காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 25 அக்டோபர், 2025

அன்புள்ள ஒலிநாடாவைக் கேட்பவர்களே,

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: “நான் ஒலிநாடாக்களைக் கேட்கும்போது, நான் எந்த சத்தத்தைக் கேட்கிறேன்? அது வில்லியம் மாரியன் பிரான்ஹாமின் சத்தமா, அல்லது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறேனா? அது ஒரு மனிதனின் வார்த்தையா, அல்லது கர்த்தர் உரைக்கிறதாவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனா? நான் கேட்டுக் கொண்டிருக்கிறதை வியாக்கியானிப்பதற்கு யாருமே எனக்குத் தேவையா அல்லது தேவறனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லையா?

நம்முடைய பதில்: மாம்சமான உரைக்கப்பட்ட வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆல்பா மற்றும் ஒமேகாவை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாளில் அவர் இருப்பதாக கூறியது போல மானிட உதடுகளினூடாக பேசுகிற, அக்கினி ஸ்தம்பமான, அவருக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒரு மனிதனுக்கு செவி கொடுக்கவில்லை, நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாத தேவனுக்கு நாம் செவி கொடுக்கிறோம். தேவனுடைய சத்தமானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், எலும்பையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

அவர் கலிலேயாவில் நடந்தபோது எப்படி இருந்தாரோ, அதே விதமாக இன்றிரவு ஜெபர்சன்வில்லில் இருக்கிறார் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதே விதமாக அவர் பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். அது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அவர் அப்பொழுது எந்தவிதமாக இருந்தாரோ, அவர் இன்றிரவும் இருக்கிறார், என்றென்றும் இருப்பார். அவர் என்ன செய்வார் என்று கூறினாரோ, அதை அவர் செய்திருக்கிறார்.

அந்த மனிதன் தேவன் அல்ல, ஆனால் தேவன் என்னும் ஜீவித்துக் கொண்டு, தம்முடைய மணவாட்டியினிடத்தில் அந்த மனிதனின் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார். நாம் மனிதனை ஆராதிக்கத் துணியவில்லை, ஆனால் அந்த மனிதனில் உள்ள தேவனை ஆராதிக்கிறோம்; ஏனென்றால் அவருடைய சத்தமாயிருக்கும்படி, இந்த கடைசி நாட்களில் தம்முடைய மனவாட்டிய வழிநடத்த தேவன் தெரிந்து கொண்ட மனிதனாய் அவர் இருக்கிறார்.

காரணம் நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நம்முடைய நாளில் மாம்சமான வார்த்தையையும் நாம் அடையாளமங் கண்டு கொள்ளும்படியாக இந்த மகத்தான கடைசி கால வெளிப்பாட்டை அவர் நமக்கு அளித்திருக்கிறார், சாத்தான் இனி நம்மை ஏமாற்ற முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய முழுமையாக திருப்பலளிக்கப்பட்ட கன்னிகையான வார்த்தை மணவாட்டி என்பதை நாம் அறிவோம்.

அந்தக் சத்தம் நமக்குச் சொன்னது: நமக்குத் தேவையானது ஏற்கனவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது உரைக்கப்பட்டாயிற்று, அது நம்முடையது, அது நமக்குச் சொந்தமானது. சாத்தானுக்கு நம் மீது எந்த அதிகாரமும் இல்லை; அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்.

நிச்சயமாக, சாத்தான் நம் மீது சுகவீனத்தை, மனச்சோர்வை மற்றும் மனவேதனைகளைப் போட முடியும், ஆனால் பிதா ஏற்கனவே அவனைத் துரத்திவிட நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார்...நாம் வார்த்தையைப் பேச, அவன் வெளியேறத்தான் வேண்டும்...நாம் அப்படிச் சொல்வதால் அல்ல, ஆனால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினதாலே.

அணில்கள் இல்லாதபோது அணில்களைப் சிருஷ்டித்த அதே தேவன். அது சகோதரி ஹாட்டியின் இதயத்தின் விருப்பத்தை அளிக்கிறது: அவளுடைய இரண்டு மகன்கள். மருத்துவரின் கை அவளைத் தொடுவதற்கு முன்பே சகோதரி பிரான்ஹாமின் ஒரு கட்டியைக் குணப்படுத்தியவர். அவர் நம்மோடு இருக்கிற அதே தேவனாய் மாத்திரம் இல்லாமல், அவர் ஜீவிக்கிறார் மற்றும் நமக்குள்ளாக வாசம் செய்கிறார். நாம் மாம்சமான வார்த்தையாக இருக்கிறோம்.

நான் நோக்கிப் பார்த்து ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தை கேட்கும் பொழுது, மாம்ச சரீரத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துவதை நாம் கேட்கிறோம், காண்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த தேவன் அனுப்பியவரை நாம் காண்கிறோம், கேட்கிறோம். மணவாட்டிக்கு மட்டுமே அந்த வெளிப்பாடு இருக்கும் என்பதை நாம் அறிவோம், எனவே நாம் அச்சமற்றவர்களாகிவிட்டோம். பதட்டமாகவோ, துயரமாகவோ, விரக்தியாகவோ, ஆச்சரியமாகவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை...நாமே மணவாட்டி.

என் சகோதரனே, "செவி கொடுத்து, பிழைத்துக்கொள்” பிழைத்துக்கொள்!
இப்பொழுதே இயேசுவுக்கு செவி கொடுத்து, பிழைத்துக் கொள்;
ஏனென்றால் அது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா!
அது நீங்கள், "செவி கொடுத்து பிழையுங்கள்” என்பதாய் மாத்திரமே உள்ளது.

ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக, நாம் என்னே ஒரு மகத்தான நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நிமிடத்திற்கு நிமிடம் நாம் எதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த நாளிலும் நாம் நம்முடைய அன்புக்குரியவர்களைக் காணப் போகிறோம் என்பதையே, அப்பொழுது, ஒரு இமைப்பொழுதில், நாம் இங்கிருந்து வெளியேறி, அவர்களுடன் மறுபுறம் இருப்போம். அது மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று நம்மால் அதை உணர முடியும் என்று தோன்றுகிறது...மகிமை!

மணவாட்டியே வாருங்கள், நித்திய ஜீவனின் வார்த்தையை எங்களிடத்தில் அவர் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தின் பேரில் மீண்டும் நாம் ஒரு முறை ஒன்றிணைவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்

வேதவாக்கியங்கள்: எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12

 

 

சனி, 18 அக்டோபர், 2025

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,

நாம் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 63-1229M விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதனின் இங்கே இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்க ஒன்று கூடுவோமாக.

சகோ.ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 11 அக்டோபர், 2025

அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,

இப்பொழுது ஒலிநாடாக்களில் கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்.

கர்த்தாவே, இந்த ஆறு சிறிய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியான எங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை நாங்கள் எவ்வாறு வெளிப்படுத்தத் துவங்க முடியும்? இது எங்களுக்கு இந்த நேரத்தின் செய்தியின் வெளிப்பாடாயுள்ளது. இது தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாகப் பேசி, “நீங்கள் என்னுடைய சத்தத்தோடு தரித்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தை உங்களுக்கு என்ன பொருட்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஒலிநாடாக்களில் நான் பேசியுள்ள இந்த செய்திகள் இன்றைக்கான என்னுடைய அடையாளம் என்ற வெளிப்பாட்டை நீங்கள் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று தம்முடைய மணவாட்டியினிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த காந்த ஒலிநாடாக்களில் நான் என் சத்தத்தை வைத்துள்ளேன்; ஏனென்றால் இந்தச் செய்திகள் முழு வார்த்தையையும் கொண்டிருக்க வேண்டும். ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய சத்தத்தை கேட்கும் கோடிக்கணக்கானவர்கள் இது என்னுடைய ஊழியம் என்ற வெளிப்பாட்டை உடையவர்களாக இருப்பார்கள். இது இன்றைக்கான பரிசுத்த ஆவியாக உள்ளது. இது என்னுடைய அடையாள செய்தியாய் இருக்கிறது.

“உலகம் முழுவதும் என் ஊழியத்தை அறிவிக்க நான் பல உண்மையுள்ள ஊழியர்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் என்னிடத்தில், ‘உம்முடைய ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் நாங்கள் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளோம். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து ஜனங்களை நாங்கள் கண்டோம். அவர்கள் உம்முடைய செய்தியைப் ஏற்றுக்கொள்ள தங்களுடைய சொந்த வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். இந்த நேரத்தின் செய்தியான, உங்களுடைய அடையாளத்தின் கீழ் வரும் யாவரும் காப்பாற்றப்படுவர் என்று நாங்கள் அவர்களிடத்தில் சொன்னோம்’” என்று சொன்னார்கள்.

இது இன்றைக்கான தேவனுடைய பரிபூரண வழி என்றால் என்ன? என்று ஒவ்வொரு மனிதனும் தன்னை ஆராய்ந்து தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமாயுள்ளது. தீர்க்கதரிசியின் வார்த்தை ஒரு முறை கூட தவறிப் போனதில்லை. அது மாத்திரமே சத்தியம் என்றும், அந்த காரியம் மாத்திரமே நம்முடைய மணவாட்டியை ஒன்றிணைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.

அவர் என்னவெல்லாம் கூறியிருந்தாரோ அவர் அதைக் கூறின விதத்திலேயே சரியாக நடந்தது. அக்கினி ஸ்தம்பம் இன்னும் நம்முடன் இங்கே உள்ளது. தேவனுடைய சத்தம் இன்னும் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தேவன் அந்த அடையாளத்தைக் கண்டபோது அவர் கடந்து செல்வார் என்று தீர்க்கதரிசி நம்மிடம் சொன்னார். இது அந்த அடையாள செய்தியின் கீழ் நாம் யாவரும் ஒன்று சேர்வதற்கான பதறலின் ஒரு நேரமாய் இருக்கிறது.

நாம் இந்தக் கடைசி காலத்தில் தேவனுடைய மகத்தான கரத்தைக் கண்டிருக்கிறோம். அவர் நமக்கு அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறார், அது அடையாள அறிவிப்புக்குறியின் கீழே வந்துள்ளது. இப்பொழுது, நாம அந்த அடையாள அறிவிப்புக்குறியின் கீழே இருக்கையில், நாம் ஒன்று கூடி வந்து பதறலில் இராப்போஜனத்தை எடுத்துக் கொள்வோமாக; ஏனென்றால் தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

நாங்கள் பதறல்கள் 63-0901E என்ற செய்தியை கேட்கப் போகிறபடியால், நீங்களும் அதைக் கேட்டுக்கும்படிக்கும், இராப்போஜனம் மற்றும் கால்களை கழுவும் ஆராதனையை இந்த ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கும்படி நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்க விரும்புகிறேன்.

செய்தியும் இராப்போஜன ஆராதனையும் ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களுடைய உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு உங்களுடைய ஆராதனை துவங்குவதற்கு தயவு செய்து தயங்க வேண்டாம், நம்முடைய வெளிநாட்டு விசுவாசிகள் பலர் அந்த நேரத்தில் உங்களுடைய ஆராதனையைத் தொடங்குவது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆராதனையின் கோப்பு பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு இணைப்பாக இருக்கும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

சேவைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 4 அக்டோபர், 2025

அன்புள்ள அடையாள மணவாட்டியே,

நாம் ஒன்று கூடும்போது, செய்தியைப் பற்றிப் பேசுவதில்லை, இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கும், அடையாளத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒன்றுபடுகிறோம்; அடையாளம் என்பது இந்த நேரத்தின் செய்தி! அதுதான் இந்த நாளின் செய்தி! அதுதான் இந்தக் காலத்தின் செய்தி.

நாம் அந்த அடையாளத்தை நமக்கும், நம்முடைய வீடுகளுக்கும், நம்முடைய குடும்பங்களுக்கும் பயன்படுத்தியுள்ளோம். நாம் வெட்கமடைகிறதில்லை. யார் இதை அறிந்திருக்கிறார்கள் என்று நாம் கவலைப்படுவதில்லை. எல்லோரும் அதை அறிய வேண்டும் என்றும், ஒவ்வொரு வழிப்போக்கரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்: நாம் ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்களாயிருக்கிறோம். நாம் ஒரு ஒலிநாடா இல்லமாயிருக்கிறோம். நாம் தேவனுடைய ஒலிநாடா மணவாட்டியாய் இருக்கிறோம்.

பரிசுத்த ஆவி = அடையாளம் = செய்தி. அவை யாவும் ஒன்றே. உங்களால் அவைகளைப் பிரிக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி = கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. உங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது. செய்தி = செய்தியாளர். விமர்சகர்கள் என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, தீர்க்கதரிசி கூறினார், உங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது.

தேவன் உங்களுடைய சந்தோஷம். தேவன் உங்களுடைய பெலன். இந்த செய்தியை அறிவது, அதை அறிவது மாத்திரமே சத்தியம், அதை அறிவதுதான் அடையாளம், அதுதான் நம்முடைய போதுமானது. சிலர், “நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை சத்தியம் என்று ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறலாம். அவ்வளவுதான் நல்லது, ஆனால் அதே சமயத்தில் அது பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தச் செய்தி இன்றைக்கான அடையாளம் என்று தீர்க்கதரிசி கூறினார். இந்தச் செய்தி பரிசுத்த ஆவி. இந்தச் செய்தியின் ஏதேனும் வெளிப்பாடு உங்களிடம் இருந்தால், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம். பலர், “நான் அதை விசுவாசிக்கிறேன். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். இது இந்த வேளைக்கான செய்தி” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய சபைகளில் அடையாளத்தின் சத்தத்தை இயக்கவில்லை, இயக்கமாட்டார்கள் என்று கூறி பெருமை பேசுகிறார்கள்.

தேவன் ஒரு அர்த்தம் இல்லாமல் தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் எதையும் பேசவில்லை, அவர் நமக்கு மாதிரிகள் மற்றும் நிழல்கள் மூலம் கற்பித்தார் என்று அவர் சொன்னார். இந்தச் செய்தியில், ராகாபும் அவளுடைய குடும்பத்தினரும் இரட்சிக்கப்படுவதற்கும், மணவாட்டியாக மாறுவதற்கும் என்ன செய்தார்கள் என்பதை தீர்க்கதரிசி மிக விரிவாகச் சொல்கிறார். அவள் என்ன செய்தாள் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும்.

ஒலிநாடாவை இயக்கும் பையன்கள் “ஒலிநாடாவை” இயக்கியபோது... ஒரு நிமிடம் பொறு, அந்த செய்தியாளர் என்ன செய்தார்? ஒரு ஒலிநாடாவை இயக்கினார். அப்பொழுது அவள் என்ன செய்தாள்? அவளுடைய வீட்டை ஒலிநாடாவை இயக்கும் ஒரு சபையாக ஆக்கினாள். “அந்த சிவப்பு நூல் கயிற்றைப் பார், அதாவது நான் ஒலிநாடாவை இயக்கும் ஒரு சபை” என்று கூற அவள் வெட்கப்படவில்லை.

நீங்கள் நினைப்பதோ, “ஆம், நான் செய்தியாளரையும், செய்தியையும் விசுவாசிக்கிறேன், ஆனால் எங்களுடைய சபையில் இனி நாங்கள் ஒலிநாடக்களை இயக்குவதில்லை. வேண்டாம் என்று கூறுகிற ஒரு போதகர் எனக்கு உண்டு, ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றனவோ அதை மேற்கோள் காட்டி அவர் அப்படியே பிரசங்கிக்கிறார்” என்று அவள் கூறியிருந்திருந்தால் என்னவாயிருக்கும். அவள் இரட்சிக்கப்பட்டிருந்திருப்பாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா…???

அவள் அடையாளத்தைப் பயன்படுத்தினாள். அவளுடைய வீட்டார் காக்கப்பட்டனர். இல்லையேல் அவள் இருந்த இடத்திலேயே அவள் அழிந்து போயிருப்பாள்.

ஒலிநாடாக்களை இயக்குவது குறித்து பல ஊழியர்கள் சாக்குப்போக்குகள் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் பெரும்பாலானவர்கள்: “தீர்க்கதரிசி ஒருபோதும் சபையில் ஒலிநாடாக்களை இயக்குவதாகச் சொல்லவில்லை” என்று கூறுகிறார்கள்.

ராகாப் தன்னுடைய வீட்டை ஒரு சபையாக மாற்றினாரள், அவளுடைய சபை ஒலிநாடாக்களை இயக்கியது என்று தீர்க்கதரிசி கூறினார். அவள் தன்னுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்கியதால், அவளும், ஒலிநாடா சபையில் இருந்த அவளுடைய யாவரும், அடையாளத்தின் கீழ் இருந்து, காப்பாற்றப்பட்டனர். மற்ற எல்லா சபைகளும் அழிந்தன.

சகோதர சகோதரிகளே, தயவுசெய்து, ஒரு போதகர் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க முடியாது என்றோ, அவர் அவ்வாறு செய்தால் அது தவறு என்றோ நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. என்னுடைய சொந்த வழியில், நான் இப்போது இந்தக் கடிதத்தின் மூலம் பிரசங்கிக்கிறேன், ஆனால் உங்கள் இருதயத்தைத் திறந்து, தீர்க்கதரிசி என்ன கூறிக்கொண்டு, உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேளுங்கள். உங்களுடைய போதகர் அவ்வாறு செய்யாவிட்டால், அல்லது உங்கள் சபையில் ஒலிநாடாக்களை இயக்காமல், ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி; அது எதுவாக இருந்தாலும், வார்த்தையின்படி, நான் அந்தக் காலத்தின் செய்தியை விசுவாசிக்கிறேன் என்று எவ்வளவுதான் கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, வார்த்தை கூறுகிறதை நான் விசுவாசிக்கிறபடி, அந்த அடையாளமாக, அந்தக் காலத்தின் செய்தி, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.

இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரத்துடன், அடையாளம் 63-0901M என்ற செய்தியைக் கேட்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ள முடியாவிட்டால், எந்த அடையாள செய்தியையாவது இயக்கி, அதைப் பயன்படுத்துங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம் 4:10
யாத்திராகமம் 12வது அதிகாரம்
யோசுவா 12வது அதிகாரம்
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 / 19:1-7
ரோமர் 8:1
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 2:12 / 4:30
எபிரெயர் 6:4 / 9:11-14 / 10:26-29 / 11:37 / 12:24 / 13:8, 10-20
பரி. யோவான் 14:12

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 27 செப்டம்பர், 2025

அன்புள்ள ஒன்றிணைக்கப்பட்ட மணவாட்டியே,

நம்முடைய நாளில் தேவன் செய்துகொண்டிருக்கிற எல்லாவற்றிலும் ஒரு பாகமாக இருக்கும்படி நான் மிகவும் உற்சாகமடைந்து, மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன். ஆதியிலிருந்த தேவனுடைய சிந்தனைகள் இப்பொழுது நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறோம்.

வேதாகமம் முழுவதும், தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்து, என்ன சம்பவிக்கப் போவதாயிருந்தது என்பதை உரைத்தனர். சில சமயங்களில் அந்த தீர்க்கதரிசனங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேறவில்லை, ஆனால் காலம் நிறைவேறினபோது, அது நிறைவேறியது; ஏனெனில், தம்முடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட தேவனுடைய சிந்தனை நிறைவேற வேண்டும்.

ஏசாயா தீர்க்கதரிசி, "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்" என்று கூறினான். ஒவ்வொரு எபிரெய குடும்பமும் தங்களுடைய சிறிய மகளை இந்தக் குழந்தையைப் பெறத் ஆயத்தப்படுத்தினர. அவர்கள் அதற்கு காலணிகள் மற்றும் மூடப்பட்ட காலணிகள் மற்றும் சிறிய விளையாட்டுப் பொருட்களை வாங்கி, வரப் போகும் குழந்தைக்காக ஆயத்தப்படுத்தினர். தலைமுறைகள் கடந்தன, ஆனால் இறுதியாக தேவனுடைய வார்த்தை நிறைவேறியது.

ஒரு வாலிப பையனாக வளருகையில், நான் எப்பொழுதுமே வியப்படைந்தது உண்டு, கர்த்தாவே உம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்படி உம்முடைய ஜனங்களை எப்பொழுதும் ஒன்றிணைத்திருக்கிறீர் என்பதை உம்முடைய வார்த்தையில் நான் காண்கிறேன். உம்முடைய எபிரெய பிள்ளைகளை மோசே என்ற ஒரே மனிதனால் ஒன்றிணைத்தீர், அவன் அவர்களை அக்கினி ஸ்தம்பத்தினால் வாக்குத்தத்த தேசத்திற்கு வழி நடத்தினான்.

நீர் மாம்சமாகி பூமியில் வாசம் செய்த போது, நீர் உம்முடைய சீஷர்களை ஒன்றிணைத்தீர். உம்முடைய வார்த்தையை அவர்களுக்கு வெளிப்படுத்தும்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரியத்திலிருந்தும் வேறுபிரித்தீர். பெந்தெகொஸ்தே நாளில், நீர் வந்து உம்முடைய பரிசுத்த ஆவியை அவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பு, நீர் மீண்டும் ஒருமுறை உமது சபையை ஒரே இடத்தில், ஏகமனதோடு, ஒருமனப்பட்டு ஒன்றிணைத்தீர்.

இன்று அது எப்படி சாத்தியமாகும் என்று நான் நினைத்தேன், கர்த்தாவே? உம்முடைய மணவாட்டி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறாள். மணவாட்டி அனைவரும் ஜெபர்சன்வில்லுக்கு வருவார்களா? அது நடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை கர்த்தாவே. ஆனால் கர்த்தாவே, நீர் ஒருபோதும் உம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை. இது உம்முடைய பிரமாணம், அதைத் தடுக்க எந்த வழியும் இல்லை. நீர் அதை எப்படி செய்வீர்?

மகிமை...இன்றைக்கு, நாம் நம்முடைய சொந்த கண்களால் காண முடியும், மிக முக்கியமாக, அதனுடைய ஒரு பாகமாக இருங்கள்: தேவனுடைய நித்திய வார்த்தை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் சரீரப்பிரகாரமாக ஒரே இடத்தில் இல்லை, நாம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறோம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்போது தேவனுடைய சத்தத்தின் மூலம் தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துள்ளார். அவருடைய வார்த்தை உரைக்கப்பட்டு ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கான தேவனுடைய முற்றிலுமானது ஒன்று சேர்ந்து தம்முடைய மணவாட்டியை இணைத்துக் கொண்டிருக்கிறது...அதைத் தடுக்க எதுவும் இல்லை.

தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஒன்று சேருகின்றாள். ஒரு இணையும் நேரம் உண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைந்து கொண்டிருக்கிறாள்? எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக. ஆமென்!

ஒன்றிணைக்கும் நேரம் இப்போது நடக்கிறது!!! நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது எது? பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையால், தம்முடைய சத்தத்தால். நாம் எதற்காக ஒன்றிணைந்து கொண்டிருக்கிறோம்? ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காகவே!!! நாம் அனைவரும் போய்க்கொண்டிருக்கிறோம், ஒருவரையும் விட்டுச் செல்லப் போகிறதில்லை.

தேவன் அவளை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். ஆம் ஐயா, இணைதல்! அவள் எதனோடு இணைந்து கொண்டிருக்கிறாள்? வார்த்தையோடு!

நம்முடைய நாளுக்கான வார்த்தை என்ன? இந்தச் செய்தி, அவருடைய சத்தம், தம்முடைய மணவாட்டிக்குக் தேவனுடைய சத்தம், ஒரு மனிதனல்ல. மனிதர்களல்ல. ஒரு குழுவல்ல. அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம்.

“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாள். எந்த ஸ்தாபனம் அல்லது வேறு யார் என்னக் கூறினாலும் அதைப் பொருட்படுத்துகிறதில்லை.

எவரேனும் என்னக் கூறினாலும், நாம் நிரூபிக்கப்பட்ட, நம்முடைய நாளுக்கான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தோடு இணைந்து கொண்டிருக்கிறோம். வேறொருவருடைய வியாக்கியானத்தோடு அல்ல: நாம் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அது ஒவ்வொரு மனிதனுடனும் மாறுகிறது, ஆனால் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் ஒருபோதும் மாறுகிறதில்லை, அது தேவனுடைய வார்த்தையாய், தேவனுடைய சத்தமாய் இருக்கும்படி அக்கினி ஸ்தம்பத்தினால் தானே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைக் குறித்து மனிதனுக்குள்ள தொல்லையென்னவெனில், அவன் தன் தலைவனை அறியாமலிருக்கிறான். ஆம், ஐயா. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்று சேருகின்றனர், அவர்கள் ஒரு பேராயரை அல்லது ஒரு மனிதனை சுற்றி ஒன்று சேருகின்றனர். ஆனால் அவர்கள் தலைவரை, வார்த்தையில் உள்ள பரிசுத்த ஆவியானவரை சுற்றி ஒன்று சேருகிறதில்லை. புரிகிறதா? அவர்களோ, “ஓ, பரவாயில்லை, நான் சற்று மதவெறிகொண்டவனாகிவிடுவேன் என்று நான் பயப்படுகிறேன்; நான் தவறான பாதையில் சென்று விடுவேன் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறுகிறார்கள். ஓ, ஓ, ஓ, ஓ, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.

இங்குதான் விமர்சகர்கள் தங்கள் சபைகளை சுட்டிக்காட்டி, “பாருங்கள், அவர்கள் சகோதரன் பிரான்ஹாம் என்ற ஒரு மனிதனை உயர்த்துகிறார்கள். அவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட விசுவாசிகளாய், அந்த மனிதன் பேரில் ஒன்று கூடுகிறார்கள், அந்த மனிதன், பரிசுத்த ஆவியானவர் அல்ல” என்கிறார்கள்.

அர்த்தமற்றது, அந்த மனிதன் மூலமாக உரைக்கப்பட்ட ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்தின் பேரில் நாம் இணைந்து கொண்டிருக்கிறோம். நினைவிருக்கட்டும், அந்த மனிதனே இந்த நாளில் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தும்படி வெளியே அழைக்க அவருடைய சத்தமாய் இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவராய் இருக்கிறார். அதுவே தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாய் உள்ளது. ஆனால் மாறாக, அவர்கள் மனிதர்களை சுற்றி ஒன்றுகூடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை இயக்குகிறதில்லை. உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா??? ஒரு ஊழியக்காரன் இந்த செய்தியை கர்த்தர் உரைக்கிறதாவது என்ற இந்த மணி நேரத்துக்கான செய்தியாக விசுவாசிப்பதாக உரிமை கோரி, தங்களுடைய சபைகளில் அந்த சத்தத்தை இயக்காததற்கு ஒரு விதமான சாத்துப் போக்கை கண்டறிந்து, ஆனாலும் ஜனங்களுக்கு ஊழியம் செய்து அவர்கள் இவர்களுக்கு செவி கொடுக்க வேண்டும் என்றும் மற்ற ஊழியக்காரர்கள் வார்த்தையை பிரசங்கிக்க வேண்டும்…அதன்பின்னர் நாங்கள் ஒரு மனிதனை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் அந்த மனிதர்களுக்கு என்ன செய்தார் என்று கேள்விப்பட்டோம்!!

நாம் ஒரு கலியாணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். நாம் அவரோடு ஒன்றாகி கொண்டு இருக்கிறோம். வார்த்தை நீங்களாக மாறுகிறது, நீங்கள் வார்த்தையாகிவிடுகிறீர்கள். இயேசு, “அந்த நாளில் நீங்கள் அதை அறிவீர்கள். பிதாவாக இருக்கிற யாவும், நானாக இருக்கிறேன், நானாக இருக்கிற யாவும், நீங்களாக, நீங்கள் யாவருமாக இருக்கிறீர்கள். அந்த நாளில் நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றார்.

எங்களுடைய நாளில் எங்களைக் குறித்தும், உம்மைக் குறித்ததுமான வெளிப்பாட்டிற்காக கர்த்தாவே உமக்கு நன்றி. உம்முடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உம்முடைய மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். உம்முடைய பதிவு செய்யப்பட்ட வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுக்கும்படி நான் உலகத்தை அழைக்கிறேன். 63-0818 இணையும் நேரமும் அடையாளமும் என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி உங்களை வரவேற்கிறோம். உங்களால் எங்களுடன் இணைய முடியாவிட்டால், ஒரு ஒலிநாடாவை, எந்த ஒலிநாடாவையாவது எடுத்துக் கொள்ளுங்கள்; அவை அனைத்தும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும், தேவனுடைய வார்த்தை உங்களை பரிபூரணப்படுத்த செவிகொடுத்து, அவருடைய அதி சீக்கிர வருகைக்கு உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3

 

அவள் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். ஏன்? அவள் மணவாட்டியாயிருக்கிறாள். அது உண்மை. அவள் தன்னை தன்னுடைய மணவாளனோடு இணைத்துக் கொண்டிருக்கிறாள், பாருங்கள், மணவாளன் வார்த்தையாயிருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.”