ஞாயிறு
13 நவம்பர் 2022
65-0219
இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று

அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குரிய வித்தே,

 

எந்த சபைக்குச் சென்று, நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமின்றி அறிந்துகொள்ள முடியும்? தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் உங்களிடத்தில் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தாலொழிய, வேறெங்குமே கண்டறிய முடியாது.

நாம் தேவனுடைய கழுகுகளாயும், ஒரு வார்த்தையையும் விட்டுக் கொடுக்காதவர்களாயும் இருக்கிறோம். ஒவ்வொரு ஆராதனையிலும் புதிய மன்னா மாத்திரமே நமக்குத் தேவை, தேவனிடத்திலிருந்தே அதை நேரடியாகக் கேட்பதைத்தவிர வேறெங்கிருந்தும் அதற்குமேல் தூய்மையாய் வருகிறதில்லை. நாம் ஒவ்வொரு செய்தியைக் கேட்கும்போதும் நாம் மேலும் மேலும் உயரப் பறக்கிறோம். நாம் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் பார்க்க முடியும். இந்த சபையில் மன்னா இல்லையென்றால், தேவனுடைய கழுகுகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை சற்று மேலே எழும்பிக்கொண்டிருக்கின்றன.

தேவன் நம்மிடத்தில் பேசுவதையும், நாம் அவருடைய அசலான, மீண்டும் பிறந்த, தேவனுடைய சபை என்று நம்மிடம் சொல்வதையும் கேட்கும்போது, ​​நம் இருதயங்கள் எப்படி மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றன, அது என்னவாக இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளாமல் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் நாம் அவருடைய கலப்படமற்ற கன்னிகையான வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம்.

இத்தகைய குழப்பம் இன்றைக்கு ஜனங்கள் மத்தியில் உள்ளது. இயேசுவின் நாட்களில் இருந்ததைப் போலவே, விசுவாசிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வேதத்தைப் பற்றி ஆசாரியர் என்ன கூறினார் என்பதை குறித்து வியாக்கியானத்தையே ஏற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வார்த்தைக்கு மனிதனுடைய வியாக்கியானத்தையே விசுவாசித்துக் கொண்டிருந்தனர். அந்த காரணத்தினால் அவர்கள் தேவனுடைய சத்தியத்தை புரிந்துகொள்ள தவறிப்போயினர், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் அளிக்கப்பட்ட பல வியாக்கியானங்கள் இருந்தன. தேவனுக்கு தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க எவருமே தேவைப்படுகிறதில்லை. அவரே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார்.

நீங்கள் இயேசுவின் காலத்தில் ஜீவித்திருந்தால், உங்களுடைய ஆசாரியர் என்ன கூறியிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், இயேசுவானவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசித்திருப்பீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் இயேசுவானவருக்கு செவி கொடுப்பதே என்று உங்களுடைய ஆசாரியரிடத்தில் நீங்கள் சொல்லியிருப்பீர்களா? இயேசுவினுடைய வார்த்தைகளுக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று நீங்கள் ஆசாரியனிடத்தில் சொல்லியிருப்பீர்களா? இயேசுவானவர் பிரசங்கிக்கிற ஒலிநாடாக்கள் அவர்களிடம் இருந்திருந்தால், இயேசுவானவர் என்ன கூறினார் என்பதையும், அவர் அதை எவ்வாறு கூறினார் என்பதையும் சரியாக நீங்கள் கேட்கும்படியாக அந்த ஒலிநாடாவை ஆசாரியர் இயக்கும்படி நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அவரிடத்தில் சொல்லியிருப்பீர்களா?

சரி, அது உங்களுடைய காலமாய் இருக்கவில்லை; இதுவே உங்களுடைய காலம், இதுவே உங்களுடைய நேரம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளது. இப்பொழுது நீங்கள் என்ன செய்துகொண்டும், கூறிக்கொண்டும் இருக்கிறீர்களோ, அதையே நீங்கள் அப்பொழுது சரியாக செய்திருப்பீர்கள்.

மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ரன், மேற்கத்திய அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ரனாக தம்மை நமக்கு மத்தியில் அடையாளம் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நமக்கு முன்பாக நிறைவேறிற்று என்று நாம் விசுவாசிக்கிறோம்.

இது அநுக்கிரக வருஷம் என்றும், யூபிலி வருஷம் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நீங்கள் அடிமையாகவே நிலைத்திருக்க வாஞ்சித்தால், இந்த செய்தி கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை; இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லயென்றால்; இந்த செய்தியை வியாக்கியானிக்க ஒரு மனிதன் தேவை என்று நீங்கள் நம்பினால்; உங்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாயுள்ளது என்று நீங்கள் நம்பினால்; அப்பொழுது நீங்கள் கொண்டு செல்லப்பட்டு, ஒரு கம்பியினால் உங்களுடைய காதில் ஒரு துளை போடப்படும், அதன்பிறகு உங்களுடைய எஞ்சியுள்ள நாட்களெல்லாம் நீங்கள் அந்த அடிமையின் எஜமானையே சேவிக்க வேண்டும்.

ஆனால் உண்மையான அசலான மணவாட்டி சபை தேவனுடைய முழு வார்த்தையை அதனுடைய பரிபூரணத்திலும் அதனுடைய வல்லமையிலும் விசுவாசித்துக் கொண்டிருக்கிறது. நாம் வெளியே இழுக்கப்பட்டு, அந்தக் காரியங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, தேவனுடைய வெளிப்படுத்துதல் நம்முடைய கவனத்தை கவர்ந்துள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சபையாக இருக்கிறோம். நாம் ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குரிய வித்தாயிருக்கிறோம்.

இந்த ஐக்கியத்தில் எங்களோடு மகிழும்படி நீங்கள் இங்கு இருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும், இந்தக் கூட்டத்தில் தேவன் எங்களுக்கு அருளப்போகிறதற்கான எதிர்பார்ப்புகளோடும் நாங்கள் இருக்கிறோம்.

எனவே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0219 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். இந்தக் கூட்டங்களில் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கான பெரிய எதிர்பார்ப்போடு நாங்கள் இருக்கிறோம். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16