அன்பான தேவனின் ஜீவனுள்ள வார்த்தையே,
இத்தனை வருடங்களாக அதை என் இருதயத்தில் மறைத்து வைத்துள்ள, திரையிடப்பட்டுள்ள கிறிஸ்துவை, அதே அக்கினி ஸ்தம்பம் வாக்களித்த படி வார்த்தையை வியாக்கியானித்து வருகிறது.
இது அநேக ஜனங்களுக்கு கண்மூடித்தனமாகத் தோன்றப்போகிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் தேவனுடைய செய்தியாளரை ஒரு சில நிமிடங்கள் பொறுத்துக்கொண்டு, தேவனிடம் மேலும் வெளிப்பாட்டைக் கேட்டால், அவர் தேவனுடைய உதவியாலும், அவருடைய வார்த்தையாலும், அவருடைய வார்த்தையின்படியும், அவரை இங்கே உங்கள் முன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். தேவன், திரைநீக்கி தம்மை வெளிப்படுத்தி, வியாக்கியானித்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்குள் இந்த கடந்த மாதத்தில் என்ன ஒரு எழுப்புதல் நிகழ்ந்து வருகிறது. தேவன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தம்மை வெளிப்படுத்தி, தன்னுடைய இனிய இருதயத்துடன் பேசுகிறார், அவளோடு அன்பு கொள்கிறார், அவளோடு உறுதியளிக்கிறார், நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம்.
எந்த தயக்கமும் இல்லை, எந்த நிச்சயமின்மையும் இல்லை, எந்த தனி ஒதுக்கீடும் இல்லை, எந்த ஒரு சந்தேகத்தின் நிழலும் கூட இல்லை; தேவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்: ஒலிநாடாக்களில் பேசும் தேவனுடைய சத்தம் இன்றைக்கு அவருடைய மணவாட்டிக்காக தேவன் அருளியுள்ள, பரிபூரண வழியாயுள்ளது.
நாம் அதை ஒருபோதும் வடிகட்டவோ, தெளிவுபடுத்தவோ, விளக்கவோ, அல்லது எந்த வகையிலும் மனிதனால் கையாளப்படக்கூடாதபடிக்கும்; நாம் ஒவ்வொரும் உதட்டிலிருந்து செவிக்குப் பேசும் சுத்தமான தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு அவர் இந்த வழியை அருளினார்.
இந்த நாள் வருவதை அவர் அறிந்திருந்தார். அவருடைய மணவாட்டி அந்த மறைவான மன்னாவை மாத்திரமே புசிக்க முடியும் என்பதையும், அவருடைய ஆட்டின் ஆகாரம் என்பதையும் அவர் அறிந்திருந்தார், தேவனிடத்திலிருந்து தாமே வருகிற தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு எந்த காரியத்தையும் நாம் கேட்க விரும்ப மாட்டோம்.
நாம் அந்தத் திரையை நீங்கி ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசித்திருக்கிறோம். உலகம் அதைக் காண முடியாது. நம்முடைய தீர்க்கதரிசி தனது வார்த்தைகளை சரியாக உச்சரிக்காமல் இருக்கலாம். அவர் சரியாக உடை அணியாமல் இருக்கலாம். அவர் மதகுருமார்களின் உடைகளை அணியாமல் இருக்கலாம். ஆனால் அந்த மனித தோலுக்குப் பின்னால், ஷெக்கினா மகிமை இருக்கிறது. அங்கு வல்லமை இருக்கிறது. அங்கு வார்த்தை இருக்கிறது. அங்கு சமுகத்தப்பம் இருக்கிறது. அங்கு ஷெக்கினா மகிமை இருக்கிறது, அது மணவாட்டியை முதிர்வடையச் செய்ய வைக்கிற ஒளியாயுள்ளது.
நீங்கள் அந்த தகசுத் தோலுக்குப் பின்னால் வரும் வரை, உங்கள் பழைய தோலிலிருந்து, உங்கள் பழைய எண்ணங்களிலிருந்து, உங்கள் பழைய கோட்பாடுகளிலிருந்தும் வெளியேறி, தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரும் வரை; பின்னர் வார்த்தை உங்களுக்கு ஒரு ஜீவனுள்ள யதார்த்தமாக மாறுகிறது, பின்னர் நீங்கள் ஷெக்கினா மகிமைக்கு விழித்தெழுப்பப்படுகிறீர்கள், பின்னர் வேதாகமம் ஒரு புதிய புத்தகமாக மாறுகிறது, பின்னர் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் ஜீவித்துக் கொண்டு, விசுவாசிகளுக்கு, ஆசாரியர்களுக்கு மட்டுமே அருளப்பட்டுள்ள சமுகத்தப்பத்தை புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். "நாம் ஆசாரியர்களாயும், ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், சொந்தமான ஜனமாயும், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்களாயும் இருக்கிறோம்.” ஆனால் நீங்கள் திரைநீக்கப்பட்ட தேவனைக் காணும்படிக்கு, அந்தத் திரைக்குப் பின்னால் உள்ளே வர வேண்டும். தேவன் திரை நீக்கப்பட்டிருக்கிறார், அதாவது அவருடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நாம் உலகிற்கு வினோதமானவர்களாக இருக்கிறோம், ஆனால் நம்முடைய அச்சாணி யார் என்பதை அறிந்து நாம் திருப்தியடைகிறோம், அவருடைய வார்த்தை நம்மை அவரிடம் ஈர்க்கும்போது, அவருடைய ஒலிநாடா திருகு மறையாணியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.
நீங்கள் ஒலிநாடாக்களோடு இணைக்கப்படவில்லையென்றால், நீங்கள் ஒரு கூட்ட முட்டாள்களேயன்றி வேறொன்றுமில்லை!!!
இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், தேவனே! இயேச, “வார்த்தையானது யாரிடத்திற்கு வந்ததோ, அவர்கள் ‘தேவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்,” என்று கூறினார், அவர்கள் தீர்க்கதரிசிகளாய் இருந்தனர். இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் சரீரம் தேவனாயில்லாததுபோல, அந்த மனிதன் தாமே தேவனாய் இருக்கவில்லை. அவர் ஒரு மனிதனாய் இருந்தார், தேவன் அவருக்கு பின்னால் திரையிடப்பட்டிருந்தார்.
தேவன், ஒரு நாள் தேவன் தகசுத் தோல்களுக்குப் பின்னே திரையிடப்பட்டிருந்தார். தேவன், ஒரு நாள் மெல்கிசேதேக்கு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், இயேசு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், அவருடைய மணவாட்டி என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருக்கிறார்.
இதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்; ஆனால் பலர் தலறிப்போய், வேறு எதையோ எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆபிரகாம் கண்ட கடைசி காரியமான, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வருவதற்கு முன்பு, அக்கினி விழுந்து, புறஜாதி உலகம் நியாயந்தீர்க்கப்படுவதற்கு முன்பு சம்பவித்த கடைசி காரியமே, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனான, மெல்கிசேதேக்கான இயேசு கிறிஸ்து, பிரசன்னமாகும் வரையில் கிறிஸ்தவ சபை காணும் கடைசி காரியமாக தம்முடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுததுகிறார்.
வேறு எதுவும் வரப்போவதில்லை. அவருடைய வார்த்தையில் வேறு எதுவும் வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. மணவாட்டியை பரிபூரணப்படுத்த எந்த மனிதனும் இல்லை; எந்த மனிதர்களின் குழுவும் வரவில்லை.
இல்லை! அவர்கள் பரிபூரணப்படுத்துவதற்காக இங்கே சபைக்கு வர விரும்புகிறார்கள். புரிகிறதா? அதாவது நாம்-நாம் இங்கே சபையில் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தைப் பெறுகிறோம், ஆனால் பரிபூரணப்படுத்துதல் நமக்கும் தேவனுக்கும் இடையில் வருகிறது. கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்த ஆவியில் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது.
இந்தச் செய்தி, இந்தச் சத்தம், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தை, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியைப் பரிபூரணப்படுத்துகிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 64-0617 “எல்லா காலங்களிலும் அடையாளங் கண்டுகொள்ளப்பட்ட கிறிஸ்து” என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறதை எங்களுடன் கேட்க வரும்படிக்கு நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
உபாகமம் 18:15
சகரியா 14:6
மல்கியா 3: 1-6
பரி. லூக்கா 17: 28-30
பரி. யோவான் 1:1 / 4:1-30 / 8: 57-58 / 10:32-39
எபிரெயர் 1:1 / 4:12 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 22:19
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஒலிநாடாவைக் கேட்பவர்களே,
ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: “நான் ஒலிநாடாக்களைக் கேட்கும்போது, நான் எந்த சத்தத்தைக் கேட்கிறேன்? அது வில்லியம் மாரியன் பிரான்ஹாமின் சத்தமா, அல்லது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறேனா? அது ஒரு மனிதனின் வார்த்தையா, அல்லது கர்த்தர் உரைக்கிறதாவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனா? நான் கேட்டுக் கொண்டிருக்கிறதை வியாக்கியானிப்பதற்கு யாருமே எனக்குத் தேவையா அல்லது தேவறனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லையா?
நம்முடைய பதில்: மாம்சமான உரைக்கப்பட்ட வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆல்பா மற்றும் ஒமேகாவை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாளில் அவர் இருப்பதாக கூறியது போல மானிட உதடுகளினூடாக பேசுகிற, அக்கினி ஸ்தம்பமான, அவருக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஒரு மனிதனுக்கு செவி கொடுக்கவில்லை, நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாத தேவனுக்கு நாம் செவி கொடுக்கிறோம். தேவனுடைய சத்தமானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், எலும்பையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
அவர் கலிலேயாவில் நடந்தபோது எப்படி இருந்தாரோ, அதே விதமாக இன்றிரவு ஜெபர்சன்வில்லில் இருக்கிறார் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதே விதமாக அவர் பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். அது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அவர் அப்பொழுது எந்தவிதமாக இருந்தாரோ, அவர் இன்றிரவும் இருக்கிறார், என்றென்றும் இருப்பார். அவர் என்ன செய்வார் என்று கூறினாரோ, அதை அவர் செய்திருக்கிறார்.
அந்த மனிதன் தேவன் அல்ல, ஆனால் தேவன் என்னும் ஜீவித்துக் கொண்டு, தம்முடைய மணவாட்டியினிடத்தில் அந்த மனிதனின் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார். நாம் மனிதனை ஆராதிக்கத் துணியவில்லை, ஆனால் அந்த மனிதனில் உள்ள தேவனை ஆராதிக்கிறோம்; ஏனென்றால் அவருடைய சத்தமாயிருக்கும்படி, இந்த கடைசி நாட்களில் தம்முடைய மனவாட்டிய வழிநடத்த தேவன் தெரிந்து கொண்ட மனிதனாய் அவர் இருக்கிறார்.
காரணம் நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நம்முடைய நாளில் மாம்சமான வார்த்தையையும் நாம் அடையாளமங் கண்டு கொள்ளும்படியாக இந்த மகத்தான கடைசி கால வெளிப்பாட்டை அவர் நமக்கு அளித்திருக்கிறார், சாத்தான் இனி நம்மை ஏமாற்ற முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய முழுமையாக திருப்பலளிக்கப்பட்ட கன்னிகையான வார்த்தை மணவாட்டி என்பதை நாம் அறிவோம்.
அந்தக் சத்தம் நமக்குச் சொன்னது: நமக்குத் தேவையானது ஏற்கனவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது உரைக்கப்பட்டாயிற்று, அது நம்முடையது, அது நமக்குச் சொந்தமானது. சாத்தானுக்கு நம் மீது எந்த அதிகாரமும் இல்லை; அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்.
நிச்சயமாக, சாத்தான் நம் மீது சுகவீனத்தை, மனச்சோர்வை மற்றும் மனவேதனைகளைப் போட முடியும், ஆனால் பிதா ஏற்கனவே அவனைத் துரத்திவிட நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார்...நாம் வார்த்தையைப் பேச, அவன் வெளியேறத்தான் வேண்டும்...நாம் அப்படிச் சொல்வதால் அல்ல, ஆனால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினதாலே.
அணில்கள் இல்லாதபோது அணில்களைப் சிருஷ்டித்த அதே தேவன். அது சகோதரி ஹாட்டியின் இதயத்தின் விருப்பத்தை அளிக்கிறது: அவளுடைய இரண்டு மகன்கள். மருத்துவரின் கை அவளைத் தொடுவதற்கு முன்பே சகோதரி பிரான்ஹாமின் ஒரு கட்டியைக் குணப்படுத்தியவர். அவர் நம்மோடு இருக்கிற அதே தேவனாய் மாத்திரம் இல்லாமல், அவர் ஜீவிக்கிறார் மற்றும் நமக்குள்ளாக வாசம் செய்கிறார். நாம் மாம்சமான வார்த்தையாக இருக்கிறோம்.
நான் நோக்கிப் பார்த்து ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தை கேட்கும் பொழுது, மாம்ச சரீரத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துவதை நாம் கேட்கிறோம், காண்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த தேவன் அனுப்பியவரை நாம் காண்கிறோம், கேட்கிறோம். மணவாட்டிக்கு மட்டுமே அந்த வெளிப்பாடு இருக்கும் என்பதை நாம் அறிவோம், எனவே நாம் அச்சமற்றவர்களாகிவிட்டோம். பதட்டமாகவோ, துயரமாகவோ, விரக்தியாகவோ, ஆச்சரியமாகவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை...நாமே மணவாட்டி.
என் சகோதரனே, "செவி கொடுத்து, பிழைத்துக்கொள்” பிழைத்துக்கொள்!
இப்பொழுதே இயேசுவுக்கு செவி கொடுத்து, பிழைத்துக் கொள்;
ஏனென்றால் அது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா!
அது நீங்கள், "செவி கொடுத்து பிழையுங்கள்” என்பதாய் மாத்திரமே உள்ளது.
ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக, நாம் என்னே ஒரு மகத்தான நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நிமிடத்திற்கு நிமிடம் நாம் எதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த நாளிலும் நாம் நம்முடைய அன்புக்குரியவர்களைக் காணப் போகிறோம் என்பதையே, அப்பொழுது, ஒரு இமைப்பொழுதில், நாம் இங்கிருந்து வெளியேறி, அவர்களுடன் மறுபுறம் இருப்போம். அது மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று நம்மால் அதை உணர முடியும் என்று தோன்றுகிறது...மகிமை!
மணவாட்டியே வாருங்கள், நித்திய ஜீவனின் வார்த்தையை எங்களிடத்தில் அவர் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தின் பேரில் மீண்டும் நாம் ஒரு முறை ஒன்றிணைவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்
வேதவாக்கியங்கள்:
எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,
நாம் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 63-1229M விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதனின் இங்கே இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்க ஒன்று கூடுவோமாக.
சகோ.ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,
இப்பொழுது ஒலிநாடாக்களில் கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்.
கர்த்தாவே, இந்த ஆறு சிறிய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியான எங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை நாங்கள் எவ்வாறு வெளிப்படுத்தத் துவங்க முடியும்? இது எங்களுக்கு இந்த நேரத்தின் செய்தியின் வெளிப்பாடாயுள்ளது. இது தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாகப் பேசி, “நீங்கள் என்னுடைய சத்தத்தோடு தரித்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தை உங்களுக்கு என்ன பொருட்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஒலிநாடாக்களில் நான் பேசியுள்ள இந்த செய்திகள் இன்றைக்கான என்னுடைய அடையாளம் என்ற வெளிப்பாட்டை நீங்கள் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று தம்முடைய மணவாட்டியினிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த காந்த ஒலிநாடாக்களில் நான் என் சத்தத்தை வைத்துள்ளேன்; ஏனென்றால் இந்தச் செய்திகள் முழு வார்த்தையையும் கொண்டிருக்க வேண்டும். ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய சத்தத்தை கேட்கும் கோடிக்கணக்கானவர்கள் இது என்னுடைய ஊழியம் என்ற வெளிப்பாட்டை உடையவர்களாக இருப்பார்கள். இது இன்றைக்கான பரிசுத்த ஆவியாக உள்ளது. இது என்னுடைய அடையாள செய்தியாய் இருக்கிறது.
“உலகம் முழுவதும் என் ஊழியத்தை அறிவிக்க நான் பல உண்மையுள்ள ஊழியர்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் என்னிடத்தில், ‘உம்முடைய ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் நாங்கள் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளோம். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து ஜனங்களை நாங்கள் கண்டோம். அவர்கள் உம்முடைய செய்தியைப் ஏற்றுக்கொள்ள தங்களுடைய சொந்த வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். இந்த நேரத்தின் செய்தியான, உங்களுடைய அடையாளத்தின் கீழ் வரும் யாவரும் காப்பாற்றப்படுவர் என்று நாங்கள் அவர்களிடத்தில் சொன்னோம்’” என்று சொன்னார்கள்.
இது இன்றைக்கான தேவனுடைய பரிபூரண வழி என்றால் என்ன? என்று ஒவ்வொரு மனிதனும் தன்னை ஆராய்ந்து தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமாயுள்ளது. தீர்க்கதரிசியின் வார்த்தை ஒரு முறை கூட தவறிப் போனதில்லை. அது மாத்திரமே சத்தியம் என்றும், அந்த காரியம் மாத்திரமே நம்முடைய மணவாட்டியை ஒன்றிணைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.
அவர் என்னவெல்லாம் கூறியிருந்தாரோ அவர் அதைக் கூறின விதத்திலேயே சரியாக நடந்தது. அக்கினி ஸ்தம்பம் இன்னும் நம்முடன் இங்கே உள்ளது. தேவனுடைய சத்தம் இன்னும் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தேவன் அந்த அடையாளத்தைக் கண்டபோது அவர் கடந்து செல்வார் என்று தீர்க்கதரிசி நம்மிடம் சொன்னார். இது அந்த அடையாள செய்தியின் கீழ் நாம் யாவரும் ஒன்று சேர்வதற்கான பதறலின் ஒரு நேரமாய் இருக்கிறது.
நாம் இந்தக் கடைசி காலத்தில் தேவனுடைய மகத்தான கரத்தைக் கண்டிருக்கிறோம். அவர் நமக்கு அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறார், அது அடையாள அறிவிப்புக்குறியின் கீழே வந்துள்ளது. இப்பொழுது, நாம அந்த அடையாள அறிவிப்புக்குறியின் கீழே இருக்கையில், நாம் ஒன்று கூடி வந்து பதறலில் இராப்போஜனத்தை எடுத்துக் கொள்வோமாக; ஏனென்றால் தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.
நாங்கள் பதறல்கள் 63-0901E என்ற செய்தியை கேட்கப் போகிறபடியால், நீங்களும் அதைக் கேட்டுக்கும்படிக்கும், இராப்போஜனம் மற்றும் கால்களை கழுவும் ஆராதனையை இந்த ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கும்படி நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்க விரும்புகிறேன்.
செய்தியும் இராப்போஜன ஆராதனையும் ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களுடைய உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு உங்களுடைய ஆராதனை துவங்குவதற்கு தயவு செய்து தயங்க வேண்டாம், நம்முடைய வெளிநாட்டு விசுவாசிகள் பலர் அந்த நேரத்தில் உங்களுடைய ஆராதனையைத் தொடங்குவது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆராதனையின் கோப்பு பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு இணைப்பாக இருக்கும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
சேவைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள அடையாள மணவாட்டியே,
நாம் ஒன்று கூடும்போது, செய்தியைப் பற்றிப் பேசுவதில்லை, இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கும், அடையாளத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒன்றுபடுகிறோம்; அடையாளம் என்பது இந்த நேரத்தின் செய்தி! அதுதான் இந்த நாளின் செய்தி! அதுதான் இந்தக் காலத்தின் செய்தி.
நாம் அந்த அடையாளத்தை நமக்கும், நம்முடைய வீடுகளுக்கும், நம்முடைய குடும்பங்களுக்கும் பயன்படுத்தியுள்ளோம். நாம் வெட்கமடைகிறதில்லை. யார் இதை அறிந்திருக்கிறார்கள் என்று நாம் கவலைப்படுவதில்லை. எல்லோரும் அதை அறிய வேண்டும் என்றும், ஒவ்வொரு வழிப்போக்கரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்: நாம் ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்களாயிருக்கிறோம். நாம் ஒரு ஒலிநாடா இல்லமாயிருக்கிறோம். நாம் தேவனுடைய ஒலிநாடா மணவாட்டியாய் இருக்கிறோம்.
பரிசுத்த ஆவி = அடையாளம் = செய்தி. அவை யாவும் ஒன்றே. உங்களால் அவைகளைப் பிரிக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி = கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. உங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது. செய்தி = செய்தியாளர். விமர்சகர்கள் என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, தீர்க்கதரிசி கூறினார், உங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது.
தேவன் உங்களுடைய சந்தோஷம். தேவன் உங்களுடைய பெலன். இந்த செய்தியை அறிவது, அதை அறிவது மாத்திரமே சத்தியம், அதை அறிவதுதான் அடையாளம், அதுதான் நம்முடைய போதுமானது. சிலர், “நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை சத்தியம் என்று ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறலாம். அவ்வளவுதான் நல்லது, ஆனால் அதே சமயத்தில் அது பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தச் செய்தி இன்றைக்கான அடையாளம் என்று தீர்க்கதரிசி கூறினார். இந்தச் செய்தி பரிசுத்த ஆவி. இந்தச் செய்தியின் ஏதேனும் வெளிப்பாடு உங்களிடம் இருந்தால், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம். பலர், “நான் அதை விசுவாசிக்கிறேன். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். இது இந்த வேளைக்கான செய்தி” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய சபைகளில் அடையாளத்தின் சத்தத்தை இயக்கவில்லை, இயக்கமாட்டார்கள் என்று கூறி பெருமை பேசுகிறார்கள்.
தேவன் ஒரு அர்த்தம் இல்லாமல் தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் எதையும் பேசவில்லை, அவர் நமக்கு மாதிரிகள் மற்றும் நிழல்கள் மூலம் கற்பித்தார் என்று அவர் சொன்னார். இந்தச் செய்தியில், ராகாபும் அவளுடைய குடும்பத்தினரும் இரட்சிக்கப்படுவதற்கும், மணவாட்டியாக மாறுவதற்கும் என்ன செய்தார்கள் என்பதை தீர்க்கதரிசி மிக விரிவாகச் சொல்கிறார். அவள் என்ன செய்தாள் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும்.
ஒலிநாடாவை இயக்கும் பையன்கள் “ஒலிநாடாவை” இயக்கியபோது... ஒரு நிமிடம் பொறு, அந்த செய்தியாளர் என்ன செய்தார்? ஒரு ஒலிநாடாவை இயக்கினார். அப்பொழுது அவள் என்ன செய்தாள்? அவளுடைய வீட்டை ஒலிநாடாவை இயக்கும் ஒரு சபையாக ஆக்கினாள். “அந்த சிவப்பு நூல் கயிற்றைப் பார், அதாவது நான் ஒலிநாடாவை இயக்கும் ஒரு சபை” என்று கூற அவள் வெட்கப்படவில்லை.
நீங்கள் நினைப்பதோ, “ஆம், நான் செய்தியாளரையும், செய்தியையும் விசுவாசிக்கிறேன், ஆனால் எங்களுடைய சபையில் இனி நாங்கள் ஒலிநாடக்களை இயக்குவதில்லை. வேண்டாம் என்று கூறுகிற ஒரு போதகர் எனக்கு உண்டு, ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றனவோ அதை மேற்கோள் காட்டி அவர் அப்படியே பிரசங்கிக்கிறார்” என்று அவள் கூறியிருந்திருந்தால் என்னவாயிருக்கும். அவள் இரட்சிக்கப்பட்டிருந்திருப்பாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா…???
அவள் அடையாளத்தைப் பயன்படுத்தினாள். அவளுடைய வீட்டார் காக்கப்பட்டனர். இல்லையேல் அவள் இருந்த இடத்திலேயே அவள் அழிந்து போயிருப்பாள்.
ஒலிநாடாக்களை இயக்குவது குறித்து பல ஊழியர்கள் சாக்குப்போக்குகள் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் பெரும்பாலானவர்கள்: “தீர்க்கதரிசி ஒருபோதும் சபையில் ஒலிநாடாக்களை இயக்குவதாகச் சொல்லவில்லை” என்று கூறுகிறார்கள்.
ராகாப் தன்னுடைய வீட்டை ஒரு சபையாக மாற்றினாரள், அவளுடைய சபை ஒலிநாடாக்களை இயக்கியது என்று தீர்க்கதரிசி கூறினார். அவள் தன்னுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்கியதால், அவளும், ஒலிநாடா சபையில் இருந்த அவளுடைய யாவரும், அடையாளத்தின் கீழ் இருந்து, காப்பாற்றப்பட்டனர். மற்ற எல்லா சபைகளும் அழிந்தன.
சகோதர சகோதரிகளே, தயவுசெய்து, ஒரு போதகர் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க முடியாது என்றோ, அவர் அவ்வாறு செய்தால் அது தவறு என்றோ நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. என்னுடைய சொந்த வழியில், நான் இப்போது இந்தக் கடிதத்தின் மூலம் பிரசங்கிக்கிறேன், ஆனால் உங்கள் இருதயத்தைத் திறந்து, தீர்க்கதரிசி என்ன கூறிக்கொண்டு, உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேளுங்கள். உங்களுடைய போதகர் அவ்வாறு செய்யாவிட்டால், அல்லது உங்கள் சபையில் ஒலிநாடாக்களை இயக்காமல், ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி; அது எதுவாக இருந்தாலும், வார்த்தையின்படி, நான் அந்தக் காலத்தின் செய்தியை விசுவாசிக்கிறேன் என்று எவ்வளவுதான் கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, வார்த்தை கூறுகிறதை நான் விசுவாசிக்கிறபடி, அந்த அடையாளமாக, அந்தக் காலத்தின் செய்தி, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரத்துடன், அடையாளம் 63-0901M என்ற செய்தியைக் கேட்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ள முடியாவிட்டால், எந்த அடையாள செய்தியையாவது இயக்கி, அதைப் பயன்படுத்துங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஆதியாகமம் 4:10
யாத்திராகமம் 12வது அதிகாரம்
யோசுவா 12வது அதிகாரம்
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 / 19:1-7
ரோமர் 8:1
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 2:12 / 4:30
எபிரெயர் 6:4 / 9:11-14 / 10:26-29 / 11:37 / 12:24 / 13:8, 10-20
பரி. யோவான் 14:12