அன்பான சிறு குட்டையின் லீலி புஷ்பங்களே,
நாம் சேற்று நீருக்கு மேலே உந்தித் தள்ளி, நம்முடைய இதழ்களை விரித்துள்ளோம். நம்முடைய சிறிய பூவிதழ்கள் வெளியேப் பரப்பப்பட்டு, பள்ளத்தாக்கின் லீலியை இப்பொழுது பிரதிபலிக்கின்றன. நாம் நம்முடைய ஜீவியங்களை தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் முழுமையாக அர்ப்பணித்துள்ளோம்.
நாம் கடைசி-காலத்தில் இருந்து கொண்டு, கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தசைநாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் வரையிலான ஒரு சில நிமிடங்களுக்காகவே நாம் நம்மை நிலையாக வைத்திருக்கிறோம். நாம் மேலே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
அந்த நாளும் வந்துவிட்டது. அவர் உண்மையாகவே தம்மோடு ஒன்றாயிருக்கும்படி தமக்கென்று தம்முடைய ஜனங்களை ஒன்று சேர்த்து அழைத்துக் கொண்டிருக்கிறார். இது இயேசு கிறிஸ்து நம்முடைய மாம்சத்தில் தம்முடைய ஆவியினால் ஜீவித்துக்கொண்டு, அவர் செய்த அதே காரியங்களை உலகத்திற்கு ஒரு அடையாளமாகச் செய்து கொண்டிருப்பதாகும்.
வேதாகமத்தில் மிகவும் உன்னதமான காரியம் நம்முடைய நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தூதனாலும், வேறெந்தகாரியத்தாலும் கூட, அதை செய்ய முடியாமல், ஆட்டுக்குட்டியானவரால் மாத்திரமே செய்ய முடிந்த ஒரு செயல். அவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து, அதைத் திறந்து, முத்திரைகளை உடைத்து, அவருடைய மணவாட்டியாகிய, நமக்கு அதை வெளிப்படுத்தும்படிக்கு, தம்முடைய ஏழாம் தூதனிடத்திற்கு, அதை பூமிக்கு அனுப்பினார்.
சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களோ; வார்த்தையை அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருப்பது, வார்த்தைகளால் விவரிப்பதற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. நாம் நம்முடைய சத்தங்களை உயர்த்தி, ஆரவாரமிட்டு அல்லேலுயா என்று சத்தமிடுகிறோமே! ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வந்ததைக் காட்டிலும் அபிஷேகமும், வல்லமையும், மகிமையும், வெளிப்படுத்துதலும், அவருடைய வார்த்தையின் வெளிப்பாடும் மகத்தானதாய் இருக்கிறது. வானத்திலும், பூமியிலும், பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் மற்றும் நாம் யாவருமே: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக, ஆமென்! ஆமென், ஆமென் என்று மகா சத்தமிடுகிறோம்!
ஒவ்வொரு சிருஷ்டியும், ஆதி காலத்திலிருந்து வந்த ஒவ்வொரு மனிதனும் இந்த நாள் வருவதற்கு காத்திருந்தான். தேவனே வந்து புஸ்தகத்தை எடுத்து, அதை உடைத்துத் திறந்து, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டிக்கு எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த, தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட தூதன் பூமிக்கு வரும் வரை அவரும் கூட காத்திருந்தார்.
பூமியில் உள்ள எந்த மனிதனும், ஆதிகாலம் முதற்கொண்டு, எப்போதும் அறிந்திராததை இப்பொழுது நாம் அறிந்துகொள்கிறோம். எல்லாமே வீழ்ச்சியுற்று இழக்கப்பட்டிருந்தன. எல்லாமே அவருடைய வார்த்தையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. மணவாட்டிக்கு தேவைப்படுகிற ஒவ்வொரு காரியமும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு தேவனுடைய ஒரு சிறு பண்டகசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
காலத்தின் திரைக்கு அப்பால் அவர் நம்மைக் காண்பித்திருக்கிறார், நாம் நம்மையே அவருடன் மறுபுறத்தில் காண்கிறோம். வார்த்தையைக் கேட்பதன் மூலம் மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.
நாம் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்திருக்கிறோம். எதுவுமே நம்மை அசைக்க முடியாது. எதுவுமே நம்மை பயமுறுத்த முடியாது. எதுவுமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. எந்த ஒரு வார்த்தையின் பேரிலும் நாம் நம்மை விட்டுக்கொடுக்க முடியாது. நாம் வார்த்தையாயிருக்கிறோம்.
நாம் அவருக்காக நம்முடைய கரங்களில் நம்முடைய மலர்ச் சென்டோடு காத்துக் கொண்டிருக்கிறோம். இதுவே கிட்டத்தட்ட அந்த நேரமாய் உள்ளது. பண்டைய கடிகாரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவருதையும், சக்கரங்களின் கீழிருந்து புழுதியைக் கிளப்புகிறதையும் நாம் கேட்கிறோம். குதிரைகள் இழுத்துகொண்டு வந்த பண்டைய வண்டியோ வந்து நிறுத்தப்படவுள்ளது.
அவர் வரும்போது நாம் இந்த பழைய உலகத்திலிருந்து அவருடைய கரங்களுக்குள் தாவிச் செல்வோம். அவர் நம்மை பிடித்து, "நான் உனக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்யப்போயிருந்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது, தேனே" என்று கூறுவார்.
அவருடைய வருகை மிக சமீபத்தில் உள்ளது. நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ஏழு முத்திரைகளை மீண்டும் ஒருமுறை நாம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புவதால் நாம் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் இதற்கு முன்பு நாம் அதை ஒருபோதும் கேட்காததுபோல் இருப்பதால், நாம் அதிக வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதை நாம் அறிவோம்.
இந்த செய்தி அப்பொழுது பதிவு செய்யப்பட்டபோது இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு இந்த செய்தியைக் கேட்டு ஜீவிப்பது மகத்தானதாய் உள்ளது. அவர் இப்பொழுது நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். என்ன சம்பவிக்கக் கூடும்?
ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, 63-0317E ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு என்ற செய்தியைக் கேட்டு மகிழ எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இது மணவாட்டி புசிக்கும்படியாக கர்த்தர் ஆயத்தம்பண்ணியிருக்கிற சேமிக்கப்பட்ட ஆகாரமாய் உள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
லேவியராகமம: 25:47-55
எரேமியா: 32:1-15
சகரியா: 3:8-9 / 4:10
ரோமர்: 8:22-23
எபேசியர்: 1:13-14 / 4:30
வெளிப்படுத்தினவிசேஷம்: 1:12-18 / 5வது அதிகாரம் / 10:1-7 / 11:18
பிரசங்க மொழிபெயர்ப்புகள்
அன்பான விசேஷித்த ஜனங்களாயும், வினோதமானவர்களாயும், அந்நியர்களாயும், ஆவிக்குரிய ஆசாரியத்துவமும், ராஜரீக சந்ததியாயுமிருப்பவர்களே,
முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி, அவர் தம்முடைய மணவாட்டிக்கு என்னே ஒரு மகிமையான நேரத்தைக் கொடுத்துகொண்டு வருகிறார். நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும் நாம் இதற்கு முன் ஒருபோதும் கேட்காததுபோலவே தோன்றுகிறது. பரலோகத்திலிருந்து இறங்கி வரும் புதிய மன்னாவை நாம் விருந்துண்ணும்போது, நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் சந்தோஷத்தால் நிறைந்துள்ளன. அவர் நமக்கு வெளிப்படுத்துதலுக்குப் பிறகு வெளிப்படுத்துதலை போஷிக்கும்போது, அது விரைவில் வரவிருக்கும் நம்முடைய கலியாண விருந்தின் ஒரு முன்னோட்டத்தைப் போன்றே உணரச் செய்கிறது.
அவருடைய நாமத்தைத் துதிக்கும், நம்முடைய உதடுகளின் கனிகள் மூலம், தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளை செலுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய ஸ்தானங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல எடுத்துள்ளோம்.
அவர் நம்மை உன்னதங்களிலே ஒன்றாக இணைத்து, அவருடைய பரிசுத்த ஆவியை நம்மீது ஊற்றி, அவருடைய அதிசீக்கிர வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளார். நாம் சிந்திக்கக்கூடியது அவ்வளவுதான். நாம் நம்முடைய சிந்தனைகளில் கொண்டிருப்பதும் அவ்வளவுதான். நாம் செய்ய விரும்புவதெல்லாம் வார்த்தையைக் கேட்பதுதான். நாம் அவருடைய மணவாட்டி என்று அவர் நம்மிடத்தில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருளப்பட்ட வழியோடு தரித்திருப்பதன் மூலம் இதுவே அவருடைய பரிபூரண சித்தமாக இருக்கிறது.
நாம் அவருடைய ஒலிநாடா ஊழிய பிரிவில் உள்ள இராணுவ வீரர்கள், நாம் அதைக் குறித்து மிகவும் பெருமை கொள்கிறோம். இது ஒரு கெளரவச் சின்னம். ஆம், நாம் அவர்களில் ஒருவர் என்று அதை சத்தமிட்டு உலகத்திற்கு சொல்ல விரும்புகிறோம்.
நம்மை போஷிக்கும்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆகாரத்தை அவர் அருளியுள்ளார். தேவனுடைய மன்னாவான அவர்தாமே தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசி, நாம் அவருடைய சேனையில் இருக்கிறோம் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
ஆத்துமா மற்றும் சரீரமாகிய இரண்டின் தன்னிச்சையான சுகமளித்தல்கள் வரை, பரிசுத்த ஆவியானவர் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் நிலைநிறுத்தியுள்ளதால், நாம் அப்பேர்ப்பட்ட ஒத்திசைவில் அந்த மகத்தான பரலோகத்தின் காப்புக் குடையின் கீழ் கூடிவருகிறோம்.
நாம் தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு பிசாசையும் அவனுடைய வல்லமையையும் தோற்கடிக்கிறோம். நாம் அந்த வார்த்தையால் அவனை துண்டு துண்டாக வெட்டுகிறோம். நம்முடைய தலைமை தளபதி நம்மிடம்: “நீங்கள் வார்த்தையாயிருக்கிறீர்கள். பயப்படாதீர்கள். பிசாசிடம் நேராகச் சென்று, 'இது எழுதப்பட்டுள்ளதே’ என்று கூறுங்கள்" என்றே நம்மிடம் சொன்னார்.
அவருடைய இராணுவ வீரர்களாக அவர் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையால் அரணிடப்பட்ட, பயிற்சியில் இருந்து வருகிறோம். நாம் இப்போது உடையணிந்து யுத்தத்திற்கு தயாராகிவிட்டோம். நம்முடைய 5 நட்சத்திரங்களைப் பெற்ற தளபதி என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டுள்ளார்: என்னுடைய ஒலிநாடா உபதேசத்தோடு சரியாக தரித்திருங்கள் என்பதேயாகும்.
ஒலிநாடா கூறுகிறதையே கூற, நீங்கள் நிச்சயமுள்ளவர்களாயிருங்கள். வேறொன்றையும் கூறாதீர்கள், புரிகிறதா? காரணம், இதை நான் என் சுயமாய் கூறுகிறதில்லை. இதுவோ அவர் இதைக் கூறுகிறதாய் உள்ளது, நீங்கள் பாருங்கள். அநேக சமயங்களில், ஜனங்கள் எழும்பி, "பாருங்கள், இதற்கு இது-இதுதான் அர்த்தம் என்று இன்னார்—இன்னார் கூறினார்” என்று கூறுவதால், குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஒலிநாடா அதைக் கூறுகிற விதமாக அதை அப்படியே-அப்படியே விட்டுவிடுங்கள்.
இது வில்லியம் பிரான்ஹாம் ஒலிநாடாக்களில் நம்மிடம் கூறிக் கொண்டிருப்பது அல்ல, இது தேவன் தம்முடைய மணவாட்டியிடம் ஒலிநாடாக்களில் கூறிக்கொண்டிருக்கிறதாயுள்ளது. இவைகள் அவருடைய கட்டளைகள். உங்களுடைய 5 நட்சத்திரங்களைப் பெற்ற தளபதியின் இந்த உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து அது இருக்கிறவிதமாக அதை விட்டுவிட ஒரே வழி, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதேயாகும்.
நாம் தேவனுடைய சேனையில் இருக்கிறோம், எனவே நாம் வார்த்தைக்கு வார்த்தை நம்முடைய கட்டளைகளுக்குக் இந்த விதமாய் கீழ்ப்படிய வேண்டும். நாம் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நாம் வீரமுள்ள மனிதர்களாயும், விசுவாச புருஷர்களாயும், வல்லமையுள்ள மனிதர்களாயும், புரிந்துகொள்ளுகிற மனிதர்களாயும், வெளிப்பாட்டின் மனிதர்களாயும் இருக்கிறோம்.
நாம் மீண்டும் பிதாவுடன் பரிபூரண ஐக்கியத்தில் இருந்துகொண்டு, நமக்கு எதிரான பாவத்தின் நினைவுகூருதலேயில்லாமல், பிளவின் மறுபக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். அவருடைய திருப்பளிக்கப்பட்ட ஆதாம்.
இது மீண்டும் ஒருமுறை தேவன் எளிமையில் இருப்பதாகும். இது எல்லோருக்குமானதாயில்லாமல், அவருடைய மணவாட்டிக்கு மாத்திரமேயானதாய், நாம் அதை தெளிவாகவும், வெளிப்படையான பார்வையிலும் காண்கிறோம்.
நான் மீண்டும் ஒருமுறை ஏழு முத்திரைகளைக் கேட்க மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் அவருடைய வார்த்தையின் மகத்தான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வோம்.
இன்னும் பலவற்றை நமக்கு வெளிப்படுத்த அவர் இந்த நாள் வரை காத்திருந்திருக்கிறார். நமக்குத் தேவையான அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, நம்முடைய விரலின் ஒரு தொடுதலினால் கேட்கும்படிக்கு கிடைக்கக்கூடியதாகவே உள்ளது.
இந்த செய்தியானது அந்த ஏழு இடி முழக்கங்கள் மணவாட்டியை பரிபூரணபடுத்தும் என்பதேயாகும்; ஏனென்றால், தேவனுடைய எல்லா இரகசியங்களும் மணவாட்டிக்கு நம்முடைய 7-ம் தூதனாகிய செய்தியாளரால் வெளிப்படுத்தப்படும்.
உலக சரித்திரத்திலேயே இது மிகவும் மகிமையான நேரமாயுள்ளது. நாம் அவருடைய மணவாட்டிக்கான அவருடைய வருகையின் விளிம்பில் இருக்கிறோம். வேதவாக்கியங்களில் உரைக்கப்பட்டிருந்த இந்த எல்லா காரியங்களையும் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது; நடுப்பகலில் சூரியன் அஸ்தமித்தல் போன்று, சம்பவிக்கும்படியான எல்லா விதமான காரியங்களையுமே. ஆனால் அது ஏற்கனவே நடந்துவிட்டது, அவர்களுக்கோ அது தெரியவில்லை.
அது மறை பொருளான ஏழு இடி முழக்கங்களால் முத்தரிக்கப்பட்டுள்ளது என்பது, நினைவிருக்கட்டும். புரிகிறதா?
ஏழு முத்திரைகளின் பேரில் தம்முடைய மணவாட்டிக்கு தேவனுடைய இடி முழக்கம் அதிகமாக வெளிப்படுத்துவதை கேட்கும்படிக்கு மீண்டும் ஒருமுறை நாம் ஒன்று கூடும்போது மகத்தான காரியங்கள் சம்பவிக்கப்போகின்றன.
63-0317M தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் தம்மை அவ்விதமே வெளிப்படுத்துதல் என்ற செய்தியுடன் இந்த சிறந்த செய்தித் தொடரைக் கேட்க ஆரம்பிக்கப்போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.பிரான்ஹாம் கூடாரத்தையும், ஜனங்களையும் சகோதரன் பிரான்ஹாம் தேவனண்டை மீண்டும் மறுப்பிரதிஷ்டை செய்யும்போது, நாமும் நம்மையே, நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், அல்லது நாம் எங்கு கூடுகின்றோமோ அங்கே, அவரிடத்தில் மறுப்பிரதிஷ்டை செய்துகொள்வோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
1 நாளாகமம் 17:1-8
ஏசாயா 35:8 / 40:1-5 / 53:1
மல்கியா 3-வது அதிகாரம்
பரி. மத்தேயு 11:10, 11:25-26
பரி. யோவான் 14:1-6
1 கொரிந்தியர் 13-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 21-வது அதிகாரம்
பிரசங்க மொழிபெயர்ப்புகள்
அன்புள்ள ஒலிநாடா ஊழிய சிறப்புப் படையினரே,
62-0311 இதுவரை சண்டையிட்டவைகளிலேயே மிகப்பெரிய யுத்தத்தில் எவ்வாறு சண்டையிட்டு வெற்றி பெறுவது என்பதை நமக்கு கற்பிக்கும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட பூமிக்குரிய தூதன் மூலம் நமது 5 நட்சத்திரங்களைப் பெற்ற தளபதி பேசுவதைக் கேட்கும்போது, நமக்குக் கிடைத்த அற்புதமான வார இறுதிப் பயிற்சிக்கான ஒரு சிறந்த உச்சகட்டத்திற்காக ஒன்றாக ஒன்றிணைவோமாக.
எங்கே: தலைமையகம் (தேவனுடைய சிங்காசனம்)
எப்பொழுது: பிற்பகல் 2:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரம்
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையான மணவாட்டியே,
எந்தத் தீர்க்கதரிசியும், எந்த அப்போஸ்தலனும், ஒருபோதும், எந்தக் காலத்திலும், நாம் இப்பொழுது வாழும் காலத்தைப் போன்ற இப்படிப்பட்ட ஒரு காலத்தில் எப்போதும் வாழ்ந்ததில்லை. இதுவே முடிவாயுள்ளது. அக்கினி ஸ்தம்பம் திரும்பவும் வந்துள்ளது. இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பம்; சவுலை தமஸ்குவிற்குச் செல்லும் அவனுடைய வழியில் கீழே வீழ்த்திய அதே ஒன்று. அதே ஒன்று அதே வல்லமையுடன் வந்து, அதே காரியங்களை செய்துகொண்டு, அதே வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டு, வேதாகமத்தோடு வார்த்தைக்கு வார்த்தை தரித்திருக்கிறது!
மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் யாவும் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. நீங்கள் கவனித்தீர்களா, எல்லா இரகசியங்களுமே. புதிதானது ஒன்றுமே இல்லை, எதுவுமே விடப்பட்டிருக்கவில்லை, வேறு எவரிடமிருந்தும் எதுவும் வெளிப்படப் போவதுமில்லை; அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளருக்கு எல்லாமே வெளிப்படுத்தப்பட்டு, அவருடைய மணவாட்டியாகிய நமக்கு, ஒலிநாடாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மணவாட்டிக்குத் தேவையாயிருப்பதெல்லாம் இதுவே; மீண்டும் கவனியுங்கள், மணவாட்டிக்கு தேவையாயிருக்கிற அனைத்துமே. மற்றவர்களுக்கு மற்ற காரியங்கள் தேவை, அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு என்ன தேவையோ அது ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஒலிநாடாவில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது நமக்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நாமே தேவனாகிய கர்த்தர் அவருக்கு அளித்த சபையாய் இருக்கிறோம். இது அவருடைய தலைமையகம். இங்கேதான் அவர் நம்மை தரித்திருக்கச் சொன்னார். ஒரு கட்டிடத்தில் அல்ல, ஒலிநாடாக்களிலே. நாமே விசுவாசிக்கிற அந்த ஜனக் குழுவாயும், பசியாயிருந்துகொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொண்டிருக்கிறவர்களாயும் இருக்கிறோம். அவரே நம்மை இங்கே தரித்திருந்து, அந்த வெள்ளைக் கல்லை, பாறையை, ஒலிநாடாக்களில் உள்ள வார்த்தையை நோக்கிப் பார்க்கும்படிக்குச் சொன்னார்.
பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் அவரிடம் பேசி, “ஆகாரத்தைக் கொண்டு வா. அதை உள்ளே சேமித்து வை. அவைகளை இங்கே வைத்திருப்பதற்கான ஒரே வழி, அவர்களுக்கு ஆகாரத்தை அளிப்பதற்காகவேயாகும்" என்றுரைத்தது. வேறு எதையாவது தேடுங்கள், அல்லது வேறொருவரிடமிருந்து புதிய வெளிப்பாடுகள் வரும் என்று அவர் கூறவில்லை; ஒலிநாடாவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாரத்தை நோக்கிப் பார்த்து, அங்கேயே தரித்திருங்கள்.
ஆனால் அவர் வெளிப்படுத்திய எல்லா சொப்பனங்களிலும் அவர்கள் செய்தது போலவே, சிலர் அந்த வழியைவிட்டு வெளியே சென்றனர்; சிலர் ஒரு வழியையும், சிலர் வேறு வழியையும் தெரிந்துகொண்டனர். மிக சொற்பமானவர்களே தரித்திருந்து, அவர் அவர்களுக்கு சொல்லியிருந்ததை நோக்கிப் பார்த்தனர்.
இப்பொழுது அதை மற்றவர் கண்ட சொப்பனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒரு தரிசனமாக இருந்தது. ஆகாரம், இங்கே அது உள்ளது. இதுவே அந்த இடம்.
அவர் தம்முடைய மணவாட்டியிடம் அதைவிட வேறெந்த விதத்திலும் தெளிவாக்க முடியாது. இது ஒரு தரிசனமாக இருந்தது, ஒரு சொப்பனம் அல்ல, ஒரு தரிசனம். ஆகாரம் இங்கே உள்ளது: ஒலிநாடாக்கள். இதுதான் இடம்: ஒலிநாடாக்கள். அவர் நம்மிடம் செய்யும்படிச் சொன்னதை நாம் சரியாகச் செய்துகொண்டிருக்கிறோம்: ஒலிநாடாக்களைக் கேளுங்கள்!
இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்ள ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடு தேவைப்படுகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நமக்குச் கூறப்போகும் அனைத்தையும் விசுவாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஆவிக்குரிய வெளிப்பாடு தேவையாயிருக்கப்போகிறது. இது மணவாட்டிக்கான ஒரு மகிமையான நேரமாக இருக்கும்.
இந்தச் செய்தியில் தேவன் நமக்குச் சொல்லிக்கொண்டும் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிற அநேக காரியங்கள் உள்ளன. நான் மேற்கோளுக்குப் பின் மேற்கோளை நகலெடுத்து அதை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன், ஆனால் அவர் உங்களுக்கு ஒவ்வொரு மேற்கோளின் தங்கக் கட்டியையும் வெளிப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் யாராயிருந்தீர்கள் என்று அவர் கூறினதாய் இது உள்ளது:
தேவனாகிய கர்த்தர் எனக்கு அளித்த சபை இதுவே. இதோ எனது தலைமையகம். இங்கே நான் தரித்திருக்கிறேன்...பசியாயிருந்து கொண்டும், பற்றிக்கொண்டும், விசுவாசித்துக்கொண்டும் இருக்கிற ஒரு ஜனக்கூட்டம் இங்கே உண்டு.
பசியாயிருந்துகொண்டும், பற்றிக்கொண்டுமிருக்கிற அந்த குழு நாம் தான். பலர் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டு கேலி செய்கிறார்கள், ஆனால் அது பரவாயில்லை, நாம் நேசித்து, அவர்களுக்காக ஜெபிக்கிறோம்; ஆனால் ஒரே ஒரு சத்தம் மட்டுமே நம்மை வழிநடத்த வேண்டும்.
என்னை மன்னியுங்கள், ஆனால் நான் உங்களுக்கு இந்த மேற்கோளை கொடுக்க வேண்டும்.
“அவன் முழங்க ஆரம்பிக்கையில், அந்த இரகசியம் நிறைவேற்றப்படும்." இப்பொழுது, குறித்துக்கொள்ளுங்கள் அப்பொழுதுதான் வெளிப்படுத்தல் 10-ல் உள்ள ஏழு முத்திரை சத்தங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டிய சமயம் ஆகும். உங்களுக்குப் புரிகின்றதா? புஸ்தகத்தின் எல்லா இரகசியங்களும் முடிவுறுகின்றபோதே! ஆகவே அவன் இரகசியங்களை நிறைவேற்றுவான் என்று, இங்கே, வேதாகமம் கூறியுள்ளது.
இரகசியங்களை யார் நிறைவேற்றுவார்? உங்களுடைய போதகரா? ஒரு குழுவா? நானா? ஏழாம் தூதனாகிய செய்தியாளர்: வில்லியம் மரியன் பிரான்ஹாம். அவருக்கு முன்போ, அந்த நேரத்திலோ, அல்லது பின்போ யாரும் இல்லை. அவரே இரகசியங்களை நிறைவேற்றுவார்.
இது முடிவு காலமாக இருக்கலாம். இது வானவில்கள் ஆகாயம் முழுவதிலும் பரவி, “இனி காலம் செல்லாது" என்று கூறுகிற அறிவிப்பு வானங்களிலிருந்து உண்டாகலாம். அப்படியானால், நண்பர்களே, நம்முடைய தேவனை சந்திப்பதற்கு, நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வோமாக.
ஆம் கர்த்தாவே, நாங்கள் உம்மைச் சந்திக்க ஆயத்தமாயிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்ய விரும்புகிறோம். நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஆயத்தமாயிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பிதாவே தயவு கூர்ந்து எங்களுக்குச் சொல்லுவீரா?
இப்பொழுது இங்கு நிறைய ஆகாரம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் அதைப் பயன்படுத்திக்கொள்வோமாக. இப்பொழுது நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோமாக.
உம்முடைய மணவாட்டிக்காக நீர் வைத்துள்ள ஆதாரத்திற்காகவும், அதைக் குறித்து வெளிப்பாட்டிற்காகவும் பிதாவே உமக்கு நன்றி. நாங்கள் அதை அனுதினமும் பயன்படுத்தி வருகிறோம்.
இங்கே என்னுடைய சிறு சபையை நான் வழிகாட்டி வழிநடத்துவதற்கு நீர் என்னை அனுப்பினீர் என்பதற்காகவும், அதனுடைய மன்னிப்பிற்காகவும் நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, இவர்களை ஆசீர்வதியும். எனக்கு தெரிந்த வரையில், தரிசனங்களும் சொப்பனங்களும், மற்ற காரியங்களும் கூறியிருக்கிறவிதமாகவே நான் செய்திருக்கின்றேன், கர்த்தாவே, எனக்குத் தெரிந்தவரையில் தேவைக்கேற்ப எல்லா ஆகாரத்தையும் நான் இவர்களுக்காக வைத்திருக்கின்றேன். என்னவாயிருந் தாலும், கர்த்தாவே, நாங்கள் உம்முடையவர்கள்.
எங்களுடைய பிரயாணத்திற்குத் தேவையான எல்லா ஆகாரத்தையும் நீர் வைத்திருக்கிறீர் என்று, நீர் மீண்டும் ஒருமுறை எங்களிடம் சொன்னதற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, உங்கள் ஒவ்வொருவரோடும், ஐயா, இதுதான் முடிவின் அடையாளமா? 62-1230E, என்ற செய்தியைக் கேட்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத வகையில் காரியங்கள் நமக்கு வெளிப்படும் என்பதை நான் அறிவேன். இது நாம் இதைக் கேட்கும் கடைசி நேரமாக இருக்கலாம்.
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்திற்குள் எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பதை ஏதோ ஒன்று நம்மை அறிந்துகொள்ளும்படி செய்யுமானால் அது என்ன? அப்படியா? நாம் ஓடி மதில்களைத் தாண்டப்போகிறோமா? இந்த பழைய, அழிவுள்ள, அற்பமான சரீரம் மறுரூபப்படுவதற்காக ஏதாவதொன்று நிகழவிருக்கின்றதா? ஓ! கர்த்தாவே, அதைக் காண நான் உயிரோடிருப்பேனா? நான் காண்பதற்கு அது அவ்வளவு அருகாமையில் உள்ளதா? இந்தத் தலைமுறையிலா? ஐயன்மீர், என்னுடைய சகோதரரே, இது என்ன சமயம்? நாம் எங்கே இருக்கிறோம்?
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பிழையற்ற வார்த்தை விசுவாசிகளே,
இந்த ஏழு சபைக் காலங்களை கேட்பதும் வாசிப்பதும் எவ்வளவு அருமையாக உள்ளது. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் படிக்கும் ஒவ்வொரு அதிகாரத்திலும், அவர் நமக்கு அதிகமான வெளிப்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சபைக் காலத்தினூடாகவும் வருகையில்…மூல வார்த்தையுடன் தரித்திருந்த, அவருடைய மணவாட்டியை நாம் தாமே தெளிவாகப் பார்க்கிறோம்.
காலங்கள் முழுவதும் நாம் இரண்டு ஆவிகளை தெளிவாகக் காண்கிறோம்; சாத்தானின் வஞ்சகமும் பொய்யும், தேவனுடைய வார்த்தையை சுற்றித் திரித்து, வஞ்சித்து, ஜனங்களை கறைபடுத்தி, ஜெயங்கொள்கிறான். ஆனால் எல்லா நேரத்திலும் தேவனுடைய விசுவாசமுள்ள சிறு ஜனக் குழுவான, அவருடைய மணவாட்டி, ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொண்டிருந்தாள்.
நீங்கள் வார்த்தையுடன் தரித்திருக்க வேண்டும் என்ற, ஒரு நிலையான எச்சரிக்கையே எப்பொழுதும் ஜனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இரண்டாவது அந்த வார்த்தையிலிருந்து நீங்கள் விலகிச் செல்லும்போது, ஆதியில் ஏவாள் செய்ததுபோல; நீங்கள் சாத்தானின் பெரும் வலையில் சிக்கிக்கொள்கிறீர்கள். அவள் வார்த்தையைப் பயன்படுத்தத் தவறிவிட்டாள். வார்த்தைக்கு நேரடியாக கீழ்ப்படியாமல் ஆதாம் தவறிவிட்டான். ஆனால் இயேசு, தனது சொந்த ஜீவியத்தில், அவர்தாமே போராடி, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் ஜெயங்கொண்டார்.
நாம் அவருடைய சிங்காசனத்தில் அமர விரும்பினால், நாம் அந்த ஜீவிக்கும் வார்த்தையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நம்முடைய ஜெபங்களோ, உபவாசங்களோ, அல்லது நமது மனந்திரும்புதலோ கூட நமக்கு அந்த பாக்கியத்தைப் பெற்றுத் தராது. இது வார்த்தையான மணவாட்டிக்கு மட்டுமே அளிக்கப்படும்.
நான் கூற விரும்புவதோ மிக அதிமாகவே உள்ளன, மேலும் உங்கள் ஒவ்வொருவருடனும் மேற்கோள்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்; அது முடிவற்றது. இந்தச் செய்தி உங்கள் ஒவ்வொருவரின் இருதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என்பதையும், நான் நேசிப்பது போலவே, நீங்களும் ஒவ்வொரு வார்த்தையையும் நேசிக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். நாம் செய்ய விரும்புவதெல்லாம் அதைப் பற்றிப் பேசி ஐக்கியங்கொள்வதுதான். ஆம், நாம் ஒலி நாடாக்களைக் கேட்கிற ஜனங்களாய் இருக்கிறோம் என்று உலகம் அறிந்துகொள்ள நாம் விரும்புகிறோம். ஆம், நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே மணவாட்டியைப் பரிபூரணப்படுத்தப்போகிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோம். ஆம், ஒலிநாடாக்கள் மணவாட்டியை இணைக்கும். ஆம், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே தேவனுடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது. ஆம், நான் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறேன்.
நான் பல கடிதங்களில் இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் நன்றியுள்ளவனாகவும், மிகவும் உறுதியாகவும் இருக்கிறேன்...இது சந்தேகத்திற்கு இடமில்லாதது, இது அவருடைய மணவாட்டிக்கான தேவனுடைய திட்டம்.
நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் வியப்பூற்று ஆச்சரியப்படுவதோ, நாம் கேட்டுக்கொண்டிருப்பதை கேட்கவும் அல்லது படிக்கவும், புரிந்துகொள்ளவும் எப்படி அவர்களால் முடியவில்லை என்பதுதானே? அது அங்கேயே, ஒவ்வொரு ஒலிநாடாவிலும் இருக்கிறது. அது: "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?" என்று இயேசு நிக்கொதேமுவிடம் கூறினதுபோலவே அவர்களிடத்தில் கூறுவதுபோன்றே என்னை உணரச் செய்கிறது.
தூதன் அதை எவ்வளவு எளிமையாகச் கூறுகிறார் என்பதைக் கேளுங்கள்.
மனித இயல்பின் அடிப்படையில் மாத்திரமே, எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தின் ஒரு சிறிய குறிப்புகளில் கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர்.
மனித இயல்பின் அடிப்படையில் மாத்திரமே, எந்த ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலும் தேவைப்படாது, ஒரு பெரிய உபதேசத்தின் ஒரு சிறிய குறிப்புகளில் கூட இரண்டு மனிதர் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எல்லோரும் அறிவர்.
அவர்கள் கூறுவதை ஜனங்கள் செய்யவில்லையென்றால், அல்லது அவர்கள் அவைகளைப் பின்பற்றாமல் விட்டுவிட்டால், அப்பொழுது அழிவானது பின்தொடரும் என்று கூறுவதை அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஒரு உண்மையான தீர்க்கதரிசி எப்பொழுதும் ஒருவரை வார்த்தைக்கு வழிநடத்தி, ஜனங்களை இயேசு கிறிஸ்துவிடம் ஒன்றுசேர்ப்பார், மேலும் அவர் ஜனங்கள் தனக்கோ அல்லது அவர் கூறுவதற்கோ பயப்படும்படி சொல்லமால், வார்த்தை என்ன சொல்கிறது என்பதற்கே பயப்பட வேண்டும் என்று கூறுவார்.
வார்த்தை என்ன கூறுகிறது? நான் உங்களுக்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். சத்தத்தின் நாட்களில். வார்த்தை தீர்க்கதரிசியாக ஒருவரே இருப்பார்…ஒரே ஒருவர்...ஏனென்றால் தேவன் அந்த ஒருவரிடம் மாத்திரமே வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளார். அவரே என்னுடைய மணவாட்டியை திரும்பளிக்கும்படியான ஒருவராயிருப்பார்.
பல சத்தங்கள், பல கருத்துக்கள் மற்றும் மேற்கோள்களுடன், ஒருவர் எப்படி உறுதியாக இருக்க முடியும்?
இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப்போகிறபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்?
பிழையற்ற வல்லமையோடுள்ள ஒருவருக்கே, அந்த ஒருவருக்கே மணவாட்டி செவிகொடுக்க விரும்புகிறாள்; ஏனென்றால் அவரே மணவாட்டியைத் திரும்பளிக்கும்படியான ஒருவராயிருப்பார். அவர் வேறு கருத்துகளைப் கொண்டிருக்கமாட்டார், அவர் வார்த்தையாயிருக்கிறார்.
கேள்வி: கர்த்தாவே, நாங்கள் அறிந்து கொள்ள விரும்புவதோ, பிழையற்ற வார்த்தைகளை கொண்டிருக்கும் அந்த நபர் யார் என்பதே?
அதை யார் உடையவராயிருப்பார் என்பதை நான் உங்களுக்கு சொல்வேன். அது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட, அல்லது ஏனோக்கு முதல் இந்நாள் வரையிலும் எல்லா காலங்களிலும் எந்த தீர்க்கதரிசியும் ரூபகாரப்படுத்தப்படாத விதத்தில் இன்னும் அதிகமாக முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும், ஏனெனில், இந்த மனிதன் தலைக்கல் தீர்க்கதரிசன ஊழியத்தை அவசியம் பெற்றிருப்பார், தேவன் அவரைக் காண்பிப்பார். அவர் தனக்காக பேசவேண்டிய அவசியமே இருக்காது, தேவன் அடையாளத்தின் சத்தத்தினால் அவருக்காக பேசுவார். ஆமென்.
பதில்: வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாகிய உங்களை இன்றைக்கு நான் ஊக்கப்படுத்தட்டும். நீங்கள் ஏமாற்றப்படவோ, நீங்கள் ஏமாற்றமடையவோ முடியாது. நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா? எந்த மனிதனும் உங்களை ஏமாற்ற முடியாது. பவுலே தவறாயிருந்திருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்ட எவரையும் ஏமாற்றியிருக்க முடியாது. முதலாம் சபைக் காலமாகிய எபேசுவிலும் கூட, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஏமாற்றப்பட முடியவில்லை. அவர்கள் கள்ள அப்போஸ்தலர்களையும், கள்ள தீர்க்கதரிசிகளையும் சோதித்தறிந்து, அவர்களை பொய்யர் என்று கண்டு, அவர்களை புறம்பாக்கிப்போட்டனர்.
மகிமை மணவாட்டியே.... நீங்கள் அவருடைய ஆடுகள், நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருக்குப் பின்செல்கிறீர்கள். நீங்கள் ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறீர்கள்!!
இந்த வார்த்தைகளை அறிவதை விட மகத்தானது எதுவுமில்லை. உங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் அறிய, நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் வந்துவிட்டன. மணவாட்டி தன்னை அடையாளங் கண்டுகொண்டு அவருடன் ஒன்றாகிக்கொண்டிருக்கிறாள்; நாம் தேவனுடைய புதிய சிருஷ்டிப்பாயிருக்கிறோம்.
நீங்கள் எங்கே கூடினாலும், ஞாயிற்றுக்கிழமை தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள் என்று, நான் மீண்டும் ஒருமுறை உங்களோடு மன்றாடுகிறேன். நீங்கள் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் வரை நீங்கள் எந்த செய்தியைக் கேட்டாலும் பரவாயில்லை. அந்த சத்தம் தேவன் அழைத்த சத்தமாயும், அவருடைய மணவாட்டியை ஒன்று கூட்டி திரும்ப அளிக்கும்படிக்கு தெரிந்துகொள்ளப்பட்டதாயுமிருந்தது.
லவோதிக்கேயா சபைக் காலம் 60-1211E என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எல்லா சபைகளிலுமுள்ள, எல்லா ஜனங்களுமாகிய, நீங்களும் எங்களோடு கேட்கும்படிக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்