ஞாயிறு
13 ஆகஸ்ட் 2023
63-0321
நான்காம் முத்திரை

அன்புள்ள கழுகுக்குஞ்சுகளே,

தேவனுடைய சத்தம் நாம் இதுவரை இல்லாத உயரத்திற்கு நம்மை அழைத்துச் சென்று, அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறது. அவர் நம்மை ஆகாயத்தில் உயர அழைத்துச் செல்லும்போது, அவருடைய வல்லமையான செட்டைகளுக்குள் நாம் நம்முடைய சிறிய அலகுகளைக் குத்திப் பிடித்துக்கொண்டோம். மேகமூட்டமான ஆகாயங்கள் அனைத்திற்கும் மேலாக நாம் சுற்றி வருகிறோம். நித்தியத்தையே நம்மால் காண முடிகிறது. இது நமக்கு ஒரு முழுமையான புதிய வெளிப்பாடாயுள்ளது. அவர் நம்மை எவ்வளவு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறாரோ, அது அவ்வளவு தெளிவாகிறது. நான் அதைக் காண்கிறேன்…நான் அதைக் காண்கிறேன் என்றே: நாம் சத்தமிடுகிறோம்.

அவர் இப்பொழுது தன்னுடைய வல்லமையான சிறகுகளில் கொண்டு சென்று, அவைகளுக்கு ஒரு பெரிய குலுக்கலைக் கொடுத்து, "என் குஞ்சுகளே பறந்து செல்லுங்கள், பறந்து செல்லுங்கள்" என்று நம்மிடம் சொன்னார். முதலில் நாம் மிகவும் பயமடைந்தோம். சத்துருவோ நம்முடைய சிந்தனைகளை பல சந்தேகங்களினால் நிரப்பிக்கொண்டிருந்தான். என்னால் முடியாது, என்னால் முடியாது. அப்பொழுது நாம், "உங்களால் முடியும், நீங்கள் என்னுடைய கழுகுக்குஞ்சுகள், உங்களுடைய சிறகுகளை அடிக்கத் தொடங்குங்கள்!!" என்று அவர் சத்தமிட்டு, நம்மிடம் இடிமுழக்கமிடுவதைக் கேட்டோம்.

பின்னர், நம்முடைய சிறிய செட்டைகள் திடீரென இயற்கையாகவே படபடக்க ஆரம்பிக்கின்றன. அவருடைய வார்த்தையை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, நாம் யார், என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு உறுதியளிக்கிறது, நம்முடைய செட்டைகள் வலுவடைகின்றன. பட, பட, பட...இயங்கு பொத்தானை அழுத்துங்கள், இயங்கு பொத்தானை அழுத்துங்கள், இயங்கு பொத்தானை அழுத்துங்கள்…அப்பொழுது திடீரென்று, நாம் பறந்துகொண்டிருக்கிறோம். நாம் கழுகுகள்.

ஒரு சிறிய பயம் நம்முடைய சிந்தனைகளில் நுழைய முயற்சிக்கும் போது, நாம் சுற்றிப் பார்த்துவிட்டு அவருடைய சத்தத்தைக் கேட்க ஆரம்பிக்கிறோம். நாம் விழ ஆரம்பித்தால் நம்மைப் பிடிப்பதற்காக நமக்குப் பக்கத்தில், அங்கே அவர் பறந்துகொண்டிருக்கிறார். நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை நாம் உணருகிறோம், தகப்பனாகிய கழுகானவர் அங்கே நம்மோடு உள்ளார். நாம் செய்யும் ஒவ்வொரு அசைவையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். நமக்கு எதுவுமே சம்பவிக்க அவர் அனுமதிக்கமாட்டார்.

நாம் இதுவரை ஒருபோதும் உணர்ந்திராததைப் போன்ற அப்பேர்ப்பட்ட சுதந்திரமும் உறுதியுமாயிற்றே. நீங்கள் என்னுடைய கழுகுக்குஞ்சுகள் என்று, அவர் நம்மிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் உங்களிடம் விட்டுச் சென்ற என் சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னதற்கு நீங்கள் கீழ்படிந்து சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஒலிநாடாக்களில் அவர் நம்மிடம் எந்த காரியத்தையாவது கூறும்போது, நாம் அதைப் போய் செய்வோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் இது அவருடைய வார்த்தையாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அவர் அதற்குப் பின்னால் நிற்பார். இது வேதாகமத்தில் எழுதப்படாவிட்டாலும் கூட, அவர் எப்படியும், அதன் பின்னால் நிற்பார்.

இது அதற்கு புறம்பாக இருந்தால், அவர் அதை அவருடைய தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்துவார் என்பதை, நாம் அறிவோம். தேவனுடைய எல்லா இரகசியங்களும் அவருடைய தீர்க்கதரிசிக்கு, அவருக்கு மாத்திரமே தெரியப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் உணருகிறோம், எனவே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எந்த காரியமும், அது ஒலிநாடாவில் உள்ளது.

ஊக்கப்படுத்துதலைக் கொண்டு வருகிற வெளிப்படுத்துதலின் வல்லமையைக் குறித்துப் பேசுகிறோம். நாம் அதை நம்முடைய உச்ச குரல்களில் சத்தமிட விரும்புகிறோம். நான் ஒரு ஒலிநாடா கழுகு என்பதை, உலகம் அறிந்துகொள்ள நாம் விரும்புகிறோம்!

தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப்பாகிறது. அதாவது அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தையை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அப்பொழுது, நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், இது இன்னும் சிந்தையாகவே இருக்கின்றது.

இது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மகிமை. இப்போது நாம் அதை பேச விரும்புகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே என்னை முன் குறித்து, என்னைத் தெரிந்துகொண்டார். நான் மாம்சமாக்கப்பட்ட அவருடைய ஜீவ வார்த்தையாக இருக்கிறேன். அவர் என்னிடம் கேளுங்கள் அப்போது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்னார். தட்டுங்கள், அது திறக்கப்படும். நம்முடைய தேவை என்னவாயிருந்தாலும், நாம் அதைப் பேசுகிறோம்.

இது கழுகுக் காலம், நாம் அவருடைய கழுகுக்குஞ்சுகள். நாம் நம்முடைய ஜீவியத்தில் இதைவிட ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தி அடைந்தவர்களாகவோ இருந்ததேயில்லை. பயமேயில்லை. கவலைகளேயில்லை.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய வல்லமையான கழுகு நம்மிடத்தில் சத்தமிட்டு நான்காம் முத்திரையை 63-0321 வெளிப்படுத்துகிற போது, எங்களுடன் புதிய உயரத்திற்கு பறக்க வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

நான்காவது முத்திரை 63-0321 என்ற பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வேதவசனங்கள்.
பரி. மத்தேயு 4
பரி. லூக்கா 24:49
பரி. யோவான் 6:63
அப்போஸ்தலர் 2:38
வெளிப்படுத்தின விசேஷம் 2:18-23, 6:7-8, 10:1-7, 12:13, 13:1-14, 16:12-16, 19:15-17
ஆதியாகமம் 1:1
சங்கீதம் 16:8-11
II சாமுவேல் 6:14
எரேமியா 32
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 4