ஞாயிறு
25 டிசம்பர் 2022
65-0711
வெட்கப்படுதல்

அன்புள்ள மணவாட்டியான ரெபெக்காளே,

பிதாவானவர் தம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான எலியேசரை, தம்முடைய மணவாட்டியான ரெபெக்காளைத் தேட அனுப்பியுள்ளார். நாம் அவரை அடையாளம் கண்டுகொண்டோம், அவருடைய செய்தியாளனான ஏழாம் தூதன், வில்லியம் மரியன் பிரான்ஹாமையே: அழைக்கவும், கூட்டவும், வழிநடத்தவும், இறுதியாக அவருக்கு நம்மை அறிமுகப்படுத்தவும் கட்டளையிட்டுள்ளார்.

அவர் நமக்கு தம்முடைய உயிர்ப்பிக்கும் வல்லமையின் ஒரு மகத்தான பொழிவை அளித்து, அழைக்கப்பட்ட ஒரு ஜனமாய் உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்டு, தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, நம்முடைய நிலைமையையும், நம்முடைய ஸ்தானத்தையும், நம்முடைய பொறுப்புகளையும் அடையாளம் கண்டு கொள்ளும்படியாக நம்மை அழைத்து வந்துள்ளார். நாம் செய்கிற கூறுகிற காரியங்களில் அவர் நமக்கு வழிகாட்டிக் கொண்டும், நம்மை வழிநடத்திக் கொண்டும், அவருடைய நாமத்திற்கு கனத்தையும் மகிமையையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

அதிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடிய எதுவும், எங்கும் இல்லை, எதுவுமே இல்லை. நாம் தேவனுடைய இராஜ்யத்தில் நித்தியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். பிதாவானவர் நம்முடைய பயண இலக்கின் முடிவுக்கு நம்மேல் தம்முடைய முத்திரையை முத்திரையிட்டுள்ளார்.

பிசாசு இரவும் பகலும் நம்மைத் தாக்குகிறான். அவன் நமக்கு ஒவ்வொரு காரியத்தையும் கூறி, நம்மை குற்றப்படுத்தி, நாம் அந்த மணவாட்டியல்ல என்று நம்மை நினைக்கும்படி செய்ய முயற்சிக்கிறான். அவன் நம்மை திசைத்திருப்ப முயற்சிக்கும்படி நம்முடைய வழியில், சுகவீனம் துக்கம் போன்ற ஒவ்வொரு காரியத்தையும் எறிகிறான், ஆனால் நாமோ அவனுக்கு செவிசாய்க்கிறதில்லை. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இப்பொழுது நமக்குள்ளிருந்து, நம்மை முத்திரையிட்டு, அந்த வார்த்தையின் மையமாக்கியுள்ளது. நாம் நம்முடைய ஒட்டகத்திலிருந்து குதித்திறங்கி, நம்முடைய மகத்தான கல்யாண விருந்துக்கு அவரண்டை செல்லும் நம்முடைய வழியில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் விசுவாசிப்பதில் வெட்கப்படவில்லை; மாறாக, உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம், தம்முடைய மணவாட்டியான ரெபெக்காளை வெளியே அழைக்கவும், வழிநடத்தவும் அவர் அனுப்பின தம்முடைய உண்மையுள்ள தீர்க்கதரிசி எலியேசரால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஒலிநாடாவில் கேட்டு விசுவாசிக்கிற ஜனங்களாய் நாம் இருக்கிறோம். நாம் ஒரு வார்த்தையையும் கூட்டுகிறதோ அல்லது எடுக்கிறதோயில்லை. இந்த செய்தி நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளது.

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, தேவனுடைய முழு வல்லமையையும், தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய அன்பையும் கொண்டுள்ள ஒரு மனிதன் ஒலிநாடாவில் அவன் கேட்டிருக்கிற செய்தியை குறித்து ஒரு மனிதனிடத்தில் சில காரியத்தைக் குறித்து ஒரு சில நிமிடங்களாவது பேசாமல் எப்படி இருக்க முடியும்?

இந்த கடைசி கால செய்தியில் விசுவாசிகளாய் இருப்பதாக உரிமை கோருகிற ஜனங்களை சந்திக்கும்போது, உங்களால் அவர்களிடத்தில் ஒரு சில நிமிடங்கள் பேசி, ஒலிநாடாக்களை இயக்குவதில் அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை சரியாக சொல்ல முடியும். அவர்கள் ஒலிநாடாக்களை கேட்கும் ஜனங்களாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் ஒலிநாடாக்களை கேட்காதவர்களாக இருக்க வேண்டும்.

உங்களுடைய சபையிலோ அல்லது வீட்டிலோ நீங்கள் ஒலிநாடாக்களை இயக்குகிறீர்கள் என்று சொன்னால், அவர்கள் அதை அவமானமாகவோ அல்லது தவறானதாகவோ கூட கருதுவது கற்பனை செய்ய முடியாததாயுள்ளது. இது வார்த்தைக்கு எதிரானது என்றும், தேவன் அருளியுள்ள வழி அல்ல என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு "ஒலிநாடாவைக் கேட்கும் நபர்" என்று சொல்வதால், நீங்கள் இழிவாக பார்க்கப்படுகிறீர்கள்.

தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குகிற ஊழியக்காரர்கள் விமர்சிக்கப்பட்டு, சோம்பேறி என்று கூட அழைக்கப்படுகின்றனர். நீங்கள் ஒரே நேரத்தில் ஒரே ஒலிநாடாவை கேட்டால், பாருங்கள், நீங்கள் ஒரு ஊழியக்காராகக் கூட இருக்கவில்லை, நீங்கள் ஒரு ஸ்தாபனமாய், அல்லது ஒரு மனிதனை வழிபடுபவராக இருக்கிறீர்கள்.

நமக்கு முன்னிருந்த அந்த ஜனங்கள் எல்லாரும் தங்களுடைய சபைகளிலும் வீடுகளிலும் தொலைபேசி இணைப்புகளிலிருந்து, ஒரே நேரத்தில் சகோதரன் பிரான்ஹாம் பேசவதைக் கேட்டுக்கொண்டிருந்த யாவரும், அவர்களும் கூட ஒரு ஸ்தாபனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேவனுடைய திட்டத்திற்குப் புறம்பாக இருந்திருக்க வேண்டும். அவர்களோ வெட்கப்படாதிருந்தனர், நாமும் வெட்கப்படுகிறதில்லை.

சில நிமிடங்களில் நீங்கள் ஜனங்களுடன் பேசும்போது, அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்வீர்கள்: ஆம், நாம் இயங்கு பொத்தானை அழுத்துகிறோம். ஆம், நாம் நம்முடைய சபையில் அல்லது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ஒலிநாடாக்களை கேட்கிறோம். ஆம், ஒரே ஒலிநாடாவையே, ஒரே சமயத்திலே.

ஏன் மற்றவர்கள், “நாங்கள் ஞாயிறு காலை, ஞாயிறு இரவு, மற்றும் புதன் இரவு சபைக்குச் செல்கிறோம். எங்களுக்கு அப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான போதகர் இருக்கிறார்; அவர் அதை மிகத் தெளிவாகவும், நாங்கள் புரிந்துகொள்ளும்படியாக மிக எளிமையாகவும் கூறுகிறார். நான் அதை புரிந்துகொள்ளும்படியாக அவர் செய்தியை விளக்குகிறார். மணவாட்டியாய் இருக்க உங்களுக்கு ஒரு ஊழியம் இருக்க வேண்டும். சபையில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் கூறினதேயில்லை" என்று கூறுகிறார்கள்.

அப்படியானால் மிக முக்கியமான காரியம் என்று நீங்கள் எதைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? பிரசங்கிமார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையா, சகோதரன் ஜோசப் என்ன சொல்கிறார் என்பதையா, அல்லது ஒலிநாடாவில் தேவனுடைய சத்தம் என்ன கூறுகிறது என்பதையா? உங்களுடைய முற்றிலுமானது என்ன? ஒலிநாடாவில் என்ன உள்ளது என்பதா அல்லது வேறு யாரோ ஒருவர் என்ன கூறுகிறார் என்பதா?

ஊழியம் அற்புதமானதுதான், வார்த்தையில் உள்ளதே. நமக்கு அவைகள் தேவை. ஆனால் மிக முக்கியமானது, பிரசங்கமா அல்லது ஒலிநாடாக்களா?

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் சபை வாழ்க்கையில் ஒலிநாடாக்கள் மிக முக்கியமான காரியமல்லவென்றால், அப்பொழுது ஏதோ தவறு உள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத் திட்டத்திலிருந்து விலகியிருக்கிறீர்கள். அந்தத் திட்ட ஒழுங்கிற்கேத் திரும்பி வாருங்கள்.

ஒரு மனிதன் எப்போதாவது தேவனை சந்திக்கிறபோது; ஏதோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட கிரியையினாலோ, அல்லது ஏதோ ஒரு வகை உணர்ச்சி மிகுதியினாலோ, அல்லது ஏதோ ஒரு மதப் போதகம் அல்லது கோட்பாடு, அல்லது தனக்கான ஒரு-ஒரு ஆறுதலாக அவன் ஏற்றுக்கொண்டுள்ள ஏதோ ஒரு கொள்கையோ அல்ல, ஆனால் மோசே செய்ததுபோல உண்மையாகவே அவன் வனாந்திரத்தின் பின்பக்கத்திற்கு வந்து சர்வ வல்லமையுள்ள தேவனோடு முகமுகமாய் சந்தித்து, அந்த சத்தம் உங்களிடத்தில் பேச, அது தேவனுடைய வார்த்தையுடனும், இந்த நேரத்துக்குரிய வாக்குத்தத்துடனும் சரியாக இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறதாயுள்ளதே! பாருங்கள், நீங்கள் அதைக் குறித்து வெட்கப்படுவதில்லை, அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறது.

நம்முடைய நாளில், அந்த பாரம்பரியத் திரையோ கிழிக்கப்பட்டுள்ளது. இதோ அக்கினி ஸ்தம்பம் நின்று, இந்த நாளுக்கான வார்த்தையை வெளிப்படுத்துகிறது. தெய்வத்துவம் மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. இந்நாளுக்கான நம்முடைய ஷெக்கினா மகிமை. மானிட சரீரத்தில் திரையிடப்பட்ட, தேவன் நின்று நமக்கு முன்பாக பேசுகிறார்.

மோசே வார்த்தையை உடையவனாய் இருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், வார்த்தையானது வெளிப்படுத்தப்பட்ட பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். புரிகிறதா? ஆனால் வார்த்தையானது அறிவிக்கப்படும்படி அவனுக்குள் இருந்தபோது, அவன் தேவனாய் இருந்தான்; பாருங்கள், அப்பொழுது அவன் மோசேயாயிருக்கவில்லை. அவன் அந்த காலத்திற்கான கர்த்தருடைய வார்த்தையை உடையவனாய் இருந்தான்.

இந்த ஞாயிற்றுக்கிழமை ரெபெக்காள்களாகிய நமக்கு என்ன ஒரு கிறிஸ்துமஸாக இருக்கும். நாள் முழுவதும், நாள் முழுவதும் வெவ்வேறு நேரங்களிலுமே. நம்முடைய எலியேசர் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைப்பதை நாம் கேட்டுக்கொண்டு, நாம் வெட்கப்படவில்லை என்றே அவரிடம் சொல்லிக்கொண்டிருப்போம்.

"அவருடைய பிரசன்னத்தால்" நிரப்பப்பட்ட, ஒரு அற்புதமான கிறிஸ்துமஸை கர்த்தர் உங்களுக்கு அளிப்பாராக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்தி: 65-0711 வெட்கப்படுதல்

வேதவாக்கியம்: பரி. மாற்கு 8:34-38