ஞாயிறு
06 ஆகஸ்ட் 2023
63-0320
மூன்றாம் முத்திரை

அன்புள்ள ஊக்குவிக்கப்பட்ட மணவாட்டியே,

ஆயத்தமாகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் பெற்றிருந்ததைவிட வெளிப்படுத்துதல் மூலம் அதிக ஊக்கமளித்தலை நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் வார்த்தையில் நிறைந்திருப்பீர்கள். அது மிகவும் நன்றாகவும், தெளிவாகவும் இருக்கும்...மேலும் அவர் அதைப் பேசினபோதிருந்ததைக் காட்டிலும் கூடத் தெளிவாகவும் இருக்கும். அதைப் பெற்றுக்கொள்ள ஒரே ஒரு வழி மாத்திரமே உள்ளது, நீங்கள் அதற்கு இயங்கு பொத்தானை அழுத்தி கேட்க வேண்டும்!

ஒலிநாடாக்களைப் பெற்று, அவைகளை கவனமாக கூர்ந்து கேளுங்கள். ஏனெனில், நீங்கள் அதை ஒலிநாடாவில் கேட்கலாம், ஏனெனில் அவைகள் திரும்பி போட்டு கேட்கப்படும்போது, அவைகள் உண்மையாகவே நன்மையாகவும், மிகத் தெளிவாகவும் இருக்கின்றன. எனவே, நீங்கள் அதைத் தெளிவாகக் கேட்கலாம்.

தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்ன கூறினார்? வேதாகமத்தின் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட ஒருவர்; வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு முத்திரைகளையும், இடிமுழக்கங்களையும், மற்றும் அவருடைய எல்லா வார்த்தையும் அளிக்க அவர் தெரிந்துகொண்ட ஒருவர். அவருடைய மணவாட்டியை வெளியே அழைக்க அவர் தெரிந்துகொண்ட தூதன். இந்த கடைசி நாட்களில் அவருடைய சத்தமாக இருக்கும்படி அவர் தெரிந்து கொண்ட ஒருவர்.

நாம் செய்யும்படிக்கு அவர் என்ன கூறினார் என்பதை நாம் உறுதியாக புரிந்துகொள்ளும்படிக்கு மீண்டும் ஒருமுறை அந்த மேற்கோளை நாம் வாசிப்போமாக.

"நீங்கள் அதைப் பெறுவீர்கள்", எங்கே?
"நீங்கள் அதைத் தெளிவாகப் பெறுவீர்கள்", எங்கே?

இயங்கு பொத்தானை அழுத்தி அந்த ஒலிநாடாக்களை கேட்பது எவ்வளவு முக்கியமானது என்பதை குறித்து பேசுகிறோம். மகிமை!! இது என்னுடைய வார்த்தையல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு சொல்லுகிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, அதை அங்கே பெறுங்கள்... ஒலிநாடாக்களில். பிரசங்கிமார்களே, என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.

இந்தச் செய்தியை தாங்கள் விசுவாசிப்பதாகக் கூறும் எந்தவொரு நபரும் ஒலிநாடாக்களை இயக்கிக் கேட்பது மணவாட்டி செய்யக்கூடிய மகத்தான காரியம் அல்ல என்று எப்படி கூற முடியும்? ஒரு மேய்ப்பர் எவ்வாறு தனது ஊழியத்தை தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு மேலாக வைக்க முடியும்? அதை மேற்கோள் காட்டுவதற்காக மட்டும் அல்ல....நான் இப்போதும் கூட அதைச் செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் அவருடைய மந்தைக்கு அந்த சத்தத்தை இயக்குவதனால் அவர்கள் "அங்கே அதை தெளிவாகப் பெற்றுக்கொள்ள முடியும்."

உலகத்திலே மகத்தான ஊழியம் ஒலிநாடா ஊழியமே. இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதைக் காட்டிலும் மகத்தானது வேறொன்றுமில்லை. ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே, அவருடைய மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தமாக இருக்கிறது.

மீண்டும் ஒருமுறை நான் தெளிவுபடுத்தட்டும். நான் எந்த ஊழியக்காரர் பிரசங்கிப்பதற்கும் எதிராக இருக்கவில்லை, ஒரு ஊழியக்காரனால் பிரசங்கிக்கவோ அல்லது போதிக்கவோ முடியாது என்று நான் நினைக்கிறதில்லை. ஆனால் எனக்கும் என்னுடைய ஊழியத்தையும் பொறுத்தவரையில், ஒலிப்பதிவு செய்யப்பட்டு காந்த ஒலிநாடாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தைக்கு செவி கொடுக்கும்படி உலகத்திற்கு சொல்லவே நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். இது தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்றும், இது, இது மாத்திரமே, உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது என்றும் நான் விசுவாசிக்கிறேன். இது உங்களுக்கு தேவைப்படுகிற ஒவ்வொரு காரியத்தையும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உட்பட அளிக்கும், ஏனென்றால் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.

மணவாட்டிக்கு என்னுடைய வார்த்தை தேவைப்படுகிறதில்லை, நான் மற்ற எல்லா ஊழியக்காரர்களைப் போல வார்த்தையை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஊழியத்திற்கு செவி கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்றும், உங்களுடைய அழைப்பையும் நீங்கள் கூறி மேற்கோள் காட்டுகிறீர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தமே மிக முக்கியமான ஊழியம் என்பதை நான் ஜனங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். வேறெதுவுமே மகத்தானதில்லை. அவர்கள் வேறெந்த காரியத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

எந்த ஊழியக்காரர் மீதோ அல்லது எந்த ஊழியத்தின் மீதோ தவறான ஆவியை அல்லது தவறான மனப்பான்மையை ஜனங்கள் கொண்டிருக்க நான் இந்தக் காரியங்களை கூறிக்கொண்டிருக்கவில்லை, அப்படியல்லவே. நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் என்னுடைய சகோதரர்கள். தேவன் அவர்களுடைய ஜீவியங்களில் ஒரு அழைப்பை விடுத்துள்ளார். தேவனுடைய அபிஷேக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிராக நான் பேசத் துணிவேனா, ஆனால் நான் பேசும்படி கட்டாயப்படுத்தப்படுகிறேன் என்றும், அநேகர் தங்களுடைய ஊழியத்தின் பேரில் அதிக முக்கியத்துவத்தை அளித்து, மணவாட்டி கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமான ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தத்திற்கு முக்கியத்தும் அளிக்கவில்லை என்றே கூறுகிறேன்.

நான், "சகோதரன் பிரான்ஹாமை மீண்டும் உங்களுடைய பிரசங்க பீடத்திற்கு கொண்டு வாருங்கள்" என்றே கூறினேன், மேலும் சகோதரன் பிரான்ஹாம் அதை ஒருபோதும் ஒலிநாடாவில் கூறவேயில்லை என்பதைத் தங்களுடைய ஜனங்களுக்கு சொல்ல அநேக ஊழியக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து, வார்த்தையை எடுத்து அதை ஜனங்களுக்கு அளிக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும்; அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதற்கு அல்ல என்றும் சாக்குபோக்குகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மேய்ப்பர் அவர்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்கினால் அது தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள், அவர்கள் ஒலிநாடாக்களை தங்களுடைய சபைகளில் கேட்டுக்கொண்டிருந்தால், அது ஊழியம் அல்லவென்றும், அவர்கள் மணவாட்டியும் அல்லவென்றும் கூறுவதன் மூலம் ஜனங்களை விமர்சிக்கிறார்கள்.

எத்தனையோ சாக்குபோக்குகளை அவர்கள் பயன்படுத்தி ஜனங்களிடம் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தங்களுடைய ஜனங்களிடம், "நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான காரியம் ஒலிநாடாக்களே" என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் அப்படிக் கூறிவிட்டால், "அப்படியானால் ஒலிநாடாக்கள் மிக முக்கியமானதாக இருந்தால் நம்முடைய சபையில் நாம் ஏன் இயக்கக் கூடாது?"...என்று ஜனங்கள் கேட்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை நாம் செவி கொடுக்கப்போவது இவருக்கே:

தேவன் தாமே ஒரு மனிதனில் வெளிப்பட்டு, அவருக்குப் பின்னாக யார் இருந்தது என்பதையும்; சாராள் என்ன செய்தாள் என்பதையும், கூடாரத்தில் நகைத்தாள் என்பதையும் சொன்னார். இந்த கடைசி நாட்களைக் குறித்து, மல்கியா, மற்றும் இந்த எல்லா வேத வாக்கியங்களும் முன்னுரைத்துள்ளன. எபிரெயர் 4- “வார்த்தை” திரும்ப வரும்பொழுது என்று கூறியுள்ளது. மல்கியா 4- அது ஒரு மனிதன் மூலம் திரும்ப வரும் என்று கூறியுள்ளது.

அந்த வார்த்தை ஒரு மனிதனால் திரும்பி வந்துள்ளது, ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய சத்தத்தை நாம் பெற்றுள்ளோம், நாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதையே கேட்கப்போகிறோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, காந்த ஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட மாம்சமாக்கப்பட்ட வார்த்தைக்கு நாம் செவிகொடுப்போம் என்று மீண்டும் ஒருமுறை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது: மூன்றாம் முத்திரை 63-0320 என்ற செய்தியின் பேரில் நமக்கு வெளிப்பாட்டை அளிக்கிறது.

மணவாட்டியே, நாம் என்னே ஒரு நேரத்தை உடையவர்களாக இருப்போம். என்னே சந்தோஷம் நம்முடைய இருதயங்களை நிரப்பும். தேவன் தாமே சாத்தானிடத்தில்: “அவர்களை விட்டுவிடு. அவர்களில் ஒருவரை நீ பிடித்துவிடுவாயானால், என்னுடைய சிறு மந்தை என்னுடைய எண்ணையினாலும் சுத்த வார்த்தையின் திராட்சை ரசத்தாலும் நிரப்பப்பட்டுள்ளது, எனவே 'மரியாளே வாழ்க' என்பதற்கும், உன்னுடைய கோட்பாடுகள் சிலவற்றை கூறுவதற்கும் அவர்களை நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம். உன்னுடைய கரங்களை அவர்களிடத்திலிருந்து விலக்கி வை. அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர், ஏனெனில் அவர்கள் என்னுடைய எண்ணெயால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் என் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறார்கள். ‘நான் அவர்களை மறுபடியும் உயிரோடெழுப்புவேன்.’ அதை சேதப்படுத்தாதே! அவர்களை குழப்பமுறச் செய்ய முயற்சிக்காதே...அவர்களை விட்டு அகன்று நில்" என்று சொன்னதை நாம் கேட்கிறபடியால், என்னே சமாதானம் நம்முடைய ஆத்மாக்களை ஆறுதல் படுத்தும்.

நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நம்மிடம் வார்த்தை இருக்கிறது. நாம் வார்த்தையாயிருக்கிறோம். நாம் வேறெதற்காகவும் நிறுத்துவதில்லை. நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். சாத்தானே, அப்பாலே போ, ஒவ்வொரு காரியமும் எங்களுக்கு சொந்தமானதாய் இருக்கிறது. தேவன் அவண்ணமாய் கூறினார். அது எழுதப்பட்டிருக்கிறதே!

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள் வேதவசனங்கள்

பரி. மத்தேயு 25:3-4
பரி. யோவான் 1:1, 1:14, 14:12, 17:17
அப்போஸ்தலர் 2வது அதிகாரம்
I தீமோத்தேயு 3:16
எபிரெயர் 4:12, 13:8
I யோவான் 5:7
லேவியராகமம் 8:12
எரேமியா 32வது அதிகாரம்
யோவேல் 2:28
சகரியா 4:12