காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 15 அக்டோபர், 2022

அன்பான கழுகுகளே,

64-0830M கேள்விகளும் பதில்களும் #3 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், உங்கள் இருதயத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களைக் கேட்க, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 8 அக்டோபர், 2022

அன்பான நியமிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகையே,

தேவன் நம்மை மிக அதிகமாக நேசிக்கிறபடியால், அவர் தம்முடைய தீர்க்கதரிசியை நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கச் செய்கிறார், அந்த பதில்களை ஒலி நாடாவில் வைத்துவிட்டார். நமக்கு அதைக் குறித்த தேவை ஏற்படும்போது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசித்து, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதுதான்.

என்னிடம் பரிசுத்த ஆவி இருக்கிறதா?

தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிற போது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டு, அதை ஏற்றுக் கொள்ளும்போது, அதுவே பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது.

நீர் இந்த செய்தியை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், அது கர்த்தர் உரைக்கிறதாவது என நான் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், கர்த்தாவே நான் அதை உடையவனாய் இருக்கிறேனே!

ஆனால், நான் மிகவும் தோல்வியடைவது போல் தென்படுகிறது…மேலும் எனது கடந்த காலம் எப்படி?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்றோ, அல்லது அதைப் பற்றி ஒன்றுமில்லை, அது தேவன் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாய் உள்ளது. அதுதான் அத்தாட்சியாயுள்ளது.

கர்த்தாவே, நீர் என் கடந்த காலத்தைப் பார்க்கிறதில்லை, நீர் என்னுடைய அநேக, அநேக தவறுகளையும் கூட இப்பொழுது பார்க்கிறதில்லை, நீர் என்னுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறீர்; தேவனுக்கு மகிமை, நான் பரிசுத்த ஆவியை உடையவனாய் இருக்கிறேன்.

சகோதரன் பிரான்ஹாம், நீர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் மாத்திரம் அல்ல என்று நீர் கூறினீர் என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தக் கடைசி காலத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியை யார் வழிநடத்திக் கொண்டிருப்பார்?

தேவனுடைய உதவியால், நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்.

என்னுடைய இருதயத்தில் அநேக காரியங்கள் உள்ளன, நான் என்ன செய்ய வேண்டும்?

தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, "நாம் போவோம்" என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் இப்பொழுது முக்கியம் வாய்ந்ததல்ல.

கர்த்தாவே உமக்கு நன்றி, நாங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். உம்முடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. உம்முடைய பரிசுத்த ஆவியானது உம்முடைய தீர்க்கதரிசி மூலம் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது, எனவே நாங்கள் உலகம் முழுவதிலுமிருந்து உம்முடைய வார்த்தையின் பேரில் ஒன்று கூடி, நாங்கள் புறப்பட்டு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம்.

என்னிடம் பல கேள்விகள் உள்ளன, எனக்கு வழிகாட்டுதல், உதவி, மற்றும் பதில்கள் தேவை. நான் அதை எங்கே பெற்றுக்கொள்வது?

நான் உங்களை நேசிக்கிறபடியால், நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கவே இங்கே இருக்கிறேன். நீங்கள் கிறிஸ்துவுக்கு நான் பெற்றெடுத்த என் பிள்ளைகள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் உரிமை கோருகிறேன். இன்றிரவு நான் உங்களை உரிமை கோருகிறேன்; நான் உங்களை எல்லா நேரத்திலும் உரிமை கோருகிறேன்; நான் உங்களை எப்பொழுதும் என்னுடைய சகோதர சகோதரியுமாகவே உரிமை கோருகிறேன்.

சகோதரன் பிரான்ஹாம் நாங்களும் கூட உம்மை நேசிக்கிறோம். எங்களுக்கு வழிகாட்டவும், எங்களை வழி நடத்தவுமே தேவன் உம்மை அனுப்பினார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை வார்த்தையை கொண்டு சரிபார்த்துள்ளோம், அது பரிபூரணமாக அமைந்துள்ளது.

சுவிசேஷத்தில் என்னுடைய தகப்பன் யார்?

நீங்கள் என் பிள்ளைகள்; நான்-நான் சுவிசேஷத்தில் உங்களுடைய தகப்பன், ஒரு குருவானவராயிருப்பது போன்ற தந்தை அல்ல, பவுல் அங்கே கூறினது போன்று நான் சுவிசேஷத்தில் உங்களுடைய தகப்பனாய் இருக்கிறேன்.

சகோதரன் பிரான்ஹாம், எங்களை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் உம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். வேதாகமத்தில் பவுல் கூறினது போலவே, நீர் என்ன கூறினீரோ அது சத்தியமாய் இருக்கிறபடியால், அதை நாங்கள் சரியாக பின்பற்றும்படி நீர் கூறிக்கொண்டிருக்கிறீர், நாங்கள் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் மாற்றக்கூடாது.

நீர் என்ன செய்ய வேண்டும் சகோதரன் பிரான்ஹாம்?

நான் உங்களை கிறிஸ்துவுக்குப் பெற்றெடுத்தேன், இப்பொழுது, நான்-நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன்; அது கிறிஸ்துவுக்கு உங்களை ஒரு கற்புள்ள கன்னிகையாக நியமிப்பதாயுள்ளது. என்னுடைய நம்பிக்கையை வீணாக்கிவிடாதீர்கள்! என்னுடைய நம்பிக்கையை வீணாக்கிவிடாதீர்கள்! நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாகத் தரித்திருங்கள்.

நீர் கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு கன்னிகைகளாக எங்களை அவருக்கு நியமித்திருக்கிறீர். நாங்கள் ஒருவரோடு ஒருவர் கூட சரசம் செய்ய மாட்டோம், நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் கேட்கின்ற ஒவ்வொரு வார்த்தையையும், உம்முடைய சேகரிக்கப்பட்ட வார்த்தையின் மூலமே சரிபார்த்து செய்கிறோம்.

சகோதரன் பிரான்ஹாம், அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு நான் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்ன?

வார்த்தையுடன் தரித்திருங்கள்.

நம்முடைய கேள்விகளுக்கான எல்லா பதில்களும் இந்த வார்த்தைகளால் அடக்கப்படலாம்:

வார்த்தையுடன் தரித்திருங்கள்.

இந்த செய்தியே நம்முடைய நாளுக்கான வார்த்தையாய் உள்ளது. சகோதரன் பிரான்ஹாம் நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருக்கிறார். ஒவ்வொரு காரியமும் வார்த்தையோடு சரியாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தினால், நமக்குத் தேவையான அனைத்தும் அந்த ஒலிநாடாக்களில் அங்கே அருளப்பட்டுள்ளது.

உங்களுக்கு பதில் தேவைபடுகிற எதையாவது உங்கள் இருதயத்தில் பெற்றுள்ளீர்களா? 64-0823E - கேள்விகளும் பதில்களும் #2 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், நாங்கள் எங்களுடைய எல்லா பதில்களையும் பெற்றுக்கொள்ளப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

தொடர்புடைய சேவைகள்
சனி, 1 அக்டோபர், 2022

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

உங்களால் இங்கே கூடாரத்திற்கு வர முடியாவிட்டால், எங்காவது சபையைக் கண்டறிந்து; அதற்கு செல்லுங்கள். உங்களால் எங்களுடன் ஒலிநாடாக்களை கேட்க முடியாவிட்டால், எங்காவது ஒலிநாடாக்களைக் கேளுங்கள். ஒரு பிரசங்கியார், போதகர், அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் ஒலிநாடாக்களை இயக்கிக் கேட்பதேயாகும்.

இது என்னுடைய மூல ஆதாரமான வீடு; இது என்னுடைய தலைமையகம்; இங்குதான் நாங்கள் அமைத்துள்ளோம். இப்பொழுது, என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், நீங்கள் ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தாலும், இது தான் நம்முடைய தலைமையகம், இங்கேயே! நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டீர்கள் என்று, என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பக் கேட்டு, அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, அதை நினைவில் கொள்ளுங்கள்!

தீர்க்கதரிசி என்ன செய்து கொண்டிருந்தார்? ஆகாரத்தை சேமித்தார். நாம் புசிக்கும்படியான ஆகாரத்தை சேமித்தார், அதனால் நாம் விருந்துண்ணும்படியான ஒன்றைப் பெற்றுள்ளோம். நாம் நம்முடைய அறையில் வசதியாக நம்முடைய ஒலிநாடாக்களை அமர்ந்து கேட்கிறோம்.

நாடு முழுவதிற்கும் ஒரே ஒரு சிறிய களஞ்சியம், ஒரு சிறிய களஞ்சியம் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார். அவர் போய்விட்டப் பிறகு, நாம் இங்கே தரித்திருந்து கேட்கும்படியாக, அவர் ஏராளமான பொருட்களை வைத்துவிட்டார்; அடையாளம், முற்றிலுமானது, முத்திரைகள், ஏழு சபைக் காலங்கள், வருங்கால வீடு, அவருடைய வார்த்தையை நிரூபித்தல், அனைத்தும் நமக்காகவே.

அவர் வெகு தொலைவில் இருப்பது போல் தென்படுகிறது, ஆனால் இந்தக் காரியங்கள் உண்மை என்று நாம் இன்னமும் நினைவில் கொள்கிறோம். இதுவே நாம் தனித்து நடக்க வேண்டிய ஒரு ஜீவியமாய் உள்ளது.

களஞ்சியங்கள் நிரம்பியுள்ளன. மாசில்லாத தூய்மையான வார்த்தை என்று தேவனால் சான்றளிக்கப்பட்டுள்ள மற்றெந்த எந்த ஆகாரமும் இல்லையே.

நீங்கள் எங்களுடன் விருந்துண்ண விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய விருந்தினராக நாங்கள் மேஜையண்டை வந்து புசிக்கையில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் வரவேற்கிறோம்.

கேள்விகளும் பதில்களும் 64-0823M

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 24 செப்டம்பர், 2022

அன்பான பூமியின் உப்பானவர்களே,

இதற்கு மேல் சிறப்பான எதையும் பெற்றுக்கொள்ள முடியாததுபோல இது தென்படுகிறபோது, அவர் நமக்கு மற்றொரு முழு ஒலிநாடாவின் வெளிப்பாடுகளை அளிக்கிறார். நாம் முன்குறித்தலிலிருந்து பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளோம். அந்தக் காரணத்தினால்தான் நாம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையை கேட்க வருகிறோம்.

தேவன் உலகத்தை சிருஷ்டித்தபோது, நாம் அவருடைய சிந்தனையில் இருந்தோம். நம்முடைய குற்றம் சாட்டுபவன் தொடர்ந்து நம்மை சுட்டிக்காட்டி, பிதாவினிடத்தில், "அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள்," என்று சொல்லுகிறபோது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை மூடுகிறது. நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தேவன் நம்மைக் காண்கிறதில்லை, அவர் இயேசுவின் இரத்தத்தினூடாக நம்முடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறார்.

சாத்தானால் தொல்லைப்படுத்த முடியாது; அதாவது, அவனால் சோதிக்க முடியும், ஆனால் அவனால் ஒரு மீண்டும்- பிறந்த கிறிஸ்தவனை மேற்கொள்ள முடியாது. தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, அவனை முன்னதாகவே கண்டு, அவனை மீட்கும்படி இயேசுவை அனுப்பினபடியால், இரத்தம் அவனுக்காகப் பேசுகிறது. தேவனாலும் கூட அதை காணமுடியாமலிருக்கும்போது, அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? அவராலும் கூட…அவர் கேட்கிற ஒரே காரியம் உங்களுடைய சத்தமே. அவர் உங்களுடைய பிரதிநிதித்துவத்தை காண்கிறார். ஆமென். அது உண்மை. புரிகிறதா?

தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு இந்த காரியங்களைக் கூறினார். அது அவர் பேசிக்கொண்டிருந்ததல்ல; அவர் தேவனுடைய சிந்தனைகளை, வரவிருக்கின்ற காரியங்களின் அவருடைய தன்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளை வெளிப்படுத்த அவருடைய வாயை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளைக் கூறின பிறகு, அவைகள் நிறைவேற வேண்டும். "வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை."

அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனுஷகுமாரன் நமக்கு மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்டார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நம்முடைய தீர்க்கதரிசி அவரைக் குறித்து உரைத்திருந்த ஒவ்வொரு வேத வாக்கியத்தையும் நிறைவேற்றுகிறார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் அவருடைய மணவாட்டி: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் பரிசுத்த ஆவியின் உண்மையான அத்தாட்சியைப் பெற்றிருக்கிறோம்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா?

அப்படியானால் நாம் எதற்காக கவலைப்படுகின்றோம்? நாம் அவருக்காக நின்றால், அவர் நமக்காக நிற்பார் என்று, அவர் நமக்கு நிரூபித்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறிப்போக முடியாது.

இந்த செய்தியையும் இக்காலத்து செய்தியாளரையும் விசுவாசிக்கிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள். இந்த செய்தியையும் செய்தியாளரையும் விசுவாசிக்காத யாவரும், உலகத்தோடு அழிந்துபோவார்கள்.

சபையே கூர்ந்து கவனி. அநேகர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், இல்லையென்றால் வார்த்தையின் வெளிப்பாடே இல்லாதிருக்கிறார்கள். நாம் மனிதனுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக அவர்கள் உணருகிறார்கள். நீங்கள் உண்மையாகவே சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் திறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பது என்ன கூறுகிறது என்பதற்கு செவி கொடுங்கள்.

மணவாட்டியை எது ஒன்று சேர்க்கும்? தேவனோடு ஒன்றாயிருக்கும்படி மணவாட்டியை இணைப்பது எது?

"அந்த நாளிலே மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார்." என்ன? மணவாட்டியின் கலியாணத்திற்கு, சபையுடன் தலையை ஒன்று சேர்க்க, இணைக்க. மணவாளனின் அழைப்பு இதனூடாக வரும், மனுஷகுமாரன் இறங்கி வரும்போது, இவ்விருவரையும் ஒன்று சேர்க்க மானிட சரீரத்தில் இறங்கி வருவார். சபையானது வார்த்தையாக இருக்க வேண்டும், அவர் வார்த்தையாய் இருக்கிறார், இவ்விருவரும் ஒன்றாக இணைகின்றனர், மற்றும், அதை செய்வதற்கு, மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும்.

அதற்கு மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும். உங்களுடைய கருத்தல்ல, உங்களுடைய புரிந்துகொள்ளுதல் அல்ல, உங்களுடைய சிந்தனைகளோ உங்களுடைய பிரசங்கித்தலோ அல்ல. மனுஷகுமாரன் மணவாட்டியை மணவாளனோடு இணைப்பார், அது இப்பொழுதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது.

நாம் இப்பொழுது ஒரு விவாக விழாவில் மணவாளனோடு இருக்கிறோம், நாம் விரைவில் நம்முடைய கலியாண விருந்துக்காகவும் நம்முடைய தேன் நிலவிற்காகவும் புறப்பட்டு செல்வோம்.

வார்த்தையும் சபையும் ஒன்றாய் இருக்கின்றனர். மனுஷகுமாரன் என்னென்ன செய்தாரோ, அவர் வார்த்தையாய் இருந்தார், சபையும் அதே காரியத்தை செய்கிறது.

தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினால் மாத்திரமே நாம் பிழைக்க முடியும்! நம்முடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான தேவனுடைய வாயாக இருக்கிறார் என்று தேவன் நிரூபித்திருக்கிறார். அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? அவர் அவ்வண்ணமாய்க் கூறி, அதன்பின்னர் அவர் அதை தம்முடைய வார்த்தையால் நிரூபித்தார்.

இந்த கடைசி நாட்களில் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற மணவாட்டி சபையாய் நாம் இருக்கிறோம். மற்ற எல்லோரிடத்திலும் இருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளோம்; அவருடைய இரத்தத்தினால் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அந்த பலவர்ணமானபட்சி.

பிதாவே, நான் அதைக் குறித்து நினைக்கும்போது, உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை என்றும், அவைகளில் ஒன்றும் தவறிப்போக முடியாது என்று அறிந்திருக்கும்போதும், எங்களுடைய இருதயங்கள் துள்ளி குதித்துக்கொண்டும், என்னுடைய இருதயம் துடித்துக்கொண்டுமிருக்கிறது.

இதுவே இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட ஒரே வழியாயிருக்கிறது. இதுவே ஒரு வார்த்தையையும் மாற்றக்கூடாது என்பதற்கான ஒரே வழியாயிருக்கிறது. நினைவிருக்கட்டும், பரிசுத்த ஆவியானவர் வந்து ஒரு நபரை அபிஷேகித்தும், அந்த நபர் இன்னமும் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்க முடியும். நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட மூல வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும்.

நீங்கள் இந்த வார்த்தையோடு தரித்திருக்க விரும்பி, எங்களோடு தேவனுடைய சத்தத்தைக் கேட்க விரும்பினால், அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 64-0816 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு., எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் எங்களுடன் சேர்ந்து அல்லது எங்களுடன் ஒரே நேரத்தில் அதே ஒலிநாடாவைக் கேட்க வேண்டுமென்பதில்லை, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசிக்கு செவி கொடுங்கள் என்றே, நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24:24
மாற்கு 5:21-43 / 16:15
லூக்கா 17:30 / 24:49
யோவான் 1:1 / 5:19 / 14:12
ரோமர் 4:20-22
I தெசலோனிக்கேயர் 5:21
எபிரெயர் 4:12-16 / 6:4-6 /13:8
I இராஜாக்கள் 10:1-3
யோவேல் 2:28
ஏசாயா 9:6
மல்கியா 4

 


சனி, 17 செப்டம்பர், 2022

தீர்க்கதரிசிக்கு அன்பான நண்பர்களே,

தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்க இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் ஒன்றுகூடுவதைப் பற்றி நினைக்கும் போது என் இருதயம் உற்சாகத்தினால் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருப்பதும், அவர் தம்முடைய மணவாட்டியினிடத்தில், உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பெரிதான சந்தோஷம் என் ஜீவியத்தில் எதுவுமே இல்லை.

இந்த உலகில் எனக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருகிறது, அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. "காலை வணக்கம் நண்பர்களே" என்று நான் கேட்கும்போது, அது நித்திய ஜீவனின் வார்த்தைகளை என்னிடத்தில் பேசுகிறபடியால், நான் வசதியாக அமர்ந்து, இளைப்பாறி, அந்த ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து பருகுகிறேன். தேவன் அவரை எனக்கும் உங்களுக்கும் அனுப்பினார் என்பதை, சிந்தித்துப் பார்க்க வேண்டும், நாம் தேவனுடைய தீர்க்கதரிசி மற்றும் செய்தியாளனின் நண்பர்களாய் இருக்கிறோம்.

அவர் நம்முடைய வருங்கால பரலோக வீட்டைக் குறித்த யாவற்றையும் நமக்கு சொல்லும்படி தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பி மிக அதிகமாய் நம்மை நேசிக்கிறார். யோவானிடத்தில் சொல்லப்பட்டதை காட்டிலும் அதிகமான விவரத்தோடு கூட, அதைப் பற்றின எல்லாவற்றையும் நம்மிடத்தில் கூற அவர் மிகவும் உற்சாகமடைந்தார். அவர் எங்களுக்கு வெளிப்படுத்தினார், அது ஒரு சதுரமாக வடிவமைக்கப்பட்ட நகரம் அல்ல, ஆனால் ஒரு கூர்நுனி கோபுர நகரம், அங்கே ஆட்டுக்குட்டியானவர் அதன் உச்சியின் மேலிருந்து உலகத்தின் ஒளியாய் இருப்பார்.

வீதிகள் பொன்னினால் உண்டாக்கப்பட்டவை என்றும், நாம் ஜீவிக்கும் வீடுகளோ தெளிவான பளிங்குபோன்ற பொன்னாயிருக்கும் என்றும் அவர் நம்மை தெரிந்துகொள்ளச் செய்கிறார். அவர் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் சரியாக நம்முடைய மனதைத் தொடும் வண்ணமாகவே, நாம் விரும்பும் விதமாகவே அமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எதையும் செய்யாமல் விட்டுவிடவில்லை. தெய்வீக கட்டிடக் கலைஞர் நமக்காக, அவருக்கு பிரியமானவர்களுக்காக, இதை வடிவமைத்துள்ளார்.

ஜீவ விருட்சங்கள் அங்கே இருந்து, பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். நகரத்தின் வாசல்கள் இரவில் அடைக்கப்படுவதில்லை, ஏனென்றால் அங்கு இரவே கிடையாது, அவரே நம்முடைய ஒளியாக இருப்பார்.

அங்கே யார் இருக்கப்போகிறார்கள்?

நோவா தீர்க்கதரிசியுடன் புதிய பூமியில் யார் வெளியே வந்தார்கள்? அவருடன் பேழைக்குள் சென்றவர்கள். அது சரியா? அவர்கள் தான் வெளியே வருகிறார்கள். புரிகிறதா? நோவாவினுடைய செய்தியின் மூலம் உள்ளே சென்றவர்களே, புதிய பூமியின் தண்ணீர் ஞானஸ்நானத்திற்குப் பிறகு அதில் வெளியே வந்தவர்களாயிருந்தனர்.

என்னுடைய நண்பர்களே, அவர் நம்மைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறாரே! நாம் இன்றைக்கான நம்முடைய பேழையில்; அவருடைய வார்த்தையான, இந்த செய்தியில், நம்முடைய நோவா தீர்க்கதரிசியோடு இருக்கிறோம். அப்பால் உள்ள அந்த தேசத்தில், ஆட்டுக்குட்டியானவரே அங்கே அந்த நகரத்தில் விளக்காயிருக்கிறார், அவர் நம்மை அறிந்துகொள்வார். நாம் அவருடைய ஜனங்களாயும், கிரீடத்தில் உள்ள அவருடைய இரத்தினங்களாயும் இருக்கிறோம். நாம் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து, நான்கு சதுரமாக கட்டப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு வந்துள்ளோம். அந்த நகரத்திற்காகவே ஆபிரகாம் காத்துக்கொண்டிருந்தான்.

வார்த்தை தன்னை ரூபகாரப்படுத்துவதை நான் காண்கையில், சந்தேகத்திற் கிடமின்றி, அந்த நாளிலே, உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பார்க்கிலும் என்னுடைய கிரீடத்தின் இரத்தினங்களாக பிரகாசமாக ஜொலிப்பீர்கள் என்பதை, நான் அறிவேன்.

சந்தேகத்திற்கிடமின்றி நாம் அவருடைய கிரீடத்தின் இரத்தினங்களாக இருக்கிறோம் என்றும், அந்நாளிலே உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பார்க்கிலும் பிரகாசமாய் ஜொலிப்போம் என்பதையும், அவர் அறிந்திருந்தார் என்று, தேவனுடைய தீர்க்கதரிசி கூறினதை, நம்மால் கற்பனை செய்து பார்க்கக்கூட துவங்க முடியுமா…அல்லேலூயா...மகிமை...கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்.

நண்பர்களே, உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடி அமர்ந்து, இந்த ஒலிநாடாக்களில் அவருடைய வார்த்தையைக் கேட்டு, போஷிக்கப்படுவதே, இப்பொழுது அற்புதமாயிருக்கிறது என்று நாம் நினைத்தால், நாம் அவருடன் நகரத்தில் ஜீவிக்கும்போது அது எப்படி இருக்கும்!

தேவனுடைய தீர்க்கதரிசி நம்முடைய அண்டை-வீட்டுக்காரராக இருப்பார். நாம் அவரோடு அந்த மரங்களிலிருந்து புசித்து, அந்த வீதிகளில் நாம் ஒன்றாக நடப்போம். நாம் அந்த நீரூற்றண்டைக்கு அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து சென்று, அந்த நீரூற்றிலிருந்து பருகி, தேவனுடைய பரதீசியில் நடந்து, தேவ தூதர்கள் பூமியை சுற்றி வட்டமிட்டடிருக்க, கீதங்களைப் பாடுவோம்.

ஓ, அது என்னே ஒரு நாளாயிருக்கும்! அது முழுவதுமே பெருமதிப்புடையது. பாதையோ கரடுமுரடானதாகத் தென்பட்டு, சில சமயங்களில் அது கடினமாகிவிடுகிறது, ஆனால், ஓ, நான் அவரைக் காணும்போது அது மிக அற்பமானதாக, மிக அற்பமானதாகவே இருக்கும். அவர்கள் கூறியுள்ள காரியங்கள் மற்றும் மோசமான பெயர்கள் என்னவாயிருந்தாலும், நான் அவரை அந்த அழகான, அழகான தேவனுடைய நகரத்தில் காணும்போது அது என்னவாயிருக்கும்?

நண்பர்களே, அந்த நகரத்தைப் பார்க்கவும், அதில் இருக்கவும் நான் மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறேன். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரோடும், அவருடைய தீர்க்கதரிசியோடும், உங்கள் ஒவ்வொருவரோடும் அங்கே இருக்க வாஞ்சிக்கிறேன்.

நான் அந்த அழகான நகரத்திற்கு புறப்பட ஆயத்தமாயுள்ளேன்
என்னுடைய கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற
அந்த அழகான நகரத்திற்கு நான் போக புறப்பட்டுவிட்டேன்;
அங்கே எல்லா காலங்களிலும் மீட்கப்பட்டோர்,
வெள்ளை சிங்காசனத்தை சுற்றி "மகிமை!" என்று பாடுவரே.
பரலோகம் செல்ல நான் அநேக சமயங்களில் மிகுந்த ஆவல் கொண்டவனாய் இருக்கிறேன்,
அதனுடைய மகிமைகளை நான் அங்கே நின்று பார்ப்பேன்;
அந்த அழகான பொன்னான நகரத்தில்
என்னுடைய இரட்சகரை நான் காணும் போது அது என்னே ஒரு சந்தோஷமாக இருக்கும்!

தீர்க்கதரிசியின் நண்பர்களே, பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் அவர் எங்களிடம் பேசுவதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு தேவனுடைய சத்தம் எங்களிடம் பேசுவதைக் கேட்க அவருடைய சிங்காசனத்தை சுற்றி நாங்கள் ஒன்றுகூடுகையில், எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் உலகத்திலுள்ள எல்லோரையும் அழைக்கிறேன். இது உங்களுடைய ஜீவியத்தில் மிக மகிழ்ச்சியான ஒரு முக்கிய நாளாயிருக்கும் என்பதை, என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

பரி.மத்தேயு 19:28
பரி. யோவான் 14: 1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21: 1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-வது அதிகாரம் / 28:10 / 65:17-25 மல்கியா 3:6