
அன்பானவர்களே...நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப்போகிறேன்,
தேவன், மகத்தான சிருஷ்டிகர், ஆல்பாவும் ஒமேகாவும், பள்ளத்தாக்கின் லீலியும், சாரோனின் ரோஜாவும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியுமானவர், அக்கினி ஸ்தம்பமான, தேவன் தாமே பூமிக்கு வந்து மனித உதடுகளின் வழியாக நம்மிடம் பேசி, மகிமை!, அதைக் காந்த ஒலிநாடாவில் பதிவுசெய்து வைத்தார், அதனால் அவர் உங்களை…"உங்களை" அவருடைய மணவாட்டி என்று அழைப்பதை நீங்கள் கேட்கலாம்.
என் நண்பர்களே அதை கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உங்கள் கண்களைப் பார்த்து: “நீங்கள் என்னுடைய மணவாட்டி. நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களுக்காக இவ்வளவு காலம் காத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள். நீங்கள் என் மாம்சத்தின் மாம்சமும், என் எலும்பின் எலும்புமாயிருக்கிறீர்கள். நான் பூமியை அல்லது நட்சத்திரங்களை உண்டாக்குவதற்கு முன்பே நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நாம் நித்தியத்தை ஒன்றாகக் கழிப்போம். இப்பொழுது, நான் உங்களுக்காக வருகிறேன்."
அது மாத்திரமே நம் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை கொடுக்க வேண்டும். பிசாசு உங்கள் மீது எதை எறிய முடியும், உங்களிடத்தில் எதைச் சொல்ல முடியும், உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதை உங்கள் மீது வைக்க முடியும்? ஒன்றுமில்லையே, நீங்கள் கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருக்கிறீர்களே! நீங்கள் அவருடைய வார்த்தையால் மாம்சமாக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள், நீங்கள் திருமதி. இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறீர்கள்.
எவராலும், எந்த மொழியிலும், நமக்கு என்ன அர்த்தம் என்பதை எப்படி எழுதவும் வெளிப்படுத்தவும் முடியும்? உங்களால் வெறுமனே அதைச் செய்ய முடியாது.
நீங்கள் சரியான வெளிப்படுத்துதலைப் பெற்று இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்டாலொழிய இந்த வார்த்தைகளை கேட்கும்படியான கனத்தையும் சிலாக்கியத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் இந்த உலகத்தில் எங்குமே இல்லை.
காலத்தின் தொடக்கத்திலிருந்தே உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மிக மகத்தான நிகழ்வுகள், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, நாமும் அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறோம். அவர் இந்த நாளுக்காக, இந்த மணிநேரத்திற்காக, இந்த ஜனத்திற்காகக் காத்திருந்தார்; உங்களுக்காக, அவருடைய மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவே.
ஏழு முத்திரைகளின் இரகசியத்தின் வெளிப்பாடு, இடிமுழக்கங்களால் வெளிப்படுத்தப்பட்டு, நம்முடைய பரிபூரணத்திற்காக, முழுமையாக திரும்ப அளிக்கப்பட்ட அவருடைய ஆதாம், அவருடைய வருகை, இவை அனைத்தும் இப்போது வெளிப்படுத்தப்பட்டு, அவருடைய மணவாட்டியான உங்களுக்குள் இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கிறதே!
மோசேயின் நாளில் இல்லை. நோவாவின் நாளில் இல்லை. இயேசுவின் நாளில் இல்லை, யோவான் அல்லது பவுலின் நாளிலும் கூட இல்லை; அது இப்போது, உங்களுடன் சம்பவித்துக் கொண்டிருக்கிறது.
நாம் அதைத் தவறவிட விரும்பவில்லை. அவருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாயிருக்க விரும்புகிறோம். அதைச் செய்ய, நம்முடைய பதில்களுக்காக நாம் வார்த்தைக்கு செல்லும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம். என்னுடைய யோசனையோ, அல்லது ஏதோ ஒரு மனிதனுடைய யோசனையோ அல்லது சிந்தனைகளோ அல்ல, ஆனால் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தை என்ன கூறுகிறது என்பதேயாகும்.
மணவாட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்" என்று சொல்லி ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். எனவே மணவாட்டியை ஒன்று சேர்த்து இணைக்கப்போவது என்ன என்பதைப் பார்க்க நாம் தேவனுடைய வார்த்தையில் நோக்கிப் பார்க்க வேண்டும்.
பின்னர் வேதத்தில் எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் வரப்போவதாயுள்ளன. அது சரி. ஆகவே எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று, நான் நம்புகிறேன்.
அது அங்கே சரியாக வார்த்தையில் உள்ளது. ஏழு இடிமுழக்கங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்க்கும்படியாக நம்முடைய நாளில் வெளிப்படுத்தப்படும்.
அதன்பின்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடுத்த கேள்வி: இடிமுழக்கங்கள் என்றால் என்ன?
“இடிமுழக்கம்” உண்டானபொழுது. ஒரு பலத்த இடிமுழக்கம் என்பது தேவனுடைய சத்தம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறே கூறுகின்றது, பாருங்கள், “ஒரு இடிமுழக்கம்.” அது ஒரு இடிமுழக்கமாயிருந்தது என்று அவர்கள் நினைத்தனர், ஆனால் அது தேவனாயிருந்தது. அது அவருக்கு வெளிப்பட்டதனால், அவர் அதைப் புரிந்து கொண்டார். புரிகிறதா? அது ஒரு இடிமுழக்கமாயிருந்து.
எனவே இடிமுழக்கங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை மணவாட்டிக்கு (நமக்குக்) கொடுக்கும்படி அவர்களை ஒன்று சேர்த்து கொண்டுவரும்படியான தேவனுடைய சத்தமாய் இருக்கின்றன. அங்குதான் நம்முடைய பதிலே உள்ளது.
மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
இப்பொழுது, தேவனுடைய கிருபையால், நான் உங்களுடைய சகோதரனாக இருக்கிறேன், ஆனால் கர்த்தருடைய தூதன் கீழே இறங்குகிறபோது, அப்பொழுது, அது உங்களுக்கு தேவனுடைய சத்தமாக மாறுகிறது... நானாகவே எதையும் கூற முடியாது, ஆனால் அவர் எனக்குக் என்ன காண்பிக்கிறாரோ, அதையே நான் கூறுகிறேன். நீங்கள் அதை விசுவாசித்து, என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
நாம் ஒன்று கூடி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள, அவருடைய மணவாட்டிக்கான அவருடைய இடிமுழக்கத்தை கேட்கும்போது, இதை விசுவாசித்து, இந்த ஞாயிற்றுக்கிழமை என்ன சம்பவிக்கிறது என்றும், என்ன நடக்கிறது என்பதையும் கவனியுங்கள்.
"இப்பொழுது நாம் உன்னதங்களில் வீற்றிருப்பதை” குறித்துப் பேசுகிறோமே? அது எவ்விதம் இருக்கும்! எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் முன்பு, பூமியில் நாம் இருந்துகொண்டு, நாம் இப்பொழுது உள்ள நிலைமையில் இருந்துகொண்டே இந்தவிதமாக நம்மால் உணர முடிந்தால்; சுவர்களில் சாய்ந்து கொண்டு, மழையில் நின்று, இதைக் கேட்டு, இவ்வளவாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமானால்; அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணும்போது அது என்னவாயிருக்கும்! ஓ, என்னே! ஓ, அது ஒரு மகிமையான நேரமாயிருக்கும்.
இந்த மகிமையான நேரத்தில் தவறவிட்டுவிடாதீர்கள். ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, 63-0318 முதலாம் முத்திரை என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது எங்களோடு சேர்ந்துகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 10:1 / 11:1-14 / 24:6 / 28:19
பரி. யோவான் 12:23-28
அப்போஸ்தலர் 2:38
2 தெசலோனிக்கேயர் 2:3-12
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2 / 10:1-7 / 12:7-9 / 13:16 / 19:11-16
மல்கியா 3வது மற்றும் 4வது அதிகாரங்கள்
தானியேல் 8:23-25 / 11:21 / 9:25-27
பிரசங்க மொழிபெயர்ப்புகள்