அன்புள்ள சிறிய கடிகாரச் சுருள்வில்லே, முக்கிய சுருள்வில்லே அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும்:
நாம் யாவரும் கிறிஸ்துவின் சரீரமாக, நம்முடைய ஸ்தானத்தில், ஒற்றுமையாக, அவருக்காக நம்மால் இயன்ற மிகச் சிறந்த பணியினைச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். அவருடைய வார்த்தையான, இந்தச் செய்தியைத் தவிர, வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.
தேவனுடைய தீர்க்கதரிசி நம்மிடம் சொல்வதைக் கேட்க நாம் விரும்புகிறோம்: "குறிப்பிட்ட ஜனங்களாகிய உங்களைக் குறித்தும் ஒரு காரியம் உண்டு. நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் விசேஷித்த ஜனங்களாய் இருக்கிறீர்கள். உங்களை சந்தித்து, உங்களோடு உரையாட நான் நேசிக்கிற மற்றொரு காரியமும் உண்டு."
"என்னுடைய சொந்த சிறு தாழ்மையான ஊழியத்தைச் சுற்றியே நான் நோக்கிப் பார்க்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன்; மணவாட்டியின் குழுவை அழைத்து ஒன்றாக இணைத்துக்கொண்டிருக்கிறது. அது சக்கரத்திலிருந்து ஒரு சக்கரத்தை வெளியே எடுக்கிறது."
அது ஒரு மனிதன் அல்ல, அது அவருடைய மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனுடைய வார்த்தை என்பதை நாம் அறிவோம். செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற காரியங்களை நாம் காண்கையில் அது தேவனைத் தவிர வேறுயாரும் அல்ல. இவ்வாறு இருக்கலாம், இருக்கக்கூடும், அது இருக்கலாம் என்பது போல் காணப்படுகிறது என்பதல்ல, அது தேவனே!!
இது நமக்கு மிகவும் விலையுயர்ந்த முத்தாயிருக்கிறது என்றே நாம் அந்த இடத்திற்கு வந்துள்ளோம். அதற்கு முரணாக வேறு யாரேனும் நம்மிடம் கூறுகிற எதிலிருந்தும் நாம் விலகிவிட்டோம். மனிதன் எதைச் சாதித்திருக்கிறான் அல்லது என்ன கூறுகிறான் என்று நாம் பார்க்கிறதில்லை, தேவன் என்ன கூறியிருக்கிறார், நம்முடைய நாட்களில் அவர் என்ன செய்வதாக அவர் வாக்களித்தார் என்றே பார்க்கிறோம், அவர் அதைச் செய்கிறதை நாம் காண்கிறோம்.
அதுவே நம்முடைய முடிவான ஆதாரம். நமக்கிருக்கும் ஒவ்வொரு காரியமும், நமக்கிருந்த ஒவ்வொரு காரியமும், நமக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒவ்வொரு காரியமும் இந்த செய்தியில் வைக்கப்பட்டுள்ளன. இது நமக்கு ஜீவனைப் பார்க்கிலும் மேலானது.
உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தேவன் எச்சரிக்கை கொடுப்பதைக் நாம் காண்கிறோம், நியாயத்தீர்ப்புக்குத் ஆயத்தமாகுங்கள். அணுகுண்டுகள் விமானக் கொட்டகைகளில் உள்ளன, ஒவ்வொரு காரியமும் ஆயத்தமாக உள்ளது.
இந்த முறை, இது நோவாவின் நாட்களிலோ அல்லது ஆபிரகாமின் நாட்களிலோ இருந்தது போன்ற ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமல்ல; தேவன் உலக மக்களை எச்சரித்து, அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறார், இதுவே உங்களுடைய கடைசி எச்சரிக்கை..
அவர் நம்மிடம், “இந்தக் காரியத்தை நான் சம்பவிக்க அனுமதிக்கும் முன்னே, நான் சோதோமுக்கு செய்ததைப் போல, அதிலிருந்து வெளியே வாருங்கள் என்று ஒரு கடைசி அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆயத்தமாயிருங்கள். ஏதோ சம்பவிக்கப் போகிறது” என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
உலகம் அவர்களின் மாபெரும் அறிவியல் சாதனைகளைச் சார்ந்துள்ளது; தலைமுறைகளுக்கு மரணத்தை கொண்டு வந்த கலப்பினங்கள். ஜ.நா, வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, உலக நாடுகளின் சங்கங்கள்: என்ற புத்திசாலியான மற்றும் படித்த அறிவாற்றலுள்ளவர்களின் பட்சமாக சார்ந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பு மிக நெருக்கமாக வருவதைக் காண்கிறோம். ரஷ்யா, போர், எண்ணெய், வத்திக்கான், யூதர்கள், அணு குண்டுகள் என தீர்க்கதரிசி வெகு தொலைவில் பார்த்து, நமக்குச் சொன்னது நடக்கும்.
இனி என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், உலகில் பயம் என்பது ஒரு நிஜமாகி, ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகி வருகிறது.
ஆனால் அவர் எசேக்கியாவின் நாட்களில் செய்ததைப் போலவே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசினபோது, "ஆயத்தமாகுங்கள், ஏனென்றால் நியாயத்தீர்ப்புகள் விழ ஆயத்தமாயிருக்கின்றன" என்று ஜனங்களை எச்சரித்தார். அவருடைய தீர்க்கதரிசி வரவிருந்த காலத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.
நோவா தன்னுடைய காலத்திற்கான ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். அது நியாயத்தீர்ப்புக்கு முன்னதான ஒரு இரக்கத்தின் அழைப்பாயிருந்தது. தேவன் ஒரு வழியை, அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அருளியிருந்தார்.
நோவாவின் காலத்தில் அவர் செய்ததைப் போலவே, அவர் எப்போதும் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நம்முடைய வார்த்தையை அனுப்புகிறார். நோவாவின் நாட்களில் அவர் அதேக் காரியத்தைச் செய்தார். எலியா- நாட்களில்...மோசேயின் நாட்களில், அவர் அதேக் காரியத்தைச் செய்ததை நாம் கண்டறிகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார், அவர்கள் அவிசுவாசத்திலிருந்து தங்களைப் வேறுபிரித்துக்கொண்டார்கள். இப்பொழுது, அந்தவிதமானவர்களே வெளியே வருகின்றனர். அந்தவிதமானவர்களே அதை விசுவாசித்தனர்.
எல்லா அவிசுவாசத்திலிருந்தும் நாம் நம்மை வேறுபிரித்துக்கொண்டோம். தேவன் இன்றைக்கு தம்முடைய மணவாட்டிக்கு ஒரு வழியை அருளியுள்ளார். அவர் தம்முடைய வார்த்தையில், "நியாயத்தீர்ப்புக்கு முன், நான் என் சிறு தாழ்மையான மந்தையைக் கூட்டிச் சேர்க்க உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன், நான் அவர்களை ஒரு பக்கத்தில் உட்கார வைப்பேன், அவர்கள் சமாதானமாக இருப்பார்கள், நிலுவையில் உள்ள நியாயத்தீர்ப்புக்கு தப்பிக்கவும் காத்திருப்பார்கள்” என்று நமக்கு வாக்களித்தார்.
நாமே அந்த சிறு மந்தை. நாமே பிதாவானவர் நேசிக்கிறவர்கள், அவருடைய அதிசீக்கிரமான வருகைக்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலுமுள்ள உலகமானது சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் நாமோ இளைப்பாறுதலாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.
நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். உலகில் நாம் எங்கிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவருடைய வார்த்தையிலும், அவருடைய சத்தத்திலும் நாம் யாவரும் ஒன்றிணைக்கப்படக் கூடிய ஒரு வழியைத் தேவன் அருளியுள்ளார். இதுவே தேவன் அருளியுள்ள வழியாயுள்ளது.
இந்த தீர்க்கதரிசி அவர்களை தேவன் அருளியுள்ள வழிக்கு வழிநடத்தினார். இப்பொழுது, அதுவே காரியங்களைச் செய்யும் தேவனுடைய வழியாயுள்ளது. புரிகிறதா?
வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள: 63-0724 தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை என்ற செய்தியை எங்களோடு கேட்க, இந்த ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வாருங்கள். இதுவே தேவனுடைய சத்தம்: இது இன்றைக்கான என்னுடைய அருளப்பட்ட வழி என்று பேசி, நமக்குச் சொல்கிறாகும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
ஏசாயா 38:1-5
ஆமோஸ் அதிகாரம் 1
அன்புள்ள யாத்திரீக மணவாட்டியே,
எபிரெயப் பிள்ளைகள் நாள் முழுவதும் அவர்களைப் பாதுகாத்து பேணிக்கொள்ளும்படி, தங்களுக்காக இரவில் அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக்கொள்ளும்படி அதிகாலையில் ஒன்று கூடினதுபோல, நாமும் கூட நம்முடைய யாத்திரையில் நம்மை பாதுகாத்துக் பேணிக்கொள்ளும்படி நமக்குக் அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய மன்னாவுக்காக ஒன்றுகூடி வருகிறோம்.
மணவாளனின் வெளிப்படுத்துதல் மணவாட்டியில் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வரையில், மணவாட்டி தேவனோடு அத்தகைய இணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறாள். உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பற்றிக்கொண்டு அவருடன் ஒன்றாகிவிட்டோம்.
தேசங்களின் அக்கிரமம் நிறைந்துவிட்டது. அவைகள் அசுத்தமாயிருக்கின்றன. இது இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமான, நம்முடைய வீட்டிற்குச் செல்ல, நம்முடைய யாத்திரைக்கான நேரமாயுள்ளது. மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.
அவர் தம்முடைய முதலாம் யாத்திரையிலும், இரண்டாம் யாத்திரையிலும் செய்ததுபோல, இப்பொழுது மூன்றாம் யாத்திரையிலும், ஜனங்கள் தவறாக புரிந்து கொள்ளாதபடிக்கு, இது அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்டார் என்பதை அறிந்து கொள்ளும்படிக்கு, ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அக்கினி ஸ்தம்ப அடையாளத்துடன் அவர் தெரிந்துகொண்ட ஒரு தீர்க்கதரிசியை நமக்கு அனுப்பினார்.
அவருடைய தீர்க்கதரிசி கூறினது கர்த்தர் உரைக்கிறதாவதாயிருந்தது. அது தேவன், அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து, அவருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி வெளிப்படுத்தினதாயிருந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியை அபிஷேகித்து, அவருடைய மணவாட்டியை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தத் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் அவரே என்பதை நிரூபிக்கும்படியான ஒரு பரலோக சாட்சியாக நின்றது.
எல்லா சபைகளும் இந்த சத்தத்தின் கீழ், பிரிக்கப்படாமல், ஒன்று சேர்ந்து ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். எது நம்மை வேறுபிரிக்கிறது? அது நம்முடைய தோலின் நிறங்கள் அல்ல. அது நாம் உண்ணும் உணவும் அல்ல. மனிதனே, சுவிசேஷ போதனையின் சரியான பாதையிலிருந்து ஒவ்வொரு மனிதனையும் வேறுபிரித்திருக்கிறான்.
எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காண்பிக்க ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. நீங்கள் அதை எப்போதும் செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த வியாக்கியானத்தையும் கொடுக்காமல், அதைப் படித்து, அதைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதேயாகும்.
ஆனால் அவர்கள் பொறாமையால், ஆவிக்குரிய குருட்டுத்தனத்தினால் அதைச் செய்துகொண்டிருக்கிறவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் அதற்கு செவிகொடுக்கமாட்டார்கள்.
பரலோகத்தின் தேவன் உயிரோடெழுப்பும்போது, என் சத்தம் மறுபுறத்தில் தேவனுடைய மகத்தான காலம் என்னும் காந்த ஒலி நாடாவில் இருக்கும், அது இந்தக் கடைசி நாளில் இந்த சந்ததியை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தும். காரணம், இது-இது இப்பொழுது காந்த ஒலிநாடாவில் உள்ளது, அப்பொழுது அது நித்திய ஒலிநாடாவில் இருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், தேவன் தம்மைப் பிரதிபலிக்கும்படியான ஒரு ஜீவியத்தை பரிசுத்தப்படுத்தும்படியாக, மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்ட, தேவனைத் தாமே, வெளிப்படுத்தப்பட்ட அதே வார்த்தையை இன்றைக்கு அவர்கள் சிலுவையில் அறைகிறார்கள்.
அதன் பின்னர் ஒலிநாடா வாயிலாக கேட்கப்போகிறவர்களும் இதைக் கூர்ந்து கவனிப்பார்களாக. பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதை நாங்கள் புரிந்துகொள்வோமாக.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு எதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், மேலும் நாம் அனைவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொருவருமே! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒரு வயதான பெண்ணாக இருந்தாலும், அல்லது ஒரு இளைஞனாக இருந்தாலும், அல்லது ஒரு முதியவராக இருந்தாலும், அல்லது நீங்கள் யாராக இருந்தாலும், எப்படியாயினும், நாம் போகிறோம். நம்மில் ஒருவரும் கைவிடப்படப்போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் போகப்போகிறோமே!!!
நாம் தேவனுக்குக் கூறின நம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டால், தேவன் அவருடைய வார்த்தையை நமக்குக் காத்துக்கொள்ளாமலிருப்பது முற்றிலும் சாத்தியமற்றது. நீங்கள் அதை உண்மையாகவே நம்பினால், எதுவுமே உங்களை அதை சந்தேகிக்கச் செய்ய முடியாது. நேரமோ, இடமோ, வேறு எதுவுமே உங்களை சந்தேகிக்கச் செய்ய முடியாது.
அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு, தப்பித்துக்கொள்வதற்கான ஒரு வழியை அருளுவதன் மூலம், அவர் நமக்காக அதிக அக்கறை கொண்டு நம்மை வழிநடத்த நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் நம்மை வெளியே கொண்டு வருவதில் மாத்திரம் அக்கறை கொள்ளவில்லை, நம்முடைய யாத்திரையின்போது நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் அவர் அருளியுள்ளார். அவர் நமக்காக ஒவ்வொரு சத்துருவையும் ஜெயங்கொண்டார். நாம் சுகவீனமாயிருக்கும்போது அவர் நம்மைக் குணப்படுத்துகிறார். அவர் அனுதினமும் நம்மை போஷிக்க மறைவான மன்னாவை நமக்கு சேமித்து வைத்தார்; அவர் மரணத்தையும் கூட ஜெயங்கொண்டார், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாயிருந்து, அதை விசுவாசிக்க வேண்டும் என்பதேயாகும்.
நாம் நித்திய ஜீவனுக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அதற்கு செவிகொடுக்கிறோம், நாம் அதைக் கேட்டு களிகூருகிறோம். இதுவே உங்களுடைய ஆறுதலாயுள்ளது. இதுவே நம்முடைய ஜீவியம் முழுவதும் நாம் ஏங்கிக்கொண்டிருந்த காரியமாகும். இந்த முத்திற்காகவே நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். இது நமக்கான தேவனுடைய அன்பான அக்கறை என்பதை நாம் அறிந்துள்ளபடியால் நமக்கு இது வேண்டும்.
உங்களுக்கு ஆவிக்குரியப்பிரகாரமான, மாம்சப்பிரகாரமான, அல்லது இன்னும் நெருங்கி சஞ்சரிக்க, அல்லது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட அல்லது மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்ற எந்தக் காரியமாவது உங்கள் தேவையாயிருக்கிறதா? நீங்கள் கவலைகொண்டால், இன்றைக்கான அருளப்பட்ட தேவனுடைய வார்த்தையில் எங்களுடன் இணைந்து, உங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்தார், அவர் அதைச் செய்துள்ளார்! அவர் அதை அவருடைய வார்த்தையில் வாக்களித்தார், இதோ அது உள்ளதே! அவர் விசாரிக்கிறார், இப்பொழுது உங்களைக் குறித்து என்ன?
உங்களுடைய இருதயத்தில், “என் தொல்லைகள் முடிந்துவிட்டன. நான் நன்றாக இருக்கப்போகிறேன். நான் நிரப்பப்படப்போகிறேன். நான் அவரிடத்தில் நெருக்கமாக இருக்கப் போகிறேன். நான் அவருடைய மணவாட்டி" என்று உங்களிடம் சொல்லுகிற ஏதோ ஒன்று இருக்கும்.
அவர் விசாரிக்கிறார், நீ கவலை கொள்கிறாயா? 63-0721:என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்ஸன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00., மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் என்று அவர் உங்களிடம் சொல்வதை நீங்கள் கேட்கும்போது அது ஒரு மகத்தான பெரிய அன்பின் விருந்தாயிருக்கப்போகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன்னர் படிப்பதற்கான வேதவசனங்கள்:
பரிசுத்த யோவான் 5:24 / 15:26
1 பேதுரு 5:1-7
எபிரெயர் 4:1-4
தொடர்புடைய சேவைகள்
அன்பான வழிகாட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகளே,
இறுதி யுத்தம் நெருங்கிவிட்டது. நாம் இதுவரை இல்லாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறோம். நாம் ஒரு வனாந்தரத்தினூடாகச் செல்கிறோம், நாம் எங்கோ நம்முடைய பாதையில் இருக்கிறோம், ஒரு வழிகாட்டி இல்லாமல் நாம் தொடர்ந்து செல்ல முடியாது. கவலைப்படாதே சிறு மந்தையே, தேவன் நம்மை வழிநடத்த ஒரு வழிகாட்டியை அருளியுள்ளார்.
இந்த வழிகாட்டி நமக்கு காரியங்களை வெளிப்படுத்துவார், மேலும் அவர் கேட்டுள்ள காரியங்களையும் சொல்லுவார்; அவர் நம்முடைய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, நாம் சொன்னதை அவரால் சொல்ல முடியும். இந்த வழிகாட்டியை நாம் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் அவர் ஒருவரே வழியை அறிந்தவர்.
இயேசு பூமியில் இருந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களிடம் இன்னும் அநேகங்காரியங்களை சொல்லவும், நமக்கு வெளிப்படுத்தவும் இருப்பதால், அவர் சத்திய ஆவியானவரை நம்மிடம் அனுப்புவதாகவும், அவர் இந்த சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்துவார் என்றும் கூறினார். அவர் முதன்முதலில் மாம்சத்தில் வந்தபோது அவர் செய்ததைப் போலவே அவர் தம்மை வெளிப்படுத்தி ரூபகாரப்படுத்தும்போது அவருடைய மணவாட்டி அவரை அடையாளம் கண்டுகொள்வாள் என்று அவர் கூறினார்.
நம்முடைய இதயத்தில் இருக்கும் ஒவ்வொரு நினைவையும் அவர் அறிவார். நாம் யார் என்பதையும், நாம் என்ன செய்துள்ளோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நம்மைக் குறித்த எல்லாவற்றையும் அறிவார். அவர் தேவனுடைய வழிகாட்டியாய், பரிசுத்த ஆவியானவராய் மானிட மாம்சத்தில் ஜீவித்து தம்மை வெளிப்படுத்துகிறார்.
இயேசுவே சொன்னது போல், "இந்தக் கிரியைகளைச் செய்கிறது நானல்ல; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்."
அப்படியே அவருடைய தூதன் தன்னைப்பற்றிப் பேசாமல், அவர் எதைக் கேட்பாரோ அதையே பேசுவார். அவர் இந்த எல்லாக் காரியங்களையும் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்வார், பின்னர் அவர் அவைகளை நமக்கு அறிவிப்பார். வார்த்தையில் மறைந்திருந்த எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவார்.
பூமியில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை, ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருப்பார் என்றும், அவருடைய மணவாட்டி அவரைத் தெளிவாக அடையாளம் கண்டுகொண்டு பின்பற்றுவாள் என்றும் பிதாவானவர் நம்மிடம் கூறினார்.
அவர் தேவனை மாத்திரமே மகிமைப்படுத்துவார். அது ஏழாம் தூதனாகிய அவர் அல்ல, இது மனுஷகுமாரனின் வெளிப்படுத்துதல் என்று அவர் தெளிவாகக் கூறுவார். இது தேவனுடைய இரகசியம் வெளிப்படுத்தப்படுதலாகும். இது ஒரு மனிதன் அல்ல, இது தேவன். அவர் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த ஒரு செய்தியாளன். மனுஷ குமாரன் கிறிஸ்து, அவரைத் தான் நாம் புசித்துக்கொண்டிருக்கிறோம்.
மணவாட்டியை வழிநடத்த தாங்கள் தான் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்று பலர் கூறுவார்கள், ஆனால் நீங்கள் உங்களுடைய அறிவாற்றலின் பேரிலோ அல்லது உங்களுடைய சிந்தனைகளின் பேரிலோ அல்லது மனிதனால்-உண்டாக்கப்பட்ட எந்த கருத்துக்களின் பேரிலோ சார்ந்திருக்க தேவன் விரும்புகிறதில்லை. தேவன் ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார், அது அவரால் நியமிக்கப்பட்ட வழிகாட்டி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
நம்முடைய வழிகாட்டி ஒருவரை இந்தவழியாகவும், ஒருவரை அந்தவழியாகவும் அழைத்துக் கொண்டு போய்: நீ இந்தப் போதகருக்கு செவிகொடுக்க வேண்டும், பிறகு நீ அந்த போதகருக்கு செவிகொடுக்க வேண்டும் என்று கூறப்போவதில்லை; அவர்களே ஒருவருக்கொருவர் உடன்படவில்லை. அது எப்படி உங்களை பரிபூரணப்படுத்தும்?
பரிபூரண வார்த்தை ஒன்று மாத்திரமே, ஒலிநாடாவில் உள்ள அவருடைய பரிபூரணமான ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் வார்த்தையே நம்மைக் கொண்டு வந்து ஒன்றாக வைத்திருக்கப்போகிறது.
இன்று பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட நபர்களாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர், இது உண்மை. பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்றால் அப்பொழுது ஏன் ஒரு போதகர் வேண்டும்? நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி இல்லாமல், ஒரு போதகர் என்னை வழிநடத்தி எனக்குப் போதிக்க விரும்புகிறேனா? தேவனுடைய சத்தத்திலிருந்து அவரே அதை மிக சிறப்பாக விளக்கிக் கூறுவதை நேரடியாக கேட்பதை விட வார்த்தையின் வியாக்கியானத்தை ஒரு பிரசங்கியினிடத்திலிருந்து நான் கேட்க விரும்புகிறேனா?
நான் ஊழியத்தை கண்டிக்கவோ, அல்லது அவர்கள் போலியானவர்கள் என்று கூறவோ, அல்லது நீங்கள் அந்த ஊழியத்திற்கு செவிகொடுக்கக் கூடாது என்று கூறவோ முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அதை சரியாகக் கூறிக்கொண்டிருக்கவில்லையெனில் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். அவர்கள் உங்களின் முற்றிலுமான, முற்றிலுமான வார்த்தையாக, உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியாது என்றுதான் நான் கூறிக்கொண்டிருக்கிறேன். மனிதர்களால் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு வித்தியாசமான எண்ணத்தையும், வித்தியாசமான வழிநடத்துதலையும் உடையவனாயிருக்கிறான். அது எப்படி மணவாட்டியை பரிபூரணப்படுத்த முடியும்? நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் செவிகொடுத்து, அவர்கள் கூறுவதே தேவனுடைய பரிபூரண வார்த்தை என்று கூறும் அவர்களே ஒருவருக்கொருவர் உடன்பட முடியாமலிருப்பதை அறிந்தால், அது எப்படி மணவாட்டியை பரிபூரணப்படுத்த முடியும்? அது எப்படி உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியும்?
பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையுடன் நம்மை ஒன்றாக வைத்திருக்க நாம் அனுமதித்தால், நாம் ஒரே ஆவியினால், ஏக இருதயத்தோடும், ஏக சிந்தையோடும், ஒருமனப்பட்டிருப்போம்; பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வழிகாட்டியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்துவார். ஆனால் நீங்கள் உங்களுடைய வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும்.
உங்களுடைய வழிகாட்டியின் வார்த்தைக்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள். அவரைப் பின்தொடருங்கள். நீங்கள் பின்தொடரவில்லையென்றால், நீங்கள் வழித்தவறி காணாமற்போய்விடுவீர்கள். மேலும், நீங்கள் அவரை விட்டுவிடும்போது, நீங்கள் சுயமாக செல்ல வேண்டும் என்பது, நினைவிருக்கட்டும், எனவே நாம் வழிகாட்டிக்கு அருகில் இருக்க விரும்புகிறோம்.
பரிசுத்த ஆவியானவர் அவருடைய வழிகாட்டியைப் பின்பற்ற நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார், இது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஏழாம் தூதன் மூலம் பேசுவதாகும். இது ஒரு மனிதனுடைய வார்த்தை அல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது, மேலும் இதுவே மணவாட்டியை பரிபூரணப்படுத்தக் கூடிய ஒரே காரியமாயிருக்கிறது.
நாங்கள் எங்களுடைய ஈஸ்டர் வாரத்தில் எங்களுடைய வழிகாட்டிக்கு செவிகொடுக்கத் துவங்குகையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, வந்து சேர்ந்துகொள்ளுங்கள், நாம் இதுவரை செல்லாத இடத்திற்கு அவர் நம்மை வழிநடத்தப் போகிறார்.
62-1014E ஒரு வழிகாட்டி
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி. மாற்கு 16:15-18
பரி. யோவான் 1:1/16:7-15 அப்போஸ்தலர் 2:38
அப்போஸ்தலர் 2:38
எபேசியர் 4:11-13 / 4:30
எபிரெயர் 4:12
2 பேதுரு 1:21
யாத்திராகமம் 13:21
தொடர்புடைய சேவைகள்
பயணிப்போரே,
தேவனுக்கு மகிமை, என்னே ஒரு நாளில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று ஒவ்வொரு செயலாலும் நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு செய்தியை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களை அது செய்திருக்கிறது; வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார், மனதின் எண்ணங்களை அறிந்திருந்தார், நடக்கவிருக்கும் காரியங்களை அறிவித்து, மரித்தோரை எழுப்பினார், ஒவ்வொரு முறையும், அது பரிபூரணமானதாயிருந்து வந்துள்ளது.
மலையின் உச்சியில் இருந்த மண்ணையெல்லாம் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. பாறையைத் தவிர வேறு எதுவும் விடப்பட்டிருக்கவில்லை. பாறையின் மீது இரகசியமான எழுத்து இருந்தது, எனவே அவருடைய மணவாட்டிக்கு எழுதப்பட்டதை வியாக்கினிப்பதற்கு அவருடைய வல்லமையான தீர்க்கதரிசியை தேவன் நமக்கு அனுப்பினார். இப்போது வேதம் முழுமையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது.
அவர் தம்முடைய பலமுள்ள தூதனை மலையின் மீது அழைத்துச் சென்று, கர்த்தருடைய பட்டயத்தை அவருடைய கரத்தில் வைத்தார். அவருடைய தூதன் அந்த மலையின் உச்சியை வெட்டிப் பிளந்தார். அதன் உட்புறத்தில் வெள்ளைப் பாறை, பளிங்கு போல் தீட்டப்பட்ட கருங்கல்லில் ஏதுமே எழுதப்பட்டிருக்கவில்லை.
அவர் மேற்கு நோக்கிச் செல்லும்போது இதைப் நோக்கிப் பார்க்கும்படிக்கு நம்மிடத்தில் சொன்னார். பின்னர் அவர் ஏழு தூதர்களுக்கு மத்தியில் எடுத்துக் கொள்ளப்பட்டு, திரும்பி வந்து, பாறையில் எழுதப்படாத அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தினார்.
“இவர் என்னுடைய ஊழியக்காரன், மோசே வழிநடத்தியது போல், இவரும் மக்களை வழிநடத்தத்தக்கதாக இக்காலத்திற்குரிய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அவரை நான் அழைத்திருக்கிறேன். வார்த்தையைப் பேசி எதையும் உருவாக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.” அது மோசே வண்டுகள் ஏற்படும்படி பேசியதுபோல் உள்ளது ஆகும். ஏற்கனவே சம்பவித்த, அணில்கள் மற்றும் காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி நாம் அறிவோம். எளிமையான ஹேட்டிரைட், அவள் வீட்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
வி-ல்-லி-ய-ம் ம-ரி-ய-ன் பி-ரா-ன்-ஹா-ம் என்ற தேவனுடைய மனிதனையே, அவர் இன்றைக்கு தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டார். அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சத்தில் வந்தபோது பேசியதைப் போல நம்மிடம் பேச அவர் தெரிந்துகொண்ட மாம்ச சரீரம். ஒவ்வொரு வேதவாக்கியமும் அதை நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது அவர் யாராயிருந்தார், அவர் யாராயிருக்கிறார், நாம் யாராயிருக்கிறோம் என்பதைக் குறித்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளோம் என்ற அப்படிப்பட்ட ஒரு உறுதி நமக்கு உண்டு: அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட இனிய இருதயமான மணவாட்டி.
அவருடைய வார்த்தையுடன் தரித்திருப்பதனால் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். இது நமக்கு அத்தகைய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அது நமக்கு என்னவென்று பொருள்படுகிறது என்பதை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.
அங்கே வித்தியாசமான ஒன்று இருந்ததை நாம் எப்பொழுதும் நம் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஆழமாக அறிந்திருக்கிறோம். நாம் பாவத்தில் இருந்தபோதும் கூட, நம்மால் விளக்க முடியாத ஏதோ ஒன்று இருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம், ஆனால் அது அங்கேயே இருந்தது. இப்பொழுது நமக்குத் தெரியும். இதற்கு முன்பு நாம் இதைப் போல் ஒருபோதும் உணர்ந்ததில்லை, இனி எந்த சந்தேகங்களும் இல்லை, வியப்புமில்லை, எந்தக் கேள்வியும் இல்லை, இது நம் ஆத்துமாவில் பொறிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கே மகிமை!!
இவை அனைத்தும் நிகழும் வரை ஒழிந்துபோகாத தலைமுறையாக நாம் இருக்கிறோம். நம்முடைய கண்களுக்கு முன்பாக நடக்கும் துரோகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தலைமுறையாயும் நாம் இருக்கிறோம். வேளையோ சமீபமாயிருக்கிறது. அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு இங்கே உள்ளது. அவருடைய கடைசி எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மரணமும் அழிவும் நம் யாவரையும் சுற்றியே இருக்கிறது. நாம் சோதோம் கொமோராவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அசுத்தம், பாவம், மனிதனுடைய இருதயம் பயத்தால் சோர்ந்து போய்க்கொண்டிருக்கிறது, அணுகுண்டுகள், தேசங்களுக்கிடையே தத்தளிப்பும் உண்டாயிருக்க, தேவன் தாமே, பயப்பட வேண்டாம், நீங்கள் என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறீர்கள் என்று நம்மிடத்தில் சொல்லுகிறபடியால், நாம் முழு நேரமும் ஒன்றுபட்டு, உன்னதங்களிலே ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒன்றுமே சம்பவிக்க முடியாது. நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று நான் உங்களிடத்தில் சொல்லி வழிநெடுக உங்களிடத்தில் பேசும்போது உங்களுடைய இருதயங்கள் உங்களுக்குள்ளாக கொழுந்துவிட்டு எரியட்டும்.
ஒரு இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருக்கிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள். கை காட்டி கீழே இறக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் எங்களுடன் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று எதிர்பாரத்துக் கொண்டிருந்தால், நீங்கள் அந்த வேர்க்கடலைப் பையை கீழே எறிந்துவிட்டு, உங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, உங்கள் கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு, ஆயத்தமாகுங்கள், இல்லையென்றால் நீங்கள் விடப்படுவீர்கள், 'ஏனென்றால் அவர் உள்ளூரில் சில நிமிடங்கள் மட்டுமே நிற்பார். அவர் பேச வருகிறார்: அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு 63-0623E .
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன்னர் படிப்பதற்கான வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 5:28 / 22:20 / 24-ம் அதிகாரம்
2 தீமோத்தேயு 4-வது அதிகாரம்
யூதா 1:7
ஆதியாகமம் 6-ம் அதிகாரம்
அன்பான உண்மையுள்ளவர்களே,
இந்த கடந்த வாரங்கள் நம் எல்லோருடைய ஜீவியங்களிலும் மிகவும் மகிமையான நேரமாக இருந்து வந்தது. தேவன் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்துவதைக் கேட்பது, உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாடியுடன் ஐக்கியமாக இருக்கும்படியான மிகச் சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்றாயிருந்தது.
நாம் யாவரும் ஒன்று சேர்ந்து என்ன கேட்டுக்கொண்டிருந்தோம்?
“அந்த கூர்நுனி கோபுரத்தின் உள்ளில் ஒரு வெண்பாறை உண்டாயிருந்தது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை.” ஆகவே தான் இத்தூதர்களின் செய்தியோடு பொருந்தத்தக்கதாய், நான் மேற்குக்குச் சென்று, மறுபடியும் வந்து சபைக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று.
அவர் எழுதப்படாததைக் கூட நமக்கு வெளிப்படுத்தும்படிக்கு திரும்பி வர, அந்த 7 தூதர்ளுடன் தொடர்புகொள்வதற்கு மேற்கு நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது; ஆனால் இப்பொழுது, வெளிப்படுத்துதல் மூலம், நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை அளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த செய்திகளை நாம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஆனால் இப்போது அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; இப்பொழுதே அந்த நாள், இப்பொழுதே அந்த நேரம். உலகத்திலும், இந்தச் செய்தியிலும், அவர் நமக்கு சம்பவிக்கப்போவதாயிருந்தைக் குறித்துச் சொன்னதையே நாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டுமிருக்கிறோம், அது இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்படுகிறது.
நம்முடைய 7-ம் தூதன் பண்டைய தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா? இல்லை, அவருக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் விட மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். ஏனென்றால், இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததுபோல மானிட சரீரத்தில் மனுஷ குமாரன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்ததாகும். நம்முடைய புதிய பரலோக வீட்டிற்கு மணவாட்டியை வழிநடத்த நம்முடைய தீர்க்கதரிசி அழைக்கப்பட்டார், பின்னர் அவர் நம்மை கர்த்தரிடத்தில் அறிமுகப்படுத்துவார்.
அவருடைய ஊழியம் மோசேயின் ஜீவியத்திற்கு மிகச் சரியான மாதிரியாய் அமைந்திருந்ததாக அவர் நம்மிடம் கூறினார். மோசே அக்கினி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, மனிதர்கள் எழும்பி அவரை எதிர்த்தனர். இந்த மனிதரும் அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் தங்களுடைய பாதையில் இருந்தனர். அவர்கள் மோசே தன்னை மிஞ்சினவனாகக் காண்பித்துக் கொள்கிறான் என்றும்; அவன் ஒருவன் மாத்திரமே அழைக்கப்பட்டு பரிசுத்தமாயிருக்கவில்லை, அவர்களும் கூட பரிசுத்தமாயிருந்தார்கள் என்றும், அவர்களும் கூட ஏதாவது பிரசங்கிக்க வேண்டியிருந்தது என்றும் கூறியதின் மூலமே அவனுக்கு சவாலிட்டனர்.
அவர்கள் பரிசுத்த மனிதராயிருந்தனர் என்றும், அவர்களும் உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டியதாயிருந்து என்றும் அவன் கூறினான், ஆனால் ஜனங்களை வழிநடத்த தேவன் அவனை, மோசேயை, ஒரு மனிதனையே அழைத்திருந்தார்.
அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர். "மோசேக்கு செவிகொடுங்கள்" என்று ஜனங்களுக்குச் சொல்வதன் மூலம் அவர்கள் செய்யும்படி அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருந்ததையும் செய்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் ஏதாவது அதிகமாக கூற அல்லது மோசே என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை விளக்கிக் கூற விரும்பினர். மோசேக்கு செவிகொடுக்கும்படி ஜனங்களை சுட்டிக்காட்ட அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் ஜனங்களை வழிநடத்த விரும்பினர். அவர்கள் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தைவிட அதிகமாக அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினர்.
நம்முடைய தீர்க்கதரிசி யார், அல்லது அவர் என்ன செய்யும்படி அழைக்கப்பட்டார் என்று உங்கள் மனதில் எப்போதாவது சந்தேகம் இருந்தால், நம்முடைய தீர்க்கதரிசியின் பெயரை பி-ரா-ன்-ஹா-ம் என்று அந்த மலையின் மேல், தேவன் தாமே பூமியின் மேல் என்றென்றுமான ஒரு அடையாளமாக உருவாக்கிய ஒரு மலைத்தொடரைப் பார்க்க நீங்கள் மேற்கு நோக்கி செல்லும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. அவர் உங்களைத் தெரிந்துகொண்டு முன்குறித்தார். அவருடைய வார்த்தை உங்களுக்குள் ஜீவிக்கிறது, வாசம்செய்கிறது. நீங்கள் மாம்சமாக்கப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறீர்கள். அவர் உங்களுக்கு தம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்தார். சாத்தானுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை. அந்த எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உங்களுக்குள் ஜீவிக்கிறது, வாசம்செய்கிறது.
பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை இன்றைக்கான தம்முடைய அருளப்பட்ட ஒரே வழியின் மூலம் வழிநடத்திக்கொண்டிருக்கிறார், அவருடைய வார்த்தையை தம்முடைய 7-ம் தூதனான தீர்க்கதரிசி மூலம் உரைத்தார். அந்த தீர்க்கதரிசியே நம்முடைய மேய்ப்பர்.
எந்தவொரு புதிய ஒலிநாடா செய்தியும் கர்த்தர் அதை மாற்றும் வரையில், முதலில் பண்டகசாலையிலிருந்தே வரும் என்று நம்முடைய மேய்ப்பர் நமக்கு வாக்களித்தார். அதற்காகவே அங்கே ஒலிநாடாக்கள் சேமித்து வைக்கப்படும்.
அவர் தனது உதவி போதகர் சகோதரன் நெவிலுக்கும் கூட அறிவுறுத்தினார்; இப்பொழுது அவருடைய கிருபையால், நானும், நாமும் சபையில் என்ன செய்ய வேண்டும்.
எங்கள் அருமை போதகரான சகோதரன் நெவிலுக்கு, நீர் உதவி புரிய நான் மன்றாடுகிறேன். கர்த்தாவே, அவரைக் கிருபையினாலும், வல்லமையினாலும், அறிவினாலும் நிரப்பி, சேகரிக்கப்பட்ட இந்த ஆகாரத்தைக்கொண்டு அவர் தேவனுடைய ஆட்டுக்குட்டிகளைப் போஷிக்க கிருபை செய்யும்.
இந்த ஒலிநாடாக்கள் தீர்க்கதரிசியே மேய்ப்பராயிருக்க அழைக்கப்பட்டவர் என்பவர்களுக்கானது. நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை கேட்க விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி: மணவாட்டிக்காக அருளப்பட்டிருக்கிற சேகரிக்கப்பட்ட ஆகாரமான 63-0623M இடைவெளியில் நிற்றல், என்பதை நாங்கள் கேட்கையில் எங்களுடன் வந்து கேளுங்கள்.
பத்தி எண் 27-லிருந்து நாம் செய்தியைத் தொடங்குவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேத வசனங்கள்
எண்ணாகமம் 16: 3-4