
அன்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டியே,
நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். காலம் சமீபித்துவிட்டது. பதறானது வித்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. நாம் குமாரனின் பிரசன்னத்தில் கிடத்தப்பட்டு, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். நாம் அவருடைய மேஜையில் அப்பமாகுமளவிற்கு, நம்முடைய சிறிய குழு கிறிஸ்துவுக்கு அவ்வளவாய் முதிர்ச்சியடையும் அளவிற்கு நாம் அந்தப் பிரசன்னத்தில் தரித்திருப்போம். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!
இந்தச் செய்தி மல்கியா 4-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, லூக்கா 17:30-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, எபிரேயர் 13:8-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, பரி. யோவான் 14:12-ஐ ரூபகாரப்படுத்தியுள்ளது, வெளிப்படுத்தின விசேஷம் 10-வது அதிகாரத்தை, ஏழு முத்திரைகள் திறக்கப்படுதலை, தேவனுடைய ரகசியங்களை, சர்பத்தினுடைய வித்தை, விவாகமும் விவாகரத்தும் மற்றும் இத்தனை ஆண்டுகளாக முழுவதுமாக தூண்களுக்கு கீழே மறைக்கப்பட்டிருந்த மற்ற இந்த எல்லா ரகசியங்களையும் ரூபகாரப்படுத்தியுள்ளது.
நாம் வார்த்தைக்கு கன்னிகைகளாயிருக்கிறோம். நாம் வெறெந்த காரியத்தையும் தொட முடியாது, தொடவும் மாட்டோம். நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும், தூய்மையானதாகவும், புதியதாகவும் இருக்கிறது; வானத்திலிருந்து விழுந்த புதிய மன்னாவாகவும் இருக்கிறது.
ஆனால் கடைசி காலத்தில் இரண்டு ஆவிகள் மிக நெருக்கமாக இருக்கும் என்றும், அது கூடுமானால் தெரிந்து கொள்ளபட்டவர்களையும் வஞ்சிக்கும் என்றும் அவர் நம்மை எச்சரித்தார். இதனால், அது மணவாட்டியாய் இருப்பது போன்று தென்படும் என்ற காரணத்தால் அந்த ஆவியின் பேரில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனியுங்கள், அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று பாருங்கள். மத்தேயு கூறினார், பரிசுத்த மத்தேயு 24:24, "கடைசி நாட்களில் இரு ஆவிகள் இருக்கும்," என்றும், சபை ஜனங்களின் சபையின் ஆவியும், மணவாட்டி ஜனங்களின் மணவாட்டி ஆவியும், இருக்கும் என்றும், "கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக இரண்டும் ஒன்றாய் இருக்கும்" என்றும் கூறியுள்ளது. அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும்.
சபை ஜனங்களின் ஆவியும் மணவாட்டி ஜனங்களின் ஆவியும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாய் இருக்கும் என்று அவர் கூறினார். அதாவது சபை ஜனங்களுடைய ஆவி அந்த மணி நேரத்தின் செய்தியை அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்று கூறுமளவிற்கு அந்த விதமாக நெருக்கமாக இருக்கும் என்பதே அதன் பொருளாகும்.
அது மெத்தோடிஸ்ட்டாய், பாப்டிஸ்ட்டாய், பிரஸ்பிடேரியனாய் அல்லது பெந்தேகோஸ்தேவாகக் கூட இருக்காது; அவர்கள் வார்த்தையிலிருந்து வெகுதூரம் விலகி, செய்தியைக் கூட நிராகரிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் எவருமே மணவாட்டிக்கு நெருக்கமான ஒரு ஆவியைப் பெற்றிருக்கவில்லை.
சாத்தான் மிகவும் வெற்றிகரமாக இருந்து, அவ்வளவாய் வஞ்சிக்கும் படிக்கு, முயற்சித்துள்ளான். ஆதியில் இருந்தே கூட, அவன் எளிமையாக, "நிச்சயமாகவே" என்றும், இந்தவிதமாக ஏவாளிடத்தில் கூறி அவளுடைய தர்க்க அறிவை உபயோகித்து அவள் தனக்கு செவிகொடுக்க வேண்டுமேயன்றி வார்த்தைக்கு அல்ல என்று கூறினான். ஆனால் அவள் செய்யும்படி கட்டளையிடப்பட்ட ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு: வார்த்தையோடு தரித்திருத்தல்.
உண்மைகள்:
உங்களுக்கு ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்க வேண்டும். அதைத்தான் தீர்க்கதரிசி நமக்கு சொன்னார். அந்த பதில் வார்த்தையில் இருந்து வர வேண்டும். வார்த்தையானது ஒரு தீர்க்கதரிசியினிடத்திற்கு மாத்திரமே வருகிறது. தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். எந்த மனிதனாவது அல்லது எந்த ஸ்திரீயாவது உங்களுக்கு ஒரு பதிலை அளித்தால், அது தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியிருக்கிறதாய் இருக்க வேண்டும். அது அவர்களுடைய வியாக்கியானமாய், கருத்தாய் அல்லது புரிந்து கொள்ளுதலாய் இருக்க முடியாது. அவர்கள் அதை தேவனுடைய ரூபாகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வார்த்தையோடு ஆதரிக்க வேண்டும். அது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையுடன் கூட்டப்பட்டதாயில்லாமல், அது தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பதாய் மட்டுமே இருக்க வேண்டும்.
இப்பொழுது இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.
1: நீங்கள் கேட்க வேண்டிய செய்திகள் மிக முக்கியமானதாய் இருக்கிறபடியால் ஒலிநாடாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
2: ஒலிநாடாவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை, மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகளை இப்பொழுது உள்ள ஊழியமானது கொண்டுள்ளது.
இரண்டாவது கருத்திற்கு பல, பல மாறுபாடுகள் உள்ளன: பரிசுத்த ஆவியானவர் என்னை அல்லது என்னுடைய போதகரை எது வார்த்தை, எது வார்த்தை இல்லை என்று நமக்கு சொல்ல வழிநடத்துவார். சகோதரன் பிரான்ஹாம் ஒலிநாடாவில் கூறினதைப் பார்க்கிலும் அதிகம் நமக்குத் தேவை. அந்த வார்த்தையை விளக்கிக் கூற அல்லது தெளிவுபடுத்திக் கூற உங்களுக்கு ஒரு ஊழியம் இருக்க வேண்டும். அந்த ஊழியம் இல்லாமல் நீங்கள் மணவாட்டியாய் இருக்க முடியாது.
இன்னும் பல முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது. ஆனால் முதல் பிரிவினருக்கு எந்த மாறுபாடுகளும் முரண்பாடுகளும் இல்லை. இது எளிமையாக, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதாயுள்ளது.
இந்த கடைசி-கால செய்தியில் விசுவாசிகளாக இருக்கின்றபடியால், நீங்கள் உங்களையே இந்த கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
1: ஒலிநாடாக்களில் தீர்க்கதரிசி கூறியது உங்களுடைய முற்றிலுமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அல்லது உங்கள் மூலமாகவோ அல்லது உங்களுடைய போதகர் மூலமாகவோ பரிசுத்த ஆவியானவர் பேசுவதே முற்றிலுமானது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
2: ஐந்து வகையான ஊழியத்தில் மணவாட்டி கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகள் இருக்கிறதா, அல்லது ஒலிநாடாவில் உள்ள செய்திகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன என்று விசுவாசிக்கிறீர்களா?
உங்களுடைய மேய்ப்பர், பிரசங்கி, போதகர், சுவிசேஷகர் அல்லது தீர்க்கதரிசி, ஒலிநாடாவில் உள்ள மிக முக்கியமான செய்திகளை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையென்றால், அவர் போலியானவர், மேலும் அந்த ஆவி வரும் என்று தீர்க்கதரிசி நம்மை எச்சரித்தார்.
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான செய்திகள் அவை என்று அவர் கூறி, அவருடைய சபையில் அந்த ஒலிநாடாக்களை இயக்க இன்னமும் மறுத்துக்கொண்டிருப்பாரானால், ஏதோ தவறு உள்ளது. ஒலிநாடாக்களைக் கேட்பதே நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று அவர் உண்மையிலேயே விசுவாசித்தால், அவர் முதலில் ஒலிநாடாக்களை இயக்குவார், அதன்பின்னர் அவர் பிரசிங்கிக்க வழி நடத்தப்படுகிறதை உணர்ந்தால் பிரசிங்கப்பார்.
எளிய உதாரணம்:
தூய்மையான குடிதண்ணீரே உங்களுடைய ஆரோக்கியத்திற்காக நீங்கள் பருகக்கக்கூடிய மிக முக்கியமான ஒன்று என்று நான் உங்களிடத்தில் கூறியிருந்தால், சான்றளிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் என்று நிரூபிக்கப்பட்டது ஒன்று மாத்திரமே இருந்தால்…ஆனால் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு இரவு உணவிற்கு வரும்போது, நான் அந்த சான்றளிக்கப்பட்ட தண்ணீரை உங்களுக்கு பரிமாறுகிறதில்லை. நான் உங்களிடத்தில், "நீங்கள் அந்த தண்ணீரை உங்களுடைய வீட்டிலிருந்து பருகலாம், ஆனால் என்னுடைய வீட்டிலே, நான் உங்களுக்குக் கொடுப்பதையே நீங்கள் பருக வேண்டும் என்று சொல்கிறீர்கள்" என்று சொல்லுகிறேன்.
அந்தத் தண்ணீர்தான் உங்களுடைய ஆரோக்கியத்திற்காக நான் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த ஒன்றாகவும், அதுவே உங்களுக்கு ஜீவனைத் தரும் என்றால், அப்படியானால் நீங்கள் என்னுடைய வீட்டிற்குள் நுழையும்போது நான் உங்களுக்கு முதலில் கொடுக்கப்போவது அந்த தூய்மையான குடிநீரேயாகும்.
நான், “உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள், என்று கூறுவதனால் தவறாக இருக்கிறேனா, இதுவே உங்களுடைய ஜனங்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியமாய் உள்ளது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.”
இல்லையென்றால், "சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாகும், உங்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் கூறினதேயில்லை. எனவே நாங்கள் ஜனங்களிடத்தில் ஒலிநாடாக்களை அவர்களுடைய வீடுகளில், உங்களுடைய கார்களில், எல்லா நேரத்திலும் இயக்குங்கள், ஆனால் சபையிலே அவர்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டும்" என்று கூறுவதனால் அவர்கள் தவறாக இருக்கிறார்களா.
எந்த ஆவி உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது? நீங்கள், "ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளதே என்னுடைய முற்றிலுமானது என்றும், மற்றும் நான் கேட்கக்கூடிய மிக முக்கியமான காரியம் அதுவே" என்றும் நீங்கள் கூறுகிறீர்களா? இல்லையென்றால், நீங்கள், "ஒலிநாடாக்கள் போதுமானதாக இருக்கவில்லை. அது என்னுடைய முற்றிலுமானது அல்ல மற்றும் கேட்கக்கூடிய மிக முக்கியமான காரியமும் அல்ல, ஊழியமே முக்கியம்" என்று கூறுகின்றீர்களா?
இப்பொழுது இது வித்தின் நேரம், அதாவது மணவாட்டியின் நேரம். பதர்கள் மரித்துப் போய்விட்டன. பதர்கள் காய்ந்துபோய்விட்டன. தொடப்படாத கன்னிகையான வார்த்தையின் நேரம். இது ஒரு கன்னிகை, நினைவிருக்கட்டும், ஒரு கன்னிகையான வார்த்தையின் நேரம்.
நாங்கள்: 65-0218 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியை கேட்கப்போகையில், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி பரலோகத்திலிருந்து விழுகின்ற புதிய மன்னாவைக் கேட்க வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்