அன்புள்ள கழுகுகளே, நாம் யாவரும் ஒன்று சேர்ந்து இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 64-0719E பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல் என்ற செய்தியைக் கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும் மணவாட்டியே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் ஒன்றுகூடி உலக சரித்திரத்திலேயே மிக மகத்தான ஜீவனுள்ள ஊழியத்திற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய சத்தத்தை கேட்பதற்கு நாம் ஒன்றுகூடி சந்திக்கையில் நாம் மிகவும் மகிமையான நேரத்தை உடையவர்களாய் இருந்து கொண்டிருக்கிறோமே! இது தேவ குமாரனாகிய, இயேசுவே, வேத வாக்கியங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்தி, இந்நாளுக்கென முன்குறிக்கப்பட்டிருந்த வேதவாக்கியத்தை, அவருடைய நாளிலும், மற்ற எல்லா நாட்களிலும் இருந்தது போலவே, ஜீவனுள்ளதாக்குகிறதாய் இருக்கிறது. இதை விசுவாசிப்பதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாக இருக்கிறது.
பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதற்கான உண்மையான அத்தாட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்கு செல்வது அல்ல; அது "நானே அவர்" என்றும், உங்களுடைய நாளுக்கான வார்த்தையை நீங்கள் விசுவாசிப்பதுமேயாகும். இன்றைக்கான வார்த்தை என்னவாயிருக்கிறது? மணவாட்டி தன்னுடைய கணவனை அறிந்துகொள்ளும்படியாக, தன்னுடைய துணையை, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை அறிந்து கொள்ளும்படியாக, தேவனுடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான வார்த்தையாய் இருந்து, அவரே ஜனங்களை திரும்ப வார்த்தைக்கு கொண்டுவர வேண்டியதாய் உள்ளது.
அவருடைய சொந்த ஜீவியமும், அவருடைய சொந்த கிரியைகளும், இந்த நாளின் வார்த்தையை வெளிப்படுத்தி ரூபகாரப்படுத்துகிறது.
இது மீண்டும் பரிசுத்த ஆவியானவர் சபையில்; கிறிஸ்து, அவர் செய்வதாக வாக்களித்தபடியே, சாயங்கால நேரத்தில், மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தினதாயுள்ளது. அது அவர்களை சற்று மூச்சுத் திணற வைக்கும் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் வரிகளுக்கிடையே உள்ள மறைபொருளை படித்து புரிந்துகொள்ள வேண்டும், அதுவே அந்த காட்சியை தோன்றச் செய்கிறது.
நாம் மணவாட்டியாய், ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாய் இருக்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளம் என்னவாயிருந்தது? தேவன், ஒரு மனித சரீரத்தின் ரூபத்தில், ஜனங்களின் சிந்தனைகளை வகையறுக்க முடிந்தது. ஒரு மனிதன், ஒரு டஜன் அல்ல, ஒரு மனிதனே.
நாம் தேவனுடைய சிந்தனைக்கே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்; ஒரு மனிதனுடைய சிந்தனைக்கு அல்ல, ஆனால் தேவனுடைய சிந்தனைக்கே. நம்முடைய தீர்க்கதரிசி எழுதப்பட்டுள்ள வார்த்தையை வெளிப்படுத்துபவர்.
உங்களுடைய வீடுகளிலோ அல்லது உங்களுடைய சபைகளிலோ ஒலிநாடாக்களை போட்டுக் கேட்பது அனைவருக்குமானதல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எங்களுக்கான, ஒரே வழி இதுவேயாகும். தேவனுடைய சத்தம் நேரடியாக எங்களிடம் பேசுவதைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு எந்த வியாக்கியானமோ அல்லது விளக்கமோ தேவையில்லை; அது தேவன் எங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதாயுள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் பேசி, மறுபக்கத்தில் நம்முடைய ஒரு முன் காட்சியை அவர் தம்முடைய தீர்க்கதரிசிக்கு எப்படி காண்பித்தார் என்பதை நமக்கு சொல்வதையும் நாம் கேட்போம். அந்த மணவாட்டி எப்படி அவரை சரியாகப் பார்த்துக் கொண்டிருந்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள், நாம் அவருடன் ஒன்றாக நின்றுகொண்டிருந்தோம். நாம் கர்த்தருக்கு முன்பாகப் பரிபூரணமாக நடந்துகொண்டிருந்தோம்.
அப்பொழுது தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, மீண்டும் ஒருமுறை தீர்க்கதரிசனமுரைத்து, இவ்வாறு கூறுகிறார்:
இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும், கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது…அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது-அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்களுடைய இருதயத்தின் இந்த உத்தமத்தை இன்று காலை கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் என்ன தேவையோ அவைகளை அவர்களுக்கு அளிப்பாராக என்றே நாங்கள் ஜெபிக்கிறோம்.
நீங்கள் ஒலிநாடாக்களை கேட்டுக் கொண்டிருந்தால், இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுக்கு எது தேவையாக இருந்தாலும், தேவன் தம்முடைய செய்தியாளர் மூலம் பேசி, "நமக்கு என்ன தேவையாய் இருந்தாலும் அவைகளை அளியும்" என்றே கூறுவார்.
என் நண்பனே இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதன் மூலம் மாத்திரமே அது சம்பவிக்க முடியும்.
எக்காளங்களின் பண்டிகை 64-0719M என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், தேவன் எங்களிடத்தில் பேசுகிறதை கேட்கிறபடியால், தேவன் பேசி தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கினிப்பதையும், மானிட சரீரத்தின் மூலமாக தம்மை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்டு, உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும் அதை பெற்றுக்கொள்ள விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சிறந்த வேலைப்பாடே,
கடந்த ஞாயிற்றுக்கிழமை நம் ஒவ்வொருவரைப் பற்றியும் நம்முடைய மேய்ப்பர் கூறினதை நினைவுபடுத்தாமல் இன்று எப்படி என்னால் எழுத முடியும்?
ஆனால் நான் எங்கு சென்றபோதிலும்...என்னுடன் இணைந்திருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த ஒரு-ஒரு குழுவும் இப்புவியில் இல்லை என்பதை நான் அறிவேன். தேவன் நம்மை இணைபிரியாதவர்களாக்கி, வரவிருக்கும் அந்த இராஜ்யத்திலும், நாம் இணைபிரியாதவர்களாகவே இருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது.
தேவன் ஒலிநாடாவில் பேசிய செய்தியோடும், தேவனுடைய தீர்க்கதரிசியோடும், நம்மைப் போல் இணைந்திருக்கும் ஒரு குழு பூமியில் இல்லை. நாம் இணைந்திருக்கிறபடியால், தீர்க்கதரிசி யோடும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் அந்தப் புதிய இராஜ்யத்தில் நாம் பிரிக்க முடியாதவர்களாக இருப்போம். அதைப் பார்க்கிலும் சிறப்பானது வேறெதுவுமேயில்லையே!
இவைகள் நம்முடைய ஜீவியத்தின் மிக மகத்தான நாட்களாயிருக்கின்றன. நாம் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய கடைசி கால செய்திக்காகவும் ஒரு முட்டாளாக இருப்பதில் நாம் முழுமையாக திருப்தியடைந்திருக்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள் என்று கூறுகிறபடியால் நாம் ஒரு பைத்தியம் என்றே அழைக்கப்பட வேண்டும்.
நாம் ஒரே சபையைச் சேர்ந்தவர்கள். நாம் அதில் சேரவில்லை, நாம் அதில் பிறந்தோம். ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூடி கிறிஸ்துவை நேசித்து, “ஓ, 'இயேசுவே,' நான் உம்மை எப்படியாய் நேசிக்கிறேன்!” என்று கூறுகிறோம்.
நாம் உலகத்திற்கு ஒரு பைத்தியமாக இருக்கலாம், ஆனால் பிதாவானவர் நம்முடைய நாளில் தம்மைப் பற்றிய வெளிப்பாட்டை நமக்குக் கொடுத்துள்ளார், தேவன் அதன்மேல் தோலை உடுத்தியிருக்க, அது அவருடைய மணவாட்டியாகிய நம்மை அவரிடம் இழுத்துள்ளது.
இது எவ்வளவு எளிமையானது என்பதை நாம் நேசிக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், இது எவ்வளவு ஆழமானது. ஆனால் அதைப் பார்க்க நீங்கள் ஒரு வெளிப்பாட்டை பெற்றிருக்க வேண்டும், நாம் பெற்றிருக்கிறோம்.
அவர் தம்மை தம்முடைய சபையில், மனித திரையில் மறைத்துக்கொண்டு, உங்கள் விசுவாசமும் என் விசுவாசமும் ஒன்றுசேர்ந்து தேவனுடைய ஒரே பிரிவாகும்போது, அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். என்னால் உங்களையல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; நாம் தேவனில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. எனவே, அது ஒன்றுசேர்ந்த பிரிவாகிறபோது, அது இணைப்பாகிறது. தேவன் அந்த நோக்கத்துக்காகவே என்னை அனுப்பினார்; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்; அது நடக்கிறது. பாருங்கள், அது அப்படித்தான் என்று முற்றிலுமாக உறுதிபடுத்தப்படுகிறது.
அந்த நாளில் எம்மாவுக்கு சாலையில் நடந்து சென்ற மனிதர்களைப் போன்று நாம் இருக்கிறோம். இந்நாளில் அவர் நம்மிடம் பேசுவதை நாம் கேட்கிறோம். பின்னர் நாம் அவருடன் மட்டுமே ஒருங்கிணைந்திருக்கும்படியாக அவரை நம்முடைய வீடுகளுக்கு அழைக்கிறோம். அப்பொழுது அவர் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்கிறார், நித்திய ஜீவ அப்பத்தை பிட்கிறார். நாம் அவரை உடனடியாக அடையாளங் கண்டுகொள்கிறோம். அப்போது வழியில் அவர் நம்முடன் பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று நாம் கூறுகிறோம்.
ஒவ்வொரு வாரமும் நாம் "இந்த வாரம் அவர் என்ன சொல்லப் போகிறார் என்றும், நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்றும்" மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிவந்து, ஆச்சரியப்படுகிறோம். நாம் ஒருவரோடொருவர் மேற்கோள்களைப் பகிர்ந்துகொண்டு, "அவர் கூறினபோது நீங்கள் கேட்டீர்களா": என்று அதைக் குறித்து வாரம் முழுவதும் பேசுவோம்.
“என்னுடைய சிறந்த வேலைப்பாட்டை உருவாக்க எனக்கு நான்காயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன; ஆனால் இப்போது நான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக மற்றொரு சிறந்த வேலைப்பாட்டை உருவாக்கி வருகிறேன், நீங்கள், என்னுடைய மணவாட்டி. என்னுடைய முதல் சிறந்த வேலைப்பாட்டை, என்னுடைய வார்த்தையை, உருவாக்கியதைப் போலவே, அவருடைய ஒருபோதும் மாறாத முறையால் அதைச் செய்துள்ளேன். அந்தவிதமாகத்தான் நான் என்னுடைய சிறந்த வேலைப்பாடுகளை உருவாக்குகிறேன், ஏனென்றால் அது பரிபூரணமான வார்த்தையாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் ஒரு பரிபூரணமான சிறந்த வேலைப்பாடாய் இருக்க முடியும்.”
என் சகோதரனே இதைக் குறித்து மோசமாக எண்ண வேண்டாம். ஒரு நிமிடம் சிந்தனை செய்து பார். மணவாட்டியை அவருக்கென்று பெற்றுக்கொள்ள அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒன்றை எடுத்திருப்பாரானால், அவர் வேறொரு சிருஷ்டிப்பை ஒருபோதும் சிருஷ்டிக்கவில்லை. அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டார். அப்படியானால், அவர் வார்த்தையாயிருந்தால், அவருடைய மணவாட்டி என்னவாயிருக்க வேண்டும்? அவளும் மூல வார்த்தையாக அமைந்திருந்து, வார்த்தையில் உள்ள ஜீவிக்கும் தேவனைக் கொண்டிருக்க வேண்டும்.
ருசித்து புசிக்கிற ஒரு குதூகலத்தைப் பற்றிப் இங்கே பேசுகிறோம். நாம் மூல சிருஷ்டிப்பின் பாகமாக இருக்கிறோம். நாம் மூல வார்த்தையின் பாகமாக இருக்கிறோம். தேவன் நம்மில் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். நாம் அவருடைய சிறந்த வேலைப்பாடாய் இருக்கிறோம். நாம் அவருடைய தீர்க்கதரிசியுடன் இணைந்திருக்கும் குழுவாக இருக்கிறோம். நாம் அவருடைய தீர்க்கதரிசியோடும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் பிரிக்க முடியாதவர்களாய் இருக்கிறோம். நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம்.
அவர் எங்களுக்கு சிறந்த வேலைபாடு 64-0705 என்ற செய்தியைக் கொண்டு வருகையில், நித்திய ஜீவ வார்த்தைகளை தேவன் பேசி எங்களுக்கு வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கையில், அது எங்களுக்குள் கொழுந்துவிட்டு எறிவது போல உங்களுடைய இருதயமும் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்று நீங்களும் கூட விரும்பினால், மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்றுசேர்ந்து கூடிவந்து அவரை எங்களுடைய வீடுகளிலும், எங்களுடைய சபைகளிலும் வரவேற்கையில், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஏசாயா 53:1-12
மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19
தொடர்புடைய சேவைகள்
அன்பான ஷெகினா மகிமை மணவாட்டியே,
உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூட்டப்பட்டு, அவருடைய செய்தியாளர் மூலம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, நாம் யார் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளபடியால், நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் எப்படியாய் புதிய உயரங்களுக்கு உயர்த்தப்பட்டன.
இன்றைக்கு அவர் ஷெகினாவுடன் தம்மை, மண்பாண்டங்களில் திரைமறைத்துக்கொள்கிறார். வெளிப்புறமானது ஒரு கூட்ட பரிசுத்த- உருளையர்களாக, பழைய தகசுத் தோல்களாக காணப்படுகிறது, ஆனால் உள்ளே ஷெகினா மகிமையை மறைக்கிறது.
தேவனுக்கு மகிமை! நம்முடைய உட்புறத்தில் ஷெகினா மகிமையை மறைத்துக்கொள்கிறோம். நாம் திரைக்குப் பின்னால் சென்றுவிட்டோம், கிறிஸ்துவை நாம் தெளிவான பார்வையில் பார்க்க முடியும்.
இன்றைக்கு, தேவன் மனிதனில் செயல்பட்டுக்கொண்டிருக்கவில்லை, அவர் மனிதன் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் இயேசு என்ற ஒரு மனிதனில் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இப்பொழுதோ, அவர் இந்த நோக்கத்திற்காகத் தெரிந்தெடுத்துள்ள மனிதன் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேவன், மனித ரூபத்தில்; அவர் தன்னை தேவனுடைய ரூபத்திலிருந்து, மனிதனின் ரூபத்திற்கு மாற்றினார்.
தேவன் அழிவுக்கு முன்பாக, ஆபிரகாமினுடைய மாம்சப்பிரகாரமான சந்ததிக்கு, ஒரு மானிட சரீரத்தின் ரூபத்தில் பிரசன்னமானார், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் திரும்ப வருவதற்கு முன்பு இந்த ராஜரீக சந்ததிக்கு அதே காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார்.
தேவன் பிரசன்னமாவதாக வாக்களித்தபடியே, அவர் மீண்டும் ஒருமுறை ஒரு மானிட சரீரத்தின் ரூபத்தில் பிரசன்னமாகியிருக்கிறார். அது வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற ஒரு மாம்சத்தின் திரைக்குப் பின்னால் மறைந்துள்ள தேவனாகும். நீங்கள் அந்தத் திரைக்குப் பின்னால் சென்று தேவனைப் பார்த்தாலொழிய, மனிதனை அல்ல, நீங்கள் தேவனின் முழு திட்டத்தையும் தவறவிட்டுவிடுவீர்கள்.
சில ஜனங்கள், “நீங்கள் சகோதரன் பிரான்ஹாமை ஒரு தேவனாக்குகிறீர்கள்” என்று கூறுகிறார்கள். சரி, அது சரியான விதமாகத்தான் தென்படுகிறது என்று நாம் கருதுகிறோம். அவர்கள் நம்மை விமர்சிக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். நாம் அதைச் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை என்பதையும் கூட நாம் அறிவோம், ஏனென்றால் அவர்கள் தோலின் மறுபக்கத்தில் இருப்பதால், அவர்கள் திரைக்குப் பின்னால் வரவில்லை.
நாம், “சரி, அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அது அவ்வாறிக்கிறதா?” என்று தெளிவாகக் கேட்க முடியும். நாம் இழக்கப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்யவே விரும்புகிறோம். நாம் எந்நிலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். நாம் எந்த விதமான கடற்பயணத்தில் உள்ளோம் என்றும், எந்தவிதமான காற்று நமக்கு வீசிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். நம்முடைய திருகு மறைகள் என்னவாயிருக்கின்றன என்பதையும், நம்முடைய திருகாணிகள் என்னவாயிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம்.
தேவன் உலகில் வெளிப்பட்டபோது, அவர் ஒரு திரைக்குப் பின்னால், இயேசு என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் தோலுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். அவர் திரையிடப்பட்டு, மோசே என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் தோலுக்குப் பின்னால் மறைந்துகொண்டிருந்தார், அவர்கள் தேவர்களாயிருந்தனர், தேவனாய் அல்ல; ஆனால் அவர்கள் தேவர்களாயிருந்தனர், ஒரே தேவன், தன்னுடைய முகமூடியை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் அதே காரியத்தை செய்து, இந்த வார்த்தையைக் கொண்டு வந்தார்.
நாம் வார்த்தைக்கும், செய்திக்கும் மற்றும் இந்த மணி நேரத்தின் தீர்க்கதரிசியுடனும் இணைக்கப்பட்டுள்ளோம், அது நம்மை இழுத்து, நம்முடைய பரலோக வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் உலகிற்கு வினோதமானவர்களாக இருக்கிறோம், ஆனால் தேவன் தம்முடைய மணவாட்டியை இந்த குழப்பத்திலிருந்து, தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக இழுக்கும் ஒரு திருகு மறையாக நம்மை அனுப்பினார். நாம் வார்த்தையினால் இணைக்கப்பட்டுள்ள ஒரு திருகு மறையாய் இருக்கிறோம்.
தேவன், தோலை உடுத்தியுள்ளாரே! அது உலகத்திற்கு ஒரு பைத்தியம் போல தென்படலாம், ஆனால் அதுவோ எல்லா மனிதரையும் அவரண்டை இழுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் செய்தி பரலோகத்திலிருந்து வருகிற மன்னாவாகும், நமக்கான விசுவாசிகளின் ஆகாரமாய் மாத்திரமே உள்ளது, அது அவருடைய மனவாட்டியை அவரண்டை இழுத்துக் கொண்டிருக்கிறது. ஷெகினா மகிமையானது, சமுகத்தப்பத்தின் மேல், அது கெட்டுப்போகாமல் பாதுகாத்தது.
இந்த செய்தியும் அவருடைய செய்தியாளனுமே, இன்றைக்கான தேவன் அருளியுள்ள ஒரு வழியாகும்; தேவன் அதன்மேல் தோலினால் திரையிட்டுக்கொண்டார். இப்பொழுது அக்னி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட சுத்தமான தேவனுடைய சத்தத்தை மாத்திரமே போஷிக்கும்படியாக, தேவன் தம்முடைய மணவாட்டியான, நம்மில் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார்.
நாம் ஐந்து வகையான ஊழியத்திற்கு எதிரானவர்கள் அல்ல, எதிரானவர்களல்லவே, தேவன் அவர்களை ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை எப்படி வழிநடத்துகிறாரோ அதன்படியே பின்பற்றி செய்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பது போலவே நாம் செய்து கொண்டிருக்கிறோம், மேலும் அவர் நம்மை ஒலிநாடாக்களோடு மாத்திரமே தரித்திருக்கும்படி வழிகாட்டிக்கொண்டும் வழிநடத்திக்கொண்டுமிருக்கிறார்.
ஆகையால், இப்பொழுது, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேளுங்கள். அதைப் பற்றிக்கொள்ளுங்கள். மேலும்-மேலும் இதை நீங்கள் ஒலிநாடாக்களிலிருந்து எடுத்தாலோ, அல்லது எந்தக் காரியமாயினும், ஒலிநாடாக்களிலுள்ள போதனையில் நிலை கொண்டிருங்கள். ஒலிநாடாக்கள் கூறுவதைத்தவிர வேறொன்றையும் கூறாதீர்கள். சரியாக ஒலிநாடாக்கள் கூறுவதை மாத்திரம் அப்படியே சொல்லுங்கள்.
எங்களைப் பொறுத்தவரை, கேட்பதற்கான ஒரே வழி: “ஒவ்வொரு வார்த்தையுமே, ஒலிநாடாக்கள் கூறுவதை தவிர வேறொன்றும் இல்லை,” “ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றன என்பதை சரியாக,” இயங்கு பொத்தானை அழுத்தி அந்த ஒலிநாடாக்களை கேட்பதேயாகும்.
எனவே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, வினோதமானவன் 64-0614E என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது, ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றன என்பதை நீங்கள் வந்து கேட்டு, எங்களோடு வினோதமானவர்களாக மாற, நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
I கொரிந்தியர் 1:18-25
II கொரிந்தியர் 12:11
தொடர்புடைய சேவைகள்
அன்பான எழுதப்பட்ட வார்த்தையே,
ஒவ்வொரு வாரமும் மகத்தானதாகிக்கொண்டே போகிறது. ஞாயிற்றுக்கிழமை, நாம் நோக்கிப் பார்த்து தீர்மானம் செய்யும்படியான ஒரு தருணம் உண்டாயிருந்தது, நாம் எதைப் பார்த்தோம்? நாம் ஒரு ஊழியக்காரரைப் பார்த்தோமா, இல்லையே! நாம் நம்முடைய மேய்ப்பரைப் பார்த்தோமா, இல்லையே! நாம் மாம்ச சரீரத்தின் திரைக்கப்பால் நோக்கிப் பார்த்தபோது, நாம் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துகிறதையும், தம்மை வெளிப்படுத்தினதையும் கண்டோம்.
அவர்கள் தொடர்ந்து ஒலிநாடாக்களை நாம் கேட்டுக்கொண்டு வருவதுபோல் கேட்டிருந்தால், உங்களுக்கு கேட்பதற்கு காதுகளும், பார்ப்பதற்கு கண்களும் இருந்தால், அது மிகத் தெளிவாகிவிட்டிருக்கும். இப்போது நாம் தேவனை வெளிப்படையாகக் காண்கிறோம். திரையானது கிழிக்கப்பட்டு, தேவன் நமக்கு முன்பாக வெளிப்படையாக நிற்பதையும், அக்கினி ஸ்தம்பம் தம்மை தெளிவான காட்சியில் வெளிப்படுத்துகிறதையும் நாம் காண்கிறோம்.
இது சிலரைக் குருடாக்கியுள்ளது, ஆனால் நமக்கு, அது சத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேவன் மோசேக்கு செய்ததைப் போலவே, அவர் நமக்கு முன்பாக அவருடைய செய்தியாளரை மகிமைப்படுத்தியிருக்கிறார்.
சிறியோரே, நீங்கள் இனி அந்த திரைக்கு பின்னால் இல்லை, தேவன் உங்களுடைய முழு காட்சியில் வந்துள்ளார்.
அது என்ன? தெய்வீகத்தன்மை மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. தேவன், ஒரு மனித ரூபத்தில், அவர்களுடைய பார்வையிலிருந்து தம்மை மறைத்துக் கொள்ளுதல். அவர்களால் ஒரு மனிதனை மாத்திரமே பார்த்து, தேவனுடைய தீர்க்கதரிசி தவறுகளைச் செய்கிறார் என்று சொல்ல முடியும், ஜனங்களுக்கு போதிக்க முயற்சிக்கிற இந்த ஒலிநாடாக்களில் தவறுகள் இருக்கின்றன என்று அவரும் தாமே கூறினார். ஆனால் நமக்கு, அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியான, நாம் தேவன் பேசுவதை கேட்டு, அதில் தவறுகளே இல்லை என்பதை புரிந்துகொள்ளுகிறோம்.
ஒருவன் ஒரு மனிதனைப் பார்த்தான், மற்றொருவன் தேவனைப் பார்த்தான். புரிகிறதா? அது தேவன் ஒரு மானிட சரீரித்தில் திரையிடப்பட்டு, இருவர் செய்வதும் சரியென்றே காண்பிக்கிறார், ஆனால் நீங்கள் காணாததில் உங்களுடைய விசுவாசம் உள்ளது.
நம்மைப் பொறுத்தவரை, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் தவறுகள் ஏதேனும் இருந்தால், நாம் அவர்கள் கூறுகிற அவைகளை ஏற்று அவர்களுடைய கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை விசுவாசிப்பதற்கு முன்பே, நாம் தீர்க்கதரிசியினுடைய தவறுகளையே விசுவாசித்து பின்தொடருவோம்.
மோசே இரண்டாவது முறை கன்மலையை அடித்திருக்க வேண்டியதில்லை. அதே ஆவி அந்நாளில், “பாருங்கள், மோசே தவறு செய்கிறான்” என்று கூறியிருக்கும். ஆனால் எப்படியும் தண்ணீர் வந்தது, நீங்கள் தவறு செய்வதாக அழைத்த மோசேயிடமிருந்து வந்த தண்ணீரை குடித்திருக்கவில்லையென்றால், நீங்கள் மரித்துவிட்டிருப்பீர்கள். அது இன்றைக்கும் அவ்ண்ணமாகவே உள்ளது. எவ்வளவோ குற்றச்சாட்டுகள்.
மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். புரிகிறதா? ஆனால் அளிக்கப்படும்படியான அந்த வார்த்தை அவனுக்குள் இருந்தபோது, அவன் தேவனாயிருந்தான்; பாருங்கள், அப்பொழுது அவன் மோசேயாயிருக்கவில்லை.
சகோதரன் பிரான்ஹாம் வார்த்தையை உடையவராயிருந்தார். வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட பிறகு, சகோதரன் பிரான்ஹாம் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமாயிருந்தார், ஆனால் அந்த வார்த்தை ஒலிநாடாவில் ஜனங்களுக்கு அளிக்கப்படும்படியாக அவருக்குள் இருந்தபோது, அவர் தேவனாயிருந்தார்; அப்பொழுது அவர் சகோதரன் பிரான்ஹாமாக இல்லை. இவ்வாறு நாம் கற்றுக்கொள்கிறோம், ஒலிநாடாக்களில் இருப்பது தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை.
நாம் அதை விசுவாசிப்பது மாத்திரமல்ல, ஆனால் அதன் மூலம் ஜீவிக்கிறோம். அவர்கள் அனைவரும் அதைவிட்டு விலகிச் செல்லும்போது, நாம் அதனுடன் தரித்திருக்கிறோம்! நாம் அதை விசுவாசிக்கிறோம்! வேறுயாரும் என்ன செய்தாலும் அல்லது கூறினாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசித்து, அதன்பின்னர் அதன் பேரில் செயல்படுகிறோம். நீங்கள் அவ்வாறு செயல்படவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை.
எனவே நான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூறுகிறேன்: ஒரு காரியத்தையும் நீங்கள் கூட்டவோ, எடுத்துப்போடவோ, உங்களுடைய சொந்தக் கருத்துக்களை அதில் நுழைக்கவோ வேண்டாம், ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கூறுங்கள், என்ன செய்யவேண்டுமென்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாரோ, அதை சரியாக அப்படியே நீங்கள் செய்யுங்கள்; அதோடு கூட்டாதீர்கள்!
தேவன் செய்யும்படி நமக்கு கட்டளையிட்டிருக்கிறபடியால் இயங்கு பொத்தானை அழுத்தி ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசியுங்கள். இது தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசிக் கொண்டிருக்கிறதாயுள்ளது.
தேவன் திரையிட்டுக்கொள்வதனால், தம்மை அதே அக்கினியினால், அதே அக்கினி ஸ்தம்பத்தினால் இறங்கி வந்து திரையிட்டுக் கொள்வதனால், மீண்டும் திரையிட்டு மோசையை ரூபகாரப்படுத்தினார். அப்பொழுதிலிருந்து-இருந்து…அவர்களிடத்திலிருந்து, எனவே அவர்களால் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே கேட்க முடிந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? வார்த்தையை மாத்திரம், அவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு, ஜீவிக்கிற வார்த்தையாய் இருந்தான்.
தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை, அவரால் மாற்ற முடியாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறார். இதனால், நம்மைப் பொறுத்தவரை, அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம் நம்முடைய தேவசத்தமாயும், நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையாயுமிருக்கிறார்.
இப்பொழுது அது நமக்கு வெறும் எழுதப்பட்ட வார்த்தை அல்ல, அது மெய்மையாயுள்ளது. நாம் அவருக்குள் இருக்கிறோம். இப்பொழுது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் அவரை காண்கிறோம். இப்பொழுது நாம் அவரை, வார்த்தையாக, தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அது அங்கு வெளியே, மறைக்கப்பட்டுள்ளது, காரணம் (ஏன்?) அது மானிட சரீரத்தில் திரையிடப்பட்டுள்ளது. புரிகிறதா?
என்னவாயிருந்தாலும், அவர்கள் அதைப் பார்ப்பதில்லை. ஏன்? அது அவர்களுக்கு அனுப்பப்படவில்லை.
நீங்கள் அதைப் பார்ப்பதால், நீங்கள் யார் என்று அவர் மீண்டும் ஒருமுறை உங்களிடத்தில் சொல்வதைக் கேட்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? அவர் மகிமையின் பாதுகாப்பு அரண்களிலிருந்து கீழே நோக்கி பார்த்து, உங்களைக் காணும்போது, அவர் யாரைக் காண்கிறார்?
- வார்த்தை வெளிப்பட்டதை நான் காண்கிறேன். இந்தக் கடைசி நாட்களில் அவர் என்ன செய்வேன் என்று கூறினாரோ, அது வளருவதை நான் காண்கிறேன். அந்த முதிர்ச்சியடைந்த வார்த்தையிலிருந்து வரும் ஷெகினா அப்பத்தை, அதை விசுவாசிக்கிற, பிள்ளைகள் புசிப்பதை நான் காண்கிறேன். ஆமென்!
- நீங்கள் அவரை மறைக்கும் திரையாயிருக்கின்றபடியால், அப்பொழுது நாம் அவருடைய பாகமாகிவிடுகின்றோம். ஏனெனில். கிறிஸ்து தேவனுடையவராயிருந்தது போல, நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் வரை, அவருடைய பாகமாய் இருக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்ததினால், அவரை தேவனாக்கினார். கிறிஸ்து உங்களுக்குள்ளாக, மகிமையின் நம்பிக்கையாக இருக்கின்றபடியால், நீங்கள் கிறிஸ்துவின் பாகமாகிவிடுகிறீர்கள்.
- "நீங்கள்," அது, "நீங்கள் எழுதப்பட்ட நிரூபங்கள்" அல்லது, "நீங்கள் எழுதப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை," என்று கூறப்பட்டுள்ளது, அதனுடன் ஒன்றையும் கூட்ட முடியாது. "நான் ஒரு எழுதப்பட்ட நிரூபம்" என்று நீங்கள் கூறிவிட்டு, ஏற்கனவே எழுதியுள்ளதைத் தவிர வேறு எந்தவிதமாகவும் ஜீவிக்க முடியாது, ஏனெனில் எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப்போடவோ முடியாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம். அவர் நம்மைப் பார்க்கிறார். நாம் அவரைப் பார்க்கிறோம். நாம் இந்நாளில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையாயிருக்கிறோம்.
நாங்கள் இந்த நாளில் ஜீவிக்க வேண்டிய வார்த்தையை எங்களிடம் பேசுகிற, தேவன் எங்களுக்கு முன்பாக நிற்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஜெபர்சன்வில் நேரப்படி, 12:00 மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். இது ஷெகினா மகிமை நம்மை முதிர்ச்சியடையச் செய்கிறதாயிருக்கிறது. விசுவாசிகளுக்கான சமுகத்தப்பம்.
தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
மத்தேயு 24:24
பரி. லூக்கா 17: 28-29
பரி. யோவான் 14:14
1 கொரிந்தியர் 12:13
2 கொரிந்தியர் 3:6 – 2 கொரிந்தியர் 4:3
பிலிப்பியர் 2:1-8
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:7 & 19:13 யாத்திராகமம் 19 & 20, அதிகாரங்கள்
யோவேல் 2:28
மல்கியா 4:5