
அன்புள்ள சகோதரன் ஜோசப்,
1. இந்தச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
என் இருதயத்தின் ஆழத்திலிருந்தும், என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநார்களோடும் நான் அதை விசுவாசிக்கிறேன். இது தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசிக்கொண்டிருக்கிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறது.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியினூடாகப் பேசி கூறினார்:
எனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்ட வேண்டாம். எடுக்க வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களையும் அதில் சேர்க்கவும் வேண்டாம். அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள். தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்யுங்கள். இதனோடு கூட்டாதீர்கள்.
நீங்கள் இந்தக் கடைசி-கால செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கோரினால், அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்களும் கூட ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். சாத்தான் ஊழியத்தின் மூலம் அதை வெள்ளையடிக்க முயற்சித்து, “சகோதரன் பிரான்ஹாம் வேட்டையாடும் கதைகளைக் சொல்லிக் கொண்டிருந்தபோது அல்லது 'தேசத்தில் உங்களிடம் சிறந்த சமையற்காரர் இருக்கிறார்' அல்லது 'அதற்கான வேதவாக்கியம் என்னிடம் இல்லை', ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் உங்களுக்கு சொல்வேன்;' என்று கூறினபோது, நீங்கள் அந்த பகுதியை நம்ப வேண்டியதில்லை. எது வார்த்தை, எது வார்த்தையில்லை என்று புரிந்து கொள்ளும்படி நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார்" என்கிறான். அது ஏவாளிடத்தில் பேசி, நிச்சயமாகவே…அவர் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி பொருட்படுத்திக் கூறவில்லை என்று கூறின அதே பிசாசாய் இருக்கிறது. அதேவிதமாக தொனிக்கிறதா?
அவர் என்ன செய்யக் கூடாது என்று கட்டளையிட்டாரோ அதையே அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதையே கூறுங்கள் என்றும், உங்களுடைய கருத்துக்களை அதில் சேர்க்க வேண்டாம் அல்லது அதை புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அவர், "இந்தப் பாகத்தையும் அந்தப் பாகத்தையும் தவிர மற்ற அனைத்தும் என்றோ, எப்போது அதை பரிசுத்த ஆவியானவர் பேசிக்கொண்டிருந்தார் என்றும், எப்போது அது நான் மாத்திரமே பேசுவது என்றும் உங்களுடைய மேய்ப்பர் உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறவில்லை. இந்த பெரிய கற்களுக்கு மத்தியில் கடற்கரையில் நான் வெறுமனே ஒரு சிறிய கூழாங்கல்லாயிருக்கிறேன்.
2. சகோதரன் பிரான்ஹாம் மற்றும்/அல்லது அவருடைய ஒலிநாடாக்கள் முற்றிலுமானவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சகோதரன் பிரான்ஹாம் என்னுடைய முற்றிலுமானவர் அல்ல, ஆனால் அவர் ஒலிநாடாவில் பேசின செய்தியே முற்றிலுமாக என்னுடைய முற்றிலுமானதாயுள்ளது.
இது தவறானது என்றும், வேதமே முற்றிலுமானது என்றும் பலர் கூறுகின்றனர். என் நண்பரே, வேதமும் ஒலிநாடாவில் உள்ள செய்தியும் ஒன்றேதான். அதுதான் அந்தச் செய்தியின் சாராம்சம். ஒலிநாடாக்களில் உள்ள செய்தி வேதாகமத்தின் வியாக்கியானமாய் உள்ளது. அவைகள் ஒன்றாயும், வித்தியாசமற்றதாயுமுள்ளன.
எளிமையான உண்மை என்னவென்றால், 1: வேதம் என்பது வார்த்தை. 2: தீர்க்கதரிசியிடம் வார்த்தை வருகிறது. 3: தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருக்கிறார். 4: நம்முடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம், நம்முடைய நாளுக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயும் மற்றும் வார்த்தையை வியாக்கியானிப்பதற்கும் அனுப்பப்பட்டார். 5: தேவனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லை. அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஒலிநாடாவில் பேசுகிறபோது அதுவே அவருடைய வார்த்தையின் வியாக்கியானமாய் உள்ளது.
அவர் ஆபிரகாமோடும் இயேசு கிறிஸ்துவோடும் செய்ததைப் போலவே அவர் மீண்டும் வந்து மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பார் என்று வேதம் நமக்குச் சொல்கிறது. அவர் நமக்கு இன்னும் கூற வேண்டிய அநேக காரியங்கள் இருந்ததாகக் கூறினார். அவருடைய வார்த்தையில் மறைக்கப்பட்டிருக்கிற இந்த எல்லா மகத்தான ரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவதாகக் கூறினார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று அவர் கூறினார். அவர் தம்முடைய ஜனங்களை வழிநடத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் ஒரு குழுவை அனுப்புவதாக அவர் ஒருபோதும் கூறவில்லை, அவர் எப்போதும் செய்துள்ளதைப் போல அவர்தாமே தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஜனங்களை வழிநடத்துவார். அவருடைய வார்த்தை மாற முடியாது.
3. மேய்ப்பர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒவ்வொரு சபையும் சுயாதிபத்தியமுள்ளதுபோல, ஒவ்வொரு மேய்ப்பரும் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி செய்ய அவர் உணர்கிறது போலவே செய்ய வேண்டும். மேய்ப்பர்கள் தங்களுடைய பிரசங்க பீடத்தில் ஒலிநாடாக்களை தொனிக்கச் செய்வதன் மூலம் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமிற்கு இடமளிக்க வேண்டும் என்று நான் நினைகிறேன் என்று, பலமுறை பிரசங்க பீடத்தில் அதை கூறியிருக்கிறேன். அவர்கள் பிரசங்கிப்பதை விட்டுவிட்டு, ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று, நான் ஒருபோதும் கூறியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சபைகளில் தேவனுடைய சத்தம் தொனிக்காமல் இருக்க கற்பனைக்கு வரக்கூடிய ஒவ்வொரு சாக்குப்போக்கையும் பயன்படுத்துகிறார்கள்.
தங்களுடைய சபைகளில் அந்த சத்தத்தை தொனிக்கச் செய்யாத மேய்ப்பர்களைக் குறித்து நான் எப்படி உணர்கிறேன் என்பதை தீர்க்கதரிசி கூற அனுமதிக்கிறேன்.
இப்பொழுது, சகோதரர் ஜூனியர் ஜாக்சனுக்கு அதனுடன் இணங்காமலிருக்க உரிமை இருந்தது. அவர் தன்னுடைய சபையில் விரும்புவது…ஜனங்கள் அனைவரும் கூட்டத்தில் அந்நிய பாஷைகள் போன்றவற்றை பேச விரும்புகிறார்கள். அதுதான் சகோதரன் ஜூனியரின் பிரச்சனைகளாகும்; அது-அது அவரைப் பொறுத்தது. ஆனால் நாம் விசுவாசிக்கிறது போலவே…ஜூனியர் ஜாக்சனும் இந்தச் செய்தியை விசுவாசிக்கிறார். அவர் நம்மில் ஒருவராயிருக்கிறார்.
4. ஊழியக்காரர்கள் பிரசங்கிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இல்லை, நான் அப்படிக் கூறினதேயில்லை, நான் அதை நம்புவதும் இல்லை. வார்த்தை நமக்குச் சொல்கிறது, மற்றும் சகோதரன் பிரான்ஹாம் இந்த கேள்விகளும் பதில்களும் என்ற செய்திகளில், ஊழியக்காரர்கள் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்.
இப்பொழுது கடிதத்தின் மூலமாக அல்லது: ஒரு துரிதமான அறிமுகத்தை செய்யும்படியாக, என்னுடைய சபைக்காக, நான் வழிநடத்தப்படுகிறதை உணருகிறேன், அதன்பின்னர் இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய ஒரே சத்தத்தை இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்போம். உலகத்திலேயே மகத்தான ஊழியத்தை நான் உடையவனாய் இருக்கிறேன் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன், எனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னுடைய சபைக்கு தேவனுடைய சத்தத்தை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
5. நேரடியாக ஒளிபரப்பப்படுகின்ற பிரான்ஹாம் கூடார ஆராதனைகளை நீங்கள் கேட்கவில்லையென்றால் நீங்கள் மணவாட்டியில்லையென்று நீர் நினைப்பதாக ஜனங்கள் கூறிக்கொண்டிருக்கிறார்களா?
என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் அதை ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நினைத்ததும் கூட இல்லை. யாரேனும் அத்தகைய ஒரு காரியத்தை கூறினால் அது தவறாகும். பிரான்ஹாம் கூடாரத்தின் மேய்ப்பராக, சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்க நான் வழிநடத்தப்படுகிறதை உணருகிறேன். சத்தமே மணவாட்டியை ஒருங்கிணைக்கிற ஒரே காரியமாய் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்.
நான் முன்பே கூறினதுபோல், ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு காரியமும் கர்த்தர் உரைக்கிறதாவது என்றும், அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். நான் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று என்னால் கூற முடியும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் மணவாட்டியை வெளியே அழைக்கவே அனுப்பப்பட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஐந்து வகையான ஊழியத்தில் என்னுடைய ஸ்தானம், அந்தச் செய்தியாளனை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டி, அதன் பின்னர் இயங்கு பொத்தானை அழுத்துவதேயாகும். அந்த சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் மகத்தான காரியம் வேறொன்றுமேயில்லை. மகத்தான அபிஷேகம் அந்த ஒலிநாடாக்களில் உள்ளது, எனவே நான் ஏன் என்னுடைய சபைக்கு வேறு எதையாவது கொடுக்க வேண்டும்?
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கர்த்தர் என்னுடைய இருதயத்தில் வைத்துள்ள செய்தியை என்னுடைய சபையில் போட்டுக் கேட்க நான் உலகத்தையே அழைக்கிறேன். ஒரே நேரத்தில் கேட்கும்படி ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகிறீர்கள்.
ஒலிநாடாக்களில் சகோதரன் பிரான்ஹாம் கூறியதையே நான் என்னுடைய வழிகாட்டியாகப் பயன்படுத்துகிறேன்.
நாம் இப்பொழுது இந்த தொலைபேசி இணைப்பு முறையைப் பெற்றுள்ளோம், அது மிக, மிக அருமையாக உள்ளது. ஜனங்கள் தங்களுடைய வீடுகளிலேயே அல்லது அவர்களுடைய…அவர்களுடைய கூடும் இடங்களில், அவர்களுடைய சபைகள், போன்றவற்றில் அமர்ந்து ஆராதனையை கேட்க முடியும். நான் அதை பாராட்டுகிறேன்.
இப்பொழுது, மேய்ப்பரே, நீங்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதாவது, இது நான் இந்த காரியங்களை என்னுடைய சபைக்கு மாத்திரமே பேசுகிறதாயுள்ளது. அதை செய்ய எனக்கு ஒரு உரிமை உண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளை கண்காணிக்க பரிசுத்த ஆவியானவரால் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுகிற இந்த செய்தியும் மற்ற எல்லா செய்திகளும் என்னுடைய சபையோருக்கே நேரடியாக அளிக்கப்படுகின்றன. உங்களுடைய சபையோர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலொழிய அது உங்களுக்கானது அல்ல. ஆனால் அது இங்கே இந்த ஜனங்களுக்கு நேரடியாக அளிக்கப்படுகின்றது.
அது உலகம் முழுவதற்குமானதாய் உள்ளது. பண்டைய தேசங்களில் ஜனங்கள் ராத்திரியில் நள்ளிரவில் எழுந்து, அவர்கள் ஒரே நேரத்தில் தொடர் சங்கிலி ஜெபத்தை கைக்கொள்ளுகிறார்கள். உண்மையில், பல்லாயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் அதை கேட்கத்தான் வேண்டும்; நீங்கள்-நீங்கள் ஜெபத்தினால் பரலோகத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள், எனவே அவர் கேட்கத்தான் வேண்டும்.
6. சபைக்கு செல்வது தவறா?
நான் அதை ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நினைத்ததுமில்லை. நான் அவ்வாறு நினைத்திருந்தால் எனக்கு ஏன் ஒரு சபை வேண்டும்? பிரான்ஹாம் கூடாரத்தில் நாங்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று ஆராதனைகளை வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் நான் விஜிஆரில் (VGR) பணிபுரிந்துகொண்டே ஒவ்வொரு வாரமும் அநேக ஆராதனைகளுக்கு வர வேண்டியிருந்து எனக்கு மிகவும் கடினமானதாககிவிட்டது. பிரான்ஹாம் கூடாரத்தில் ஜனங்களுக்கு போதிய இடம் இல்லாதிருந்தபடியால் நாங்கள் அப்பொழுது இரண்டு ஆராதனைகளை வாரத்திற்கு வைத்திருந்தோம். எனவே நாங்கள் எங்களுடைய வாலிபப் பிள்ளைகளுக்காக நாங்கள் பயன்படுத்தியிருந்த எங்களுடைய கட்டடத்திற்கு இடம்பெயர்ந்தோம், அது ஓர் உடற்பயிற்சி கூடமாயிருந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு அறிக்கையை வெளியிட தேவன் என்னுடைய இருதயத்தில் பேசியிருந்தார். அவர்கள் ஒருநாள் இந்த சபைக் கதவுகளை மூடினாலும், நாம் எங்கிருந்தாலும் நம்முடைய மேய்ப்பரால் நம்முடன் பேசக் கூடும் என்பதை நாம் ஒரு இம்மியும் இழக்கமாட்டோம் என்று நான் கூறினேன். ஒரு மாதம் கழித்து, உலகெங்கிலும் உள்ள சபைகளை மூடிய கோவிட் தொற்று நமக்கு ஏற்பட்டது.
அந்த நேரத்தில், எங்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவைப்பட்டபடியால், உடற்பயிற்சி கூடத்தை மறுவடிவமைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நான் வழிநடத்தப்படுகிறதை உணர்ந்தேன். இவ்வாறு, சபையானது மறுசீரமைக்கப்படும்போது, நாங்கள் எங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக இருந்து, உலகெங்கிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பகுதியோடு ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க ஒருங்கிணைந்தோம்.
நாங்கள் இப்போது கட்டிடத்தை முடித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சகோதரன் பிரான்ஹாம் இங்கு பிரன்ஹாம் கூடாரத்தில் இருந்ததைப் போலவே, நாங்கள் கட்டிய கூடுதல் வாகன நிறுத்துமிடத்தை நாங்கள் ஏற்கனவே விஞ்சிவிட்டோம். நாங்கள் ஜெபித்து, கர்த்தர் எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
ஜனங்களின் இருதயங்களில் இன்னும் பல, பல கேள்விகள் இருப்பதை நான் அறிவேன். நான் கூறியிருக்கிற பல காரியங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. சகோதரன் பிரான்ஹாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தாரானால், நான் எவ்வளவு அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்படுவேன்?
நான் கூறியுள்ளதில் தவறாக இருக்கலாம். நான் அவைகளை இன்னும் நன்றாக சொல்லாமலிருந்திருக்கலாம் அல்லது நான் அளித்த விதத்தில் இன்னும் தெளிவாக இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் சரியென்று நான் அறிந்த ஒரு காரியம், இந்த செய்தி பரிபூரணமானது. நீங்கள் எனக்கோ அல்லது நான் என்ன கூறுகிறேன் என்பதற்கோ செவிகொடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் இயங்கு பொத்தானை இயக்கி ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்.
கேள்விகளும் பதில்களும் #4 64-0830E என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மீண்டும் ஒருமுறை, பிரான்ஹாம் கூடாரத்தில் சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்