
அன்புள்ள மணவாட்டியே,
1933 ஆம் ஆண்டு ஓஹையோ நதியில் அக்கினி ஸ்தம்பம் தோன்றிய அந்த நாளிலிருந்தே, மணவாட்டி இந்தச் செய்தியைப் பற்றியோ அல்லது இதனுடைய செய்தியாளரைப் பற்றியோ சந்தேகித்திருக்கவில்லை. தேவன் தம்முடைய மணவாட்டியை அழைக்க அவர் பூமிக்கு அனுப்பின அவருடைய வல்லமையான 7-ம் தூதனாகிய செய்தியாளரே வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
அந்த நாளிலிருந்தே, தேவன் தம்முடைய வருகைக்காகத் தம்முடைய மணவாட்டியை ஒன்றுசேர்த்து வருகிறார். நாம் அத்தகைய மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் இருக்கிறோம்; ஏனென்றால் அது எந்த நாளிலும் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் நம்முடைய விசுவாசத்தைக் உருவாக்கிக்கொண்டு, நாம் அவருடைய உண்மையுள்ள மணவாட்டி என்பதை, நமக்கு சொல்லிக்கொண்டும், நமக்கு உறுதியளித்துக்கொண்டும் வருகிறார். நாம் அவருடைய சேமிக்கப்பட்ட ஆகாரத்தோடு தரித்திருப்பதன் மூலம், நம்முடைய தேவை என்னவாக இருந்தாலும் அங்கே, அது ஒலிநாடாக்களில் உள்ளது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
அதை நாம் எப்படி உறுதியாக அறிவோம்? தேவன் தம்முடையத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் அதை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வார்த்தை கூறுகிறது. தேவன் எந்த காரியத்தையாவது வெளிப்படுத்தப் போவதாக அல்லது எந்த காரியத்தையாவது செய்யப்போவதாக இருந்தாலும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை நமக்கு அளிக்கப் போவதாக இருந்தாலும், அவர் அதை நம்முடைய தீர்க்கதரிசி மூலமாக, அவருடைய தீர்க்கதரிசி மூலமாக மாத்திரமே இடிமுழக்கமிடப்போகிறார் என்பதை நாம் இதனால் அறிந்திருக்கிறோம்.
யோசனையின் நாட்கள் முடிவுற்றன. மணவாட்டி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளாள். தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் ஒலிநாடாக்களில் பேசுவதைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமேயில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவனாலே ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தைகளாய் மாத்திரமே உள்ளன.
வேளையானது தாமதமாகிவிட்டதையும், நம்மைச் சுற்றிலும் நம்முடைய சத்துருவின் துர்நாற்றத்தின் வாடை வீசும் அழுத்தத்தையும் நம்மால் உணர முடிகிறது. போர்கள் அணிவகுத்து நிற்கின்றன, சாத்தான் எல்லா முனைகளிலும் தாக்கிக் கொண்டிருக்கிறான், ஆனாலும் நாம் ஆவிக்குரிய ஆகாரத்தை பெற்றுள்ளதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நாம் இரவும் பகலும் எஜமானுடைய மேஜையண்டையிலே அமர்ந்துகொண்டு அந்த மறைவான மன்னாவை விருந்துண்கிறோம். அவர் நம்மிடத்தில், "எல்லாம் நன்றாக இருக்கிறது என் இனிய இருதயமே. நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று நான் உன்னிடத்தில் சொன்னேன். தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிரு. அந்த பிசாசுகளை துரத்து. நான் உனக்கு என்னுடைய அணுகுண்டை, என்னுடைய வார்த்தையை கொடுத்திருக்கிறேன் அதை பயன்படுத்து. நான் அதை நினைத்தேன், அதன் பின்னர் அது எழுதப்பட்டு, இப்பொழுது, உன்னுடைய நாளில், கர்த்தர் உரைக்கிறதாவது, நீ என்னுடைய மணவாட்டி, நீ மாமிசமாக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறாய் என்று, நான் உனக்கு சொல்வதை நீ கேட்கும்படியாக அதை நான் உரைத்திருக்கிறேன்" என்று சொல்லும்போது அனுதினமும் நமக்கு அவர் தொடர்ந்து அதிக அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தேவன் மானிட உதடுகளினூடாக உரைத்து, அவருடைய வார்த்தையை நமக்கு கொடுத்திருக்கிறார்; நாம் பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. இது நம்முடைய வார்த்தைகளோ, நம்முடைய சிந்தனைகளோ, நம்முடைய கற்பனையோ அல்ல, அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. நம்முடைய விசுவாசம் அவருடைய வார்த்தையில் இருக்கிறது, அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போக முடியாதே!
இப்போது, இந்த முத்திரைகள் திறப்பதை நாம் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவர் மீண்டும் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதையும், நம்முடைய பெயர்கள் அங்கே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடியும். நம்மால் நம்மை அடக்கிக்கொள்ள முடியவில்லை...ஆம், அங்கே என்னுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது. அவர் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.
உங்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று தேவனுடைய சத்தம் உங்களிடத்தில்சொல்லுகிறபடியால், இரண்டாம் முத்திரை 63-0319 என்ற செய்தியைக் கேட்க, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 4:8 / 11:25-26 / 24:6
பரி. மாற்கு 16:16
பரி. யோவான் 14:12
2 தெசலோனிக்கேயர் 2:3
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 2:6 / 6:3-4 / 17வது அதிகாரம் / 19:11-16
யோவேல் 2:25
ஆமோஸ் 3:6-7