ஞாயிறு
27 நவம்பர் 2022
65-0221M
விவாகமும் விவாகரத்தும்

அன்பான தீர்க்கதரிசியினுடைய மந்தையே,

நினைவிருக்கட்டும், நான் இதை என்னுடைய குழுவிற்கு மாத்திரமே கூறுகிறேன். தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, நான் என்னை பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் இங்கு என்ன கூறப்போகிறேனென்றால், இந்த செய்தி அவர்களுக்கு மாத்திரமே.

எந்த ஊழியக்காரரும், அவர், அதாவது அவருடைய, ஆம், அவர் மந்தையின் மேய்ப்பன், அவர் விரும்புகிற எதை வேண்டுமானாலும் அவர் செய்யட்டும். அது அவருக்கும் தேவனுக்கும் இடையே உள்ளது. எந்த குருவானவரும், எந்த பிரசங்கியாரும், என் சகோதரனே, அது உங்களைப் பொறுத்தது.

நான் இங்கே ஜெபர்சன்வில்லில் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறேன், இந்த இடத்தில் மாத்திரமே நான் பேசுவேன், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மந்தையாய் இருக்கிறது. இதுவே பரிசுத்த ஆவியானவர் கண்காணியாய் இருக்கும்படி எனக்கு கொடுத்திருக்கிறதை புரிந்து கொள்ளும்படியான மந்தையாக இருக்கிறது, அவர் அதற்காக என்னை பொறுப்பாளியாக்குவார். நான் மனமாற்றமடைந்திருக்கிற என்னுடைய இந்த ஜனங்களை தேசம் முழுவதிலுமிருந்து, நான் கிறிஸ்துவினிடம் வழி நடத்தியிருக்கிறேன்.

ஒரு நன்றி செலுத்தும் வார இறுதிக்கு என்ன ஒரு தலைக்கல். அவர் இன்னும் உங்கள் ஒவ்வொருவருடனும் கண்காணித்துக்கொண்டிருக்கும் அந்த சிறிய மந்தையின் பாகமாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் செல்லக் கூடிய வேறெந்த இடமும் இல்லை.

பிதாவானவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த ஒரு மகத்தான பறக்கும் கழுகினை நமக்கு அனுப்பியிருக்கிறார். அவருடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டிருக்கிற வார்த்தைகளை பேசி, ஜனங்களை ஊக்கமூட்டுகிற அநேக சத்தங்கள் இருக்கின்றன, ஆனால் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தவும், ஒருங்கிணைக்கவும் அனுப்பப்பட்டதோ ஒரே ஒரு சத்தமாக மாத்திரமே உள்ளது.

ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகளே நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளன. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் என்று கூறுகிறபடியால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளோம், ஆனால் அதை சரியாக செய்யும்படிக்கு தேவனுடைய தீர்க்கதரிசியால் நாம் கட்டளையிடப்பட்டோம்.

எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்டவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களை அதில் சேர்க்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்யுங்கள்; இதனோடு கூட்டாதீர்கள்!

உலகமே விழித்துக்கொள். காலம் சமீபத்துவிட்டது. தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகள், ஒலிநாடாக்களில் அவர் கூறியுள்ளதையே சரியாக, விசுவாசிக்கும்படி, கூறும்படிக்கு, செய்யும்படிக்கு; தேவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். நான் கூறுவதை அல்ல, உங்களுடைய குருவானவர் அல்லது பிரசங்கியார் என்ன கூறுகிறார் என்பதை அல்ல, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறினதையே.

ஒலிநாடாவில் உள்ள அந்த சத்தத்தைக் கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறொன்றுமில்லை, வேறுொன்றுமே யில்லை. ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ளதைக் கொண்டே நாம் நியாயத்தீர்க்கப்பட போகிறோம். நான் என்ன கூறினேன் என்பதைக் கொண்டல்ல, ஆனால் அவர் என்ன கூறினார் என்பதைக் கொண்டேயாகும்.

நான் உங்களுக்கான மிகச் சிறந்ததையே அளிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும் என்று கூறுகிற எந்த போதகரையும் போலவே, என்னுடைய சில வார்த்தைகள் உங்களுக்கு ஊக்கமூட்டுதலாக இருக்கின்றன. ஒலிநாடாவில் நீங்கள் கேட்கிற எந்த காரியத்தையும் சந்தேகிக்கும்படிக்கும், ஒலிநாடாக்களில் தவறுகள் இருக்கின்றன என்றும், நீங்கள் தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்கும் அளவிற்கு எனக்கும் செவிகொடுக்க வேண்டும் என்றும்: நான் உங்களுக்குப் போதிக்கவில்லை. இயங்கு பொத்தானை அழுத்தி, மூல வார்த்தையோடு தரித்திருக்கும்படி நான் உங்களை ஊக்கப்படுத்தவே சில வார்த்தைகளை உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் தூய்மையான, மாசற்ற வார்த்தை மணவாட்டியாக இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

இந்த நாளிலே ஒவ்வொரு ஜீவனுள்ள சிருஷ்டியும் அவருடைய சத்தத்தை கேட்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தைகளை பதிவு செய்திருந்தார். பவுலின் நாட்களில், அவர் என்ன பிரசங்கித்துக்கொண்டிருந்தார் என்பதை எழுதுவதற்கு அவர்களுக்கு வேதபாரகர்கள் இருந்தனர், அதுவே வேதாகமமாக உள்ளது. ஆனால் இன்றைக்கோ, அது இன்னும் மகத்தானதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இயங்கு பொத்தானை அழுத்தி, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம்மிடம், உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை, நம்முடைய சொந்த செவிகளினால் கேட்க முடியும்.

நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் உலகம் உண்மையில் வீழ்ச்சியடைந்து வருவதால், நாம் சென்று இளைப்பாறும்படியாக நமக்கு ஓர் இடம் அருளப்பட்டுள்ளது. நாம் அதை ஒலிநாடாவில் பெறுகிறோம். நம்முடைய சௌகரியமான அறைகளில் அமர்ந்து பண்டக சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சேமிக்கப்பட்ட ஆகாரத்தை விருந்துண்டு மகிழ்கிறோம். நம்முடைய தீர்க்கதரிசி மிக நீண்ட தொலைவில் இருக்கலாம், ஆனால் இந்தக் காரியங்கள் உண்மையென்றும், நம்மை செய்யும்படி தேவன் கட்டளையிட்டிருக்கிறதை செய்யும்படிக்கும், ஒலிநாடாக்களோடு தரித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொண்டுள்ளோம்.

விவாகமும் விவாகரத்தும் 65-0221M என்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் பேசவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நீங்கள் எப்போதும் புசித்ததிலேயே மிகச் சிறந்த நன்றி செலுத்தும் விருந்தினை உண்டு மகிழ வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

p> 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 5: 31-32 / 16: 18 / 19: 1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22