அன்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட மணவாட்டியே:
நான் வளர்ந்து வரும் இளைஞனாக இருந்தபோது, கேட்பதற்கு ஒரு ஒலிநாடாவைத் தேர்ந்தெடுக்க முயன்றது எனக்கு நினைவிருக்கிறது. அதன் தலைப்புகளைப் படிக்கும்போது, விவாகமும் விவாகரத்தும் என்ற தலைப்பைக் கேட்க மாட்டேன் என்றும், ஏனெனில் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்; அது விவாகமானவர்களைப் பற்றியது மட்டுமே என்றே நான் எப்போதும் நினைப்பேன்.
பின்னர் ஒரு நாள், விவாகமும் விவாகரத்தும் என்ற தலைப்பைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பிதாவானவர் அந்தச் செய்தியின் வெளிப்பாட்டை எனக்குக் கொடுத்தார். அவருடைய அபிஷேகம் என்னுடைய இருதயத்திற்குள் வந்தது. அவர் என்னுடன் பேசுகிறார். இந்தச் செய்தி எனக்கானதாய் இருக்கிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர் என்னைத் தெரிந்துகொண்டார் என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவே என்னுடைய விவாக விழா. அவரைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. நான் அவருக்கும், அவருடைய வார்த்தைக்கும், அவருடைய சத்தத்திற்கும் மாத்திரமே உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கிறேன். நாம் ஒன்றாயிருக்கிறோம்.
உண்மையில், இந்தச் செய்தி, விவாகம் செய்து இப்போது விவாகரத்து பெற்றிருந்த பல சகோதர சகோதரிகளுக்கானதாயிருந்தது; அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் அவர்களுக்குச் சொன்னார்; ஆனால் அதைவிட மிகவும் முழுமையான மற்றும் பெரிய அர்த்தம் இருந்தது, மிகவும் மேலானது, மிகவும் வல்லமை வாய்ந்தது.
ஒரே கணவர் இருந்தார், அவர் தம்முடைய பல, தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். தேவனுடைய சத்தம், தம்முடைய தூய்மையான, கலப்படமற்ற, கன்னிகையான வார்த்தை மணவாட்டியை அழைத்துக் கொண்டிருந்தது. மனிதனால் தீண்டப்படாத, தீட்டுப்படுத்தப்படாதவள். அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் மட்டுமே உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பவள். அவராலும் அவருடைய சத்தத்தாலும் முழுமையாகத் திருப்தியடைந்தவள்.
அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், இன்று நாம் ஒரு சிறு சந்தேகத்தின் நிழலுக்கும் இடமின்றி, நாமே அவருடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டி என்று சொல்ல முடியும். மகிமை!!
தம்முடைய மணவாட்டியை அழைக்கும் விஷயத்தில் எந்தக் குறைகளும் இருக்கக்கூடாது என்பதை அவர் உறுதிசெய்ய விரும்பினார். எனவே, அவரே வந்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், தம்முடைய மணவாட்டியைத் தம்மிடம் அழைக்கவும் மனித மாம்சத்தில் வாழ்ந்தார். அவரே தம்முடைய சொந்த மணவாட்டியைத் தெரிந்துகொள்ளப்போகும் எலியேசராய் இருந்தார்.
நம்மை யார் அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் நமக்கு எந்தக் குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிசெய்ய, அவரே ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சூறாவளியிலிருந்து தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரத்திடம் பேசி, அவரை நீதிமான்களாக்கினார். பின்னர், ஓஹையோ நதிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் அவரிடம் வெளிப்படையாகப் பேசினார்.
நான் மீண்டும் வந்து மாம்சத்தில் ஜீவிப்பேன் என்று உங்களிடம் சொன்னேனே, அதை உலகிற்குக் காட்டிச் சொல்வதற்காக, அவர் அவருடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டார். உங்களை என்னுடைய மணவாட்டியாக அழைப்பதற்காக, நான் அவரில் வாழத் தெரிந்து கொண்டவர் அவரே. அது அவர் அல்ல; அவர் மூலமாகப் பேசுவது நானே. உங்களிடம் பேசுவதற்கு, அவருடைய சத்தத்தை என்னுடைய சத்தமாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன். உங்களை அழைத்தவரும், என்னுடைய பரிபூரண மணவாட்டியாக உங்களைப் பூரணப்படுத்தி வருபவரும் நானே.
இந்தச் செய்தியின் வெளிப்பாட்டையும், அவருடைய வார்த்தையையும், அவருடைய சத்தத்தையும், இப்போது நாம் யார் என்பதையும், மனித வார்த்தைகளால் விவரித்துரைக்க முயற்ச்சிப்பதற்கு அப்பாற்பட்டது. நான் சொல்வது என்னவென்று உங்களுக்குத் துல்லியமாகப் புரியும் என்று நான் அறிவேன். விசுவாசத்தினால் ஏற்படும் எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தேவனுடைய சந்நிதியில் தாமே அமர்ந்திருந்து, பூரணப்படுத்தப்படுவதன் மூலம், அந்த மணவாட்டி தன்னைத் தானே ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.
தேவனுடைய சத்தம் தங்களோடு பேசுவதைக் கேட்க இந்த உலகத்திற்கு எத்துணை அரியதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அவர் பேசும்போது, தனது வார்த்தையை வெளிப்படுத்தும்போது, நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும்போது, வார்த்தைக்கு வார்த்தை அமர்ந்து செவிகொடுப்பதற்கு எத்துணைச் சிறந்த வாய்ப்பு இது! அவருடைய சந்நிதியில் அமர்ந்திருப்பதற்கு ஈடான அனுபவம் வேறெதுவும் இல்லை; எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அவர் தனது மணவாட்டியோடு, "விவாகமும் விவாகரத்தும்" 65-0221M எனும் செய்தியை பேச நாங்கள் கேட்கும்போது, நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோதரன் ஜோசப் பிரன்ஹாம்
இச்செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்கவேண்டிய வேத வசனங்கள்:
மத்தேயு 5:31-32 / 16:18 / 19:1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ஆம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே,
இதுவே அந்த நாள். இதுவே அந்த நேரம். தேவன் தம்முடைய திருமதி. இயேசு கிறிஸ்துவை அழைப்பதற்காகவும், அவளிடம் பேசி, "நீயே நான் தெரிந்துகொண்ட ஒருவள். நீயே நான் நேசிக்கிற ஒருவள். நீயே என்னுடைய பரிபூரண வார்த்தையாகிய கன்னிகையான மணவாட்டி. நாம் ஒன்றாயிருக்கிறோம்," என்று சொல்வதற்காகவும், தம்முடைய வல்லமையுள்ள கழுகை பூமிக்கு அனுப்பினார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே, நம்முடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் துள்ளுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த முழு உலகிலும், ஒரே ஒரு திருமதி இயேசு கிறிஸ்து மட்டுமே இருக்கிறாள் என்பதையும், அவர் அந்த ஒருவளுக்காகவே வருகிறார் என்பதையும், அந்த ஒருவள் நீங்களே என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரே ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் மட்டுமே உண்டு. ஒரே ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பரிபூரண செய்தி மட்டுமே உண்டு. ஒரே ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பரிபூரண மணவாட்டி மட்டுமே உண்டு...அது நாமாக இருக்கிறோம்!!
பிதாவுக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரே ஒரு ஆராதனை ஸ்தலம் உண்டு, அதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; அவரே அந்த வார்த்தையாக இருக்கிறார். இன்று, ஆவிக்குரிய மரணம் தாக்க முடியாத ஒரே ஒரு ஸ்தலம் மட்டுமே உண்டு: அதுவே அந்த வார்த்தை. மரணத்தால் அந்த வார்த்தையைத் தாக்க முடியாது, ஏனெனில், அது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாகும்.
அந்த ஜீவனுள்ள வார்த்தையின் முழுமையான வெளிப்பாடு, திருமதி இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திருமதி இயேசு கிறிஸ்து சென்று, அந்தப் பரிபூரண வார்த்தை உரைக்கப்பட்டதைக் கேட்கக்கூடிய, தெரிந்துகொள்ளப்பட்ட ஒரே ஒரு ஸ்தலம் மட்டுமே உண்டு. தேவனுடைய சத்தமாயிருப்பதற்கு தெரிந்துகொள்ளப்பட்ட ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டுமே உண்டு. திருமதி இயேசு சென்று, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கேட்கக்கூடிய ஒரே ஒரு ஸ்தலம் மட்டுமே உண்டு: அதுவே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்.
சாயங்கால வேளையில் வெளிச்சம் உண்டாகும், அதுவே தேவன் ஆராதனைக்காகத் தெரிந்துகொண்ட ஒரே ஸ்தலமாகும். ஓ, இந்தச் செய்தி எதற்காக வந்திருக்கிறது, அவர் என்ன செய்யப்போகிறார்? அவருடைய நாளில், சாயங்கால வேளையில் வெளிச்சம் உண்டாகும்; மேலும் (என்ன?) இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தினூடாக வழிநடத்திச் சென்ற அதே அக்கினி ஸ்தம்பம் என்னும் அடையாளத்தின் மூலமாகவே, தம்முடைய பிள்ளைகளை மீண்டும் அவர்களுடைய உண்மையான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமான, வீட்டிற்கு வரவேற்கவேயாகும்.
தம்முடைய மணவாட்டி, அவளுடைய கணவருடைய சத்தம் அவளிடத்தில் பேசுவதைக் கேட்பதற்கும், அதைப் பின்பற்றுவதற்கும் எவ்வளவு கவனமாய் இருக்க வேண்டும்! நாம் சென்று, 100 % உறுதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே ஒரு ஸ்தலம் மட்டுமே உண்டு. நாம் நமது நித்திய இலக்கை முழுமையாகச் சார்ந்திருக்கும் ஒரே ஒரு சத்தம் மட்டுமே உண்டு.
ஒலிநாடாக்களில் அவள் கேட்கிற வார்த்தைகள், தன் கணவரின் வார்த்தைகளே என்று திருமதி இயேசு கிறிஸ்து விசுவாசிக்கிறாள். அவருடைய வார்த்தைக்கு எவ்வித வியாக்கியானமும் தேவையில்லை என்று அவள் விசுவாசிக்கிறாள். ஆகவே, அவள் செல்லக்கூடிய, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று சொல்லக்கூடிய, ஒரே ஒரு அருளப்பட்ட ஸ்தலம் மட்டுமே இருப்பதாக அவள் விசுவாசிக்கிறாள், அதுவே, ஒலிநாடாக்களில் உள்ள அவளுடைய கணவரின் சத்தமாகும்.
மீண்டும் ஒருமுறை, உலகம் முழுவதிலும் உள்ள திருமதி. இயேசு கிறிஸ்து, "இந்த நாளில், இந்த உரைக்கப்பட்ட வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூற முடியும்.
அன்புள்ள தேவனே, அங்கே டூசான் பாலைவனப் பகுதிகளிலும், கலிபோர்னியாவிலும், நெவாடா மற்றும் இடாஹோவிலும், கிழக்குப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், டெக்சாஸிலும்; இந்த அழைப்பு விடுக்கப்படும் வேளையில்—சிறிய சபைகளிலும், எரிபொருள் நிலையங்களிலும், இல்லங்களிலும் அமர்ந்திருக்கும் மக்கள், செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்" 65-0220 எனும் செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரத்தோடு கேட்க வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேத வாக்கியங்கள்: உபாகமம் 16:1 முதல் 3 வரை.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மேம்பட்ட ராஜரீக வித்தே,
நாம் ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கிய நேரம் இங்கே உள்ளது. நாம் வந்தடைந்துவிட்டோம். அது நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் நாம்: இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று என்பதைக் கூற முடியும்.
மணவாட்டியோடு வெளிப்படுத்தலினால் என்னே ஒரு ஊக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நம்முடைய இருதயங்களிலும் ஆத்துமாக்களிலும், "கர்த்தாவே, இது எப்படி மகத்தான தாகவும், அற்புதமானதாகவும் இருக்க முடியும்?" என்று நாம் உணர்கிறோம். அவருடைய சத்தம் நம்மை அழைத்து, "நீ என்னுடைய இனிய இருதயம். நான் உன்னை என் மணவாட்டியாக இருக்கும் படிக்கு தெரிந்து கொண்டேன். நான் உனக்கு வாக்களித்தபடி, நான் உனக்காக வருகிறேன். நான் என் வழியில் இருக்கிறேன். சீக்கிரத்தில் நாம் நித்தியத்திற்காக ஒன்றாக இருப்போம்" என்று கூறுவதைக் நாம் கேட்கும்போது, அவர் மீண்டும் நம்மிடையே வந்து, நம்மை அபிஷேகிக்கிறார்.
நாம் உலகம் முழுவதிலுமிருந்து கூக்குரலிடுகிறோம், நம்முடைய அல்லேலூயாக்கள், மகிமைகள், துதிகள் மற்றும் அவருக்கு ஆராதனை செய்வதன் மூலம் பரலோகத்தைத் தாக்குகிறோம். சாத்தான் தோற்கடிக்கப்பட்டான். பிதாவானவர் நம்முடைய எல்லா சந்தேகங்களையும், நம்முடைய எல்லா நிச்சயமற்ற தன்மைகளையும், அனைத்தையும் நீக்கிவிட்டார். நாம் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும், நாம் ஆபிரகாமின் மேம்பட்ட ராஜரீக சந்ததி என்று அறிவிக்க முடியும். வாக்குப்பண்ணப்பட்ட ராஜரீக குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி.
கர்த்தருடைய பிரசன்னம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமக்குத் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவதால் மிகவும் அற்புதமாக உள்ளது. அவர் தம்முடைய மணவாட்டியை தம்முடைய வார்த்தையுடன் ஒன்றிணைத்து, நம்மை ஏக சிந்தையோடு ஏக மனதோடு ஒரே குழுவாக வைத்து, தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேட்டு, அவருடைய வார்த்தையால் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறார்.
நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் நம் ஆத்துமாவிற்குள் பீறிட்டு பாய்கிற ஒரு ஆர்ட்டீசியன் ஊற்றைப் போன்றது; தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பீறிட்டு, தள்ளி, புதியதாக பொங்கி வழிகிறது. நாம் பருகி, பருகி, பருகி நம்முடைய ஆத்துமாக்களைப் புதுப்பித்துக் கொள்கிறோம்.
என் சகோதர சகோதரிகளே, அவருக்கு ஒரு கன்னிகையான வார்த்தை மணவாட்டி இருப்பாள் என்று கூறும் வேதவாக்கியங்களின் நிறைவேறுதலாய் நாம் இருக்கிறோம். நாம்: இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்பதாய் இருக்கிறோம்.
தேவன் தாமே பரலோகத்திலிருந்து தம்முடைய ஏழாம் தூதனிடம் பேசி, “கிறிஸ்துவின் முதல் வருகையை முன்னறிவிக்க யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டதைப் போலவே, உன்னுடைய செய்தியும் உலகம் முழுவதும் அவருடைய இரண்டாவது வருகையை முன்னறிவிக்கும்” என்றார். எனவே மணவாட்டி: இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்று கூற முடியும்.
நம்முடைய காலத்தில் தேவனுடைய சத்தம் மனித உதடுகள் வழியாகப் பேசப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, நம் ஒவ்வொருவரிடமும், கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேச முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமா? யாருடைய வார்த்தையையும், யாருடைய எண்ணங்களையும், யாருடைய யோசனைகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அமர்ந்து அவருடைய கலப்படமற்ற வார்த்தையை நம்மிடத்தில் நேரடியாக பேசுகிற அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்பதை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
இன்று என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது?
கிழக்கில் உதிக்கும் அதே—அதே சூ-ரி-ய-னே மேற்கில் அதே சூ-ரி-ய-னா-க அஸ்தமிக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்திலும் அதே தேவ கு-மா-ர-னாய் இருக்கிறார், இன்றிரவும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற தம்மை, சபையின் மத்தியில் அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். சாயங்கால குமாரனின் வெளிச்சம் வந்துவிட்டது. இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நமக்கு முன்பாக நிறைவேறிற்று.
“ஒலிநாடாக்களை இயக்குவது தேவன் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற வழி” என்று கூறி விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோமா”?
ஒலிநாடாக்களை கேட்பதை விட மகத்தானது ஏதாவது இருக்கிறதா?
நான் நேற்றிரவு கூறினதுபோல, எப்பொழுதுமே மூன்றில், தேவன் சுட்டிக்காட்டப்படுகிறார். ஆண்புணர்ச்சிக்காரர்கள், லோத்தியர்கள், ஆபிரகாமியர்கள் இருந்தனர். இன்றிரவு அது அதே நிலையில் உள்ளது, உலகம் அந்த விதமாக அமைந்துள்ளது.
கவனியுங்கள், ஆபிரகாமோடு தங்கியிருந்த ஒருவர் தாமே தேவனாயிருந்தார். மற்ற இருவரும் தூதனின் செய்தியாளர்களாயிருந்தனர்.
அப்படியானால் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது யார்?
நான் உங்களை ஒன்று கேட்கட்டும். இப்பொழுது இந்த அமைப்பைப் பாருங்கள். ஆபிரகாம் தன்னோடு பேசின இந்த மனிதனை “ஏலோகிம்” என்று அழைத்தான். ஏலோஹீம் என்ற எபிரெய வார்த்தைக்கு “எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர், அந்த ஒருவர் நித்தியமானவர்” என்று பொருள்படுகிறார், ஏலோஹீம், தேவன் தாமே!
இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது எவ்வளவு முக்கியமானது?
…“என்றோ ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே காரியத்தை செய்வார், அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும் மன்னிக்கப்படமாட்டாது” என்றார். அது இந்த நாளிலே, ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். “அதற்கு விரோதமாய் ஒரு வார்த்தைப் பேசினாலும்; அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்று கூறினார்.
நம்முடைய கடந்த வாரத்தின் அல்லேலூயாக்களும் கர்த்தரைத் துதிப்பதும் இந்த ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதற்கான ஒரு ஆயத்தமாக மட்டுமே இருந்தது, மணவாட்டி மீண்டும் ஒன்றுபட்டு, தேவன் நம்மை ஊக்குவிப்பதையும், நாம் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நமக்கு உறுதியளிப்பதையும் கேட்கிறபடியால், அவர் சீக்கிரத்தில் நம்முடைய மகத்தான கலியாண விருந்துக்கும், பின்னர் நம்முடைய வருங்கால வீட்டிற்கும் நம்மை அழைத்துச் செல்ல வருகிறார்.
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-0219 - "இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று"
வேதவாக்கியங்கள்:
பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16
இந்த வார இறுதியில் ஜெபர்சன்வில்லில் நேர மாற்றத்தைப் பற்றி மறந்துவிடாதீர்கள்.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டியே,
நான் இந்தக் காலை இங்கு அமர்ந்து கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மணவாட்டி கேட்கும் இந்தச் செய்தியைக் கேட்கும்போதும், படிக்கும்போதும், ஆய்ந்துப் பார்க்கும்போதும் அப்படிப்பட்ட அபிஷேகத்தை உணருகிறேன். என்னுடைய முழு சரீரமும் அபிஷேகிக்கப்பட்டுள்ளது. இந்த அபிஷேகத்தால் நாம் அனைவரும் உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடுவோம் என்பதை அறிந்து என் இருதயம் மிகுந்த சந்தோஷத்தால் பொங்கி வழிகிறது. அவர் நம் ஒவ்வொருவரிடமும் பேசுகிறபோதும், அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறபோதும், நாம் அனைவரும் ஒரே நேரத்தில் களி கூர்ந்து, கர்த்தரைப் துதித்துக்கொண்டிருப்போம்.
அபிஷேகம் மிகவும் மகத்தானதாக இருக்கும், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் "அல்லேலூயா, ஆமென், கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்" என்று ஆரவாரமிட்டு சத்தமிடுதலும் இருக்கும், அதே நேரத்தில் நாம் நமது துதிகளோடு ஆராதிப்பதன் மூலம் பரலோகத்தில் வெற்றி முழக்கமிடுவோம்.
என்ன நடந்து கொண்டிருக்கும்? தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைந்துப் பேசிக்கொண்டிருப்பார். அவர் வெளிப்படுத்துகிறபோது, தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறபோது, ஏக மனதோடு, ஒருமனப்பட்டு, நாம் ஒரே குழுவாக இருப்போம்.
நீங்கள் செல்லக்கூடிய சிறந்த இடம் எதுவுமில்லை, நீங்கள் கேட்கக்கூடிய சிறந்த சத்தம் எதுவுமில்லை; ஒலிநாடாக்களில் நேரடியாக உங்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தத்தை விட மகத்தான அபிஷேகம் வேறெதுவும் இல்லை.
தேவன் ஆதியிலிருந்தே தம்முடைய வார்த்தையைக் கண்காணித்து வந்துள்ளார், மேலும் தம்முடைய எல்லாப் பிள்ளைகளும் சென்று அவர் பேசுவதையும், அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதையும் கேட்கக்கூடிய ஒரு இடத்தை அருளியுள்ளார். யூகிக்கவோ, எதிர்பார்க்கவோ, யோசிக்கவோ இல்லாத ஒரு இடம்; கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கேட்க இது தேவன் அருளியிருக்கிற ஸ்தலமாகும்.
அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்போது, அது உங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஏற்றப்பட்ட ஒரு பெரிய ஒளியைப் போன்றது... நீங்கள், "இதுதான். நான் அதைப் பார்க்கிறேன். நான் வார்த்தையுடன் ஒன்றாக இருக்கிறேன். நான் வார்த்தை. நான் மணவாட்டி. நான் வந்துவிட்டேன்" என்று சத்தமிடுகிறீர்கள்.
அது சம்பவித்துக் கொண்டிருக்கிறது, அவர்கள் அதை அறிவதில்லை. பாருங்கள், அதுதான். பார்த்தீர்களா? ஆம், ஐயா. உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.” பார்த்தீர்களா? அப்படித்தான் கூறப்பட்டுள்ளது. பிணம் என்றால் என்ன? வார்த்தை. அவரே வார்த்தை, பிணம், கிறிஸ்து! “கிறிஸ்து உங்களுக்குள்” நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது எவ்வளவு உண்மை!
நாம் வார்த்தையைக் கேட்க கூடிவரும்போது, நம்முடைய எல்லா கவலைகளும், நம்முடைய எல்லா மன அழுத்தமும், நம்முடைய எல்லா பிரச்சினைகளும் எளிமையாக மறைந்துவிடும். நமக்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து நாம் களிகூருகிறோம்; நாம் அவருடைய மணவாட்டி. அவர் நம்முடன் மட்டுமல்ல, ஆனால் அவர் நமக்குள்ளும் இருக்கிறார். நாம் வித்தான வார்த்தை மணவாட்டி. ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக இருக்கிறது. அவருடைய நேரமும் பரிபூரணமாக இருக்கிறது. நாம் பரிபூரணமாயிருக்கிறோம்.
நாம் வெளிப்படுத்தப்பட்ட அவரது கன்னிப்-பிறப்பான வார்த்தை என்று சொல்வதில் நாம் மிகவும் திருப்தியடைகிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராய், நமக்குள் ஜீவித்துக்கொண்டும், வாசம் செய்து கொண்டும் இருக்கிறார். அல்லேலூயா!
ஒரு வார்த்தையின் பேரில் கூட நாம் ஒப்புரவாக முடியாது. நாம் ஒலிநாடாக்களில் சத்தத்தைக் கேட்க வேண்டும்.
நீங்கள் எப்போதாவது ஒரு கழுகு ஒப்புரவாகுவதைக் கண்டிருக்கிறீர்களா? இல்லை ஐயா. அதற்குள் விட்டுக்கொடுக்கும் தன்மையே கிடையாது. ஒரு உண்மையான கிறிஸ்தவனும் அவ்வாறில்லை. அவன் மென்மையானவன் அல்ல. அதைக் கண்டுபிடிக்கும் வரை வேட்டையாடுவான். ஆமென். ஆம், ஐயா. அவன் தன் ஆகாரத்தைக் கண்டுபிடிப்பான். அவனுக்குப் புதிய மன்னா வேண்டும். அவன் அங்குச் சென்று அதைக் கண்டுபிடிக்கும் வரையில் தோண்டியெடுப்பான். அவன் இன்னும் உயரப் பறந்து செல்வான். இந்தப் பள்ளத்தாக்கில் ஒன்றுமே இல்லையென்றால், அவன் சற்று உயரமாக எழும்புவான். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களால் பார்க்க முடியும். எனவே இக்காலத்து கழுகுகள் உயர பறந்து சென்று, தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமாயுள்ளது, பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட ராஜாளிகளின் ஆகாரத்தினால் ஜீவிக்காமல், அதிலிருந்து வெளியேற வேண்டும்.
ஆயத்தமாகுங்கள் மணவாட்டியே, 65-0218 வித்து பதருடன் சுந்தரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிற படியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, அங்குள்ள மகத்தான அபிஷேகத்தின் கீழ் அமர்ந்து அந்த புதிதான மன்னாவை நாம் புசிப்போம்.
தேவன் அருளியுள்ள இன்றைக்கான பரிபூரண வழியின் பேரில் விருந்துண்டு மகிழ உலகெங்கிலும் உள்ள மணவாட்டியை எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் அழைக்கிறோம். மணவாட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்லக்கூடிய ஒரே இடம். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்டு அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதனால் உன்னத பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பேசி அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேதவாக்கியங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 5:24 / 14:12
ரோமர் 8:1
கலாத்தியர் 4: 27-31
எபிரெயர் 13:8
1 யோவான் 5:7
வெளிப்படுத்தின விசேஷம் 10
மல்கியா 4
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஆட்டுக்குட்டிகளே,
"நாம் தேவனுடைய ஆட்டுக்குட்டிகள், அவர் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரை அனுப்பி அழைத்து, தம்முடைய சேமித்து வைக்கப்பட்ட மறைவான மன்னாவை போஷிக்கிறார்,” என்று கூறுவது என்னே ஒரு கனமும் சிலாக்கியமுமாயிருக்கிறது.
இந்தச் செய்தி அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்த அனுப்பப்பட்டிருக்கிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். கோதுமையிலிருந்து பதர் விலகிச் செல்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், இப்போது அவருடைய மணவாட்டி முதிர்ச்சியடையும்படிக்கு இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்படிக்கு குமாரனின் பிரசன்னத்தில் இருக்கிறாள்.
அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம், நண்பரே, இங்கே உள்ள எங்கள் சிறிய மக்கள் குழு, அது கிறிஸ்துவுக்கு அவ்வளவாக முதிர்ச்சியடையும் வரை, அது அவருடைய மேஜையில் அப்பமாக மாறும் வரை, குமாரனின் பிரசன்னத்தில் தரித்திருக்கிறோம். அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன்.
இயங்கு பொத்தானை அழுத்தி நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேட்காத எவரும் கர்த்தருடைய சமூகத்திலிருந்து விலகி ஓடிப் போகிற ஒரு நபராக இருக்கிறீர்கள்.
நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும், அல்லது அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் அது உண்டு, நீங்கள் இந்த காரியங்களை எதிர்கொள்ள வேண்டும்.
இன்றைக்கான இந்த மேற்கோள் எவ்வளவு உண்மையும் முக்கியமானதுமாயுள்ளது. தேவனால் அழைக்கப்பட்டவர்களிடையே அதிக பிரிவினை உள்ளது. தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படி சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது மிகவும் அவசியமா, அல்லது இப்போது வார்த்தையை பிரசங்கிற ஊழியம் செய்வது மிகவும் அவசியமா?
ஜனங்களுக்கு முன்பாக வார்த்தையை வைத்திருக்க இங்கே தேவன் அழைத்து ஊழியத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மேய்ப்பர்கள். வார்த்தை இதைக் கற்பிக்கிறது. தேவன் அழைத்து வைத்த மனிதர்களாக அவர்கள் மதிக்கப்பட வேண்டும், கனப்படுத்தப்பட வேண்டும்.
அவர்கள் மணவாட்டி இல்லை என்று நாம் ஒருபோதும் சொல்ல முடியாது, சொல்லக்கூடாது. அது தவறு, தீர்க்கதரிசி நமக்குக் கற்பித்தபடி அல்ல. ஜனங்கள், "அவர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதில்லையென்றால், அவர்கள் வார்த்தைக்கு எதிரானவர்கள்" என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தை ஒருபோதும் சொல்லக்கூடாது. அது நீங்கள் தவறான ஆவியை உடையவர்களாயிருப்பதையே காட்டுகிறது.
மற்றவர்கள், "அவர்கள் அனைவரும் பிரான்ஹாம் கூடாரத்தில் நேரடி ஒலிபரப்பைக் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளதையும் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் ஒருபோதும் அப்படி ஒரு காரியத்தை சொல்லக்கூடாது. யார் மணவாட்டி, யார் மணவாட்டி இல்லை என்பதை தேவன் மாத்திரமே அறிந்திருக்கிறார். அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறுவது மணவாட்டியின் ஆவி அல்ல.
பிரான்ஹாம் கூடாரத்தில் நேரடியாக கேட்டுக் கொண்டிருக்கிற சில ஜனங்களும் கூட, “நீங்கள் ஒலிநாடாக்களை உங்களுடைய வீட்டில் நேரடியாக கேட்காமல் சபைக்கு சென்று அதைக் கேட்டால் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்!” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு சகோதர சகோதரிகளே. நீங்கள் அப்படிச் கூறிக் கொண்டிருந்தால், நிறுத்துங்கள், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். அவர்கள் கர்த்தரால் செய்யும்படி வழி நடத்தப்படுவதை உணர்கிறதையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
பிரசங்கிப்பது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழி என்று அநேக ஊழியக்காரர்கள் நினைக்கிறார்கள். நாம் காரியங்களை வேறுவிதமாகப் பார்க்கிறோம், அது பரவாயில்லை. சகோதரன் பிரான்ஹாம் எத்தனை முறை இதே ஒப்பீட்டைச் செய்திருக்கிறார்? சகோதரன் ஜாக்சன் தவறாய் இருந்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்து ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கும் அவருடைய சபைக்கும் எதிராக அவர்கள் கூடிக் கொண்டிருக்கிற இந்த காரியத்தையும் அவர் கண்டனம் செய்தார் என்பதை நாம் இப்பொழுது தான் கேள்விகளும் & பதில்களும் என்பதன் பேரில் அவரைக் குறித்து கேட்டோம்.
பிரான்ஹாம் கூடாரத்திற்கு தேவன் அருளியிருக்கிற வழி என்று நான் நம்புகிறபடியால் இந்தக் கடிதம் மூலம் நான் பிரசிங்கத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள். அவர்கள் கர்த்தரையும் இந்தச் செய்தியையும் நேசிக்கிறார்கள். அந்த விதமாகத்தான் கர்த்தர் தங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் உணர்கிறார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
அவர்கள் அதை ஒரு வழியில் பார்க்கிறார்கள், நாம் அதை வேறு வழியில் பார்க்கிறோம், அது பரவாயில்லை. நான் அதை அவர்களின் வழியில் பார்க்க முடியாது, என்னுடையதை அவர்களால் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், தேவன் அருளியிருக்கிற பல வழிகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பரிபூரண வழி மாத்திரமே உள்ளது, எனக்கோ, அது இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே ஆகும்.
இங்கே நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நான் ஜெபிக்கிறேன். ஜனங்களுக்காக கைகளை வைத்து ஜெபிப்பது 100% வார்த்தையின்படியுள்ளது. வேதத்தின்படி, எண்ணெய் பூசுவதும், நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பதும் தேவனுடைய வார்த்தையின்படி வேதவாக்கியமாயிருக்கிறது. சகோதரன் பிரான்ஹாம், வார்த்தையாக இருக்கும்படி இரண்டையுமே நமக்குப் பிரசங்கித்து, கற்பித்தார். ஆனால் தேவன் அளித்திருக்கிற அவருடைய பரிபூரணமான வழியை நான் விரும்புகிறேன்...தேவன் அவ்வண்ணமாய்க் கூறின காரணத்தால் அப்படியே விசுவாசிக்கிறேன். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.
ஆனால் இப்போது சுகமளித்தலுக்காக, "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" என்று அவர் கூறுகிறதே தேவனுடைய இரக்கமாயுள்ளது. இப்போது, முதலில் வார்த்தை அவ்வாறு கூறுகிறது, அது போதுமானதாக இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் வார்த்தையை விசுவாசிக்கவில்லையென்றால், அதை எவ்வாறு கற்பிப்பது என்பதை அறிய ஆவியினால் ஏவப்பட்ட மனிதர்கள் போன்ற வரங்கள் சபையில் உள்ளன, அது உங்களுக்கு மிகவும் தெளிவாக்குகிறது, அதுதான், விசுவாசிப்பதற்குரிய விசுவாசம்.
5 -விதமான ஊழியத்தை நான் நம்புகிறேன். வார்த்தையைப் பிரசங்கிக்க மற்றும் கற்பிக்க தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களை நான் நம்புகிறேன். ஆனால், எனக்கான தேவனுடைய பரிபூரண வழி ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்று நான் விசுவாசிக்கிறேன்.
ஒலிநாடாக்களைக் கேட்பதில், நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, நான் கேட்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, என் நித்திய இலக்கை வைக்கக்கூடிய இடத்திற்கு, ஒலிநாடாக்களைத் தவிர, வேறு எந்த நபரும், ஊழியரும் இல்லை, வேறு எந்த இடமும் இல்லை.
காலத்தின் தொடக்கத்திலிருந்து இதற்கு முன்பு ஒருபோதும் தேவன் தம்முடைய மக்களுக்கு தம்முடைய சத்தத்தை தாங்களாகவே உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதைக் கேட்கும் வாய்ப்பையும் திறனையும் ஒருபோதும் வழங்கியதில்லை. ஒவ்வொரு இரகசியமும் ஒலிநாடாக்களில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்படுகிறது. மணவாட்டி பரிபூரணமாக்கப்பட வேண்டிய ஒவ்வொரு காரியமும் ஒலிநாடாக்களில் உள்ளன.
ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய வார்த்தையாயுள்ளது. எனக்குப் புரியாமல் இருக்கலாம் அல்லது எல்லாவற்றையும் விளக்க முடியாமல் போகலாம், ஆனால் நான் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்ல வேண்டும் என்று அவர் என்னிடம் கோருகிறார், மேலும் நான் அதைச் செய்யக்கூடிய ஒரே இடம் ஒலிநாடாக்களில் மாத்திரமே உள்ளது.
ஆனால் நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்ய வேண்டும் என்னும் போது, நீங்கள் உண்மையென்று அறிந்துள்ள ஒன்றின் மேல் உறுதியாக நிற்க வேண்டும் என்னும் போது, அதுதான் மிகவும் கடினமான செயல், அங்கு தான் சரியாக உரசல் ஏற்படுகின்றது.
எனக்குள்ள எல்லாவற்றோடும் நான் விசுவாசிக்கிறேன், நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில், நினிவேக்குச் செல்லும் கப்பலில் இருக்கிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, தேவன் தம்முடைய ஆட்டுக்குட்டிகளிடம் பேசுவதைக் கேட்கும்போது, உலகம் எங்களுடன் எங்கள் கப்பலில் பயணம் செய்யும் படி வர நான் விரும்புகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-0217 "கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப் போகும் ஒரு மனிதன்"
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30