
அன்பான தேவனுடைய தீர்க்கதரிசியின் மந்தையே,
நாம் ஜெபம் செய்வோமாக.
பரலோகப் பிதாவே, நித்தியத்தின் இந்தப் பக்கம் உலகம் முழுவதிலுமிருந்து மற்றொரு முறை ஒன்றுகூடியதற்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உம்முடைய சத்தம் எங்களிடத்தில் பேசுவதை கேட்பதற்கு; உம்மோடு ஏக சிந்தையும் ஏக மனதும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் முன்னோக்கி செல்லும் பயணத்திற்காக எங்களுக்கு தைரியத்தையும் பெலனையும் தரும்படிக்கு, உம்மிடமிருந்து வருகிற புதுப்பித்தலின் பெலனுக்காக மீண்டும் ஒருமுறை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.
எங்களுக்காக அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக்கொள்ள நாங்கள் ஒன்று கூடுகிறோம். பயணத்திற்கான பெலனை எங்களுக்குத் தரும்படிக்கு அந்த ஆவிக்குரிய மன்னாவை நீர் சேமித்து வைத்தீர். அதுவே வருகின்ற நாட்களினூடாக எங்களை தாங்கக்கூடிய ஒரே காரியமாய் இருக்கிறது.
நீர் உம்முடைய சபையை ஒழுங்கில் அமைப்பதற்கு முன்பு, நீர் எங்களை ஒரே இடத்தில் ஒருமனதாக, ஒன்று சேர்க்க வேண்டும் என்று, நீர் எங்களிடத்தில் சொன்னீர். அப்பொழுது நீர் வழிநடத்துவதற்காக எங்களுக்கு உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்புவீர்; ஏதோ உலக ஆலோசனை சபை சங்கத்தை அல்ல, சில மனிதக் குழுக்களை அல்ல, ஆனால் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதற்கே.
நீர் உம்முடைய தூதன் மூலமாக உரைத்து எங்களிடம் சொன்னீர்:
"நீங்கள் உங்கள் போதகரிடமும், இங்கு உங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள போதகத்திலும் நிலைகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த வார்த்தையில் தரித்திருங்கள். நீங்கள் அதை விட்டுவிடாதீர்கள்! என்ன வந்தாலும், போனாலும் பரவாயில்லை, நீங்கள் வார்த்தையில் தரித்திருங்கள். அந்த வார்த்தையிலே தரித்திருங்கள்!"
பிதாவே, நாங்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எங்களுடைய போதகரோடு தரித்திருக்கிறோம். இது எங்களுடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிற உம்முடைய தூய வார்த்தையை மட்டுமே பேசுகிற இன்றைக்கான தேவனுடைய சத்தமாய் உள்ளது.
சோதோமின் நாட்களில் இருந்ததுபோலவே, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும் என்று நீர் எங்களுக்குச் சொன்னீர்; அதாவது எங்களை வழிநடத்த இரண்டு காரியங்களை நாங்கள் பெற்றிருக்க வேண்டும், ஏனைய உலகத்திற்கு இரண்டு காரியங்கள் இருக்கும். அவர்களுடைய இரண்டு காரியங்கள் இரண்டு பிரசங்கிகளாக இருந்தன.
ஆனால் உங்களுடைய ஆவிக்குரிய சபைக்காக, உங்களுடைய முன்குறிக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாளாகிய மணவாட்டிக்காக, எங்களுடைய இரண்டு காரியங்களாக நீர் இருப்பீர், ஒரு மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியினால் எங்களை வழிநடத்தவே.
காற்று ஊளையிடட்டும். புயல்கள் அசைக்கட்டும். நாங்கள் எப்போதும், பாதுகாப்பாக இருக்கிறோம். உம்முடைய வார்த்தையில் நாங்கள் அங்கே இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். நேரமோ இங்கே வந்துவிட்டது. ஆவிக்குரிய யாத்திரை வந்துவிட்டது. நாங்கள் அனுதினமும் உம்மோடு சஞ்சரித்து, பேசி, உம்முடைய சத்தத்தைக் கேட்கிறோம். நாங்கள் உம்மோடு நிலையான ஐக்கியத்தில் இருக்கிறோம்.
நாங்கள் உம்முடைய கரங்களாகவும், உம்முடைய கண்களாகவும், உம்முடைய நாவாகவும் இருக்க விரும்புகிறோம். நீரே திராட்சை செடி, நாங்கள் உம்முடைய கொடிகள். பிதாவே, உம்முடைய கனியை தரும்படிக்கு, எங்களை ஊக்கப்படுத்தும்.
உம்முடைய சுவிசேஷத்திற்கு தகுதியான ஒரு ஜீவியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே வாஞ்சையாய் இருக்கிறது. பிதாவே, உமது பணியைத் தொடரவும், உமது வாக்களிக்கப்பட்ட வார்த்தையை நிறைவேற்றவும், எங்களின் மூலம் உம்மைப் பிரதிபலியும். எல்லா நீதியையும் நிறைவேற்றும்படிக்கு, இன்றைக்கான உம்முடைய செய்தியாளர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வாஞ்சையாய் இருக்கிறது.
நீர் எங்களிடம் கூறுவதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்:
"வானொலியில் அல்லது உள்ளே இதை கேட்பவர்களுக்கும்…அநேக நாடுகளில் ஒலி நாடாக்களில் இதை கேட்பவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: எல்லா கிருபையும் கொண்ட பரலோகத்தின் தேவன் தாமே, ஆசீர்வாதமான தமது பரிசுத்த ஆவியை நம்மெல்லோர் மேலும் பிரகாசிக்கச் செய்து, அதாவது நாம், இன்றிரவு முதல், இது முதற்கொண்டு, ஒரு தகுதியுள்ள வாழ்க்கை வாழும்படி செய்யக்கூடிய தேவன், “நான் இங்கே பிரியப்படுகிறேன், உலகத்தோற்ற முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய சந்தோஷத்துக்குள் பிரவேசியுங்கள்” என்பாராக! பரலோகத்தின் தேவன் தாமே தமது ஆசீர்வாதங்களை ஜனங்களாகிய உங்கள் எல்லோர் மேலும் அனுப்புவாராக!
மகிமை…பிதாவே, அது ஒலிநாடா தேசத்தில் உள்ள உம்முடைய மணவாட்டியான எங்களுக்கானதாயுள்ளது. உண்மையாகவே, நீர் உம்முடைய ஆசீர்வாதங்களை எங்கள் மேல் அனுப்பிக் கொண்டும், உம்முடைய வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்திக்கொண்டும், நாங்கள் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், நீர் பிரியப்படுகின்றீர் என்றும், நாங்கள் உம்முடைய மணவாட்டி என்றும் எங்கள் இடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்.
அவருடைய மணவாட்டியை வெளியே அழைக்கவும், வழி நடத்தவும் அனுப்பப்பட்டிருக்கிற உலகத்திற்கான தேவனுடைய மேய்ப்பரான, எங்களுடைய மேய்ப்பர் பேசுவதை நீங்கள் கேட்க விரும்பினால், உன்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா? 63-0630E என்ற ஒரு செய்தியை தேவனிடத்திலிருந்து அவர் எங்களுக்கு கொண்டு வருகின்றபடியால், அவர் பேசுகிற நித்திய ஜீவனின் வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
சிறப்பு அறிவிப்பு: கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அக்டோபர் 15-ஆம் தேதி, வீட்டில் ஒரு இராப்போஜனம் / கால் கழுவும் ஆராதனையையும் நாம் நடத்துவோம்.