
அன்பான கர்த்தருடைய ஆட்டுக்குட்டிகளே,
நித்திய ஜீவனின் வார்த்தையை நம்மிடம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றினையும் இந்த நாளுக்காக ஒவ்வொரு வாரமும் எப்படி நம்முடைய இருதயங்கள் ஏங்குகின்றன. நம்முடைய ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவதும், தாகத்தைத் தணிப்பதும் தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.
பிதாவே, பெரிய அறுவடை வயல் வெண்மையாகவும், முதிர்ச்சியடைந்தாகவும், தானியங்கள் இப்போது பெரிய போரடிக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் நேரத்திற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் நீர் எங்களுக்குச் சொன்னீர். தானியமானது இப்பொழுது குமாரனின் பிரசன்னத்தில் கிடந்து தேவனுடைய ராஜ்யத்திற்கு முதிர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது.
பிதாவே, சத்தியம் என்று நாங்கள் அறிந்துள்ள எங்களுடைய நம்பிக்கைக்கான உறுதியில் நாங்கள் நிற்கிறோம்; ஒலிநாடாவில் உள்ள உம்முடைய சத்தமே, உம்முடைய மணவாட்டியாகிய, எங்களை பரிபூரணப்படுத்தும் ஒரே சத்தமாய் இருக்கிறது.
எங்களுடைய சகோதர சகோதரிகளால் நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறபடியால் இது கடினமாக உள்ளது. அவர்கள் அவருடைய சமுகத்திலிருந்து விலகியோடாமல், அவருடைய சமுகத்திற்குள் ஓடுமாறு அவர்களிடம் கெஞ்சி, மன்றாடுகிறோம்.
இந்தச் செய்தியை தங்களுடைய முழு இருதயத்தோடு நேசிக்கிற பல அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களை நீங்கள் தெரிந்துகொண்டு, உம்முடைய மந்தைகளைக் கண்காணிக்கும்படி வைத்துள்ளீர் என்பதை நாங்கள் அறிவோம், ஆனாலும் பிதாவே, அவர்கள் உம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை அவர்கள் முன்வைக்கத் தவறுகிறார்கள். இது ஒரு ஒரே- மனிதனின் செய்தி என்றும், உம்முடைய மணவாட்டியை வழிநடத்த நீர் அந்த மனிதனைத் தெரிந்துகொண்டிருக்கிறீர் என்றும் அவர்களிடம் சொல்ல இவர்கள் தவறுகிறார்கள். உம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும் ஒரே சத்தம் உம்முடைய சத்தம் மட்டுமே என்பதை அவர்களிடம் சொல்ல இவர்கள் தவறுகிறார்கள்.
நான் "அதற்கு எதிராக கூக்குரலிட வேண்டும்." ஒவ்வொரு காரியத்திற்கு எதிராகவும், அவர்களுடைய சபைகளில் உம்முடைய ஒலிநாடாவை இயக்குவதற்கு எதிராக உள்ள ஒவ்வொருவருக்கும் எதிராக கூக்குரலிடுகிறேன். அவர்களுடைய செய்கைக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய சபைக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய தீர்க்கதரிசிகளுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய ஊழியக்காரர்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன், அவர்களுடைய ஆசாரியர்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறேன். நான் அந்த முழு காரியத்திற்கும் எதிராக கூக்குரலிட வேண்டுமே!
"தோழர்களே நான் உங்களோடு சேர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் என்று கூறுகிறேன். உங்களுக்குத் தெரியுமா, நான் என்ன செய்யவுள்ளேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன் என்பதை நான் நம்புகிறேன். நான் இங்கு ஒரு சிறு காரியத்தை வைத்திருக்கிறேன், நம் அனைவரையும் ஒன்றாக கொண்டு வர, இதை, அதை, அல்லது மற்றதைச் செய்ய...என்னால் அந்த ஒன்றைக் கூற முடியும் என்று நான் நம்புகிறேன்.
உம்முடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட, உம்முடைய வார்த்தை மாத்திரமே எங்களை ஒன்றிணைக்க முடியும் என்பதால் நான் அதற்கு எதிராகக் கூக்குரலிட வேண்டும்.
எப்படி அவர்களுடைய பிரசங்கம் அதைச் செய்ய முடியும்? அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் உடன்படாமல் மற்றும் ஒருவரையொருவர் காரியங்களை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள் யாவரும் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்கக் கூடாது…என்ற ஒரு காரியத்தை மட்டும் அவர்கள் அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். பிதாவே, அது எப்படி அதை செய்வதாக இருக்க முடியும்?
எங்களிடம் முற்றிலுமான ஒன்று இருக்க வேண்டும் என்று நீர் சொன்னீர், அது உம்முடைய வார்த்தையாகும்.உம்முடைய வார்த்தை உம்முடைய தீர்க்கதரிசியிடம் மாத்திரமே வருகிறது என்று நீர் எங்களிடம் சொன்னீர். அவர் மாத்திரமே உம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்கக்கூடியவர் என்று நீங்கள் எங்களிடம் சொன்னீர். ஒவ்வொரு ஊழியக்காரனும், ஒவ்வொரு சாதாரண சபை அங்கத்தினனும், ஒவ்வொரு மானிடனும், அவர் கூறினதை மாத்திரமே கூறலாம் என்று நீர் எங்களிடம் சொன்னீர். அவருடைய சத்தமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி அக்கினி ஸ்தம்பத்தால் ரூபுகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாக இருக்கிறது.
அவர்கள் போலியானவர்கள் அல்லது பிரசங்கிக்க கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. கர்த்தர் அவர்களுடன் இல்லை என்றோ அல்லது அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு பிரசங்கிக்க அழைக்கப்படவில்லை என்றோ நான் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒலிநாடாக்களைக் கேட்பது அவர்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று அவர்கள் தங்களுடைய ஜனங்களிடம் சொல்லாதபோது நான் அவர்களுக்கு எதிராக கூக்குரலிட வேண்டும்.
ஒரு சிறு எழுத்தையாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பையாகிலும் மாற்றுவது மரணம். உம்முடைய மணவாட்டி தங்களுடைய சொந்த செவிகளில் கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறுவதைக் கேட்க ஒரு வழியை நீர் அருளியுள்ளீர். இதுவே அவர்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி என்று அவர்களுடைய ஜனங்களிடம் எப்படி அவர்களால் பிரசங்கிக்காமல் இருக்க முடியும்? இது ஒரு மனிதனுடைய வார்த்தையாக இல்லாதபடியாலும் அல்லது உம்முடைய வார்த்தைக்குரிய மனுஷனுடைய வியாக்கியானமாயில்லாதபடியினாலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று நான் கூறக்கூடிய ஒரே செய்தி இதுவேயாகும். இது உம்முடைய கலப்படமற்ற வார்த்தையாய் உள்ளது.
செய்தியும் செய்தியாளனும் ஒன்றே என்று நீர் கூறினீர். உம்முடைய தீர்க்கதரிசி அதை உரைத்தார், நீர் அதை நிறைவேற்றுவீர். இது அவருடைய மணவாட்டியினிடத்தில் நேரடியாக பேசிக்கொண்டிருக்கிற மனுஷகுமாரனாய் இருக்கின்றபடியால், உம்முடைய தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட உம்முடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. உம்முடைய ஆதி அன்பிற்கு திரும்பி வர வேண்டும் என்று நான் ஜனங்களிடம் கெஞ்ச வேண்டும். கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் அறிந்திருக்கிறதற்கு திரும்பி வரவேண்டும். எந்த வழியில் செல்வது அல்லது என்ன செய்வது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், வாருங்கள், இன்றிரவு எங்களுடன் கப்பலில் ஏறுங்கள். நாங்கள் கூக்குரலிட நினிவேக்கு சென்றுகொண்டிகிறோம். தேவனுக்கு முன்பாக நமக்கு ஒரு கடமை இருக்கிறது, அதுதான் ஒலிநாடாவில் உள்ள இந்த செய்தியாகும்.
கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்றும், அவருக்கு ஒரு மணவாட்டி இருக்கப்போகிறாள் என்றும், நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் மகிமைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம், வந்து எங்களுடைய கப்பலில் சேர்ந்துகொள்ளுங்கள்.
இந்தச் செய்தி சத்தியமானது என்றும், ஜீவிப்பதற்குத் தகுந்தது என்றும், அதற்காக மரிப்பதற்கும் தகுந்தது என்றும் நீங்கள் விசுவாசித்தால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் 65-0217 என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போவது எங்களுக்கு மிக முக்கியமானது என்றும், அவசரமானது என்றும் நாங்கள் விசுவாசிக்கிறபடியால், எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
நீங்கள் என்னுடைய ஆட்டுக்குட்டிகள். அது எப்படி? நீங்களே அவர் என்னை போஷிக்க அனுமதித்துள்ள கர்த்தருடைய ஆட்டுக்குட்டிகள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30