காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 28 ஜூன், 2025

அன்பான கிறிஸ்துவின் மணவாட்டியே,

ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-1127B-தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்ச்சித்தல் என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்றுகூடுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 21 ஜூன், 2025

அன்பான மாம்சமான வார்த்தையே,

அல்லேலூயா! வார்த்தையைக் கேட்பதன் மூலம் நம்முடைய இருதயத்தின் விளை நிலம் ஆயத்தமாக உள்ளது, மேலும் அது நமக்கு வெளிப்படுத்தியுள்ளது, நாம் கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாய் இருக்கிறோம்; விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமற்ற தேவகுமாரனோடு, தூய்மையான, கலப்படமற்ற மணவாட்டி-வார்த்தையுடன், அவருடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரால் கழுவப்பட்டு நின்றுகொண்டிருக்கிறோம்.

உலகத் தோற்றத்திற்கு முன்பு இயேசு முன்குறித்த நம்மை, பிதாவின் மார்புக்கு அழைத்துச் செல்லும்படி, நாம் மாம்சமான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக மாறிவிட்டோம்.

நாம் நடந்துகொண்ட விதத்திலும், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையின் அவருடைய உண்மையான வெளிப்பாடு நமக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதிலும், நாம் அச்சமற்றவர்கள் என்பதிலும் உலகம் நம்முடைய விசுவாசத்தின் வெளிப்படுத்துதலைக் காண முடியும். முழு உலகமும் என்ன சொல்கிறது அல்லது நம்புகிறது என்பது நமக்கு கவலையில்லை...நாம் அச்சமற்றவர்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது.

இந்த கடைசி-கால செய்தியை அவர்கள் விசுவாசிப்பதாக கூறுகிற அநேகர் இருக்கின்றனர், தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், வில்லியம் மரியன் பிரான்ஹாம் ஏழாம் தூதனாகிய செய்தியாளராயிருந்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், அவர் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உரைத்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அந்த சத்தம் என்பதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் உரைக்கப்பட்ட வார்த்தையின் பிழையின்மையை விசுவாசிக்கிறதில்லை. அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதை அவர்கள் விசுவாசிப்பதில்லை.

அதன் அர்த்தம் என்ன? அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்பதே அர்த்தமாகிறது!

அது ஒரு வெளிப்பாடு, அவர் தம்முடைய கிருபையினால் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கென்று நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் உங்கள் சுய முயற்சியினால் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் விசுவாசத்தைப் எப்போதும் உடையவர்களாய் இருக்கிறீர்கள், தேவனுடைய கிருபையால் அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். எனவே விசுவாசம் என்பது ஒரு வெளிப்பாடாகும். தேவனுடைய சபை முழுவதுமே வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளது.

விசுவாசத்தின் மூலம், இந்தச் செய்தி இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியைப் போஷித்து, பரிபூரணப்படுத்துவதற்காகப் பதிவுசெய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்று நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சத்தியம் என்று தேவன் கூறினதில் உள்ள ஒரு அசலான, கலப்படமற்ற விசுவாசமாக உள்ளது. மேலும் இது நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதை எதுவும் அசைக்கப் போவதில்லை. அவருடைய தீர்க்கதரிசி நம்மை நம்முடைய கர்த்தரிடத்திற்கு அறிமுகப்படுத்தும் வரையில் அது அங்கேயே இருக்கப்போகிறது.

நாம்தாமே அதைத் தவிர்க்க முடியாது. உலகத் தோற்றத்திற்கு முன்னே அதை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கும்படி அவர் நம்மை ஆயத்தப்படுத்தினார். இந்தக் காலத்தில் அவருடைய சத்தத்தை நாம் ஏற்றுக் கொள்வோம் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்மை முன்னறிந்து, ஏற்றுக் கொள்ளும்படி நம்மை நியமித்திருந்தார்.

அப்படியானால், இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் செய்து வரும் கிரியைகள், ஒருபோதும் தவறி போகாத இந்த தரிசனங்கள், ஒருபோதும் தவறி போகாத வாக்குத்தத்தங்கள் மூலம், வேதாகமத்தில் வாக்களிக்கப்பட்டுள்ள எல்லா அப்போஸ்தல அடையாளங்களும், மல்கியா 4, மற்றும் ஓ, வெளிப்படுத்தல் 10:6 இவையனைத்தும் நிறைவேற்றப்பட்டு, விஞ்ஞானத்தின் மூலமும், மற்ற ஒவ்வொரு வழியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியிருக்கவில்லையென்றால், இந்த காரியங்கள் நடந்திருக்காது. ஆனால் நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியிருந்தால், நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லியிருக்கிறேன் என்பதற்கு அவைகள் சாட்சி பகருகின்றன. அவர் இன்னும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய ஆவியின் வெளிப்படுத்துதல், மணவாட்டியைக் கொண்டு செல்லவிருக்கிறது. அந்த விசுவாசம், வெளிப்பாடு உங்கள் இருதயத்தில் விழுந்து “இதுதான் அந்த வேளை” என்பதை உணர்த்துவதாக.

இதுவே நேரம். இதுவே செய்தி. இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை அழைக்கும் தேவனுடைய சத்தம். ஓ சபையே, ஒலிநாடாக்களில் உள்ள இந்த சத்தத்தை கேட்பதே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்தவும், விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவும் உங்களுடைய இருதயத்தின் விளை நிலத்தைக் கர்த்தர் ஆயத்தப்படுத்துவாராக.

அவருடைய அதிசீக்கிர வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்துகிற தேவனுடைய சதத்தை நாங்கள் கேட்க போகிறபடியால், உன்னதங்களில் எங்களோடு ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, உங்களுடைய விசுவாசத்தைஉயர்வான தளங்களுக்குள் கொண்டு செல்லும்படிக்கு ஜெபர்சன்வில், நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் மீண்டும் ஒருமுறை உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 

அடுத்த வாரம் நாங்கள் எங்களுடைய முதல் அமைதியான தண்ணீர் முகாமமைத் (ஸ்டில் வாட்டர்ஸ் கேம்ப்) தொடங்கும்போது எங்களுக்காக தயவுகூர்ந்து ஜெபத்தில் இருங்கள்.

செய்தி: விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் 65-1126

 

 

படிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:

ஆதியாகமம் 15:5-6, 22:1-12
அப்போஸ்தலர் 2:17
ரோமர் 4:1-8, 8:28-34
எபேசியர் 1:1-5
யாக்கோபு 2:21-23

பரி. யோவான் 1:26, 6:44-46
சனி, 14 ஜூன், 2025

அன்புள்ள தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட சீமாட்டியே,

இதைத் தவிர்க்க வேறு வழி இல்லை, நீங்கள் தேவனுடைய ஆவிக்குரிய மரபணுவாயிருக்கிறீர்கள், அவருடைய சிந்தைகளின் பண்புகளின் வெளிப்பாடாய், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவருக்குள் இருந்தீர்கள்.

நாம் அதற்கு மேல் செல்ல முடியாது, பூமிக்குள் சென்ற அதே தானியத்தைப் போலவே இருக்கிறோம். மணவாட்டியின் ரூபத்தில், அதே வல்லமையுடன், அதே சபையுடன், அதே வார்த்தையுடன் ஜீவித்து, ஒரு தலையாக உருவாகி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாக இருக்கும் அதே இயேசுவாக நாம் இருக்கிறோம்.

ஆவிக்குரிய மரணத்தால், நம்முடைய முதல் இணைப்பிலிருந்து நாம் பிரிக்கப்பட்டு, இப்போது மீண்டும் பிறந்து, அல்லது நம்முடைய புதிய ஆவிக்குரிய இணைப்பிற்கு மறுவிவாகம் செய்து கொண்டோம் என்று அவர் நமக்குச் சொன்னார். இனி நம்முடைய பழைய மாம்சப்பிரகாரமான ஜிவியமும், உலகத்தின் காரியங்களும் இல்லை, ஆனால் நித்திய ஜீவன். ஆரம்பத்தில் நம்மில் இருந்த ஜீவ அணு நம்மைக் கண்டுபிடித்துவிட்டதே!

அதன் அர்த்தம் என்ன? நமது பழைய புத்தகம் நம்முடைய பழைய இணைப்போடு போய்விட்டது, அது மாற்றப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். அது இப்போது தேவனுடைய ”புதிய புத்தகத்தில்” உள்ளது; ஜீவப் புத்தகத்தில் அல்ல... இல்லை, இல்லை, இல்லை... ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவப் புத்தகத்தில் உள்ளது. ஆட்டுக்குட்டியானவர் மீட்டுவிட்டார். இது நம்முடைய விவாகச் சான்றிதழ், நம்முடைய உண்மையான நித்திய ஜீவ அணுவை பற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் ஆயத்தமா? இதோ அது வருகிறது. உங்களை நீங்களே விழித்தெழ செய்து கொண்டு, மகிமையுடன் ஆரவாரமிட, ஆர்ப்பரிக்க ஆயத்தமாகுங்கள், அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், இது ஒரு இரட்டைக் குழல் மற்றும் பரலோக சுமை ஏற்றுதலாகும்.

“என்னுடைய எல்லா தவறுகளுடனும், என்னுடைய எல்லா தோல்விகளுடனும் என் பழைய புத்தகம் என்று நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா...”

தேவன் அதை அவருடைய மறதியின் கடலில் போட்டுவிட்டார், நீங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீங்கள் நீதிமானாக்கப்பட்டீர்கள்...மகிமை! “நீதிமானாக்கப்பட்டீர்கள்”.

அதன் அர்த்தம் என்ன? தேவனுடைய பார்வையில் நீங்கள் அதை ஒருபோதும் செய்யவில்லை என்பதே அர்த்தமாகும். நீங்கள் தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக நிற்கிறீர்கள். மகிமை! இயேசு, வார்த்தை, உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். ஒரு அசுத்தமான பாவியான, நீங்கள் அவராக, வார்த்தையாக மாற. அவர் உங்களைப் போலானார், நாம் வார்த்தையாக இருக்கிறோம்.

அதுவே நம்மை ஆரம்பத்திலிருந்தே முன்குறிக்கப்பட்ட அவருடைய சிறிய ஜீவ அணுவாக ஆக்குகிறது. நாம் வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, கிறிஸ்துவின் முழு வளர்ச்சிக்கு வருகிறோம், அதனால் அவர் நம்மை அவருடைய மணவாட்டியாக மாற்ற முடியும்.

இப்போது என்ன நடக்கிறது?

உலகம் முழுவதிலுமிருந்து வார்த்தையின் பேரில் ஒன்றுகூடும் கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக் கூடாத இணைப்பாக இது உள்ளது.

தேசம் முழுவதும் செல்கிறது. இப்பொழுது நியூயார்க்கில் பதினொன்று மணி கழிந்து இருபத்தைந்து நிமிடங்கள். பிலதெல்பியாவிலும் சுற்று புறத்திலும் இன்னும் மற்றவிடங்களிலுமுள்ள சபைகளிலும் அருமையான பரிசுத்தவான்கள் உட்கார்ந்து கேட்டு கொண்டிருக்கின்றனர். மெக்சிகோவிலும், கனடாவிலும், சுற்று வட்டாரங்களிலும், தென் அமெரிக்க கண்டத்தில் இருநூறு மைல் தூரத்திலுள்ள மக்கள் இப்பொழுது கேட்டு கொண்டிருக்கின்றனர் - லட்சக்கணக்கான மக்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர்.

சபையே, இதுதான் உங்களுக்கு நான் அளிக்கும் செய்தி. நீங்கள் பழைய இணைப்பிலிருந்து, வார்த்தையினால் ஆவிக்குரிய இணைப்பில் உள்ளீர்களே.

அது கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையிலான ஆவிக்குரிய இணைப்பு, அது இப்போது சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. நாம் வெளிப்படுத்தப்பட்டு, ரூபுகாரப்படுத்தப்பட்டிருக்கிறோம்; இந்த நாளில் சம்பவிக்கும் என்று வேதம் கூறினதே, அதுவே இப்போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாளுக்கு நாள் சம்பவித்துக் கொண்டிருக்கிறது.

தேவன் ஒரு கற்புள்ள சபையை பெற்றுக் கொள்ளப் போகிறார். அவருடைய உண்மையான, உத்தகமான, வார்த்தை மணவாட்டி. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெரிந்து கொள்ளப்பட்டு சீமாட்டியாய் இருக்கிறோம்.

ஐயன்மீர், இதுவா சமயம்?

இந்தக் கடைசி நாட்களில் மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனாகிய கர்த்தரின் செய்தியின் வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். வேறெந்த காலத்துக்கும் அது வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. இக்காலத்துக்கு மாத்திரமே அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. மல்கியா; 4, லூக்கா; 17:30 யோவான்; 14:12, யோவேல்; 2:38, யோவான் ஸ்நானன் தன்னை வேதவாக்கியங்களில் அடையாளம் காண்பித்தது போல், இந்த வாக்குத்தங்களும் அமைந்துள்ளன.

இந்த வேதவாக்கியங்களை யார் நிறைவேற்றினார்கள்?

அவருடைய பலமுள்ள ஏழாம் தூதன், வில்லியம் மாரியன் பிரான்ஹாம். அவர் எப்போதும் அதை மாதிரியின்படி செய்தார். அவர் அதை ஒவ்வொரு முறையும் மாதிரியின்படி செய்தார். அவர் அதை நம் நாளில் மீண்டும் செய்கிறார், கடைசி நாளில் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் தம்முடைய கற்புள்ள மணவாட்டியை அழைத்து ஒன்று சேர்க்கிறார்.

மணவாட்டி என்னே ஒரு மகிமையான நேரத்தை அனுபவிக்கிறாள். ஒவ்வொரு கூட்டமும் பெரிதாகவும், இனிமையாகவும், இனிமையாகவும் மாறி வருகிறது. இதுபோன்ற ஒரு காலம் இதற்கு முன்பு இருந்ததில்லை. எல்லா சந்தேகங்களும் மறைந்துவிட்டன.

கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு 65-1125 என்ற செய்தியில், நாம் யாராய் இருக்கிறோம் என்றும், நம்முடைய நாளில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்றும், நம்முடைய நாளுக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை பேசுப்போவதை நாங்கள் கேட்க போகிறபடியால் வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

வேதவாக்கியங்கள்:

பரி. மத்தேயு 24:24
பரி. லூக்கா 17:30 / 23:27-31
பரி. யோவான் 14:12
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 5:1 / 7:1-6
2 தீமோத்தேயு 2:14
1 யோவான் 2:15
ஆதியாகமம் 4:16-17 / 25-26
தானியேல் 5:12
யோவேல் 2:28
மல்கியா 4

சனி, 7 ஜூன், 2025

அன்பான ஒன்று கூடும் மணவாட்டியே,

இப்பொழுது தேவன் எல்லா காலங்களிலும் தம்முடைய வழிகாட்டிகளை அனுப்பியிருக்கிறார். காலங்கள்தோறும், அவர் வழிகாட்டிகளை எப்பொழுதுமே அனுப்பாமல் இருந்ததில்லை. எல்லா காலங்களிலும், தேவன் தம்முடைய பிரதிநிதியாக யாரையாவது எப்பொழுதுமே ஒருவரை பூமியில், வைத்திருந்தார்.

நம்முடைய புரிந்துகொள்ளுதலையோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த எண்ணங்களையோ நாம் சார்ந்திருக்க தேவன் விரும்புகிறதில்லை. அதனால்தான் அவர் தம்முடைய மணவாட்டிக்கு ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார்; ஏனென்றால் அவருக்கு எப்படிச் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் உள்ளது. தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றவில்லை. அவர் தம்முடைய ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியை அனுப்பத் தவறியதில்லை, ஆனால் நீங்கள் அந்த வழிகாட்டியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர் தம்முடைய வழிகாட்டி மூலம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அவருடைய வழிகாட்டி செல்லும்படி கூறுகிற வழியில் நீங்கள் செல்ல வேண்டும். உங்களுடைய வழிகாட்டியாக மற்ற சத்தங்களை கேட்டு நம்பினால், நீங்கள் வெறுமனே தொலைந்து போவீர்கள்.

அவர் நமக்குச் சொல்லவும், நமக்கு வெளிப்படுத்தவும் பல காரியங்கள் இருந்தன என்று பரி. யோவான் 16 கூறுகிறது, எனவே அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை வழிகாட்டும்படி அனுப்பி நமக்குச் சொல்லுவார். பரிசுத்த ஆவியானவரே ஒவ்வொரு காலத்திற்கும் தீர்க்கதரிசியாகிய வழிகாட்டி என்று அவர் கூறினார். இவ்வாறு, அவருடைய தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவருடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பப்பட்டார்கள்.

பரிசுத்த ஆவியானவர், சில மனிதர்களின் குழுவை அல்ல, சபையை வழிநடத்த அனுப்பப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் எல்லா ஞானமும் கொண்டவர். மனிதர்கள் வெற்றாச்சார முறையையுடையவர்களாகவும், அலட்சியமாகவும் மாறுகிறார்கள்.

அது மனிதன் அல்ல, ஆனால் அந்த மனிதனில் உள்ள பரிசுத்த ஆவி. தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நம்முடைய பூமிக்குரிய வழிகாட்டியாக இருக்கவும், அவர் தெரிந்துகொண்ட மனிதன் நம்முடைய பரலோக வழிகாட்டியால் வழிநடத்தப்படுகிறார். அந்த வழிகாட்டியை நாம் பின்பற்ற வேண்டும் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது. நாம் என்ன நினைத்தாலும், என்ன நியாயமானதாகத் தோன்றினாலும், அல்லது வேறு யாராவது என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, அதைப் பிரிக்க நாம் உட்பட்டவர்கள் அல்ல, வழிகாட்டி ஒருவர் மாத்திரமே.

தேவன் ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார், அது அவர் நியமித்த வழிகாட்டி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நம்முடைய தீர்க்கதரிசியாகிய வழிகாட்டி தேவனால் அவருடைய வார்த்தையைப் பேச நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய வார்த்தை தேவனுடைய வார்த்தை. தீர்க்கதரிசியாகிய வழிகாட்டி, அவர் மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானத்தை உடையவராக இருக்கிறார். தேவன் தம்முடைய வார்த்தையை அவரிடம் உதட்டிலிருந்து செவிக்குப் பேசினார். எனவே, தேவன் வழிகாட்டியின் வார்த்தையை நீங்கள் ஒருபோதும் மறுக்கவோ, மாற்றவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது.

நீங்கள் அவரை, அவரை மாத்திரமே பின்பற்ற வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் தொலைந்து போவீர்கள். தேவனால் நியமிக்கப்பட்ட வழிகாட்டியான அவரை விட்டுச் செல்லும்போது, நீங்கள் உங்களுடைய சொந்தமானதில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அவர் தெரிந்துகொண்ட வழிகாட்டியுடன் நெருக்கமாக இருக்கவும், அவர் மூலம் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு கீழ்ப்படியவும் நாம் விரும்புகிறோம்.

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழல் என்று நம்முடைய வழிகாட்டி நமக்குக் கற்பித்துள்ளார்.

யாத்திராகமம் 13:21-ல் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருந்த போது, அவர்கள் அதற்கு முன்பு அவ்வழியாக பிரயாணம் செய்ததில்லையென்று தேவன் அறிந்திருந்தார். அது நாற்பது மைல் தூரத்தில் மாத்திரமே இருந்தது. ஆயினும் அவர்களுடன் கூட செல்ல அவர்களுக்கு ஒன்று அவசியமாயிருந்தது. இல்லையேல் அவர்கள் வழிதப்பிவிடுவார்கள். எனவே அவர், தேவன் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியை அனுப்பினார். யாத். 13: 21. இந்தவிதமான ஏதோ ஒன்று, “அவர் வழியில் உங்களைக் காக்கிறதற்கும், இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களுக்கு வழி காட்டவும், “நான் என் தூதனை, அக்கினி ஸ்தம்பத்தை உங்களுக்கு முன்னே அனுப்புகிறேன்” என்றார். . இஸ்ரவேல் புத்திரர் (இரவிலே) அக்கினி ஸ்தம்பமாகவும், பகலிலே மேகஸ்தம்பமாகவும் இருந்த அந்த வழிகாட்டியைப் பின் தொடர்ந்தனர். அது நின்றபோது, அவர்களும் நின்றனர். அது பிரயாணப்பட்ட போது. அவர்களும் பிரயாணப்பட்டனர். அவர்கள் அந்த தேசத்தினருகில் வந்த போது, அதில் பிரவேசிக்க அவர்கள் தகுதியாய் காணப்படவில்லை. எனவே அவர் அவர்களை மறுடியும் வனாந்தரத்துக்குக் கொண்டு சென்றார்.

அதுதான் இன்றைய சபை என்று அவர் கூறினார். நாம் நம்மைத் திருத்திக்கொண்டு ஒழுங்கமைத்திருந்தால் நாம் ஏற்கனவே சென்றிருப்போம், ஆனால் அவர் நம்மைச் சுற்றிச் சுற்றிச் சுற்றி வழிநடத்த வேண்டியிருந்தது.

அவர் பின்தொடர்ந்த அக்கினி ஸ்தம்பத்திலிருந்து கேட்டபடி அவர்கள் தங்களுடைய வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டியிருந்தது. தேவன் சொன்னதை அவர் அவர்களிடம் சொன்னார், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும். அவர் வழிகாட்டியின் சத்தம். ஆனால் அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட வழிகாட்டியிடம் கேள்வி கேட்டு வாதம் செய்தனர், இதனால் அவர்கள் 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர்.

மோசேயின் நாட்களில் பல ஊழியர்கள் இருந்தனர். மோசேயால் இதையெல்லாம் செய்ய முடியாத நிலையில், மக்களுக்கு உதவ தேவன் அவர்களை நியமித்தார். ஆனால் மோசே சொன்னதை மக்களுக்குத் திரும்பச் சுட்டுக்காட்டுவதே அவர்களின் கடமை. வேதம் அந்த மனிதர் சொன்னதை எதுவும் கூறவில்லை, மக்களை வழிநடத்த வார்த்தையாயிருப்பதாக மோசே சொன்னதை மாத்திரமே அது கூறுகிறது.

தேவன் மோசேயை காட்சியிலிருந்து எடுத்துக்கொண்ட போது, யோசுவா மக்களை வழிநடத்த நியமிக்கப்பட்டார், இது இன்றைய பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. யோசுவா புதிதாக எதையும் பிரசங்கிக்கவில்லை, மோசேயின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை, வழிகாட்டி சொன்னதை வியாக்கியானிகவும் முயற்சிக்கவில்லை; அவர் மோசே சொன்னதைப் படித்து மக்களிடம், "வார்த்தையுடன் தரித்திருங்கள். மோசே சொன்னதைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார். மோசே சொன்னதை மட்டுமே அவர் படித்தார்.

இன்றைய தினத்திற்கு என்ன ஒரு சரியான மாதிரி. தேவன் மோசேயை ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் ரூபகாரப்படுத்தினார். நம்முடைய தீர்க்கதரிசி அதே அக்னி ஸ்தம்பத்தினால் ரூபுகாரப்படுத்தப்பட்டார். மோசே பேசிய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தையாக இருந்தன, அவை உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டன. நம்முடைய நாளில் தேவனுடைய தீர்க்கதரிசி பேசினார், அது ஒலிநாடாவில் வைக்கப்பட்டது.

மோசே காட்சியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மோசே அவர்களுக்கு முன்பாகப் பேசிய வார்த்தைகளை வைத்து மக்களை வழிநடத்த யோசுவா நியமிக்கப்பட்டார். தேவனுடைய வழிகாட்டி பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கவும், அதில் நிலைத்திருக்கவும் அவர் அவர்களிடம் கூறினார்.

மோசே சுருள்களிலிருந்து வார்த்தைக்கு வார்த்தையாக எழுதியதை யோசுவா எப்போதும் வாசித்தார். அவர் எப்போதும் அவர்களுக்கு முன் வார்த்தையை வைத்தார். நம்முடைய நாளுக்கான வார்த்தை எழுதப்படவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டிக்கு அவர் பேசியதை வார்த்தைக்கு வார்த்தையாகக் கேட்கும்படி அது பதிவு செய்யப்பட்டு, இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் கேட்கப்படுகிறது.

தேவன் ஒருபோதும் தம்முடைய திட்டத்தை மாற்றுவதில்லை. அவர் நம்முடைய வழிகாட்டி. அவருடைய சத்தம இன்று தம்முடைய மணவாட்டியை வழிநடத்தி ஒன்றிணைக்கிறது. நம்முடைய வழிகாட்டி அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் நம்மை வழிநடத்துகிற நம்முடைய வழிகாட்டியின் சத்தத்தை மட்டுமே நாம் கேட்க விரும்புகிறோம். இது கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக் கூடாத இணைப்பாய் உள்ளது. அவருடைய சத்தத்தை நாம் அறிவோம்.

நமது வழிகாட்டி பிரசங்கப்பீடத்திற்கு வரும்போது, பரிசுத்த ஆவி அவரைத் தொடுகிறார், அது இனி அவர் அல்ல, ஆனால் நம்முடைய வழிகாட்டி. அவர் தன்னுடைய தலையை ஆகாயத்தில் உயர்த்தி, “கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது!” என்று சத்தமிடுகிறார். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் மணவாட்டியின் ஒவ்வொரு உறுப்பினரும் அவரிடம் நேரடியாக வருகிறார்கள். ஏன்? அவர் பேசும் விதத்தில்தான் நம் தலைவரை நாம் அறிவோம்.

நமது வழிகாட்டி = வார்த்தை
வார்த்தை = தீர்க்கதரிசியிடம் வருகிறது
தீர்க்கதரிசி = தேவனுடைய ஒரே தெய்வீக வியாக்கியானி; அவருடைய பூமிக்குரிய வழிகாட்டி.

வார்த்தைக்குப் பின்னால் தரித்திருங்கள்! ஓ, ஆம், ஐயா! அந்த வழிகாட்டியுடன் தரித்திருங்கள். அதன் பின்னால் இருங்கள். அதன் முன் செல்லாதீர்கள், நீங்கள் அதன் பின்னால் தரித்ருங்கள். அது உங்களை வழிநடத்தட்டும், நீங்கள் அதை வழிநடத்த வேண்டாம். நீங்கள் அதை வழிநடத்த விட்டுவிடுங்கள்.

நீங்கள் தொலைந்து போக விரும்பவில்லையென்றால், ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, நியமிக்கப்பட்ட அவருடைய பூமிக்குரிய வழிகாட்டியின் மூலமாக அவர் பேசப் போகின்றபடியால், நம்முடைய வழிகாட்டியினிடத்திற்கு வந்து செவி கொடுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்தி:
62-1014E — ஒரு வழிகாட்டி

வேதவாக்கியங்கள்:
பரி. மாற்கு 16:15-18
பரி. யோவான் 1:1 / 16:7-15
அப்போஸ்தலர் 2:38
எபேசியர் 4:11-13 / 4:30
எபிரெயர் 4:12
2 பேதுரு 1:21
யாத்திராகமம் 13:21

தொடர்புடைய சேவைகள்
சனி, 31 மே, 2025

அன்பான ஜீவனுள்ள நினைவுச்சின்னங்களே,

நாம் ஒலிநாடாவில் கேட்டுக் கொண்டிருக்கிற சத்தம் அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாய் உள்ளது. அது இப்போது ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு உண்மையான சபையாக இருக்கும் படியாக ஒரே இருதயமாய் ஒரு மனப்பட்டு இப்பொழுது அவருடைய மணவாட்டியை பொருத்தமாக ஒன்றிணைத்து, தேவனுடைய வல்லமை நிறைந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, ஆவிக்குரிய பலிகளை, தேவனுடைய துதிகளை செலுத்த, பரிசுத்த ஆவியினால் நமக்கு மத்தியிலே அசைவாடுகிறது.

நாம் அவருடைய வார்த்தையினால் வல்லமை நிறைந்த வீடாகவும், பரிசுத்த ஆவியின் வாசஸ்தலமாகவும் இருக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட நபர்களை உருவாக்கும்படிக்கு அவருடைய ஏழாம் தூதன் மூலமாக பேசவே கிறிஸ்து நமக்கு தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பினார்.

நாம் ஒவ்வொரு காரியத்திற்கும் சுந்தரவாளியாயிருக்கிறோம். இது நம்முடைய தனிப்பட்ட சொத்து, அது நமக்குச் சொந்தமானது. இது நமக்கு தேவனுடைய வெகுமதி. அதை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. அது நம்முடையது.

"என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினனிடத்தில் கேட்டுக் கொள்வதை நான் செய்வேன்." அங்கே யாரால் எதையும் மறுக்க முடியும்? நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘தள்ளுண்டு போ’ என்று சொல்லி உங்கள் இதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நீங்கள் கூறியுள்ளது நிறைவேறும் என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் கூறியுள்ளது என்னவாயிருந்தாலும் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.” என்னே வாக்குத்தத்தங்கள்! சுகமளித்தலுக்கு மட்டுமல்லாமல் எதற்குமே.

தேவனுக்கு மகிமை...நாம் எதைக் கேட்டாலுமே!

காலத்தின் தொடக்கம் முதற்கொண்டே, தேவனுடைய முழு சிருஷ்டியும் பெருமூச்சுவிட்டு, பூரண தேவ புத்திரர்கள் வெளிப்படுத்தப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறது. அந்த நாள் வந்துவிட்டது. இதுவே அந்த நாள். இதுவே அந்த நேரம். நாமே அந்த வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.

தேவன் உள்ளே நடந்து கொண்டும், அவர் உள்ளே பார்த்துக் கொண்டும், அவர் உள்ளே பேசிக் கொண்டும், அவர் உள்ளே கிரியை செய்து கொண்டும் இருக்கிற, அவருடைய ஜீவனுள்ள கருவிகளாக நாம் இருக்கிறோம். அது தேவன் நமக்குள்ளே இரண்டு கால்களிலும் நடந்து கொண்டிருக்கிறதாயுள்ளது.

நாம் எல்லா மனிதராலும் வாசிக்கப்படுகிற எழுதப்பட்ட அவருடைய நிருபங்களாக, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன் குறிக்கப்பட்ட, ஒரு ஜீவனுள்ள மனிதனுக்குள்ளாக அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிற புத்திர சுவிகாரமாக்கப்பட்ட குமாரரும் குமாரத்தி களுமாய், ஒரு ஜீவனுள்ள சாயலாய், ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சியாய் இருக்கிறோம்.

ஜீவிக்கிற தேவனிடத்தினின்று வரும் ஜீவிக்கின்ற வல்லமை, ஜீவிக்கிற ஞானம், ஜீவிக்கிற பொறுமை, ஜீவிக்கிற தேவபக்தி, ஜீவிக்கிற தேவனிடமிருந்து வருகின்ற ஜீவனுள்ள வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது, நம்மை ஜீவனுள்ள மனிதனாக, தேவனுடைய பரிபூரணத்தின் ஜீவ சாயலாக உருவாக்குகிறது.

அது பரிசுத்த ஆவியின் நபராக நம்மீது, அவருடைய பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகத்துடன், அவருடைய அனைத்து வல்லமைகளும் நம்மில் முத்திரையிடப்பட்ட கிறிஸ்துவே. கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒரு கூடாரத்தில் நமக்குள்ளாக ஜீவிக்கிற, தேவன். ஒரு ஜீவனுள்ள கூடாரம், ஜீவனுள்ள தேவனுடைய வாசஸ்தலம்; ஒரு பரிபூரண சபை, நம்மை மூடுவதற்கான ஒரு பரிபூரண தலைக்கல்.

தேவன் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அது அவருடைய முதல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட ஆதாமாக இருந்தது, நம்முடைய நாளில் ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சியாய், அவருடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தியது. அதிலிருந்து நான் நகர முடியாது. எதுவும் என்னை நகர்த்த முடியாது. யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை; அது என்னை சிறிதும் அசைக்கவில்லை. நான் அங்கேயே தரித்திருப்பேன்.

நான் காத்திருப்பேன், காத்திருப்பேன், காத்திருப்பேன். எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை. அது அங்கேயே தரித்திருக்கிறது. பின்னர், ஒரு நாள், நான் மற்ற எல்லா பரிசுத்தவான்களோடும் ஒருமனதாக சத்தமிடுவேன்: "நாங்கள் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் உறுதியுடன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்! பின்னர் நீர் எங்களை அவரிடம் அளிப்பீர். அதன்பின்னர் நாம் அனைவரும் என்றென்றுமாய் ஜீவிக்க மீண்டும் பூமிக்குத் திரும்புவோம்."

இன்று காலை, அவருடைய உதவியாலும் அவருடைய கிருபையாலும், இந்த தேவைகள் ஒவ்வொன்றும் என்னுடைய இந்த சிறிய பழைய வளர்ச்சியில் பாய்வதை நான் உணரும் வரை, நான் ஜீவனுள்ள கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலாய் இருக்க முடியும் வரை, நான் தினமும் இடைவிடாமல் ஜெபித்து தேடுவேன் என்று நான் அவரிடம் முழு மனதுடன் உறுதியளிக்கிறேன்.

என்னைப் பொருத்தவரையில், ஒலிநாடக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதே இந்த நாளுக்கான தேவனுடைய திட்டமாகும். அது இயேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள வார்த்தையாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையின்படி அதுவே என்னுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது. அதுவே இந்நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியாயிருக்கிறது.

எனவே, ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சி 62-1014M: கிறிஸ்துவின் மணவாட்டி எவ்வாறு மாற வேண்டும் என்று கற்பிக்கும் நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருப்பதாக நான் விசுவாசிக்கிற இன்னாராகிய, வில்லியம் மரியன் பிரான்ஹாமுக்கு நான் செவி கொடுக்கப் போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு என்னுடன் சேர உங்களை அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 5:48
பரி. லூக்கா 6:19
பரி. யோவான் 1:1 / 3:3 / 3:16 / 5:14 / 14:12
அப்போஸ்தலர் 2:38 / 7:44–49 / 10வது அதிகாரம் / 19:11 / 28:19
எபேசியர் 4:11-13
கொலோசெயர் 3வது அதிகாரம்
எபிரெயர் 10:5 / 11:1 / 11:32-40
யாக்கோபு 5:14
2 பரி. பேதுரு 1-7
ஏசாயா 28:19