ஞாயிறு
11 டிசம்பர் 2022
65-0418M
இது சூரிய உதயம்

அன்பான இயங்கு வல்லமையின் ஆலயமே,

எந்த மனிதனுமே, ஆபிரகாம் 11:00 மணியளவில் தன்னுடைய வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தபோது, அவனைப் போல இருக்க வேண்டும் என்றே தன்னுடைய இருதயத்தில் எப்பொழுதும் ஏங்கி வந்துள்ளான். அப்பொழுது அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது, மூன்று புருஷர் தங்களுடைய ஆடை முழுவதும் தூசியுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அவன் விரைந்து அவர்களிடம் ஓடி வந்து, “என் ஆண்டவரே” என்றான். அங்கு அவனுக்கு முன் நின்று, மனித சரீரத்தில், அந்த மகத்தான மெல்கிசேதேக்கு பேசினார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த ஏக்கம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து நாம் அனைவரும் ஒன்று கூடுவோம், அதே மகத்தான மெல்கிசேதேக்கு நம்மிடத்தில் பேசுவதைக் கேட்போம். தகப்பனோ, தாயோ இல்லாத, நாட்களின் துவக்கமோ அல்லது ஜீவனின் முடிவுமில்லாத ஒரு நபர், தேவன், அந்த நாளில் அவர் ஆபிரகாமிடத்தில் எப்படி பேசினாரோ அதே விதமாக, என் மார்பி, மனித உதடுகளின் மூலம் நம்மிடம் பேசுகிறார்.

நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தினாலொழிய அந்த சத்தத்தைக் கேட்க வேறு வழியில்லை. அதே நேரத்தில் மெல்கிசேதேக்கின் சத்தம் பேசுவதைக் கேட்க மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுபட்டதான ஒரு நேரம் சரித்திரத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. தேவன் தம்முடைய மணவாட்டியை அந்தத் சத்தத்தினால் இணைத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் பல ஆண்டுகளாக, தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ளோம். இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையைப் பெற்று, பாருங்கள், அவருடைய வார்த்தையாக இங்கே ஜீவிக்கிறோம். எனவே இது உண்மையாகவே, கர்த்தருடைய வருகைக்கு முன்பாக சபைக்கு வாக்களிக்கப்பட்டுள்ள மகத்தான அடையாளங்களில் கடைசியான ஒன்றாக இருக்கிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை, மணவாட்டி டிசம்பரில் ஈஸ்டர் செய்தியைக் கொண்டிருக்கப் போகிறாள்; என்ன ஒரு செய்தியை நாம் கேட்கப்போகிறோம்.

இயந்திரவியல். இயக்கவியல். உயிர்ப்பிக்கும் வல்லமை. உயிர்த்தெழுந்த கிறிஸ்து. வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய புத்திரர். கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்த அதே ஆவி நமக்குள்ளும் வாசமாயிருக்கிறது. அவருக்கு இருந்த அதே ஜீவியம், அதே அதிகாரங்கள், அதே பங்குடையவர்களாய், நாம் இருக்கிறோம். அச்சார உரிமைப் பத்திரம். முதிர்ச்சியடைந்த முதல் வித்து ஜனங்கள் முன் அசைவாட்டப்படுகிறது. நாம் இப்பொழுது அவருடைய மாம்சத்தின் மாம்சமும், அவருடைய எலும்பின் எலும்பும்; அவருடைய ஜீவனின் ஜீவனாயும், அவருடைய வல்லமையின் வல்லமையாயுமிருக்கிறோமே! நாம் அவராய் இருக்கிறோம்!

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து; மெல்கிசேதேக்கு தாமே, சத்தமிட்டு நம்மிடம், “நான் உங்களை என்னண்டை இழுத்து, நான் ஆபிரகாமிடத்தில் பேசினது போலவே உங்களிடத்திலும் பேசும்படியாக, நான் என்னுடைய சத்தத்தை ஒலிப்பதிவு செய்து காந்த ஒலிநாடாவில் வைத்தேன். நீங்கள் என்னிடமிருந்து நேரடியாகக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சொல்கிறார்.

நீங்கள் என்னுடைய முன்குறிக்கப்பட்ட, முன் நியமிக்கப்பட்ட சபையாயிருக்கிறீர்களே! உங்களுடைய சரீரங்கள் இயக்கவியலின் ஆலயமாக இருக்கின்றன, ஏனென்றால் ஆரம்பத்திலிருந்தே நீங்கள் இயந்திரவியலின் ஒரு பகுதியாக இருந்தீர்கள்.

அதுவே மாம்சமாகிய வார்த்தையின் தெய்வீக வெளிப்பாடு. அந்த நாளில் மணவாளனாகிய, குமாரனின் மூலமாக அது மாம்சமாக இருந்ததினால், அது இன்றைக்கு மணவாட்டி மூலம் மாம்சமாக இருக்கிறது. புரிகிறதா?

அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் ஜீவித்து கொண்டிருக்கிறது. நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவரில் இருந்த அதே ஆவி, இப்பொழுது நமக்குள் இருக்கிறது, அது நம்முடைய சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. நாம் அவ்வாறு யூகிக்கவில்லை, நாம் உறுதியாகவே அறிந்திருக்கிறோம். நாம் அதை ஏற்கனவே அடைந்துவிட்டோம், அவர் அதை நமக்காகவே ஆயத்தம்பண்ணினார்.

அதன்பின்னர், மதியம் முடிந்துவிட, மெல்கிசேதேக்கு மீண்டும் ஒருமுறை பேசிக் கூறுவார்;

இராஜ்யத்தின் சக பிரஜைகளும், உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்ட இந்த ஜனங்களை, கர்த்தாவே, இப்பொழுதே, அவர்களுக்கு அதை உயிர்ப்பியும். ஆவியானவர் கழுகிலிருந்து கழுகிற்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, ஒவ்வொரு சரீரத்திலும் இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் வெளிப்படுத்தப்படும் வரை,நாங்கள் எங்களுடைய கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வைக்கையில், சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியப்பிரகாரமான, அல்லது அவர்களுக்குத் தேவைப்படுகிற எந்த தேவைக்காகவும், செல்வாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.

கழுகிலிருந்து கழுகிற்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, நம்முடைய ஒவ்வொரு சரீரங்களிலும் இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் வெளிப்படுத்தப்படும். மகிமை!!

இதுவோ இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் மாத்திரமே சம்பவிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இது சூரிய உதயம் 65-0418M என்ற செய்தியை எங்களுக்கு கொண்டுவருகிற அந்த சத்தத்தை நாங்கள் கேட்கப்போகிறபடியால், சேமிக்கப்பட்ட ஆகாரத்தின் பேரில் ருசித்துப் புசிக்கிற ஒரு குதூகலத்தில் பங்கேற்க எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

p> 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

லேவியராகமம் 23:9-11
மத்தேயு 27:51 / 28:18
மாற்கு 16:1-2
பரி. லூக்கா 17:30 / 24:49
பரி. யோவான் 5:24 / 14:12
அப்போஸ்தலர் 10:49 / 19:2
ரோமர் 8:11
முதலாம் தெசலோனிக்கேயர் 4:16
எபிரெயர் 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18