அன்பான இயேசு கிறிஸ்துவின் குடும்பமே,
உலகம் முழுவதும் கிறிஸ்துவின் மணவாட்டியுடன் இதுவரை இல்லாத அளவுக்கு ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் கேள்விப்பட்ட மற்றும் பார்க்க விரும்பியுள்ள காரியங்கள் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசுத்த ஆவியானவர் செய்வதாக கூறினதுபோல தம்முடைய மணவாட்டியை, இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியான ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தின மூலமாக மாத்திரமே அவர் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.
முன்பு இல்லாத அளவுக்கு அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்திக்கொண்டும், உறுதிப்படுத்திக்கொண்டுமிருக்கிறார்.ஒரு ஆர்டீசியன் ஊற்றைப்போல, வெளிப்படுத்தல் நமக்குள்ளாகப் பொங்கிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது அவருடைய சபையில் நடந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது. அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே. அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து... அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தப்பட்டு நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசி கூறினது போலவே, காரியங்கள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன, நம்மால் அதைத் கணக்கு வைக்கக் கூட முடியவில்லை...மகிமை!!!
நமது நேரம் வந்துவிட்டது. வேதம் நிறைவற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாம்சம் வார்த்தையாக மாறிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசி நடக்கும் என்று. கூறியுள்ளது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஏன் நமக்குத்தானா?
புளித்த மா இல்லை, விளங்காத சத்தம் இல்லை, மனிதனுடைய வியாக்கியானம் நமக்கு மத்தியிலே தேவைப்படவில்லை. தேவன் உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறபோது அவருடைய வாயிலிருந்து வருகிற சுத்தமான பரிபூரண வார்த்தைக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது நாம் அதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையைக் காண்கிறோம், லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்கான இந்த மற்ற வாக்குத்தத்தங்களும் மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவைப்படுகிறதில்லை.
மணவாட்டி, அதைவிட எளிமையாக வேறு எதையும் தெளிவாகத் பெற்றுக்கொள்ள முடியாது. எல்லாம் நம்முடைய சொந்த கண்களினால் காணும்படிக்கு, தம்முடைய சொந்த வார்த்தையை பேசி வியாக்கியானித்து, அதை ஒலிநாடாக்களில் வைத்து, மானிட சரீரத்தில் தம்முடைய மணவாட்டிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிற அது தேவனாயுள்ளது. தேவனால் தாமே பரிபூரண வார்த்தையானது உரைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது, எனவே அதற்கு மனிதனின் எந்த வியாக்கியானமும் தேவையில்லை.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் நேரடியாக ஒலிநாடாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார்.
● தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை ஒலிநாடாக்களில் வியாக்கியானிக்கிறார்.
● தேவன் தம்மை ஒலிநாடாக்களில் வெளிப்படுத்துகிறார்.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உங்களுக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை என்று சொல்கிறார். என்னுடைய மணவாட்டிக்குத் தேவைப்படுகிறதெல்லாம் ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தையே.
நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் இங்கிருந்து சென்றபிறகு, பதரை விட்டுக் கடந்துபோக இப்போது ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் கோதுமை மணிக்குள் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் குமாரனுடைய சமூகத்தில் இருங்கள். நான் சொல்லியிருப்பவைகளோடு கூட்ட வேண்டாம். நான் சொல்லியிருப்பவைகளை எடுத்துப் போடவேண்டாம். ஏனென்றால் பிதா எனக்குக் கொடுத்திருக்கிறபடியே எனக்குத் தெரிந்திருக்கிற வரை நான் சத்தியத்தைப் பேசுகிறேன். புரிகிறதா?
தேவன் செய்யும்படி நமக்குக் கட்டளையிட்டபடி மணவாட்டி செய்வதற்கான ஒரே பரிபூரண வழியை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளார். இன்று வரை இது ஒருபோதும் சாத்தியமில்லை. யூகிக்கவோ, ஆச்சரியப்படவோ, ஏதாவது சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ அல்லது வியாக்கியானிக்கப்படவோ உள்ளதா என்ற கேள்வியே இல்லை. மணவாட்டிக்கு உண்மையான வெளிப்பாடு வழங்கப்பட்டுள்ளது: ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண வழியாய் உள்ளது.
ஒரு வேளை, நான் அதை மீண்டும் கூறட்டும். என்னுடைய வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கேயன்றி, மற்றவர்களுக்கு அல்ல. மணவாட்டிக்கு ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் தேவையில்லை.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருமுறை உண்மையாகவே... அசலான வார்த்தை (வார்த்தை, இயேசு) உங்களுக்குள் வருகிறது, அப்போது, சகோதரனே... செய்தியானது அப்போது உங்களுக்கு இரகசியமாய் இருப்பதில்லை, நீங்கள் அதை அறிவீர்கள், சகோதரனே, அதெல்லாம் உங்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி எனக்கு இரகசியமல்ல. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். எல்லா வானங்களும் பூமியும் இயேசு என்று அழைக்கப்படுகின்றன. இயேசுவே வார்த்தை.
நாமமானது வார்த்தையில் இருக்கிறது. ஏனெனில் அவரே வார்த்தையாக இருக்கிறார். ஆமென்! அப்படியானால் அவர் என்னவாக இருக்கிறார்? வியாக்கியானிக்கப்பட்ட வார்த்தையே தேவனுடைய நாமத்தின் வெளிப்படுத்தலாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து ஒரே குழுவாக கொண்டு வரும்படியாக இன்றைக்கான தம்முடைய சத்தத்தை அவர் ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்துள்ளதன் மூலம் அவருடைய மனவாட்டியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து கொண்டு வரக்கூடிய ஒரே வழியாக இருப்பதை மணவாட்டி பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறாள்.
அவர் இன்று அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்பதைக் காண்பிக்க 60 ஆண்டுகளுக்கு முன்பு அதைச் செய்தார். நாம் "ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அவருடைய சபைகளில் ஒன்றில் இருக்கிறோம்."
நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களிலும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.
பல ஊழியர்கள் தங்களுடைய சபைகளில் "இணைப்பில் இருப்பது" அல்லது "நேரடி ஒலிப்பரப்பில் கேட்பது," , "ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்பது," சபைக்குச் செல்வதுபோல் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர் அப்படித்தான் இருப்பதாகக் கூறினார்! அவர்களுக்கு எளிமையான வார்த்தையும் தெரியாது அல்லது மணவாட்டி வாசிக்கக்கூடிய அன்பின் மடலையும் வாசிக்க முடியாது.
சபை என்றால் என்ன? சகோதரன் பிரான்ஹாம் ஒரு சபை என்று கூறினதைப் பார்ப்போமாக.
அநேக, அநேக சபைகள் இந்த கூடாரத்திலிருந்து இங்கே இந்த வசதியைப் பெற்றுள்ளீர்கள். அது பீனிக்ஸிலும் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது எல்லா இடங்களிலும் ஆராதனைகள் உள்ளன, அது சரியாக வருகிறது…அவர்கள் சபைகளிலும், வீடுகளிலும், அதைப் போன்ற காரியங்களிலும் ஒரு மிக தெளிவான அலை வரிசையின் மூலமாக ஒன்று கூடுகின்றனர்.
சகோதரன் பிரான்ஹாம் தங்களுடைய "வீடுகளில்" மற்றும் "அது போன்ற காரியங்களில்" உள்ள மக்கள் அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றாக இருந்ததாக தெளிவாகக் கூறுகிறார். இவ்வாறு வீடுகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டிடங்கள், அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றுகூடிய குடும்பங்கள் அவர்களை ஒரு சபையாக்கின.
நாம் இன்னும் கொஞ்சம் அன்பின் மடலைக் வாசிப்போமாக.
நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே தொலைபேசி இணைப்பில் இருந்து கொண்டு, சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை அனைவரும் ஒரே நேரத்தில் கேட்கிறோம்; அவர்களோ நாங்கள் ஒரு குழுவாக ஒன்று கூடி, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர்.
ஆனால் நீங்கள் இன்று அப்படிச் செய்தால், அது சபைக்குப் போவதாக இருக்காது, அது தவறு, நாளானது நெருங்கி வருவதைப் பார்க்கும்போது அது இன்னும் அதிகமாக ஒன்றுகூடுவதில்லை என்று சொல்கிறீர்கள், அது சபைக்கு போவதில்லையா?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டும், நீங்கள் உங்கள் சபைக்கு பதிலளிக்கிறீர்கள். சகோதரர் பிரான்ஹாம் இன்று இங்கே சரீரப்பிரகாரமாக இருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அவர் பேசுவதைக் கேட்க நீங்கள் நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ இணைய முடிந்தால், உலகம் முழுவதும் உள்ள மனவாட்டியுடன், போதகர்களே, நீங்கள் தொலைபேசி இணைப்பின் மூலம் சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்பீர்களா அல்லது நீங்கள் பிரசங்கிப்பீர்களா?
உங்களுடைய கடமை உங்களுடைய சபையில் இருக்கிறது என்று சகோதரன் பிரான்ஹாம் தெளிவாகக் கூறுகிறார். நீங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்திருந்தால், சகோதரர் பிரான்ஹாம் ஒரு ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தாலும், உங்கள் சபை கலந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆராதனையை (அப்போது பல ஊழியர்கள் செய்தது போல) நடத்தப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் "உங்கள் சபைக்கு" செல்வீர்களா, அல்லது சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க "பிரான்ஹாம் கூடாரத்திற்கு" செல்வீர்களா?
நான் உங்களுக்கு எனது பதிலைத் அளிப்பேன். நான் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க கூடாரத்திற்குள் செல்ல மழை, பனி அல்லது பனிப்புயலிலும் வாசலில் நின்று கொண்டிருப்பேன். நான் அந்த வேறொரு சபைக்குச் சென்று கொண்டிருந்தால், அன்றிரவு நான் சபைகளை மாற்றுவேன்.
ஆனால் அந்த ஸ்திரீக்கு, தடியில் வல்லமை வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் தேவன் எலியாவில் இருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். தேவன் அங்குதான் இருந்தார்: அவருடைய தீர்க்கதரிசியில். அவள், “நான் உம்மை விடமாட்டேன் என்று கர்த்தருடைய ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றாள்.
தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தானம் 65-1128Mஎன்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போவதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒலிபரப்பு இணைப்பில் உள்ள பிரான்ஹாமுடைய சபைகளில் ஒன்றில் இருக்கும்படி நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான இணைக்கப்பட்டுள்ள மணவாட்டியே,
இன்றைக்கு, தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம் பேசின் இந்த வார்த்தைகள் இன்னமும் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய, நம் மூலமாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களுக்கும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.
அவர்கள் சபைகளில், வீடுகளில், சிறிய கட்டிடங்களில் மற்றும் ஒரு பெட்ரோல் நிலையங்களில் கூட இருந்தனர்; அமெரிக்கா முழுவதும் சிதறிக்கிடந்தனர், வார்த்தை புறப்பட்டுச் சென்ற அதே நேரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இன்றைக்கு, நாம் இன்னமும் அவருடைய சபைகளில் ஒன்றாக இருக்கிறோம். அவர் இன்னமும் நம்முடைய போதகர். அவருடைய வார்த்தைக்கு இன்னமும் வியாக்கியானம் தேவையில்லை, மேலும் நாம் இன்னமும் உலகம் முழுவதும் கூட்டப்பட்டு, இணைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை பரிபூரணபடுத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாளிலே, இந்த வார்த்தை இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பொழுது அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? அப்போதே போதகர்கள் ஏன் தங்களுடைய சபைகளை மூடிவிட்டு வந்து செய்தியைக் கேட்டனர்? அவர்கள் ஒலிநாடாக்களைப் பெறுவதற்காகக் காத்திருந்திருக்கலாம், பின்னர் தங்களுடைய மக்களுக்குச் செய்தியைப் பிரசங்கித்திருக்கலாம்; ஒரு வெளிப்பாடில்லாமல் பலர் செய்தார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
அல்லது சிலர் தங்கள் சபைகளிடம், “இப்போது கேளுங்கள், சகோதரர் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் எங்களுடைய சபைகளில் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. நான் இந்த ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரசங்கிக்கிறேன்; ஒலிநாடாக்களைப் பெற்றுக்கொண்டு உங்களுடைய வீடுகளில் அவற்றைக் கேளுங்கள்” என்று சொல்லியிருக்கலாம்.
அப்பொழுது இருந்த மணவாட்டியும், இப்பொழுது இருக்கிற மணவாட்டியைப் போல, ஒரு வெளிப்பாட்டை உடையவளாயிருந்து, அவர்களுக்கான தேவனுடைய சத்தத்தை நேரடியாக கேட்க விரும்பினர. தேவனுடைய சத்தம் புறப்பட்டு சென்றபோது அதைக் கேட்க அவர்கள் நாடு முழுவதும் மணவாட்டியுடன் ஐக்கியப்பட வேண்டும் என்று விரும்பினர். அவர்கள் அவருடைய சபைகளில் ஒன்றாக, வீடுகளில் அல்லது அவர்கள் எங்கிருந்தாலும், செய்தியோடு, சத்தத்தோடு, இப்பொழுதோ ஒலிநாடாக்களோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுவதுபோல விரும்பினர்.
இன்றைக்கு, இந்த வார்த்தை இன்னமும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவர்கள்/நாம் அதைப் பார்த்ததை மற்றவர்கள் ஏன் பார்க்கிறதில்லை?
முன்னறிவிப்பின் மூலம், இதைப் பார்க்க நாம் நியமிக்கப்பட்டோம். ஆனால் நியமிக்கப்படாத நீங்கள், அதை ஒருபோதும் பார்க்கவே மாட்டீர்கள். கோதுமை அதைப் பார்த்து விலகிச் செல்லத் தொடங்கிவிட்டது.
இது நீங்கள் உங்களுடைய சபைக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. இது உங்களுடைய போதகர் ஊழியம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அர்த்தமல்ல. பல ஊழியங்களும் போதகர்களும் முக்கியமான காரியத்தை மறந்துவிட்டார்கள் என்பதையே இது எளிமையாக பொருட்படுத்துகிறது., மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்று தங்களுடைய மக்களுக்குச் சொல்லுவதில்லை.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும் சபைக்குச் செல்வது உங்களை மணவாட்டியாக மாற்றுகிறதில்லை; அது தேவனுடைய தேவை அல்ல. பரிசேயர்களும் சதுசேயர்களும் அந்த போதனையை நன்கு கடைபிடித்தனர். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் அறிந்திருந்தனர், ஆனால் ஜீவனுள்ள வார்த்தை மானிட சரீரத்தில் அங்கேயே நின்று கொண்டிருந்தது, ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? இன்றைக்கு பலர் அதே காரியத்தையே செய்கிறார்கள்.
அவர்கள், “அவர் பேசிக்கொண்டிருந்த ஸ்தாபனங்கள் அதுதான். அவர்கள் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய சபைகளில் பிரசங்கிக்க அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் நாங்கள் வார்த்தையைப் பிரசங்கித்து, அவர் கூறினதை அப்படியே சொல்கிறோம்” என்று கூறுவார்கள்.
அது அற்புதமானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். ஆனால் அதன்ன்னர கூறுவதோ, இன்று அது வேறு, உங்கள் சபைகளில் சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்குவது தவறு. நீங்கள் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் அல்லது ஸ்தாபனங்களை விட வேறுபட்டவர் அல்ல.
நீங்கள் ஒரு மாய்மாலக்காரர்.
அன்று இருந்தது போல, இயேசு கதவைத் தட்டிக்கொண்டு, உள்ளே நுழைந்து, அவருடைய சபையினிடத்தில் நேரடியாகப் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறார், அவர்கள் தங்களுடைய கதவுகளைத் திறக்க மாட்டார்கள், மேலும் அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க மாட்டார்கள். "அவர் எங்களுடைய சபையில் வந்து பிரசங்கிக்க் கூடாது" என்று கூறுகிறார்கள்.
சத்துரு வெளிப்படுத்தப்படுவதை வெறுக்கிறபடியால், அவன் அதைத் திரித்து, பல திசைகளில் சுழற்றப் போகிறான், ஆனாலும், அது நம் கண்களுக்கு முன்பாகவே வெளிப்படுத்தப்படுகிறது, பலர் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
“ஆதியிலே [சபையோர், “வார்த்தை இருந்தது'' என்கின்றனர்-ஆசி.] ''அந்த வார்த்தை'' [சபையோர், ''தேவனிடத்திலிருந்தது'' என்கின்றனர்-ஆசி. ] “அந்த வார்த்தை” [''தேவனாயிருந்தது.''] ''அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' அது சரியா? லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள அதே வார்த்தை மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனின் வியாக்கியானமும் தேவையில்லை. ஓ, இங்கேயும் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளதுமான ஜீவனுள்ள தேவனுடைய சபையே! காலதாமதமாவதற்கு முன்பு சீக்கிரம் உறக்கத்தினின்று எழுந்திரு!
உங்களுடைய இருதயங்களைத் திறந்து, தேவன் உங்களுக்கும், அவருடைய எல்லா சபைகளுக்கும் கூறினதைக் கேளுங்கள். இப்போது நாம் அவரை, நம்முடைய கண்களால், அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதைக் காண்கிறோம். நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை!! மிகவும் தாமதமாகும் முன் எழுந்திருங்கள்!!
இந்தக் காரியங்களைப் பற்றி எங்களுடைய வாழ்நாள் முழுவதும் முடிவு காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுது அது நடப்பதை எங்களுடைய கண்களால் காண்கிறோம்.
அவர் எங்களிடம் கூறினார், ஒரே ஒரு வழி இருக்கிறது, அது தேவனால் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற வழி. நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.
இந்த நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியை கேட்கும்படி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உலக மக்கள் அனைவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன், அப்போது நீங்களும், “நான் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போது நான் உம்மைக் காண்கிறேன்” என்று சொல்லலாம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-1127E நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன்.
வேதவாக்கியங்கள்
ஆதியாகமம் 17
யாத்திராகமம் 14:13-16
யோபு 14வது அதிகாரம் மற்றும் 42:1-5
ஆமோஸ் 3:7
மாற்கு 11:22-26 மற்றும் 14:3-9
லூக்கா 17:28-30
அன்பான கிறிஸ்துவின் மணவாட்டியே,
ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-1127B-தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்ச்சித்தல் என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்றுகூடுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்பான மாம்சமான வார்த்தையே,
அல்லேலூயா! வார்த்தையைக் கேட்பதன் மூலம் நம்முடைய இருதயத்தின் விளை நிலம் ஆயத்தமாக உள்ளது, மேலும் அது நமக்கு வெளிப்படுத்தியுள்ளது, நாம் கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாய் இருக்கிறோம்; விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமற்ற தேவகுமாரனோடு, தூய்மையான, கலப்படமற்ற மணவாட்டி-வார்த்தையுடன், அவருடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரால் கழுவப்பட்டு நின்றுகொண்டிருக்கிறோம்.
உலகத் தோற்றத்திற்கு முன்பு இயேசு முன்குறித்த நம்மை, பிதாவின் மார்புக்கு அழைத்துச் செல்லும்படி, நாம் மாம்சமான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக மாறிவிட்டோம்.
நாம் நடந்துகொண்ட விதத்திலும், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையின் அவருடைய உண்மையான வெளிப்பாடு நமக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதிலும், நாம் அச்சமற்றவர்கள் என்பதிலும் உலகம் நம்முடைய விசுவாசத்தின் வெளிப்படுத்துதலைக் காண முடியும். முழு உலகமும் என்ன சொல்கிறது அல்லது நம்புகிறது என்பது நமக்கு கவலையில்லை...நாம் அச்சமற்றவர்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது.
இந்த கடைசி-கால செய்தியை அவர்கள் விசுவாசிப்பதாக கூறுகிற அநேகர் இருக்கின்றனர், தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், வில்லியம் மரியன் பிரான்ஹாம் ஏழாம் தூதனாகிய செய்தியாளராயிருந்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், அவர் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உரைத்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அந்த சத்தம் என்பதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் உரைக்கப்பட்ட வார்த்தையின் பிழையின்மையை விசுவாசிக்கிறதில்லை. அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதை அவர்கள் விசுவாசிப்பதில்லை.
அதன் அர்த்தம் என்ன? அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்பதே அர்த்தமாகிறது!
அது ஒரு வெளிப்பாடு, அவர் தம்முடைய கிருபையினால் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கென்று நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் உங்கள் சுய முயற்சியினால் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் விசுவாசத்தைப் எப்போதும் உடையவர்களாய் இருக்கிறீர்கள், தேவனுடைய கிருபையால் அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். எனவே விசுவாசம் என்பது ஒரு வெளிப்பாடாகும். தேவனுடைய சபை முழுவதுமே வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளது.
விசுவாசத்தின் மூலம், இந்தச் செய்தி இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியைப் போஷித்து, பரிபூரணப்படுத்துவதற்காகப் பதிவுசெய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்று நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது சத்தியம் என்று தேவன் கூறினதில் உள்ள ஒரு அசலான, கலப்படமற்ற விசுவாசமாக உள்ளது. மேலும் இது நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதை எதுவும் அசைக்கப் போவதில்லை. அவருடைய தீர்க்கதரிசி நம்மை நம்முடைய கர்த்தரிடத்திற்கு அறிமுகப்படுத்தும் வரையில் அது அங்கேயே இருக்கப்போகிறது.
நாம்தாமே அதைத் தவிர்க்க முடியாது. உலகத் தோற்றத்திற்கு முன்னே அதை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கும்படி அவர் நம்மை ஆயத்தப்படுத்தினார். இந்தக் காலத்தில் அவருடைய சத்தத்தை நாம் ஏற்றுக் கொள்வோம் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்மை முன்னறிந்து, ஏற்றுக் கொள்ளும்படி நம்மை நியமித்திருந்தார்.
அப்படியானால், இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் செய்து வரும் கிரியைகள், ஒருபோதும் தவறி போகாத இந்த தரிசனங்கள், ஒருபோதும் தவறி போகாத வாக்குத்தத்தங்கள் மூலம், வேதாகமத்தில் வாக்களிக்கப்பட்டுள்ள எல்லா அப்போஸ்தல அடையாளங்களும், மல்கியா 4, மற்றும் ஓ, வெளிப்படுத்தல் 10:6 இவையனைத்தும் நிறைவேற்றப்பட்டு, விஞ்ஞானத்தின் மூலமும், மற்ற ஒவ்வொரு வழியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியிருக்கவில்லையென்றால், இந்த காரியங்கள் நடந்திருக்காது. ஆனால் நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியிருந்தால், நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லியிருக்கிறேன் என்பதற்கு அவைகள் சாட்சி பகருகின்றன. அவர் இன்னும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய ஆவியின் வெளிப்படுத்துதல், மணவாட்டியைக் கொண்டு செல்லவிருக்கிறது. அந்த விசுவாசம், வெளிப்பாடு உங்கள் இருதயத்தில் விழுந்து “இதுதான் அந்த வேளை” என்பதை உணர்த்துவதாக.
இதுவே நேரம். இதுவே செய்தி. இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை அழைக்கும் தேவனுடைய சத்தம். ஓ சபையே, ஒலிநாடாக்களில் உள்ள இந்த சத்தத்தை கேட்பதே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்தவும், விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவும் உங்களுடைய இருதயத்தின் விளை நிலத்தைக் கர்த்தர் ஆயத்தப்படுத்துவாராக.
அவருடைய அதிசீக்கிர வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்துகிற தேவனுடைய சதத்தை நாங்கள் கேட்க போகிறபடியால், உன்னதங்களில் எங்களோடு ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, உங்களுடைய விசுவாசத்தைஉயர்வான தளங்களுக்குள் கொண்டு செல்லும்படிக்கு ஜெபர்சன்வில், நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் மீண்டும் ஒருமுறை உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
அடுத்த வாரம் நாங்கள் எங்களுடைய முதல் அமைதியான தண்ணீர் முகாமமைத் (ஸ்டில் வாட்டர்ஸ் கேம்ப்) தொடங்கும்போது எங்களுக்காக தயவுகூர்ந்து ஜெபத்தில் இருங்கள்.
செய்தி: விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் 65-1126
படிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
ஆதியாகமம் 15:5-6, 22:1-12
அப்போஸ்தலர் 2:17
ரோமர் 4:1-8, 8:28-34
எபேசியர் 1:1-5
யாக்கோபு 2:21-23
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட சீமாட்டியே,
இதைத் தவிர்க்க வேறு வழி இல்லை, நீங்கள் தேவனுடைய ஆவிக்குரிய மரபணுவாயிருக்கிறீர்கள், அவருடைய சிந்தைகளின் பண்புகளின் வெளிப்பாடாய், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவருக்குள் இருந்தீர்கள்.
நாம் அதற்கு மேல் செல்ல முடியாது, பூமிக்குள் சென்ற அதே தானியத்தைப் போலவே இருக்கிறோம். மணவாட்டியின் ரூபத்தில், அதே வல்லமையுடன், அதே சபையுடன், அதே வார்த்தையுடன் ஜீவித்து, ஒரு தலையாக உருவாகி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாக இருக்கும் அதே இயேசுவாக நாம் இருக்கிறோம்.
ஆவிக்குரிய மரணத்தால், நம்முடைய முதல் இணைப்பிலிருந்து நாம் பிரிக்கப்பட்டு, இப்போது மீண்டும் பிறந்து, அல்லது நம்முடைய புதிய ஆவிக்குரிய இணைப்பிற்கு மறுவிவாகம் செய்து கொண்டோம் என்று அவர் நமக்குச் சொன்னார். இனி நம்முடைய பழைய மாம்சப்பிரகாரமான ஜிவியமும், உலகத்தின் காரியங்களும் இல்லை, ஆனால் நித்திய ஜீவன். ஆரம்பத்தில் நம்மில் இருந்த ஜீவ அணு நம்மைக் கண்டுபிடித்துவிட்டதே!
அதன் அர்த்தம் என்ன? நமது பழைய புத்தகம் நம்முடைய பழைய இணைப்போடு போய்விட்டது, அது மாற்றப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். அது இப்போது தேவனுடைய ”புதிய புத்தகத்தில்” உள்ளது; ஜீவப் புத்தகத்தில் அல்ல... இல்லை, இல்லை, இல்லை... ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவப் புத்தகத்தில் உள்ளது. ஆட்டுக்குட்டியானவர் மீட்டுவிட்டார். இது நம்முடைய விவாகச் சான்றிதழ், நம்முடைய உண்மையான நித்திய ஜீவ அணுவை பற்றிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் ஆயத்தமா? இதோ அது வருகிறது. உங்களை நீங்களே விழித்தெழ செய்து கொண்டு, மகிமையுடன் ஆரவாரமிட, ஆர்ப்பரிக்க ஆயத்தமாகுங்கள், அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், இது ஒரு இரட்டைக் குழல் மற்றும் பரலோக சுமை ஏற்றுதலாகும்.
“என்னுடைய எல்லா தவறுகளுடனும், என்னுடைய எல்லா தோல்விகளுடனும் என் பழைய புத்தகம் என்று நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா...”
தேவன் அதை அவருடைய மறதியின் கடலில் போட்டுவிட்டார், நீங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீங்கள் நீதிமானாக்கப்பட்டீர்கள்...மகிமை! “நீதிமானாக்கப்பட்டீர்கள்”.
அதன் அர்த்தம் என்ன? தேவனுடைய பார்வையில் நீங்கள் அதை ஒருபோதும் செய்யவில்லை என்பதே அர்த்தமாகும். நீங்கள் தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக நிற்கிறீர்கள். மகிமை! இயேசு, வார்த்தை, உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். ஒரு அசுத்தமான பாவியான, நீங்கள் அவராக, வார்த்தையாக மாற. அவர் உங்களைப் போலானார், நாம் வார்த்தையாக இருக்கிறோம்.
அதுவே நம்மை ஆரம்பத்திலிருந்தே முன்குறிக்கப்பட்ட அவருடைய சிறிய ஜீவ அணுவாக ஆக்குகிறது. நாம் வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, கிறிஸ்துவின் முழு வளர்ச்சிக்கு வருகிறோம், அதனால் அவர் நம்மை அவருடைய மணவாட்டியாக மாற்ற முடியும்.
இப்போது என்ன நடக்கிறது?
உலகம் முழுவதிலுமிருந்து வார்த்தையின் பேரில் ஒன்றுகூடும் கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக் கூடாத இணைப்பாக இது உள்ளது.
தேசம் முழுவதும் செல்கிறது. இப்பொழுது நியூயார்க்கில் பதினொன்று மணி கழிந்து இருபத்தைந்து நிமிடங்கள். பிலதெல்பியாவிலும் சுற்று புறத்திலும் இன்னும் மற்றவிடங்களிலுமுள்ள சபைகளிலும் அருமையான பரிசுத்தவான்கள் உட்கார்ந்து கேட்டு கொண்டிருக்கின்றனர். மெக்சிகோவிலும், கனடாவிலும், சுற்று வட்டாரங்களிலும், தென் அமெரிக்க கண்டத்தில் இருநூறு மைல் தூரத்திலுள்ள மக்கள் இப்பொழுது கேட்டு கொண்டிருக்கின்றனர் - லட்சக்கணக்கான மக்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர்.
சபையே, இதுதான் உங்களுக்கு நான் அளிக்கும் செய்தி. நீங்கள் பழைய இணைப்பிலிருந்து, வார்த்தையினால் ஆவிக்குரிய இணைப்பில் உள்ளீர்களே.
அது கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையிலான ஆவிக்குரிய இணைப்பு, அது இப்போது சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. நாம் வெளிப்படுத்தப்பட்டு, ரூபுகாரப்படுத்தப்பட்டிருக்கிறோம்; இந்த நாளில் சம்பவிக்கும் என்று வேதம் கூறினதே, அதுவே இப்போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாளுக்கு நாள் சம்பவித்துக் கொண்டிருக்கிறது.
தேவன் ஒரு கற்புள்ள சபையை பெற்றுக் கொள்ளப் போகிறார். அவருடைய உண்மையான, உத்தகமான, வார்த்தை மணவாட்டி. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெரிந்து கொள்ளப்பட்டு சீமாட்டியாய் இருக்கிறோம்.
ஐயன்மீர், இதுவா சமயம்?
இந்தக் கடைசி நாட்களில் மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனாகிய கர்த்தரின் செய்தியின் வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். வேறெந்த காலத்துக்கும் அது வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. இக்காலத்துக்கு மாத்திரமே அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. மல்கியா; 4, லூக்கா; 17:30 யோவான்; 14:12, யோவேல்; 2:38, யோவான் ஸ்நானன் தன்னை வேதவாக்கியங்களில் அடையாளம் காண்பித்தது போல், இந்த வாக்குத்தங்களும் அமைந்துள்ளன.
இந்த வேதவாக்கியங்களை யார் நிறைவேற்றினார்கள்?
அவருடைய பலமுள்ள ஏழாம் தூதன், வில்லியம் மாரியன் பிரான்ஹாம். அவர் எப்போதும் அதை மாதிரியின்படி செய்தார். அவர் அதை ஒவ்வொரு முறையும் மாதிரியின்படி செய்தார். அவர் அதை நம் நாளில் மீண்டும் செய்கிறார், கடைசி நாளில் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் தம்முடைய கற்புள்ள மணவாட்டியை அழைத்து ஒன்று சேர்க்கிறார்.
மணவாட்டி என்னே ஒரு மகிமையான நேரத்தை அனுபவிக்கிறாள். ஒவ்வொரு கூட்டமும் பெரிதாகவும், இனிமையாகவும், இனிமையாகவும் மாறி வருகிறது. இதுபோன்ற ஒரு காலம் இதற்கு முன்பு இருந்ததில்லை. எல்லா சந்தேகங்களும் மறைந்துவிட்டன.
கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு 65-1125 என்ற செய்தியில், நாம் யாராய் இருக்கிறோம் என்றும், நம்முடைய நாளில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்றும், நம்முடைய நாளுக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை பேசுப்போவதை நாங்கள் கேட்க போகிறபடியால் வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேதவாக்கியங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி. லூக்கா 17:30 / 23:27-31
பரி. யோவான் 14:12
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 5:1 / 7:1-6
2 தீமோத்தேயு 2:14
1 யோவான் 2:15
ஆதியாகமம் 4:16-17 / 25-26
தானியேல் 5:12
யோவேல் 2:28
மல்கியா 4