காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 9 ஏப்ரல், 2022

அன்பான வழிகாட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகளே,

இறுதி யுத்தம் நெருங்கிவிட்டது. நாம் இதுவரை இல்லாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறோம். நாம் ஒரு வனாந்தரத்தினூடாகச் செல்கிறோம், நாம் எங்கோ நம்முடைய பாதையில் இருக்கிறோம், ஒரு வழிகாட்டி இல்லாமல் நாம் தொடர்ந்து செல்ல முடியாது. கவலைப்படாதே சிறு மந்தையே, தேவன் நம்மை வழிநடத்த ஒரு வழிகாட்டியை அருளியுள்ளார்.

இந்த வழிகாட்டி நமக்கு காரியங்களை வெளிப்படுத்துவார், மேலும் அவர் கேட்டுள்ள காரியங்களையும் சொல்லுவார்; அவர் நம்முடைய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, நாம் சொன்னதை அவரால் சொல்ல முடியும். இந்த வழிகாட்டியை நாம் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் அவர் ஒருவரே வழியை அறிந்தவர்.

இயேசு பூமியில் இருந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களிடம் இன்னும் அநேகங்காரியங்களை சொல்லவும், நமக்கு வெளிப்படுத்தவும் இருப்பதால், அவர் சத்திய ஆவியானவரை நம்மிடம் அனுப்புவதாகவும், அவர் இந்த சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்துவார் என்றும் கூறினார். அவர் முதன்முதலில் மாம்சத்தில் வந்தபோது அவர் செய்ததைப் போலவே அவர் தம்மை வெளிப்படுத்தி ரூபகாரப்படுத்தும்போது அவருடைய மணவாட்டி அவரை அடையாளம் கண்டுகொள்வாள் என்று அவர் கூறினார்.

நம்முடைய இதயத்தில் இருக்கும் ஒவ்வொரு நினைவையும் அவர் அறிவார். நாம் யார் என்பதையும், நாம் என்ன செய்துள்ளோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நம்மைக் குறித்த எல்லாவற்றையும் அறிவார். அவர் தேவனுடைய வழிகாட்டியாய், பரிசுத்த ஆவியானவராய் மானிட மாம்சத்தில் ஜீவித்து தம்மை வெளிப்படுத்துகிறார்.

இயேசுவே சொன்னது போல், "இந்தக் கிரியைகளைச் செய்கிறது நானல்ல; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்."

அப்படியே அவருடைய தூதன் தன்னைப்பற்றிப் பேசாமல், அவர் எதைக் கேட்பாரோ அதையே பேசுவார். அவர் இந்த எல்லாக் காரியங்களையும் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்வார், பின்னர் அவர் அவைகளை நமக்கு அறிவிப்பார். வார்த்தையில் மறைந்திருந்த எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவார்.

பூமியில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை, ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருப்பார் என்றும், அவருடைய மணவாட்டி அவரைத் தெளிவாக அடையாளம் கண்டுகொண்டு பின்பற்றுவாள் என்றும் பிதாவானவர் நம்மிடம் கூறினார்.

அவர் தேவனை மாத்திரமே மகிமைப்படுத்துவார். அது ஏழாம் தூதனாகிய அவர் அல்ல, இது மனுஷகுமாரனின் வெளிப்படுத்துதல் என்று அவர் தெளிவாகக் கூறுவார். இது தேவனுடைய இரகசியம் வெளிப்படுத்தப்படுதலாகும். இது ஒரு மனிதன் அல்ல, இது தேவன். அவர் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த ஒரு செய்தியாளன். மனுஷ குமாரன் கிறிஸ்து, அவரைத் தான் நாம் புசித்துக்கொண்டிருக்கிறோம்.

மணவாட்டியை வழிநடத்த தாங்கள் தான் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்று பலர் கூறுவார்கள், ஆனால் நீங்கள் உங்களுடைய அறிவாற்றலின் பேரிலோ அல்லது உங்களுடைய சிந்தனைகளின் பேரிலோ அல்லது மனிதனால்-உண்டாக்கப்பட்ட எந்த கருத்துக்களின் பேரிலோ சார்ந்திருக்க தேவன் விரும்புகிறதில்லை. தேவன் ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார், அது அவரால் நியமிக்கப்பட்ட வழிகாட்டி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நம்முடைய வழிகாட்டி ஒருவரை இந்தவழியாகவும், ஒருவரை அந்தவழியாகவும் அழைத்துக் கொண்டு போய்: நீ இந்தப் போதகருக்கு செவிகொடுக்க வேண்டும், பிறகு நீ அந்த போதகருக்கு செவிகொடுக்க வேண்டும் என்று கூறப்போவதில்லை; அவர்களே ஒருவருக்கொருவர் உடன்படவில்லை. அது எப்படி உங்களை பரிபூரணப்படுத்தும்?

பரிபூரண வார்த்தை ஒன்று மாத்திரமே, ஒலிநாடாவில் உள்ள அவருடைய பரிபூரணமான ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் வார்த்தையே நம்மைக் கொண்டு வந்து ஒன்றாக வைத்திருக்கப்போகிறது.

இன்று பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட நபர்களாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர், இது உண்மை. பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்றால் அப்பொழுது ஏன் ஒரு போதகர் வேண்டும்? நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி இல்லாமல், ஒரு போதகர் என்னை வழிநடத்தி எனக்குப் போதிக்க விரும்புகிறேனா? தேவனுடைய சத்தத்திலிருந்து அவரே அதை மிக சிறப்பாக விளக்கிக் கூறுவதை நேரடியாக கேட்பதை விட வார்த்தையின் வியாக்கியானத்தை ஒரு பிரசங்கியினிடத்திலிருந்து நான் கேட்க விரும்புகிறேனா?

நான் ஊழியத்தை கண்டிக்கவோ, அல்லது அவர்கள் போலியானவர்கள் என்று கூறவோ, அல்லது நீங்கள் அந்த ஊழியத்திற்கு செவிகொடுக்கக் கூடாது என்று கூறவோ முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அதை சரியாகக் கூறிக்கொண்டிருக்கவில்லையெனில் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். அவர்கள் உங்களின் முற்றிலுமான, முற்றிலுமான வார்த்தையாக, உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியாது என்றுதான் நான் கூறிக்கொண்டிருக்கிறேன். மனிதர்களால் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு வித்தியாசமான எண்ணத்தையும், வித்தியாசமான வழிநடத்துதலையும் உடையவனாயிருக்கிறான். அது எப்படி மணவாட்டியை பரிபூரணப்படுத்த முடியும்? நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் செவிகொடுத்து, அவர்கள் கூறுவதே தேவனுடைய பரிபூரண வார்த்தை என்று கூறும் அவர்களே ஒருவருக்கொருவர் உடன்பட முடியாமலிருப்பதை அறிந்தால், அது எப்படி மணவாட்டியை பரிபூரணப்படுத்த முடியும்? அது எப்படி உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியும்?

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையுடன் நம்மை ஒன்றாக வைத்திருக்க நாம் அனுமதித்தால், நாம் ஒரே ஆவியினால், ஏக இருதயத்தோடும், ஏக சிந்தையோடும், ஒருமனப்பட்டிருப்போம்; பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வழிகாட்டியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்துவார். ஆனால் நீங்கள் உங்களுடைய வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும்.

உங்களுடைய வழிகாட்டியின் வார்த்தைக்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள். அவரைப் பின்தொடருங்கள். நீங்கள் பின்தொடரவில்லையென்றால், நீங்கள் வழித்தவறி காணாமற்போய்விடுவீர்கள். மேலும், நீங்கள் அவரை விட்டுவிடும்போது, நீங்கள் சுயமாக செல்ல வேண்டும் என்பது, நினைவிருக்கட்டும், எனவே நாம் வழிகாட்டிக்கு அருகில் இருக்க விரும்புகிறோம்.

பரிசுத்த ஆவியானவர் அவருடைய வழிகாட்டியைப் பின்பற்ற நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார், இது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஏழாம் தூதன் மூலம் பேசுவதாகும். இது ஒரு மனிதனுடைய வார்த்தை அல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது, மேலும் இதுவே மணவாட்டியை பரிபூரணப்படுத்தக் கூடிய ஒரே காரியமாயிருக்கிறது.

நாங்கள் எங்களுடைய ஈஸ்டர் வாரத்தில் எங்களுடைய வழிகாட்டிக்கு செவிகொடுக்கத் துவங்குகையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, வந்து சேர்ந்துகொள்ளுங்கள், நாம் இதுவரை செல்லாத இடத்திற்கு அவர் நம்மை வழிநடத்தப் போகிறார்.

62-1014E ஒரு வழிகாட்டி

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

பரி. மாற்கு 16:15-18
பரி. யோவான் 1:1/16:7-15 அப்போஸ்தலர் 2:38
அப்போஸ்தலர் 2:38
எபேசியர் 4:11-13 / 4:30
எபிரெயர் 4:12
2 பேதுரு 1:21
யாத்திராகமம் 13:21

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 2 ஏப்ரல், 2022

பயணிப்போரே,

தேவனுக்கு மகிமை, என்னே ஒரு நாளில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று ஒவ்வொரு செயலாலும் நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு செய்தியை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களை அது செய்திருக்கிறது; வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார், மனதின் எண்ணங்களை அறிந்திருந்தார், நடக்கவிருக்கும் காரியங்களை அறிவித்து, மரித்தோரை எழுப்பினார், ஒவ்வொரு முறையும், அது பரிபூரணமானதாயிருந்து வந்துள்ளது.

மலையின் உச்சியில் இருந்த மண்ணையெல்லாம் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. பாறையைத் தவிர வேறு எதுவும் விடப்பட்டிருக்கவில்லை. பாறையின் மீது இரகசியமான எழுத்து இருந்தது, எனவே அவருடைய மணவாட்டிக்கு எழுதப்பட்டதை வியாக்கினிப்பதற்கு அவருடைய வல்லமையான தீர்க்கதரிசியை தேவன் நமக்கு அனுப்பினார். இப்போது வேதம் முழுமையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது.

அவர் தம்முடைய பலமுள்ள தூதனை மலையின் மீது அழைத்துச் சென்று, கர்த்தருடைய பட்டயத்தை அவருடைய கரத்தில் வைத்தார். அவருடைய தூதன் அந்த மலையின் உச்சியை வெட்டிப் பிளந்தார். அதன் உட்புறத்தில் வெள்ளைப் பாறை, பளிங்கு போல் தீட்டப்பட்ட கருங்கல்லில் ஏதுமே எழுதப்பட்டிருக்கவில்லை.

அவர் மேற்கு நோக்கிச் செல்லும்போது இதைப் நோக்கிப் பார்க்கும்படிக்கு நம்மிடத்தில் சொன்னார். பின்னர் அவர் ஏழு தூதர்களுக்கு மத்தியில் எடுத்துக் கொள்ளப்பட்டு, திரும்பி வந்து, பாறையில் எழுதப்படாத அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தினார்.

“இவர் என்னுடைய ஊழியக்காரன், மோசே வழிநடத்தியது போல், இவரும் மக்களை வழிநடத்தத்தக்கதாக இக்காலத்திற்குரிய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அவரை நான் அழைத்திருக்கிறேன். வார்த்தையைப் பேசி எதையும் உருவாக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.” அது மோசே வண்டுகள் ஏற்படும்படி பேசியதுபோல் உள்ளது ஆகும். ஏற்கனவே சம்பவித்த, அணில்கள் மற்றும் காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி நாம் அறிவோம். எளிமையான ஹேட்டிரைட், அவள் வீட்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

வி-ல்-லி-ய-ம் ம-ரி-ய-ன் பி-ரா-ன்-ஹா-ம் என்ற தேவனுடைய மனிதனையே, அவர் இன்றைக்கு தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டார். அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சத்தில் வந்தபோது பேசியதைப் போல நம்மிடம் பேச அவர் தெரிந்துகொண்ட மாம்ச சரீரம். ஒவ்வொரு வேதவாக்கியமும் அதை நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது அவர் யாராயிருந்தார், அவர் யாராயிருக்கிறார், நாம் யாராயிருக்கிறோம் என்பதைக் குறித்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளோம் என்ற அப்படிப்பட்ட ஒரு உறுதி நமக்கு உண்டு: அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட இனிய இருதயமான மணவாட்டி.

அவருடைய வார்த்தையுடன் தரித்திருப்பதனால் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். இது நமக்கு அத்தகைய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அது நமக்கு என்னவென்று பொருள்படுகிறது என்பதை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.

அங்கே வித்தியாசமான ஒன்று இருந்ததை நாம் எப்பொழுதும் நம் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஆழமாக அறிந்திருக்கிறோம். நாம் பாவத்தில் இருந்தபோதும் கூட, நம்மால் விளக்க முடியாத ஏதோ ஒன்று இருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம், ஆனால் அது அங்கேயே இருந்தது. இப்பொழுது நமக்குத் தெரியும். இதற்கு முன்பு நாம் இதைப் போல் ஒருபோதும் உணர்ந்ததில்லை, இனி எந்த சந்தேகங்களும் இல்லை, வியப்புமில்லை, எந்தக் கேள்வியும் இல்லை, இது நம் ஆத்துமாவில் பொறிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கே மகிமை!!

இவை அனைத்தும் நிகழும் வரை ஒழிந்துபோகாத தலைமுறையாக நாம் இருக்கிறோம். நம்முடைய கண்களுக்கு முன்பாக நடக்கும் துரோகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தலைமுறையாயும் நாம் இருக்கிறோம். வேளையோ சமீபமாயிருக்கிறது. அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு இங்கே உள்ளது. அவருடைய கடைசி எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மரணமும் அழிவும் நம் யாவரையும் சுற்றியே இருக்கிறது. நாம் சோதோம் கொமோராவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அசுத்தம், பாவம், மனிதனுடைய இருதயம் பயத்தால் சோர்ந்து போய்க்கொண்டிருக்கிறது, அணுகுண்டுகள், தேசங்களுக்கிடையே தத்தளிப்பும் உண்டாயிருக்க, தேவன் தாமே, பயப்பட வேண்டாம், நீங்கள் என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறீர்கள் என்று நம்மிடத்தில் சொல்லுகிறபடியால், நாம் முழு நேரமும் ஒன்றுபட்டு, உன்னதங்களிலே ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒன்றுமே சம்பவிக்க முடியாது. நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று நான் உங்களிடத்தில் சொல்லி வழிநெடுக உங்களிடத்தில் பேசும்போது உங்களுடைய இருதயங்கள் உங்களுக்குள்ளாக கொழுந்துவிட்டு எரியட்டும்.

ஒரு இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருக்கிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள். கை காட்டி கீழே இறக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் எங்களுடன் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று எதிர்பாரத்துக் கொண்டிருந்தால், நீங்கள் அந்த வேர்க்கடலைப் பையை கீழே எறிந்துவிட்டு, உங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, உங்கள் கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு, ஆயத்தமாகுங்கள், இல்லையென்றால் நீங்கள் விடப்படுவீர்கள், 'ஏனென்றால் அவர் உள்ளூரில் சில நிமிடங்கள் மட்டுமே நிற்பார். அவர் பேச வருகிறார்: அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு 63-0623E .

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்திக்கு முன்னர் படிப்பதற்கான வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 5:28 / 22:20 / 24-ம் அதிகாரம்
2 தீமோத்தேயு 4-வது அதிகாரம்
யூதா 1:7
ஆதியாகமம் 6-ம் அதிகாரம்

 


சனி, 26 மார்ச், 2022

அன்பான உண்மையுள்ளவர்களே,

இந்த கடந்த வாரங்கள் நம் எல்லோருடைய ஜீவியங்களிலும் மிகவும் மகிமையான நேரமாக இருந்து வந்தது. தேவன் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்துவதைக் கேட்பது, உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாடியுடன் ஐக்கியமாக இருக்கும்படியான மிகச் சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்றாயிருந்தது.

நாம் யாவரும் ஒன்று சேர்ந்து என்ன கேட்டுக்கொண்டிருந்தோம்?

“அந்த கூர்நுனி கோபுரத்தின் உள்ளில் ஒரு வெண்பாறை உண்டாயிருந்தது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை.” ஆகவே தான் இத்தூதர்களின் செய்தியோடு பொருந்தத்தக்கதாய், நான் மேற்குக்குச் சென்று, மறுபடியும் வந்து சபைக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று.

அவர் எழுதப்படாததைக் கூட நமக்கு வெளிப்படுத்தும்படிக்கு திரும்பி வர, அந்த 7 தூதர்ளுடன் தொடர்புகொள்வதற்கு மேற்கு நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது; ஆனால் இப்பொழுது, வெளிப்படுத்துதல் மூலம், நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை அளித்துக்கொண்டிருக்கிறது.

இந்த செய்திகளை நாம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஆனால் இப்போது அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; இப்பொழுதே அந்த நாள், இப்பொழுதே அந்த நேரம். உலகத்திலும், இந்தச் செய்தியிலும், அவர் நமக்கு சம்பவிக்கப்போவதாயிருந்தைக் குறித்துச் சொன்னதையே நாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டுமிருக்கிறோம், அது இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்படுகிறது.

நம்முடைய 7-ம் தூதன் பண்டைய தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா? இல்லை, அவருக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் விட மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். ஏனென்றால், இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததுபோல மானிட சரீரத்தில் மனுஷ குமாரன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்ததாகும். நம்முடைய புதிய பரலோக வீட்டிற்கு மணவாட்டியை வழிநடத்த நம்முடைய தீர்க்கதரிசி அழைக்கப்பட்டார், பின்னர் அவர் நம்மை கர்த்தரிடத்தில் அறிமுகப்படுத்துவார்.

அவருடைய ஊழியம் மோசேயின் ஜீவியத்திற்கு மிகச் சரியான மாதிரியாய் அமைந்திருந்ததாக அவர் நம்மிடம் கூறினார். மோசே அக்கினி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, மனிதர்கள் எழும்பி அவரை எதிர்த்தனர். இந்த மனிதரும் அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் தங்களுடைய பாதையில் இருந்தனர். அவர்கள் மோசே தன்னை மிஞ்சினவனாகக் காண்பித்துக் கொள்கிறான் என்றும்; அவன் ஒருவன் மாத்திரமே அழைக்கப்பட்டு பரிசுத்தமாயிருக்கவில்லை, அவர்களும் கூட பரிசுத்தமாயிருந்தார்கள் என்றும், அவர்களும் கூட ஏதாவது பிரசங்கிக்க வேண்டியிருந்தது என்றும் கூறியதின் மூலமே அவனுக்கு சவாலிட்டனர்.

அவர்கள் பரிசுத்த மனிதராயிருந்தனர் என்றும், அவர்களும் உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டியதாயிருந்து என்றும் அவன் கூறினான், ஆனால் ஜனங்களை வழிநடத்த தேவன் அவனை, மோசேயை, ஒரு மனிதனையே அழைத்திருந்தார்.

அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர். "மோசேக்கு செவிகொடுங்கள்" என்று ஜனங்களுக்குச் சொல்வதன் மூலம் அவர்கள் செய்யும்படி அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருந்ததையும் செய்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் ஏதாவது அதிகமாக கூற அல்லது மோசே என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை விளக்கிக் கூற விரும்பினர். மோசேக்கு செவிகொடுக்கும்படி ஜனங்களை சுட்டிக்காட்ட அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் ஜனங்களை வழிநடத்த விரும்பினர். அவர்கள் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தைவிட அதிகமாக அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினர்.

நம்முடைய தீர்க்கதரிசி யார், அல்லது அவர் என்ன செய்யும்படி அழைக்கப்பட்டார் என்று உங்கள் மனதில் எப்போதாவது சந்தேகம் இருந்தால், நம்முடைய தீர்க்கதரிசியின் பெயரை பி-ரா-ன்-ஹா-ம் என்று அந்த மலையின் மேல், தேவன் தாமே பூமியின் மேல் என்றென்றுமான ஒரு அடையாளமாக உருவாக்கிய ஒரு மலைத்தொடரைப் பார்க்க நீங்கள் மேற்கு நோக்கி செல்லும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. அவர் உங்களைத் தெரிந்துகொண்டு முன்குறித்தார். அவருடைய வார்த்தை உங்களுக்குள் ஜீவிக்கிறது, வாசம்செய்கிறது. நீங்கள் மாம்சமாக்கப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறீர்கள். அவர் உங்களுக்கு தம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்தார். சாத்தானுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை. அந்த எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உங்களுக்குள் ஜீவிக்கிறது, வாசம்செய்கிறது.

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை இன்றைக்கான தம்முடைய அருளப்பட்ட ஒரே வழியின் மூலம் வழிநடத்திக்கொண்டிருக்கிறார், அவருடைய வார்த்தையை தம்முடைய 7-ம் தூதனான தீர்க்கதரிசி மூலம் உரைத்தார். அந்த தீர்க்கதரிசியே நம்முடைய மேய்ப்பர்.

எந்தவொரு புதிய ஒலிநாடா செய்தியும் கர்த்தர் அதை மாற்றும் வரையில், முதலில் பண்டகசாலையிலிருந்தே வரும் என்று நம்முடைய மேய்ப்பர் நமக்கு வாக்களித்தார். அதற்காகவே அங்கே ஒலிநாடாக்கள் சேமித்து வைக்கப்படும்.

அவர் தனது உதவி போதகர் சகோதரன் நெவிலுக்கும் கூட அறிவுறுத்தினார்; இப்பொழுது அவருடைய கிருபையால், நானும், நாமும் சபையில் என்ன செய்ய வேண்டும்.

எங்கள் அருமை போதகரான சகோதரன் நெவிலுக்கு, நீர் உதவி புரிய நான் மன்றாடுகிறேன். கர்த்தாவே, அவரைக் கிருபையினாலும், வல்லமையினாலும், அறிவினாலும் நிரப்பி, சேகரிக்கப்பட்ட இந்த ஆகாரத்தைக்கொண்டு அவர் தேவனுடைய ஆட்டுக்குட்டிகளைப் போஷிக்க கிருபை செய்யும்.

இந்த ஒலிநாடாக்கள் தீர்க்கதரிசியே மேய்ப்பராயிருக்க அழைக்கப்பட்டவர் என்பவர்களுக்கானது. நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை கேட்க விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி: மணவாட்டிக்காக அருளப்பட்டிருக்கிற சேகரிக்கப்பட்ட ஆகாரமான 63-0623M இடைவெளியில் நிற்றல், என்பதை நாங்கள் கேட்கையில் எங்களுடன் வந்து கேளுங்கள்.

பத்தி எண் 27-லிருந்து நாம் செய்தியைத் தொடங்குவோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

வேத வசனங்கள்

எண்ணாகமம் 16: 3-4

 


சனி, 19 மார்ச், 2022

அன்பான உண்மையுள்ள மணவாட்டியே,

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

  • இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அது பரிபூரணமான எண்ணிக்கையாகும். இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அப்பொழுது பரலோகத்தால் அதை எழுத முடியவில்லை. அங்கே ஒன்றும் சம்பவியாததால், பரலோகத்தால் அதை அறியமுடியவில்லை. யாரும் அதை அறியமுடியாது. அது ஓய்வின் நேரமாயிருந்தது. அது மிகவும் மகத்தானதாயிருந்ததால், அது தூதர்களும் அறியாதவாறு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
  • அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன்:…
    அங்கே ஏதோ ஒன்று கூறப்பட்டது. அது வெறும் ஒரு சத்தம் மாத்திரமே அல்ல. ஏதோ ஒன்று கூறப்பட்டது. அவன் அதை எழுதப் புறப்பட்டான்.
    …அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் என்னிடம் கூறக் கேட்டேன்…
    அந்த சத்தங்கள், அந்த இடி முழக்கங்கள் எங்கேயிருந்தன என்பதைக் கவனியுங்கள். பரலோகத்தில் அல்ல; பூமியின் மேல்! அந்த இடி முழக்கங்கள் வானங்களிலிருந்து ஒருபோதும் சத்தமிடவில்லை.அவை பூமியிலிருந்து சத்தமிட்டன.
  • ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண்ணிக்கையாகும். ஏதோ ஒன்று எழுத்துக் கூட்டி வாசிப்பது போல் ஏழு இடிகளும் ஒரே வரிசையில் ஒவ்வொன்றாக முழங்குகின்றன.

ஒரு உண்மையான தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது; சீக்கிரத்தில் வரவிருக்கும் அவருடைய எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவே நாம் கர்த்தரிடத்தில்: “மணவாட்டிக்குத் தேவையான எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை எது கொடுக்கும்”? என்று கேட்க வேண்டும்.

  • எடுத்துக் கொள்ளப்படுவதற்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
  • இங்கே இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கின்ற ஏழு இடிமுழக்கங்கள், அது ஏதோ ஒரு இரகசியம். இது தான் "இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தல் ” என்று வேதாகமம் கூறுகிறதல்லவா? ஏன், அப்படியானால், அதைக் குறித்த ஏதோ ஒரு மறைக்கப்பட்ட இரகசியம் அங்கே இருக்கின்றது. ஹும்! அது என்ன ? அந்த ஏழு இடி முழக்கங்கள் அதை வைத்திருக்கின்றது. யோவான் அதை எழுதவேண்டுமென்றிருந்தான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் கீழே வந்து, “அதை எழுதாதே. ஆனால், அதை முத்திரையிடு, அதற்கு முத்திரை போடு. புஸ்தகத்தின் பின்புறத்தில் அதை வைத்து விடு" என்று கூறினது. அது வெளிப்படுத்தப்பட வேண்டும். அது இரகசியங்கள். .

பரிசுத்த ஆவியானவர், ஊழியத்தின் மூலம், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைத் தம்முடைய மணவாட்டிக்குத் தரும் ஏழு இடி முழக்கங்களின் வெளிப்பாட்டைத் அவர்களுக்கு வெளிப்படுத்தப் போகிறாரா?

  • இப்பொழுது மல்கியா 4-ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தின விசேஷம் 10 : 6-லும் கூறப்பட்டுள்ள இந்த செய்தியாளன் இரண்டு காரியங்களைச் செய்யப் போகிறார். ஒன்று: மல்கியா 4-ன்படி, அவர் பிள்ளைகளின் இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். இரண்டாவது: வெளிப்படுத்தின விசேஷம் 10-ல் உள்ள ஏழு முத்திரைகளில் அடங்கியிருக்கின்ற வெளிப்பாடுகளான ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார்.

  • இந்த முத்திரைகள் புஸ்தகத்தின் பின்புறத்தில் இருக்கின்றன. "ஏழாம் தூதன் எக்காளம் முழங்கும்போது, புஸ்தகத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் அனைத்தும் நிறைவடைகின்றன." உடனே, உள்ளே எழுதப்பட்டுள்ள திறக்கப்பட்ட புஸ்தகம் மூடப்பட்டு, "தேவனுடைய இரகசியங்கள் முடிவடைகின்றன." ஆகவே இதுதான் தேவனுடைய இரகசியங்கள்: சபை செல்லுதல், மற்ற இந்த எல்லா காரியங்கள். "இரகசியங்கள் முடிவு பெற்றன." ஏழாம் தூதன் ஒவ்வொரு இரகசியத்தையும் முழங்கும்போது, அது முடிவு பெறுகின்றது. எவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும், அது எதுவாயிருந்தாலும் சரி. தேவனுடைய வார்த்தை தவறிப் போக முடியாது.
  • இது எளிமையானது:

    அந்த ஏழு இடி முழக்கங்களினூடான இரகசியம் மணவாட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைக் கொடுக்கும். தேவன் மாத்திரமே, அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளர் மூலம், ஏழு இடிமுழுக்கங்களைகளை மணவாட்டிக்கு வெளிப்படுத்துவார்.

    ஏழு இடிமுழக்கங்கள் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், அந்த வெளிப்பாட்டை நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்திலிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை; என்னிடமிருந்து அல்ல, உங்கள் உள்ளூர் மேய்ப்பர், சுவிசேஷகர் அல்லது போதகரிடமிருந்து அல்ல, ஆனால் இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், உலகத்திற்கே தேவனுடைய மேய்ப்பராயிருக்கிறவரிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

    எல்லா இரகசியங்களும் வெளிப்படுத்தப்படுவதைக் கேட்க வாருங்கள்; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவன் பேசி, எளிமையில் தம்மை வெளிப்படுத்தி: ஏழாவது முத்திரையை 63-0324E நமக்கு கொண்டுவருவதை நாம் கேட்கையில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்று, எண்ணையினால் உங்கள் தீவட்டிகளை நிரப்புங்கள்.

    சகோ. ஜோசப் பிரான்ஹாம்

     

     


     

    செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிப்பதற்கான வேத வசனங்கள்:

    உபாகமம் 29:16-19
    I இராஜாக்கள் 12:25-30
    எசேக்கியேல் 48:1-7, 23-29
    மத்தேயு 24:31-32
    வெளிப்படுத்தின விசேஷம் 7
    வெளிப்படுத்தின விசேஷம் 8:1
    வெளிப்படுத்துதல் 10:1-7
    வெளிப்படுத்தின விசேஷம் 14

     


    தொடர்புடைய சேவைகள்
    சனி, 12 மார்ச், 2022

    அன்புள்ள இளைப்பாறுகிற மணவாட்டியே,

    பயம், பீதி, ஏவுகணைகள், அணு குண்டுகள், அழிவு, பொய்கள், வஞ்சகம், அரசியல், மரணம் என நேற்று உலகில் நடந்ததைக் கேட்க இன்று உலகம் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருக்கிறது.

    ஆனால் மணவாட்டியோ இயங்கு பொத்தானை அழுத்தி, வெள்ளை அங்கிகள், நீதிமானாக்கப்படுதல், முன்குறித்தல், ஊக்குவிக்கப்படுதல், வெளிப்பாடு, சத்தியம், ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல், நித்திய ஜீவன் என்று கூறி அவர்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

    பயப்படாதே அன்பே, நான் உன்னுடன் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் இருக்கிறேன். இது என்னுடைய மகத்தான திட்டத்தைக் குறித்த யாவற்றையும் நான் உங்களிடம் கூறியிருப்பதாயுள்ளது. இப்பொழுது, உங்களுடைய கண்களுக்கு முன்பாக இவை அனைத்தும் படிப்படியாக வெளிப்படுகிறது.

    அவர்கள் கூறுவதோ: இது நம்முடைய வாழ்வின் மிக மோசமான நாட்கள்; எல்லாம் நாளை முடியலாம்.
    நாம் கூறுவதோ: இது நம்முடைய வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்; எல்லாம் நாளை முடியலாம்.

    தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார், அவருடைய வார்த்தை. அவர் தம்முடைய மணவாட்டியை அழைக்கவும், அவர்களுக்காக அவர் ஆயத்தப்படுத்தியுள்ள அவர்களுடைய புதிய வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்லவும் அவர் தம்முடைய தூதன் தீர்க்கதரிசியை தம்முடைய வார்த்தையுடன் அனுப்பினார்.

    இதே ஆறுதலையும், சாமாதானத்தையும் மற்றும் நாம் பெற்றுள்ள உறுதியையும் நீங்கள் விரும்பினால்; அவர் தம்முடைய மணவாட்டிக்காக ஆயத்தம்பண்ணியுள்ள அந்த பரலோக வீட்டிற்குள் நீங்கள் வந்து வசிக்க விரும்பினால்; ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்டிருக்கிற ஒரே வழியை கேட்பதற்கு எங்களுடன் சேர்ந்துகொண்டு, முத்திரைகள் மீதுள்ள கேள்விகள் பதில்களில் 63-0324M: அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் நம்மிடத்தில் முழங்குவதைக் கேளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமை நீங்கள் கேட்கப்போகும் தலைப்புச் செய்திகளின் ஒரு சிறிய முன்னோட்டம்.

    மணவாட்டியை எது இணைக்கும்: வார்த்தையே
    வார்த்தை யாருக்கு வருகிறது: தீர்க்கதரிசிக்கே.
    அந்த வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி யார்: தீர்க்கதரிசியே.
    உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருப்பது யார்: தீர்க்கதரிசியே.
    யாருடைய வார்த்தைகளால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம்: தீர்க்கதரிசியால்.

    சகோ. ஜோசப் பிரான்ஹாம்