
அன்புள்ள சிறந்த வேலைப்பாட்டுக் குடும்பமே,
கிறிஸ்துவின் மணவாட்டிக்கு இந்த கடைசி செய்திகள் எவ்வளவு முற்றிலும் பரிபூரணமாக இருந்தன. தேவன், தம்மை நமக்கு முன் திரைநீக்கி, தெளிவான காட்சியில் தம்மை வெளிப்படுத்துகிறார். உலகம் அதைப் பார்க்க முடியாது, ஆனால் நமக்கு, அவருடைய மணவாட்டிக்கே, நாம் பார்க்கக்கூடியதெல்லாம் இதுதான்.
நாம் திரையைக் கடந்து அவரை தெளிவான காட்சியில் பார்க்கிறோம். தேவன், மானிட தோல்களுக்கு பின்னால் இருக்கிறார். அவர் லூக்கா 17 மற்றும் மல்கியா 4-ல் வாக்களித்ததைப் போலவே சரியாக, வார்த்தை மாம்சமாகிவிட்டது. அவர் தம்மை ஒரு மானிடத் திரையில், அவருடைய தீர்க்கதரிசியில், அவருடைய சபையில் மறைத்துக்கொண்டுள்ளார்.
தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பேசி நமக்கு சொல்வதை நாம் கேட்கும்போது உலகத்திலேயே நாம் மகிழ்ச்சியுள்ள ஜனங்களாய் இருக்கிறோம்,
உங்களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களுடன் நான் தொடர்பு கொண்டுள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக இருப்பதைக் குறித்து நான் மகிழ்வுறுகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. அவர் நிச்சயம் இருப்பார். அவர் உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டார். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் உங்களை விட்டு விலகமாட்டார். நீங்கள் இப்பொழுது திரையினூடாகக் கடந்து வந்துவிட்டீர்கள்.
நாம் எல்லோருக்கும், நம்முடைய சொந்த அணிகளுக்குள்ளேயும் கூட வித்தியாசமானவர்களாக ஆகிவிட்டோம், ஆனால் இன்று அவருடைய வார்த்தையின் மூலம் அவர் நமக்குக் கொடுத்திருக்கிற வெளிப்பாட்டிற்காக, நாம் மிகவும் பெருமைப்படுகிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்காகவும் முட்டாள்களாக இருக்க வேண்டும்.
நாம் அவருடைய தீர்க்கதரிசியின் விசுவாசத்துடன் நம்முடைய விசுவாசத்தை வைத்து, ஒன்றுபட்டு, தேவனுடைய மகத்தான ஐக்கியத்தை உருவாக்குகிறோம். நாம் இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது; அந்த தீர்க்கதரிசி இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது; தேவனில்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது. எனவே ஒன்றாக, நாம் ஒரு ஐக்கியத்தை உருவாக்குகிறோம், இணைப்பு; தேவன், அவருடைய தீர்க்கதரிசி, அவருடைய மணவாட்டி. நாம் அவருடைய சிறந்த வேலைப்பாடாகிவிட்டோம்.
அவருடைய முதலாவது சிறந்த வேலைப்பாட்டை உருவாக்க அவருக்கு நான்காயிரம் ஆண்டுகள் ஆனது. இப்போது, அவரது மற்றொரு சிறந்த வேலைப்பாடான, நம்மை, அவருடைய மணவாட்டியை, அவருடைய மகத்தான சிறந்த வேலைபாட்டுக் குடும்பத்தை, இரண்டாவது ஆதாமையும், இரண்டாம் ஏவாளையும் உருவாக்க அவருக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பிடித்தன. நாம் இப்போது தோட்டத்திற்காக, ஆயிரம் வருட அரசாட்சிக்காக ஆயத்தமாக இருக்கிறோம். அவர் நம்மை மீண்டும் வடிவமைத்தார், நாம் இப்போது ஆயத்தமாக இருக்கிறோம்.
நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மனவாட்டியாய், அவருடைய மூல சிருஷ்டிப்பின் பாகமாய் இருக்கிறோம். தண்டு, பட்டுக்குஞ்சம், மற்றும் உமி ஆகியவை இப்போது விதையில் கூடி, உயிர்த்தெழுதலுக்கு ஆயத்தமாகி, அறுவடைக்கு ஆயத்தமாக உள்ளன. அல்பா ஒமேகாவாகிவிட்டது. உள்ளே சென்ற வித்து, ஒரு செயல்முறை மூலம் வந்து மீண்டும் வித்தாக மாறிவிட்டது.
ஏதேன் தோட்டத்தில் விழுந்து, அங்கேயே மரித்துப்போன வித்து, திரும்பி வந்தது. அங்கே மரித்துப்போன அந்த பரிபூரணமற்ற வித்திலிருந்து, இரண்டாவது ஆதாமுக்கு, பரிபூரண வித்திற்கு திரும்பி வருகிறது, இரண்டாம் ஆதாம்.
நாம் இப்போது இரண்டாவது ஆதாமாக, உண்மையான மணவாட்டியாக, வித்தாக, மீண்டும் மூல வார்த்தையுடன் திரும்பியுள்ளோம். நாம் வித்தாக இருப்பதற்கு முழு வார்த்தையாக இருக்க வேண்டும். நாம் ஒரு பாதி வித்தாக இருக்க முடியாது; நாம் வளர முடியாது, நாம் முழு வித்தாக இருக்க வேண்டும்.
இன்னும் ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டுள்ளது, அறுவடை இங்கே உள்ளது. நாம் முற்றிலும் முதிர்ச்சியடைந்துள்ளோம். நாம் வருகைக்காக ஆயத்தமாக இருக்கிறோம். இது அறுப்பின் நேரம். வித்து அதனுடைய மூல நிலைக்குத் திரும்பியது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியுமாக, சிறந்த வேலைப்பாட்டுக் குடும்பம் மீண்டும் வந்துள்ளது.
அவருடைய தீர்க்கதரிசியையும், அவருடைய மணவாட்டியையும் ஊக்குவிக்க, கர்த்தர் தம்முடைய தூதனுக்கு ஒரு மகத்தான தரிசனத்தை அருளினார். அவர் நம்மை, அவருடைய மணவாட்டியைக் குறித்த ஒரு முன்னோட்டத்தை அவருக்குக் கொடுத்தார். நாம் அவரைக் கடந்து செல்லும்போது, நாம் இனிமையான தோற்றமுள்ள எளிய பெண்மணிகளாய் இருந்தோம் என்று அவர் கூறினார். நாம் கடந்து சென்றபோது, நாம் யாவரும் அவரையே நோக்கி பார்த்துக் கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார்.
முடிவிலே, சிலர் வரிசையிலிருந்து வெளியேறி, மீண்டும் வரிசையில் வர தங்களால் இயன்றவரை முயன்றனர். அப்போது அவர் மிக முக்கியமான ஒன்றைக் கவனித்தார், அவர்கள் அவரைப் பார்க்காமல், வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழப்பத்திற்குள் சென்றுவிட்ட அந்த சபையைக் குறித்து அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நாம் அல்ல, முதலில் இருந்தவர்கள் அல்ல, நாம் வரிசைகளில் இருந்து ஒருபோதும் விலகாமலும் அல்லது அவரிடத்தில் இருந்து நம்முடைய பார்வையை திருப்பாமல் இருந்தோம் என்று நான் கூறுவதற்கு எவ்வளவு பெருமையும், நன்றியுள்ளவனுமாய் இருக்கிறேன்.
எனவே, சிறந்த வேலைப்பாடான தேவனுடைய குமாரனும், சிறந்த வேலைப்பாடான மணவாட்டியும், அது அவருடைய ஒரு துண்டாகும், அது வார்த்தையின் நிறைவேறுதலாய் இருக்க வேண்டும். வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது, கர்த்தருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
நாம் அவருடைய சிறந்த வேலைபாடுகளின் குடும்பமும், அவருடைய உண்மையான மணவாட்டி என்றும் அறிந்துகொள்வதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வார்த்தை நிறைவேற்றப்பட்டுள்ளது, கர்த்தருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
சிறந்த வேலைப்பாடு 64-0705 என்ற செய்தியை தீர்க்கதரிசி நமக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சிறந்த வேலைப்பாட்டு குடும்பத்தின் பாகமாகும்படி, எங்களோடு அந்த வார்த்தையைக் கேட்கும்படிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஏசாயா 53:1-12மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19