காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 14 பிப்ரவரி, 2026

அன்புள்ள ராஜரீக குடும்பத்தினரே,

கர்த்தர் தம்முடைய தூதன் மூலம் பேசி, உங்களிடத்தில், “எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள், ராஜரீக இரத்தத்தைக் கொண்ட ஒரு ராஜரீக குடும்பம். உங்களுடைய இரத்தத்தைக் காட்டிலும் சிறந்த இரத்தம் இந்த உலகத்தில் இல்லை. நீங்கள் கிறிஸ்துவுக்கு நான் பெற்றெடுத்துள்ள, உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்ற என் பிள்ளைகள்,” என்று சொல்வதை நீங்கள் போய் கேட்கக் கூடிய ஒரே ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட இடம் மாத்திரமே உண்டு.

நாம் நம்முடைய நரம்புகளில் ஓடுகிற ராஜரீக இரத்தத்துடன் கூடிய தேவனுடைய ராஜரீக குடும்பம். அவருடைய வல்லமையுள்ள தீர்க்கதரிசியின் மூலமாக தேவனுடைய சத்தம் பேசுவதால் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்துள்ள பிள்ளைகள். இதை விட சிறப்பாக இருக்க முடியாது என் நண்பர்களே.

சகோதரன் பிரான்ஹாம், மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஜெபர்சன்வில் அல்லது அரிசோனாவுக்குச் செல்ல வேண்டுமா?

"ஒரு படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரை விட்டுவிடுவேன்; இரண்டு பேர் ஒரு வயலில் இருப்பார்கள், நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரை விட்டுவிடுவேன்." பார்த்தீர்களா? எனவே அவர்கள் அநேகமாக...உலகம் முழுவதும், பொதுவான விஷயங்களைக் கொண்டிருக்க அவர்கள் ஒரே இடத்தில் கூடிவர மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிறிய குழுக்கள் பூமியெங்கும் சிதறடிக்கப்படுவார்கள்.

ஆகவே, சரீரப்பிரகாரமாக, நாம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்க மாட்டோம். ஆனால் தேவனுக்கு மகிமை, அவர் தனது மணவாட்டியை ஒன்றிணைக்க இன்னும் கூட பெரிய திட்டத்தை வைத்திருந்தார்.

நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று, அவர் இந்த தேசத்தை சுற்றி மட்டுமல்ல, உலகின் 7 கண்டங்களிலிருந்தும் நம்மை கூட்டி சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்காவிலிருந்து அண்டார்டிகா வரை. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா. தேவனுடைய சத்தத்தைக் கேட்க அவர் தனது மணவாட்டியை ஒரு குழுவாக கூட்டி ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் நம்மை சபைக்குச் செல்லச் சொன்னார்; அவர்கள் பாதி வார்த்தையைக் கற்பிக்கும் இடத்திலும் கூட, அவர்கள் முழு வார்த்தையையும் கற்பிக்கும் ஒரு சபையை நாம் கண்டுபிடிக்கும் வரை. மணவாட்டி இப்பொழுது அந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, ஒலிநாடவில் உள்ள தேவனுடைய சத்தமே முழு வார்த்தையாகும்.

நீங்கள் உங்களுடைய வீட்டில் ஒலிநாடாவைக் கேட்கும் சபையாக இருந்தாலும், பல குடும்பங்கள் கூடியிருக்கும் உங்களுடைய சபையாக இருந்தாலும், அல்லது அமேசான் அல்லது ஆப்பிரிக்காவின் காடுகளில் உள்ள ஒரு குடிசையில் இருந்தாலும், தேவனுடைய சத்தம் உதட்டிலிருந்து உங்களுடைய செவிக்கு பேசுவதை கேட்க நீங்கள் எங்கு இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க முடிகிறதோ, அங்கு நீங்கள் ஒரு முழு வார்த்தை சபையில் இருப்பீர்கள்.

நாங்கள் அந்த முழு வார்த்தை சபையை கண்டுபிடித்துள்ளபடியால், கேள்விகள் மற்றும் பதில்கள் #4 64-0830E. என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ள வரும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 7 பிப்ரவரி, 2026

கிறிஸ்துவுக்குப் பெற்றெடுத்த அன்பானவர்களே,

நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை அறிந்திருப்பதனால் நம்முடைய இருதயங்களில் இருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் வெறும் மனித வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும்? நாம் இதில் எதையும் செய்யவில்லை, ஆனால் அவரே, நான் இருக்கிறேன் என்ற மகத்தானவர், தம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலின்படி, அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மகத்தான காரியமான, நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெறுவதற்காக நம்மை முன்னரே முன்குறித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அவர் நம்மிடத்தில் பேசி கூறும்படியாக காலத்தின் நிறைவு வரும்வரை அவர் காத்திருந்து, நமக்குள்ளே ஜீவ சுவாசத்தை ஊதினார்:

இப்பொழுது, என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக் கூறி ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். புரிகிறதா? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக, அதாவது—அதாவது பிள்ளைகளாக வேண்டுமென்று நான்—நான்—நான் விரும்புகிறேன். பவுல் கூறினவண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் “ஒரு கற்புள்ள கன்னிகையாக” கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க நான் விரும்புகிறேன். உங்கள் இருதயம் “ஆமென்” என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் அந்த வார்த்தையில் கிடையாது.

தேவன், தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் பேசி, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய நம்மை வழிகாட்டி வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நாம் அவருடைய முழுமையான முதிர்ச்சியடைந்த, கற்புள்ள கன்னிகைகளாகிய பிள்ளைகள். மேலும் அவருடைய ஆச்சரியமான கிருபையினால், நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆமென் என்று ஆமோதிக்கிறோம்! அது தெய்வீக ரூபகாரப்படுத்துதலுடன் கூடிய வார்த்தையின் பரிபூரண வியாக்கியானமாயுள்ளது!

  • ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் சத்தம்: வார்த்தையின் பரிபூரண வியாக்கியானமாக இருந்தால், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு வேறு என்ன தேவை?…ஒன்றுமில்லை!

நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைப் பெறுவதற்காக, அவர் தம்முடைய கரங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய கூட்டமாகிய நம்மைத் தெரிந்து கொண்டுள்ளார். ஆயிரம் வருட அரசாட்சியின் போது, மாம்சப் பிரகாரமான சரீரங்களில், பூமியில் இருப்பதற்காக அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நாம்தான்.

என் நண்பர்களே, ஒரு நிமிடம் அதைப் பற்றி சிந்திப்போமாக.

இந்த பூமியிலேயே நமக்கு மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் உண்டாயிருக்கும். நாம் ஆயிரம் வருடங்களுக்கு இப்போது இருப்பது போலவே சாப்பிடுவோம், குடிப்போம், வீடுகளைக் கட்டுவோம், வாழ்வோம். அது மணவாட்டியும் (நாம்) மணவாளனும் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) ஒன்றாக மாறும் நமது தேனிலவு காலமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மகிமையான காலத்திற்காக நாம் பார்த்துக் காத்திருக்கிறோம். அதை நம்மால் தொட்டுவிட முடியும் என்று தோன்றுவதுபோல அது மிகவும் அருகில் இருக்கிறது. இன்று நமக்கு இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன்:

ஓ, இப்பொழுது அவருடைய சபையில், கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு, மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டு, அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே, அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஏன், இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட, குவிந்து அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் அதைக் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை. அவருடைய சபையுடன் ஒன்றாக இணைக்கப்படும்படிக்கு நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருக்கிறோம், அங்கே வார்த்தையே வார்த்தையாக மாறுகிறது.

நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியின் மூலமும், அவர் நமக்கு அதிக வெளிப்பாடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது மிக வேகமாகப் பெருகி வருகிறது, நம்மால் அதைப் பின்தொடரவே முடியவில்லை. வார்த்தை வார்த்தையாக மாறுவதை நாம் முன்னெப்போதையும் விட இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துளி சந்தேகத்திற்கும் இடமில்லை; வெளிப்பாட்டின் மூலம், நாம் யார் என்பதை நாம் சரியாக அறிவோம்.

அவர் செய்வதாக சொன்னபடியே தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார், நாமும் அதன் ஒரு பாகமாக இருக்கிறோம். அது நிறைவேறுவதை நம்முடைய சொந்தக் கண்களால் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் அதைப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மாட்டார்கள். அது அவர்களுக்கானது அல்ல, அது அவருடைய பெற்றெடுத்த பிள்ளைகளான நமக்கானது.

மணவாட்டிக்கு தீர்க்கதரிசியிடம் கேட்க சில கேள்விகள் இருந்தன.

ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பது மட்டுமே போதுமானதா? தேவன் பதிலளித்து, ஆம்!! என்றார்.

நம்முடைய பிள்ளைகளும் ஒலிநாடாக்களைக் கேட்பதன் மூலம் மட்டுமே கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தேவையான அனைத்தையும் பெற முடியுமா? ஆம்!!

ஆகவே, மணவாட்டிக்குத் தேவையான அனைத்தும் ஒலிநாடாக்களில் உள்ளன.

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக வேறு பல வழிகளையும் அருளியிருக்கிறார் என்பதையும் கூட நாம் அறிவோம்.

“அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள்.” இப்போது, முதலாவதாக வார்த்தை அவ்வாறு கூறுகிறது, அதுவே போதுமானது. ஆனால் வார்த்தையில் நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது சபையில் வரங்கள் உள்ளன; அதை எப்படிப் போதிக்க வேண்டும் என்பதை அறியும்படி தேவனால் ஏவப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதை உங்களுக்கு மிகவும் தெளிவாக விளக்குவார்கள், அதுவே விசுவாசிக்கத் தேவையான விசுவாசத்தையும் தரும்.

சுகமளித்தலையும் அவருடைய வார்த்தையையும் மற்றவர்களுக்குத் தெளிவாகப் போதிக்க எப்படித் தெரியும் என்று தேவனால் ஏவப்பட்ட மனிதர்களை அவர் அருளியுள்ளதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் அவருடைய மணவாட்டி அவருடைய பரிபூரணமான போதுமான அருளப்பட்ட வழியை விரும்புகிறாள். அதுவேநமக்குத் தேவையான அனைத்துமாயுள்ளது.

நாங்கள், கேள்விகளும் பதில்களும் #3 64-0830M என்ற செய்தியைக் கேட்கவிருக்கிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிரான்ஹாம் கூடாரத்தில் எங்களுடன் வந்து சேருமாறு உங்களை அழைக்க விரும்புகிறேன்.

அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெற்றிருப்பதும், நாமே மாம்சமான வார்த்தை என்பதை அறிந்திருப்பதும் எவ்வளவு அற்புதமானது!

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 31 ஜனவரி, 2026

அன்பான கழுகுக் குஞ்சுகளே,

பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் வந்து கூடும். நம்மைப் பொறுத்தவரை, அந்தப் புத்தம் புதிய மாம்ச மன்னாவை நாம் பெறுவதற்கு ஒரே ஒரு சரியான இடம் மாத்திரமே உண்டு: அது இயங்கு பொத்தானை அழுத்தி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான்.

புத்தம் புதிய மன்னாவைக் குறித்துப் பேசுகிறோமே, நம் விரல் நுனியில் நாம் வைத்திருப்பதைப் பற்றி நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா? தேவனுடைய சத்தம் தாமே, தம்முடைய பிரியமான மணவாட்டியிடம் ஒலிநாடாக்களில் பேசுகிறது; நாம் கேட்பது தேவன் தானா என்பதில் எந்த ஊகத்திற்கோ, ஆச்சரியத்திற்கோ, கேள்விக்கோ அல்லது சந்தேகத்திற்கோ இடமில்லை. அவர் தம்முடைய மணவாட்டியிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசும்படி ஒரு மனித சத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வெளிப்பாட்டின் மூலம், நாம் கேட்டுக்கொண்டிருக்கிற வார்த்தைகள் ஒரு மனிதனின் வார்த்தை அல்ல, அல்லது அவனுடைய வியாக்கியானமோ அல்லது கருத்தோ அதனுடன் சேர்க்கப்படவில்லை, ஆனால் அது கழுகுக் குஞ்சுகளாகிய நம்மிடம் பேசும் தேவனுடைய தூய வார்த்தையாயும், வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தையாயும் உள்ளது என்பதில் நம் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை அளிக்கக் கூடிய, நாம் செல்லக்கூடிய ஒரே இடம் இதுதான் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

நாம் வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொள்கிறோம். நம்முடைய வேதாகமங்களில் அவருடைய வார்த்தையை வாசிக்கிறோம். தேவனால் நியமிக்கப்பட்ட, அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டிப் பிரசங்கிப்பதையும் கூட நாம் கேட்கிறோம், ஆனால் நம்முடைய நாட்களில், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், அவருடைய உரைக்கப்பட்ட பரிபூரண வார்த்தையைக் கேட்கக்கூடிய ஒரு இடத்தை தேவன் நமக்கு அருளியுள்ளார்.

நம்முடைய இருதயத்தில் இருந்த கேள்விகளுக்கு பரிபூரண பதிலை பெற்றுக்கொள்ளும்படி, தம்முடைய மணவாட்டி கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பையும் கூட பிதா வழங்கினார்:

•  பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒருவரிடம் சாத்தான் அந்நிய பாஷைகள் அல்லது தீர்க்கதரிசன வரத்தைப் பயன்படுத்த முடியுமா?
•  மத்தேயு 12, வசனம் 32-ல் இயேசு எதைக் குறிப்பிட்டார்?
•  தயவுசெய்து 1 கொரிந்தியர் 13:8-12-ஐ விளக்கவும்.
•  ஆரோக்கியமான கணவனும் பிள்ளைகளும் இருக்கும்போது பெண்கள் பொது இடங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?
•  ஒரு பெண் தன் தலைமுடியைச் சுருட்டுவது தவறா?

தேவன் தம்முடைய மணவாட்டியை ஆசீர்வதிக்கவும் பலப்படுத்தவும் பல வழிகளை அருளியுள்ளார், ஆனால் அவர்கள் கேட்பது அவருடைய பரிபூரண வார்த்தைதான் என்பதில் 100% நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரே ஒரு இடத்தை மட்டுமே அவர் வழங்கியுள்ளார். எந்தவொரு கலப்படத்திற்கும் சாத்தியமில்லாத, கழுகுக் குஞ்சுகள் பருகக்கக்கூடிய ஜீவத் தண்ணீரின் ஒரே ஊற்று அதுதான். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அந்த ஊற்றிலிருந்து பருகும்படிக்கு வர உங்களை அழைக்கிறேன், அங்கு நாம் 64-0823E "கேள்விகளும் பதில்களும் #2" என்ற செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 24 ஜனவரி, 2026

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

பிரான்ஹாம் கூடாரம், தேவனுடைய சத்தம், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காகச் சேமித்து வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ள மறைவான மன்னாவினால் ஆவிக்குரிய ரீதியில் போஷிக்கப்படும் தங்களுடைய சொந்த சபை என்று விசுவாசிக்கிற, உலகம் முழுவதிலுமுள்ள இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு வாழ்த்துக்கள்.

இதுவே என் சொந்த வீடு; இதுவே என் தலைமை அலுவலகம்; இங்குதான் எங்கள் அமைப்பு உள்ளது. இப்பொழுது, என்ன நடந்த போதிலும், அதை மனதில் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், ஒன்றை கிரகித்துக்கொள்வீர்கள். என்ன நடந்தபோதிலும், அதுதான் எங்கள் தலைமை அலுவலகம், இங்குதான்!

பல விசுவாசிகள் தீர்க்கதரிசி இங்கு சொன்னதை எப்போதும் தவறாகப் புரிந்துகொண்டார்கள் அல்லது தங்கள் சொந்தக் கருத்தையோ அல்லது வியாக்கியானத்தையோ கொடுத்தார்கள், ஆனால் அவர் மணவாட்டியிடம் நேரடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார், "நீங்கள் ஞானமுள்ளவர்களாக இருந்தால், ஏதோ ஒன்றைப் புரிந்துகொள்வீர்கள், இதுதான் நமது தலைமையகம், இந்த இடம்தான்!"

அதன் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார்?

சகோதரன் பிரான்ஹாம் இங்கு இருந்தபோது, பலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, மணவாட்டி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரிசோனாவுக்குச் சென்று அவரைப் பின்தொடர வேண்டும் என்று நினைத்தார்கள். சகோதரன் பிரான்ஹாம் அவர்களுக்குத் தெளிவாகப் பதிலளித்தார்: இங்கேயே தரித்திருங்கள், இதுதான் அந்த இடம்.

அவர்களிடம் நான் அங்கு தங்கியிருக்க கூறியிருந்தபோதிலும், அவர்களில் ஒரு பெரிய கூட்டம் நான் சென்ற வழியை நோக்கிப் புறப்பட்டு, அவர்கள் அங்கு சென்று அதை செய்ய வேண்டுமென்று விரும்பினர். அங்கேயே தங்கியிருங்கள், அங்கேயே தங்கியிருங்கள்; இதுவே அந்த இடம் என்று கூறியிருந்தேன்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதிலுமிருந்து மக்கள் அரிசோனாவுக்குச் செல்லப் புறப்பட்டனர், ஆனால் அவர் அவர்களிடம் தெளிவாகச் சொன்னார்: இந்த இடத்திலேயே இருங்கள், இதுதான் அந்த இடம்!

ஜெஃபர்சன்வில்லிலேயே தங்குவதா? அதைத்தான் அவர் சொன்னாரே!

எனக்குக் கிடைத்த வெளிப்பாடு என்னவென்றால், அது தேவன், தம்முடைய தீர்க்கதரிசி மூலமாகப் பேசி, மக்களிடம், “இந்த ஒலிநாடாக்களுடனே தரித்திருங்கள்” என்று சொன்னதுதான். அதுதான் அந்த இடம்!

அவர் மிகவும் கலக்கமடைந்து, அந்த மக்கள் அனைவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எந்தச் சபைக்கு அனுப்ப வேண்டும்? அவர்கள் எங்கே செல்ல வேண்டும்? சகோதரன் பிரான்ஹாம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்?

எனவே இப்பொழுது, என் பிள்ளைகள் ஏதாவது உண்ண, அவர்களை நான் இங்கே கொண்டு வரவேண்டும். அவர்கள் அந்த வனாந்தரத்தில் பட்டினி கிடக்கின்றனர்.

அவர்கள் ஒரு உள்ளூர் சபைக்குச் சென்று, தங்களால் உண்ணக்கூடிய சிறிய உணவுத் துணுக்குகளைப் பெற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பதற்காக அவர்களை இங்கே திரும்ப அழைத்து வர வேண்டும், இல்லையென்றால் அவர்கள் பட்டினியால் மரித்துப்போவார்கள் என்று சொன்னார்.

நண்பர்களே, என் வெளிப்பாடு.

இப்போது, அவரை மீண்டும் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்காகவோ, அல்லது அவர் சொல்லாத ஒன்றைச் சொல்வதைத் தவிர்ப்பதற்காகவோ, “சகோதரன் பிரான்ஹாம் ஒவ்வொரு விசுவாசியும் மணவாட்டியாக இருப்பதற்காக ஜெபர்சன்வில்லுக்குக் குடிபெயர வேண்டும் என்று விரும்பினார்” என்று சொல்லக்கூடாது. சகோதரன் பிரன்ஹாம் அந்த மக்கள் அனைவருக்கும், மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு விசுவாசியும் ஜெபர்சன்வில்லுக்குக் குடிபெயர்ந்து வாழ முடியாது என்பதை அறிந்திருந்தார். அது சாத்தியமற்றது. அப்படியானால் அவர் என்ன சொல்ல வந்தார்? மணவாட்டியை போஷிப்பதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஒலிநாடாக்களைக் கொண்டு கிறிஸ்துவின் மணவாட்டியை அவர் ஒன்றிணைத்துக் கொண்டிருந்தார்.

இந்தச் செய்தி, இந்தச் சத்தம், இன்றைய நாளுக்கான தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை, அது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும்.

கழுகுகள் தின்பதுதான் பிணம். இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி, வேதத்தில் ஒரு கழுகாகக் கருதப்படுகிறான். ஒரு தீர்க்கதரிசிதான் கழுகு. தேவன்—தேவன் தம்மை ஒரு கழுகென்று அழைத்துக்கொள்கிறார், மற்றும் அப்படியானால், விசுவாசிகளாகிய நாம் “கழுகுக் குஞ்சுகள்.” உங்களுக்குப் புரிகிறதா? அவர்கள் தின்னும் பிணம் எது? வார்த்தை. வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பறவையின் உண்மையான இயல்புதாமே வெளியரங்கமாகும்.

இன்றைய நாளுக்கான தூய்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட, தவறான புரிதல்கள் இல்லாத, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தை எங்கே இருக்கிறது? ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே இருக்கிறது, அந்த ஒலிநாடாக்களிலே.

நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம், மேற்கோளுக்கு மேல் மேற்கோள் காட்டலாம், ஆனால் இந்தச் செய்தியும் சகோதரன் பிரான்ஹாம் சொன்னதும் தேவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைக் கோருகிறது. நாம் வெளிப்பாட்டின் மூலம் வரிகளுக்கு இடையில் உள்ள மறைபொருளை படிக்க வேண்டும், ஆனால் அவர் சொன்னதைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதுவே தூய்மையான வார்த்தை.

இன்றைய நாளுக்கான கேள்விகளும் பதில்களும், மற்றும் நான் விசுவாசிப்பதும் இதுதான்.

இன்றைக்கு, பல போதகர்கள் மக்களிடம், வீட்டில் ஒலிநாடாவைக் கேட்டு ஆராதனை செய்வதன் மூலம் நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்தும், சகோதரன் பிரான்ஹாம் செய்யச் சொன்னதிலிருந்தும் விலகிவிட்டோம் என்று கூறுகிறார்கள். அவர்கள், தாங்கள் 'சபை' என்று அழைத்து கருதும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சகோதரன் பிரான்ஹாம் இதைத் தெளிவாகக் கூறுகிற பல மேற்கோள்கள், பல உண்மையிலேயே உள்ளன.

"இப்பொழுது, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாகிலும் ஒரு நல்ல முழு சுவிசேஷ சபைக்குச் சென்று அதை உங்கள் சபையாக்கிக் கொள்ளுங்கள்.”

அவர் அவ்வாறு சொன்னதால், நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஆனால், வீட்டில் ஒலிநாடாவைக் கேட்டு ஆராதனை செய்வதன் மூலம் நாம் அதைத்தான் செய்கிறோம் என்று நான் நம்புகிறேன். நாம் இருக்கும் இடம் கர்த்தருக்கு முக்கியமல்ல. அது வெறும் ஒரு கட்டிடம் மட்டுமே. ஆனால், ஒரு இடத்திற்கோ அல்லது கட்டிடத்திற்கோ அல்ல, அவருடைய வார்த்தையோடு நிலைத்திருப்பதே கர்த்தருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். அந்த இடம் மணவாட்டியை இரட்சித்து பரிபூரணப்படுத்துகிறதில்லை, தேவனுடைய வார்த்தையே அதைச் செய்கிறது.

நான் ஒரு சபை கட்டிடத்திற்குச் சென்றாலும், அவர்கள் முக்கியமான காரியத்தை மறந்துவிட்டு, அதாவது இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை மறந்துவிட்டு, அதற்குப் பதிலாக போதகர்கள் செய்தியைப் பிரசங்கிப்பதை மட்டுமே கேட்பார்களானால், அது உங்கள் ஆத்துமாவை முழுமையாக திருப்திப்படுத்தி போஷிக்குமா? என் சகோதரனே, சகோதரியே, அது உங்கள் ஆத்துமாவை திருப்திப்படுத்தலாம், ஆனால் அது மணவாட்டியை திருப்திப்படுத்தாது.

இங்கே நான் குறுக்கிட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செல்லுவதற்கு ஒரு சபைக் கட்டிடம் இல்லை. அவர்கள் இழக்கப்பட்டுப்போனவர்களா? அவர்களுக்கு ஒரு போதகரோ அல்லது சபையோ இல்லையென்றால், அவர்கள் மணவாட்டியாக இருக்க முடியாது என்று அர்த்தமா? நீங்கள் ஒரு சபைக் கட்டிடத்திலிருந்து 100 மைல் தொலைவிற்குள் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அந்தத் சபைக்குச் செல்ல வேண்டுமா? ஆனால் நான் இன்னும் தொலைவில் வசித்தால், நான் செல்லத் தேவையில்லையா? நான் ஒரு பிரசங்கியாரின் பிரசங்கத்தை இணையத்தில் கேட்க வேண்டும், ஆனால் நான் ஒலிநாடாக்களைக் கேட்கக்கூடாதா? நாம் செல்ல வேண்டிய மிக முக்கியமான காரியம் இந்த இயற்பொருள் சார்ந்த கட்டிடம் தான் என்று தீர்க்கதரிசி கூறுக்கொண்டிருக்கிறாரா?

தீர்க்கதரிசி மணவாட்டியை எங்கு கொண்டுவர விரும்பினார்?

உங்களால் இந்த கூடாரத்துக்கு வர முடியாவிட்டால் எங்காவது ஒரு சபையைத் தெரிந்துகொண்டு; அங்கு போங்கள்.

மீண்டும் ஒருமுறை, மக்களை அனுப்புவதற்கு அவருடைய முதல் விருப்பம் எங்கே உள்ளது? பிரான்ஹாம் கூடாரம், வார்த்தை, ஒலிநாடாக்கள். இந்த கடைசி காலத்தில் தம்முடைய மணவாட்டி செய்வதற்காக தேவன் அருளியிருப்பது அதுதான், நாம் அதை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்து வருகிறோம்.

ஆகவே, நான் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் பிரான்ஹாம் கூடாரத்துடன் ஒலிநாடாக்களை இணையத்தில் கேட்க வேண்டும் என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் சபைக்குச் செல்லக்கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஊழியர்களின் பிரசங்கங்களைக் கேட்கக்கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் அதை நம்பினால், நீங்கள் வார்த்தையிலிருந்து விலகிவிட்டீர்கள். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன், மேலும் ஒவ்வொரு போதகரும் அந்தச் சத்தத்தை, ஒலிநாடாக்களை, தங்களுடைய சபைகளில் இயக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஒலிநாடாக்களை இயக்காமல் இருப்பதற்கு எல்லாவிதமான சாக்குப்போக்குகளையும் கூறுகிறார்கள். அதுதான் உங்களுடைய சபை என்றால், நீங்கள் வார்த்தையால் போஷிக்கப்படவில்லை.

இதுதான் அவர் நடக்க விரும்பாத ஒன்று, ஆனால் மக்கள் செய்துகொண்டிருந்ததும் இதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நீங்கள் சபைக்குச் செல்லுங்கள்; ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கவோ, மீன் பிடிக்கவோ, வேட்டைக்கோ செல்லாதீர்கள்.

நாம் அப்படி இல்லை. மணவாட்டியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே காரியத்தைக் கொண்டே நாங்கள் ஒன்றிணைந்துகொண்டிருக்கிறோம், அது இந்தச் செய்தி, இந்தச் சத்தம்.

மீண்டும் ஒருமுறை, நான் சபைக்குச் செல்வதை நம்புகிறேன். உலகெங்கிலும் பல சபைகள் தங்களுடைய பிரசங்க பீடங்களில் ஒலிநாடாக்களுக்கு முதலிடம் கொடுக்கின்றன, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் மணவாட்டி அல்ல என்று நான் நம்புகிறேனா? இல்லை, இல்லை, இல்லை... நான் அதை ஒருபோதும் நினைத்ததில்லை, ஒருபோதும் நம்பியதில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் சரி, எந்தச் சபைக்குச் சென்றாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவர் கூறிக் கொண்டிருக்கிறதைக் குறித்த வெளிப்பாடு உங்களுக்கு இல்லையென்றால், அப்பொழுது நீங்கள், “நான் சகோதரன் பிரான்ஹாமுக்கு செவிகொடுத்துக கேட்க வேண்டியதில்லை அல்லது அவர் சொல்வதையெல்லாம் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. அவரும் கூட அப்படித்தான் சொன்னார், தேவனால் அழைக்கப்பட்ட வேறு பல மனிதர்கள் இருக்கிறார்கள்” என்று தெளிவாகக் கூறலாம்.

போங்கள். “நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும் மற்றொரு சபைக்கு நாம் செல்லலாமா?” என்று கூறுகிறதை, இங்கு நாம் கவனிக்கிறோம். நிச்சயமாக, நான்…நான் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல் அல்ல, உங்களுக்குத் தெரியும். தேவபக்தியுள்ள மற்ற மனிதர் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்று நான் நம்புகிறேன்.

அந்த ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம்தான் என் கூழாங்கல், என் கன்மலை. அதுதான் நான் கேட்க விரும்பும் சத்தம், பிரன்ஹாம் கூடார சபையும் கேட்க விரும்பும் சத்தம்.

நீங்கள் எங்களுடன் சேர விரும்பினால், என் சகோதர சகோதரிகளே, உங்களை அதிக அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் இருதயத்தில் உள்ள பல கேள்விகளுக்கு பதிலைப் பெற்றுக் கொள்ளும்படி தேவனுடைய சத்தம் பேசுவதை நாங்கள் கேட்க போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். மேலும், இந்த கடிதத்தில் நான் கூறிய காரியங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணானதா என்பதையும், தேவன் தம்முடைய மணவாட்டிக்குச் சொல்வதை நான் தவறாகப் புரிந்துகொண்டேனா என்பதையும் நீங்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அந்த ஒலிநாடாக்களில் அவர் கூறுகிறது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்று நான் கூறுவதோ, அல்லது அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்று நான் நம்புவதோ அல்ல, மேலும் உண்மையான வெளிப்பாட்டை தேவன் மட்டுமே உங்களுக்குத் தர முடியும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 17 ஜனவரி, 2026

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே, 64-0816 - அவருடைய வார்த்தையை நிரூபித்தல் என்ற செய்தியைக் கேட்க, ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, நாம் ஒன்றாகக் கூடுவோமாக.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்