அன்பான கிறிஸ்துவினுடைய சிறிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே, மணவாட்டியே:
நாம் தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்து என்றும், அவருடைய சத்தத்தைப் பின்பற்றுவதைத் தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது என்றும் அவருடைய பலமுள்ள தூதன் பிரகடனம் செய்ததைக் கேட்டபோது நம்முடைய இருதயங்கள் எவ்வளவு களிகூர்ந்தன! அது நம்முடைய ஜீவனைப் பார்க்கிலும் மேலானது. நீங்கள் எங்கள் ஜீவனை எடுக்கலாம், ஆனால் அவருடைய சத்தத்தை உங்களால் எடுக்க முடியாது. நாங்கள் அவருடைய வார்த்தையோடு ஒன்றாய் இருக்கிறோம். நாங்கள் அவருடைய சத்தத்தோடு ஒன்றாய் இருக்கிறோம். நாங்கள் அவரோடு ஒன்றாய் இருக்கிறோம்.
ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்வதை நாங்கள் நம்புகிறோம் என்றும், அது தேவனுடைய மணவாட்டியிடம் பேசும் அவருடைய சத்தம் என்றும் நாங்கள் கூறுவதால், நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, கேலி செய்யப்படுவது எங்களுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றுகிறது. நாங்கள் ஒரு ஒலிநாடா சபை என்று பிரகடனம் செய்வதால், அது வார்த்தைக்கு முரணானது, தவறானது, நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்று மக்கள் நினைக்கும்படி சாத்தான் அவர்களை வஞ்சித்திருக்கிறான். ஆனால் உண்மையில், அது தேவனுடைய மணவாட்டிக்காக அவர் வழங்கிய பரிபூரணமான வழியாகும்.
இது வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? உரைக்கப்பட்ட ஒரு வார்த்தையை நீங்கள் தவறாகப் வியாக்கியானித்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். அவர்கள் சரியான நோக்கத்தையும் குறிக்கோளையும் கொண்டிருக்கலாம், ஆனால் தவறாக இருக்கலாம். ஒருவர் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தவறாக இருக்க முடியும்.
தம்முடைய மணவாட்டியின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்களே நேரடியாகக் கேட்கும்படி தேவன் ஒரு வழியை ஏற்படுத்தியிருக்காவிட்டால், வேறு ஒரு வழி இருந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், வியாக்கியானம், தெளிவுரை அல்லது விளக்கம் தேவையின்றி, வார்த்தை நேரடியாகத் தங்களிடம் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பைப் பெற அவர் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். எல்லாமே கர்த்தர் உரைக்கிறதாவது...அவ்வளவுதான்!
அவருடைய மணவாட்டியாக இருக்க நாம் வார்த்தையுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.
நமக்கு தேவையுள்ள ஒவ்வொரு காரியமும் சரியாக இங்கே எழுதப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன், அது பரிசுத்த ஆவியினால் வியாக்கியானிக்கப்பட வேண்டும். பூமியிலுள்ள எந்த மனிதனுக்கும் வார்த்தைக்கு தன்னுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க உரிமையில்லை என்று நான் நம்புகிறேன். அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு எவருமே தேவையில்லை. அவரே அவருடைய சொந்த வியாக்கியானி. அவர் அதைச் செய்வதாகக் கூறினார், அவர் அதைச் செய்கிறார்.
அவருடைய வார்த்தையுடன் நிலைத்திருப்பதைத் தவிர, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாயிருப்பதற்கு வேறு வழியேயில்லை என்பதை தெளிவாக கர்த்தர் உரைத்து தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தேவன் தாமே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார், அதனோடு தங்களுடைய வியாக்கியானத்தை சேர்க்க எந்த ஒருவருக்கும் உரிமை கிடையாது.
அவருடைய தீர்க்கதரிசியே தம்முடைய வார்த்தையின் வியாக்கியானி என்றும் அந்த வார்த்தை கூறுகிறது. அவரே ஜனங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார். அவர் கூறுகிறதே நம்முடைய நாளுக்கான வார்த்தையாகும்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், நாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிற தீர்க்கதரிசனமாக இருக்கிறோம். உங்களிடத்தில் பேசுகிற ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பதைக் காட்டிலும் வல்லமையான, புனிதமான, நிறைவான, பரிபூரணமானது ஒன்றுமேயில்லை.
மற்றவர்கள் இதில் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடும்போது, தாங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறோம் என்ற உறுதியுடன், கழுகுகள் கூடிவந்து மிகுந்த சந்தோஷத்துடன் களிகூர்கின்றன. உங்களிடம் ஒலிப்பதிவு இயந்திரம் இருந்தால், ஒரு கூட்டத்தினரை ஒன்று கூட்டி, அதை இயக்கி, கவனமாகக் கேளுங்கள் என்று அவர் நமக்குச் சொன்னார். அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், அதைத்தான் நாம் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.
தேவன் அவருடைய நாமத்திற்காக, இந்தத் பொல்லாத காலத்திலிருந்து நம்மை அழைத்திருக்கிறார். நாம் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத பல சோதனைகளையும் உபத்திரவங்களையும் கடந்து கொண்டிருக்கிறோம். சாத்தான் தன் காலம் முடிந்துவிட்டது என்பதை அறிந்திருப்பதால், அவன் போர்க்குணம் கொண்டவனாக இருக்கிறான். நான் அவருடைய மணவாட்டியாக இருந்தும், இந்த காரியங்கள் எல்லாம் எனக்கு எப்படி நடக்க முடியும் என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் வெளிப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, நாம் அவருடைய மணவாட்டி என்பதை நீங்கள் சாத்தானுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் மாம்சத்தில் உள்ள வார்த்தை. நாம் வார்த்தையைப் பேசலாம், அது நிறைவேறும். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
தேவனுடைய சத்தம் சாத்தானிடம் நேரடியாகப் பேசி அவனிடம் சொல்கிறது:
சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய். நீ ஒரு பொய்யன். மேலும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், ஊழியக்காரர் என்ற முறையில், நீ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, ஜனங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கட்டளையிடுகிறோம், ஏனெனில், “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்று எழுதியிருக்கிறதே.
எதுவானாலும்…நமக்குத் தேவை எதுவானாலும்...நாம் அதைக் கேட்டு, விசுவாசித்து, அங்கேயே நிலைத்திருக்க வேண்டும். அது உடனடியாக வெளிப்படலாம்; அது ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் ஆகலாம். நாம் என்ன பார்க்கிறோம் அல்லது உணர்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல, அது சரியாக அந்த நேரத்தில் நிகழ்ந்தது.
தேவனுடைய கழுகுகளுக்காக நாம் கூடிவரும் ஒவ்வொரு ஆராதனையும் மேலும் மேலும் மகத்தானதாகிறது. நாம் ஒரே சிந்தையில், ஒருமனப்பட்டு கூடி, உன்னதங்களில் ஒன்றாக அமர்ந்து, அவருடைய வார்த்தையால் நம்மிடம் பேசி நம்மைப் பரிபூரணப்படுத்தும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் நம்மிடம் மீண்டும் பேசுவதையும், அவருடைய சொந்த வார்த்தையின் வியாக்கியானத்தை நமக்குக் கொண்டு வருவதையும் நாம் கேட்கும்போது, நீங்கள் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
பரி மத்தேயு 24ஆம் அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14ஆம் அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7ஆம் அதிகாரம்
1 யோவான் 1ஆம் அதிகாரம் / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14
தொடர்புடைய சேவைகள்
அன்பான ஒன்றுகூடும் கழுகுகளே,
உலகம் முழுவதும் நடைபெறும் இந்த மகத்தான கவர்ச்சி என்ன? ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடி, தங்களுடைய வீடுகளிலும், தங்களுடைய சபைகளிலும் மகத்தான எதிர்பார்ப்புடன் அமர்ந்து, அவர்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.
வெறும் ஒலிநாடாக்களைக் கேட்பது மட்டும் இந்த உலகத்திற்கு மிகவும் விசித்திரமாகவும் நியாயமற்றதாகவும் தோன்றுகிறது. நாம் எப்போது வேண்டுமானாலும் ஒலிநாடாக்களைக் கேட்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் வெறும் ஒலிநாடாக்களை அல்ல, ஒரு நேரடி ஊழியத்தையோ, ஒரு பிரசங்கியாருக்கோ செவிகொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய பாரம்பரியங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
உலக வரலாற்றில் இது போன்ற ஒன்று நடந்ததே இல்லை. தம்முடைய மணவாட்டியை அழைக்கும் அந்த சத்தத்தைக் கேட்க, இந்த மக்களை ஒரே நேரத்தில் ஒன்றிணைக்க கவர்ந்துள்ளது எது? அது லூக்கா 17:30-ஐ தேவன் நிறைவேற்றுவது. அது வெளிப்படுத்தல் 10:7-ஐ தேவன் நிறைவேற்றுவது. அது எபிரேயர் 13:8-ஐ தேவன் வெளிப்படுத்துவது, ஆபிரகாமுக்கு அவர் செய்ததுபோல, மெல்கிசேதேக்கு மனித மாம்சத்தில் வெளிப்படுவது.
அவர் என்ன சொல்வாரோ என்று அவர்கள் காத்துக் கொண்டும், வியந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர் பேசத் தொடங்கும் போது என்ன நடக்கும்? அவர் சொல்லும் எதையும் கேட்பதற்காக, அவர்கள் அந்தத் தொலைபேசி இணைப்பில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதை விரும்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மணவாட்டியோடு ஒரே நேரத்தில் அதைக் கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் தம்முடைய மணவாட்டியை அழைத்து வழிநடத்துவதற்காக தேவன் அவருடைய சத்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்ட சத்தம் அவரே என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.
நேரத்தில் அவர்கள் பல மணிநேரங்கள் தொலைவில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக, தங்கள் சொந்த சபையிலிருந்து தங்களுக்குப் பேசும் அந்தக் சத்தத்தைக் கேட்க, செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, மேசியாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய இருதயங்கள் வேகமாகத் துடிக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், தம்முடைய மணவாட்டியைச் சேர்க்கவும் தேவன் இந்த நாள் வரை காத்திருந்தார். அது நடந்துகொண்டிருக்கிறது, அவர்களும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதன் யதார்த்தம் அவர்களுடைய இருதயங்களில் இறங்குகிறது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் அதைப் பற்றி வேதத்தில் வாசித்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அது ஒரு யதார்த்தமாக இருக்கிறது. வார்த்தையின் வெளிப்பாடு அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவருடைய வல்லமையுள்ள சத்தத்தின் அந்த மகத்தான அபிஷேகத்தின் கீழ் அவர்கள் அமர்ந்திருக்கும்போது, ஆயத்தமாகும்படி அவர் அவர்களிடம் அறிவிக்கிறார்; ஏனெனில் இன்றிரவு அவர் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கப் போகிறார். அவர் ஜெபிக்கத் தொடங்கும் போது, வியாதியாயிருக்கிறவர்கள்மேல் போய்க் கைகளை வையுங்கள் என்று அவர் நமக்குச் சொல்கிறார்; ஏனெனில் அவர்கள் எங்கிருந்தாலும், டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா, தென் அமெரிக்கா, ஏன் உலகின் மறுபக்கத்திலுள்ள காடுகளிலுள்ள குடிசைகள் வரைக்கும் கூட, தேவனுடைய சர்வவியாபகம் எங்கும் அவர்களுடன் இருக்கிறது. அவர்கள் எங்கிருந்து திரண்டு வந்தாலும், நாம் ஜெபிக்கத் தொடங்கும் போது ஒருவரையொருவர் கைகளை வையுங்கள்; அவர்கள் விசுவாசித்தால், தேவன் அவர்களில் ஒவ்வொருவரையும் குணமாக்குவார், ஏனெனில் அது கர்த்தர் உரைக்கிறதாவது.
ஒவ்வொரு காலத்திலும், இருந்த அல்லது இருக்கப்போகும் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வழியாகவும், அந்தச் செய்தியைக் கேட்க முன்குறிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இருக்கப் போகிறார்கள் என்பதையும், அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்பதையும் அவர்கள் இப்போது புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பார்கள். அது தவறு என்றோ அல்லது தேவன் அருளிய வழி அல்ல என்றோ கூறும் அவிசுவாசியின் விமர்சனத்தையும் அவர்கள் புறக்கணிப்பார்கள். அவர்களுடன் அவர்களுக்கு எந்த வாதமும் இல்லை. அவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு, அது விசுவாசிப்பதும், அதன் ஒவ்வொரு துளியையும் தங்களால் முடிந்தவரை பெற்றுக்கொண்டு, இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்த மரியாளைப் போல அதை உள்வாங்கிக்கொள்வதும்தான். அவர்கள் வெட்கப்படுவதில்லை; தாங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கிற ஒரு ஒலிநாடா பையன் அல்லது ஒரு ஒலிநாடா பெண் என்று சொல்வதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்.
கடைசிக் காலத்தில், பரிசுத்த ஆவியின் மகத்தான அபிஷேகத்தைப் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று அந்த சத்தம் அவர்களை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அவர்கள் தீர்க்கதரிசியையும் அந்த நேரத்தின் செய்தியையும் மேற்கோள் காட்டுவார்கள்; விசுவாசிகள் என்று கூறிக்கொள்வார்கள், ஆனால் அவர்கள் கள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்.
கூடுமானால் தெரிந்துகொள்ள பட்டவர்களையே வஞ்சிக்கும்ளவிற்கு அவர்கள் உண்மையான அபிஷேகத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள், ஆனால், தாங்கள் வஞ்சிக்கப்பட முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள், ஏனெனில் அவர்களே வார்த்தை. அவர்கள் தேவனுடைய சத்தத்துடன் தரித்திருந்த உண்மையான மணவாட்டியாவர்.
இந்த நாளில் அது ஒரு எலுமிச்சையாகவோ, அல்லது ஒரு திராட்சைப்பழமாகவோ இருக்காது என்று அந்தக் சத்தம் அவர்களுக்குப் பிரகடனம் செய்கிறது. வித்தியாசத்தைச் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால் அது ஒரு டேன்ஜெலோவாக, பாதி எலுமிச்சை, பாதி ஆரஞ்சு கலந்த ஒரு கலப்பினமாக இருக்கும். அது பார்ப்பதற்கு ஆரஞ்சுப் பழத்தைப் போலவே இருக்கும், ஆனால் அது அப்படி இருக்காது, ஏனெனில் அந்தப் புதிய கிளை 100% அசல் கிளையைப் போலவே இருக்கும். அவர்கள் அந்த அசல் சத்தத்தின் வார்த்தையுடனேயே தரித்திருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு வாய்ப்பையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டு, அவரே தமது சத்தம், தமது வார்த்தை என்று பிரகடனப்படுத்திய ஒரே தேவனுடனேயே அவர்கள் தரித்திருப்பார்கள்.
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து, அந்த சத்தத்தைப் பின்பற்றி அதற்குக் செவிகொடுப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களுக்கு ஜீவனை விட மேலானது. நீங்கள் அவர்களுடைய ஜீவனைப் பறிக்கலாம், ஆனால் அந்த சத்தத்தை உங்களால் பறிக்க முடியாது.
கவர்ச்சி என்ன?
வழக்கம் போல, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார்.
வாருங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வேதவாக்கியங்கள் வெளிப்படுத்தப்படுவதை நாங்கள் கேட்கும்போது, தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் இந்த நிகழ்வில் நீங்களும் ஒரு பாகமாயிருக்கும்படி வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோதரன். ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-0725E "மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?"
வேதவசனங்கள்:
பரி.மத்தேயு 21:1-4
சகரியா 9:9 / 14:4-9
ஏசாயா 29:6
வெளிப்படுத்தின விசேஷம் 16:9
மல்கியா 3:1 / 4ஆம் அதிகாரம்
பரி.யோவான் 14:12 / 15:1-8
பரி.லூக்கா 17:22-30
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கழுகுக் கூட்டமே,
இந்த வாரச் செய்தியின் தலைப்பே, மணவாட்டியின் மீதுள்ள பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய அத்தகைய ஒரு விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. நம்முடைய தீர்க்கதரிசியின் மீது இருந்த அதே பரிசுத்த ஆவியானவரின் உண்மையான அபிஷேகத்தைப் பெற்ற, உண்மையான அபிஷேகம் செய்யப்பட்ட மனிதர்கள் இந்தக் காலத்தில் எழுவார்கள், ஆனால் அவர்கள் பொய்யானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்றும், உண்மையான தீர்க்கதரிசியைப் போலவே அதே மாரியையும், அதே ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள் என்றும் வார்த்தை நமக்குச் சொல்கிறது. மக்கள், இந்தக் காலத்தின் உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையிலிருந்து விலகி, செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொள்ளுவார்கள். அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கிட்டத்தட்ட வஞ்சிக்குமளவிற்கு உண்மையான வார்த்தைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.
அந்த அபிஷேகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கும்? எது உண்மை, எது பொய் என்பதைப் பகுத்தறிவது எளிதாக இருக்குமா? தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதரும், அபிஷேகம் பெற்றவருமான தாவீது ராஜா, ஒரு உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றார்; ஆனால் அது தவறானது என்று தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்.
என்ன!! இதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ராஜாவுக்கு உண்மையான அபிஷேகமும் உண்மையான வெளிப்பாடும் இருந்தது, ஆனால் தவறாய் இருந்தது! தாங்கள் கேட்பது உண்மையான அபிஷேகமா அல்லது பொய்யான அபிஷேகமா என்பதை அறிந்துகொள்ள, தேவனின் ஆட்டுக்குட்டிகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏனெனில் அவர்களுடைய நித்திய முடிவு இந்தத் தீர்மானங்களையே சார்ந்துள்ளது.
தேவன் தம்முடைய மணவாட்டியை வார்த்தையில் வழிகாட்டவும் அவரைக் காக்கவும் பல உண்மையான அபிஷேகம் பெற்ற ஊழியர்களை நியமித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவருடைய வார்த்தை அவ்வாறே கூறுகிறது, மேலும் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் நாம் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ப்பர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மந்தைகளை வார்த்தையில் காக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தங்கள் மந்தைகளுக்குக் தேவனின் ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஒலிக்கச் செய்வதில் தவறக்கூடாது.
உண்மையான அபிஷேகமும் உண்மையான வெளிப்பாடும் இருந்தபோதிலும், ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தவறு செய்ய முடியும் என்பதை நாம் சற்று முன்பு கேட்டோம். ஆனால் மணவாட்டி உறுதியாக இருக்க முடியும், ஏனென்றால் அவர்கள் எப்போதும் உண்மையான அபிஷேகத்தையும், உண்மையான வெளிப்பாட்டையும், கர்த்தர் உரைக்கிறதாவது என்ற உண்மையான வார்த்தையையும் கேட்க ஒரு சரியான வழியை தேவன் அருளியுள்ளார்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதுதான்.
பிணமானது எங்கே இருக்கிறதோ,” மன்னா என்பது, வார்த்தையாய் உள்ளது, “அங்கே கழுகுகள் கூடும்”
பிணமானது எங்கே இருக்கிறதோ, அங்கேதான் கழுகுகளாகிய நாமும் கூடுவோம். எங்கே புதிய மாம்சம் இருக்கிறதோ, அந்தந்தக் காலத்தின் வார்த்தை, அந்த நேரத்தின் செய்தி உள்ளது. அந்த மன்னாவை உண்பதற்கு, தேவனுடைய சத்தம் தாமே பேசுவதைக் கேட்பதை விடப் புத்துணர்ச்சியான இடம் வேறில்லை.
அது அவருடைய வார்த்தை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பார்த்தீர்களா? முன்குறிக்கப்பட்டவர்கள் இதை அறிவார்கள். “ஒரு அந்நிய வார்த்தையையோ அல்லது ஒரு அந்நிய சத்தத்தையோ பின்பற்றமாட்டார்கள்.
நாம் வஞ்சிக்கப்பட மாட்டோம், வஞ்சிக்கப்பட முடியாது என்பதற்குக் காரணம், இந்த வெளிப்பாட்டின் மூலம் நாமே அந்த வார்த்தையாக இருப்பதுதான். நாம் வேறு எதுவும் ஆக முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நாம் வேறு எதையும் அறியமாட்டோம்.
நான் இருக்கிறேன்!” “இருந்தேன் அல்லது இருப்பேன்” என்றல்ல. “நான் இருக்கிறேன்,” நிகழ்காலம், இப்பொழுது வார்த்தை. இருந்த வார்த்தையல்ல, வரப்போகும் வார்த்தையல்ல; இப்பொழுதுள்ள வார்த்தை. பார்த்தீர்களா? உங்களுக்கு அது புரிகிறதா? “நான் இருக்கிறேன்!” “நான் இருக்கிறேன்” என்ற வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது.” அது சரியா? “நான் இருக்கிறேன்.” “இது உண்மையென்று ரூபகாரப்படுத்த, தேவன் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக அனுப்பினார். நான் இங்கே வந்து இதைச் செய்யும்படி என்னிடம் கூறின, இந்த வார்த்தைக்கான பதிலாயிருக்கிறேன்.”
அவன் அதைச் செய்தபோது, பார்வோன், “சரி, அதைச் செய்யக்கூடிய ஏராளமான பையன்கள் எங்களுடைய குழுவில் உள்ளனர்” என்றான், போலியாக பாவனை செய்பவர்கள்.
இயேசு, “இப்பொழுது, கடைசி நாட்களில் அது மீண்டும் நிகழப்போகிறது” என்று கூறினார், பாருங்கள், அதே காரியத்தை உரிமை கோருகிறார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மணவாட்டியின் மீதான ஒரு உறுதிப்பாட்டைப் பற்றிப் பேசலாம். இந்த வெளிப்பாட்டை நீங்கள் பெறும்போது, நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட இனிய இருதயமான மணவாட்டி என்பதை அறிந்துகொள்வீர்கள்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், நாம் மனுஷ குமாரனாகிய கிறிஸ்துவுக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை போஷித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவரே. நாம் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதனின் வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நாம் தவறிப் போகாத மனுஷகுமாரனுடைய சரீர-வார்த்தையையே புசித்துக் கொண்டு வருகிறோம்.
கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றவர்கள் என்பதை குறித்து எல்லாவற்றையும் எங்களுக்கு தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துகிறதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்ப்படி, நீங்கள் 100 % கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு செவிகொடுக்க வேண்டுமென்று விரும்பினால் மணவாட்டி ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-0725M
வேதவசனங்கள்:
மத்தேயு 5:44-45 / 7:21 / 24:15-28
லூக்கா 17:30 / 18:1-8
யோவான் 14:12
எபேசியர் 1:5
2 தீமோத்தேயு 3:1-8
எபிரெயர் 6:1-8 / 11:4
வெளிப்படுத்துதல் 10:1-7 / 16:13-14
மல்கியா 4:5
1 இராஜாக்கள் 22:1-28
எரேமியா: அதிகாரங்கள் 27 & 28
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே,
இப்பொழுது, ஒரு தாய்க்கு நாம் அளிக்கக் கூடியது போதிய கனம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
நம்முடன் முதலில் இருப்பவர் நம்முடைய தாய், நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், நாம் பயணிக்க வேண்டிய பாதை என்னும் பெரும் பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்மைச் சரியான பாதையில் வைக்கும் கடமையை தேவன் அவளிடம் கொடுத்துள்ளார். அதனால்தான் தாய்மார்களுக்கு தேவன் ஒரு விசேஷமான, சிறிய தொடுதலை அளிக்கிறார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, நாம் எல்லா தாய்மார்களுக்கும் மரியாதை செலுத்தும் வேளையில், நம்முடைய இருதயங்களில் தாய்மார்கள் கொண்டிருக்கும் அன்பையும் மரியாதையையும் தேவனுடைய ஏழாம் தூதன் வெளிப்படுத்துவதைக் கேட்கும்போது, நமக்காக எவ்வளவு விசேஷமான ஆசீர்வாதம் காத்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான் என்பது நமக்குத் தெரியும், ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை, 67 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது மே 10, 1959 அன்று, நம்முடைய தீர்க்கதரிசி பேசியதைப்போலவே அவர் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்துவதைக் கேட்கும்போது, நாம் எல்லா தாய்மார்களுக்கும் ஒரு விசேஷமான மரியாதையைச் செலுத்துவோம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: அன்னையர் தினம் 59-0510M
நேரம்: பிற்பகல் 12:00 மணி ஜெஃபர்சன்வில் நேரம்
வேதவசனங்கள்: முதலாம் கொரிந்தியர் 15:1-4
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே,
நாம் அனைவரும் கேட்க விரும்பும் சத்தம் இந்த ஞாயிற்றுக்கிழமை பேசும், மேலும் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக ஒரு விசேஷமான அன்பின் மடலான செய்தியைக் கொண்டுவரும்.
அந்த சத்தம் இப்பொழுது உலகத்திடம் பேசி அவர்களை எச்சரித்தது: “என் சித்தமில்லாமல் எனக்கு ஊழியம் செய்ய முயற்சிக்காதீர்கள். என் மணவாட்டியே, உனக்காக நான் ஒரு பரிபூரணமான வழியை ஏற்படுத்தியிருக்கிறேன். என் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்; என் ஒலிநாடாக்களில் நான் உரைத்துள்ளதை அப்படியே சொல்லுங்கள், ஏனெனில் நீங்கள் நியாயத்தீர்ப்புக்குள் பிரவேசிக்கிறீர்கள். இரக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் களிகூருங்கள், நன்றியோடு இருங்கள், ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் நன்மையிலும் இரக்கத்திலும் நீங்கள் ஜீவிக்கும்படி, நான் உங்களுக்கு மறைவான ஆகாரத்தையும், ஆவிக்குரிய ஆகாரத்தையும் அளித்துக் கொடுத்திருக்கிறேன்.
என் சத்தத்தைக் கேட்பதற்கு தேசத்தில் இப்பொழுது ஒரு பஞ்சம் நிலவுகிறது. நீங்கள் ஒலிநாடாக்களில் என் சத்தத்தைக் கேட்க விரும்பும் மக்கள் என்று சொல்வதால் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்வதில்லை; ஆனால் நான் உங்களை வெளியே அழைத்து, இன்றைய தினத்திற்காக நான் ஏற்படுத்திய பரிபூரணமான வழியை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இந்த வறட்சியின்போது நீங்கள் அவிசுவாசிகளுடன் உங்களை இணைத்துக்கொள்ளவில்லை. உங்களைத் தாங்குவதற்காக என் சத்தத்தைக் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். என் சத்தத்தைக் ஒலிக்கச் செய்வதன் மூலம், நான் வந்து உங்களை என் மணவாட்டியாக அழைத்துச் செல்லும் நாள் வரை, உங்களுடைய பீப்பாய் ஒருபோதும் காலியாகாது, உங்களுடைய குவளையும் ஒருபோதும் வற்றிப்போகாது.
நீங்கள் செல்வதற்கு ஒரு பரிபூரணமான இடம் அருளப்பட்டிருக்கு வேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய சத்தத்தைப் பதிவு செய்தேன். அங்கே எந்தத் தவறும் இல்லை, வியாக்கியானமும் தேவையில்லை, தேவனுடைய தூய்மையான சத்தம் மட்டுமே. நான் கூறியுள்ளதை அப்படியே கேட்க நீங்கள் செல்லக்கூடிய ஓர் இடம் அது: கர்த்தர் உரைக்கிறதாவது.
ஞாயிற்றுக்கிழமையன்று நான் உங்களிடம் மிகவும் தெளிவாகப் பேசப் போகிறேன். நான் உங்களிடம் பேசப்போவதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். இந்தக் காலத்தில் இந்த ஒலிநாடாக்கள் உங்கள் ஆவிக்குரிய ஆகாரமாகும். அவர்களில் சிலருக்கு இது மிகவும் நிறைவானது; அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் நான் உங்களைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய பரிபூரணமான அருளப்பட்ட வழியின் வெளிப்பாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
உங்களுக்கு, இது மறைக்கப்பட்ட ஆகாரம், இங்கே நீங்கள் ஜீவ வார்த்தையின் நன்மையிலும் இரக்கத்திலும் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் என் குமாரனில் மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருந்தபோது, நான் யார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை: தேவனும் மனிதனுமாக. பின்பு நான் கடைசி நாட்களில் மீண்டும் திரும்பி வந்து, ஆபிரகாமுக்கு முன்பாக ஜீவித்ததுபோல மீண்டும் மனித மாம்சத்தில் ஜீவிப்பேன் என்றும், இறங்கி வந்து அப்போது நான் செய்தது போல, மனித மாம்சத்தில் உருமேற்கொண்டு நான்தானே செயல்படுவேன் என்றும் வாக்களித்தேன்.
அவர்கள் அப்போதும் இப்போதும் தவறவிட்ட விஷயம் இதுதான், ஆனால் நீங்கள் அதை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நான் உங்களை போஷிப்பதற்கு சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமும், என் செய்தியாளனும் ஒன்றே. நீங்கள் அவர்களைப் பிரிக்க முடியாது. செய்தியும் செய்தியாளனும் ஒன்றே. இந்த நாளில் நான் என்ன செய்வேன் என்று என் வார்த்தையில் உங்களுக்குச் சொன்னேன். அதனால்தான், உங்கள் சபைகளிலும், உங்கள் வீடுகளிலும், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் என் சத்தத்தை வைப்பது என் சித்தமாகும்; ஏனெனில் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அதுவே. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசும் ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட சுத்தமாகும்.
இரக்கம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது என் வார்த்தையின் பேரில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் யார், நீங்கள் யார் என்பதற்கான வெளிப்பாட்டை நான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். உங்கள் இருதயங்களிலும் சிந்தனைகளிலும் ஒரு சிறு சந்தேகத்தின் நிழல்கூட இருக்கக்கூடாது. நீங்கள் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாவீர்கள். நீங்கள் ஆதியிலே என்னில் இருந்த என்னுடைய உரைக்கப்பட்ட வார்த்தை.
நீங்கள் ஆகாரத்தை, ஆவிக்குரிய ஆகாரத்தை அணுக வேண்டும், உலகம் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. நீங்கள் மருத்துவர்கள் கைவிட்டபோதும், நம்முடைய சரீரங்களின் குணமாக்குதலை நாம் அணுகுவோம்; இது கடைசி நாட்களில் நான் உங்களுக்கு வாக்களித்து, கொடுத்த ஆகாரங்களில் ஒன்றாகும்.
உங்கள் இருதயங்களின் இரகசியங்களை வெளிப்படுத்தி, இந்தக் காரியங்களைச் செய்வதாக நான் வாக்களித்தேன். நான் உங்களுக்குள் இருக்கிறேன். நீங்கள் என்னில் ஒரு பாகமாய் இருக்கிறீர்கள், நான் உங்களில் ஒரு பாகமாய் இருக்கிறேன். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, உலகெங்கிலும் உள்ள என் மணவாட்டியை என் சத்தத்தால் நான் ஒன்றிணைப்பேன். ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைக்கும்படி நான் உங்களுக்குச் சொல்வேன். உங்களுக்காக ஜெபிக்காதீர்கள், உங்களுடைய கைகளை வைத்துள்ளவருக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றாக ஜெபிப்போம், நீங்கள் விசுவாசித்தால், உலகில் எங்கும் ஒரு பலவீனமான நபர் கூட இருக்க மாட்டார்.
நீங்கள் விசுவாசித்து, உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் இருந்தால், நான் அறிவிப்பேன்:
சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டுவிட்டாய்! இயேசு கிறிஸ்து உன்னைத் தோற்கடித்துவிட்டார்! அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்து, இன்றிரவு எங்கள் மத்தியில் நின்றுகொண்டு, இந்தக் கடைசி நாளின் செய்தியை ரூபகாரப்படுத்துகிறார். இந்த ஜனங்களை விட்டு வெளியே வா! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்களை விட்டு போ! “என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்,” நீ துரத்தப்பட்டுவிட்டாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த சபையாரை விட்டு போ!
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் ஒரு சுகமளித்தல் உண்டாகும்.
நாம் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும், என்னுடைய அருமை சகோதரனே, சகோதரியே, அது இங்கே இருக்கிறது, நாம் பேசியிருக்கிற அதே காரியம், பரிசுத்த ஆவி, தேவன், இங்கேயே இருக்கிறார்.
அவருடைய செய்தியாளர் எங்களுக்கு கொண்டு வருகிற மணவாட்டிக்காக மறைக்கப்பட்ட, ஆகாரமான ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரமான செய்தியைக் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு நான் உலகை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் 65-0718E
செய்தியாளர்: சங்கை. வில்லியம் மாரியன் பிரான்ஹாம்
வேதவசனங்கள்: 1 இராஜாக்கள் 17:1-7 / ஆமோஸ் 3:7 / யோவேல் 2:28
மல்கியா 4:4 / லூக்கா 17:30 / பரி.யோவான் 14:12