அன்பான கழுகுகளே, நாம் யாவரும் ஒன்றுசேர்ந்து இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி 63-0901M அடையாளம் என்ற செய்தியை கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான பரிபூரண விசுவாசமுள்ள மணவாட்டியே,
மீண்டும் ஒருமுறை, இந்த செய்தி, தேவனுடைய தனிப்பட்ட காதல் கடிதங்களாய், அவருடைய இரத்தத்தால் எழுதப்பட்டு, அவரது சத்தத்தால் உரைக்கப்பட்டு, நமக்கு என்னவென்று பொருட்படுத்திக் கூறுவதை என்னால் வார்த்தைகளால் கண்டறிய முடியாது. மற்ற அனைத்துமே ஒன்றுமில்லை. நாம் அவரை நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம், அது நமக்கு அவருக்கான பரிபூரண அன்பைக் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தையிலிருந்து எதுவுமே நம்மை அசைக்க முடியாது. அவர் ஒரு நண்பருக்கு ஒரு நண்பராக நம்முடன் உரையாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு எந்த மனநிறைவும் நம்முடைய வாழ்வில் இல்லை.
இது நம்மாலும் கூட அல்ல, இது அவர் நம்மில் ஜீவித்து, தம்மையே அழைக்கிறார். இது ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறதாயுள்ளது. சுத்த மகிழ்ச்சியோடு இயங்கு பொத்தானை அழுத்த, தேவன் ஒரு மானிட சத்தத்தை உபயோகித்து, நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நம்மிடம் சொல்வதை கேட்பதாகும். உலகத் தோற்த்திற்கு முன்னே அவர் நம்மை நேசித்தார் என்று நம்மிடம் சொல்கிறது; ஏனென்றால், நமக்குள் இருந்த எல்லாவற்றோடும் நாம் அவரை நேசிப்போம் என்பதையும், அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்போம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
நமக்குத் தேவையான அனைத்தையும், அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒன்றும் தவறிப்போகவில்லை. நமக்காக தம்முடைய இருதயத்தில் வைத்திருந்த முழு அன்பையும் நமக்குச் சொல்லும்படியாக, அவர் தம்முடைய வார்த்தையை எழுத்து வடிவில் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.
அப்படியானால் அவர் நம்மிடம் கூறினது போல் அவருடைய அன்பு இன்னும் அதிகமாகிறது: “நான் மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்து, எந்த தவறான புரிந்துகொள்ளுதலும், எந்த குழுப்பமும், எந்த வியாக்கியானமும் தேவைப்படாதபடிக்கு, உங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசுவேன். நான் என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு, என் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவேன், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பிதா என்னில் இருக்கிறதையும், நான் உங்களில் இருக்கிறதையும், நீங்கள் என்னில் இருக்கிறதையும், நாம் ஒன்றாயிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய மாம்சம் என்னுடைய மாம்சமாயும், உங்களுடைய எலும்பு என்னுடைய எலும்பாயும், என்னுடைய ஆவி உங்களுடைய ஆவியாயுமிருக்கிறது.
என் இருதயத்தில் உள்ள அனைத்தையும் நான் மிக விரிவாகச் சொல்வேன். நான் உங்களுக்காக எழுதியிருக்கிற, உரைத்திருக்கிற வார்த்தைகளை, ஒரு சந்தேகமுமில்லாமல் நீங்கள் அறிந்துகொள்ளும்படி நான் அதை மிகவும் தெளிவாக்குவேன், அவை ஒருபோதும் தவறிப்போகாது.
நான் உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தைத் தருவேன், அது எல்லாச் சூழ்நிலைகளையும் ஆளுகை செய்கின்ற ஒன்றாய் இருக்கும்.சத்துரு என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்று என் வார்த்தை கூறுகிறதில் நீங்கள் பரிபூரண விசுவாசம் வைத்துள்ளபடியால், அதுவே அதனை ஆளுகை செய்யும். சத்துரு உங்களுக்கு என்ன சொல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் பொருட்படுத்துவதுமில்லை, நீங்கள் அவனுக்கு செவிகொடுப்பதுமில்லை. என்னுடைய ஆவி ஏற்கனவே உங்களுக்கு கூறியிருப்பதைத் தவிர வேறெந்த காரியத்திற்கும் உங்களுடைய செவிகள் செவிடாயுள்ளன. இது உங்கள் இதயங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதிலிருந்து உங்களை எதுவுமே எப்போதுமே அசைக்கப்போவதில்லை."
இந்தச் செய்தியை அறிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் அந்த பரிபூரண விசுவாசம், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது, அவருடைய வார்த்தையில் நம்முடையது என்று அவர் நமக்குச் சொன்ன ஒவ்வொரு வாக்குத்தத்திற்காகவும் நாம் அதே பரிபூரண விசுவாசத்தையே பயன்படுத்துகிறோம். நாம் சுகவீனமாயிருந்து, சுகமளித்தல் தேவைப்பட்டால், அது நம்முடையது. நமக்கு ஏதேனும் தேவையாயிருந்தால், நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும், ஏனென்றால் நாம் அவருடைய ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் காண்பிக்கும், கடைசி நாளின் அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாக்களாய் இருக்கிறோம்.
அவர் தம்மையே நமக்குள் ஊற்றிக் கொண்டிருப்பது ஒரு காதல் விவகாரமாயுள்ளது. அந்த மகத்தான கலியாண விருந்துக்காக நாம் அவருடன் ஒன்றாகிவிடுகிறோம். அவருடைய ஆவி இங்கே நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்வதேயாகும்.
நாம் தேவனின் 7-ம் தூதனாகிய செய்தியாளன் அல்ல, ஆனால் நாம் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். நம்முடைய கரங்கள் அவருடைய கரங்களாயுள்ளன. ஒலிநாடாவில் உரைக்கப்பட்டவை கர்த்தர் உரைக்கிறதாவது என்றே நாம் விசுவாசிக்கிறோம். அது ஜீவனுள்ள வார்த்தையாயுள்ளது.
அவருடைய தீர்க்கதரிசியே நம்முடைய மேய்ப்பர். ஒலிப்பதிவுசெய்யப்பட்ட வார்த்தையை நாம் கேட்கும்போது, அது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்றே நாம் விசுவாசிக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கும்படியான பரிபூரண விசுவாசத்தை பெற்றுள்ளோம்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் உலகம் முழுவதும் ஒன்றுகூடும்போது, தேவன் தம்முடைய மணவாட்டியை தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையில் ஒன்றுகூட்டி வருவதால், நம்முடைய விசுவாசம் அதிக, அதிகமாக உயர்த்தப்படுகிறது.
நாளை மற்றெந்த நாளையும் போன்றிருக்காது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நம்முடைய பரிபூரண விசுவாசத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமக்குத் தேவையான எல்லாவற்றிற்கும், நாம் அதைப் பயன்படுத்துவோம், மேலும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளன் மூலமாக அக்கினி ஸ்தம்பம் பேசி நமக்குச் சொல்கிறதை நாம் ஏற்றுக்கொள்வோம்:
உங்களுக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் என்னை "உங்களுடைய மேய்ப்பர் ” என்று அழைத்துள்ளீர்கள்; நீங்கள் சொன்னது சரியே, நான் அவ்வாறே இருக்கிறேன். உங்கள் மேய்ப்பராகிய, நான், இயேசு கிறிஸ்துவினாலே அடையாளங் கண்டுகொள்ளப்பட்டு, அவருடைய கிரியையை செய்வேனேயாகில், அப்பொழுது என் வார்த்தையை விசுவாசியுங்கள். இந்த விசுவாசத்தின் கிரியை நடப்பிக்கையில், உங்கள் மீது கைகளை வைக்கையில், உங்களைத் துன்பப்படுத்துகிற, இன்னல்களையும் வியாதியையும் நான் கடிந்துகொண்டிருக்கிறேன், உங்கள் விண்ணப்பம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள் என்றே விசுவாசியுங்கள், ஏனென்றால் விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். நீங்கள் ஜெபிக்கும்போது நீங்கள் கேட்டதை பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள். நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய சுகமளித்தலையும் நான் என்னுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றும், அது அளிக்கப்பட்டுவிட்டது என்றே நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன், எனக்குள்ளாக இருக்கிற எல்லாவற்றோடும் நான் அதை விசுவாசிக்கிறேன்.
இந்த நாளுக்காக உரைக்கப்பட்டு, ஒலிப்பதிவுசெய்யப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட, தேவனுடைய சத்தமே இந்தச் செய்தி என்று நம்மில் உள்ள யாவற்றோடும் நாம் விசுவாசிக்கிறோம். நாம் எதைக் கேட்டாலும், நாம் பெற்றுக்கொள்வோம் என்று நாம் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது நம்முடையது என்று கூறுகிற கர்த்தர் உரைக்கிறதாவதாக உள்ளது.
பரிபூரண விசுவாசம் 63-0825E என்ற செய்தியில் உங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவனுடைய தீர்க்கதரிசி நமக்குச் சொல்வதைத் கேட்கையில் அதைப் பெற்றுக்கொள்ள, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
பரி. மாற்கு 11:22-26 / 16:15-18
பரி. யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21
தொடர்புடைய சேவைகள்
அன்பான ஒருங்கிணைக்கப்பட்டவர்களே,
தேவனும் அவருடைய ஜனங்களும் ஒன்றிணையும் போது, காலமும் நித்தியமும் ஒன்றாக இணையும்.
தேவனுடைய மணவாட்டியுடன் ஒன்றிணைந்து ஜெபர்ஸன்வில் நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? 63-0825M என்ற செய்தியைக் கேட்க வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிப்பதற்கான வேத வாக்கியம்:
வெளிப்படுத்தின விசேஷம்: 3: 21-22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள முதன்மையான உயரிய ஸ்தானங்கொண்ட மணவாட்டியே,
உலகம் முழுவதும் உள்ள நாம் ஞாயிற்றுக்கிழமை உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து அமர்ந்திருந்தபோது, ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
நாம் அவருடைய வார்த்தைகளை இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கப்போவதாயிருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றை நாம் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டை நாம் பெறுவோம். அவர் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும், நம்முடைய ஆத்துமாவையும் திறந்து, இதனுடைய சரியான காலத்தில், இப்பொழுது உள்ளதை வெளிப்படுத்துவார்.
அதன்பின்னர் அது சம்பவித்தது. மணவாளன் தன்னுடைய மணவாட்டிக்கு கூறக் கூடிய, வெளிப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்கள் சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாய், முதன்மையான உயரிய ஸ்தானங்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். எனக்கு இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றிவிட்டேன்; கிறிஸ்துவாயிருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றிவிட்டேன். நீங்கள் என்னுடைய பரிபூரணமான தெரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை மணவாட்டியாயிருக்கிறீர்கள்."
நம்முடைய முழு உள்ளமும் சந்தோஷத்தால் துள்ளியது. நாம் அவருடைய மணவாட்டி என்று பிதாவானவர் நம்மிடம் சொன்னார். நாமே அவர் நேசிப்பவர்கள். நாம் அவருடைய வார்த்தையால், அவருடைய வார்த்தையால் மாத்திரமே கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறோம், நம்முடைய கருப்பை மற்ற எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருக்கிறார், நமக்காக ஏங்கியிருக்கிறார்...நமக்காகவே!!
என்னவென்று யூகித்தீர்களா? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மானிட சரீரத்தில் வந்து வாசம்பண்ணினார், அதனால், "என் இனிய இருதயமான மணவாட்டியே, நான் உன்னை நேசிக்கிறேன்": என்று அவர் நேரடியாக, உதட்டிலிருந்து செவிக்கு பேசி நமக்குச் சொல்ல முடிந்தது.
நாம் பாடுவதை விரும்புகிறோம், நாம் ஐக்கியத்தை விரும்புகிறோம், நாம் விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தேவனுடைய சத்தத்தை: கர்த்தர் உரைக்கிறதாவது என்று, நேரடியாக நம்மிடம் பேசுவதைக் கேட்க்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு செய்தியும் நமக்கு ஒரு தனிப்பட்ட காதல் கடிதமாயுள்ளது. அவர் நமக்குச் சொல்ல விரும்பின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் அவைகளை நமக்காக கேட்கும்படியாக ஒரு காந்த ஒலிநாடாவில் வைத்தார்.
நாம் கூடி வருகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நமக்கு என்ன சொல்லப்போகிறார்? இப்பொழுது என்ன காலம்?
ஏசாயா பேசி, "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்று கூறினான், ஆனால் அது வருவதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பான காலமாருந்தது. தாவீது ராஜா, "அவர்கள் என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என்றான். அவர் தன்னுடைய கைகளையும், கால்களையும் போல பேசினான், ஆனால் அது அதேசமயத்தில் 1000 ஆண்டுகள் கடந்து நடைபெறவிருந்த காலமாயிருந்து.
தேவன் நம்முடைய நாளில் நம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, இன்று நடைபெறும் பல காரியங்களை முன்னமே கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும், அது அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் அவர் அதை நமக்கு தீர்க்கதரிசனமாக உரைத்துக் கூறினபடியால், இப்பொழுது அது நிகழ்ந்துகொண்டிருப்பதையும், தேவனுடைய கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் நாம் காண்கிறோம்.
மற்றதை மிஞ்சி நிற்க மேற்கொள்ளும் சூழ்ச்சிப்போர் முடிந்துவிட்டது என்றும், அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இல்லையென்றும் உலகம் நினைத்துக்கொண்டது. ஆனால் இன்றைக்கு, அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அது இருக்கும் என்று அவர் நமக்கு சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தக் காலம்.
ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு, நேரடியாகப் பேசுவார், நாம் கேட்பதற்காக உரைக்கப்பட்டு, சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் நாம் கேட்போம். அவர் நமக்கு என்ன கூறி வெளிப்படுத்துவார்? இது என்னக் காலமாயுள்ளது? என்ன நடக்கிறது?
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஒன்று சேருகின்றாள். ஒரு இணையும் நேரம் உண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைந்துகொண்டிருக்கிறாள்? எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக.
எனவே உலகம் முழுவதிலும் தேவனுடைய சத்தத்தை நாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஒன்று சேர்க்கிறது. வார்த்தை தேவனாயுள்ளது. மணவாளன் வார்த்தையாயிருக்கிறார். மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்பவளாய் இருக்கிறாள், நாம் ஒரு ஐக்கியத்திற்குள் ஒன்று சேர்ந்து வருகிறோம். நாம் வார்த்தையோடு ஒன்றாகிவிடுகிறதான ஒரு கலியாணத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
பிதா என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாம் இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னவாகவெல்லாம் இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். புரிகிறதா? “அந்த நாளிலே” எந்த நாளிலே? இந்த நாளிலே! மறைக்கப்பட்ட தேவனுடைய மகத்தான இரகசியங்கள் வெளிப்படுவதை நாம் கண்டறிகிறோம். ஓ, அது எனக்கு எவ்வளவு பிரியம்!
இப்பொழுதே அந்த நேரம். இப்பொழுதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவு சத்தத்தைக் நாம் கேட்கிறபடியால் நாம் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.
இதுவே: இணையும் நேரமும் அடையாளமும் 63-0818 என்று தேவனுடைய சத்தம் நமக்குச் சொல்வதை நாம் கேட்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்ஸன்வில் நேரத்தில், நாங்கள் வார்த்தையில் இணையும்போது எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிப்பதற்கான வேத வசனங்கள்
சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3
தொடர்புடைய சேவைகள்
அன்பான அவருடைய இருதயத்திற்கு இனியவர்களே,
உலகத்திலேயே மிகப் பெரிய நன்மதிப்பு எனக்கு உண்டு. கர்த்தர் தம்மை உங்களுக்கு அறிமுகப்படுத்த என்னை அனுமதிக்கிறார், எனவே உலக தோற்றத்திற்கு முன்னே அவர் தெரிந்துகொண்ட பாத்திரத்தின் மூலம் அவர் உங்களிடம் நேரடியாகப் பேசவும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் உங்களுக்கு வெளிப்படுத்தவும் முடியும்.
இது வெறுமனே தேவனுடைய மனிதனாய் மட்டுமல்லாமல், இது தேவன் தாமே, அக்கினி ஸ்தம்பமாய், பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நேரடியாக, உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறதாயுள்ளது, அவர் தெரிந்துகொண்ட தீர்க்கதரிசியை, நம்முடைய மேய்ப்பர் என்று அழைக்கும்படியான கனமும், சிலாக்கியமும் நமக்கு உண்டு.
நாம் செவிகொடுத்துக் கொண்டிருப்பது ஒரு மனிதனுக்கா, அவருடைய சிந்தனைக்கா, அவருடைய கருத்திற்கா அல்லது வார்த்தையின் அவருடைய வியாக்கியானத்திற்கா என்று ஒருபோதும் யோசிக்கவே வேண்டாம். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவன் தாமே நம்மிடம் பேசுகிறதாயுள்ளது.
ஜனங்கள் வெறுமனே அதன் பேரில் திணறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நாமோ அதில் பருகிறோம். ஏனென்றால் அது மாத்திரமே நம்முடைய தாகத்தைத் தணித்து, நம்முடைய ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறதாயுள்ளது. இது நித்திய ஜீவனின் வார்த்தைகள். நமக்கு, இது தேவனுடைய சத்தமாயுள்ளது. இது இந்த வேளைக்கான செய்தியாயுள்ளது. எனவே, இது வார்த்தையாயும், சத்தமாயும், ஒலிநாடாக்களாயும் உள்ளதேயல்லாமல் வேறெதுவும் அல்ல!
பண்டைய இஸ்ரவேலரைப் போல ஒரே தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரே தேவன், ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் ரூபகாரப்படுத்தப்பட்டு, அவருடைய தீர்க்கதரிசி மூலம் தம்மை வார்த்தையாக வெளிப்படுத்துகிறார். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம், இன்றைக்கும் அதே விதமாகவே. தேவனால் தம்முடைய சுபாவத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே முடியாது. அவருடைய திட்டம் அவர் தொடங்கியதிலிருந்து ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர் மற்றும் அவருடைய திட்டம், அவருடைய யோசனைகள் யாவுமே பரிபூரணமானவை.
அதனால்தான் அவர் ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இந்தச் செய்தி முற்றிலும் சத்தியம் என்பதை நாம் அறியுமளவிற்கு, அதனுடைய முனைகளையும், அதனுடைய உட்புறத்தையும், அதனுடைய வெளிப்புறத்தையும் எல்லாவற்றையும் அவர் அலசிப் பார்த்து, வேத வாக்கியங்களின் மூலமாகவும், அதனுடைய காலக்கிரம அட்டவணைகளின் மூலமாகவும் கூட அதைக் நிரூபித்துக் காண்பித்திருப்பதாக அவர் கூறினார். அதில் எந்தப் பிழையுமே இல்லை.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த ஆவியானவர் செய்தியைப் புரிந்து கொள்ளும்படியாக இப்போது அதனுடைய ஸ்தானத்தில் வைக்கப் போகிறார். அவர் அதைத் தொடங்கிய இடத்திலேயே எழுப்பி, நிகழ்காலத்திற்குள்ளாக அதை அமைப்பார். ஞாயிற்றுக்கிழமை நம்முடைய மேய்ப்பர் மூலம் தேவன் என்ன சொல்லி வெளிப்படுத்தப் போகிறார் என்பதையும் நாம் சற்று பருகுவோமாக:
நீங்கள் என் இதயத்திற்கு இனியவர்கள், ஆவியினாலும் சத்திய வார்த்தையினாலும் கர்த்தருக்குப் பிறப்பிக்கப்பட்டவர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பின் பிணைப்புகளால் உங்களை நெருக்கமாகப் பிணைக்குமாறு நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல, வளமான காய்கறிகளை, இங்கே இந்தக் கூடாரத்தில்: உங்களுக்காக ஆகாரமாக சேமித்து வைக்க கர்த்தர் என்னிடம் கூறினார். இன்றைக்கு, நீங்கள் முழு ஒலிநாடாவையும் கேட்கப்போகிறீர்கள். நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் இது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தும். இந்தச் செய்தி உங்களைத் தாங்கி பலப்படுத்தும். இது உங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பணிக்கான ஆவிக்குரிய பெலனை உங்களுக்குத் தரும்.
நீங்கள் அதைக் கேட்க விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன் என்பதால் மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்கு சொல்லட்டும்: நீங்கள் மாத்திரமே தெரிந்ததுகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட எண்ணாய், அதைக் கேட்கப்போகிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தவறிப்போகாத தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாய், உலகில் உள்ள மற்ற அனைவரும் அதைக் குறித்து என்ன கூறினாலும் கவலைப்படாமல் அந்த வார்த்தையைப் பற்றிக்கொள்வீர்கள். நீங்கள் வார்த்தை மணவாட்டியே!
தேவன் உங்களுக்கு இந்த மகத்தான இரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், அது ஒரு புதிய பிறப்பாயுள்ளது. இப்பொழுது அவர் உங்களை பரிபூரண இணக்கத்தில் உள்ள வெளிப்பாட்டில் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார். தேவன் அதை தம்முடைய வார்த்தையின் மூலம் அதே கிரியைகளினால், அவர் செய்த அதே காரியங்களினால், அந்த வார்த்தையை உங்களில் வெளிப்படுத்தும்படி செய்து வெளிப்படுத்துகிறார்.
பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாட்டினை வெளிப்படுத்துபவராக, எல்லா காலங்களிலும் இருந்து வருகிறார் என்பதை நீங்கள் ஒருபோதும் மறவாதிருப்பீர்களாக. எல்லாக் காலங்களிலுமே என்பது, நினைவிருக்கட்டும்! கர்த்தருடைய வார்த்தை யாரிடத்திற்கு வந்தது? தீர்க்கதரிசிக்கு மாத்திரமே.
உலகம் முழுவதிலும் நாங்கள் ஒலிநாடா ஊழியத்தைப் பெற்றுள்ளோம், எனவே நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் ஒலிநாடாவில் பேசுக்கொண்டிருக்கிறேன் என்பதை தெளிவாக உணருகிறேன். மற்ற இடங்களைவிட பத்து மடங்கு சிறந்த ஒரு ஒலிநாடாவை நாம் இங்கிருந்து உருவாக்க முடியும் என்பதுபோல் தெரிகிறது. இந்த ஒலிநாடாவை கேட்கும் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரீயும் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
இப்போது அவர்கள் எந்த ஒலிநாடாவையாவது கேட்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களைப் பொருத்தது, ஆனால் நீங்கள் இதைத் தவறவிடக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்; காடுகளிலும் மற்றும் நீங்கள் எங்கிருந்தாலும் அதைக் கேட்கிறீர்கள், இப்போது கவனியுங்கள்.
நாம் விசுவாசிப்பதன் பேரிலான ஒலிநாடாக்களை நாம் பெற்றுள்ளோம். சபையில் ஒழுக்கமாயிருப்பதன் பேரிலேயும், இங்கே எப்படி ஒன்று கூடி வந்து உன்னதத்திலே ஒன்று சேர்ந்து உட்கார்ந்திருக்கிறோம் என்பதன் பேரிலேயும் நாம் ஒலிநாடாக்களை பெற்றுள்ளோம்.
ஒலிநாடாவில் கேட்கிற ஒவ்வொருவரும் அதை புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், இந்த ஒலி நாடாவை மீண்டும் கேளுங்கள். நான் இன்னும் எவ்வளவு காலம் உங்களுடன் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் குறித்த சத்தியம் என்பது நினைவிருக்கட்டும். இது தான் சத்தியம். இது வேத வசனம்.
தலைமைத்துவமும் சரீரமும் ஒன்றாக இணைந்துவிட்டது. அது தேவன் உங்களில், அவருடைய ஜனங்களில் வெளிப்பட்டதாயுள்ளது. அதுவே கணவனும் மனைவியும் இனிமேல் இருவரல்ல என்பதற்கான காரணம்; அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். தேவனும் அவருடைய சபையும் ஒன்றாயுள்ளது, "கிறிஸ்து உங்களுக்குள் இருத்தல்,” என்பதே தேவனுடைய மகத்தான வெளிப்பாடு.
இது என்னுடைய கருத்தல்ல; இது அவருடைய வல்லமை, இது அவருடைய வார்த்தை. அவர் இதை வாக்களித்தார்; இது இங்கே உள்ளது. இது இங்கே இருக்கும், இது இங்கே இருக்கிறது என்று அவர் கூறினார். நீங்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய புத்திரராயிருப்பீர்கள் என்றல்ல; நீங்கள் இப்பொழுதே தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்!
எங்கள் பாத்திரத்தை நிரப்பும், கர்த்தாவே நாங்கள் அதை உயர்த்துகிறோம், எங்களுடைய இந்த ஆத்தும தாகத்தை வந்து தணியும். எங்களுக்கு போதுமென்ற அளவிற்கு, பரலோக அப்பத்தினால் எங்களை போஷியும். எங்களுடைய பாத்திரத்தை நிரப்பும், அதை நிரப்பி, எங்களை முழுமையாக்கும்.
கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுத்தலாயிருக்கிறார் 63-0728 என்ற செய்தியை கேட்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்ஸன்வில் நேரப்படி நாம் கூடிவருகையில் உலகம் முழுவதிலும் உள்ள நாம் என்ன ஒரு எழுப்புதலின் நேரத்தை உடையவர்களாயிருப்போம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிப்பதற்குரிய வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 16:15-17
பரி. லூக்கா 24-ம் அதிகாரம்
பரி. யோவான் 5:24 / 14:12
1 கொரிந்தியர் 2-ம் அதிகாரம்
எபேசியர் 1-ம் அதிகாரம்
கொலோசெயர் 1-ம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10