அன்புள்ள மேசியானிக்களே,
நாம் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்; அவருடைய அதே ஆவியால், அதே கிரியைகளினால், அதே வல்லமையால், அதே அடையாளங்களால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். அது கழுகிலிருந்து கழுகுக்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியப் பிரகாரமான, அல்லது நமக்குத் தேவையாய் இருக்கிற எந்த தேவையானாலும், இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் நம்முடைய ஒவ்வொரு சரீரங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்ற வரையிலும் சென்றுள்ளது. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் ஜீவித்துக்கொண்டும், நமக்குள்ளே வாசம் செய்துகொண்டும் இருக்கிறது. நாம் தேவனுடைய மேசியானிக்களாய் இருக்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் இந்த செய்தியின் வெளிப்பாடு; நாம் யார், நாம் எங்கிருந்து வருகிறோம், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மேலும் மேலும் பெரிதாக்குகிறது. நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆச்சரியப்படுகிறோம், அது இதற்குமேல் எப்படி இன்னும் மகிமையாக இருக்க முடியும்? அது இதற்கு மேல் இன்னும் எப்படி தெளிவாக இருக்க முடியும்? ஆனால் நாம் கேட்கும் ஒவ்வொரு புதிய ஒலிநாடாவிலும், தேவன் நம்மிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசி, அவருடைய வார்த்தையை நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்தி, நாம் யார் என்பதை, நமக்கு உறுதியளிக்கிறார்.
தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும் என்பதே எந்தவொரு விசுவாசியினுடைய இருதயத்திலும் உள்ள மிக மகத்தான வாஞ்சையாய் இருக்கிறது. நாம் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க ஒருபோதும் விரும்புகிறதில்லை. அவருக்குப் பிரியமில்லாத எந்தக் காரியத்தையாவது நாம் செய்துள்ளதாக உணர்ந்தால், நம்முடைய இருதயங்கள் உடைந்துபோய், நாம் நொறுங்கிவிடுகிறோம். தேவனுக்கு ஒரு பரிபூரண சித்தம் இருப்பதை நாம் அறிவோம், எனவே நாம் அவருடைய பரிபூரண சித்தத் திட்டத்தில் இருக்கவே விரும்புகிறோம்.
என்னுடைய ஜீவியத்தில், மணவாட்டியின் ஒவ்வொரு அங்கத்தினரும், சபை அங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் என இருவருமே செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம், இயங்கு பொத்தானை அழுத்துவது என்றே நான் கூறுவதன் மூலம் நான் ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளேன். இது மாத்திரமே நீங்கள் கேட்க வேண்டிய மற்றும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படிய வேண்டிய நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
இது ஜனங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான தனிப்பட்ட சத்தம் என்பதால், ஊழியத்தில் மீண்டும் அவர்களுடைய பிரசங்க பீடத்தில் சகோதரன் பிரான்ஹாமுக்கு இடமளித்து, அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டியதாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.
இதுவே அவருடைய திட்டமும், பரிபூரண சித்தமுமாயிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கும் இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்காக என் வாழ்க்கையில் நான் அதிகமான விமர்சனங்களைப் பெற்றுள்ளேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, எபேசியர் 4-ன் ஐந்து வகையான ஊழியத்தை நான் நம்புகிறதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இது பொய் என்பதை நான் பலமுறை, பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன். நான் அவ்வாறு ஒருபோதும் கூறினதுமில்லை, அதை எப்போதுமே அவ்வாறு நம்பினதுமில்லை. அனேகர் என்னுடைய வார்த்தைகளை திரித்து, நான் ஒருபோதும் கூறியிராத அல்லது விசுவாசிக்காத காரியங்களை ஜனங்களுக்கு சொல்லுகிறார்கள், ஆனாலும் அது எதிர்பார்க்கப்பட வேண்டியதாய் உள்ளது.
வேத வார்த்தையின் சத்தியம் என்ற ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் இந்த செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கூறினால், அப்பொழுது தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பதே தேவனுடைய வார்த்தையின் வியாக்கியானமாய் இருக்கிறபடியால், அதையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் மாத்திரமே அந்த வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார்.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் "யார் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டால், நீங்கள் ஒவ்வொருவரும், "ஆம், அதுவே என் இருதயத்தினுடைய வாஞ்சை" என்று கூறுவீர்கள். ஆகவே, தேவனுடைய பரிபூரண சித்தம் என்ன என்று தீர்க்கதரிசி கூறினதையே நாம் பார்க்க வேண்டும்.
குறிப்பு: ஒலிநாடாவில் உள்ள செய்தி உங்களுடைய முற்றிலுமானதல்லவென்றால், நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையென்றால், இந்தக் கடிதத்தைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு விசுவாசி அல்ல, எனவே இது உங்களுக்கானதல்ல. தேவன் ஒலிநாடாவில் என்ன கூறினார் என்பதோடு மாத்திரமே என்னால் தரித்திருக்க முடியும்.
அவர் என்னக் கூறினார் என்பதே நமக்கு வேண்டும்; சபை என்னக் கூறினது என்பதல்ல, வேதபண்டிதர் ஜோன்ஸ் என்னக் கூறினார், யாரோ ஒருவர் என்னக் கூறினார் என்பதல்ல. கர்த்தர் உரைக்கிறதாவது என்னக் கூறினது, வார்த்தை என்னக் கூறினது என்பதே நமக்கு வேண்டும்.
நாம் அவருடைய சித்தத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் நம்மை கீழ்படியச் செய்ய வேண்டும். நாம் அதைக் கேள்வி கேட்கக்கூடாது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதற்கு ஒரு சுற்று வழியை கண்டறிய முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
அநேகர் சுற்றிச் சென்று வேறு வழியில் செல்ல விரும்புகிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், ஆனால் நீங்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல. தேவன் உங்களை ஏதாவது செய்ய அனுமதிப்பார், அதைச் செய்வதில் உங்களை ஆசீர்வதிக்கவும் கூட செய்வார், ஆனால் அது இன்னமும் அவருடைய பரிபூரண சித்தம் அல்ல.
தேவன் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க பூமிக்கு அவருடைய செய்தியாளனான ஏழாம் தூதனை அனுப்பினார். அது மனுஷகுமாரன் தம்மை மானிட சரீரத்தில் வெளிப்படுத்துவதாக இருந்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். இது அவருடைய மணவாட்டிக்காக பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட அதே தேவனுடைய சத்தமாய் இருக்கிறது.
தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசியினிடத்தில், "நீ ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய வழியில் ஒன்றுமே நிற்காது" என்று சொன்னார். அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவராய் அவர் இருந்தார். அவருடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. எத்தனை கோராக்கள் எழும்பினாலும், அல்லது எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல, அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் அழைத்ததோ வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பவராகவே இருந்தது. அதுவே தேவனுடைய திட்டமும், அவருடைய பரிபூரண சித்தமுமாய் இருக்கிறது.
ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் ஒரு அனுமதிக்கும் சித்தத்தை உடையவராய் இருக்கிறார்.
இப்பொழுது, தேவன் நல்லவராகவே இருக்கிறார்…அவர் தன்னுடைய வார்த்தையை அனுப்புகிறார். நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அதன்பின்னர் அவர் சபையில் ஐந்து வகையான உத்தியோகங்களை வைக்கிறார்: முதலாவது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷர்கள். அவர்கள் சபையின் சீர்பொருந்துதலுக்காகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு, காலங்களினூடாக ஜனங்கள் தேவனுடைய பரிபூரண திட்டமான: அவருடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாததனால் மாத்திரமே இந்த ஊழியம் எழுப்பப்பட்டது. தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தையை நாம் எளிமையாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கோ வேறு யாரும் அல்லது வேறு எந்த காரியமும் தேவையே இல்லை.
அப்படியானால், ஒலிநாடாக்களோடு தரித்திருங்கள், ஏனென்றால் அதுவே தேவனுடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது: என்கிற அவருடைய பரிபூரண திட்டத்திற்கு ஜனங்களை திரும்ப கொண்டு வருவது ஊழியத்தின் பணியாக உள்ளது. அப்படியானால் அந்த பரிபூரண சித்த திட்டத்தை அவர்களுக்கு முன்பாக எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க: இயங்கு பொத்தானை அழுத்துங்கள்.
நீங்கள் திரும்பி வந்து, நீங்கள் எங்கு துவங்கினீர்களோ, அல்லது நீங்கள் எங்கு விட்டீர்களோ அங்கிருந்து ஆரம்பித்து, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் எற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
மேய்ப்பர்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
தேவனுடைய தீர்க்கதரிசி கூட்டங்களுக்குச் சென்றபோது அவர் என்ன செய்தார்? வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும், மற்றும் அது போன்ற காரியங்களுக்குமாகவா? அவர் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளபடியினால், ஆடுகள் அதைக் கேட்கும் விதத்தில் அவர் ஒரு மறைமுகமான விதத்தில் காரியங்களைக் கூறுவார். இல்லாவிட்டால், அது தூண்டிலின் மீது இருந்த இரையாயிருந்தது. ஜனங்களை எழுச்சியுறச் செய்ய, அவர் பகுத்தறிதல் போன்ற அடையாளங்களை அவர்களுக்குக் காண்பித்து, அவர்களுடைய இருதயங்களின் இரகசியங்களை அறிந்துகொண்டார். ஆனால் அப்பொழுதும் மிக முக்கியமான காரியம் என்னவாக இருந்தது என்று அவர் கூறினார்:
முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் அனுப்பப்படுகிறது. அப்பொழுது, அது சென்றடைந்துவிட்டது. அவன் ஒரு செம்மறியாடாயிருந்தால், அவன் அதனோடு சரிப்படுத்திக்கொள்ளுகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் அந்த ஒலி நாடாவை வெளியே உதைத்துத் தள்ளுகிறான்.
நீங்கள் ஒரு செம்மறியாடா அல்லது நீங்கள் ஒரு வெள்ளாடா? தேவனுடைய சிறிய குழு அந்த வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளது. இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருந்ததுபோல, அவருடைய மூல திட்டத்திலும் இருக்கிறோம்.
அவருடைய வார்த்தையுடன் சரியாக தரித்திருங்கள், ஏனென்றால் அதுவே முடிவில் வார்த்தையாக, வார்த்தைக்கு வார்த்தையாக வெளிப்படப்போகிறது. "யாராகிலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால், அல்லது அதனோடு ஒன்றைக் கூட்டினாலுமே!" அது அந்த வார்த்தையாகவே, தரித்திருக்க வேண்டும்.
நான் அவருடைய வார்த்தையின்படி அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறேன் என்பதை, ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம், அறிந்துகொள்வதற்கு நான் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நான் அதற்கு என்னுடைய வியாக்கியானத்தையோ, அல்லது அதற்கு என்னுடைய புரிந்துகொள்ளுதலையோ சேர்த்துக்கொண்டிருக்கவில்லை, ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவதும், அவருடைய பரிபூரண சித்தமும் என்ன என்பதையே நான் என்னுடைய சொந்த செவிகளினால் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவன் தமது வார்த்தையைக் குறித்த தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? 65-0418E என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எங்களுடன் வந்து தியானிக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். இந்தச் செய்தியில் பல நுணுக்கங்கள் உள்ளன, நாம் கேட்டு முடிக்கும்போது, நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்
அன்பான இயங்கு வல்லமையின் ஆலயமே,
எந்த மனிதனுமே, ஆபிரகாம் 11:00 மணியளவில் தன்னுடைய வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தபோது, அவனைப் போல இருக்க வேண்டும் என்றே தன்னுடைய இருதயத்தில் எப்பொழுதும் ஏங்கி வந்துள்ளான். அப்பொழுது அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது, மூன்று புருஷர் தங்களுடைய ஆடை முழுவதும் தூசியுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அவன் விரைந்து அவர்களிடம் ஓடி வந்து, “என் ஆண்டவரே” என்றான். அங்கு அவனுக்கு முன் நின்று, மனித சரீரத்தில், அந்த மகத்தான மெல்கிசேதேக்கு பேசினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த ஏக்கம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து நாம் அனைவரும் ஒன்று கூடுவோம், அதே மகத்தான மெல்கிசேதேக்கு நம்மிடத்தில் பேசுவதைக் கேட்போம். தகப்பனோ, தாயோ இல்லாத, நாட்களின் துவக்கமோ அல்லது ஜீவனின் முடிவுமில்லாத ஒரு நபர், தேவன், அந்த நாளில் அவர் ஆபிரகாமிடத்தில் எப்படி பேசினாரோ அதே விதமாக, என் மார்பி, மனித உதடுகளின் மூலம் நம்மிடம் பேசுகிறார்.
நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தினாலொழிய அந்த சத்தத்தைக் கேட்க வேறு வழியில்லை. அதே நேரத்தில் மெல்கிசேதேக்கின் சத்தம் பேசுவதைக் கேட்க மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுபட்டதான ஒரு நேரம் சரித்திரத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. தேவன் தம்முடைய மணவாட்டியை அந்தத் சத்தத்தினால் இணைத்துக்கொண்டிருக்கிறார்.
நாம் பல ஆண்டுகளாக, தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ளோம். இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையைப் பெற்று, பாருங்கள், அவருடைய வார்த்தையாக இங்கே ஜீவிக்கிறோம். எனவே இது உண்மையாகவே, கர்த்தருடைய வருகைக்கு முன்பாக சபைக்கு வாக்களிக்கப்பட்டுள்ள மகத்தான அடையாளங்களில் கடைசியான ஒன்றாக இருக்கிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை, மணவாட்டி டிசம்பரில் ஈஸ்டர் செய்தியைக் கொண்டிருக்கப் போகிறாள்; என்ன ஒரு செய்தியை நாம் கேட்கப்போகிறோம்.
இயந்திரவியல். இயக்கவியல். உயிர்ப்பிக்கும் வல்லமை. உயிர்த்தெழுந்த கிறிஸ்து. வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய புத்திரர். கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்த அதே ஆவி நமக்குள்ளும் வாசமாயிருக்கிறது. அவருக்கு இருந்த அதே ஜீவியம், அதே அதிகாரங்கள், அதே பங்குடையவர்களாய், நாம் இருக்கிறோம். அச்சார உரிமைப் பத்திரம். முதிர்ச்சியடைந்த முதல் வித்து ஜனங்கள் முன் அசைவாட்டப்படுகிறது. நாம் இப்பொழுது அவருடைய மாம்சத்தின் மாம்சமும், அவருடைய எலும்பின் எலும்பும்; அவருடைய ஜீவனின் ஜீவனாயும், அவருடைய வல்லமையின் வல்லமையாயுமிருக்கிறோமே! நாம் அவராய் இருக்கிறோம்!
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து; மெல்கிசேதேக்கு தாமே, சத்தமிட்டு நம்மிடம், “நான் உங்களை என்னண்டை இழுத்து, நான் ஆபிரகாமிடத்தில் பேசினது போலவே உங்களிடத்திலும் பேசும்படியாக, நான் என்னுடைய சத்தத்தை ஒலிப்பதிவு செய்து காந்த ஒலிநாடாவில் வைத்தேன். நீங்கள் என்னிடமிருந்து நேரடியாகக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சொல்கிறார்.
நீங்கள் என்னுடைய முன்குறிக்கப்பட்ட, முன் நியமிக்கப்பட்ட சபையாயிருக்கிறீர்களே! உங்களுடைய சரீரங்கள் இயக்கவியலின் ஆலயமாக இருக்கின்றன, ஏனென்றால் ஆரம்பத்திலிருந்தே நீங்கள் இயந்திரவியலின் ஒரு பகுதியாக இருந்தீர்கள்.
அதுவே மாம்சமாகிய வார்த்தையின் தெய்வீக வெளிப்பாடு. அந்த நாளில் மணவாளனாகிய, குமாரனின் மூலமாக அது மாம்சமாக இருந்ததினால், அது இன்றைக்கு மணவாட்டி மூலம் மாம்சமாக இருக்கிறது. புரிகிறதா?
அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் ஜீவித்து கொண்டிருக்கிறது. நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவரில் இருந்த அதே ஆவி, இப்பொழுது நமக்குள் இருக்கிறது, அது நம்முடைய சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. நாம் அவ்வாறு யூகிக்கவில்லை, நாம் உறுதியாகவே அறிந்திருக்கிறோம். நாம் அதை ஏற்கனவே அடைந்துவிட்டோம், அவர் அதை நமக்காகவே ஆயத்தம்பண்ணினார்.
அதன்பின்னர், மதியம் முடிந்துவிட, மெல்கிசேதேக்கு மீண்டும் ஒருமுறை பேசிக் கூறுவார்;
இராஜ்யத்தின் சக பிரஜைகளும், உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்ட இந்த ஜனங்களை, கர்த்தாவே, இப்பொழுதே, அவர்களுக்கு அதை உயிர்ப்பியும். ஆவியானவர் கழுகிலிருந்து கழுகிற்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, ஒவ்வொரு சரீரத்திலும் இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் வெளிப்படுத்தப்படும் வரை,நாங்கள் எங்களுடைய கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வைக்கையில், சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியப்பிரகாரமான, அல்லது அவர்களுக்குத் தேவைப்படுகிற எந்த தேவைக்காகவும், செல்வாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.
கழுகிலிருந்து கழுகிற்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, நம்முடைய ஒவ்வொரு சரீரங்களிலும் இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் வெளிப்படுத்தப்படும். மகிமை!!
இதுவோ இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் மாத்திரமே சம்பவிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இது சூரிய உதயம் 65-0418M என்ற செய்தியை எங்களுக்கு கொண்டுவருகிற அந்த சத்தத்தை நாங்கள் கேட்கப்போகிறபடியால், சேமிக்கப்பட்ட ஆகாரத்தின் பேரில் ருசித்துப் புசிக்கிற ஒரு குதூகலத்தில் பங்கேற்க எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
p>
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
லேவியராகமம் 23:9-11
மத்தேயு 27:51 / 28:18
மாற்கு 16:1-2
பரி. லூக்கா 17:30 / 24:49
பரி. யோவான் 5:24 / 14:12
அப்போஸ்தலர் 10:49 / 19:2
ரோமர் 8:11
முதலாம் தெசலோனிக்கேயர் 4:16
எபிரெயர் 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18
தொடர்புடைய சேவைகள்
அன்பான தேவனுடைய சிந்தையே,
இந்த ஞாயிற்றுக்கிழமைக்காக நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வீடுகளிலும் சபைகளிலும் வழிநெடுகிலும் அவர் நம்முடன் பேசுகிறபோது நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே எப்படி கொழுந்துவிட்டு எரியப் போவதாயிருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவோம்...சற்று காத்திருங்கள்!
இந்த கடந்த மாதத்தில், நாம் சரியான கப்பலில் ஏறுவதை உறுதிசெய்யுமாறு அவர் நம்மிடம் கூறியிருக்கிறார்…நாம் அதில் உறுதியாய் இருக்கிறோம். தேவனுடைய உண்மையான வித்து பதரோடு சுதந்திரவாளியாக இருக்காது என்று அவர் நம்மிடத்தில் கூறினார்…அதன்பின்னர், நாமே அந்த வித்தாயிருக்கிறோம் என்று அவர் கூறினார். அதன்பின்னர் நாம் நம்முடைய செவிகளில், இன்றைய தினம், இந்த வேதவாக்கியம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று என்று, தேவன் ஒரு மனிதனின் மூலமாக நம்மிடத்தில் பேசி வலியுறுத்திக் கூறினதை நாம் கேட்டோம்.
அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாம் தேவனால் அருளப்பட்ட ஆராதனை ஸ்தலத்தில் இருக்கிறோம் என்று அவர் நம்மிடத்தில் கூறினார், ஏனென்றால் நாம் அந்த இடத்தில் இருக்கிறோம், நாம் அவருடைய வார்த்தையோடு விபச்சாரம் செய்திருக்கவில்லை. இதனால், நாம் அவருடைய சுத்தமான கன்னிகை வார்த்தையான மணவாட்டியாய் இருக்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் ஒருமுறை நம் அனைவரையும் ஒன்றிணைத்து, தம்முடைய மகத்தான தூதனான தீர்க்கதரிசி மூலம் நம்மிடத்தில் பேசி, நானே இந்த மெல்கிசேதேக்கு என்றும், நான் என்னுடைய வார்த்தையில் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளது போலவே, நான் மானிட சரீரத்தில் என்னையே உங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறவிருக்கிறார்.
மகிமை! நீங்கள் உற்சாகமடைந்துள்ளீர்களா? நீங்கள் விவரிக்க முடியாத வார்த்தைகளுக்கு அப்பால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்களா? பாருங்கள், இன்னும் அதிகமாகக் கூட வரவிருக்கிறது. அவர் இந்த மகத்தான காட்சியை முடிக்கப் போகிறார்.
அது குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் ஆதியிலிருந்தே தேவனுடைய சிந்தையில் இருந்தோம். இயேசு பூமிக்கு வருவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீங்கள் பூமிக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இயேசு, தேவனுடைய சிந்தையில், நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். அப்பொழுதே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
அது உங்களுடைய சிந்தையில் பதிந்துகொண்டிருக்கிறதா? நம்முடைய பெயர்கள் தேவனால் நியமிக்கப்பட்டு உலகத் தோற்றத்திற்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. அவர் நம்முடைய கண்களை, நம்முடைய பூரண வளர்ச்சியை, நாம் என்னவாகவெல்லாம் இருக்கிறோம் என்பதை அறிந்திருந்தார். நாம் ஆதியிலேயே அவருடைய சிந்தையில்…தேவனுடைய சிந்தையில் இருந்தோமே! அப்படியானால், நாம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையான ஒரே காரியமாய் இருக்கிறோம். அவர் அதை சிந்தையில் கொண்டிருந்த பிறகே, அவர் அதை உரைத்தார், இங்கே நாம் இருக்கிறோம்.
இதுவோ புரிந்துகொள்ள கடினமாயுள்ளது. தேவன் எல்லா காரியங்களையும் நம்மிடத்தில் சொல்லுகிறார். அவர் நம்மை அவ்வளவாய் நேசித்து, நாம் அதை நேரடியாக அவரிடத்திலிருந்தே கேட்டு உறுதி செய்துகொள்ளும்படி விரும்பி, இவ்விதமாக அவர் அதை டிசம்பர் 4, 2022, ஞாயிற்றுக்கிழமைக்காக பதிவு செய்திருந்தபடியால், அவரால் மீண்டும் ஒருமுறை தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து நம்மிடத்தில்: “நான் இவை யாவற்றையும் உங்களுக்காக செய்தேன். நீங்கள் இதை நேரடியாக என்னிடத்திலிருந்து கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் என்னுடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். நான் வெகுசீக்கிரத்தில் உங்களுக்காக வருகிறேன்" என்று சொல்ல முடியும்.
அதனால்தான் நாம் தேவனின் பிரசன்னத்திற்குள்ளாக சஞ்சரிக்கும்போது, நமக்குள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று நாம் எங்கிருந்தோ வந்திருக்கிறோம் என்றும், நம்மை இழுத்துக்கொண்டிருக்கிற அந்த வல்லமையினால் நாம் மீண்டும் அங்கே திரும்பி சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
தேவன் அந்த முழு காரியத்தின் திரையையும் நீக்கிவிட்டபடியால், நம்மால் அதைக் காண முடிகிறது. தேவன், என் மார்பி, அக்கினி ஸ்ம்பத்தில், தேவன், என் மார்பி, இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனில், என் மார்பி, தம்முடைய சபையில் திரையிடப்பட்டிருந்தார். தேவன் நமக்கு மேலே இருந்தார், தேவன் நம்மோடு இருந்தார், தேவன் நமக்குள்ளாக இருக்கிறார்; தேவன் கீழ்நோக்கி இறங்குதல்.
நாம் பயப்பட முற்றிலும் ஒன்றுமேயில்லை. மரணத்தைப் பற்றிக் கூட, கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் இங்கிருந்து பிரிந்து செல்லும்போது, நாம் மரிப்பதும் கூட இல்லை. இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், நமக்காக ஏற்கனவே ஒன்று காத்திருக்கிறது, என் மார்பே.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி அவர் எங்களுடன் பேசுவதையும், இவை அனைத்தையும் வெளிப்படுத்துவதையும் கேட்க நான் மிகுந்த ஆவலாயிருக்கிறேன். அவர் யாராய் இருக்கிறார் என்பதையும், நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும், ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் உதட்டிலிருந்து செவிக்கு உங்களிடத்தில் சொல்வதை உங்களால் கேட்க முடிந்த அந்த ஒரே இடத்திற்கு எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
யார் இந்த மெல்கிசேதேக்கு? 65-0221E
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
ஆதியாகமம் 18வது அதிகாரம்
யாத்திராகமம் 33:12-23
பரி. யோவான் 1:1
ரோமர் 8:1
2 கொரிந்தியர் 5:1
2 தெசலோனிக்கேயர் 4:13-18
முதலாம் தீமோத்தேயு 3:16 / 6:15
எபிரேயர் 7:1-3 /13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7 / 21:16
தொடர்புடைய சேவைகள்
அன்பான தீர்க்கதரிசியினுடைய மந்தையே,
நினைவிருக்கட்டும், நான் இதை என்னுடைய குழுவிற்கு மாத்திரமே கூறுகிறேன். தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, நான் என்னை பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் இங்கு என்ன கூறப்போகிறேனென்றால், இந்த செய்தி அவர்களுக்கு மாத்திரமே.
எந்த ஊழியக்காரரும், அவர், அதாவது அவருடைய, ஆம், அவர் மந்தையின் மேய்ப்பன், அவர் விரும்புகிற எதை வேண்டுமானாலும் அவர் செய்யட்டும். அது அவருக்கும் தேவனுக்கும் இடையே உள்ளது. எந்த குருவானவரும், எந்த பிரசங்கியாரும், என் சகோதரனே, அது உங்களைப் பொறுத்தது.
நான் இங்கே ஜெபர்சன்வில்லில் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறேன், இந்த இடத்தில் மாத்திரமே நான் பேசுவேன், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மந்தையாய் இருக்கிறது. இதுவே பரிசுத்த ஆவியானவர் கண்காணியாய் இருக்கும்படி எனக்கு கொடுத்திருக்கிறதை புரிந்து கொள்ளும்படியான மந்தையாக இருக்கிறது, அவர் அதற்காக என்னை பொறுப்பாளியாக்குவார். நான் மனமாற்றமடைந்திருக்கிற என்னுடைய இந்த ஜனங்களை தேசம் முழுவதிலுமிருந்து, நான் கிறிஸ்துவினிடம் வழி நடத்தியிருக்கிறேன்.
ஒரு நன்றி செலுத்தும் வார இறுதிக்கு என்ன ஒரு தலைக்கல். அவர் இன்னும் உங்கள் ஒவ்வொருவருடனும் கண்காணித்துக்கொண்டிருக்கும் அந்த சிறிய மந்தையின் பாகமாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் செல்லக் கூடிய வேறெந்த இடமும் இல்லை.
பிதாவானவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த ஒரு மகத்தான பறக்கும் கழுகினை நமக்கு அனுப்பியிருக்கிறார். அவருடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டிருக்கிற வார்த்தைகளை பேசி, ஜனங்களை ஊக்கமூட்டுகிற அநேக சத்தங்கள் இருக்கின்றன, ஆனால் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தவும், ஒருங்கிணைக்கவும் அனுப்பப்பட்டதோ ஒரே ஒரு சத்தமாக மாத்திரமே உள்ளது.
ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகளே நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளன. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் என்று கூறுகிறபடியால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளோம், ஆனால் அதை சரியாக செய்யும்படிக்கு தேவனுடைய தீர்க்கதரிசியால் நாம் கட்டளையிடப்பட்டோம்.
எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்டவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களை அதில் சேர்க்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்யுங்கள்; இதனோடு கூட்டாதீர்கள்!
உலகமே விழித்துக்கொள். காலம் சமீபத்துவிட்டது. தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தைகள், ஒலிநாடாக்களில் அவர் கூறியுள்ளதையே சரியாக, விசுவாசிக்கும்படி, கூறும்படிக்கு, செய்யும்படிக்கு; தேவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். நான் கூறுவதை அல்ல, உங்களுடைய குருவானவர் அல்லது பிரசங்கியார் என்ன கூறுகிறார் என்பதை அல்ல, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறினதையே.
ஒலிநாடாவில் உள்ள அந்த சத்தத்தைக் கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறொன்றுமில்லை, வேறுொன்றுமே யில்லை. ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ளதைக் கொண்டே நாம் நியாயத்தீர்க்கப்பட போகிறோம். நான் என்ன கூறினேன் என்பதைக் கொண்டல்ல, ஆனால் அவர் என்ன கூறினார் என்பதைக் கொண்டேயாகும்.
நான் உங்களுக்கான மிகச் சிறந்ததையே அளிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும் என்று கூறுகிற எந்த போதகரையும் போலவே, என்னுடைய சில வார்த்தைகள் உங்களுக்கு ஊக்கமூட்டுதலாக இருக்கின்றன. ஒலிநாடாவில் நீங்கள் கேட்கிற எந்த காரியத்தையும் சந்தேகிக்கும்படிக்கும், ஒலிநாடாக்களில் தவறுகள் இருக்கின்றன என்றும், நீங்கள் தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்கும் அளவிற்கு எனக்கும் செவிகொடுக்க வேண்டும் என்றும்: நான் உங்களுக்குப் போதிக்கவில்லை. இயங்கு பொத்தானை அழுத்தி, மூல வார்த்தையோடு தரித்திருக்கும்படி நான் உங்களை ஊக்கப்படுத்தவே சில வார்த்தைகளை உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் தூய்மையான, மாசற்ற வார்த்தை மணவாட்டியாக இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
இந்த நாளிலே ஒவ்வொரு ஜீவனுள்ள சிருஷ்டியும் அவருடைய சத்தத்தை கேட்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தைகளை பதிவு செய்திருந்தார். பவுலின் நாட்களில், அவர் என்ன பிரசங்கித்துக்கொண்டிருந்தார் என்பதை எழுதுவதற்கு அவர்களுக்கு வேதபாரகர்கள் இருந்தனர், அதுவே வேதாகமமாக உள்ளது. ஆனால் இன்றைக்கோ, அது இன்னும் மகத்தானதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இயங்கு பொத்தானை அழுத்தி, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம்மிடம், உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை, நம்முடைய சொந்த செவிகளினால் கேட்க முடியும்.
நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் உலகம் உண்மையில் வீழ்ச்சியடைந்து வருவதால், நாம் சென்று இளைப்பாறும்படியாக நமக்கு ஓர் இடம் அருளப்பட்டுள்ளது. நாம் அதை ஒலிநாடாவில் பெறுகிறோம். நம்முடைய சௌகரியமான அறைகளில் அமர்ந்து பண்டக சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சேமிக்கப்பட்ட ஆகாரத்தை விருந்துண்டு மகிழ்கிறோம். நம்முடைய தீர்க்கதரிசி மிக நீண்ட தொலைவில் இருக்கலாம், ஆனால் இந்தக் காரியங்கள் உண்மையென்றும், நம்மை செய்யும்படி தேவன் கட்டளையிட்டிருக்கிறதை செய்யும்படிக்கும், ஒலிநாடாக்களோடு தரித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொண்டுள்ளோம்.
விவாகமும் விவாகரத்தும் 65-0221M என்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் பேசவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நீங்கள் எப்போதும் புசித்ததிலேயே மிகச் சிறந்த நன்றி செலுத்தும் விருந்தினை உண்டு மகிழ வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
p>
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 5: 31-32 / 16: 18 / 19: 1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திருமதி. இயேசு கிறிஸ்துவே,
நம்முடைய பெயர்கள் அழைக்கப்படுவதை கேட்க நாம் எவ்வளவு விரும்புகிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர் யாருக்கு வரப்போகிறாரோ அவர்களாகவே நாம் இருக்கிறோம். வாக்குத்தத்தமபண்ணப்பட்ட ராஜரீக குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி. அவருடைய மேம்பட்ட ராஜரீக ஆபிரகாமின் வித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாயும் விசுவாசமுள்ளதாகவும் இருந்து வருகிறது.
நாம் வேறு எந்த வார்த்தையுடனும் விபச்சாரம் செய்திருக்கவில்லை, அல்லது சரசமாடவும் கூட இல்லை; நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையோடும் தரித்திருக்கிறோம்.
இன்றைக்கு உலகில் பல அருமையான கிறிஸ்தவ பெண்கள், விசுவாசமுள்ள பெண்கள் உள்ளனர்; ஆனால் திருமதி இயேசு கிறிஸ்துவாக ஒருவள் மட்டுமே இருக்கிறாள். அவருடன் பரமவீட்டிற்குப் போகிறவர்கள் நாம்தான். நாமே அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மனைவியாய் இருக்கிறோம்.
அவர் முன்பு வந்தவிதமாகவே, மீண்டும் ஒருமுறை வருவார் என்று அவருடைய வார்த்தையில் சொன்னார். அவர் நின்று, மானிட சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தி, வார்த்தையை வாசித்து, "இந்த வேதவாக்கியம் உங்களுடைய பார்வையில் இன்றைய தினம் நிறைவேறிற்று," என்று நம்மிடத்தில் கூற, நாம் அவரை அடையாளங்கண்டுகொண்டு, அவருடைய மணவாட்டியாக திருமதி. இயேசு கிறிஸ்துவானோம்.
மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், மேற்கு அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ர-னா-க நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, தம்மை தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அடையாளம் காண்பித்திருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.
நான் எந்தக் காரியத்தை குறித்தாவது ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட சரியான பதிலாக ஏதாவது இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உண்மையான, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, நம்முடைய ஜீவியங்களில் எழுகின்ற ஒவ்வொரு கேள்விக்கும், உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நம்முடைய நாளில் ஜனங்களுக்கு மத்தியில் பல கேள்விகளும், கருத்து மாறுபாடுகளும் உள்ளன.
- தேவனுடைய தீர்க்கதரிசியின் ஒலிநாடாக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?
- ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?
- நம்முடைய முற்றிலுமானது எது? அவர் ஒலிநாடாவில் கூறினதா, அல்லது எது வார்த்தை, எது வார்த்தையல்ல என்று பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் தீர்மானிக்கும்படி வழிநடத்துகிறதா?
- நமக்கு ஒரு மனிதனோ, அல்லது மனிதக் குழுவோ, அதை நமக்காக விளக்கிக் கூற இருக்க வேண்டுமா?
- அவர் எலியா தீர்க்கதரிசியை அனுப்பிய பிறகு, அதை உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டிய ஒரு கூட்ட மனிதரை அவர் அனுப்புவார் என்று வார்த்தை கூறுகிறதா?
- வார்த்தையை வியாக்கியானிக்க அல்லது அதை நமக்காக விளக்கிக் கூற யாராவது நமக்கு தேவைப்படுகிறதா?
- நாம் நம்முடைய வீடுகளில், கார்களில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரம் ஒலிநாடாக்களை கேட்டுவிட்டு, நாம் சபைக்கு செல்லும்போது போதகரின் பிரசங்கத்திற்கே செவிகொடுக்க வேண்டுமா?
- நம்முடைய சபைகளில் ஒலிநாடாக்களை நாம் இயக்க வேண்டுமா?
- இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமா அல்லது இல்லையா?
இப்பொழுது, இது ஒரு வேதாகம கேள்வியாயிருந்தால், அப்பொழுது அது ஒரு வேதாகம பதிலை உடையதாய் இருக்க வேண்டும். அது ஒரு கூட்ட மனித குழுவிலிருந்தோ, எந்த குறிப்பிட்ட ஐக்கியத்தில் இருந்தோ அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ, அல்லது சில ஸ்தாபனத்தில் இருந்தோ வரக்கூடாது. அது வேதத்திலிருந்தே நேரடியாக வரவேண்டும்...
எனவே நாம் நம்முடைய கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறிய வேண்டுமானால், நாம் வேதவாக்கியங்களிடத்திற்கே செல்ல வேண்டும். அடுத்து, வேத வாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானி யார் என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனக்காக தீர்மானிக்கிறானா?
ஒரு தீர்க்கதரிசி என்பது வார்த்தையைப் பேசுவதற்கு மாத்திரமே என்று பொருள்படாமல், முன்கூட்டியே அறிவிப்பவராயும், எழுதப்பட்ட தெய்வீக வார்த்தையின், வார்த்தையின் ஒரு தெய்வீக வியாக்கியானியாயும் கூட இருக்கிறார்.
ஆகவே, தீர்க்கதரிசி வேதவாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானியாய் இருந்தால், அப்பொழுது அந்த தீர்க்கதரிசி கூறினதே தம்முடைய மணவாட்டிக்கு ஏற்கனவே வியாக்கியானிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, அவ்வளவுதான்.
இது ஊழியத்திலிருந்தோ, அல்லது தேவன் அவர்களை அழைத்திருக்கிற ஸ்தானத்திலிருந்தோ எடுத்துப் போடுகிறதில்லை. தங்களுடைய மந்தைக்கு முன்பாக தேவனுடைய தீர்க்க தரிசியினால் உரைக்கப்பட்ட அந்த வார்த்தையை கடைபிடிக்கும்படிக்கு அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜனங்களுக்கு அந்த செய்தியாளனையும், அந்த மணி நேரத்தின் செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறின வார்த்தைகளால் நிதானித்தறியப்பட வேண்டும். அவர்கள் ஒரு வார்த்தையும் மாற்றக் கூடாது, அல்லது அவர்கள் சொந்தமாக வியாக்கியானிக்கவும் கூட கூடாது. தேவனுடைய வேதவாக்கியங்கள் அவருடைய தீர்க்கதரிசியால் மாத்திரமே வியாக்கியானிக்கப்படுகின்றன.
இப்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரும், நிச்சயமாகவே, உங்களால் அவர்களுடைய கருத்தினைப் புரிந்துகொள்ள முடியும், நான் அவர்களைக் குறை கூற முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் அவை சத்தியம் என்றும், அவர்கள் சத்தியத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் உரிமை கோருகிறார்கள். அந்த சபைகளைச் சேர்ந்த ஜனங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய-தங்களுடைய இலக்கை, தங்களுடைய நித்திய இலக்கை, அந்த சபையின் போதனையின் மீது குறியிலக்காக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கேள்விகளை உண்டாக்குமளவிற்கு, ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாய் இருக்கிறார்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லையென்றால், யாரோ ஒரு மனிதனோ அல்லது மனிதர்களோ கூறுகிற வார்த்தையே உங்களுடைய முற்றிலுமானதாய் இருந்தால், அப்பொழுது உங்களுடைய நித்திய இலக்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் பேரிலேயே நிலைத்திருக்கிறது.
என்னுடைய வார்த்தைகள் எவருக்கும், எல்லா ஊழியங்களுக்குமே முற்றிலும் எதிராக இருப்பதாக தென்படுகிறது. நான் எதிராக இல்லை. தேவன் உண்மையான மனிதர்களை தம்முடைய சபையில், தம்முடைய மந்தைகளின் மீது வைத்து, அவர்களுக்கு முன்பாக இந்த செய்தியை காத்துக்கொள்ளும்படி செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கித்து விசுவாசிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஏன் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய பிரசங்க பீடங்களில் வைத்து கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தத்தைக் கேட்க வைப்பதில்லை? அவர்கள் ஏன் தங்களுடைய ஊழியத்தை அந்தக் சத்தத்திற்கு, சமமாகவும் முக்கியமானதாகவும் வைக்கிறார்கள்?
மல்கியா 3-ல், "வழியை ஆயத்தப்படுத்த என் முகத்திற்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புவேன்" என்று கூறப்பட்டிருந்தது. வழியை ஆயத்தப்படுத்த அனுப்பப்பட்ட அந்த ஒருவனே அவரை, அந்த ஸ்தலத்தை அடையாளம் காட்டினான். "அது அவரே! எந்த தவறும் இல்லை. அது அவரே! அவரைப் பின்தொடருகிற அடையாளத்தை நான் காண்கிறேன். அது அவர் என்று எனக்குத் தெரியும்; ஒரு ஒளி வானத்திலிருந்து இறங்கி அவர்மீது செல்கிறது." அது அவர்தான் என்பதற்கு, அது உறுதியாய் இருந்தது.
ஆகையால், என் சகோதரனே, முடிவிலே, நான் உங்களிடத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நாம் இதை இப்படிக் கூறலாம். மல்கியா 4-ல் அவர், "நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று எபிரெயர் 13:8-ல் உள்ளதை தவறிழைக்கும் சபைக்குக் காண்பிக்கும்படியாகவும், ஒரு அக்கினி ஸ்தம்பம் பின்தொடரும்படியான, மற்றொரு கழுகானது நமக்கும் கூட வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா"? இன்னொருவர் வனாந்தரத்திலிருந்து பறந்து வருவார் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா?
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? அந்த அக்கினி ஸ்தம்பத்தையே. யார் அந்த அக்கினி ஸ்தம்பம்? அந்தக் கழுகு, மல்கியா 4. அவர் யாராயிருந்தார் என்பதை ரூபகாரப்படுத்தும்படியாக தன்னுடைய தலைக்கு மேல் அக்கினி ஸ்தம்பத்தை உடையவராயிருந்தது யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
ஒவ்வொரு முறையும் நாம் கூடும்போது, நாம் அந்த சத்தத்தை ஜனங்களுக்கு முன்பாக வைக்க வேண்டும். நாம் தேவனுடைய சத்தத்தையே முதலில் வைக்க வேண்டும், அந்த மனிதனை ஆராதிக்காமல், அந்த மனிதனுக்குள் இருக்கிற தேவனையே ஆராதிக்க வேண்டும்.
அந்த மனிதனே தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தத் தெரிந்துகொண்ட மனிதனாய் இருக்கிறார். தேவன், "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்," வேறு யாரோ ஒருவரை அல்ல அல்லது வேறு யாரோ ஒருவர் கூறுகிறதையும் அல்ல, வில்லியம் மரியம் பிரான்ஹாமாகிய, உன்னையே என்று கூறின ஒருவராய் இருக்கிறார். அந்த மனிதனே இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தும் ஒருவராய் இருக்கிறார்.
நான் கூறுகிற எந்த காரியத்திற்கும் மாறாக எதையாவது எந்த மனிதனோ அல்லது ஸ்திரீயோ கூட்டிக் கூறினால், அதை நான் கூறுகிறதாக நம்பவேண்டாம்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட வாயானது எங்களிடத்தில் பேசி 65-0220 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் என்ன என்பதை சொல்ல நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, திருமதி இயேசு கிறிஸ்துவாக மாற எங்களுடன் வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
உபாகமம் 16:1-3
யாத்திராகமம் 12:3-6
மல்கியா 3-வது & 4-வது அதிகாரங்கள்
லூக்கா 17:30
ரோமர் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:7