அன்பான ஒருங்கிணைக்கப்பட்டவர்களே,
தேவனும் அவருடைய ஜனங்களும் ஒன்றிணையும் போது, காலமும் நித்தியமும் ஒன்றாக இணையும்.
தேவனுடைய மணவாட்டியுடன் ஒன்றிணைந்து ஜெபர்ஸன்வில் நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? 63-0825M என்ற செய்தியைக் கேட்க வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிப்பதற்கான வேத வாக்கியம்:
வெளிப்படுத்தின விசேஷம்: 3: 21-22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள முதன்மையான உயரிய ஸ்தானங்கொண்ட மணவாட்டியே,
உலகம் முழுவதும் உள்ள நாம் ஞாயிற்றுக்கிழமை உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து அமர்ந்திருந்தபோது, ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
நாம் அவருடைய வார்த்தைகளை இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கப்போவதாயிருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றை நாம் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டை நாம் பெறுவோம். அவர் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும், நம்முடைய ஆத்துமாவையும் திறந்து, இதனுடைய சரியான காலத்தில், இப்பொழுது உள்ளதை வெளிப்படுத்துவார்.
அதன்பின்னர் அது சம்பவித்தது. மணவாளன் தன்னுடைய மணவாட்டிக்கு கூறக் கூடிய, வெளிப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்கள் சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாய், முதன்மையான உயரிய ஸ்தானங்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். எனக்கு இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றிவிட்டேன்; கிறிஸ்துவாயிருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றிவிட்டேன். நீங்கள் என்னுடைய பரிபூரணமான தெரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை மணவாட்டியாயிருக்கிறீர்கள்."
நம்முடைய முழு உள்ளமும் சந்தோஷத்தால் துள்ளியது. நாம் அவருடைய மணவாட்டி என்று பிதாவானவர் நம்மிடம் சொன்னார். நாமே அவர் நேசிப்பவர்கள். நாம் அவருடைய வார்த்தையால், அவருடைய வார்த்தையால் மாத்திரமே கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறோம், நம்முடைய கருப்பை மற்ற எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருக்கிறார், நமக்காக ஏங்கியிருக்கிறார்...நமக்காகவே!!
என்னவென்று யூகித்தீர்களா? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மானிட சரீரத்தில் வந்து வாசம்பண்ணினார், அதனால், "என் இனிய இருதயமான மணவாட்டியே, நான் உன்னை நேசிக்கிறேன்": என்று அவர் நேரடியாக, உதட்டிலிருந்து செவிக்கு பேசி நமக்குச் சொல்ல முடிந்தது.
நாம் பாடுவதை விரும்புகிறோம், நாம் ஐக்கியத்தை விரும்புகிறோம், நாம் விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தேவனுடைய சத்தத்தை: கர்த்தர் உரைக்கிறதாவது என்று, நேரடியாக நம்மிடம் பேசுவதைக் கேட்க்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு செய்தியும் நமக்கு ஒரு தனிப்பட்ட காதல் கடிதமாயுள்ளது. அவர் நமக்குச் சொல்ல விரும்பின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் அவைகளை நமக்காக கேட்கும்படியாக ஒரு காந்த ஒலிநாடாவில் வைத்தார்.
நாம் கூடி வருகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நமக்கு என்ன சொல்லப்போகிறார்? இப்பொழுது என்ன காலம்?
ஏசாயா பேசி, "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்று கூறினான், ஆனால் அது வருவதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பான காலமாருந்தது. தாவீது ராஜா, "அவர்கள் என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என்றான். அவர் தன்னுடைய கைகளையும், கால்களையும் போல பேசினான், ஆனால் அது அதேசமயத்தில் 1000 ஆண்டுகள் கடந்து நடைபெறவிருந்த காலமாயிருந்து.
தேவன் நம்முடைய நாளில் நம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, இன்று நடைபெறும் பல காரியங்களை முன்னமே கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும், அது அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் அவர் அதை நமக்கு தீர்க்கதரிசனமாக உரைத்துக் கூறினபடியால், இப்பொழுது அது நிகழ்ந்துகொண்டிருப்பதையும், தேவனுடைய கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் நாம் காண்கிறோம்.
மற்றதை மிஞ்சி நிற்க மேற்கொள்ளும் சூழ்ச்சிப்போர் முடிந்துவிட்டது என்றும், அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இல்லையென்றும் உலகம் நினைத்துக்கொண்டது. ஆனால் இன்றைக்கு, அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அது இருக்கும் என்று அவர் நமக்கு சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தக் காலம்.
ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு, நேரடியாகப் பேசுவார், நாம் கேட்பதற்காக உரைக்கப்பட்டு, சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் நாம் கேட்போம். அவர் நமக்கு என்ன கூறி வெளிப்படுத்துவார்? இது என்னக் காலமாயுள்ளது? என்ன நடக்கிறது?
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஒன்று சேருகின்றாள். ஒரு இணையும் நேரம் உண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைந்துகொண்டிருக்கிறாள்? எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக.
எனவே உலகம் முழுவதிலும் தேவனுடைய சத்தத்தை நாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஒன்று சேர்க்கிறது. வார்த்தை தேவனாயுள்ளது. மணவாளன் வார்த்தையாயிருக்கிறார். மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்பவளாய் இருக்கிறாள், நாம் ஒரு ஐக்கியத்திற்குள் ஒன்று சேர்ந்து வருகிறோம். நாம் வார்த்தையோடு ஒன்றாகிவிடுகிறதான ஒரு கலியாணத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
பிதா என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாம் இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னவாகவெல்லாம் இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். புரிகிறதா? “அந்த நாளிலே” எந்த நாளிலே? இந்த நாளிலே! மறைக்கப்பட்ட தேவனுடைய மகத்தான இரகசியங்கள் வெளிப்படுவதை நாம் கண்டறிகிறோம். ஓ, அது எனக்கு எவ்வளவு பிரியம்!
இப்பொழுதே அந்த நேரம். இப்பொழுதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவு சத்தத்தைக் நாம் கேட்கிறபடியால் நாம் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.
இதுவே: இணையும் நேரமும் அடையாளமும் 63-0818 என்று தேவனுடைய சத்தம் நமக்குச் சொல்வதை நாம் கேட்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்ஸன்வில் நேரத்தில், நாங்கள் வார்த்தையில் இணையும்போது எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிப்பதற்கான வேத வசனங்கள்
சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3
தொடர்புடைய சேவைகள்
அன்பான அவருடைய இருதயத்திற்கு இனியவர்களே,
உலகத்திலேயே மிகப் பெரிய நன்மதிப்பு எனக்கு உண்டு. கர்த்தர் தம்மை உங்களுக்கு அறிமுகப்படுத்த என்னை அனுமதிக்கிறார், எனவே உலக தோற்றத்திற்கு முன்னே அவர் தெரிந்துகொண்ட பாத்திரத்தின் மூலம் அவர் உங்களிடம் நேரடியாகப் பேசவும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் உங்களுக்கு வெளிப்படுத்தவும் முடியும்.
இது வெறுமனே தேவனுடைய மனிதனாய் மட்டுமல்லாமல், இது தேவன் தாமே, அக்கினி ஸ்தம்பமாய், பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நேரடியாக, உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறதாயுள்ளது, அவர் தெரிந்துகொண்ட தீர்க்கதரிசியை, நம்முடைய மேய்ப்பர் என்று அழைக்கும்படியான கனமும், சிலாக்கியமும் நமக்கு உண்டு.
நாம் செவிகொடுத்துக் கொண்டிருப்பது ஒரு மனிதனுக்கா, அவருடைய சிந்தனைக்கா, அவருடைய கருத்திற்கா அல்லது வார்த்தையின் அவருடைய வியாக்கியானத்திற்கா என்று ஒருபோதும் யோசிக்கவே வேண்டாம். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவன் தாமே நம்மிடம் பேசுகிறதாயுள்ளது.
ஜனங்கள் வெறுமனே அதன் பேரில் திணறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நாமோ அதில் பருகிறோம். ஏனென்றால் அது மாத்திரமே நம்முடைய தாகத்தைத் தணித்து, நம்முடைய ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறதாயுள்ளது. இது நித்திய ஜீவனின் வார்த்தைகள். நமக்கு, இது தேவனுடைய சத்தமாயுள்ளது. இது இந்த வேளைக்கான செய்தியாயுள்ளது. எனவே, இது வார்த்தையாயும், சத்தமாயும், ஒலிநாடாக்களாயும் உள்ளதேயல்லாமல் வேறெதுவும் அல்ல!
பண்டைய இஸ்ரவேலரைப் போல ஒரே தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரே தேவன், ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் ரூபகாரப்படுத்தப்பட்டு, அவருடைய தீர்க்கதரிசி மூலம் தம்மை வார்த்தையாக வெளிப்படுத்துகிறார். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம், இன்றைக்கும் அதே விதமாகவே. தேவனால் தம்முடைய சுபாவத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே முடியாது. அவருடைய திட்டம் அவர் தொடங்கியதிலிருந்து ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர் மற்றும் அவருடைய திட்டம், அவருடைய யோசனைகள் யாவுமே பரிபூரணமானவை.
அதனால்தான் அவர் ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இந்தச் செய்தி முற்றிலும் சத்தியம் என்பதை நாம் அறியுமளவிற்கு, அதனுடைய முனைகளையும், அதனுடைய உட்புறத்தையும், அதனுடைய வெளிப்புறத்தையும் எல்லாவற்றையும் அவர் அலசிப் பார்த்து, வேத வாக்கியங்களின் மூலமாகவும், அதனுடைய காலக்கிரம அட்டவணைகளின் மூலமாகவும் கூட அதைக் நிரூபித்துக் காண்பித்திருப்பதாக அவர் கூறினார். அதில் எந்தப் பிழையுமே இல்லை.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த ஆவியானவர் செய்தியைப் புரிந்து கொள்ளும்படியாக இப்போது அதனுடைய ஸ்தானத்தில் வைக்கப் போகிறார். அவர் அதைத் தொடங்கிய இடத்திலேயே எழுப்பி, நிகழ்காலத்திற்குள்ளாக அதை அமைப்பார். ஞாயிற்றுக்கிழமை நம்முடைய மேய்ப்பர் மூலம் தேவன் என்ன சொல்லி வெளிப்படுத்தப் போகிறார் என்பதையும் நாம் சற்று பருகுவோமாக:
நீங்கள் என் இதயத்திற்கு இனியவர்கள், ஆவியினாலும் சத்திய வார்த்தையினாலும் கர்த்தருக்குப் பிறப்பிக்கப்பட்டவர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பின் பிணைப்புகளால் உங்களை நெருக்கமாகப் பிணைக்குமாறு நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல, வளமான காய்கறிகளை, இங்கே இந்தக் கூடாரத்தில்: உங்களுக்காக ஆகாரமாக சேமித்து வைக்க கர்த்தர் என்னிடம் கூறினார். இன்றைக்கு, நீங்கள் முழு ஒலிநாடாவையும் கேட்கப்போகிறீர்கள். நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் இது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தும். இந்தச் செய்தி உங்களைத் தாங்கி பலப்படுத்தும். இது உங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பணிக்கான ஆவிக்குரிய பெலனை உங்களுக்குத் தரும்.
நீங்கள் அதைக் கேட்க விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன் என்பதால் மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்கு சொல்லட்டும்: நீங்கள் மாத்திரமே தெரிந்ததுகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட எண்ணாய், அதைக் கேட்கப்போகிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தவறிப்போகாத தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாய், உலகில் உள்ள மற்ற அனைவரும் அதைக் குறித்து என்ன கூறினாலும் கவலைப்படாமல் அந்த வார்த்தையைப் பற்றிக்கொள்வீர்கள். நீங்கள் வார்த்தை மணவாட்டியே!
தேவன் உங்களுக்கு இந்த மகத்தான இரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், அது ஒரு புதிய பிறப்பாயுள்ளது. இப்பொழுது அவர் உங்களை பரிபூரண இணக்கத்தில் உள்ள வெளிப்பாட்டில் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார். தேவன் அதை தம்முடைய வார்த்தையின் மூலம் அதே கிரியைகளினால், அவர் செய்த அதே காரியங்களினால், அந்த வார்த்தையை உங்களில் வெளிப்படுத்தும்படி செய்து வெளிப்படுத்துகிறார்.
பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாட்டினை வெளிப்படுத்துபவராக, எல்லா காலங்களிலும் இருந்து வருகிறார் என்பதை நீங்கள் ஒருபோதும் மறவாதிருப்பீர்களாக. எல்லாக் காலங்களிலுமே என்பது, நினைவிருக்கட்டும்! கர்த்தருடைய வார்த்தை யாரிடத்திற்கு வந்தது? தீர்க்கதரிசிக்கு மாத்திரமே.
உலகம் முழுவதிலும் நாங்கள் ஒலிநாடா ஊழியத்தைப் பெற்றுள்ளோம், எனவே நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் ஒலிநாடாவில் பேசுக்கொண்டிருக்கிறேன் என்பதை தெளிவாக உணருகிறேன். மற்ற இடங்களைவிட பத்து மடங்கு சிறந்த ஒரு ஒலிநாடாவை நாம் இங்கிருந்து உருவாக்க முடியும் என்பதுபோல் தெரிகிறது. இந்த ஒலிநாடாவை கேட்கும் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரீயும் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
இப்போது அவர்கள் எந்த ஒலிநாடாவையாவது கேட்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களைப் பொருத்தது, ஆனால் நீங்கள் இதைத் தவறவிடக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்; காடுகளிலும் மற்றும் நீங்கள் எங்கிருந்தாலும் அதைக் கேட்கிறீர்கள், இப்போது கவனியுங்கள்.
நாம் விசுவாசிப்பதன் பேரிலான ஒலிநாடாக்களை நாம் பெற்றுள்ளோம். சபையில் ஒழுக்கமாயிருப்பதன் பேரிலேயும், இங்கே எப்படி ஒன்று கூடி வந்து உன்னதத்திலே ஒன்று சேர்ந்து உட்கார்ந்திருக்கிறோம் என்பதன் பேரிலேயும் நாம் ஒலிநாடாக்களை பெற்றுள்ளோம்.
ஒலிநாடாவில் கேட்கிற ஒவ்வொருவரும் அதை புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், இந்த ஒலி நாடாவை மீண்டும் கேளுங்கள். நான் இன்னும் எவ்வளவு காலம் உங்களுடன் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் குறித்த சத்தியம் என்பது நினைவிருக்கட்டும். இது தான் சத்தியம். இது வேத வசனம்.
தலைமைத்துவமும் சரீரமும் ஒன்றாக இணைந்துவிட்டது. அது தேவன் உங்களில், அவருடைய ஜனங்களில் வெளிப்பட்டதாயுள்ளது. அதுவே கணவனும் மனைவியும் இனிமேல் இருவரல்ல என்பதற்கான காரணம்; அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். தேவனும் அவருடைய சபையும் ஒன்றாயுள்ளது, "கிறிஸ்து உங்களுக்குள் இருத்தல்,” என்பதே தேவனுடைய மகத்தான வெளிப்பாடு.
இது என்னுடைய கருத்தல்ல; இது அவருடைய வல்லமை, இது அவருடைய வார்த்தை. அவர் இதை வாக்களித்தார்; இது இங்கே உள்ளது. இது இங்கே இருக்கும், இது இங்கே இருக்கிறது என்று அவர் கூறினார். நீங்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய புத்திரராயிருப்பீர்கள் என்றல்ல; நீங்கள் இப்பொழுதே தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்!
எங்கள் பாத்திரத்தை நிரப்பும், கர்த்தாவே நாங்கள் அதை உயர்த்துகிறோம், எங்களுடைய இந்த ஆத்தும தாகத்தை வந்து தணியும். எங்களுக்கு போதுமென்ற அளவிற்கு, பரலோக அப்பத்தினால் எங்களை போஷியும். எங்களுடைய பாத்திரத்தை நிரப்பும், அதை நிரப்பி, எங்களை முழுமையாக்கும்.
கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுத்தலாயிருக்கிறார் 63-0728 என்ற செய்தியை கேட்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்ஸன்வில் நேரப்படி நாம் கூடிவருகையில் உலகம் முழுவதிலும் உள்ள நாம் என்ன ஒரு எழுப்புதலின் நேரத்தை உடையவர்களாயிருப்போம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிப்பதற்குரிய வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 16:15-17
பரி. லூக்கா 24-ம் அதிகாரம்
பரி. யோவான் 5:24 / 14:12
1 கொரிந்தியர் 2-ம் அதிகாரம்
எபேசியர் 1-ம் அதிகாரம்
கொலோசெயர் 1-ம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சிறிய கடிகாரச் சுருள்வில்லே, முக்கிய சுருள்வில்லே அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும்:
நாம் யாவரும் கிறிஸ்துவின் சரீரமாக, நம்முடைய ஸ்தானத்தில், ஒற்றுமையாக, அவருக்காக நம்மால் இயன்ற மிகச் சிறந்த பணியினைச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். அவருடைய வார்த்தையான, இந்தச் செய்தியைத் தவிர, வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.
தேவனுடைய தீர்க்கதரிசி நம்மிடம் சொல்வதைக் கேட்க நாம் விரும்புகிறோம்: "குறிப்பிட்ட ஜனங்களாகிய உங்களைக் குறித்தும் ஒரு காரியம் உண்டு. நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் விசேஷித்த ஜனங்களாய் இருக்கிறீர்கள். உங்களை சந்தித்து, உங்களோடு உரையாட நான் நேசிக்கிற மற்றொரு காரியமும் உண்டு."
"என்னுடைய சொந்த சிறு தாழ்மையான ஊழியத்தைச் சுற்றியே நான் நோக்கிப் பார்க்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன்; மணவாட்டியின் குழுவை அழைத்து ஒன்றாக இணைத்துக்கொண்டிருக்கிறது. அது சக்கரத்திலிருந்து ஒரு சக்கரத்தை வெளியே எடுக்கிறது."
அது ஒரு மனிதன் அல்ல, அது அவருடைய மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனுடைய வார்த்தை என்பதை நாம் அறிவோம். செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற காரியங்களை நாம் காண்கையில் அது தேவனைத் தவிர வேறுயாரும் அல்ல. இவ்வாறு இருக்கலாம், இருக்கக்கூடும், அது இருக்கலாம் என்பது போல் காணப்படுகிறது என்பதல்ல, அது தேவனே!!
இது நமக்கு மிகவும் விலையுயர்ந்த முத்தாயிருக்கிறது என்றே நாம் அந்த இடத்திற்கு வந்துள்ளோம். அதற்கு முரணாக வேறு யாரேனும் நம்மிடம் கூறுகிற எதிலிருந்தும் நாம் விலகிவிட்டோம். மனிதன் எதைச் சாதித்திருக்கிறான் அல்லது என்ன கூறுகிறான் என்று நாம் பார்க்கிறதில்லை, தேவன் என்ன கூறியிருக்கிறார், நம்முடைய நாட்களில் அவர் என்ன செய்வதாக அவர் வாக்களித்தார் என்றே பார்க்கிறோம், அவர் அதைச் செய்கிறதை நாம் காண்கிறோம்.
அதுவே நம்முடைய முடிவான ஆதாரம். நமக்கிருக்கும் ஒவ்வொரு காரியமும், நமக்கிருந்த ஒவ்வொரு காரியமும், நமக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒவ்வொரு காரியமும் இந்த செய்தியில் வைக்கப்பட்டுள்ளன. இது நமக்கு ஜீவனைப் பார்க்கிலும் மேலானது.
உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தேவன் எச்சரிக்கை கொடுப்பதைக் நாம் காண்கிறோம், நியாயத்தீர்ப்புக்குத் ஆயத்தமாகுங்கள். அணுகுண்டுகள் விமானக் கொட்டகைகளில் உள்ளன, ஒவ்வொரு காரியமும் ஆயத்தமாக உள்ளது.
இந்த முறை, இது நோவாவின் நாட்களிலோ அல்லது ஆபிரகாமின் நாட்களிலோ இருந்தது போன்ற ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமல்ல; தேவன் உலக மக்களை எச்சரித்து, அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறார், இதுவே உங்களுடைய கடைசி எச்சரிக்கை..
அவர் நம்மிடம், “இந்தக் காரியத்தை நான் சம்பவிக்க அனுமதிக்கும் முன்னே, நான் சோதோமுக்கு செய்ததைப் போல, அதிலிருந்து வெளியே வாருங்கள் என்று ஒரு கடைசி அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆயத்தமாயிருங்கள். ஏதோ சம்பவிக்கப் போகிறது” என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
உலகம் அவர்களின் மாபெரும் அறிவியல் சாதனைகளைச் சார்ந்துள்ளது; தலைமுறைகளுக்கு மரணத்தை கொண்டு வந்த கலப்பினங்கள். ஜ.நா, வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, உலக நாடுகளின் சங்கங்கள்: என்ற புத்திசாலியான மற்றும் படித்த அறிவாற்றலுள்ளவர்களின் பட்சமாக சார்ந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பு மிக நெருக்கமாக வருவதைக் காண்கிறோம். ரஷ்யா, போர், எண்ணெய், வத்திக்கான், யூதர்கள், அணு குண்டுகள் என தீர்க்கதரிசி வெகு தொலைவில் பார்த்து, நமக்குச் சொன்னது நடக்கும்.
இனி என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், உலகில் பயம் என்பது ஒரு நிஜமாகி, ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகி வருகிறது.
ஆனால் அவர் எசேக்கியாவின் நாட்களில் செய்ததைப் போலவே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசினபோது, "ஆயத்தமாகுங்கள், ஏனென்றால் நியாயத்தீர்ப்புகள் விழ ஆயத்தமாயிருக்கின்றன" என்று ஜனங்களை எச்சரித்தார். அவருடைய தீர்க்கதரிசி வரவிருந்த காலத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.
நோவா தன்னுடைய காலத்திற்கான ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். அது நியாயத்தீர்ப்புக்கு முன்னதான ஒரு இரக்கத்தின் அழைப்பாயிருந்தது. தேவன் ஒரு வழியை, அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அருளியிருந்தார்.
நோவாவின் காலத்தில் அவர் செய்ததைப் போலவே, அவர் எப்போதும் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நம்முடைய வார்த்தையை அனுப்புகிறார். நோவாவின் நாட்களில் அவர் அதேக் காரியத்தைச் செய்தார். எலியா- நாட்களில்...மோசேயின் நாட்களில், அவர் அதேக் காரியத்தைச் செய்ததை நாம் கண்டறிகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார், அவர்கள் அவிசுவாசத்திலிருந்து தங்களைப் வேறுபிரித்துக்கொண்டார்கள். இப்பொழுது, அந்தவிதமானவர்களே வெளியே வருகின்றனர். அந்தவிதமானவர்களே அதை விசுவாசித்தனர்.
எல்லா அவிசுவாசத்திலிருந்தும் நாம் நம்மை வேறுபிரித்துக்கொண்டோம். தேவன் இன்றைக்கு தம்முடைய மணவாட்டிக்கு ஒரு வழியை அருளியுள்ளார். அவர் தம்முடைய வார்த்தையில், "நியாயத்தீர்ப்புக்கு முன், நான் என் சிறு தாழ்மையான மந்தையைக் கூட்டிச் சேர்க்க உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன், நான் அவர்களை ஒரு பக்கத்தில் உட்கார வைப்பேன், அவர்கள் சமாதானமாக இருப்பார்கள், நிலுவையில் உள்ள நியாயத்தீர்ப்புக்கு தப்பிக்கவும் காத்திருப்பார்கள்” என்று நமக்கு வாக்களித்தார்.
நாமே அந்த சிறு மந்தை. நாமே பிதாவானவர் நேசிக்கிறவர்கள், அவருடைய அதிசீக்கிரமான வருகைக்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலுமுள்ள உலகமானது சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் நாமோ இளைப்பாறுதலாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.
நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். உலகில் நாம் எங்கிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவருடைய வார்த்தையிலும், அவருடைய சத்தத்திலும் நாம் யாவரும் ஒன்றிணைக்கப்படக் கூடிய ஒரு வழியைத் தேவன் அருளியுள்ளார். இதுவே தேவன் அருளியுள்ள வழியாயுள்ளது.
இந்த தீர்க்கதரிசி அவர்களை தேவன் அருளியுள்ள வழிக்கு வழிநடத்தினார். இப்பொழுது, அதுவே காரியங்களைச் செய்யும் தேவனுடைய வழியாயுள்ளது. புரிகிறதா?
வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள: 63-0724 தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை என்ற செய்தியை எங்களோடு கேட்க, இந்த ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வாருங்கள். இதுவே தேவனுடைய சத்தம்: இது இன்றைக்கான என்னுடைய அருளப்பட்ட வழி என்று பேசி, நமக்குச் சொல்கிறாகும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
ஏசாயா 38:1-5
ஆமோஸ் அதிகாரம் 1
அன்புள்ள யாத்திரீக மணவாட்டியே,
எபிரெயப் பிள்ளைகள் நாள் முழுவதும் அவர்களைப் பாதுகாத்து பேணிக்கொள்ளும்படி, தங்களுக்காக இரவில் அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக்கொள்ளும்படி அதிகாலையில் ஒன்று கூடினதுபோல, நாமும் கூட நம்முடைய யாத்திரையில் நம்மை பாதுகாத்துக் பேணிக்கொள்ளும்படி நமக்குக் அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய மன்னாவுக்காக ஒன்றுகூடி வருகிறோம்.
மணவாளனின் வெளிப்படுத்துதல் மணவாட்டியில் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வரையில், மணவாட்டி தேவனோடு அத்தகைய இணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறாள். உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பற்றிக்கொண்டு அவருடன் ஒன்றாகிவிட்டோம்.
தேசங்களின் அக்கிரமம் நிறைந்துவிட்டது. அவைகள் அசுத்தமாயிருக்கின்றன. இது இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமான, நம்முடைய வீட்டிற்குச் செல்ல, நம்முடைய யாத்திரைக்கான நேரமாயுள்ளது. மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.
அவர் தம்முடைய முதலாம் யாத்திரையிலும், இரண்டாம் யாத்திரையிலும் செய்ததுபோல, இப்பொழுது மூன்றாம் யாத்திரையிலும், ஜனங்கள் தவறாக புரிந்து கொள்ளாதபடிக்கு, இது அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்டார் என்பதை அறிந்து கொள்ளும்படிக்கு, ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அக்கினி ஸ்தம்ப அடையாளத்துடன் அவர் தெரிந்துகொண்ட ஒரு தீர்க்கதரிசியை நமக்கு அனுப்பினார்.
அவருடைய தீர்க்கதரிசி கூறினது கர்த்தர் உரைக்கிறதாவதாயிருந்தது. அது தேவன், அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து, அவருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி வெளிப்படுத்தினதாயிருந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியை அபிஷேகித்து, அவருடைய மணவாட்டியை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தத் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் அவரே என்பதை நிரூபிக்கும்படியான ஒரு பரலோக சாட்சியாக நின்றது.
எல்லா சபைகளும் இந்த சத்தத்தின் கீழ், பிரிக்கப்படாமல், ஒன்று சேர்ந்து ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். எது நம்மை வேறுபிரிக்கிறது? அது நம்முடைய தோலின் நிறங்கள் அல்ல. அது நாம் உண்ணும் உணவும் அல்ல. மனிதனே, சுவிசேஷ போதனையின் சரியான பாதையிலிருந்து ஒவ்வொரு மனிதனையும் வேறுபிரித்திருக்கிறான்.
எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காண்பிக்க ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. நீங்கள் அதை எப்போதும் செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த வியாக்கியானத்தையும் கொடுக்காமல், அதைப் படித்து, அதைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதேயாகும்.
ஆனால் அவர்கள் பொறாமையால், ஆவிக்குரிய குருட்டுத்தனத்தினால் அதைச் செய்துகொண்டிருக்கிறவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் அதற்கு செவிகொடுக்கமாட்டார்கள்.
பரலோகத்தின் தேவன் உயிரோடெழுப்பும்போது, என் சத்தம் மறுபுறத்தில் தேவனுடைய மகத்தான காலம் என்னும் காந்த ஒலி நாடாவில் இருக்கும், அது இந்தக் கடைசி நாளில் இந்த சந்ததியை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தும். காரணம், இது-இது இப்பொழுது காந்த ஒலிநாடாவில் உள்ளது, அப்பொழுது அது நித்திய ஒலிநாடாவில் இருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், தேவன் தம்மைப் பிரதிபலிக்கும்படியான ஒரு ஜீவியத்தை பரிசுத்தப்படுத்தும்படியாக, மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்ட, தேவனைத் தாமே, வெளிப்படுத்தப்பட்ட அதே வார்த்தையை இன்றைக்கு அவர்கள் சிலுவையில் அறைகிறார்கள்.
அதன் பின்னர் ஒலிநாடா வாயிலாக கேட்கப்போகிறவர்களும் இதைக் கூர்ந்து கவனிப்பார்களாக. பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதை நாங்கள் புரிந்துகொள்வோமாக.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு எதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், மேலும் நாம் அனைவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொருவருமே! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒரு வயதான பெண்ணாக இருந்தாலும், அல்லது ஒரு இளைஞனாக இருந்தாலும், அல்லது ஒரு முதியவராக இருந்தாலும், அல்லது நீங்கள் யாராக இருந்தாலும், எப்படியாயினும், நாம் போகிறோம். நம்மில் ஒருவரும் கைவிடப்படப்போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் போகப்போகிறோமே!!!
நாம் தேவனுக்குக் கூறின நம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டால், தேவன் அவருடைய வார்த்தையை நமக்குக் காத்துக்கொள்ளாமலிருப்பது முற்றிலும் சாத்தியமற்றது. நீங்கள் அதை உண்மையாகவே நம்பினால், எதுவுமே உங்களை அதை சந்தேகிக்கச் செய்ய முடியாது. நேரமோ, இடமோ, வேறு எதுவுமே உங்களை சந்தேகிக்கச் செய்ய முடியாது.
அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு, தப்பித்துக்கொள்வதற்கான ஒரு வழியை அருளுவதன் மூலம், அவர் நமக்காக அதிக அக்கறை கொண்டு நம்மை வழிநடத்த நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் நம்மை வெளியே கொண்டு வருவதில் மாத்திரம் அக்கறை கொள்ளவில்லை, நம்முடைய யாத்திரையின்போது நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் அவர் அருளியுள்ளார். அவர் நமக்காக ஒவ்வொரு சத்துருவையும் ஜெயங்கொண்டார். நாம் சுகவீனமாயிருக்கும்போது அவர் நம்மைக் குணப்படுத்துகிறார். அவர் அனுதினமும் நம்மை போஷிக்க மறைவான மன்னாவை நமக்கு சேமித்து வைத்தார்; அவர் மரணத்தையும் கூட ஜெயங்கொண்டார், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாயிருந்து, அதை விசுவாசிக்க வேண்டும் என்பதேயாகும்.
நாம் நித்திய ஜீவனுக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அதற்கு செவிகொடுக்கிறோம், நாம் அதைக் கேட்டு களிகூருகிறோம். இதுவே உங்களுடைய ஆறுதலாயுள்ளது. இதுவே நம்முடைய ஜீவியம் முழுவதும் நாம் ஏங்கிக்கொண்டிருந்த காரியமாகும். இந்த முத்திற்காகவே நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். இது நமக்கான தேவனுடைய அன்பான அக்கறை என்பதை நாம் அறிந்துள்ளபடியால் நமக்கு இது வேண்டும்.
உங்களுக்கு ஆவிக்குரியப்பிரகாரமான, மாம்சப்பிரகாரமான, அல்லது இன்னும் நெருங்கி சஞ்சரிக்க, அல்லது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட அல்லது மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்ற எந்தக் காரியமாவது உங்கள் தேவையாயிருக்கிறதா? நீங்கள் கவலைகொண்டால், இன்றைக்கான அருளப்பட்ட தேவனுடைய வார்த்தையில் எங்களுடன் இணைந்து, உங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்தார், அவர் அதைச் செய்துள்ளார்! அவர் அதை அவருடைய வார்த்தையில் வாக்களித்தார், இதோ அது உள்ளதே! அவர் விசாரிக்கிறார், இப்பொழுது உங்களைக் குறித்து என்ன?
உங்களுடைய இருதயத்தில், “என் தொல்லைகள் முடிந்துவிட்டன. நான் நன்றாக இருக்கப்போகிறேன். நான் நிரப்பப்படப்போகிறேன். நான் அவரிடத்தில் நெருக்கமாக இருக்கப் போகிறேன். நான் அவருடைய மணவாட்டி" என்று உங்களிடம் சொல்லுகிற ஏதோ ஒன்று இருக்கும்.
அவர் விசாரிக்கிறார், நீ கவலை கொள்கிறாயா? 63-0721:என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்ஸன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00., மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் என்று அவர் உங்களிடம் சொல்வதை நீங்கள் கேட்கும்போது அது ஒரு மகத்தான பெரிய அன்பின் விருந்தாயிருக்கப்போகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன்னர் படிப்பதற்கான வேதவசனங்கள்:
பரிசுத்த யோவான் 5:24 / 15:26
1 பேதுரு 5:1-7
எபிரெயர் 4:1-4