின்றியோ இருந்ததில்லை. நாம் அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் ஒன்றானவர்கள். நாமே அவருடைய வார்த்தை. அவருடைய சத்தத்தோடும், அவருடைய வார்த்தையோடும் நிலைத்திருப்பதன் மூலம், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம். நம்மைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர் எந்த நாளிலும் திரும்பி வருவார்.
கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி!
சத்தியம் என்னவென்று உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு அறிவித்திருக்கிறார். உங்கள் தேவனாகிய கர்த்தர், தம்முடைய வார்த்தையினாலும் தம்முடைய ஆவியினாலும் சத்தியத்தை ரூபகாரப்படுத்தியிருக்கிறார், “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” மேலும், ஆவியானவர், “ஆவியிலும் சத்தியத்திலும் தம்மை ஆராதிப்பவர்களை தேவன் தேடுகிறார்.” “உம்முடைய வசனமே சத்தியம்.” இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்பதை அவர் முழுமையாக ரூபகாரப்படுத்தியிருக்கிறார். அவர் உங்களுக்கு சாயங்கால வித்துக்களை காண்பித்திருக்கிறார். அவர் அதை உங்களுக்கு வார்த்தையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அதை உங்களுக்கு தம்முடைய ஆவியினால் நிரூபித்திருக்கிறார்.
தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் 65-0718M என்ற செய்தியை அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் நமக்கு கொண்டு வந்து அவருடைய சத்தத்தின் மூலமாகப் பேசுவதை கேட்கும்படிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து நாங்கள் ஒன்றுகூடும்போது, அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியாக நீங்கள் ஒவ்வொருவரும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு நான் என் முழு இருதயத்தோடும் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
உபாகமம் 4:1-4 / 4:25-26
1 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரி.மாற்கு 7:7
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 3
பரி.மத்தேயு 11:1-15
1 கொரிந்தியர் 13:1
அன்புள்ள தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியே,
மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதல் என்ற இந்தச் செய்தியை நாம் கேட்கும்போது, ஒருவன் தனக்கு மனைவியாக இருக்க விரும்பும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்போது, அவளிடம் காண வேண்டிய குணநலன்களையும் தகுதிகளையும் பற்றி தீர்க்கதரிசி வெறுமனே பேசி நமக்கு அறிவுறுத்துகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். அது உண்மைதான், அவர் அப்படித்தான் செய்கிறார், ஆனால் அவருடைய வார்த்தைகளில் ஒரு உண்மையான மறைக்கப்பட்ட அன்பின் மடல் இருக்கிறது. அவர் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அதைவிட மிகவும் ஆழமானது. தேவன் அவளிடம் நேரடியாகப் பேசிக் கொண்டும், அவளிடம் அவர் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்றும், ஏன் ஆரம்பத்திலிருந்தே அவளைத் தெரிந்து கொண்டார் என்றும் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அவளைத் தம்முடைய அன்பான, இனிமையான மணவாட்டியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அவள் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார், அவளுடன் தம்முடைய நித்தியத்தைப் பகிர்ந்துகொள்ளவும் அவர் விரும்பினார்.
ஆதியிலே, தேவன் தம்முடைய அதே குணநலன்களைக் கொண்ட ஒரு மணவாட்டியைத் தேடிக்கொண்டிருந்தார். தம்முடைய அதே ஆவி அவளுக்குள் வெளிப்பட வேண்டும். தம்முடைய சிந்தையே அவளுக்குள் இருக்கும் வரை, தமக்கும் தம்முடைய வாக்குத்தத்த வார்த்தைக்கும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மணவாட்டியை அவர் விரும்பினார். அவரைப் போலவே அவளும் வடிவமைக்கப்பட வேண்டும்.
அவள் அவருடைய அதே மாம்சமும், அதே எலும்புகளும், அதே ஆவியும், ஒவ்வொரு காரியமும் அதே விதமாகவே, அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் இருவரும் ஒன்றாவார்கள்.
அவள் கண்களில் எந்த வெறித்தனமான பார்வையும் கொண்டிருக்க மாட்டாள். அவள் வேறு எந்தச் சத்தத்துடனும் சரசமாடமாட்டாள். யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவள் அவருக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பாள். அவள் அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வாள். அவர் என்ன சொன்னாலும், அது நிறைவேற எவ்வளவு காலம் எடுத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பாள். அவள் அதை விசுவாசிப்பாள். அவள் அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பாள்.
அவள் அவரை, அவரை மட்டுமே நேசிப்பாள். அவர் அவளுக்குப் மகத்தான ஐஸ்வரியங்களை கொடுத்திருக்க வேண்டியதில்லை, அவளிடம் விலையுயர்ந்த முத்து, அதாவது அவரைப் பற்றிய உண்மையான வெளிப்பாடு இருந்தது. அவர்கள் இருவரும் ஒன்றே என்பதை அவள் அறிவாள். அவருடைய ஆவி அவளுக்குள் வாசம் செய்யும். அவளுக்கு என்ன தேவையோ, அதை அவர் அவளுக்குக் கொடுப்பார்; அவள் செய்ய வேண்டியதெல்லாம் கேட்டு விசுவாசிப்பது தான், அவர் அதைச் செய்வார்.
அவள் விரும்பும் விதத்திலும், அவள் ரசனைக்கேற்பவும் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வீட்டை அவளுக்காகக் கட்டுவதற்கு அவர் நீண்ட காலமாக சென்றிருப்பார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் விரும்பும் விதத்திலேயே அவர் அதைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் வாக்களித்தபடியே, ஒரு நாள் அவளுக்காகத் திரும்பி வருவார் என்றும், அப்போது அவர்கள் ஆயிர வருடங்களுக்கான ஒரு மகத்தான கலியாண விருந்தை உடையவர்களாயிருப்பார்கள் என்றும் அவள் அறிந்திருந்தாள். பின்னர், நித்தியத்தைக் கழிப்பதற்காக அவர் அவளுக்காகக் கட்டிய அந்த அழகான இல்லத்திற்கு அவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.
வேறு எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. அவள் வேறு எதையும் விரும்பமாட்டாள். அவர் யார், அவள் யார் என்பதை அறிந்த அந்த வெளிப்பாட்டைப் பெற்றதில் அவள் மிகுந்த திருப்தியும் மனநிறைவும் அடைவாள். அவர் தமது வார்த்தையைக் காத்துக் கொள்வார் என்பதை அவள் அறிவாள். அவர் தம்முடைய மணவாட்டியாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவள் அவள்தான் என்பதை அறிந்து அவள் நிறைவடைவாள்.
என்னுடைய சகோதர சகோதரிகளே, நித்தியத்தினூடாக நோக்கிப் பார்க்கும் வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய சர்வவல்லமையுள்ளவர் நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட இனிய மணவாட்டியாக இருக்க வேண்டுமென்றுஅவர் உங்களைத் தெரிந்து கொண்டுள்ளார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, தம்முடைய பலமுள்ள தூதன் மூலமாக அவர் பேசி, நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாய் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்லும்போது, என்னுடனும் அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினருடனும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-0429E / மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதல்
நேரம்: பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்
வேதவசனங்கள்:
ஆதியாகமம் 24:12-14
ஏசாயா 53:2
வெளிப்படுத்தின விசேஷம் 21:9
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள உயிர்ப்பிக்கப்பட்டவர்களே,
இந்த ஈஸ்டர் வார இறுதியில் நம்முடைய இருதயங்கள் கழுகுகளைப் போலப் பறந்தன. நாளுக்கு நாள், அவருடைய அபிஷேகம் மகத்தானதாகிக்கொண்டே போனது. இராப்போஜனம், அடக்கம், பரிபூரணம், பின்னர் அவர் நம்மை ஆயத்தப்படுத்தியிருந்த அந்த மாபெரும் உச்சக்கட்டம்: இது சூரிய உதயம்...மகிமை, அவர் உயிர்த்தெழுந்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிரோடு இருக்கிறார். நாம் இதற்கு முன் கேட்டிராத விதத்தில் அவர் தம்முடைய வார்த்தையை நம் ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அபிஷேகம் நம்முடைய இருதயங்களை நிரப்பியது, அவருடைய பிரசன்னம் நிரம்பி வழிந்தது; ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் நெருங்கிவிட்டது போலத் தோன்றியது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதையும், பின்னர் 2026-ல் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவர் நமக்குச் சொன்னார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட தேவனுடைய முதல் கோதுமை மணி இயேசுவே. அவர் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையால் உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தார். தேவன் அவருடைய ஜீவனை உயிர்ப்பித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், மேலும் அவரே அந்த நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். முதிர்ச்சியடைந்த முதல் நபர் அவரே; நம்மில் மற்றவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன், தேவனுக்கு நன்றி செலுத்தும் நினைவாக அசைவாட்டப்பட்ட தேவனுடைய கதிர்க்கட்டு அவரே. அது ஒரு அடையாளமாக இருந்தது.
பின்னர் இன்று என்ன சம்பவித்துள்ளது என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்தினார். பெந்தேகோஸ்தே நாளில், வானத்திலிருந்து அசைவாட்டுவது போன்ற ஒரு சத்தம் வந்தபோது, ஜனங்கள் மீது ஒரு பலத்த காற்று வீசியது போல, அவர் அசைவாட்டப்பட்டார். மீண்டும் ஜனங்களுக்கு முன்பாக அசைவாட்டப்பட்டவிதமாக, லூக்கா 17:30 மற்றும் மல்கியா 4-ல் அவர் வாக்களித்தபடியே, மனுஷ கு-மா-ர-ன் வெளிப்படுத்தப்படும்போது, ஜனங்கள் மீது மீண்டும் அசைவாட்டப்படும்.
இப்பொழுது, மனுஷகுமாரன் யார்? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” நாம் பெற்றுள்ள எல்லா உபதேசங்களும், தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுத்துதலும்; தேவனுடைய வார்த்தையினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், நாம் மேற்கோள் காட்டியபடி, அதை இங்கே லூக்காவின்—புத்தகத்தில், அல்லது லூக்கா 17-ம் அதிகாரம் 30-ம் வசனம்; மல்கியா 4-ம் அதிகாரத்தையும், நாம் அறிந்திருக்கிற வெவ்வேறு வேத வாக்கியங்களையும், அந்த வார்த்தை மீண்டும் ஜனங்களின் மேல் அசைவாடப்படுகிறது என்றும், மரித்துப்போன மனிதனின் பாரம்பரியங்கள் மரித்துவிட்டன என்றும், தேவனுடைய குமாரன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நமக்கு மத்தியிலே மீண்டும் உயிரோடிருந்து, நமக்கு ஜீவனை அளித்துக் கொண்டிருக்கிறார் என்றும், இன்றைக்கு நாம் காண்கிறோம்.
பரிசுத்த ஆவியானவர் நம்மேல் தொடர்ந்து அசைவாடிக் கொண்டே, அசைவாடிக் கொண்டே இருந்தார், தமது வார்த்தையை வெளிப்படுத்தி, வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்... இயங்கு சக்தியாய், இயக்கவியலாய், உயிர்ப்பிக்கும் வல்லமையாய்...
பின்னர், இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியபோது, அவர் நம்மிடம் கூறினார்:
அவர் என்னை திரைக்குப் பின்னால் காணும்படி செய்தார், நான் உங்கள் எல்லோரையும் அங்கே கண்டேன்… “நீ எப்போதும் நேசித்தவை, உன்னிடத்தில் அன்பு கூர்ந்த யாவும், அவைகள் உனக்கு அளிக்கப்படுகின்றன. பார்த்தீர்களா? அந்தவிதமாக அவர்கள் எல்லோரையும் நான் கண்டேன். அது என்னவாயிருந்தது? உயிர்ப்பிக்கும் வல்லமை.
அவர் நம்மை அங்கே கண்டார்!! காலத்தின் திரைக்கு அப்பால்…நாம் அவருடன் அங்கே இருந்தோம்; நமக்கு முன்பாகச் சென்ற நம் அன்புக்குரியவர்கள் அனைவரும்… தந்தையர்கள், தாய்மார்கள், பிள்ளைகள். நாம் அவர்களுடனும், நாம் ஒருபோதும் சந்திக்காத அனைவருடனும் அங்கே இருந்தோம்: மோசே, எலியா, பேதுரு, பவுல்…நாம் அனைவரும் ஒன்றாக அங்கே இருந்தோம்.
பின்னர், அவர் ஒரு அருமையான பரிசுத்த ஆவியானவர் என்பதால், நோய்வாய்ப்பட்ட, மனச்சோர்வுற்ற மற்றும் அடிபட்ட நம்மை அவர் மறக்க விரும்பவில்லை. எனவே, நமக்குத் தேவையான அனைத்திலிருந்தும் அனைவரும் குணமடைய வேண்டும் என்பதற்காக, அவர் மீண்டும் தம்மையே நம் மீது அசைவாட்டினார்.
இந்த ஜனங்கள், அவர்கள் இராஜ்ஜியத்தின் சக குடிமக்களாக, உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாக இருக்கிற, இவர்களுக்கு அதை இப்பொழுதே, கர்த்தாவே, உயிர்ப்பியும். ஆவியானவர் ஒரு கழுகிலிருந்து மற்றொரு கழுகுக்கு, வார்த்தையிலிருந்து மற்றொரு வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் ஒவ்வொரு சரீரங்களிலும் வெளிப்படும் வரை, சரீரப்பிரகாரமாகவோ, ஆவிக்குரிய பிரகாரமாகவோ, அல்லது அவர்களுக்கு எந்த தேவையிருந்தாலும், எங்களுடையடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்வராக.
அந்த வார்த்தை. அந்த சத்தம். மணவாட்டியே, நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியமும் அந்தப் ஒலிநாடாக்களில் உள்ளன. தேவன் தமது வார்த்தையைக் குறித்துத் தமது சிந்தையை மாற்றிக்கொள்வதில்லை. அதில் ஒரு சிறு புள்ளியோ அல்லது ஒரு சிறு எழுத்தோ மாற்றப்பட முடியாது, எனவே அவருடைய மணவாட்டி தங்களுடைய சொந்த செவிகளில் அவர் அவர்களுக்கு என்ன கூற விரும்பினாரோ அதை சரியாக கேட்கும் படிக்கு அவர் ஒரு வழியை உண்டு பண்ணினார்.
தேவன் நம்முடைய மணவாட்டியிடம் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது. மணவாட்டி மணவாளனிடம் வர வேண்டும்; அதுவே இன்றைய நாளுக்காக ஏற்படுத்தப்பட்ட, அவர் அருளின பரிபூரணமான வழியாகும். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
தேவன் தமது வார்த்தையைக் குறித்துத் தமது சிந்தையை எப்போதாவது மாற்றிக்கொள்கிறாரா? இல்லை. அவருக்கு ஒரு பரிபூரண சித்தமும், அனுமதிக்கும் சித்தமும் உண்டு. மணவாட்டி அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். தேவனிடமிருந்தே நேரடியாக அவருடைய சத்தத்தைக் கேட்பதை விடப் பரிபூரணமான சித்தமோ, பரிபூரணமான இடமோ வேறு எதுவும் இல்லை.
ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தம் நமக்குத் சுத்தமான வார்த்தையைக் கொண்டு வருவதைக் கேட்க, எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் இதுவே என்னுடைய அழைப்பாய் உள்ளது. ஊகிக்கத் தேவையில்லை, சும்மா உட்கார்ந்து ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்லுங்கள்... இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலமேயன்றி வேறெந்த இடத்திலும் அது செய்யப்பட முடியாது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
செய்தி: 65-0418E — தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா?
நாம் பத்தி 61-லிருந்து தொடங்குவோம்.
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யாத்திராகமம் 19-ஆம் அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி.மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17-ஆம் அதிகாரம்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, 65-0418M இது சூரிய உதயம் என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெஃபர்சன்வில் நேரப்படி காலை 9:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பாகும்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, 57-0420 கல்லறையிலிடுதல் எனும் செய்தியைக் கேட்போம். இது ஜெஃபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பாகும், ஆனால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், உங்கள் குடும்பத்தின் நேர அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்