
அன்புள்ள செம்மறியாடுகளை தொழுவத்தில் கூட்டிச்சேர்ப்பவர்களே,
ஒவ்வொரு வாரமும் தேவனுடைய ஆட்டுத் தொழுவத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் கூடிவருவதில் நான் மிகவும் திருப்தியடைந்து, கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன், அங்கு நாம் நம்முடைய மறைவான இடத்தில் மறைந்திருந்து, அந்த மறைவான ஆகாரத்தை உண்டு, ஜீவிப்பவர்களாக இருக்கிறோம். இது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாகவும், ரூபகாரப்படுத்துதலாகவும் மற்றும் அவரையே நமக்கு வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாயும் உள்ளது.
மற்றவர்கள் அதை நோக்கிப் பார்த்தும், அதைப் புரிந்துகொள்ளாதபடிக்கு அவர் தம்மையே மறைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாகிய, நமக்கோ, நாம் அதை தெளிவான காட்சியில் கண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தையும், அவருடைய தீர்க்கதரிசியும் ஒன்றாகவும் மற்றும் மாறாதது என்பதாலும், நாம் அவைகளுடன் தரித்திருக்கிறோம்.
நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் இந்த வேதாகம தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். இது வார்த்தையாயுள்ளது.
இன்றைக்கு பல அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள், "நீங்கள் தரித்திருக்க வேண்டியது பரிசுத்த ஆவியானவரோடேயல்லாமல், தீர்க்கதரிசியோடல்ல" என்று கூறுகிறார்கள். பண்டைய தீர்க்கதரிசிகளைப்போலவே, நமக்கு ஒரு கேள்வி இருந்தால், அதற்கு சரியான பதில் இருக்க வேண்டும். நமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி என்ன கூறினார் என்று பார்க்க நாம் வார்த்தைக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி உண்டு, அது அவர் அதைச் செய்வதாக வாக்களித்ததுபோல வார்த்தை மாம்சமானதாயுள்ளது.
அவர் வாக்களித்த ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி, மல்கியா 4, லூக்கா 17, மனுஷகுமாரன் தம்மை மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்துதல்.
ஆம், அபிஷேகம்பண்ணப்பட்ட மனுஷர் உள்ளனர். ஆம், அவர்களுக்கு ஒரு அழைப்பு உள்ளது. ஆம், அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆம், அவர்களுக்கு சரியான நோக்கமும், குறிக்கோளும் உள்ளது.
அப்படியானால் எது சரி, எது தவறு என்று எப்படி தெரிந்துகொள்வது?
கவனியுங்கள், அவர்கள் ஒரேவிதமாக காணப்படுகின்றனர். அவர்கள் ஒரே விதமாக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கவனியுங்கள், "அவர்களுடைய கனி..."
இந்தக் காரியங்களைக் கூற நான் வெறுக்கிறேன், ஆனால் வேளையோ தாமதமாகி, நேரமோ விரைந்தோடிக்கொண்டிருக்கிறது. பவுல் சபையைக் குறித்து எச்சரித்த அந்த கொடிதான ஓநாய்களால் இன்றைக்கு சொல்லப்படுவதும் பிரசங்கிக்கப்படுவதும், கள்ள அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் வருவார்கள் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறினதும் இதுதான். அவர்கள் கூறியதுபோலவே, இவர்கள் இங்கே நமக்கு மத்தியில் இருக்கிறார்கள்.
ஒரு ஊழியக்காரரிடத்திலிருந்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஒரு பகுதி இதோ உள்ளது. தேவனுடைய தீர்க்கதரிசியின் மேல் சந்தேகத்தைப் போட அவர்களுடைய கனி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசியை பின்பற்றி, இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் நாம் தெய்வீகத் தன்மை கொண்ட ஜனங்கள் என்று அவர்கள் தங்களுடைய ஜனங்களை எச்சரிக்கிறார்கள்.
இது எவ்வளவு வஞ்சனையாயுள்ளது என்பதை கவனியுங்கள்.
வில்லியம் பிரான்ஹாமினுடைய பிரசங்கங்களின் வெளியீடுகளை இப்பொழுது நாம் தேவனுடைய சத்தம் என்று அழைக்கும் வகையில் இந்த பிசாசு நம்முடைய செய்தி வரிசையில் ஊடுருவியுள்ளதால் நான் புண்படுத்தப்பட்டேன். வில்லியம் பிரான்ஹாம் உண்மையில் தேவனுடைய சத்தமாயிருக்கவில்லை, ஆனால் சரியாகக் கூறினால் தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனித சத்தமாய் இருந்தார். அவர் தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று வேதம் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் சரியாகக் கூறினால் வேதம் அவரை 7-ம் தூதனுடைய சத்தமாகவே அடையாளப்படுத்துகிறது. (வெளி. 3:14; 10:7).
நாம் வார்த்தைக்குச் செல்வோம், தேவனுடைய தீர்க்கதரிசியே இந்தக் கள்ள உபதேசத்தை வெளிப்படுத்தட்டும்.
இப்பொழுது நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள், இந்த கள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியையா, அல்லது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட செய்தியாளராகிய ஏழாம் தூதனையா? இதுபோன்ற காரியங்களை நம்பும் அல்லது உங்களுக்குக் கற்பிக்கும் எந்த ஊழியக்காரனின் கீழும் நீங்கள் எப்படி அமர்ந்திருக்க முடியும்? இன்னும் நேரம் இருக்கும்போதே நீங்கள் வார்த்தைக்குள் வந்துவிடுவது நல்லது.
வில்லியம் பிரான்ஹாமை முற்றிலுமானவராக்குவதாலும், அவரை தெய்வீகத் தன்மை கொண்டவராக இந்த செய்திக் குழுவினர் ஆக்குவதாலும் ஒரு பயங்கரமான தவறு நடந்துள்ளது. வில்லியம் பிரான்ஹாம் ஒருபோதும் முற்றிலுமானவராயிருக்கவில்லை! தேவனுடைய வார்த்தையே முற்றிலுமானது.
ஆமென், தேவனுடைய வார்த்தையே நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளது, வார்த்தை யாரிடம் வந்தது, உங்களிடத்திற்கா அல்லது அவரிடத்திற்கா? தேவனுடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி யார், நீங்களா அல்லது அவரா? கர்த்தர் உரைக்கிறதாவது என்று யாரை அக்கினி ஸ்தம்பம் ரூபகாரப்படுத்தினது, உங்களையா அல்லது அவரையா?
ஏனெனில் உங்களுக்கு இரண்டு மனிதர் இருந்தால், நீங்கள் இரண்டு கருத்துக்களைப் பெற்றிருப்பீர்கள்.
நமக்கு இரண்டு மனிதர்களோ, அவர்களுடைய கருத்துகளோ தேவையில்லை, ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி என்ன கூறியுள்ளார் என்பதே நமக்குத் தேவை.
மேலும் இது ஒரு முடிவான முற்றிலுமானதற்கே வர வேண்டும், மேலும் என்னுடைய முற்றிலுமானது வார்த்தையாய், வேதாகமமாக உள்ளது.
நீங்கள் கூறினதுபோல, அது இருக்கிறது, வேதம் அவருடைய மற்றும் நம்முடைய முற்றிலுமானதாய் இருக்கிறது, ஆனால் அதன்பின்னர் அவர் கூறுவதோ:
நம்முடைய சகோதரர்களே, நீங்கள், நீங்கள் என்னை ஒருவிதமான உங்களுடைய முற்றிலுமானவராக பார்க்கிறீர்கள் என்று நான் அறிவேன்.
எனவே ஒரு நிமிடம் காத்திருங்கள், அது நீங்கள் கூறினதற்கு முரணாகத் தெரிகிறது. நாங்கள் அவரை எங்களுடைய முற்றிலுமானவராக நோக்கிப் பார்க்க வேண்டும் என்றே அவர் கூறினார்.
நான் தேவனைப் பின்பற்றும் வரை என்று, பவுல் வேதத்தில் கூறியதுபோல், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல் நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்."
அது அபிஷேகிக்கப்பட்டிருக்கவில்லையா? அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
கடந்த வாரம் தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு என்ன சொன்னார்?
ஒரு மனிதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையாகவே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, செய்தியும் செய்தியாளனும் ஒன்றாகவும், ஒரே விதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம்.
நீங்கள் அவைகளைப் பிரிக்க முடியாது என்று அவர் கூறினார், அவை ஒன்றுதான், ஆனால் நாம் பிரிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
வில்லியம் பிரான்ஹாம் எந்த அழிவுள்ள மனிதனைக் காட்டிலும் வித்தியாசமானவர் அல்ல, ஏனெனில் அவர் எலியா இருந்ததைப் போலவே, பாடுள்ள ஒரு மனிதனைப் போல இருந்தார்.
ஆமென், அவர் நிச்சயமாக ஒரு மனிதராக இருந்தார், ஆனால் தேவன் தம்முடைய எல்லா வார்த்தைகளையும் வெளிப்படுத்தவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்தவும் தெரிந்துகொண்ட மனிதனாக அவர் இருந்தார். ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய் என்று தேவன் கூறின ஒருவராய் அவர் இருந்தார்.
அதே காரியம், அபிஷேகம்பண்ணப்பட்ட, பெந்தெகொஸ்தேவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆனால் "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்ற ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையின் தற்போதைய வாக்குத்தத்தத்தை மறுதலித்தல்.
அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களா என்ற வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? உண்மையான தீர்க்கதரிசியிலிருந்து கள்ள தீர்க்கதரிசிகளை நாம் அறிந்துகொள்ள அவர் நமக்கு உதாரணங்களைத் தருகிறார்.
பிலேயாம் மற்றும் மோசே. மிகாயா மற்றும் சிதேக்கியா. எரேமியா மற்றும் அனனியா. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருவரும் தேவனுடைய தீர்க்கதரிசிகளாக அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தனர், ஆனால் அவர் நம்மை என்ன செய்யும்படி கூறினாரென்றால், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியோடு தரித்திருங்கள் என்பதேயாகும். நீங்கள் தேவன் அருளியுள்ள வழியை பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதற்குமான ஒரே வழியாய் அது உள்ளது.
அவர் அதைச் செய்கிறபோது அவர் அருகில் இருக்கிற ஒருவனாய் மாத்திரமே நான் இருக்கிறேன். அதைக் கூறும்படி அவர் உபயோகித்த ஒரு சத்தமாக மாத்திரமே நான் இருந்தேன். நான் என்ன அறிந்திருந்தேன் என்பதாய் அது இருக்கவில்லை; அவர் அதை என் மூலமாக உரைக்க நான் என்னையே அர்ப்பணித்ததாகவே அது உள்ளது.
மணவாட்டிக்கு விருப்பமும், தேவையுமாயிருக்கிறதும் அவ்வளவுதான். ஒரே சத்தம். ஒரே தீர்க்கதரிசி. ஒரே செய்தி. ஒரே செய்தியாளர்.
ஓ பிதாவே, உம்முடைய கிருபை இரக்கம் எங்களிடத்தில் இருப்பதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களால் கூடாதது ஒன்றுமேயில்லை என்று நீர் எங்களுக்கு சொன்னீர். நம்மால் கூடாதது ஒன்றுமேயில்லை. விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று, நாம் விசுவாசிக்கிறோம்.
கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-0725M என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் நாம் பெற்றுள்ள தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சத்தம் நமக்கு சொல்லவிருக்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வந்து எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்