
அன்புள்ள ஒளியின் பிள்ளைகளே,
அவருடைய ஒளியில் நடப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த ஒளியின் பாகமாக இருக்க, அவருடைய ஒளியுடன் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டோம். அவரால் அழைக்கப்படும்படி தெரிந்து கொள்ளப்படடோம். நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாக, அவருடன் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டோம். இருவரும் இப்பொழுது ஒன்றாய் இருக்கின்றனர்.
என்னால் அதை எத்தனை முறை எழுத முடிந்தாலும் கூட ஒருபோதும் போதாது. அதை நாம் ஒருபோதும் போதுமானதாக சொல்ல முடியாது. இந்த செய்தி நமக்கு எல்லாவற்றையும் குறிக்கிறது. அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாடு நம்மிடம் உள்ளது என்பதை அறிவது, நாம் வார்த்தைகளில் கூறக்கூடிய எதற்கும் அப்பாற்பட்டது.
இந்த நாளில் வாழ்வதும், சம்பவிப்பதில் ஒரு பாகமாக இருப்பதும், தேவன் நமக்குக் கொடுக்கக்கூடிய மகத்தான கனமாக உள்ளது. பிரான்ஹாம் கூடாரத்தில் உள்ள கூட்டங்களில் அமர்ந்து, தேவனுடைய தூதன் இந்தச் செய்திகளைக் கொண்டு வருவதைப் பார்த்தும் கேட்பதும் எவ்வளவு பெரியதோ, இந்த நாளிலும், இந்த நேரத்திலும், அந்த வார்த்தையின் நிறைவேறுதலாய் இருப்பதும் கூட அதற்கு மேல் பெரியதாயுள்ளது.
தேவன், அவருடைய மகத்தான திட்டத்தில், உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுசேர்வதற்கும், ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கும், அவருடைய வார்த்தையால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கும் ஒரு வழியை உருவாக்கியுள்ளார். நம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் கூறுவதை எந்த நொடியிலும் கேட்க காத்திருக்க வேண்டும்;
"இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!"
காலத்தின் தொடக்கத்திலிருந்து இது போன்ற எதுவும் ஒருபோதும் இருந்ததில்லை. தேவனுடைய மகத்தான திட்டத்தின் முடிவு இப்போது நடைபெறுகிறது, நாம் அதனுடைய பாகமாக இருக்கிறோம். கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது.
எல்லா ரகசியங்களும் தேவனுடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக மணவாட்டிக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முத்திரைகள், இடிமுழக்கங்கள், எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம், மூன்றாம் இழப்பு…மணவாட்டி அவைகளை திரும்ப திரும்ப கேட்டும்படியாக ஒவ்வொரு காரியமும் உரைக்கப்பட்டு ஒலிநாடாவில் உள்ளது அது நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது.
பரிசுத்த ஆவியானவர் மீண்டும் சபையில் இருக்கிறார்; கிறிஸ்து, அவர் வாக்களித்தபடி, சாயங்கால நேரத்தில் மானிட மாம்சத்தில், தம்மை வெளிப்படுத்தினார்.
இப்பொழுது மணவாட்டியே கூர்ந்து கவனித்து, இதைப் புரிந்துகொள்.
நாம் வார்த்தையால் அழைக்கப்படுகிறோம்; கிறிஸ்து தாமே நம்மை அழைத்தார். அவர் தம்மை நமக்குத் தெளிவாக்கியுள்ளார்; எபிரெயர் 13:8, லூக்கா 17:30, மல்கியா 4, எபிரேயர் 4:12, இந்த வேதவாக்கியங்கள் அனைத்தும் அவர் வாக்களித்தார்.
இது இந்த நாளுக்காக முன்குறிக்கப்பட்ட இந்த வேத வாக்கியங்கள் மூலம் தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற, இயேசு, தேவ குமாரன் மீண்டும் ஜீவிக்கிறார்.
அதை விசுவாசிப்பதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை அழைக்க தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். தீர்க்கதரிசி வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது, இது உலகம் பெறும் கடைசி அடையாளமாயும்; ஒரு மனித ரூபத்தில் யெகோவா பேசிக் கொண்டிருப்பதாயும் உள்ளது.
மனித சரீரத்திலுள்ள ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசியைப் போன்றவர். ஆயினும் அது அவருக்குப் பின்னால் இருந்த சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறின ஏலோகிம். இயேசு, "லோத்தினுடைய நாட்களில் நடந்து போல, உலகத்தின் முடிவின் போதும் நடக்கும் ,அப்பொழுது மனுஷ குமாரன்,” தேவனுடைய குமாரன் அல்ல, “மனுஷகுமாரன் வெளிப்படுவார்” என்றார்.
நீங்கள் தொடர்ந்து வார்த்தையில் இருந்தாலொழிய, அவர் யார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்பதை மணவாட்டி அறிந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் அந்த சத்தத்தை தங்களுக்கு முன் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அறிவார்கள்.
இப்பொழுது மணவாட்டி வழியிலிருந்து வெளியேறி மேலே செல்ல வேண்டும், அதனால் ஏழாம் எக்காளம் தொனிக்க வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய இரண்டு தீர்க்கதரிசிகள் காட்சியில் தோன்றலாம். கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே.
தேவனுடைய தீர்க்கதரிசி 64-0719M எக்காளங்களின் பண்டிகை என்ற செய்தியைக் கொண்டு வந்து, பிதாவினிடம் பேசி,
இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும். கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது...அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்கள் இருதயங்களில் காணப்படும் உத்தமத்தை இன்று காலை நோக்கிப் பார்த்து, கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் அவர்களுக்கு என்ன தேவையோ அவைகளை அவர்களுக்கு அளிப்பாராக.
என்று கூறுகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி நிறைவேற்றப்படுகிற தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகமாக இருப்பதற்கு வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8