அன்பான ஜீவனுள்ள நினைவுச்சின்னங்களே,
நாம் ஒலிநாடாவில் கேட்டுக் கொண்டிருக்கிற சத்தம் அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாய் உள்ளது. அது இப்போது ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு உண்மையான சபையாக இருக்கும் படியாக ஒரே இருதயமாய் ஒரு மனப்பட்டு இப்பொழுது அவருடைய மணவாட்டியை பொருத்தமாக ஒன்றிணைத்து, தேவனுடைய வல்லமை நிறைந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, ஆவிக்குரிய பலிகளை, தேவனுடைய துதிகளை செலுத்த, பரிசுத்த ஆவியினால் நமக்கு மத்தியிலே அசைவாடுகிறது.
நாம் அவருடைய வார்த்தையினால் வல்லமை நிறைந்த வீடாகவும், பரிசுத்த ஆவியின் வாசஸ்தலமாகவும் இருக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட நபர்களை உருவாக்கும்படிக்கு அவருடைய ஏழாம் தூதன் மூலமாக பேசவே கிறிஸ்து நமக்கு தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பினார்.
நாம் ஒவ்வொரு காரியத்திற்கும் சுந்தரவாளியாயிருக்கிறோம். இது நம்முடைய தனிப்பட்ட சொத்து, அது நமக்குச் சொந்தமானது. இது நமக்கு தேவனுடைய வெகுமதி. அதை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. அது நம்முடையது.
"என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினனிடத்தில் கேட்டுக் கொள்வதை நான் செய்வேன்." அங்கே யாரால் எதையும் மறுக்க முடியும்? நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘தள்ளுண்டு போ’ என்று சொல்லி உங்கள் இதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நீங்கள் கூறியுள்ளது நிறைவேறும் என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் கூறியுள்ளது என்னவாயிருந்தாலும் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.” என்னே வாக்குத்தத்தங்கள்! சுகமளித்தலுக்கு மட்டுமல்லாமல் எதற்குமே.
தேவனுக்கு மகிமை...நாம் எதைக் கேட்டாலுமே!
காலத்தின் தொடக்கம் முதற்கொண்டே, தேவனுடைய முழு சிருஷ்டியும் பெருமூச்சுவிட்டு, பூரண தேவ புத்திரர்கள் வெளிப்படுத்தப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறது. அந்த நாள் வந்துவிட்டது. இதுவே அந்த நாள். இதுவே அந்த நேரம். நாமே அந்த வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.
தேவன் உள்ளே நடந்து கொண்டும், அவர் உள்ளே பார்த்துக் கொண்டும், அவர் உள்ளே பேசிக் கொண்டும், அவர் உள்ளே கிரியை செய்து கொண்டும் இருக்கிற, அவருடைய ஜீவனுள்ள கருவிகளாக நாம் இருக்கிறோம். அது தேவன் நமக்குள்ளே இரண்டு கால்களிலும் நடந்து கொண்டிருக்கிறதாயுள்ளது.
நாம் எல்லா மனிதராலும் வாசிக்கப்படுகிற எழுதப்பட்ட அவருடைய நிருபங்களாக, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன் குறிக்கப்பட்ட, ஒரு ஜீவனுள்ள மனிதனுக்குள்ளாக அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிற புத்திர சுவிகாரமாக்கப்பட்ட குமாரரும் குமாரத்தி களுமாய், ஒரு ஜீவனுள்ள சாயலாய், ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சியாய் இருக்கிறோம்.
ஜீவிக்கிற தேவனிடத்தினின்று வரும் ஜீவிக்கின்ற வல்லமை, ஜீவிக்கிற ஞானம், ஜீவிக்கிற பொறுமை, ஜீவிக்கிற தேவபக்தி, ஜீவிக்கிற தேவனிடமிருந்து வருகின்ற ஜீவனுள்ள வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது, நம்மை ஜீவனுள்ள மனிதனாக, தேவனுடைய பரிபூரணத்தின் ஜீவ சாயலாக உருவாக்குகிறது.
அது பரிசுத்த ஆவியின் நபராக நம்மீது, அவருடைய பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகத்துடன், அவருடைய அனைத்து வல்லமைகளும் நம்மில் முத்திரையிடப்பட்ட கிறிஸ்துவே. கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒரு கூடாரத்தில் நமக்குள்ளாக ஜீவிக்கிற, தேவன். ஒரு ஜீவனுள்ள கூடாரம், ஜீவனுள்ள தேவனுடைய வாசஸ்தலம்; ஒரு பரிபூரண சபை, நம்மை மூடுவதற்கான ஒரு பரிபூரண தலைக்கல்.
தேவன் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அது அவருடைய முதல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட ஆதாமாக இருந்தது, நம்முடைய நாளில் ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சியாய், அவருடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தியது. அதிலிருந்து நான் நகர முடியாது. எதுவும் என்னை நகர்த்த முடியாது. யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை; அது என்னை சிறிதும் அசைக்கவில்லை. நான் அங்கேயே தரித்திருப்பேன்.
நான் காத்திருப்பேன், காத்திருப்பேன், காத்திருப்பேன். எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை. அது அங்கேயே தரித்திருக்கிறது. பின்னர், ஒரு நாள், நான் மற்ற எல்லா பரிசுத்தவான்களோடும் ஒருமனதாக சத்தமிடுவேன்: "நாங்கள் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் உறுதியுடன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்! பின்னர் நீர் எங்களை அவரிடம் அளிப்பீர். அதன்பின்னர் நாம் அனைவரும் என்றென்றுமாய் ஜீவிக்க மீண்டும் பூமிக்குத் திரும்புவோம்."
இன்று காலை, அவருடைய உதவியாலும் அவருடைய கிருபையாலும், இந்த தேவைகள் ஒவ்வொன்றும் என்னுடைய இந்த சிறிய பழைய வளர்ச்சியில் பாய்வதை நான் உணரும் வரை, நான் ஜீவனுள்ள கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலாய் இருக்க முடியும் வரை, நான் தினமும் இடைவிடாமல் ஜெபித்து தேடுவேன் என்று நான் அவரிடம் முழு மனதுடன் உறுதியளிக்கிறேன்.
என்னைப் பொருத்தவரையில், ஒலிநாடக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதே இந்த நாளுக்கான தேவனுடைய திட்டமாகும். அது இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள வார்த்தையாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையின்படி அதுவே என்னுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது. அதுவே இந்நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியாயிருக்கிறது.
எனவே, ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சி 62-1014M: கிறிஸ்துவின் மணவாட்டி எவ்வாறு மாற வேண்டும் என்று கற்பிக்கும் நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருப்பதாக நான் விசுவாசிக்கிற இன்னாராகிய, வில்லியம் மரியன் பிரான்ஹாமுக்கு நான் செவி கொடுக்கப் போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு என்னுடன் சேர உங்களை அழைக்க விரும்புகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 5:48
பரி. லூக்கா 6:19
பரி. யோவான் 1:1 / 3:3 / 3:16 / 5:14 / 14:12
அப்போஸ்தலர் 2:38 / 7:44–49 / 10வது அதிகாரம் / 19:11 / 28:19
எபேசியர் 4:11-13
கொலோசெயர் 3வது அதிகாரம்
எபிரெயர் 10:5 / 11:1 / 11:32-40
யாக்கோபு 5:14
2 பரி. பேதுரு 1-7
ஏசாயா 28:19
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மனமாற்றமடைந்தவர்களே,
இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், நாம் தேவனுடைய பிழையற்ற வார்த்தைக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன் ஒவ்வொரு வார்த்தையும், அதன் ஒவ்வொரு சொற்றொடரும் சத்தியமாய் இருக்கிறது. நாம் அழைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, நிரப்பப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம்; பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஏற்கனவே இப்போது கானான் தேசத்தில் இருக்கிறோம். நாம் எதற்கும் பயப்படவில்லை... எதற்கும், நாம் யார் என்று நமக்குத் தெரியும்.
அவர் செய்யும்படி நமக்கு கட்டளையிட்ட படியால், நாம் அவருடைய வார்த்தையோடு தரித்திருக்கிறபடியால், அவர் நமக்கு ஒரு சுதந்தரத்தை விட்டுச் சென்றதாக அவர் நமக்குச் சொல்லப் போகிறார். எப்போது பிதாவே, நீர் அதைச் செய்தீர்? நான் உங்களைத் தெரிந்துகொண்டு, உலகத் தோற்றத்திற்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் உங்கள் பெயர்களைப் எழுதினபோதே.
காலம் நிறைவேறினபோது, என்னுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கும்படியாக, குட்டி தேவர்களாய் இருக்கும்படியாக, உங்களுடைய சுதந்திரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளும்படியாக, உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவை நான் அனுப்பினேன்.
நான் உங்களை அந்த ஸ்தானத்தில் வைக்கும் முன், நான் உங்களுடைய நிலையற்ற மற்றும் தளர்வான இடங்களை சரிபார்க்க வேண்டியிருந்தது.
● ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய சத்தத்தை சபையில் இயக்குவது தவறு என்று நீங்கள் நம்புகிறீர்களா?
● “ஆமாம், நீங்கள் சபையில் ஒலிநாடாக்களை இயக்கக் கூடாது.”
● “அதைக் கண்டனம் செய்கிறீர்கள். நீங்கள் நிலையற்றவராயிருக்கிறீர்கள்.”
● “ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?”
● “ஆம், அதை விளக்குவதற்கு யாராவது தேவை.”
● “நீங்கள் நிலையற்றவராயிருக்கிறீர்கள். அதை உதைத்துத் தள்ளுங்கள். நீங்கள் இன்னும் ஆயத்தமாய் இருக்கவில்லை.”
நீங்கள் ஆயத்தமாக இருக்கும்போது, ஒவ்வொரு வார்த்தைக்கும் “ஆமென்” என்று கூறுவீர்கள்.
● “நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?”
● “ஆமென்.”
● ஒலிநாடாவில் உள்ள என்னுடைய சத்தம் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
● “ஆமென்.”
● “ஒலிநாடாவில் உள்ள என்னுடைய சத்தம் மணவாட்டியை ஒன்றிணைக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?”
● “ஆமென்.”
● “என்னுடைய பலமுள்ள தூதன் உங்களை என்னிடத்தில் அறிமுகம் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?”
● “ஆமென்.”
நீங்கள் இப்போது தளர்வற்றவராயிருக்கிறீர்கள். நிலையற்ற மற்றும் தளர்வான இடங்களுக்காக நான் உங்களை சோதித்தேன். வாசலை மூட நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் உங்கள் மீது என்னுடைய முத்திரையை வைப்பேன். நீங்கள் என்னுடைய பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்.
இப்போது நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டும், ஒலிநாடா தேசங்களில் உள்ள என்னுடைய அன்பான விலையேறப்பெற்ற ஜனங்களே; வெளிநாடுகளிலும் நீங்கள் எங்கிருந்தாலும், பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாக இருக்கிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் உங்களை அறிந்திருந்தேன். சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்தையும் நான் அறிந்திருந்தேன்.
நான் சீக்கிரத்தில் உங்களுக்காக வந்து, மரணமேயில்லாத, துக்கமேயில்லாத, பொறாமையேயில்லாத, எதுவுமேயில்லாத ஒரு இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல வருகிறேன்.; பரிபூரணம் மாத்திரமே, பரிபூரண அன்பு.
அதுவரை, மறந்துவிடாதீர்கள், நான் உங்களுக்கு என் வார்த்தையைத் தருகிறேன், நீங்கள் மாம்சமாக்கப்பட்ட என்னுடைய வார்த்தையாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், அதைப் பேசுங்கள், பின்னர் அதை விசுவாசியுங்கள்; அது உங்கள் சுதந்தரம்.
உங்களுக்கு அதைக் குறித்த எல்லாவற்றையும் விளக்கிக் கூற இந்த ஞாயிற்றுக்கிழமை நான் மீண்டும் உங்களிடத்தில் என்னுடைய சத்தத்தை அனுப்பப் போகிறேன். மீண்டும் ஒருமுறை நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும், இப்பொழுது அங்கே அது எப்படி உள்ளது என்பதையும் நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, என்னுடைய வார்த்தையினால் உங்களை அந்த ஸ்தானத்தில் பொருத்துவதை குறித்து நான் பேசுவதை நீங்கள் கேட்கப் போகிறபடியால், நான் என்னுடைய மணவாட்டியை உன்னதங்களிலே உட்கார வைத்துள்ளபடியால் அவர்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். 60-0522E புத்திர சுவிகாரம் #4.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான கற்புள்ள கன்னிகையே,
நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்போது, அது கன்மலையில் உள்ள தேனாயுள்ளது, அது சொல்ல முடியாத சந்தோஷமாயுள்ளது, அது ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியாயுள்ளது, அது நம்முடைய ஆத்துமாவிற்கு ஒரு நங்கூரமாயுள்ளது, அது நம்முடைய நம்பிக்கையாயும் ஆதரவாயுமுள்ளது,, அது காலங்களின் கன்மலையாயுள்ளது, அது நன்மையாய் இருக்கிற ஒவ்வொரு காரியமாயுள்ளது. அது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது.
நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கின்ற காரணத்தால், தேவனுடைய சத்தம் நம்மை நியமித்துள்ளது; அவருடைய வார்த்தைக்கு ஒரு கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்துவுக்கென்று நம்மை நிச்சயத்துள்ளது. நம்மை பரிசுத்த ஆவியினால் வழிநடத்திக் கொண்டிருக்கிற ஒரு உபாத்தியாயர், ஒரு சத்தம், ஒரு தீர்க்கதரிசி நமக்கு உண்டு.
ஆனால் இது என் சபை, நான் உங்களுக்குப் போதித்து கொண்டிருக்கிறேன். இது ஒலிநாடாவில் பதிவாகிறது. ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்கள் இது என்னுடைய சபைக்கு என்பதை நினைவு கூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதற்கு இது நமக்கு என்ன ஒரு உறுதிப்படுத்தல். ஒலிநாடாக்கள் அவருடைய சபைக்கானது. அவர் நமக்கு போதித்துக் கொண்டிருக்கிறார். ஒலிநாடாக்களைக் கேளுங்கள் என்று அவர் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு என்ன நடந்திருந்தது என்று நமக்குச் சொல்வதனால் அவர் இந்தப் புத்திர சுவிகாரத் தொடரைத் தொடங்கினார். பின்னர், ஒவ்வொரு செய்தியிலும், அவர் மறுரூபமாக்கப்பட்டதைக் குறித்து பேசுகிறார். என்ன சம்பவித்தது என்றும், மணவாட்டி அவரிடத்தில் என்ன கூறினாள் என்றும் கேட்கும்படியாக மணவாட்டிக்கு அது எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
நம்முடைய தீர்க்கதரிசி அவர் பிரசங்கித்து ஒலிநாடாக்களில் விட்டுச் சென்ற வார்த்தையால் நியாயந்தீர்க்கப்படுவார். மறுபுறம் இருந்த மணவாட்டி, அவர் நம்முடைய கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று அவரிடம் சொன்னாள். பின்னர் அவர் நம்மை அவருடைய ஊழியத்தின் வெற்றிச் சின்னங்களாக அவருக்கு அளிப்பார், பின்னர் நாம் என்றென்றும் ஜீவிக்க மீண்டும் பூமிக்குத் திரும்புவோம்.
நாம் கேட்கிற ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பொற்கட்டி. நாம் வாக்கியங்களுக்கிடையே உள்ள மறைபொருளை வாசிக்கையில் அவர் அதிகமாக வெளிப்படுத்தும்போது நாம் தொடர்ந்து அதை மெருகேற்றிக்கொண்டே, அதை மெருகேற்றிக்கொண்டேயிருக்கிறோம்.
“நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று நம்முடைய சகோதர சகோதரிகளிடத்தில் அதை பகிர்ந்து கொள்வதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகிறோம்.
“அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டரா”? அதுதான் நம்முடைய சுதந்தரம். தேவன் நம்மை தெரிந்துகொள்ள இயேசு வந்து அதற்கான கிரயத்தை செலுத்தும்படி செய்தார். அது என்ன? அவருடைய சிந்தப்பட்ட இரத்தம், அதன் விளைவாக பாவம் எதுவும் நமது கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அதற்காக நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை.
அதன் பிறகு, உடனடியாக, நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா?
“கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.” உங்களுடைய கண்களை நீங்கள் கல்வாரியை நோக்கியவாறு வைத்துவிட்டீர்கள். ஒன்றும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாதே! உங்களுடைய வாழ்க்கைப் பாதையில் நீங்கள் விலையேறப்பெற்ற அபிஷேகத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, ராஜாவின் பெரும் பாதையில் நடந்து சென்று, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். வ்யூ! ஆமென்.
நாம் ஆரோனின் கோலைப் போல இருந்தோம், வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகளாக அவர் வைத்திருந்த ஒரு பழைய காய்ந்த கோலைப் போல. ஆனால் இப்போது, தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசுவதைக் கேட்டு அந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நாம் வைத்ததால், நாம் துளிர்விட்டு மலர்ந்து, அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறோம், மேலும் அவரது மணவாட்டியாக நாம் உரக்க சத்தமிட்டு ஆர்ப்பரிக்கிறோம்:
● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், ஒலிநாடாக்கள் முதலில் எங்களுடைய இருதயங்களில் உள்ளன.
● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மைத் தெரிந்து கொண்டார்.
● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி.
● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், யாரும் என்ன சொன்னாலும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை, நாம் ஒலிநாடாக்களை கேட்பதில் பின்வாங்குவதில்லை, நாம் அதிகமாக இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
● கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், நாம் நம்முடைய கண்களை கல்வாரியை நோக்கியவாறு வைத்திருக்கிறோம், எதுவும் நம்மைத் தடுக்கப் போவதில்லை.
இது தேவனுடைய பிழையற்ற வார்த்தை என்று அறிந்திருப்பவர்களின் இருதயங்களுடன் என்னுடைய இருதயமும் இணைந்திருப்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியுறுகிறேன். ஆகையால் இது, இதின் ஒவ்வொரு வார்த்தையும், இதின் ஒவ்வொரு கட்டமும் சத்தியமாகும். தேவனுடைய கிருபையினால், அந்த தேசத்தைக் காணும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்றாவது ஒரு நாளில் நாமும் பயணப்பட்டு அங்கு செல்வோம்.
தீர்க்கதரிசி ஒவ்வொரு வார்த்தையும் எடுத்து அதை தொடர்ந்து மெருகேற்றப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். அவர் அதை ஆதியாகமத்திற்கு எடுத்துச் சென்று மெருகூட்டுவார், அதை யாத்திராகமத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் மெருகூட்டுவார், வெளிப்படுத்தின விசேஷத்திலும் கூட; அதன் ஒவ்வொரு துணுக்கும் இயேசுவே!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி:
புத்திர சுவிகாரம் #3 60-0522M
வேதவாக்கியங்கள்:
மத்தேயு 28:19
யோவான் 17:7-19
அப்போஸ்தலர் 9:1-6, அதிகாரங்கள் 18 மற்றும் 19
ரோமர் 8:14-19
1 கொரிந்தியர் 12:12-13
கலாத்தியர் 1:8-18
எபேசியர் அதிகாரம் 1
எபிரெயர் 6:4-6, 9:11-12
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ராஜரீகமான ஆசாரியக்கூட்டமே,
ஒவ்வொருவரும் உணர்வடைந்து, உங்களுடைய ஆத்துமாவைத் திறந்து, உங்களுடைய இருதயத்தைப் விழித்தெழச் செய்யுங்கள். இன்றைக்கு, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி ஆரவாரமிட்டுக் கொண்டிருக்கிறாள்:
இந்த நாளிலே, இந்த தீர்க்கதரிசனம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மகிமையான நாட்களில் ஒன்றில், சபையின் இந்த ஐக்கிய கூட்டமைப்பு ஒன்றுகூடி, புதிய போப் அமெரிக்காவிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, தீர்க்கதரிசனத்தின்படி அங்கு வைக்கப்படும்போது, அதன்பின்னர் அவர்கள் மிருகத்தைப் போன்ற ஒரு சொரூபத்தை உருவாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
தேவனுடைய தீர்க்கதரிசியின் சத்தம் அதை டிசம்பர் 19, 1954-ல் உரைக்க, 9 மாதங்கள் கழித்து, இப்பொழுது போப் லியோ XIV என்று அழைக்கப்படும் ராபர்ட் பிரீவோஸ்ட் பிறந்தார். அவர் இப்பொழுது ரோமாபுரியின் புதிய போப் ஆவார். "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது நிறைவேறியுள்ளது.
மே 7, 1946 அன்று, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை இந்தியானாவிலுள்ள கிரீன்ஸ் மில்லில் நியமித்து, அவருக்கு தன்னுடைய கட்டளையை அளித்து, இந்த வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளர், உலகிற்கு என்னுடைய சத்தம் என்று உலகிற்கு அறிவிக்க வைத்தார். நீங்கள் அவருக்குச் செவிகொடுங்கள்.
எட்டு வருடங்களுக்கு முன்பு, இந்தியானாவிலுள்ள கிரீன்ஸ் மில்லில், ஒரு குழந்தையாக இருந்தது முதற்கொண்டே, என்னைப் பின்தொடர்ந்த, தரிசனங்களைக் காண்பித்த, கர்த்தருடைய தூதன் என்னைச் சந்தித்தபோது, நான் அவரிடம் சென்றபோது, அவர், "நீ உத்தமமாக இருந்தால், ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், ஜெபத்திற்கு முன்னால் எதுவும் நிற்காது" என்றார்.
வில்லியம் மரியன் பிரான்ஹாம் உலகிற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சத்தமாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை வருகிற ஒரு வல்லமையான தீர்க்கதரிசி. வார்த்தையின்படி, அவர் மாத்திரமே தேவனுடைய வார்த்தையின் தெய்வீக . வியாக்கியானியாயிருக்கிறார்.
அவர் அக்கினி ஸ்தம்பத்தால், தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்டார்.
மே 7, 2025 அன்று, சாத்தான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நிறைவேற்றும்படி, கிறிஸ்துவின் பிரதி குருவை தங்களுக்கு தேர்ந்தெடுக்கும்படி ரோமாபுரியில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் தன்னுடைய போப்பாண்டவரின் தேர்வு குழு உறுப்பினர்களின் கூட்டத்தை வைத்தான்.
ஒரு வெள்ளை புகையின் குமிழியுடன் மனிதனால் அவர் உறுதிப்படுத்தப்பட்டார்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் மணவாட்டி, தீர்க்கதரிசியினுடைய தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதை, நம்முடைய சொந்த கண்களால் பார்க்கிறபடியால், நாம் கேட்கும்போதே, களிகூர்ந்து, கூச்சலிட்டு, ஆர்ப்பரித்து, கர்த்தரைப் ஸ்தோத்தரிக்கிறாள்.
அது நம்முடைய கண்களுக்கு முன்பாகத் திறந்திருக்கும் சிவந்த சமுத்திரத்தை பார்ப்பது போல் இருக்கிறது. வானத்திலிருந்து விழும் புதிய மன்னா. மணவாட்டிக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான காடைகள். கன்மலையிலிருந்து வருகிற தண்ணீர். அக்கினி இறங்கி எலியாவுடன் பலியை பட்சித்தல்.
தீர்க்கதரிசனம் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவனுடைய வாக்குத்தம் பண்ணப்பட்ட வார்த்தை நம்முடைய ஜீவியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. நம்மைச் சுற்றி காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. வார்த்தையைக் கேட்டு விசுவாசிப்பதன் மூலம் மணவாட்டி தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொண்டாள். நாம் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிறோம்.
உண்மையிலேயே, நாம் வந்துவிட்டோம். நேரம் சமீப்த்துவிட்டது. மணவாட்டி களிகூர்ந்து, உலகம் முழுவதும் ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றுபடுகிறாள். தீர்க்கதரிசி மணவாட்டிக்கு நாம் தேவனுடைய ராஜரீக ஆசாரியக்கூட்டமாயும், ஒரு பரிசுத்த ஜாதியாயும், அழைக்கப்பட்ட,, தேர்ந்தெடுக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட சொந்த ஜனமாயும் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்வதனால் திரும்ப உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்.
நாம் இப்பொழுது தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், மனிதனால் அல்ல, ஆவியினால், தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுகிறோம். சந்தேகத்தின் எந்த ஒரு நிழலுமின்றி, நாம் அவருடைய மணவாட்டியாயிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். நம்முடைய விசுவாசம் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை எட்டுகிறது. நம்மைத் தடுக்கவோ அல்லது மெதுவாக்கவோ முடியாது, தேவன் அதை நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் வெளிப்படுத்தி நங்கூரமிட்டுள்ளார்.
நாம் யார் என்பதை மணவாட்டி முழுமையாக அடையாளங் கண்டு கொண்டாள். நாம் நம்முடைய ஆவிக்குரிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில், ஒவ்வொரு காரியத்தையும் முழு உடைமையாக கொண்டிருக்கிறோம். நமக்கு பரலோக சமாதானம், பரலோக ஆசீர்வாதங்கள், பரலோக ஆவி உள்ளது. ஒவ்வொரு காரியமும் நம்முடையது. அவர் நமக்காக அடுத்து வைத்திருப்பதற்கு நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
கர்த்தருடைய எக்காளம் தொனிக்கும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இந்த வானத்துக்குரிய சரீரங்கள் கீழே வந்து பூமிக்குரிய, மகிமையடைந்த சரீரங்களை தரித்துக்கொள்ள, ஒரு நிமிஷத்திலே, இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். நாம் அவர்களுடன் சேர்ந்து, ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுவோம்.
என்னே ஒரு நாள். என்னே ஒரு நேரம். நாம் அனைவரும் நம்முடைய ஆத்துமாக்களில் உணருவதை மனித வார்த்தைகளில் சொல்ல எனக்கு வழி இல்லை. நம்முடைய இருதயங்கள் துடிக்கின்றன. நாம் அதைச் சாத்தியமாக்கவில்லை, பரிசுத்த ஆவி நமக்குள் பொங்கி எழும் ஒரு ஆர்ட்டீசியன் ஊற்றைப் போன்றது. ஆதாமின் நாட்களிலிருந்து மணவாட்டி இந்த தருணத்திற்காகக் காத்திருக்கிறாள்... இப்பொழுது நாம் இங்கே இருக்கிறோம்.
நாங்கள் உங்களை வரவேற்கிறோம். நாங்கள் உங்களை அழைக்கிறோம். நாங்கள் உங்களிடம் மன்றாடுகிறோம். புத்திர சுவிகாரம் #2 60-0518: என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், உலகம் எப்போதும் அறிந்திராத மிக அற்புதமான நேரத்திற்காக எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோதரன். ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஆதியாகமம் 1:26
எபேசியர் முதலாம் அதிகாரம்
ரோமர் 8:19
கலாத்தியர் 1:6-9
எபிரெயர் ஆறாம் அதிகாரம்
யோவான் 1:17
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள புத்திரசுவிகாரமாக்கப்பட்டவர்களே,
நாம் இப்பொழுது தேவனுடைய பலமான காரியங்களை புசித்துக்கொண்டும், அவருடைய வார்த்தையின் தெளிவான ஒரு புரிந்து கொள்ளுதலை உடையவர்களாயிருக்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை நமக்கு கொடுத்திருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய சிந்தையோ முழுவதும் குழப்பமற்றதாய் இருக்கிறது.
அவர் யார் என்பதை நாம் சரியாக அறிவோம். அவர் என்னவாயிருக்கிறார் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் யார் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவோம், நாம் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயத்துமிருக்கிறோம்.
உலகத் தோற்றம் முதற்கொண்டு மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் அவர் பேசி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படி மற்றவர்கள் அவருடைய அருளப்பட்ட வழியைப் புறக்கணித்து, ஒரு வித்தியாசமான வழிநடத்துதலை விரும்பினர் என்பதை அவர் நமக்குச் சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தையோடு தரித்திருக்கும் ஒரு சிறு குழுவை அவர் உடையவராயிருப்பார்.
உலகம் முழுவதும், அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி காரியங்களைப் பொதுவானதாகக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிறிய குழுக்கள் பூமியெங்கும் சிதறடிக்கப்படுவார்கள்.
மகிமை, நாம் பூமியெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை கேட்பதன் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை அவருடைய பலமுள்ள தூதன் மூலம் அவர் நமக்கு என்ன கூறப் போகிறார் என்பதைக் குறித்த ஒரு முன்ருசியை நாம் ருசித்துப் பார்ப்போமாக.
என்னுடைய அன்பான தெரிந்து கொள்ளப்பட்டவர்களே, நீங்கள் இப்பொழுது உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எங்கோ ஓரிடத்தில் அல்ல, ''உன்னதங்களில்.'' அதுதான் விசுவாசி என்ற உங்களுடைய ஸ்தானம். நீங்கள் ஜெபத்தை ஏறெடுத்து செய்தியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகிவிட்டீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாய், தேவனுடைய ஆசிர்வாதத்தினால் நிரப்பப்பட்டு, பரிசுத்தவான்களாக நீங்கள் ஒன்று கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, உங்களுடைய ஆவியானது ஒரு பரலோக சூழ்நிலைக்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ளது.
என்ன சமபிக்கக்கூடும். என்னுடைய பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அசைவாடுவார். நீங்கள் புதிதாக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள். உங்களுடைய பாவங்கள் அனைத்தும் இரத்தத்தின் கீழ் உள்ளன. உங்களுடைய கரங்களும் இருதயங்களும் என்னண்டை உயர்த்தப்பட்டிருப்பதோடு, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து என்னை ஆராதித்துக் கொண்டு, நீங்கள் பரிபூரண ஆராதனையில் இருக்கிறீர்கள்.
நீங்கள் முன்குறிப்பில், என்னுடைய முன்னறிவில் தெரிந்து கொள்ள பட்டவர்களாக இருக்கிறீர்கள். முன் நியமித்ததினால் தெரிந்துகொள்ளப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் வஞ்சிக்கப்படுவது கூடாத காரியமாகும். உலக தோற்றத்திற்கு முன்னே நான் உங்களை நியமித்திருக்கிறேன். நீங்கள் குட்டி தேவனாக, பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்; வெறுமன குடும்பத்திற்குள்ளாகப் பிறந்திருக்கவில்லை, என்னுடைய புத்திரசுவிகாரமாக்கப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள்.
நான் உங்களை தெய்வீக சுகமளித்தலினால், முன்னறிவினால், வெளிப்பாட்டினால், தரிசனங்களினால், வல்லமைகளினால், அந்நிய பாஷைகளினால், வியாக்கியானங்களினால், ஞானத்தினால், அறிவினால், எல்லா உன்னத ஆசிர்வாதங்களினாலும், மகிமையால் நிறைந்ததும், சொல்லி முடியாததுமான சந்தோஷத்தினாலும் உங்களை ஆசீர்வதிப்பேன்.
ஒவ்வொரு இதயமும் என் ஆவியால் நிரப்பப்படும். நீங்கள் ஒன்றாக நடந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து வீற்றிருப்பீர்கள். உங்களுக்கு மத்தியிலே ஒரு தீய எண்ணமும் இல்லை, ஒரு சிகரெட்டும் புகைப்படவில்லை, ஒரு குட்டையான ஆடையும் இல்லை, இந்த, அந்த அல்லது மற்ற, எந்த ஒன்றும் இல்லை, ஒரு தீய எண்ணமும் இல்லை, ஒருவருக்கு எதிராக ஒருவர் எதையும் கொண்டிருக்கவில்லை, எல்லோரும் அன்பிலும் ஒற்றுமையிலும் பேசுகிறார்கள், ஒவ்வொருவரும் ஒரே இடத்தில் ஏகமனதோடு இருக்கிறார்கள்.
அதன்பின்னர் திடீரென்று பரலோகத்திலிருந்து ஒரு பலத்த காற்றடிக்கிற முழக்கம் உண்டாகும், நான் உங்களை எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிப்பேன். அப்பொழுது நீங்கள் தாவீதை போல, உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நடனமாடி, நீங்கள் வெட்கப்படவில்லை என்று உலகத்திற்கு சொல்லுவீர்கள். நீங்கள் என்னுடைய ஒலிநாடா மணவாட்டியாயிருக்கிறீர்கள்! நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசியுங்கள். நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள், அசைக்கப்பட முடியாதே!
மற்றவர்கள் அதை புறக்கணிக்கலாம், அல்லது அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கோ, இது உங்கள் மரியாதைக்குரிய பதக்கம். தாவீது தன் மனைவியிடம் சொன்னது போல்; “இது ஏதோ ஒன்று என்று நீ நினைக்கிறாய், நாளை வரை காத்திரு, நாங்கள் இன்னும் அதிகமான ஒலிநாடாக்களைக் கேட்டு, கர்த்தரைத் துடித்து, அவருடைய ஆவியால் நிரப்பப்படுவோம்; ஏனென்றால் நாம் கானானில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குட்பட்டவர்களாயிருக்கிறோம்.
அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கீழே பார்த்து:
“நீ என்னுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற மணவாட்டி” என்று கூறுவேன்.
இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் கூட கிடைக்கலாம். புத்திர சுவிகாரம் # 1 60-0515E என்ற செய்தியை இன்றைக்கான தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வந்து, எங்களிடத்தில் பேசப் போவததை நாங்கள் கேட்க போகிறபடியால், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவிக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்து கொள்ள வாருங்கள்.
இது சபைக்கு மாத்திரமே என்பது ஞாபகமிருக்கட்டும், வெளியிலுள்ளவர்களுக்கல்ல, இது புதிர்களில் உள்ள ஒரு ரகசியமாய் அவனுக்கு இருக்கிறபடியால், புரிந்து கொள்ள முடியாமல், அவனுடைய தலைக்கு மேலே சென்று விடுகிறது, அவனுக்கு இதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால், சபைக்கோ, இது கன்மலையில் உள்ள தேனாகவும், இது சொல்லி முடியாத சந்தோஷமாயும், இது ஆசிர்வதிக்கப்பட்ட உறுதியாயும், இது ஆத்துமாவின் நங்கூரமாயும், இது நம்முடைய நம்பிக்கையும் புகலிடமாயும், ஓ, இது நன்மையான ஒவ்வொரு காரியமாயும் இருக்கிறது. ஏனென்றால் வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது.
சகோதரா. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
யோவேல் 2:28
எபேசியர் 1:1-5
1 கொரிந்தியர் 12:13
1 பேதுரு 1:20
வெளிப்படுத்தின விசேஷம் 17:8
வெளிப்படுத்தின விசேஷம் 13