
அன்பான தேவனுடைய சிந்தையே,
இந்த ஞாயிற்றுக்கிழமைக்காக நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வீடுகளிலும் சபைகளிலும் வழிநெடுகிலும் அவர் நம்முடன் பேசுகிறபோது நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே எப்படி கொழுந்துவிட்டு எரியப் போவதாயிருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவோம்...சற்று காத்திருங்கள்!
இந்த கடந்த மாதத்தில், நாம் சரியான கப்பலில் ஏறுவதை உறுதிசெய்யுமாறு அவர் நம்மிடம் கூறியிருக்கிறார்…நாம் அதில் உறுதியாய் இருக்கிறோம். தேவனுடைய உண்மையான வித்து பதரோடு சுதந்திரவாளியாக இருக்காது என்று அவர் நம்மிடத்தில் கூறினார்…அதன்பின்னர், நாமே அந்த வித்தாயிருக்கிறோம் என்று அவர் கூறினார். அதன்பின்னர் நாம் நம்முடைய செவிகளில், இன்றைய தினம், இந்த வேதவாக்கியம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று என்று, தேவன் ஒரு மனிதனின் மூலமாக நம்மிடத்தில் பேசி வலியுறுத்திக் கூறினதை நாம் கேட்டோம்.
அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாம் தேவனால் அருளப்பட்ட ஆராதனை ஸ்தலத்தில் இருக்கிறோம் என்று அவர் நம்மிடத்தில் கூறினார், ஏனென்றால் நாம் அந்த இடத்தில் இருக்கிறோம், நாம் அவருடைய வார்த்தையோடு விபச்சாரம் செய்திருக்கவில்லை. இதனால், நாம் அவருடைய சுத்தமான கன்னிகை வார்த்தையான மணவாட்டியாய் இருக்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் ஒருமுறை நம் அனைவரையும் ஒன்றிணைத்து, தம்முடைய மகத்தான தூதனான தீர்க்கதரிசி மூலம் நம்மிடத்தில் பேசி, நானே இந்த மெல்கிசேதேக்கு என்றும், நான் என்னுடைய வார்த்தையில் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளது போலவே, நான் மானிட சரீரத்தில் என்னையே உங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறவிருக்கிறார்.
மகிமை! நீங்கள் உற்சாகமடைந்துள்ளீர்களா? நீங்கள் விவரிக்க முடியாத வார்த்தைகளுக்கு அப்பால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்களா? பாருங்கள், இன்னும் அதிகமாகக் கூட வரவிருக்கிறது. அவர் இந்த மகத்தான காட்சியை முடிக்கப் போகிறார்.
அது குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் ஆதியிலிருந்தே தேவனுடைய சிந்தையில் இருந்தோம். இயேசு பூமிக்கு வருவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீங்கள் பூமிக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இயேசு, தேவனுடைய சிந்தையில், நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். அப்பொழுதே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
அது உங்களுடைய சிந்தையில் பதிந்துகொண்டிருக்கிறதா? நம்முடைய பெயர்கள் தேவனால் நியமிக்கப்பட்டு உலகத் தோற்றத்திற்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. அவர் நம்முடைய கண்களை, நம்முடைய பூரண வளர்ச்சியை, நாம் என்னவாகவெல்லாம் இருக்கிறோம் என்பதை அறிந்திருந்தார். நாம் ஆதியிலேயே அவருடைய சிந்தையில்…தேவனுடைய சிந்தையில் இருந்தோமே! அப்படியானால், நாம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையான ஒரே காரியமாய் இருக்கிறோம். அவர் அதை சிந்தையில் கொண்டிருந்த பிறகே, அவர் அதை உரைத்தார், இங்கே நாம் இருக்கிறோம்.
இதுவோ புரிந்துகொள்ள கடினமாயுள்ளது. தேவன் எல்லா காரியங்களையும் நம்மிடத்தில் சொல்லுகிறார். அவர் நம்மை அவ்வளவாய் நேசித்து, நாம் அதை நேரடியாக அவரிடத்திலிருந்தே கேட்டு உறுதி செய்துகொள்ளும்படி விரும்பி, இவ்விதமாக அவர் அதை டிசம்பர் 4, 2022, ஞாயிற்றுக்கிழமைக்காக பதிவு செய்திருந்தபடியால், அவரால் மீண்டும் ஒருமுறை தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து நம்மிடத்தில்: “நான் இவை யாவற்றையும் உங்களுக்காக செய்தேன். நீங்கள் இதை நேரடியாக என்னிடத்திலிருந்து கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் என்னுடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். நான் வெகுசீக்கிரத்தில் உங்களுக்காக வருகிறேன்" என்று சொல்ல முடியும்.
அதனால்தான் நாம் தேவனின் பிரசன்னத்திற்குள்ளாக சஞ்சரிக்கும்போது, நமக்குள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று நாம் எங்கிருந்தோ வந்திருக்கிறோம் என்றும், நம்மை இழுத்துக்கொண்டிருக்கிற அந்த வல்லமையினால் நாம் மீண்டும் அங்கே திரும்பி சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
தேவன் அந்த முழு காரியத்தின் திரையையும் நீக்கிவிட்டபடியால், நம்மால் அதைக் காண முடிகிறது. தேவன், என் மார்பி, அக்கினி ஸ்ம்பத்தில், தேவன், என் மார்பி, இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனில், என் மார்பி, தம்முடைய சபையில் திரையிடப்பட்டிருந்தார். தேவன் நமக்கு மேலே இருந்தார், தேவன் நம்மோடு இருந்தார், தேவன் நமக்குள்ளாக இருக்கிறார்; தேவன் கீழ்நோக்கி இறங்குதல்.
நாம் பயப்பட முற்றிலும் ஒன்றுமேயில்லை. மரணத்தைப் பற்றிக் கூட, கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் இங்கிருந்து பிரிந்து செல்லும்போது, நாம் மரிப்பதும் கூட இல்லை. இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், நமக்காக ஏற்கனவே ஒன்று காத்திருக்கிறது, என் மார்பே.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி அவர் எங்களுடன் பேசுவதையும், இவை அனைத்தையும் வெளிப்படுத்துவதையும் கேட்க நான் மிகுந்த ஆவலாயிருக்கிறேன். அவர் யாராய் இருக்கிறார் என்பதையும், நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும், ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் உதட்டிலிருந்து செவிக்கு உங்களிடத்தில் சொல்வதை உங்களால் கேட்க முடிந்த அந்த ஒரே இடத்திற்கு எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
யார் இந்த மெல்கிசேதேக்கு? 65-0221E
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
ஆதியாகமம் 18வது அதிகாரம்
யாத்திராகமம் 33:12-23
பரி. யோவான் 1:1
ரோமர் 8:1
2 கொரிந்தியர் 5:1
2 தெசலோனிக்கேயர் 4:13-18
முதலாம் தீமோத்தேயு 3:16 / 6:15
எபிரேயர் 7:1-3 /13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7 / 21:16