ஞாயிறு
18 பிப்ரவரி 2024
64-0614M
தேவன் திரைநீக்கப்படுதல்

அன்புள்ள திரைக்குப் பின்னால் உள்ள மணவாட்டியே,

"இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம்" என்று நான் ஏன் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்? "சகோதரன் பிரான்ஹாமை மீண்டும் உங்களுடைய பிரசங்க பீடங்களில் நிறுத்துங்கள்" என்று போதகர்களிடம் நான் ஏன் தொடர்ந்து கூறுகிறேன்?

இது மிகவும் எளிமையானது. ஒலிநாடாவில் ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தைக் கேட்பதன் மூலமே, ஜீவனுள்ள வார்த்தைக்கு செவிகொடுக்கிறோம்.

ஜனங்களுக்கு முன்பாக, தேவன் மீண்டும் திரையிட்டுக்கொண்டு, அதே அக்கினியினால் தம்மை திரையிட்டுக்கொண்டு, அதே திரையின் மூலம், அதே அக்கினி ஸ்தம்பமாய் இறங்கி வந்து, மோசேயை ரூபகாரப்படுத்தினார். அப்பொழுதிலிருந்து…அவர்கள், எனவே அவர்களால் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே கேட்க முடிந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? வார்த்தையை மாத்திரம், அவருடைய சத்தத்தை அவர்கள் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு, ஜீவிக்கிற வார்த்தையாயிருந்தான்.

நேரடியாக பிரசங்கிக்கிற ஒரு ஊழியக்காரரைக் குறித்து பேசுகிறோமே! ஒலிநாடாவில் நாம் செவிகொடுத்துக் கொண்டிருக்கிற சத்தம் நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையின் சத்தமாய் இருக்கிறது. இதற்கு மேல் மகத்தான வேறெதையும் நாம் பெற்றுக்கொள்ள முடியாது.

மோசேயின் நாளில், பாளையத்தில் இருந்த இஸ்ரவேல் புத்திரர் மட்டுமே அவருடைய சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு, உலகமே அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று தேவன் விரும்பினார், அதனால் அவர் அதை ஒலிநாடாவில் பதிவு செய்தார், அதனால் அவருடைய மணவாட்டியால் ஜீவனுள்ள வார்த்தையின் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

தேவன் தம்முடைய வார்த்தைகளை அவர்களிடம் பேசுவதற்கு, தம்முடைய தீர்க்கதரிசியில் தம்மைத் திரையிட்டிருந்தார். அதைத்தான் அவர் செய்திருந்தார். அக்கினி ஸ்தம்பத்தால் திரையிடப்பட்ட, மோசே ஜனங்களுக்கு அந்த ஜீவனுள்ள வார்த்தையாக இருந்தான்.

நம்முடைய நாளுக்கான அந்த ஒரு வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்க முடியாது. நீங்கள் அதைப் பெற்றிருந்தால், அப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருந்து, "இது உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறபடியால், ஒலிநாடாக்களை கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமானது வேறொன்றும் இல்லை” என்று கூற வேண்டும்.

நாம் அவரை ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்; என்று அநேகர் ஜனங்களை பயமுறுத்தி, நாம் தீர்க்கதரிசியை மிக அதிகமாக முக்கியத்துவப்படுத்துகிறோம் என்று கூற முயற்சிக்கிறார்கள். என் நண்பர்களே, இந்த காரியங்களைச் சொன்ன ஒருவர் அவராயிருக்கிறார், நான் அல்ல. நான் வார்த்தையை மாத்திரமே மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு காலத்திலும் அது செய்யப்பட்டது போல, தெய்வத்துவம் மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. கவனியுங்கள், அவர் திரையிட்டார். தீர்க்கதரிசிகள் தெய்வத்துமாய், திரையிடப்பட்டிருந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையாய் (அது சரியா?) மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தனர். எனவே, அவர்கள் நம்முடைய மோசேயையும் கவனிக்கவில்லை, இயேசுவையும் காணவில்லை.

நாம் ஒரு மனிதனையல்ல, தீர்க்கதரிசி மூலமாய் தம்மை வெளிப்படுத்தித் திரையிட்டுக் கொண்டிருக்கிற தேவனையே ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். அதைப் புரிந்துகொள்வதற்கும், விசுவாசிப்பதற்கும் நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.

சிறு பிள்ளைகளே, நீங்கள் இனிமேல் அந்த திரைக்கு பின்னால் இல்லை, தேவன் உங்களுடைய முழு காட்சிக்கு வந்துவிட்டார்.

நாம் அந்த திரைக்குப் பின்னால் இனிமேல் இல்லை, தேவன் தம்மை முழு காட்சியில் வெளிப்படுத்துவதை நம்மால் காண முடிகிறது. ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்திற்கு செவி கொடுப்பது தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக்கொண்டிருப்பதாகும் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோம்.

அந்த சத்தத்திற்கு ஆமென் என்பதைத் தவிர, வேறு எதையும் நம்மால் கூற முடியாது. அந்த சத்தம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நமக்குப் பிரசங்கித்து, கற்பித்து, வெளிப்படுத்தும். அந்த சத்தம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தும். அந்த சத்தமே நாம் விரும்புகிற எல்லாமுமாயும், நமக்குத் தேவைப்படுகிற எல்லாமுமாயும் உள்ளது.

அந்த சத்தத்திற்கு ஜனங்களை சுட்டிக்காட்ட தேவன் பயன்படுத்திக்கொண்டிருக்கிற 5-விதமான ஊழியத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; தரிசனத்தை புரிந்துகொண்டு, தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்கும் வெளிப்பாட்டைப் பெற்றுள்ள போதகர்கள் தங்களுடைய மக்களுக்காக அவர்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய காரியமாயுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M என்ற செய்தியில் அது வெளிப்படுவதை நாங்கள் கேட்கையில், வல்லமையான ஜீவனுள்ள வார்த்தையின் சத்தத்திற்கு எங்களோடு செவிகொடுக்க வரும்படிக்கு நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்