ஞாயிறு
01 ஜனவரி 2023
65-0718M
தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்

அன்புள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்றுகொண்டிருக்கிற மணவாட்டியே,

இந்தப் புத்தாண்டில் என்ன நடக்கப் போகிறது?

மணவாட்டி வார்த்தையுடன் தரித்திருப்பதன் மூலம் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். நாம் இராப்போஜனம் எடுத்து, நம்முடைய வீட்டிற்கு அடையாளத்தைப் போட்டு, உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் நம்மை முத்தரையிட்டுக்கொண்டோம். நாம் சமரசம் செய்யப்படவில்லை, ஆனால் தேவனுடைய உண்மையான சத்தத்திற்கு நம்மை கன்னிகைகளாகக் காத்துக் கொண்டுள்ளோம்.

நாம் என்னே ஒரு மகிமையான நேரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசிகள் யாவரும் காணும்படி வாஞ்சித்திருந்த ஒரு நேரம் இதுவே; இந்த வேளையே. இயல்பாகவே சபையானது புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். கடைசியான முடிவின் நேரங்கள் அணுகிக்கொண்டிருக்க, நாமோ நித்தியத்திற்குள்ளாக செல்ல துரிதமாக மங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஒழுங்கில் தரித்திருந்து; நம்முடைய நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியில் நம்முடைய பார்வையை வைத்திருக்க வேண்டும்: அவருடைய வார்த்தை, அவருடைய தீர்க்கதரிசி, நம்முடைய நாளுக்கான வார்த்தையாயிருக்கிறார்.

அவர் கிறிஸ்துவை இங்கு எப்படிக்கொண்டு வந்தார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாகவே. அது சரிதானே? அவர் இங்கு தன்னுடைய மணவாட்டியை எப்படிக் கொண்டு வருவார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாகவே.

என்ன செய்யப்பட முடியும்? என்ன செய்ய வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார்: தீர்க்கதரிசியினிடத்தில் கலந்தாலோசிக்க வேண்டும், வேதாகமத்தில், நாம் அதிலிருந்து எதையும் கூட்டவோ அல்லது எடுக்கவோ முடியாது. நாம் அவ்வாறு செய்தால் தேவன் ஜீவ புஸ்தகத்தில் இருந்து நம்மை எடுத்துப்போடுகிறார்.

காலமானது மிகவும் தாமதமாகிவிட்டது, நாம் அவருடைய மணவாட்டியாக இருக்க நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக அவருக்கு ஒரு சேவையை செய்ய ஒருபோதும் விரும்புவதில்லை, அது எவ்வளவு நன்றாக தென்பட்டாலும் சரி. தேவன் அதை இன்றைக்கு எப்படி செய்யப் போகிறார் என்ற ஒரு வாக்குத்தத்தை அவர் உண்டுபண்ணினார். தேவன் அதை எப்படி செய்வார் என்று அவருடைய வார்த்தையில் அவர் இங்கே சரியாக கூறிவிட்டார்.

அவர் தன்னுடைய மணவாட்டியை எப்படி எடுத்துக்கொள்வார்? வார்த்தை மூலமாகவே; ஒரு புதிய வண்டியின் மூலமாயல்ல, ஏதோ ஒரு வேதபண்டிதனுடைய கருத்தின் மூலமாக அல்ல. ஆனால் அவருடைய வார்த்தையின்படியே அவர் அவளை அடையாளங் கண்டுகொள்வார். எனவே அதிலிருந்து ஒரு காரியத்தை கூட்டவோ அல்லது இப்பொழுது அதிலிருந்து ஒரு காரியத்தை எடுக்கவோ கூடாது. அது இருக்கிற விதமாகவே அதை விட்டுவிடுங்கள். புரிகிறதா?

இன்றைக்கான கர்த்தருடைய சித்தம் என்ன என்று கூறுகிற பல அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள் இருப்பதால் சில ஜனங்களுக்கு, இது மிகவும் குழப்பமாக இருக்கக் கூடும். அவர்கள், "சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாகும், சகோதரன் பிரான்ஹாம் அதை ஒருபோதும் கூறினதேயில்லை. ஊழியமே இப்பொழுது மிகவும் முக்கியமானது, அது இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாயுள்ளது. உங்கள் போதகருடன் தரித்திருங்கள்" என்று கூறுகிறார்கள்.

எனவே, ஒலிநாடாக்களைக் கேட்பது சரிதான், ஆனால் சபையில் கேட்கக் கூடாது அல்லவா? ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்க வேண்டியதில்லை, எது வார்த்தை, எது வார்த்தை இல்லை என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு சொல்கிறதையே விசுவாசிக்க வேண்டும். ஊழியத்திற்கு செவிகொடுப்பது மணவாட்டியை பரிபூரணப்படுத்துமா? நான் என்னுடைய மேய்ப்பரோடு தரித்திருக்கவில்லையென்றால் என்னால் மணவாட்டியாய் இருக்க முடியாது. நான் ஒலிநாடாக்களை இயக்கினால், நான் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கிறேனா?

ஒவ்வொரு விசுவாசியும் சரியானதைச் செய்து, தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறார். யாரும் தவறு செய்ய விரும்பவில்லை அல்லது அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க விரும்பவில்லை. ஒரு சீரான, சரியான வழி இருக்க வேண்டும்.

எந்த ஊழியக்காரர்களுக்கு…அவர்கள் எல்லோருக்கும் நாம் செவி கொடுக்க வேண்டுமா? நாம் வீட்டிற்குச் சென்று ஒலிநாடாக்களை கேட்பதன் மூலம் அவர்கள் கூறுகிறது வார்த்தையாக இருக்கிறதா என்று ஆய்ந்து பார்க்க வேண்டுமா அல்லது நாம் கேட்காமலேயே அவர்களுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் எது முற்றிலுமானது, நம்முடைய மேய்ப்பருடைய வார்த்தையா, அல்லது ஒலிநாடாவில் சகோதரன் பிரான்ஹாம் என்ன கூறினார் என்பதா?

அவர்கள் வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும், ஆமென். அவர்கள் வார்த்தையை ஜனங்களுக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டும், ஆமென். ஆனால் அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் காட்டிலும் அவர்கள் முக்கியமானவர்களாக இருக்கவில்லை. ஒலிநாடாக்களில் என்ன உள்ளது என்பதை மாத்திரமே அவர்கள் கூற வேண்டும். அதுவே மணவாட்டியினுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது.

உங்களுக்கு ஐந்து கட்டாயங்கள் உள்ளன. அது அந்த விதமாகத்தான் இருக்க வேண்டும். அவருடைய நேரம், அவருடைய காலம், அது இருக்கும் என்று அவர் கூறினபோது; அவர் தெரிந்துகொண்ட மனிதன்; அது தீர்க்கதரிசிக்கு வரவேண்டும்; தீர்க்கதரிசியோ ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.

நான் ஊழியத்தை கண்டிக்கவோ அல்லது அவர்களுக்கு ஒரு ஸ்தானம் இல்லை என்று கூறவோ முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை, அப்படி இல்லையே. ஊழியத்தில் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஜனங்களுக்கு ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தை இயக்குவது என்பதையே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறுகிற எந்த காரியமாயினும், அல்லது ஒரு ஊழியக்காரர் கூறுகிற எந்த காரியமாயினும், அல்லது ஒரு சாதாரண அங்கத்தினர் கூறுகிற எந்த காரியமாயிருந்தாலும் கூட, அது வார்த்தைக்கு வார்த்தை தேவனுடைய தீர்க்கதரிசி என்ன கூறியுள்ளார் என்பதன் பேரில் இருக்க வேண்டும்.

நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை நான் வெறுக்கிறேன், நான் உங்களுடைய மேய்ப்பருக்கு எதிரானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது என் இருதயத்தில் இல்லை. இந்த செய்தியில், நாம் ஒன்றிணைய முடிந்த இந்த ஒரே காரியத்தினால் மாத்திரமே மணவாட்டி ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

.

இப்படிப்பட்ட பிரிவினை, குழப்பம், மக்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள ஒரு காலத்தில், ஞாயிற்றுக்கிழமை நாம் கேட்கப்போகும் இந்தச் செய்தி நமது நாளுக்கான மிக முக்கியமான செய்திகளில் ஒன்று என்றே நான் விசுவாசிக்கிறேன்.

நம்முடைய இருதயத்தைத் திறந்து, சபைக்கும், ஒலிநாடாவில் கேட்கப்போகும் ஜனங்களுக்கும், எல்லா நாடுகளிலும் இணையதள இணைப்பில் உள்ள ஜனங்களுக்கும் தேவன் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போமாக.

வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நாம் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. தேவனுடைய சத்தம் உண்மையாகவே நாம் மிகவும் கூர்ந்து செவிகொடுக்க வேண்டும் என்றும், அவர் கூறிக்கொண்டிருக்கிறதை புரிந்துகொள்ளத் தவறக்கூடாது என்றும் விரும்புகிறது.

மோசே தேவனாலும் அக்னி ஸ்தம்பத்தாலும் ரூபகாரப்படுத்தப்பட்டிருந்த பிறகு, அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லும்படியான தேவனுடைய ஊழியக்காரனாயிருக்க அவன் நிரூபிக்கப்பட்டான் என்று அறிந்த பிறகே, மோசே இஸ்ரவேலரிடம் பேசிக் கொண்டிருந்ததுபோலவே அவர் பேசினார். ஆனால் அவர்கள் அந்த தேசத்திற்குள் செல்வதற்கு முன், அவன் அவர்களிடம்: "நான் உங்களுக்கு எதிராக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன், நான் கூறியுள்ளதில் ஒன்றையும் சேர்க்காதீர்கள் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையையும் எடுத்துப்போடாதீர்கள்" என்று சொன்னான்.

எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்டவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களை அதில் சேர்க்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாகச் செய்யுங்கள்; இதனோடு கூட்டாதீர்கள்!

ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை மாத்திரமே நாம் கூறும்படிக்கு தேவனாகிய கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறதாய் இது உள்ளது. நம்முடைய கருத்துக்களையோ, நம்முடைய எண்ணங்களையோ, அல்லது நம்முடைய வியாக்கியானத்தையோ அதனுடன் சேர்க்கவோ, எடுத்துப்போடவோ, நுழைக்கவோ முடியாது. ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே கூறுங்கள்.

தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் சத்தியமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசித்தால், அப்பொழுது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியமான இயங்கு பொத்தானை அழுத்துவது என்றில்லாமல் எப்படி இருக்க முடியும்?

அவர் வந்தபோது, எப்படி தம்மை அடையாளங் காட்டினார்? வனாந்தரத்திலிருந்து வந்த, எலியாவின் ஆவியை தன் மீது கொண்டிருந்த ஒரு மனிதன் மூலமாகவே. அவர் தம்முடைய மணவாட்டியை எப்படி அடையாளம் காட்டுவார்? சோதோமின் நாட்களில் இருந்ததைப்போலவே, அவர் பூமியை அழிப்பதற்கு முன்பே, அதே காரியத்தை அவர் மல்கியா 4-ல் வாக்களித்தார்.

அன்புள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேச மணவாட்டியே, உங்களிடம் உண்மையான வெளிப்பாடு உள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் யாரென்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளீர்கள். இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் தேவனுடைய திட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையாய் இருக்கிறீர்கள். நீங்கள் மணவாளனின் பாகமாக இருக்கிறீர்கள். மகிமை!!!

புத்தாண்டைத் தொடங்க என்னே ஒரு வழி, இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய கட்டளையை பின்பற்றி, மணவாட்டி ஒன்றாக இணைக்கப்படுகின்றாள்.

நாங்கள்: 65-0718M தேவசித்தமாயில்லாமல் அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களோடு எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

உபாகமம் 4:1-4 / 4:25-26
1 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரி. மாற்கு 7:7
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 3
பரி. மத்தேயு 11:1-15
1 கொரிந்தியர் 13:1