காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 28 பிப்ரவரி, 2026

அன்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டியே,

நான் இந்தக் காலை இங்கு அமர்ந்து கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மணவாட்டி கேட்கும் இந்தச் செய்தியைக் கேட்கும்போதும், படிக்கும்போதும், ஆய்ந்துப் பார்க்கும்போதும் அப்படிப்பட்ட அபிஷேகத்தை உணருகிறேன். என்னுடைய முழு சரீரமும் அபிஷேகிக்கப்பட்டுள்ளது. இந்த அபிஷேகத்தால் நாம் அனைவரும் உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடுவோம் என்பதை அறிந்து என் இருதயம் மிகுந்த சந்தோஷத்தால் பொங்கி வழிகிறது. அவர் நம் ஒவ்வொருவரிடமும் பேசுகிறபோதும், அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறபோதும், நாம் அனைவரும் ஒரே நேரத்தில் களி கூர்ந்து, கர்த்தரைப் துதித்துக்கொண்டிருப்போம்.

அபிஷேகம் மிகவும் மகத்தானதாக இருக்கும், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் "அல்லேலூயா, ஆமென், கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்" என்று ஆரவாரமிட்டு சத்தமிடுதலும் இருக்கும், அதே நேரத்தில் நாம் நமது துதிகளோடு ஆராதிப்பதன் மூலம் பரலோகத்தில் வெற்றி முழக்கமிடுவோம்.

என்ன நடந்து கொண்டிருக்கும்? தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைந்துப் பேசிக்கொண்டிருப்பார். அவர் வெளிப்படுத்துகிறபோது, தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறபோது, ஏக மனதோடு, ஒருமனப்பட்டு, நாம் ஒரே குழுவாக இருப்போம்.

நீங்கள் செல்லக்கூடிய சிறந்த இடம் எதுவுமில்லை, நீங்கள் கேட்கக்கூடிய சிறந்த சத்தம் எதுவுமில்லை; ஒலிநாடாக்களில் நேரடியாக உங்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தத்தை விட மகத்தான அபிஷேகம் வேறெதுவும் இல்லை.

தேவன் ஆதியிலிருந்தே தம்முடைய வார்த்தையைக் கண்காணித்து வந்துள்ளார், மேலும் தம்முடைய எல்லாப் பிள்ளைகளும் சென்று அவர் பேசுவதையும், அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதையும் கேட்கக்கூடிய ஒரு இடத்தை அருளியுள்ளார். யூகிக்கவோ, எதிர்பார்க்கவோ, யோசிக்கவோ இல்லாத ஒரு இடம்; கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கேட்க இது தேவன் அருளியிருக்கிற ஸ்தலமாகும்.

அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்போது, அது உங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஏற்றப்பட்ட ஒரு பெரிய ஒளியைப் போன்றது... நீங்கள், "இதுதான். நான் அதைப் பார்க்கிறேன். நான் வார்த்தையுடன் ஒன்றாக இருக்கிறேன். நான் வார்த்தை. நான் மணவாட்டி. நான் வந்துவிட்டேன்" என்று சத்தமிடுகிறீர்கள்.

அது சம்பவித்துக் கொண்டிருக்கிறது, அவர்கள் அதை அறிவதில்லை. பாருங்கள், அதுதான். பார்த்தீர்களா? ஆம், ஐயா. உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.” பார்த்தீர்களா? அப்படித்தான் கூறப்பட்டுள்ளது. பிணம் என்றால் என்ன? வார்த்தை. அவரே வார்த்தை, பிணம், கிறிஸ்து! “கிறிஸ்து உங்களுக்குள்” நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது எவ்வளவு உண்மை!

நாம் வார்த்தையைக் கேட்க கூடிவரும்போது, நம்முடைய எல்லா கவலைகளும், நம்முடைய எல்லா மன அழுத்தமும், நம்முடைய எல்லா பிரச்சினைகளும் எளிமையாக மறைந்துவிடும். நமக்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து நாம் களிகூருகிறோம்; நாம் அவருடைய மணவாட்டி. அவர் நம்முடன் மட்டுமல்ல, ஆனால் அவர் நமக்குள்ளும் இருக்கிறார். நாம் வித்தான வார்த்தை மணவாட்டி. ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக இருக்கிறது. அவருடைய நேரமும் பரிபூரணமாக இருக்கிறது. நாம் பரிபூரணமாயிருக்கிறோம்.

நாம் வெளிப்படுத்தப்பட்ட அவரது கன்னிப்-பிறப்பான வார்த்தை என்று சொல்வதில் நாம் மிகவும் திருப்தியடைகிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராய், நமக்குள் ஜீவித்துக்கொண்டும், வாசம் செய்து கொண்டும் இருக்கிறார். அல்லேலூயா!

ஒரு வார்த்தையின் பேரில் கூட நாம் ஒப்புரவாக முடியாது. நாம் ஒலிநாடாக்களில் சத்தத்தைக் கேட்க வேண்டும்.

நீங்கள் எப்போதாவது ஒரு கழுகு ஒப்புரவாகுவதைக் கண்டிருக்கிறீர்களா? இல்லை ஐயா. அதற்குள் விட்டுக்கொடுக்கும் தன்மையே கிடையாது. ஒரு உண்மையான கிறிஸ்தவனும் அவ்வாறில்லை. அவன் மென்மையானவன் அல்ல. அதைக் கண்டுபிடிக்கும் வரை வேட்டையாடுவான். ஆமென். ஆம், ஐயா. அவன் தன் ஆகாரத்தைக் கண்டுபிடிப்பான். அவனுக்குப் புதிய மன்னா வேண்டும். அவன் அங்குச் சென்று அதைக் கண்டுபிடிக்கும் வரையில் தோண்டியெடுப்பான். அவன் இன்னும் உயரப் பறந்து செல்வான். இந்தப் பள்ளத்தாக்கில் ஒன்றுமே இல்லையென்றால், அவன் சற்று உயரமாக எழும்புவான். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களால் பார்க்க முடியும். எனவே இக்காலத்து கழுகுகள் உயர பறந்து சென்று, தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமாயுள்ளது, பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட ராஜாளிகளின் ஆகாரத்தினால் ஜீவிக்காமல், அதிலிருந்து வெளியேற வேண்டும்.

ஆயத்தமாகுங்கள் மணவாட்டியே, 65-0218 வித்து பதருடன் சுந்தரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிற படியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, அங்குள்ள மகத்தான அபிஷேகத்தின் கீழ் அமர்ந்து அந்த புதிதான மன்னாவை நாம் புசிப்போம்.

தேவன் அருளியுள்ள இன்றைக்கான பரிபூரண வழியின் பேரில் விருந்துண்டு மகிழ உலகெங்கிலும் உள்ள மணவாட்டியை எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் அழைக்கிறோம். மணவாட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்லக்கூடிய ஒரே இடம். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்டு அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதனால் உன்னத பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பேசி அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

வேதவாக்கியங்கள்:

பரி. மத்தேயு 24:24
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 5:24 / 14:12
ரோமர் 8:1
கலாத்தியர் 4: 27-31
எபிரெயர் 13:8
1 யோவான் 5:7
வெளிப்படுத்தின விசேஷம் 10
மல்கியா 4

 

 

சனி, 21 பிப்ரவரி, 2026

அன்புள்ள ஆட்டுக்குட்டிகளே,

"நாம் தேவனுடைய ஆட்டுக்குட்டிகள், அவர் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரை அனுப்பி அழைத்து, தம்முடைய சேமித்து வைக்கப்பட்ட மறைவான மன்னாவை போஷிக்கிறார்,” என்று கூறுவது என்னே ஒரு கனமும் சிலாக்கியமுமாயிருக்கிறது.

இந்தச் செய்தி அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்த அனுப்பப்பட்டிருக்கிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். கோதுமையிலிருந்து பதர் விலகிச் செல்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், இப்போது அவருடைய மணவாட்டி முதிர்ச்சியடையும்படிக்கு இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்படிக்கு குமாரனின் பிரசன்னத்தில் இருக்கிறாள்.

அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம், நண்பரே, இங்கே உள்ள எங்கள் சிறிய மக்கள் குழு, அது கிறிஸ்துவுக்கு அவ்வளவாக முதிர்ச்சியடையும் வரை, அது அவருடைய மேஜையில் அப்பமாக மாறும் வரை, குமாரனின் பிரசன்னத்தில் தரித்திருக்கிறோம். அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன்.

இயங்கு பொத்தானை அழுத்தி நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேட்காத எவரும் கர்த்தருடைய சமூகத்திலிருந்து விலகி ஓடிப் போகிற ஒரு நபராக இருக்கிறீர்கள்.

நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும், அல்லது அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் அது உண்டு, நீங்கள் இந்த காரியங்களை எதிர்கொள்ள வேண்டும்.

இன்றைக்கான இந்த மேற்கோள் எவ்வளவு உண்மையும் முக்கியமானதுமாயுள்ளது. தேவனால் அழைக்கப்பட்டவர்களிடையே அதிக பிரிவினை உள்ளது. தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படி சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது மிகவும் அவசியமா, அல்லது இப்போது வார்த்தையை பிரசங்கிற ஊழியம் செய்வது மிகவும் அவசியமா?

ஜனங்களுக்கு முன்பாக வார்த்தையை வைத்திருக்க இங்கே தேவன் அழைத்து ஊழியத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மேய்ப்பர்கள். வார்த்தை இதைக் கற்பிக்கிறது. தேவன் அழைத்து வைத்த மனிதர்களாக அவர்கள் மதிக்கப்பட வேண்டும், கனப்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் மணவாட்டி இல்லை என்று நாம் ஒருபோதும் சொல்ல முடியாது, சொல்லக்கூடாது. அது தவறு, தீர்க்கதரிசி நமக்குக் கற்பித்தபடி அல்ல. ஜனங்கள், "அவர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதில்லையென்றால், அவர்கள் வார்த்தைக்கு எதிரானவர்கள்" என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தை ஒருபோதும் சொல்லக்கூடாது. அது நீங்கள் தவறான ஆவியை உடையவர்களாயிருப்பதையே காட்டுகிறது.

மற்றவர்கள், "அவர்கள் அனைவரும் பிரான்ஹாம் கூடாரத்தில் நேரடி ஒலிபரப்பைக் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளதையும் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் ஒருபோதும் அப்படி ஒரு காரியத்தை சொல்லக்கூடாது. யார் மணவாட்டி, யார் மணவாட்டி இல்லை என்பதை தேவன் மாத்திரமே அறிந்திருக்கிறார். அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறுவது மணவாட்டியின் ஆவி அல்ல.

பிரான்ஹாம் கூடாரத்தில் நேரடியாக கேட்டுக் கொண்டிருக்கிற சில ஜனங்களும் கூட, “நீங்கள் ஒலிநாடாக்களை உங்களுடைய வீட்டில் நேரடியாக கேட்காமல் சபைக்கு சென்று அதைக் கேட்டால் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்!” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு சகோதர சகோதரிகளே. நீங்கள் அப்படிச் கூறிக் கொண்டிருந்தால், நிறுத்துங்கள், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். அவர்கள் கர்த்தரால் செய்யும்படி வழி நடத்தப்படுவதை உணர்கிறதையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

பிரசங்கிப்பது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழி என்று அநேக ஊழியக்காரர்கள் நினைக்கிறார்கள். நாம் காரியங்களை வேறுவிதமாகப் பார்க்கிறோம், அது பரவாயில்லை. சகோதரன் பிரான்ஹாம் எத்தனை முறை இதே ஒப்பீட்டைச் செய்திருக்கிறார்? சகோதரன் ஜாக்சன் தவறாய் இருந்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்து ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கும் அவருடைய சபைக்கும் எதிராக அவர்கள் கூடிக் கொண்டிருக்கிற இந்த காரியத்தையும் அவர் கண்டனம் செய்தார் என்பதை நாம் இப்பொழுது தான் கேள்விகளும் & பதில்களும் என்பதன் பேரில் அவரைக் குறித்து கேட்டோம்.

பிரான்ஹாம் கூடாரத்திற்கு தேவன் அருளியிருக்கிற வழி என்று நான் நம்புகிறபடியால் இந்தக் கடிதம் மூலம் நான் பிரசிங்கத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள். அவர்கள் கர்த்தரையும் இந்தச் செய்தியையும் நேசிக்கிறார்கள். அந்த விதமாகத்தான் கர்த்தர் தங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் உணர்கிறார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

அவர்கள் அதை ஒரு வழியில் பார்க்கிறார்கள், நாம் அதை வேறு வழியில் பார்க்கிறோம், அது பரவாயில்லை. நான் அதை அவர்களின் வழியில் பார்க்க முடியாது, என்னுடையதை அவர்களால் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், தேவன் அருளியிருக்கிற பல வழிகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பரிபூரண வழி மாத்திரமே உள்ளது, எனக்கோ, அது இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே ஆகும்.

இங்கே நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நான் ஜெபிக்கிறேன். ஜனங்களுக்காக கைகளை வைத்து ஜெபிப்பது 100% வார்த்தையின்படியுள்ளது. வேதத்தின்படி, எண்ணெய் பூசுவதும், நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பதும் தேவனுடைய வார்த்தையின்படி வேதவாக்கியமாயிருக்கிறது. சகோதரன் பிரான்ஹாம், வார்த்தையாக இருக்கும்படி இரண்டையுமே நமக்குப் பிரசங்கித்து, கற்பித்தார். ஆனால் தேவன் அளித்திருக்கிற அவருடைய பரிபூரணமான வழியை நான் விரும்புகிறேன்...தேவன் அவ்வண்ணமாய்க் கூறின காரணத்தால் அப்படியே விசுவாசிக்கிறேன். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.

ஆனால் இப்போது சுகமளித்தலுக்காக, "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" என்று அவர் கூறுகிறதே தேவனுடைய இரக்கமாயுள்ளது. இப்போது, முதலில் வார்த்தை அவ்வாறு கூறுகிறது, அது போதுமானதாக இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் வார்த்தையை விசுவாசிக்கவில்லையென்றால், அதை எவ்வாறு கற்பிப்பது என்பதை அறிய ஆவியினால் ஏவப்பட்ட மனிதர்கள் போன்ற வரங்கள் சபையில் உள்ளன, அது உங்களுக்கு மிகவும் தெளிவாக்குகிறது, அதுதான், விசுவாசிப்பதற்குரிய விசுவாசம்.

5 -விதமான ஊழியத்தை நான் நம்புகிறேன். வார்த்தையைப் பிரசங்கிக்க மற்றும் கற்பிக்க தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களை நான் நம்புகிறேன். ஆனால், எனக்கான தேவனுடைய பரிபூரண வழி ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஒலிநாடாக்களைக் கேட்பதில், நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, நான் கேட்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, என் நித்திய இலக்கை வைக்கக்கூடிய இடத்திற்கு, ஒலிநாடாக்களைத் தவிர, வேறு எந்த நபரும், ஊழியரும் இல்லை, வேறு எந்த இடமும் இல்லை.

காலத்தின் தொடக்கத்திலிருந்து இதற்கு முன்பு ஒருபோதும் தேவன் தம்முடைய மக்களுக்கு தம்முடைய சத்தத்தை தாங்களாகவே உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதைக் கேட்கும் வாய்ப்பையும் திறனையும் ஒருபோதும் வழங்கியதில்லை. ஒவ்வொரு இரகசியமும் ஒலிநாடாக்களில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்படுகிறது. மணவாட்டி பரிபூரணமாக்கப்பட வேண்டிய ஒவ்வொரு காரியமும் ஒலிநாடாக்களில் உள்ளன.

ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய வார்த்தையாயுள்ளது. எனக்குப் புரியாமல் இருக்கலாம் அல்லது எல்லாவற்றையும் விளக்க முடியாமல் போகலாம், ஆனால் நான் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்ல வேண்டும் என்று அவர் என்னிடம் கோருகிறார், மேலும் நான் அதைச் செய்யக்கூடிய ஒரே இடம் ஒலிநாடாக்களில் மாத்திரமே உள்ளது.

ஆனால் நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்ய வேண்டும் என்னும் போது, நீங்கள் உண்மையென்று அறிந்துள்ள ஒன்றின் மேல் உறுதியாக நிற்க வேண்டும் என்னும் போது, அதுதான் மிகவும் கடினமான செயல், அங்கு தான் சரியாக உரசல் ஏற்படுகின்றது.

எனக்குள்ள எல்லாவற்றோடும் நான் விசுவாசிக்கிறேன், நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில், நினிவேக்குச் செல்லும் கப்பலில் இருக்கிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, தேவன் தம்முடைய ஆட்டுக்குட்டிகளிடம் பேசுவதைக் கேட்கும்போது, உலகம் எங்களுடன் எங்கள் கப்பலில் பயணம் செய்யும் படி வர நான் விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தி: 65-0217 "கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப் போகும் ஒரு மனிதன்"

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30

 

 

சனி, 14 பிப்ரவரி, 2026

அன்புள்ள ராஜரீக குடும்பத்தினரே,

கர்த்தர் தம்முடைய தூதன் மூலம் பேசி, உங்களிடத்தில், “எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள், ராஜரீக இரத்தத்தைக் கொண்ட ஒரு ராஜரீக குடும்பம். உங்களுடைய இரத்தத்தைக் காட்டிலும் சிறந்த இரத்தம் இந்த உலகத்தில் இல்லை. நீங்கள் கிறிஸ்துவுக்கு நான் பெற்றெடுத்துள்ள, உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்ற என் பிள்ளைகள்,” என்று சொல்வதை நீங்கள் போய் கேட்கக் கூடிய ஒரே ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட இடம் மாத்திரமே உண்டு.

நாம் நம்முடைய நரம்புகளில் ஓடுகிற ராஜரீக இரத்தத்துடன் கூடிய தேவனுடைய ராஜரீக குடும்பம். அவருடைய வல்லமையுள்ள தீர்க்கதரிசியின் மூலமாக தேவனுடைய சத்தம் பேசுவதால் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்துள்ள பிள்ளைகள். இதை விட சிறப்பாக இருக்க முடியாது என் நண்பர்களே.

சகோதரன் பிரான்ஹாம், மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஜெபர்சன்வில் அல்லது அரிசோனாவுக்குச் செல்ல வேண்டுமா?

"ஒரு படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரை விட்டுவிடுவேன்; இரண்டு பேர் ஒரு வயலில் இருப்பார்கள், நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரை விட்டுவிடுவேன்." பார்த்தீர்களா? எனவே அவர்கள் அநேகமாக...உலகம் முழுவதும், பொதுவான விஷயங்களைக் கொண்டிருக்க அவர்கள் ஒரே இடத்தில் கூடிவர மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிறிய குழுக்கள் பூமியெங்கும் சிதறடிக்கப்படுவார்கள்.

ஆகவே, சரீரப்பிரகாரமாக, நாம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்க மாட்டோம். ஆனால் தேவனுக்கு மகிமை, அவர் தனது மணவாட்டியை ஒன்றிணைக்க இன்னும் கூட பெரிய திட்டத்தை வைத்திருந்தார்.

நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று, அவர் இந்த தேசத்தை சுற்றி மட்டுமல்ல, உலகின் 7 கண்டங்களிலிருந்தும் நம்மை கூட்டி சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்காவிலிருந்து அண்டார்டிகா வரை. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா. தேவனுடைய சத்தத்தைக் கேட்க அவர் தனது மணவாட்டியை ஒரு குழுவாக கூட்டி ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் நம்மை சபைக்குச் செல்லச் சொன்னார்; அவர்கள் பாதி வார்த்தையைக் கற்பிக்கும் இடத்திலும் கூட, அவர்கள் முழு வார்த்தையையும் கற்பிக்கும் ஒரு சபையை நாம் கண்டுபிடிக்கும் வரை. மணவாட்டி இப்பொழுது அந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, ஒலிநாடவில் உள்ள தேவனுடைய சத்தமே முழு வார்த்தையாகும்.

நீங்கள் உங்களுடைய வீட்டில் ஒலிநாடாவைக் கேட்கும் சபையாக இருந்தாலும், பல குடும்பங்கள் கூடியிருக்கும் உங்களுடைய சபையாக இருந்தாலும், அல்லது அமேசான் அல்லது ஆப்பிரிக்காவின் காடுகளில் உள்ள ஒரு குடிசையில் இருந்தாலும், தேவனுடைய சத்தம் உதட்டிலிருந்து உங்களுடைய செவிக்கு பேசுவதை கேட்க நீங்கள் எங்கு இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க முடிகிறதோ, அங்கு நீங்கள் ஒரு முழு வார்த்தை சபையில் இருப்பீர்கள்.

நாங்கள் அந்த முழு வார்த்தை சபையை கண்டுபிடித்துள்ளபடியால், கேள்விகள் மற்றும் பதில்கள் #4 64-0830E. என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ள வரும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 7 பிப்ரவரி, 2026

கிறிஸ்துவுக்குப் பெற்றெடுத்த அன்பானவர்களே,

நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை அறிந்திருப்பதனால் நம்முடைய இருதயங்களில் இருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் வெறும் மனித வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும்? நாம் இதில் எதையும் செய்யவில்லை, ஆனால் அவரே, நான் இருக்கிறேன் என்ற மகத்தானவர், தம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலின்படி, அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மகத்தான காரியமான, நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெறுவதற்காக நம்மை முன்னரே முன்குறித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அவர் நம்மிடத்தில் பேசி கூறும்படியாக காலத்தின் நிறைவு வரும்வரை அவர் காத்திருந்து, நமக்குள்ளே ஜீவ சுவாசத்தை ஊதினார்:

இப்பொழுது, என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக் கூறி ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். புரிகிறதா? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக, அதாவது—அதாவது பிள்ளைகளாக வேண்டுமென்று நான்—நான்—நான் விரும்புகிறேன். பவுல் கூறினவண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் “ஒரு கற்புள்ள கன்னிகையாக” கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க நான் விரும்புகிறேன். உங்கள் இருதயம் “ஆமென்” என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் அந்த வார்த்தையில் கிடையாது.

தேவன், தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் பேசி, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய நம்மை வழிகாட்டி வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நாம் அவருடைய முழுமையான முதிர்ச்சியடைந்த, கற்புள்ள கன்னிகைகளாகிய பிள்ளைகள். மேலும் அவருடைய ஆச்சரியமான கிருபையினால், நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆமென் என்று ஆமோதிக்கிறோம்! அது தெய்வீக ரூபகாரப்படுத்துதலுடன் கூடிய வார்த்தையின் பரிபூரண வியாக்கியானமாயுள்ளது!

  • ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் சத்தம்: வார்த்தையின் பரிபூரண வியாக்கியானமாக இருந்தால், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு வேறு என்ன தேவை?…ஒன்றுமில்லை!

நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைப் பெறுவதற்காக, அவர் தம்முடைய கரங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய கூட்டமாகிய நம்மைத் தெரிந்து கொண்டுள்ளார். ஆயிரம் வருட அரசாட்சியின் போது, மாம்சப் பிரகாரமான சரீரங்களில், பூமியில் இருப்பதற்காக அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நாம்தான்.

என் நண்பர்களே, ஒரு நிமிடம் அதைப் பற்றி சிந்திப்போமாக.

இந்த பூமியிலேயே நமக்கு மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் உண்டாயிருக்கும். நாம் ஆயிரம் வருடங்களுக்கு இப்போது இருப்பது போலவே சாப்பிடுவோம், குடிப்போம், வீடுகளைக் கட்டுவோம், வாழ்வோம். அது மணவாட்டியும் (நாம்) மணவாளனும் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) ஒன்றாக மாறும் நமது தேனிலவு காலமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மகிமையான காலத்திற்காக நாம் பார்த்துக் காத்திருக்கிறோம். அதை நம்மால் தொட்டுவிட முடியும் என்று தோன்றுவதுபோல அது மிகவும் அருகில் இருக்கிறது. இன்று நமக்கு இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன்:

ஓ, இப்பொழுது அவருடைய சபையில், கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு, மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டு, அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே, அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஏன், இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட, குவிந்து அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் அதைக் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை. அவருடைய சபையுடன் ஒன்றாக இணைக்கப்படும்படிக்கு நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருக்கிறோம், அங்கே வார்த்தையே வார்த்தையாக மாறுகிறது.

நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியின் மூலமும், அவர் நமக்கு அதிக வெளிப்பாடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது மிக வேகமாகப் பெருகி வருகிறது, நம்மால் அதைப் பின்தொடரவே முடியவில்லை. வார்த்தை வார்த்தையாக மாறுவதை நாம் முன்னெப்போதையும் விட இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துளி சந்தேகத்திற்கும் இடமில்லை; வெளிப்பாட்டின் மூலம், நாம் யார் என்பதை நாம் சரியாக அறிவோம்.

அவர் செய்வதாக சொன்னபடியே தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார், நாமும் அதன் ஒரு பாகமாக இருக்கிறோம். அது நிறைவேறுவதை நம்முடைய சொந்தக் கண்களால் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் அதைப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மாட்டார்கள். அது அவர்களுக்கானது அல்ல, அது அவருடைய பெற்றெடுத்த பிள்ளைகளான நமக்கானது.

மணவாட்டிக்கு தீர்க்கதரிசியிடம் கேட்க சில கேள்விகள் இருந்தன.

ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பது மட்டுமே போதுமானதா? தேவன் பதிலளித்து, ஆம்!! என்றார்.

நம்முடைய பிள்ளைகளும் ஒலிநாடாக்களைக் கேட்பதன் மூலம் மட்டுமே கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தேவையான அனைத்தையும் பெற முடியுமா? ஆம்!!

ஆகவே, மணவாட்டிக்குத் தேவையான அனைத்தும் ஒலிநாடாக்களில் உள்ளன.

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக வேறு பல வழிகளையும் அருளியிருக்கிறார் என்பதையும் கூட நாம் அறிவோம்.

“அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள்.” இப்போது, முதலாவதாக வார்த்தை அவ்வாறு கூறுகிறது, அதுவே போதுமானது. ஆனால் வார்த்தையில் நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது சபையில் வரங்கள் உள்ளன; அதை எப்படிப் போதிக்க வேண்டும் என்பதை அறியும்படி தேவனால் ஏவப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதை உங்களுக்கு மிகவும் தெளிவாக விளக்குவார்கள், அதுவே விசுவாசிக்கத் தேவையான விசுவாசத்தையும் தரும்.

சுகமளித்தலையும் அவருடைய வார்த்தையையும் மற்றவர்களுக்குத் தெளிவாகப் போதிக்க எப்படித் தெரியும் என்று தேவனால் ஏவப்பட்ட மனிதர்களை அவர் அருளியுள்ளதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் அவருடைய மணவாட்டி அவருடைய பரிபூரணமான போதுமான அருளப்பட்ட வழியை விரும்புகிறாள். அதுவேநமக்குத் தேவையான அனைத்துமாயுள்ளது.

நாங்கள், கேள்விகளும் பதில்களும் #3 64-0830M என்ற செய்தியைக் கேட்கவிருக்கிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிரான்ஹாம் கூடாரத்தில் எங்களுடன் வந்து சேருமாறு உங்களை அழைக்க விரும்புகிறேன்.

அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெற்றிருப்பதும், நாமே மாம்சமான வார்த்தை என்பதை அறிந்திருப்பதும் எவ்வளவு அற்புதமானது!

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 31 ஜனவரி, 2026

அன்பான கழுகுக் குஞ்சுகளே,

பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் வந்து கூடும். நம்மைப் பொறுத்தவரை, அந்தப் புத்தம் புதிய மாம்ச மன்னாவை நாம் பெறுவதற்கு ஒரே ஒரு சரியான இடம் மாத்திரமே உண்டு: அது இயங்கு பொத்தானை அழுத்தி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான்.

புத்தம் புதிய மன்னாவைக் குறித்துப் பேசுகிறோமே, நம் விரல் நுனியில் நாம் வைத்திருப்பதைப் பற்றி நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா? தேவனுடைய சத்தம் தாமே, தம்முடைய பிரியமான மணவாட்டியிடம் ஒலிநாடாக்களில் பேசுகிறது; நாம் கேட்பது தேவன் தானா என்பதில் எந்த ஊகத்திற்கோ, ஆச்சரியத்திற்கோ, கேள்விக்கோ அல்லது சந்தேகத்திற்கோ இடமில்லை. அவர் தம்முடைய மணவாட்டியிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசும்படி ஒரு மனித சத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வெளிப்பாட்டின் மூலம், நாம் கேட்டுக்கொண்டிருக்கிற வார்த்தைகள் ஒரு மனிதனின் வார்த்தை அல்ல, அல்லது அவனுடைய வியாக்கியானமோ அல்லது கருத்தோ அதனுடன் சேர்க்கப்படவில்லை, ஆனால் அது கழுகுக் குஞ்சுகளாகிய நம்மிடம் பேசும் தேவனுடைய தூய வார்த்தையாயும், வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தையாயும் உள்ளது என்பதில் நம் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை அளிக்கக் கூடிய, நாம் செல்லக்கூடிய ஒரே இடம் இதுதான் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

நாம் வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொள்கிறோம். நம்முடைய வேதாகமங்களில் அவருடைய வார்த்தையை வாசிக்கிறோம். தேவனால் நியமிக்கப்பட்ட, அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டிப் பிரசங்கிப்பதையும் கூட நாம் கேட்கிறோம், ஆனால் நம்முடைய நாட்களில், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், அவருடைய உரைக்கப்பட்ட பரிபூரண வார்த்தையைக் கேட்கக்கூடிய ஒரு இடத்தை தேவன் நமக்கு அருளியுள்ளார்.

நம்முடைய இருதயத்தில் இருந்த கேள்விகளுக்கு பரிபூரண பதிலை பெற்றுக்கொள்ளும்படி, தம்முடைய மணவாட்டி கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பையும் கூட பிதா வழங்கினார்:

•  பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒருவரிடம் சாத்தான் அந்நிய பாஷைகள் அல்லது தீர்க்கதரிசன வரத்தைப் பயன்படுத்த முடியுமா?
•  மத்தேயு 12, வசனம் 32-ல் இயேசு எதைக் குறிப்பிட்டார்?
•  தயவுசெய்து 1 கொரிந்தியர் 13:8-12-ஐ விளக்கவும்.
•  ஆரோக்கியமான கணவனும் பிள்ளைகளும் இருக்கும்போது பெண்கள் பொது இடங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?
•  ஒரு பெண் தன் தலைமுடியைச் சுருட்டுவது தவறா?

தேவன் தம்முடைய மணவாட்டியை ஆசீர்வதிக்கவும் பலப்படுத்தவும் பல வழிகளை அருளியுள்ளார், ஆனால் அவர்கள் கேட்பது அவருடைய பரிபூரண வார்த்தைதான் என்பதில் 100% நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரே ஒரு இடத்தை மட்டுமே அவர் வழங்கியுள்ளார். எந்தவொரு கலப்படத்திற்கும் சாத்தியமில்லாத, கழுகுக் குஞ்சுகள் பருகக்கக்கூடிய ஜீவத் தண்ணீரின் ஒரே ஊற்று அதுதான். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அந்த ஊற்றிலிருந்து பருகும்படிக்கு வர உங்களை அழைக்கிறேன், அங்கு நாம் 64-0823E "கேள்விகளும் பதில்களும் #2" என்ற செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்