அன்புள்ள மன்னா பிரியர்களே,
ஒரு எலும்போ அல்லது ஒரு விதையோ இல்லாதிருக்கிருக்கிற ஆகாரத்தை நாம் புசிக்க முடிகின்ற காரணத்தால் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். முழுவதும் பரலோகத்தின் இனிமையினால் நிறைந்திருக்கும் "மன்னா," என்று அழைக்கப்படுகின்ற அப்பங்கள், பரலோகத்திலிருந்தே இறங்கி வருகின்றன.
நாம் விதைகளேயில்லாத இந்த புதிய மன்னாவைப் பெற்றுக்கொள்ள கூடிய ஒரு இடம் மாத்திரமே உண்டு என்பதை ஆவிக்குரிய வெளிப்பாட்டினால், அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்; அது அவர் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற தேவனுடைய சத்தத்தை கேட்பதினாலேயாகும்.
சபைகள் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு காலத்திலும் அவருடைய நிலையான வேண்டுகோளாயுள்ளது. இந்தக் கடைசி காலத்தில், அவருடைய வேண்டுகோள் மற்ற எந்த காலத்தைக் காட்டிலும் அதிக வலியுறுத்தலாயுள்ளது; ஏனெனில் இது கர்த்தருடைய வருகையின் நாளாயுள்ளது. நாம் அவருடைய உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று, முற்றிலும் துரிதத்தோடு, அவர் நம்மை எச்சரித்துள்ளார்.
ஓ, உலகில் பல சத்தங்கள் உள்ளன - பல பிரச்சனைகள் மற்றும் தேவைகள் கவனத்தைக் கவருகின்றன; ஆனால் ஆவியானவரின் சத்தத்தைப் போல பெருமதிப்புடன் கவனிக்கத்தக்க மிக முக்கியமான ஒரு சத்தம் ஒருபோதும் இருக்காது. ஆகையால், "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்."
ஆவியானவருடைய சத்தத்தைக் கேட்பது எவ்வளவு முக்கியமானது என்பது சபைகளுக்கு அவருடைய எச்சரிப்பாய் உள்ளது. அந்த சத்தத்தைக் கேட்கும் முக்கியத்துவத்தை ஜனங்களிடமிருந்து தடுக்க முயற்சிக்க, நிச்சியமாகவே அங்குதான் சத்துரு தாக்குவான்.
பல சத்தங்கள் உள்ளன என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். பல பிரச்சனைகள் மற்றும் தேவைகள், கவனத்தை ஈர்க்கின்றன, ஆனால் ஒருபோதும் மறக்க வேண்டாம், நீங்கள் அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்க வேண்டும்.
நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டேன், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்.
நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்பதே பதிலாய் உள்ளது.
இது அவருடைய மணவாட்டிக்கு மிகவும் தெளிவாக உள்ளது. இது மறைக்கப்பட்டிருக்கவில்லை, அது தெளிவாக உள்ளது; யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அவர் சொல்லாத ஒன்றை நான் ஜனங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை... நான் அதை உருவாக்கவில்லை. நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் என்ன என்பதை அவர் தெளிவாகச் சொல்கிறார். அவருடைய சத்தத்தைக் கேட்பது தேவனுடைய பரிபூரண சித்தமாயுள்ளது மற்றும் அவர் நமக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார்.
சகோதர சகோதரிகளே, உங்களுடைய போதகர்களுக்கு நீங்கள் செவிகொடுக்கக் கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஊழியக்காரர்களாய் இருந்தால் அவர்கள் போலியானவர்கள் என்றோ அல்லது தவறானவர்கள் என்றோ நான் கூறிக்கொண்டிருக்கவில்லை.
மணவாட்டிக்கு ஒரு உதவியாக இருக்கவும், மூல வார்த்தைக்கு திரும்ப உங்களைச் சுட்டிக்காட்டவும் கர்த்தர் எங்களை இங்கு வைத்துள்ளார். நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமாக உங்கள் முன் அந்த சத்தத்தை வைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு திரும்ப வேண்டும். முழுமையாக திருப்பளிக்கப்பட்ட ஆதாம், வார்த்தையின் பின்னால் அரணாக்கப்பட்டவர். தேவன் ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் ஆதாமிடம் உதட்டிலிருந்து செவிகேட்கப் பேசினார், இன்றைக்கும், அவர் அதே காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்.
நாம் இடைவெளியில் நின்று, “நாம் சகோதரர்கள்” என்று கூற வேண்டும். நாம் பிரிந்திருக்கவில்லை, நாம் யாவரும் ஒரே சரீரம்; நம்பிகையிலும், உபதேசத்திலும் நாம் ஒன்றாகவேயிருக்கிறோம், (வேதத்தின் உபதேசத்தில்.)
நாம் சகோதரர்கள். நான் சபைகளைப் பிரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை, மணவாட்டியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே காரியத்துடன் நம்மை ஒன்றிணைக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாம் யாவரும் எந்த ஒன்றோடும், அல்லது ஊழியர்களின் குழுவோடும் உடன்பட முடியாது; அவர்கள் எல்லோரும் வித்தியாசமாயும், வெவ்வேறு காரியங்களையும் கூறுகின்றனர். ஒருவர் மாத்திரமே ஏழாம் தூதனாகிய செய்தியாளராக இருக்கிறார். ஒரே ஒரு தேவனுடைய சத்தம்தான் உண்டு. அவருடைய மணவாட்டிக்காக ஒலிநாடாவில் அந்த சத்தத்தை தேவன் அருளியிருக்கிறார்.
நான் தெளிவாக இருப்பேன். என்னுடைய வெளிப்பாடு: ஒலிநாடாவில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது தேவனுடைய பரிபூரண சித்தம் என்பதே.
சாமுவேலின் நாட்களைப் போலவே, ஜனங்கள் அவரை அணுகி, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று சொன்னார்கள். அது அவருடைய இருதயத்தை துக்கப்படுத்தியது. அவர் தேவனிடம் சென்று அவர்கள் விரும்பியதை அவரிடம் சொன்னார். தேவன் சாமுவேலிடம், அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை, சாமுவேல், நான் அவர்களை ஆளக்கூடாது என்று, அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று சொன்னார்.
அவர் அவர்களை எப்படி ஆளுமை செய்து கொண்டிருந்தார்? அவருடைய தீர்க்கதரிசி, சாமுவேல் மூலமே. அதுவே அவருடைய பரிபூரண சித்தமாயிருந்தது, அவர்கள் அவரை புறக்கணித்துவிட்டனர். அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு திரும்பி வர வேண்டும். நீங்கள் 2 பரிபூரண சித்தங்களைக் கொண்டிருக்க முடியாது.
முழு மணவாட்டியும் ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றிணைவதை நான் எப்படியாய் விரும்புகிறேன். "நான்" அதைக் கூறிக்கொண்டிருப்பதால் அல்ல, ஆனால் தேவன் அதைச் செய்து கொண்டிருப்பதினாலே. இதுவே அவருடைய மணவாட்டியை ஒன்று கூட்டி கொண்டுவரும்படியான ஒரே காரியமாயுள்ளது.
ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி மணவாட்டியின் ஒரு பாகத்தோடு: பத்து கன்னிகைகளும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களும் 60-1211M என்ற செய்தியை செவிகொடுத்துக் கேட்க வரும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.
உங்களால் எங்களுடன் சேர முடியாவிட்டால், இந்த ஞாயிறு காலை உங்களுடைய சபையில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உங்களுடைய போதகரை ஊக்குவியுங்கள். உலகம் முழுவதும் உள்ள மணவாட்டி, ஒவ்வொரு சபையிலும், ஒவ்வொரு வீட்டிலும், அல்லது நீங்கள் எங்கிருந்தாலும், பரலோகத்தில் இனிமையினால் நிறைந்த புதிய மன்னாவைக் கேட்பதை, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல் 62-0422 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் ஒலிக்கும்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியைக் கேட்போமாக. ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் இது ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, பரிபூரணம் 57-0419 என்ற செய்தியைக் கேட்போமாக. ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் இது ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திரும்பளிக்கப்பட்ட மணவாட்டி மரமே,
ஆண்டு முழுவதும், உலகத்தை முழுவதுமாக மூடிவிட்டு, என்னுடைய சாதனங்கள் அனைத்தையும் அணைத்துவிட்டு, நாள் முழுவதும் ஜெபம் செய்யவும், அவருடைய சத்தம் என்னுடைய இருதயத்தில் பேசுவதைக் கேட்கவும், அவருடன் ஐக்கியங்கொள்ளவும், அவருடைய சேவைக்கென்று என்னுடைய ஜீவியத்தை முழுவதுமாக மறுபரிசீலனை செய்ய முடியும் என்பதற்காகவே நான் வார இறுதியில் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நமக்கு ஈஸ்டர் நாளாக இருக்க வேண்டும், ஆனால் இந்த வார இறுதியில் மிகவும் சிறப்பான, புனிதமான வேளை; மணவாட்டி ஒன்று கூடி வழிபட ஒரு ஒதுக்கப்பட்ட நேரம். என் நண்பர்களே அதைக் குறித்து நான் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். ஒரு இரகசிய இடத்தில், அங்கே ஆவியில், அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டு, தேவனோடு அடைக்கப்படுவதற்கான நேரம் வரும் வரை என்னால் காத்திருந்து பொறுத்திருக்க முடியவில்லை; உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் மணவாட்டியுடன் சேர்ந்து, உன்னதங்களிலே வீற்றிருத்தல். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! இது உண்மையிலேயே நம்முடைய ஜீவியங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் புனிதமான வார இறுதியாக இருக்க வேண்டும்.
ஓ, நாம் இங்கே இன்னும் ஒரு நிமிடம் நிறுத்துவோமாக. "உன்னதங்களிலே.” இப்பொழுது எங்கோ ஓரிடத்தில் அல்ல, ஆனால் உன்னதங்களில். நாம் "உன்னதங்களில்" ஒன்று கூடியிருக்கிறோம். அதுவே விசுவாசியின் ஸ்தானம் என்பதை பொருட்படுத்துகிறது. அதாவது, எனக்கு ஜெபிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஜெபிக்கப்பட்டிருந்தால், அல்லது சபைக்கு ஜெபிக்கப்பட்டிருந்தால், நாம் செய்திக்காக ஆயத்தமாய் இருக்கிறோம், நாம் தாமே பரிசுத்தவான்களாக ஒன்று கூடி, வெளியே அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய ஆசிர்வாதங்களினால் நிரப்பப்பட்டு, அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, இப்பொழுது உன்னதங்களிலே ஒன்று கூடி உட்கார்ந்திருக்கிறோம், நம்முடைய ஆத்துமாக்களில் நாம் பரலோகத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறோம். நம்முடைய ஆவிகள் நம்மை ஒரு பரலோக சூழலுக்கு கொண்டு வந்துள்ளன. ஓ, சகோதரனே! அங்கு தான் நீங்கள் இருக்கிறீர்கள், ஒரு பரலோக சூழலிலே! ஓ, இன்று இரவு என்ன சம்பவிக்கக் கூடும், நாம் இங்கே ஒரு பரலோக சூழலில் உட்கார்ந்து கொண்டிருப்போமானால் இன்றிரவு என்ன சம்பவிக்க கூடும், புதிதாக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு இருதயத்தின் மேலும் பரிசுத்த ஆவியானவர் அசைவாடி கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக்கினால் என்னவாயிருக்கும்? பாவங்கள் யாவும் இரத்தத்தின் கீழிருக்க, பரிபூரண ஆராதனையில், நம்முடைய கரங்கள் தேவனிடத்தில் உயர்த்தப்பட்டிருப்பதோடு, நம்முடைய இருதயங்களும் உயர்த்தப்பட்டிருக்க, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே உட்கார்ந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட ஒன்றில் நீங்கள் எப்பொழுதாகிலும் உட்கார்ந்திருக்கிறீர்களா? ஓ, "தேவனே நான் ஒருபோதும் இங்கிருந்து சென்று விட அனுமதியாதேயும்" என்று கூறி சந்தோஷத்தினால் அழுமளவிற்கு நான் அமர்ந்திருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே!
அவர் எதனால் நம்மை ஆசிர்வதித்திருக்கிறார்? தெய்வீக சுகமளித்தல், முன்னறிதல், வெளிப்பாடு, தரிசனங்கள், வல்லமைகள், அந்நியபாஷைகளில் பேசுதல், வியாக்கியானித்தல்கள், ஞானம், அறிவு, எல்லா உன்னத ஆசிர்வாதங்கள், சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷம், ஒவ்வொரு இருதயமும் ஆவியினால் நிறைந்து, ஒருமித்து நடந்து, உன்னதங்களில் ஒருமித்து உட்கார்ந்திருத்தல், நம்மிடையே எவ்வித பொல்லாத சிந்தனையுமின்றி, ஒரு புகைப்பிடித்தலும் இல்லாமல், ஒரு குட்டை ஆடையும் கூட அணியாமல், இந்த ஒன்று, அது மற்றது என்றிலில்லாமல், ஒரு பொல்லாத சிந்தனையும் இல்லாமல், ஒருவருக்கு விரோதமாக மற்றவர் எதையும் கொண்டிராமல், எல்லோரும் ஒருவரோடொருவர் அன்புடனும், இசைவுடனும் பேசி, எல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்போது, "பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு முழக்கமுண்டானது. அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. "உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.”
கர்த்தராகிய இயேசுவே இந்த ஈஸ்டர் வார இறுதியில் உமக்கான எங்களுடைய ஆராதனையை ஏற்றுக்கொள்ளும். நாங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே பிரவேசிப்போமாக; நாங்கள் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்போமாக. ஒரு தீய சிந்தனையும் இல்லாமல், ஒரு கவனச்சிதறலும் இல்லாமல், ஆனால் ஏக மனதோடு, ஒரே நிலையில் இருக்க; அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு முழக்கமுண்டாகி எங்கள் ஒவ்வொருவருடைய வீடுகளுக்குள்ளும் வருவதாக. "கர்த்தராகிய இயேசுவே வாரும்", நாங்கள் உம்மை முகமகமாய் காண ஆயத்தமாய் இருக்கிறோம்.
ஏனென்றால் எங்களுடைய நாளின் சாயங்கால வெளிச்ச செய்தியினூடாக மணவாட்டி திரும்பளிக்கப்பட்டிருக்கிறாள்; மல்கியா 4-ன் செய்தியினூடாகவே. அவருடைய சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்தலுக்காக கர்த்தாவே நாங்களும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், கைகளினால் கட்டப்பட்ட ஒரு சபையில் அல்ல, ஆனால் உம்முடைய தீர்க்கதரிசியாகிய, ஒரு நபருக்குள், மகத்தான அடையாளங்கள் மற்றும் அற்புதங்களின் மூலமாக கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்துதலும் நிரூபிக்கப்பட்டது, அவர் மீண்டும் தேவனுடைய முழு வார்த்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது அது உலகெங்கிலுமுள்ள உம்முடைய மணவாட்டிக்குள் ஜீவித்து கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசனத்தின் படி, இந்த மகத்தான சாயங்கால வெளிச்சத்தை காணும்படி எங்களை ஜீவிக்க அனுமதித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
சாயங்கால வெளிச்சம் எதற்காக தோன்றியிருக்கிறது? சாயங்கால வெளிச்சம் எதற்காக உள்ளது? திரும்பளிக்க. வியூ! நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்களா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்.-ஆசி.] காலை வெளிச்சம் தோன்றின அதே நோக்கத்திற்காகவே சாயங்கால வெளிச்சமும் தோன்றினது, இருளின் காலங்களில் ரோமாபுரி வெட்டிப் போட்டதை திரும்ப அளிக்கவே. சாயங்கால வெளிச்சம் பிரகாசிப்பதன் மூலமாக தேவன் திரும்பளிக்கப் போகிறார் (எதை?), தேவனுடைய வார்த்தையை மீண்டும் திரும்ப அளிக்கவே, அவருடைய சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்துதல். அவர் செய்த ஒவ்வொரு காரியமும் சரியாக அவர் செய்த விதமாகவே அது மீண்டும் சாயங்கால வெளிச்சத்தில் இருக்கும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? ஓ, அது அற்புதமாயில்லையா? ["ஆமென்."] சரியாக தீர்க்கதரிசனத்தின்படி, இப்பொழுது சாயங்கால வெளிச்சத்தை, அதை காணும்படியாகவே இங்கே நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும்படிக்கேயாகும்.
உண்மையான மணவாட்டி, அவள் அந்த பாவங்களை ஒருபோதும் செய்யாதது போல இருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தபோதிலும், நீதிமானாக்கப்படுதலிலேயே நின்றுவிடுகிறதில்லை; அவள் சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவள் பரிசுத்தமாக்கப்படுகிறதிலேயே நின்று விடுகிறதில்லை; அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிருந்தாலும், பெந்தெகொஸ்தேயிலேயே அவள் நின்றுவிடுகிறதில்லை; ஆனால் அவள் நம்முடைய நாளுக்கான வார்த்தைக்கு செல்கிறாள்: மல்கியா 4, அந்த வார்த்தையே ஒரு மனிதனில் மீண்டும் மாம்சமானது. "நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்," அதுவே மணவாட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தைக் கொண்டு வரும். அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை ஒலிநாடாக்களை கேட்பதனால் மாத்திரமே வர முடியும், அவருடைய அற்புதமான நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
அவர்களில் ஒருவரான, மார்டின் லூத்தர், அவர் ஒரு வெளிச்சத்தை பிரகாசிக்கத் துவங்கினார், அது மிகச் சிறிய பலமாய், நீதிமானாக்கப்படுதலைக் குறித்ததாயிருந்தது.
பின்பு வெஸ்லி தோன்றினார், இன்னும் பலமாய், பரிசுத்தமாக்கப்படுதல்.
வெஸ்லிக்குப் பிறகு, அவரைக் காட்டிலும் பலமானது உண்டானது, பெந்தெகொஸ்தே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், மற்றொரு மகத்தான தீர்க்கதரிசியில். புரிகிறதா?
ஆனால் கடைசி நாட்களில், மல்கியா 4, அதே வார்த்தையுடன் எலியா வரவிருக்கின்றார். "தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடம் வந்தது." சாயங்கால வெளிச்சத்தில், திரும்ப அளிக்க மற்றும் திரும்பக் கொண்டு வருவதற்கு, வர வேண்டியதாய் இருக்கிறது. எதற்கு? "பிள்ளைகளுடைய இருதயங்களை தேவனுடைய விசுவாசத்திற்கு திருப்புவதற்கே." நான்காம் வெளிச்சம்.
ஈஸ்டர் வார இறுதியில், உங்கள் வீடுகளில், வார்த்தையின் பேரில் கூடி வந்து, நாம் கர்த்தரை ஆராதிப்போமாக. புகைப்படங்கள் எடுக்க, அனுதின மேற்கோளைக் கேட்க, செய்தித் தொகுப்பு (டேபிள்) பயன்பாட்டிலிருந்து ஒலிநாடாக்களில் செய்தியை இயக்க, லைப் லைன் பயன்பாட்டினை பயன்படுத்த, அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பிற்குத் தவிர உங்களுடைய தொலைபேசிகளை அணைத்து வைக்கவும்.
பின்வரும் அட்டவணைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:
வியாழக்கிழமை
இஸ்ரவேல் புத்திரர் யாத்திரைக்கு முன், பஸ்காவை நினைவுகூரும் வகையில், கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனம் எடுத்துக்கொண்டது வியாழன் இரவாயிருந்தது. நம்முடைய புனித வார இறுதிக்கு முன், நம்முடைய வீடுகளில் கர்த்தரோடு ஐக்கியங்கொண்டு, நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிக்கும்படியாயும், நம்முடைய பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு தரும்படியாயும் அவரிடம் கேட்பதற்கு நமக்கு என்ன ஒரு வாய்ப்பு உள்ளது.
தேவனே, இப்பொழுதே எங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே, அங்கு இரத்தம் இருக்கின்றதா? இல்லையென்றால், நீர் இப்பொழுது அதைத் தடவி, எங்களுடைய பாவங்களைப் போக்கி, அவைகளை மூடி, அவைகளை, இந்த உலகத்தின் பாவங்களை எங்களிடத்திலிருந்து விலக்கிப்போட்டு, கர்த்தாவே, தேவனுடைய குமாரனும், எங்கள் இரட்சகருமான, எங்களுடைய ஆட்டுக்குட்டியானவரின் சரீரத்தைப் புசிக்கவும் இரத்தத்தை பானம்பண்ணவும் வரப்போகும் இந்நேரத்தில், எங்களுடைய பிதாவின் பார்வையில் நாங்கள் பரிசுத்தமும் சமர்ப்பிக்கப்படத்தக்கவர்களுமாக இருக்க வேண்டும் என்று-என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
நாம் யாவரும் உங்களுடைய உள்ளூர் நேர மண்டலத்தில் மாலை 6:00 மணிக்குத் தொடங்கி, இராப்போஜனம் 57-0418 -என்ற செய்தியைக் கேட்போமாக, அதன் பிறகு லைஃப்லைன் பயன்பாட்டில் இயங்கும் நம்முடைய விசேஷித்த இராப்போஜன ஆராதனைக்குச் செல்வோம், அல்லது கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கம் செய்யலாம்.
செய்தியைத் தொடர்ந்து, நாம் நம்முடைய குடும்பங்களுடன் நம்முடைய வீடுகளில் கூடி, கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வோம்.
ஒலிநாடா செய்தி மற்றும் இராப்போஜன ஆராதனை இரண்டையும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு விரைவில் எங்களிடம் கிடைக்கும், அல்லது, அது (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை
காலை 9:00மணிக்கு நாம் நம்முடைய குடும்பத்தினருடன் ஜெபத்திற்குச் சென்று, பின்னர் மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கு, கர்த்தர் நம்முடன் இருக்கும்படியாயும், நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கும்போது நம்முடைய வீடுகளை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படியாயும் அழைப்போமாக.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வாரியில் அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, பிதாவுக்குப் பிரியமானதையே எப்பொழுதும் செய்ய நம்மை அர்ப்பணிப்போமாக.
அது அவரை முழுமையாகப் பிரதிபலித்தது என்பதை இப்பொழுது நாம் கண்டறிகிறோம். சிற்பி இப்பொழுது அவருடைய குமாரனை, தேவனை, இம்மானுவேலை அழைத்து, சிறந்த வேலைப்பாட்டில் வார்த்தையைப் பிரதிபலித்தார். சற்று யோசித்துப் பாருங்கள், தேவன் தம்மை அங்கே, அந்த சரீரத்தில் அடையாளம் கண்டுகொண்டு, அவராக, அவரும் தேவனும் ஒன்றாகும் வரை, அந்த ஒரு நபர் அப்படியே ஒப்புக்கொடுத்தார். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள்ளே வாசம் செய்கிறார். நான் எப்பொழுதும் பிதாவிற்கு பிரியமானதையே செய்கிறேன்."
இன்றைக்கு கிறிஸ்தவனுக்கு அதை போன்ற ஒரு சாட்சி இருக்கக்கூடுமானால் எப்படியிருக்கும்? நீங்கள் இங்கு யூமாவில் உள்ள வீதியில் ஒரு சிறந்த வேலைப்பாடாய் இருப்பீர்கள். நீங்கள், "நான் எப்பொழுதும் தேவனுக்கு பிரியமானதையே செய்கிறேன்" என்று உங்களால் கூற முடியும்போது, நீங்கள் கழுவும் தொட்டியின் பின்னால் ஒரு துவைக்கும் பெண்ணாக இருந்தாலும், நீங்கள் இன்னமும் தேவனுக்கு ஒரு சிறந்த வேலைப்பாடாய் இருப்பீர்கள், முழு உலகமும் இயேசு கிறிஸ்துவின் கிரியை உங்களுக்குள் பிரதிபலிப்பதைக் காண முடியும்.
பிறகு பிற்பகல் 12:30 மணிக்கு, பரிபூரணம் 57-0419 என்ற செய்தியைக் கேட்க, நாம் நம்முடைய வீடுகளில் ஒன்று கூடுவோமாக.
பிறகு, நம்முடைய கர்த்தரின் சிலுவையேற்றத்தின் நினைவாக, மாலை 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் ஒன்றாக இணைவோம்.
சனிக்கிழமை
நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை காலை 9:00 மணிக்கும், பிற்பகல் 12:00 மணிக்கும் ஜெபத்தில் ஒன்றிணைந்து, அவர் நமக்கு மத்தியில் நமக்காகச் செய்யும் மகத்தான காரியங்களுக்காக நம்முடைய இருதயங்களைத் ஆயத்தப்படுத்துவோமாக.
கர்த்தாவே! தயவுக் கூரும் கர்த்தாவே! ஓ, நான் மிகவும் அதிகமாய் பாடியிருக்கலாம். நான் மிக அதிகமாய்ப் பிரசங்கித்திருக்கலாம். நான் மிக அதிகமாகச் சத்தமிட்டிருக்கலாம். நான் மிக அதிகமாகக் கதறியிருக்கலாம். ஆனால் என்னால் மிக அதிகமாக ஒருபோதும் ஜெபிக்க முடிந்ததில்லை. ஓ, தேவனே, என்னை ஆராய்ந்துப் பார்த்து, என்னைச் சோதித்தறியும்.
சற்று முன்னர், அந்த ஆழமானக் குளங்கள், எப்படி அந்த நட்சத்திரங்களை அவைகள் பிரதிபலிக்கின்றன என்பதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம்; கர்த்தாவே, எங்களுக்குள்ளாக உம்முடைய ஆவியின் ஆழத்தை வையும், தீர்க்கதரிசியாகிய தாவீது கூறினது போல, “அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை வழிநடத்தியருளும்,” சிற்றலைகளைக் கொண்ட தண்ணீர்களண்டை அல்ல. கர்த்தாவே, அங்கே அமர்ந்தத் தண்ணீர்களண்டை, என்னை நடத்தும். என்னை அமைதிப்படுத்தும்.
பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியை: வார்த்தையைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்.
இது உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டிக்கான என்னே ஒரு மகிழ்ச்சியும் மிக முக்கியமுமான நாளாய் இருக்கப்போகிறது.
பிறகு, மாலை 3:00 மணிக்கு, மீண்டும் ஜெபத்தில் சேர்வோம்.
ஞாயிற்றுக்கிழமை
மணவாட்டி மரம் திரும்பளிக்கப்படுதலில் பங்குகொண்டு, அதைக் கேட்பதற்கு என்னே ஒரு பரிபூரணமான நாள்.
சகோதரன் பிரான்ஹாம் காலை 5:00 மணியளவில் அவருடைய சிறிய நண்பனான ராபின் பறவை அவரை எழுப்பியது போல, நாம் முதலில் அதிகாலையில் எழுந்திருப்போமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்துவோமாக:
இன்று காலை ஐந்து மணிக்கு, என்னுடைய சிறிய நண்பன் ஒரு சிவந்த மார்புடன் ஜன்னலருகே பறந்து வந்து என்னை எழுப்பினான். “அவர் உயிர்த்தெழுந்தார்" என்று கூறினது, அதனுடைய சிறிய இருதயமே வெடித்துவிடுவது போல் காணப்பட்டது.
காலை 9:00 மணிக்கு, நம்முடைய சங்கிலி ஜெபத்தில் நாம் மீண்டும் ஒருமுறை இணைந்து, ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.
பிற்பகல் 12:30 மணிக்கு, மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல் 62-0422 என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்.
இந்த ஆராதனைக்குப் பிறகு, நாம் மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றிணைந்து, உலகெங்கிலும் அவரோடும் அவருடைய மணவாட்டியோடும் அவர் நமக்கு அளித்துள்ள அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி செலுத்துவோமாக.
வெளிநாடுகளில் உள்ள என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே, ஜெஃபர்சன்வில் நேரத்திலும், இந்த அட்டவணையிலும் உள்ள அனைத்து ஜெப நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இயக்கப்படும் ஒலிநாடாவிற்காகவும் எங்களுடன் ஒன்றிணைய, உங்களை நான் அழைக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிற்பகல் ஜெபர்சன்வில் நேரத்தில் ஒலிநாடாக்களை இயக்குவது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அந்த செய்திகளை இயக்க தயங்க வேண்டாம். எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:30 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நம்முடைய ஞாயிறு செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
படைப்புகள், எழுதும் தாள்கள் மற்றும் பயிற்சிகள் மற்றும் இளம் அஸ்திபார (YF) வினாடி வினாக்களில் ஒரு பகுதியாக இருக்க உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அழைக்க நான் விரும்புகிறேன், உங்கள் முழு குடும்பமும் ஒன்றுசேர்ந்து மகிழ முடியும். இந்த வார இறுதியில் நாம் கேட்கப்போகும் இவை அனைத்தும் வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருப்பதால் நீங்கள் அவைகளை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
வார இறுதி அட்டவணையில், இராப்போஜன ஆராதனைக்காக ஆயத்தமாகும் தகவல், படைப்புகளின் திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் பொருள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.
ஆராதனை, துதித்தல் மற்றும் சுகமளித்தல் முழுவதும் நிறைந்த ஒரு வார இறுதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மணவாட்டியுடன் உலகெங்கிலும் ஒன்றாக வர அழைப்பது எனக்கு அப்பேர்ப்பட்ட ஒரு கனத்திற்குரியதாய் உள்ளது. இது உண்மையாகவே உங்கள் ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் வார இறுதி என்றே நான் நம்புகிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஒலிநாடா ஆராதனை
ஈஸ்டர் வார இறுதிக்கான பிரசங்கங்கள் கீழே உள்ளன. வியாழக்கிழமை இராப்போஜனம்/கால் கழுவுதல் ஆராதனை பதிவிறக்கத்தின் ஒரு பகுதியாகும்.
வியாழக்கிழமை- மாலை 6:00 மணி (உள்ளூர் நேரம்)
57-0418இராப்போஜனம்(விசேஷித்த இராப்போஜன ஆராதனை)
வெள்ளிக்கிழமை - மதியம் 12:30 (உள்ளூர் நேரம்)
57-0419பரிபூரணம்
சனிக்கிழமை- பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)
57-0420கல்லறையிலிடுதல்
ஞாயிற்றுக்கிழமை- பிற்பகல் 12:30 (ஜெபர்சன்வில் நேரம்)
62-0422மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல்