ஞாயிறு
25 பிப்ரவரி 2024
64-0614E
வினோதமானவன்

அன்பிற்குரிய நண்பர்களே,

ஜெபர்சன்வில்லில், பிற்பகல் 12:00 மணிக்கும், ஆப்பிரிக்காவில், காலை 7:00 மணிக்கும், அரிசோனாவில், காலை 10:00 மணிக்கும்; உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டி ஒன்று கூடியுள்ளனர். இந்த தருணத்திற்காக நாம் வாரம் முழுவதும் காத்திருந்தோம். தேவன் தம்முடைய வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளரைக் கொண்டு மானிட உதடுகளினூடாக தேவன் நம்மிடத்தில் பேசுவதற்காகவே நாம் காத்துக்கொண்டும், மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருக்கிறோம். நாம், “கர்த்தாவே என்னை ஆயத்தப்படுத்தும், என்னை அபிஷேகியும், உம்முடைய வார்த்தையைக் குறித்த அதிகமான வெளிப்பாட்டை எனக்குத் தாரும்” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.

தீர்க்கதரிசி, தீர்க்கதரிசி மட்டுமே, இந்த மணிநேரத்திற்கான ஜீவ வார்த்தைகளை உடையவராயிருக்கிறார் என்று நாம் உறுதியாக அறிந்திருப்பதற்காக நாம் திருப்தியடைகிறோம். எங்களால் எல்லாவற்றையும் விளக்க முடியாமல் போகலாம், ஆனால் நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

கர்த்தர் மோசேயுடன் செய்ததைப் போலவே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை நமக்கு முன்பாக மகிமைப்படுத்த ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அந்த நேரத்தில், அவர் மலைகளை அசைத்தார். இந்த நேரத்தில், அவர் வானத்தையும் பூமியையும் அசைத்துக்கொண்டிருக்கிறார்.

தருணம் வந்துவிட்டது. நம்முடைய இருதயங்கள் நமக்குள் துடித்துக்கொண்டிருக்கின்றன. நம்முடைய தேசிய கீதம் இசைக்கப்படுவதை நாம் கேட்கத் துவங்குகிறோம். ஒருமனப்பட்டு, உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டி தங்களுடைய காலூன்றி எழுந்து, நம்பிடுவாய், யாவும் கை கூடிடும், நம்பிடுவாய் என்று பாடத் துவங்குகின்றனர். அப்பொழுது தேவன் நம்மிடத்தில் பேச ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

நாமோ; "காலை வணக்கம் நண்பர்களே" என்பதைக் கேட்கிறோம்.

இந்த 3 எளிய வார்த்தைகளைக் கேட்கையில் நம்முடைய இருதயங்கள் களிகூருகின்றன. தீர்க்கதரிசி என்னைத் தன்னுடைய நண்பன் என்றுதான் அழைத்தார். அதன்பின்னர் அவர் நம்மிடம் சொல்லுகிறார்,

நான் உங்கள் எல்லோரையும் காணமுடியாமல் தவிக்கிறேன். நான்—நான் எங்கு சென்றபோதிலும், உங்களைப் போன்றவர்கள் எனக்கு—எனக்கு கிடைக்காது. எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர், ஆனால் உங்களைப் போன்றவர்கள் எனக்கு கிடைப்பது அரிது. இந்த சிறு கூட்ட ஜனங்களிடம் விசேஷமான ஒன்றுண்டு...என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்பொழுதுமே உங்களைக் குறித்து நினைக்கிறேன். ஆனால் நான் எங்கு சென்ற போதிலும்... என்னுடன் இணைந்திருக்கும் இந்த குழுவைப் போல் வேறெந்த குழுவும் இல்லை என்பதை நான் அறிவேன். தேவன் நம்மை இணைபிரியாதவர்களாக்கி, வரப்போகும் ராஜ்யத்திலும் நாம் இணைபிரியாதவர்களாகவேயிருக்கும்படி அருளுவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது.

இன்றைக்கு தேவன் நமக்கு என்ன மகத்தான வெளிப்படுத்துதலை வெளிப்படுத்துவார்? நாம் என்ன கேட்கப் போகிறோம்? ஒருவேளை நாம் இதற்கு முன்பு பலமுறை இதைக் கேட்டிருக்கலாம், ஆனால் இதற்கு முன்பிருந்த வேறு எந்த நாளையும் போன்றில்லாமல், இன்றைக்கு வித்தியாசமாக இருக்கக் கூடும்.

அது என்ன? விசுவாசிகளினுடைய ஆகாரம். பரலோகத்திலிருந்து வரும் சமுகத்தப்பத்தை நாம் விருந்துண்போம்.சமுகத்தப்பம் அவருடைய மணவாட்டியான, நமக்கானதாய் மாத்திரமே உள்ளது. அந்த சமுகத்தப்பத்தின் மீதுள்ள ஷெக்கினா மகிமைதான் நம்மை கெட்டுப்போகாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

வெளியில் இருப்பவர்கள் நம்மைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒலிநாடாக்களை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? ஜனங்களாகிய நீங்கள் உண்மையிலேயே வினோதமானவர்களாக இருக்கிறீர்கள்” என்று கேட்கிறார்கள்.

மகிமை!! நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், மேலும் வினோதமானவர்களாக இருப்பதற்கு கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; அவருக்கும் அவரது ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தைக்கும் முட்டாள்கள். உலகிற்குச் அதைச் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், "ஆம், நான் ஒலிநாடா ஊழியத்தில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். நான் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதில் விசுவாசங் கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் இதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஒலிநாடாக்களை மீண்டும் பிரசங்கப் பீடத்தில் இயக்குவதில் நான் விசுவாசங் கொண்டிருக்கிறேன்.”

பாரம்பரியங்களின் திரை நீக்கப்பட்டவுடனே, தேவன் இன்னமும் தமது வார்த்தையின் தேவனாயிருக்கிறார் என்பதை உங்களால் காண முடியும். அவர் இன்னமும் தமது வார்த்தையை காத்துக் கொள்ளுகிறவராயிருக்கிறார். அவர்- அவர் தேவனாக, தமது வார்த்தையின் ஆகியோனாக இருக்கிறார்.

வேறு யாரேனும் என்ன செய்தாலும், அல்லது கூறினாலும், நாம் அதை விசுவாசிக்கிறோம், அதன்பின்னர் நாம் அதன் பேரில் செயல்படுகிறோம். நீங்கள் அதை செய்யவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் அந்த திரைக்கு பின்னால் இல்லை. அந்த திரை ஒருவருக்கு சொந்தமானது. அந்தச் செய்தி ஒன்றுதான்.

சபைக்கு தேவன் எதைக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறித்து ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதல், அதை வெளிப்படையாகக் கூறாமலே உங்களுக்கு கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். புரிகிறதா? சில சமயங்களில், ஒன்றைக் கூறுவது, நாம் சில காரியங்களை அப்படிப்பட்ட ஒரு வழியில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். அது ஆட்களை சபையில் குறைத்துவிடுகிறது. சிலர் சபையை விட்டு வெளியேறும்படி செய்துவிடுகிறது. மற்றும் சிலரை அது யோசிக்கச் செய்கிறது. அது வேண்டுமென்று செய்யப்படுகிறது. அது அப்படித்தான் செய்யப்பட வேண்டும்.

வார்த்தையானது தேவனுடைய தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஒரு குழு, பரிசேயர்கள், அல்லது சதுசேயர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது ஒரு குலம் என்று அல்ல. இது தீர்க்கதரிசி! தேவன் ஒரு மனிதனைத் உடையவராய் இருக்கிறார். அவர் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு சிந்தனைகளை பெற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனை எடுத்துக்கொண்டார். அவரிடம் வார்த்தை இருக்கிறது, அவரிடம் மாத்திரமே.

அப்படியானால் சிலர், “தேவன் வேண்டுமென்று அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வார் என்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்கலாம். அவர் நிச்சயமாக அப்படி செய்தார். அவர் இன்னமும் செய்கிறார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கூறியது போல், இன்றைக்கும் நாம் அதையே கேட்கிறோம்: "ஆனால் தேவன் அழைத்திருக்கிற மற்ற மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள்." அது உண்மை. அவர்கள் பின்தொடர்ந்து செல்லும் வரை, ஆமென், ஆனால் தேவன் முன்குறித்து, அந்தப் பணிக்கென நியமித்து, நம்முடைய தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுத்த தேவனுடைய ஸ்தானத்தை எடுக்க ஒருவர் முயலும்போது, நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையான, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.

கவனியுங்கள், இப்பொழுது அதற்குள் பிரவேசிக்காமல் தங்கி விடுவது மரணத்தை விளைவிக்கும். நீங்கள் திரையின் வழியாக அதற்குள் பிரவேசிக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் செல்லமாட்டீர்கள். இப்படிப்பட்டவர்கள் மேல் தேவன் எப்படி இரக்கம் காண்பிக்க முடியும், அது என்னவாயிருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், திரைக்குப் பின்னால் என்ன இருந்ததென்று தேவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகும். வார்த்தை, திரைக்குப் பின்னால் என்ன இருந்தது என்பதை கவனியுங்கள், வார்த்தையே! அது எதை மறைத்திருந்தது? வார்த்தையையே!. அது என்னவாயிருந்தது? அது உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தது. அது திரை மறைத்திருந்த வார்த்தையே. புரிகிறதா? இயேசுவே அந்த வார்த்தையாய் இருந்தார்! அவரே அந்த வார்த்தையாய் இருக்கிறார், அவருடைய மாம்சம் என்னும் திரை அதை மறைத்திருந்தது.

எங்களுக்கு, இது ஒரு வெளிப்படுத்துதல்! இது ஒரு வார்த்தை இல்லை, இது ஒரு உண்மை! ஆமென்!

மற்றவர்களுக்கு நாம் வினோதமானவர்கள் என்பதை நாம் அறிவோம், மற்றும் உலகிற்கு ஒரு பைத்தியம் போல் தோன்றலாம், ஆனால் அது எல்லா மனிதர்களையும் அவரிடம் இழுக்கிறது.

நாம் எப்படி வினோதமானவர்கள் 64-0614E என்பதை தீர்க்கதரிசி உலகத்திற்கு சொல்லுவதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வார்த்தையோடு மறையேற்றப்பட வாருங்கள். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் என்று கூறுவதற்கு நாங்கள் மிகவும் பெருமையுள்ளவர்களாகவும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
I கொரிந்தியர் 1:18-25
II கொரிந்தியர் 12:11