ஞாயிறு
17 மார்ச் 2024
64-0719e
பாளையத்திற்கு புறம்பே செல்லுதல்

அன்புள்ள கிறிஸ்தவ போர்வீரர்களே,

இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! இது முடிவின் நேரம், அல்லேலூயா! நாம் இங்கே இருக்கிறோம். அவருடைய மணவாட்டிக்கான கர்த்தருடைய வருகையின் மகத்தான நாள் சமீபமாயிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து நம்மை ஒன்றாக சேர்ந்து, தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுப்பதன் மூலம் பரிபூரணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்புக்குரியவர்கள் தோன்றுவதற்காக நாம் விழித்துக்கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறோம்…இப்பொழுது அது எந்த நாளாகவும் இருக்கலாம்.

"வார்த்தையுடன் தரித்திருங்கள்" என்பதே நாம் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ள ஒரே காரியமாய் உள்ளது. நாம் பார்ப்பது எல்லாம் இயேசுவே, அவர் மாம்சமான வார்த்தை. அதுவே நம்முடைய நாளுக்கான வெளிப்பாடு. அது அவருடைய மணவாட்டிக்கான தேவனுடைய பாளயமாய் இருக்கிறது.

இந்த செய்தியும், இந்த சத்தமும், இந்த ஒலிநாடாக்களுமே, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக நமக்கு தேவைப்படுகிற எல்லா காரியங்களுமாயிருக்கின்றன. நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. நாம் அழைக்கப்பட்டு, அந்தக் சத்தத்தைத் தவிர எல்லாவற்றிலிருந்தும் பிரிக்கப்பட்டுள்ளோம். அந்த சத்தமே இந்நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது என்று நாம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறோம்.

இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அவர் நமக்கு எல்லா காலத்திலும் இருந்ததிலேயே மிகச் சிறந்த தீர்க்கதரிசியை அருளியுள்ளார். அவர் உலகத்திற்கு, “இது என்னுடைய வல்லமையுள்ள தூதுன். அவர் உங்களுக்கு என்னுடைய சத்தமாய் இருக்கிறார். அவர் பூமியில் என்ன பேசுகிறாரோ அதை நான் பரலோகத்தில் எதிரொலிப்பேன். அவரைப் போன்று எவருமே இல்லை” என்று சொல்லும்படியாக அக்னி ஸ்தம்பமான ஒருவர் தாமே தம்முடைய புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.

"நான் அவரிடம், அவரிடம் மட்டுமே, உலகத் தோற்ற முதல் நான் மறைத்திருந்த என்னுடைய எல்லா ரகசியங்களையும் ஒப்படைத்துள்ளேன். உங்களை இந்த உலகத்திலிருந்து என்னிடத்திற்கு அழைக்க நான் முன்குறித்த ஒருவர் அவரே. உங்களை வழிநடத்த, வழிகாட்ட, வழிநடத்திச் செல்ல நான் தெரிந்து கொண்ட ஒருவர் அவரே. நீங்கள் அவருக்குச் செவி கொடுங்கள், ஏனென்றால் அவர் பேசவில்லை, அது நானே, மகத்தானவரான நானே என்று உங்களுக்கு நான் வெளிப்படையாக அறிவிக்கிறேன்!”

நான், “‘இந்த நாளையும், மல்கியா 4, வெளிப்படுத்துதல் 10:7 மற்றும் லூக்கா 17:30 ஆகிய வேதவாக்கியங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்படுகின்றன. வேத வாக்கியங்கள் அறிவித்தபடி, அவருடைய வல்லமையுள்ள தூதன் வந்திருக்கிறார். தேவன் இங்கே நம்மிடையே இருக்கிறார், அவர் செய்வதாக சொன்னபடியே மனித மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்’ என்று உலகிற்கு அறிவிக்கவும், சொல்லவும் வல்லமையான மனிதர்களை நியமித்து அழைத்துள்ளேன்.”

இது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதாகும். நாம் அவரை, தேவனுடைய தூதரை உங்களுக்கு சுட்டிக்காட்டவே அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்தும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொண்ட ஒருவர் அவரே. பிரதான ஆசாரியராகப் போவது யார் என்று விவாதம், சலசலப்பு, சண்டை மற்றும் கடுஞ்சினக் குமுறல் வேண்டாம்; இது, அது அல்லது வேறு யாராக இருக்கும். அந்த சத்தத்துடன் தரித்திருங்கள். ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தம் மாத்திரமே உண்டு, அவருடைய பெயர் வில்லியம் மரியன் பிரான்ஹாம்.

உங்களைத் தவறாக வழிநடத்தி செல்ல விரும்புகிற அநேகர் இருக்கிறபடியால், நாம் அந்த சத்தத்தோடு தரித்திருக்க மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய பாரம்பரியங்கள் ஜனங்களுக்கு மத்தியிலிருந்து அந்த உண்மையான சத்தத்தை விலக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கு அவர் அந்நியராக மாறிவிட்டார். அவர்களுடைய சத்தம் அந்த சத்தத்தின் ஸ்தானத்தை எடுத்துள்ளது, தேவன், ஒலிநாடாக்களின் மூலம் அவர்களைச் சந்திக்கும் வரை, அவர் ஒரு அந்நியராயிருக்கிறார்.

மகத்தான கம்பீரமான பிரசன்னம் நம்முடன் உள்ளது. ஆவியின் உணர்வுள்ள எந்த மனிதனும் அந்த சத்தம் தேவனுடைய சத்தம் என்று சொல்ல முடியும். அதுவே இன்றைக்கான தேவனுடைய பாளயம்.

கிறிஸ்துவின் மணவாட்டி என்று உரிமை கோருகிற ஒவ்வொரு நபரும் தாங்கள் எந்த பாளயத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்த எளிய கேள்வியை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்: மணவாட்டி அனைவரும் எந்த சத்தத்திற்கு “ஆமென்” என்று சொல்ல முடியும்?

இன்றைக்கான வார்த்தையின் ஒரு உண்மையான வெளிப்பாட்டோடு நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருப்பீர்களேயானால், ஒலிநாடாக்களில் உள்ளது தேவனுடைய சத்தமே: என்ற ஒரே ஒரு பதில் மாத்திரமே உண்டு. உண்மையாகவே சாத்தான் அதை பல வேறுபட்ட வழிகளில் அதைக் கையாள முயற்சிக்கிறான், ஆனால் மணவாட்டிக்கோ வேறெந்த பதிலுமே இல்லை. அது எளிமையானது.

சாத்தான் நம்மை பிரிக்கும்படிக்கு அந்த பதிலை உபயோகித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனால், மணவாட்டி ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது...நம்மை ஒன்றிணைக்கும் சத்தத்தினாலே மாத்திரமே நாம் இருக்கிறோம்.

காலம் மிகவும் தாமதமாகிவிட்டதால், எங்களுடன் ஒன்றிணைக்கப்பட வாருங்கள்.

“நான் பாளயத்திற்குப் புறம்பே செல்ல விரும்புகிறேன். அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், நான் என்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் சுமப்பேன். நான் பாளயத்திற்கு புறம்பே செல்வேன். ஜனங்கள் என்னைக் குறித்து என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல், நான் பாளயத்திற்கு புறம்பே அவரை பின்தொடர விரும்புகிறேன். நான் செல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறேன்.”

இன்றைக்கான தேவனுடைய பாளயத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.

பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல் 64-0719E, என்ற செய்தியை அவர் நமக்கு கொண்டு வரும்போது, அவருடைய மணவாட்டியை வழிநடத்தத் தெரிந்து கொண்ட தேவனுடைய சத்தத்தை நாங்கள் கேட்கவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, மணவாட்டியின் ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

அது "ஏதோ ஒரு பாளயம்" அல்ல; அது "அந்தப் பாளயமே."

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

எபிரெயர் 13:10-14
மத்தேயு 17:4-8