அன்புள்ள திருமதி. இயேசு கிறிஸ்துவே,
நம்முடைய பெயர்கள் அழைக்கப்படுவதை கேட்க நாம் எவ்வளவு விரும்புகிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர் யாருக்கு வரப்போகிறாரோ அவர்களாகவே நாம் இருக்கிறோம். வாக்குத்தத்தமபண்ணப்பட்ட ராஜரீக குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி. அவருடைய மேம்பட்ட ராஜரீக ஆபிரகாமின் வித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாயும் விசுவாசமுள்ளதாகவும் இருந்து வருகிறது.
நாம் வேறு எந்த வார்த்தையுடனும் விபச்சாரம் செய்திருக்கவில்லை, அல்லது சரசமாடவும் கூட இல்லை; நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையோடும் தரித்திருக்கிறோம்.
இன்றைக்கு உலகில் பல அருமையான கிறிஸ்தவ பெண்கள், விசுவாசமுள்ள பெண்கள் உள்ளனர்; ஆனால் திருமதி இயேசு கிறிஸ்துவாக ஒருவள் மட்டுமே இருக்கிறாள். அவருடன் பரமவீட்டிற்குப் போகிறவர்கள் நாம்தான். நாமே அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மனைவியாய் இருக்கிறோம்.
அவர் முன்பு வந்தவிதமாகவே, மீண்டும் ஒருமுறை வருவார் என்று அவருடைய வார்த்தையில் சொன்னார். அவர் நின்று, மானிட சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தி, வார்த்தையை வாசித்து, "இந்த வேதவாக்கியம் உங்களுடைய பார்வையில் இன்றைய தினம் நிறைவேறிற்று," என்று நம்மிடத்தில் கூற, நாம் அவரை அடையாளங்கண்டுகொண்டு, அவருடைய மணவாட்டியாக திருமதி. இயேசு கிறிஸ்துவானோம்.
மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், மேற்கு அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ர-னா-க நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, தம்மை தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அடையாளம் காண்பித்திருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.
நான் எந்தக் காரியத்தை குறித்தாவது ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட சரியான பதிலாக ஏதாவது இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உண்மையான, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, நம்முடைய ஜீவியங்களில் எழுகின்ற ஒவ்வொரு கேள்விக்கும், உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நம்முடைய நாளில் ஜனங்களுக்கு மத்தியில் பல கேள்விகளும், கருத்து மாறுபாடுகளும் உள்ளன.
- தேவனுடைய தீர்க்கதரிசியின் ஒலிநாடாக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?
- ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?
- நம்முடைய முற்றிலுமானது எது? அவர் ஒலிநாடாவில் கூறினதா, அல்லது எது வார்த்தை, எது வார்த்தையல்ல என்று பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் தீர்மானிக்கும்படி வழிநடத்துகிறதா?
- நமக்கு ஒரு மனிதனோ, அல்லது மனிதக் குழுவோ, அதை நமக்காக விளக்கிக் கூற இருக்க வேண்டுமா?
- அவர் எலியா தீர்க்கதரிசியை அனுப்பிய பிறகு, அதை உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டிய ஒரு கூட்ட மனிதரை அவர் அனுப்புவார் என்று வார்த்தை கூறுகிறதா?
- வார்த்தையை வியாக்கியானிக்க அல்லது அதை நமக்காக விளக்கிக் கூற யாராவது நமக்கு தேவைப்படுகிறதா?
- நாம் நம்முடைய வீடுகளில், கார்களில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரம் ஒலிநாடாக்களை கேட்டுவிட்டு, நாம் சபைக்கு செல்லும்போது போதகரின் பிரசங்கத்திற்கே செவிகொடுக்க வேண்டுமா?
- நம்முடைய சபைகளில் ஒலிநாடாக்களை நாம் இயக்க வேண்டுமா?
- இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமா அல்லது இல்லையா?
இப்பொழுது, இது ஒரு வேதாகம கேள்வியாயிருந்தால், அப்பொழுது அது ஒரு வேதாகம பதிலை உடையதாய் இருக்க வேண்டும். அது ஒரு கூட்ட மனித குழுவிலிருந்தோ, எந்த குறிப்பிட்ட ஐக்கியத்தில் இருந்தோ அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ, அல்லது சில ஸ்தாபனத்தில் இருந்தோ வரக்கூடாது. அது வேதத்திலிருந்தே நேரடியாக வரவேண்டும்...
எனவே நாம் நம்முடைய கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறிய வேண்டுமானால், நாம் வேதவாக்கியங்களிடத்திற்கே செல்ல வேண்டும். அடுத்து, வேத வாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானி யார் என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனக்காக தீர்மானிக்கிறானா?
ஒரு தீர்க்கதரிசி என்பது வார்த்தையைப் பேசுவதற்கு மாத்திரமே என்று பொருள்படாமல், முன்கூட்டியே அறிவிப்பவராயும், எழுதப்பட்ட தெய்வீக வார்த்தையின், வார்த்தையின் ஒரு தெய்வீக வியாக்கியானியாயும் கூட இருக்கிறார்.
ஆகவே, தீர்க்கதரிசி வேதவாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானியாய் இருந்தால், அப்பொழுது அந்த தீர்க்கதரிசி கூறினதே தம்முடைய மணவாட்டிக்கு ஏற்கனவே வியாக்கியானிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, அவ்வளவுதான்.
இது ஊழியத்திலிருந்தோ, அல்லது தேவன் அவர்களை அழைத்திருக்கிற ஸ்தானத்திலிருந்தோ எடுத்துப் போடுகிறதில்லை. தங்களுடைய மந்தைக்கு முன்பாக தேவனுடைய தீர்க்க தரிசியினால் உரைக்கப்பட்ட அந்த வார்த்தையை கடைபிடிக்கும்படிக்கு அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜனங்களுக்கு அந்த செய்தியாளனையும், அந்த மணி நேரத்தின் செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறின வார்த்தைகளால் நிதானித்தறியப்பட வேண்டும். அவர்கள் ஒரு வார்த்தையும் மாற்றக் கூடாது, அல்லது அவர்கள் சொந்தமாக வியாக்கியானிக்கவும் கூட கூடாது. தேவனுடைய வேதவாக்கியங்கள் அவருடைய தீர்க்கதரிசியால் மாத்திரமே வியாக்கியானிக்கப்படுகின்றன.
இப்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரும், நிச்சயமாகவே, உங்களால் அவர்களுடைய கருத்தினைப் புரிந்துகொள்ள முடியும், நான் அவர்களைக் குறை கூற முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் அவை சத்தியம் என்றும், அவர்கள் சத்தியத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் உரிமை கோருகிறார்கள். அந்த சபைகளைச் சேர்ந்த ஜனங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய-தங்களுடைய இலக்கை, தங்களுடைய நித்திய இலக்கை, அந்த சபையின் போதனையின் மீது குறியிலக்காக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கேள்விகளை உண்டாக்குமளவிற்கு, ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாய் இருக்கிறார்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லையென்றால், யாரோ ஒரு மனிதனோ அல்லது மனிதர்களோ கூறுகிற வார்த்தையே உங்களுடைய முற்றிலுமானதாய் இருந்தால், அப்பொழுது உங்களுடைய நித்திய இலக்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் பேரிலேயே நிலைத்திருக்கிறது.
என்னுடைய வார்த்தைகள் எவருக்கும், எல்லா ஊழியங்களுக்குமே முற்றிலும் எதிராக இருப்பதாக தென்படுகிறது. நான் எதிராக இல்லை. தேவன் உண்மையான மனிதர்களை தம்முடைய சபையில், தம்முடைய மந்தைகளின் மீது வைத்து, அவர்களுக்கு முன்பாக இந்த செய்தியை காத்துக்கொள்ளும்படி செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கித்து விசுவாசிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஏன் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய பிரசங்க பீடங்களில் வைத்து கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தத்தைக் கேட்க வைப்பதில்லை? அவர்கள் ஏன் தங்களுடைய ஊழியத்தை அந்தக் சத்தத்திற்கு, சமமாகவும் முக்கியமானதாகவும் வைக்கிறார்கள்?
மல்கியா 3-ல், "வழியை ஆயத்தப்படுத்த என் முகத்திற்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புவேன்" என்று கூறப்பட்டிருந்தது. வழியை ஆயத்தப்படுத்த அனுப்பப்பட்ட அந்த ஒருவனே அவரை, அந்த ஸ்தலத்தை அடையாளம் காட்டினான். "அது அவரே! எந்த தவறும் இல்லை. அது அவரே! அவரைப் பின்தொடருகிற அடையாளத்தை நான் காண்கிறேன். அது அவர் என்று எனக்குத் தெரியும்; ஒரு ஒளி வானத்திலிருந்து இறங்கி அவர்மீது செல்கிறது." அது அவர்தான் என்பதற்கு, அது உறுதியாய் இருந்தது.
ஆகையால், என் சகோதரனே, முடிவிலே, நான் உங்களிடத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நாம் இதை இப்படிக் கூறலாம். மல்கியா 4-ல் அவர், "நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று எபிரெயர் 13:8-ல் உள்ளதை தவறிழைக்கும் சபைக்குக் காண்பிக்கும்படியாகவும், ஒரு அக்கினி ஸ்தம்பம் பின்தொடரும்படியான, மற்றொரு கழுகானது நமக்கும் கூட வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா"? இன்னொருவர் வனாந்தரத்திலிருந்து பறந்து வருவார் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா?
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? அந்த அக்கினி ஸ்தம்பத்தையே. யார் அந்த அக்கினி ஸ்தம்பம்? அந்தக் கழுகு, மல்கியா 4. அவர் யாராயிருந்தார் என்பதை ரூபகாரப்படுத்தும்படியாக தன்னுடைய தலைக்கு மேல் அக்கினி ஸ்தம்பத்தை உடையவராயிருந்தது யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
ஒவ்வொரு முறையும் நாம் கூடும்போது, நாம் அந்த சத்தத்தை ஜனங்களுக்கு முன்பாக வைக்க வேண்டும். நாம் தேவனுடைய சத்தத்தையே முதலில் வைக்க வேண்டும், அந்த மனிதனை ஆராதிக்காமல், அந்த மனிதனுக்குள் இருக்கிற தேவனையே ஆராதிக்க வேண்டும்.
அந்த மனிதனே தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தத் தெரிந்துகொண்ட மனிதனாய் இருக்கிறார். தேவன், "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்," வேறு யாரோ ஒருவரை அல்ல அல்லது வேறு யாரோ ஒருவர் கூறுகிறதையும் அல்ல, வில்லியம் மரியம் பிரான்ஹாமாகிய, உன்னையே என்று கூறின ஒருவராய் இருக்கிறார். அந்த மனிதனே இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தும் ஒருவராய் இருக்கிறார்.
நான் கூறுகிற எந்த காரியத்திற்கும் மாறாக எதையாவது எந்த மனிதனோ அல்லது ஸ்திரீயோ கூட்டிக் கூறினால், அதை நான் கூறுகிறதாக நம்பவேண்டாம்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட வாயானது எங்களிடத்தில் பேசி 65-0220 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் என்ன என்பதை சொல்ல நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, திருமதி இயேசு கிறிஸ்துவாக மாற எங்களுடன் வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
உபாகமம் 16:1-3
யாத்திராகமம் 12:3-6
மல்கியா 3-வது & 4-வது அதிகாரங்கள்
லூக்கா 17:30
ரோமர் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:7
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குரிய வித்தே,
எந்த சபைக்குச் சென்று, நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி அறிந்துகொள்ள முடியும்? தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் உங்களிடத்தில் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தாலொழிய, வேறெங்குமே கண்டறிய முடியாது.
நாம் தேவனுடைய கழுகுகளாயும், ஒரு வார்த்தையையும் விட்டுக் கொடுக்காதவர்களாயும் இருக்கிறோம். ஒவ்வொரு ஆராதனையிலும் புதிய மன்னா மாத்திரமே நமக்குத் தேவை, தேவனிடத்திலிருந்தே அதை நேரடியாகக் கேட்பதைத்தவிர வேறெங்கிருந்தும் அதற்குமேல் தூய்மையாய் வருகிறதில்லை. நாம் ஒவ்வொரு செய்தியைக் கேட்கும்போதும் நாம் மேலும் மேலும் உயரப் பறக்கிறோம். நாம் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் பார்க்க முடியும். இந்த சபையில் மன்னா இல்லையென்றால், தேவனுடைய கழுகுகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை சற்று மேலே எழும்பிக்கொண்டிருக்கின்றன.
தேவன் நம்மிடத்தில் பேசுவதையும், நாம் அவருடைய அசலான, மீண்டும் பிறந்த, தேவனுடைய சபை என்று நம்மிடம் சொல்வதையும் கேட்கும்போது, நம் இருதயங்கள் எப்படி மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றன, அது என்னவாக இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளாமல் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் நாம் அவருடைய கலப்படமற்ற கன்னிகையான வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம்.
இத்தகைய குழப்பம் இன்றைக்கு ஜனங்கள் மத்தியில் உள்ளது. இயேசுவின் நாட்களில் இருந்ததைப் போலவே, விசுவாசிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வேதத்தைப் பற்றி ஆசாரியர் என்ன கூறினார் என்பதை குறித்து வியாக்கியானத்தையே ஏற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வார்த்தைக்கு மனிதனுடைய வியாக்கியானத்தையே விசுவாசித்துக் கொண்டிருந்தனர். அந்த காரணத்தினால் அவர்கள் தேவனுடைய சத்தியத்தை புரிந்துகொள்ள தவறிப்போயினர், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் அளிக்கப்பட்ட பல வியாக்கியானங்கள் இருந்தன. தேவனுக்கு தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க எவருமே தேவைப்படுகிறதில்லை. அவரே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார்.
நீங்கள் இயேசுவின் காலத்தில் ஜீவித்திருந்தால், உங்களுடைய ஆசாரியர் என்ன கூறியிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், இயேசுவானவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசித்திருப்பீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் இயேசுவானவருக்கு செவி கொடுப்பதே என்று உங்களுடைய ஆசாரியரிடத்தில் நீங்கள் சொல்லியிருப்பீர்களா? இயேசுவினுடைய வார்த்தைகளுக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று நீங்கள் ஆசாரியனிடத்தில் சொல்லியிருப்பீர்களா? இயேசுவானவர் பிரசங்கிக்கிற ஒலிநாடாக்கள் அவர்களிடம் இருந்திருந்தால், இயேசுவானவர் என்ன கூறினார் என்பதையும், அவர் அதை எவ்வாறு கூறினார் என்பதையும் சரியாக நீங்கள் கேட்கும்படியாக அந்த ஒலிநாடாவை ஆசாரியர் இயக்கும்படி நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அவரிடத்தில் சொல்லியிருப்பீர்களா?
சரி, அது உங்களுடைய காலமாய் இருக்கவில்லை; இதுவே உங்களுடைய காலம், இதுவே உங்களுடைய நேரம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளது. இப்பொழுது நீங்கள் என்ன செய்துகொண்டும், கூறிக்கொண்டும் இருக்கிறீர்களோ, அதையே நீங்கள் அப்பொழுது சரியாக செய்திருப்பீர்கள்.
மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ரன், மேற்கத்திய அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ரனாக தம்மை நமக்கு மத்தியில் அடையாளம் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நமக்கு முன்பாக நிறைவேறிற்று என்று நாம் விசுவாசிக்கிறோம்.
இது அநுக்கிரக வருஷம் என்றும், யூபிலி வருஷம் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நீங்கள் அடிமையாகவே நிலைத்திருக்க வாஞ்சித்தால், இந்த செய்தி கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை; இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லயென்றால்; இந்த செய்தியை வியாக்கியானிக்க ஒரு மனிதன் தேவை என்று நீங்கள் நம்பினால்; உங்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாயுள்ளது என்று நீங்கள் நம்பினால்; அப்பொழுது நீங்கள் கொண்டு செல்லப்பட்டு, ஒரு கம்பியினால் உங்களுடைய காதில் ஒரு துளை போடப்படும், அதன்பிறகு உங்களுடைய எஞ்சியுள்ள நாட்களெல்லாம் நீங்கள் அந்த அடிமையின் எஜமானையே சேவிக்க வேண்டும்.
ஆனால் உண்மையான அசலான மணவாட்டி சபை தேவனுடைய முழு வார்த்தையை அதனுடைய பரிபூரணத்திலும் அதனுடைய வல்லமையிலும் விசுவாசித்துக் கொண்டிருக்கிறது. நாம் வெளியே இழுக்கப்பட்டு, அந்தக் காரியங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, தேவனுடைய வெளிப்படுத்துதல் நம்முடைய கவனத்தை கவர்ந்துள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சபையாக இருக்கிறோம். நாம் ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குரிய வித்தாயிருக்கிறோம்.இந்த ஐக்கியத்தில் எங்களோடு மகிழும்படி நீங்கள் இங்கு இருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும், இந்தக் கூட்டத்தில் தேவன் எங்களுக்கு அருளப்போகிறதற்கான எதிர்பார்ப்புகளோடும் நாங்கள் இருக்கிறோம்.
எனவே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0219 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். இந்தக் கூட்டங்களில் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கான பெரிய எதிர்பார்ப்போடு நாங்கள் இருக்கிறோம். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டியே,
நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். காலம் சமீபித்துவிட்டது. பதறானது வித்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. நாம் குமாரனின் பிரசன்னத்தில் கிடத்தப்பட்டு, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். நாம் அவருடைய மேஜையில் அப்பமாகுமளவிற்கு, நம்முடைய சிறிய குழு கிறிஸ்துவுக்கு அவ்வளவாய் முதிர்ச்சியடையும் அளவிற்கு நாம் அந்தப் பிரசன்னத்தில் தரித்திருப்போம். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!
இந்தச் செய்தி மல்கியா 4-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, லூக்கா 17:30-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, எபிரேயர் 13:8-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, பரி. யோவான் 14:12-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, வெளிப்படுத்தின விசேஷம் 10-வது அதிகாரத்தை, ஏழு முத்திரைகள் திறக்கப்படுதலை, தேவனுடைய ரகசியங்களை, சர்பத்தினுடைய வித்தை, விவாகமும் விவாகரத்தும் மற்றும் இத்தனை ஆண்டுகளாக முழுவதுமாக தூண்களுக்கு கீழே மறைக்கப்பட்டிருந்த மற்ற இந்த எல்லா ரகசியங்களையும் ரூபகாரப்படுத்தியுள்ளது.
நாம் வார்த்தைக்கு கன்னிகைகளாயிருக்கிறோம். நாம் வெறெந்த காரியத்தையும் தொட முடியாது, தொடவும் மாட்டோம். நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும், தூய்மையானதாகவும், புதியதாகவும் இருக்கிறது; வானத்திலிருந்து விழுந்த புதிய மன்னாவாகவும் இருக்கிறது.
ஆனால் கடைசி காலத்தில் இரண்டு ஆவிகள் மிக நெருக்கமாக இருக்கும் என்றும், அது கூடுமானால் தெரிந்து கொள்ளபட்டவர்களையும் வஞ்சிக்கும் என்றும் அவர் நம்மை எச்சரித்தார். இதனால், அது மணவாட்டியாய் இருப்பது போன்று தென்படும் என்ற காரணத்தால் அந்த ஆவியின் பேரில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனியுங்கள், அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று பாருங்கள். மத்தேயு கூறினார், பரிசுத்த மத்தேயு 24:24, "கடைசி நாட்களில் இரு ஆவிகள் இருக்கும்," என்றும், சபை ஜனங்களின் சபையின் ஆவியும், மணவாட்டி ஜனங்களின் மணவாட்டி ஆவியும், இருக்கும் என்றும், "கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக இரண்டும் ஒன்றாய் இருக்கும்" என்றும் கூறியுள்ளது. அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும்.
சபை ஜனங்களின் ஆவியும் மணவாட்டி ஜனங்களின் ஆவியும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாய் இருக்கும் என்று அவர் கூறினார். அதாவது சபை ஜனங்களுடைய ஆவி அந்த மணி நேரத்தின் செய்தியை அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்று கூறுமளவிற்கு அந்த விதமாக நெருக்கமாக இருக்கும் என்பதே அதன் பொருளாகும்.
அது மெத்தோடிஸ்ட்டாய், பாப்டிஸ்ட்டாய், பிரஸ்பிடேரியனாய் அல்லது பெந்தேகோஸ்தேவாகக் கூட இருக்காது; அவர்கள் வார்த்தையிலிருந்து வெகுதூரம் விலகி, செய்தியைக் கூட நிராகரிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் எவருமே மணவாட்டிக்கு நெருக்கமான ஒரு ஆவியைப் பெற்றிருக்கவில்லை.
சாத்தான் மிகவும் வெற்றிகரமாக இருந்து, அவ்வளவாய் வஞ்சிக்கும் படிக்கு, முயற்சித்துள்ளான். ஆதியில் இருந்தே கூட, அவன் எளிமையாக, "நிச்சயமாகவே" என்றும், இந்தவிதமாக ஏவாளிடத்தில் கூறி அவளுடைய தர்க்க அறிவை உபயோகித்து அவள் தனக்கு செவிகொடுக்க வேண்டுமேயன்றி வார்த்தைக்கு அல்ல என்று கூறினான். ஆனால் அவள் செய்யும்படி கட்டளையிடப்பட்ட ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு: வார்த்தையோடு தரித்திருத்தல்.
உண்மைகள்:
உங்களுக்கு ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்க வேண்டும். அதைத்தான் தீர்க்கதரிசி நமக்கு சொன்னார். அந்த பதில் வார்த்தையில் இருந்து வர வேண்டும். வார்த்தையானது ஒரு தீர்க்கதரிசியினிடத்திற்கு மாத்திரமே வருகிறது. தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். எந்த மனிதனாவது அல்லது எந்த ஸ்திரீயாவது உங்களுக்கு ஒரு பதிலை அளித்தால், அது தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியிருக்கிறதாய் இருக்க வேண்டும். அது அவர்களுடைய வியாக்கியானமாய், கருத்தாய் அல்லது புரிந்து கொள்ளுதலாய் இருக்க முடியாது. அவர்கள் அதை தேவனுடைய ரூபாகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வார்த்தையோடு ஆதரிக்க வேண்டும். அது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையுடன் கூட்டப்பட்டதாயில்லாமல், அது தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பதாய் மட்டுமே இருக்க வேண்டும்.
இப்பொழுது இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.
1: நீங்கள் கேட்க வேண்டிய செய்திகள் மிக முக்கியமானதாய் இருக்கிறபடியால் ஒலிநாடாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
2: ஒலிநாடாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை, மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகளை இப்பொழுது உள்ள ஊழியமானது கொண்டுள்ளது.
இரண்டாவது கருத்திற்கு பல, பல மாறுபாடுகள் உள்ளன: பரிசுத்த ஆவியானவர் என்னை அல்லது என்னுடைய போதகரை எது வார்த்தை, எது வார்த்தை இல்லை என்று நமக்கு சொல்ல வழிநடத்துவார். சகோதரன் பிரான்ஹாம் ஒலிநாடாவில் கூறினதைப் பார்க்கிலும் அதிகம் நமக்குத் தேவை. அந்த வார்த்தையை விளக்கிக் கூற அல்லது தெளிவுபடுத்திக் கூற உங்களுக்கு ஒரு ஊழியம் இருக்க வேண்டும். அந்த ஊழியம் இல்லாமல் நீங்கள் மணவாட்டியாய் இருக்க முடியாது.
இன்னும் பல முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது. ஆனால் முதல் பிரிவினருக்கு எந்த மாறுபாடுகளும் முரண்பாடுகளும் இல்லை. இது எளிமையாக, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதாயுள்ளது.
இந்த கடைசி-கால செய்தியில் விசுவாசிகளாக இருக்கின்றபடியால், நீங்கள் உங்களையே இந்த கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
1: ஒலிநாடாக்களில் தீர்க்கதரிசி கூறியது உங்களுடைய முற்றிலுமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அல்லது உங்கள் மூலமாகவோ அல்லது உங்களுடைய போதகர் மூலமாகவோ பரிசுத்த ஆவியானவர் பேசுவதே முற்றிலுமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
2: ஐந்து வகையான ஊழியத்தில் மணவாட்டி கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகள் இருக்கிறதா, அல்லது ஒலிநாடாவில் உள்ள செய்திகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன என்று விசுவாசிக்கிறீர்களா?
உங்களுடைய மேய்ப்பர், பிரசங்கி, போதகர், சுவிசேஷகர் அல்லது தீர்க்கதரிசி, ஒலிநாடாவில் உள்ள மிக முக்கியமான செய்திகளை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையென்றால், அவர் போலியானவர், மேலும் அந்த ஆவி வரும் என்று தீர்க்கதரிசி நம்மை எச்சரித்தார்.
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான செய்திகள் அவை என்று அவர் கூறி, அவருடைய சபையில் அந்த ஒலிநாடாக்களை இயக்க இன்னமும் மறுத்துக்கொண்டிருப்பாரானால், ஏதோ தவறு உள்ளது. ஒலிநாடாக்களைக் கேட்பதே நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று அவர் உண்மையிலேயே விசுவாசித்தால், அவர் முதலில் ஒலிநாடாக்களை இயக்குவார், அதன்பின்னர் அவர் பிரசிங்கிக்க வழி நடத்தப்படுகிறதை உணர்ந்தால் பிரசிங்கப்பார்.
எளிய உதாரணம்:
தூய்மையான குடிதண்ணீரே உங்களுடைய ஆரோக்கியத்திற்காக நீங்கள் பருகக்கக்கூடிய மிக முக்கியமான ஒன்று என்று நான் உங்களிடத்தில் கூறியிருந்தால், சான்றளிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் என்று நிரூபிக்கப்பட்டது ஒன்று மாத்திரமே இருந்தால்…ஆனால் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு இரவு உணவிற்கு வரும்போது, நான் அந்த சான்றளிக்கப்பட்ட தண்ணீரை உங்களுக்கு பரிமாறுகிறதில்லை. நான் உங்களிடத்தில், "நீங்கள் அந்த தண்ணீரை உங்களுடைய வீட்டிலிருந்து பருகலாம், ஆனால் என்னுடைய வீட்டிலே, நான் உங்களுக்குக் கொடுப்பதையே நீங்கள் பருக வேண்டும் என்று சொல்கிறீர்கள்" என்று சொல்லுகிறேன்.
அந்தத் தண்ணீர்தான் உங்களுடைய ஆரோக்கியத்திற்காக நான் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த ஒன்றாகவும், அதுவே உங்களுக்கு ஜீவனைத் தரும் என்றால், அப்படியானால் நீங்கள் என்னுடைய வீட்டிற்குள் நுழையும்போது நான் உங்களுக்கு முதலில் கொடுக்கப்போவது அந்த தூய்மையான குடிநீரேயாகும்.
நான், “உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள், என்று கூறுவதனால் தவறாக இருக்கிறேனா, இதுவே உங்களுடைய ஜனங்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியமாய் உள்ளது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.”
இல்லையென்றால், "சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாகும், உங்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் கூறினதேயில்லை. எனவே நாங்கள் ஜனங்களிடத்தில் ஒலிநாடாக்களை அவர்களுடைய வீடுகளில், உங்களுடைய கார்களில், எல்லா நேரத்திலும் இயக்குங்கள், ஆனால் சபையிலே அவர்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டும்" என்று கூறுவதனால் அவர்கள் தவறாக இருக்கிறார்களா.
எந்த ஆவி உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது? நீங்கள், "ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளதே என்னுடைய முற்றிலுமானது என்றும், மற்றும் நான் கேட்கக்கூடிய மிக முக்கியமான காரியம் அதுவே" என்றும் நீங்கள் கூறுகிறீர்களா? இல்லையென்றால், நீங்கள், "ஒலிநாடாக்கள் போதுமானதாக இருக்கவில்லை. அது என்னுடைய முற்றிலுமானது அல்ல மற்றும் கேட்கக்கூடிய மிக முக்கியமான காரியமும் அல்ல, ஊழியமே முக்கியம்" என்று கூறுகின்றீர்களா?
இப்பொழுது இது வித்தின் நேரம், அதாவது மணவாட்டியின் நேரம். பதர்கள் மரித்துப் போய்விட்டன. பதர்கள் காய்ந்துபோய்விட்டன. தொடப்படாத கன்னிகையான வார்த்தையின் நேரம். இது ஒரு கன்னிகை, நினைவிருக்கட்டும், ஒரு கன்னிகையான வார்த்தையின் நேரம்.
நாங்கள்: 65-0218 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியை கேட்கப்போகையில், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி பரலோகத்திலிருந்து விழுகின்ற புதிய மன்னாவைக் கேட்க வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான கர்த்தருடைய ஆட்டுக்குட்டிகளே,
நித்திய ஜீவனின் வார்த்தையை நம்மிடம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றினையும் இந்த நாளுக்காக ஒவ்வொரு வாரமும் எப்படி நம்முடைய இருதயங்கள் ஏங்குகின்றன. நம்முடைய ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவதும், தாகத்தைத் தணிப்பதும் தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.
பிதாவே, பெரிய அறுவடை வயல் வெண்மையாகவும், முதிர்ச்சியடைந்தாகவும், தானியங்கள் இப்போது பெரிய போரடிக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் நேரத்திற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் நீர் எங்களுக்குச் சொன்னீர். தானியமானது இப்பொழுது குமாரனின் பிரசன்னத்தில் கிடந்து தேவனுடைய ராஜ்யத்திற்கு முதிர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது.
பிதாவே, சத்தியம் என்று நாங்கள் அறிந்துள்ள எங்களுடைய நம்பிக்கைக்கான உறுதியில் நாங்கள் நிற்கிறோம்; ஒலிநாடாவில் உள்ள உம்முடைய சத்தமே, உம்முடைய மணவாட்டியாகிய, எங்களை பரிபூரணப்படுத்தும் ஒரே சத்தமாய் இருக்கிறது.
எங்களுடைய சகோதர சகோதரிகளால் நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறபடியால் இது கடினமாக உள்ளது. அவர்கள் அவருடைய சமுகத்திலிருந்து விலகியோடாமல், அவருடைய சமுகத்திற்குள் ஓடுமாறு அவர்களிடம் கெஞ்சி, மன்றாடுகிறோம்.
இந்தச் செய்தியை தங்களுடைய முழு இருதயத்தோடு நேசிக்கிற பல அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களை நீங்கள் தெரிந்துகொண்டு, உம்முடைய மந்தைகளைக் கண்காணிக்கும்படி வைத்துள்ளீர் என்பதை நாங்கள் அறிவோம், ஆனாலும் பிதாவே, அவர்கள் உம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை அவர்கள் முன்வைக்கத் தவறுகிறார்கள். இது ஒரு ஒரே- மனிதனின் செய்தி என்றும், உம்முடைய மணவாட்டியை வழிநடத்த நீர் அந்த மனிதனைத் தெரிந்துகொண்டிருக்கிறீர் என்றும் அவர்களிடம் சொல்ல இவர்கள் தவறுகிறார்கள். உம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும் ஒரே சத்தம் உம்முடைய சத்தம் மட்டுமே என்பதை அவர்களிடம் சொல்ல இவர்கள் தவறுகிறார்கள்.
நான் "அதற்கு எதிராக கூக்குரலிட வேண்டும்." ஒவ்வொரு காரியத்திற்கு எதிராகவும், அவர்களுடைய சபைகளில் உம்முடைய ஒலிநாடாவை இயக்குவதற்கு எதிராக உள்ள ஒவ்வொருவருக்கும் எதிராக கூக்குரலிடுகிறேன். அவர்களுடைய செய்கைக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய சபைக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய தீர்க்கதரிசிகளுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய ஊழியக்காரர்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய ஆசாரியர்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன். நான் அந்த முழு காரியத்திற்கும் எதிராக கூக்குரலிட வேண்டுமே!
"தோழர்களே நான் உங்களோடு சேர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் என்று கூறுகிறேன். உங்களுக்குத் தெரியுமா, நான் என்ன செய்யவுள்ளேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன் என்பதை நான் நம்புகிறேன். நான் இங்கு ஒரு சிறு காரியத்தை வைத்திருக்கிறேன், நம் அனைவரையும் ஒன்றாக கொண்டு வர, இதை, அதை, அல்லது மற்றதைச் செய்ய...என்னால் அந்த ஒன்றைக் கூற முடியும் என்று நான் நம்புகிறேன்.
உம்முடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட, உம்முடைய வார்த்தை மாத்திரமே எங்களை ஒன்றிணைக்க முடியும் என்பதால் நான் அதற்கு எதிராகக் கூக்குரலிட வேண்டும்.
எப்படி அவர்களுடைய பிரசங்கம் அதைச் செய்ய முடியும்? அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் உடன்படாமல் மற்றும் ஒருவரையொருவர் காரியங்களை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள் யாவரும் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்கக் கூடாது…என்ற ஒரு காரியத்தை மட்டும் அவர்கள் அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். பிதாவே, அது எப்படி அதை செய்வதாக இருக்க முடியும்?
எங்களிடம் முற்றிலுமான ஒன்று இருக்க வேண்டும் என்று நீர் சொன்னீர், அது உம்முடைய வார்த்தையாகும்.உம்முடைய வார்த்தை உம்முடைய தீர்க்கதரிசியிடம் மாத்திரமே வருகிறது என்று நீர் எங்களிடம் சொன்னீர். அவர் மாத்திரமே உம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்கக்கூடியவர் என்று நீங்கள் எங்களிடம் சொன்னீர். ஒவ்வொரு ஊழியக்காரனும், ஒவ்வொரு சாதாரண சபை அங்கத்தினனும், ஒவ்வொரு மானிடனும், அவர் கூறினதை மாத்திரமே கூறலாம் என்று நீர் எங்களிடம் சொன்னீர். அவருடைய சத்தமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி அக்கினி ஸ்தம்பத்தால் ரூபுகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாக இருக்கிறது.
அவர்கள் போலியானவர்கள் அல்லது பிரசங்கிக்க கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. கர்த்தர் அவர்களுடன் இல்லை என்றோ அல்லது அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு பிரசங்கிக்க அழைக்கப்படவில்லை என்றோ நான் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒலிநாடாக்களைக் கேட்பது அவர்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று அவர்கள் தங்களுடைய ஜனங்களிடம் சொல்லாதபோது நான் அவர்களுக்கு எதிராக கூக்குரலிட வேண்டும்.
ஒரு சிறு எழுத்தையாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பையாகிலும் மாற்றுவது மரணம். உம்முடைய மணவாட்டி தங்களுடைய சொந்த செவிகளில் கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறுவதைக் கேட்க ஒரு வழியை நீர் அருளியுள்ளீர். இதுவே அவர்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி என்று அவர்களுடைய ஜனங்களிடம் எப்படி அவர்களால் பிரசங்கிக்காமல் இருக்க முடியும்? இது ஒரு மனிதனுடைய வார்த்தையாக இல்லாதபடியாலும் அல்லது உம்முடைய வார்த்தைக்குரிய மனுஷனுடைய வியாக்கியானமாயில்லாதபடியினாலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று நான் கூறக்கூடிய ஒரே செய்தி இதுவேயாகும். இது உம்முடைய கலப்படமற்ற வார்த்தையாய் உள்ளது.
செய்தியும் செய்தியாளனும் ஒன்றே என்று நீர் கூறினீர். உம்முடைய தீர்க்கதரிசி அதை உரைத்தார், நீர் அதை நிறைவேற்றுவீர். இது அவருடைய மணவாட்டியினிடத்தில் நேரடியாக பேசிக்கொண்டிருக்கிற மனுஷகுமாரனாய் இருக்கின்றபடியால், உம்முடைய தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட உம்முடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. உம்முடைய ஆதி அன்பிற்கு திரும்பி வர வேண்டும் என்று நான் ஜனங்களிடம் கெஞ்ச வேண்டும். கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் அறிந்திருக்கிறதற்கு திரும்பி வரவேண்டும். எந்த வழியில் செல்வது அல்லது என்ன செய்வது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், வாருங்கள், இன்றிரவு எங்களுடன் கப்பலில் ஏறுங்கள். நாங்கள் கூக்குரலிட நினிவேக்கு சென்றுகொண்டிகிறோம். தேவனுக்கு முன்பாக நமக்கு ஒரு கடமை இருக்கிறது, அதுதான் ஒலிநாடாவில் உள்ள இந்த செய்தியாகும்.
கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்றும், அவருக்கு ஒரு மணவாட்டி இருக்கப்போகிறாள் என்றும், நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் மகிமைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம், வந்து எங்களுடைய கப்பலில் சேர்ந்துகொள்ளுங்கள்.
இந்தச் செய்தி சத்தியமானது என்றும், ஜீவிப்பதற்குத் தகுந்தது என்றும், அதற்காக மரிப்பதற்கும் தகுந்தது என்றும் நீங்கள் விசுவாசித்தால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் 65-0217 என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போவது எங்களுக்கு மிக முக்கியமானது என்றும், அவசரமானது என்றும் நாங்கள் விசுவாசிக்கிறபடியால், எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
நீங்கள் என்னுடைய ஆட்டுக்குட்டிகள். அது எப்படி? நீங்களே அவர் என்னை போஷிக்க அனுமதித்துள்ள கர்த்தருடைய ஆட்டுக்குட்டிகள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30
அன்புள்ள சகோதரன் ஜோசப்,
1. இந்தச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
என் இருதயத்தின் ஆழத்திலிருந்தும், என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநார்களோடும் நான் அதை விசுவாசிக்கிறேன். இது தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசிக்கொண்டிருக்கிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறது.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியினூடாகப் பேசி கூறினார்:
எனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்ட வேண்டாம். எடுக்க வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களையும் அதில் சேர்க்கவும் வேண்டாம். அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள். தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்யுங்கள். இதனோடு கூட்டாதீர்கள்.
நீங்கள் இந்தக் கடைசி-கால செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கோரினால், அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்களும் கூட ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். சாத்தான் ஊழியத்தின் மூலம் அதை வெள்ளையடிக்க முயற்சித்து, “சகோதரன் பிரான்ஹாம் வேட்டையாடும் கதைகளைக் சொல்லிக் கொண்டிருந்தபோது அல்லது 'தேசத்தில் உங்களிடம் சிறந்த சமையற்காரர் இருக்கிறார்' அல்லது 'அதற்கான வேதவாக்கியம் என்னிடம் இல்லை', ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் உங்களுக்கு சொல்வேன்;' என்று கூறினபோது, நீங்கள் அந்த பகுதியை நம்ப வேண்டியதில்லை. எது வார்த்தை, எது வார்த்தையில்லை என்று புரிந்து கொள்ளும்படி நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார்" என்கிறான். அது ஏவாளிடத்தில் பேசி, நிச்சயமாகவே…அவர் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி பொருட்படுத்திக் கூறவில்லை என்று கூறின அதே பிசாசாய் இருக்கிறது. அதேவிதமாக தொனிக்கிறதா?
அவர் என்ன செய்யக் கூடாது என்று கட்டளையிட்டாரோ அதையே அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதையே கூறுங்கள் என்றும், உங்களுடைய கருத்துக்களை அதில் சேர்க்க வேண்டாம் அல்லது அதை புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அவர், "இந்தப் பாகத்தையும் அந்தப் பாகத்தையும் தவிர மற்ற அனைத்தும் என்றோ, எப்போது அதை பரிசுத்த ஆவியானவர் பேசிக்கொண்டிருந்தார் என்றும், எப்போது அது நான் மாத்திரமே பேசுவது என்றும் உங்களுடைய மேய்ப்பர் உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறவில்லை. இந்த பெரிய கற்களுக்கு மத்தியில் கடற்கரையில் நான் வெறுமனே ஒரு சிறிய கூழாங்கல்லாயிருக்கிறேன்.
2. சகோதரன் பிரான்ஹாம் மற்றும்/அல்லது அவருடைய ஒலிநாடாக்கள் முற்றிலுமானவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சகோதரன் பிரான்ஹாம் என்னுடைய முற்றிலுமானவர் அல்ல, ஆனால் அவர் ஒலிநாடாவில் பேசின செய்தியே முற்றிலுமாக என்னுடைய முற்றிலுமானதாயுள்ளது.
இது தவறானது என்றும், வேதமே முற்றிலுமானது என்றும் பலர் கூறுகின்றனர். என் நண்பரே, வேதமும் ஒலிநாடாவில் உள்ள செய்தியும் ஒன்றேதான். அதுதான் அந்தச் செய்தியின் சாராம்சம். ஒலிநாடாக்களில் உள்ள செய்தி வேதாகமத்தின் வியாக்கியானமாய் உள்ளது. அவைகள் ஒன்றாயும், வித்தியாசமற்றதாயுமுள்ளன.
எளிமையான உண்மை என்னவென்றால், 1: வேதம் என்பது வார்த்தை. 2: தீர்க்கதரிசியிடம் வார்த்தை வருகிறது. 3: தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருக்கிறார். 4: நம்முடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம், நம்முடைய நாளுக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயும் மற்றும் வார்த்தையை வியாக்கியானிப்பதற்கும் அனுப்பப்பட்டார். 5: தேவனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லை. அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஒலிநாடாவில் பேசுகிறபோது அதுவே அவருடைய வார்த்தையின் வியாக்கியானமாய் உள்ளது.
அவர் ஆபிரகாமோடும் இயேசு கிறிஸ்துவோடும் செய்ததைப் போலவே அவர் மீண்டும் வந்து மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பார் என்று வேதம் நமக்குச் சொல்கிறது. அவர் நமக்கு இன்னும் கூற வேண்டிய அநேக காரியங்கள் இருந்ததாகக் கூறினார். அவருடைய வார்த்தையில் மறைக்கப்பட்டிருக்கிற இந்த எல்லா மகத்தான ரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவதாகக் கூறினார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று அவர் கூறினார். அவர் தம்முடைய ஜனங்களை வழிநடத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் ஒரு குழுவை அனுப்புவதாக அவர் ஒருபோதும் கூறவில்லை, அவர் எப்போதும் செய்துள்ளதைப் போல அவர்தாமே தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஜனங்களை வழிநடத்துவார். அவருடைய வார்த்தை மாற முடியாது.
3. மேய்ப்பர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒவ்வொரு சபையும் சுயாதிபத்தியமுள்ளதுபோல, ஒவ்வொரு மேய்ப்பரும் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி செய்ய அவர் உணர்கிறது போலவே செய்ய வேண்டும். மேய்ப்பர்கள் தங்களுடைய பிரசங்க பீடத்தில் ஒலிநாடாக்களை தொனிக்கச் செய்வதன் மூலம் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமிற்கு இடமளிக்க வேண்டும் என்று நான் நினைகிறேன் என்று, பலமுறை பிரசங்க பீடத்தில் அதை கூறியிருக்கிறேன். அவர்கள் பிரசங்கிப்பதை விட்டுவிட்டு, ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று, நான் ஒருபோதும் கூறியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சபைகளில் தேவனுடைய சத்தம் தொனிக்காமல் இருக்க கற்பனைக்கு வரக்கூடிய ஒவ்வொரு சாக்குப்போக்கையும் பயன்படுத்துகிறார்கள்.
தங்களுடைய சபைகளில் அந்த சத்தத்தை தொனிக்கச் செய்யாத மேய்ப்பர்களைக் குறித்து நான் எப்படி உணர்கிறேன் என்பதை தீர்க்கதரிசி கூற அனுமதிக்கிறேன்.
இப்பொழுது, சகோதரர் ஜூனியர் ஜாக்சனுக்கு அதனுடன் இணங்காமலிருக்க உரிமை இருந்தது. அவர் தன்னுடைய சபையில் விரும்புவது…ஜனங்கள் அனைவரும் கூட்டத்தில் அந்நிய பாஷைகள் போன்றவற்றை பேச விரும்புகிறார்கள். அதுதான் சகோதரன் ஜூனியரின் பிரச்சனைகளாகும்; அது-அது அவரைப் பொறுத்தது. ஆனால் நாம் விசுவாசிக்கிறது போலவே…ஜூனியர் ஜாக்சனும் இந்தச் செய்தியை விசுவாசிக்கிறார். அவர் நம்மில் ஒருவராயிருக்கிறார்.
4. ஊழியக்காரர்கள் பிரசங்கிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இல்லை, நான் அப்படிக் கூறினதேயில்லை, நான் அதை நம்புவதும் இல்லை. வார்த்தை நமக்குச் சொல்கிறது, மற்றும் சகோதரன் பிரான்ஹாம் இந்த கேள்விகளும் பதில்களும் என்ற செய்திகளில், ஊழியக்காரர்கள் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்.
இப்பொழுது கடிதத்தின் மூலமாக அல்லது: ஒரு துரிதமான அறிமுகத்தை செய்யும்படியாக, என்னுடைய சபைக்காக, நான் வழிநடத்தப்படுகிறதை உணருகிறேன், அதன்பின்னர் இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய ஒரே சத்தத்தை இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்போம். உலகத்திலேயே மகத்தான ஊழியத்தை நான் உடையவனாய் இருக்கிறேன் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன், எனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னுடைய சபைக்கு தேவனுடைய சத்தத்தை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
5. நேரடியாக ஒளிபரப்பப்படுகின்ற பிரான்ஹாம் கூடார ஆராதனைகளை நீங்கள் கேட்கவில்லையென்றால் நீங்கள் மணவாட்டியில்லையென்று நீர் நினைப்பதாக ஜனங்கள் கூறிக்கொண்டிருக்கிறார்களா?
என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் அதை ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நினைத்ததும் கூட இல்லை. யாரேனும் அத்தகைய ஒரு காரியத்தை கூறினால் அது தவறாகும். பிரான்ஹாம் கூடாரத்தின் மேய்ப்பராக, சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்க நான் வழிநடத்தப்படுகிறதை உணருகிறேன். சத்தமே மணவாட்டியை ஒருங்கிணைக்கிற ஒரே காரியமாய் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்.
நான் முன்பே கூறினதுபோல், ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு காரியமும் கர்த்தர் உரைக்கிறதாவது என்றும், அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். நான் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று என்னால் கூற முடியும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் மணவாட்டியை வெளியே அழைக்கவே அனுப்பப்பட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஐந்து வகையான ஊழியத்தில் என்னுடைய ஸ்தானம், அந்தச் செய்தியாளனை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டி, அதன் பின்னர் இயங்கு பொத்தானை அழுத்துவதேயாகும். அந்த சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் மகத்தான காரியம் வேறொன்றுமேயில்லை. மகத்தான அபிஷேகம் அந்த ஒலிநாடாக்களில் உள்ளது, எனவே நான் ஏன் என்னுடைய சபைக்கு வேறு எதையாவது கொடுக்க வேண்டும்?
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கர்த்தர் என்னுடைய இருதயத்தில் வைத்துள்ள செய்தியை என்னுடைய சபையில் போட்டுக் கேட்க நான் உலகத்தையே அழைக்கிறேன். ஒரே நேரத்தில் கேட்கும்படி ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகிறீர்கள்.
ஒலிநாடாக்களில் சகோதரன் பிரான்ஹாம் கூறியதையே நான் என்னுடைய வழிகாட்டியாகப் பயன்படுத்துகிறேன்.
நாம் இப்பொழுது இந்த தொலைபேசி இணைப்பு முறையைப் பெற்றுள்ளோம், அது மிக, மிக அருமையாக உள்ளது. ஜனங்கள் தங்களுடைய வீடுகளிலேயே அல்லது அவர்களுடைய…அவர்களுடைய கூடும் இடங்களில், அவர்களுடைய சபைகள், போன்றவற்றில் அமர்ந்து ஆராதனையை கேட்க முடியும். நான் அதை பாராட்டுகிறேன்.
இப்பொழுது, மேய்ப்பரே, நீங்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதாவது, இது நான் இந்த காரியங்களை என்னுடைய சபைக்கு மாத்திரமே பேசுகிறதாயுள்ளது. அதை செய்ய எனக்கு ஒரு உரிமை உண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளை கண்காணிக்க பரிசுத்த ஆவியானவரால் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுகிற இந்த செய்தியும் மற்ற எல்லா செய்திகளும் என்னுடைய சபையோருக்கே நேரடியாக அளிக்கப்படுகின்றன. உங்களுடைய சபையோர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலொழிய அது உங்களுக்கானது அல்ல. ஆனால் அது இங்கே இந்த ஜனங்களுக்கு நேரடியாக அளிக்கப்படுகின்றது.
அது உலகம் முழுவதற்குமானதாய் உள்ளது. பண்டைய தேசங்களில் ஜனங்கள் ராத்திரியில் நள்ளிரவில் எழுந்து, அவர்கள் ஒரே நேரத்தில் தொடர் சங்கிலி ஜெபத்தை கைக்கொள்ளுகிறார்கள். உண்மையில், பல்லாயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் அதை கேட்கத்தான் வேண்டும்; நீங்கள்-நீங்கள் ஜெபத்தினால் பரலோகத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள், எனவே அவர் கேட்கத்தான் வேண்டும்.
6. சபைக்கு செல்வது தவறா?
நான் அதை ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நினைத்ததுமில்லை. நான் அவ்வாறு நினைத்திருந்தால் எனக்கு ஏன் ஒரு சபை வேண்டும்? பிரான்ஹாம் கூடாரத்தில் நாங்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று ஆராதனைகளை வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் நான் விஜிஆரில் (VGR) பணிபுரிந்துகொண்டே ஒவ்வொரு வாரமும் அநேக ஆராதனைகளுக்கு வர வேண்டியிருந்து எனக்கு மிகவும் கடினமானதாககிவிட்டது. பிரான்ஹாம் கூடாரத்தில் ஜனங்களுக்கு போதிய இடம் இல்லாதிருந்தபடியால் நாங்கள் அப்பொழுது இரண்டு ஆராதனைகளை வாரத்திற்கு வைத்திருந்தோம். எனவே நாங்கள் எங்களுடைய வாலிபப் பிள்ளைகளுக்காக நாங்கள் பயன்படுத்தியிருந்த எங்களுடைய கட்டடத்திற்கு இடம்பெயர்ந்தோம், அது ஓர் உடற்பயிற்சி கூடமாயிருந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு அறிக்கையை வெளியிட தேவன் என்னுடைய இருதயத்தில் பேசியிருந்தார். அவர்கள் ஒருநாள் இந்த சபைக் கதவுகளை மூடினாலும், நாம் எங்கிருந்தாலும் நம்முடைய மேய்ப்பரால் நம்முடன் பேசக் கூடும் என்பதை நாம் ஒரு இம்மியும் இழக்கமாட்டோம் என்று நான் கூறினேன். ஒரு மாதம் கழித்து, உலகெங்கிலும் உள்ள சபைகளை மூடிய கோவிட் தொற்று நமக்கு ஏற்பட்டது.
அந்த நேரத்தில், எங்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவைப்பட்டபடியால், உடற்பயிற்சி கூடத்தை மறுவடிவமைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நான் வழிநடத்தப்படுகிறதை உணர்ந்தேன். இவ்வாறு, சபையானது மறுசீரமைக்கப்படும்போது, நாங்கள் எங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக இருந்து, உலகெங்கிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பகுதியோடு ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க ஒருங்கிணைந்தோம்.
நாங்கள் இப்போது கட்டிடத்தை முடித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சகோதரன் பிரான்ஹாம் இங்கு பிரன்ஹாம் கூடாரத்தில் இருந்ததைப் போலவே, நாங்கள் கட்டிய கூடுதல் வாகன நிறுத்துமிடத்தை நாங்கள் ஏற்கனவே விஞ்சிவிட்டோம். நாங்கள் ஜெபித்து, கர்த்தர் எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
ஜனங்களின் இருதயங்களில் இன்னும் பல, பல கேள்விகள் இருப்பதை நான் அறிவேன். நான் கூறியிருக்கிற பல காரியங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. சகோதரன் பிரான்ஹாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தாரானால், நான் எவ்வளவு அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்படுவேன்?
நான் கூறியுள்ளதில் தவறாக இருக்கலாம். நான் அவைகளை இன்னும் நன்றாக சொல்லாமலிருந்திருக்கலாம் அல்லது நான் அளித்த விதத்தில் இன்னும் தெளிவாக இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் சரியென்று நான் அறிந்த ஒரு காரியம், இந்த செய்தி பரிபூரணமானது. நீங்கள் எனக்கோ அல்லது நான் என்ன கூறுகிறேன் என்பதற்கோ செவிகொடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் இயங்கு பொத்தானை இயக்கி ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்.
கேள்விகளும் பதில்களும் #4 64-0830E என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மீண்டும் ஒருமுறை, பிரான்ஹாம் கூடாரத்தில் சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்