
அன்புள்ள விலையேறப்பெற்றதை ஆய்பவர்களே,
இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நமக்குள் பொங்கி வழிந்துகொண்டிருக்கும் வெளிப்படுத்தலின் ஆர்ட்டீசியன் ஊற்று ஒன்று உண்டு. இந்தச் செய்தியை நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் கேட்டிருக்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் எப்பொழுதும் விசுவாசித்து வருகிறோம், ஆனாலும் இப்பொழுது அது இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நமக்குள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிற தேவனின் இரகசியமான காரியங்களை நாம் புசித்துக்கொண்டிருக்கிற காலமாய் இப்பொழுது இது உள்ளது, இப்பொழுதே அந்த நேரமாய் உள்ளது. ஜனங்கள் சிரிக்கிற காரியமே நாம் ஜெபம் செய்கிற காரியத்தைக் குறித்துதான். ஜனங்கள் "பைத்தியம்" என்று அழைக்கும் காரியத்தை நாம் "மகத்தானது!" என்று அழைக்கிறோம். அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு ஒரே ஒரு அருளப்பட்ட வழி மாத்திரமே உண்டு என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், அது இயங்கு பொத்தானை அழுத்துவதே.
ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நாம் மறைவான மன்னாவை, ஆவிக்குரிய ஆதாரத்தைப் பெற்றுக்கொண்டோம், அதாவது இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் தம்மை ரூபகாரப்படுத்துகிற, இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலின் நன்மை மற்றும் கிருபையின் பேரில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.
மணவாட்டி கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், அது அவருடைய பரிபூரண சித்தம் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்துகிறார். அது நாம் என்ன நினைக்கிறோம் என்பதையே அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதல்ல, அது என்ன பொருள்படுகிறது என்று நாம் நினைக்கிறோம் என்பதுமல்ல, அவர் கூறிக்கொண்டிருக்கிறது சரியாகத்தான் இருக்கிறது, மற்றவர்களால் அதை எளிதாக புரிந்துகொள்ள முடியவில்லை; அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றனர். தேவன் அதை மறைத்திருக்கிறார். அவர்கள் அதை சரியாகப் பார்க்கிறார்கள், ஆனால் அதைப் புரிந்துகொள்ளுகிறதில்லை. நம்மைப் பொறுத்தவரை, அதுவோ நாம் புரிந்து கொள்ளுகிற எல்லாமுமாயிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் நாம் கூடிவரும்போது, அவர் என்ன சொல்லப் போகிறார் மற்றும் நமக்கு என்ன வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் கேட்பதற்கு நம்மால் காத்திருக்க முடியவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் நமக்கு சில சிறிய மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகளை தரப் போவதில்லை, அவர் நமக்கு முழு தங்கத்தையே அளிக்கப்போகிறார் மற்றும் நாங்கள் அதைப் பெறுவதை உறுதிசெய்ய மீண்டும் மீண்டும் அதை முழங்குவார்.
தீர்க்கதரிசி நீண்ட காலமாக தேவனுடைய சமுகத்தில் இருந்து வந்தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளோ, அல்லது வேறு எந்த காலத்திலுமே, அவர்கள் வார்த்தையாகி, அவர்களுடைய செய்தி வார்த்தையாகவே மாறுகின்ற வரையில், அவர்கள் தேவனுடைய சமூகத்தில் ஜீவித்தனர். மேலும், நினைவிருக்கட்டும், அவன், "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறினான்.
ஒரு மனிதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையாகவே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, செய்தியும் செய்தியாளனும் ஒன்றாகவும், ஒரே விதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம்.
அப்பொழுது ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, அவனும் செய்தியும் ஒன்றே.
பரலோகம் அதை அறிவிக்கிறது, வேதாகமம் அதை அறிவிக்கிறது, செய்தி அதை அறிவிக்கிறது, எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது.
தீர்க்கதரிசி, வார்த்தை, செய்தி; செய்தியாளர், செய்தி மற்றும் செய்தி, ஒரே மாதிரியாக இருந்தது.
எந்த மனிதனும் அவனுடைய செய்தியும் ஒன்றாயிருக்கிறது.
ஒரு தங்கச் சுரங்கத்தைப் பற்றி பேசுவோம்.
நீங்கள் ஏதேனும் வெளிப்பாட்டை உடையவராய் இருந்தால், அவர் அதை அழகாக தெளிவுபடுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்; செய்தியும் செய்தியாளரும் ஒரே மாதிரியாயிருக்கின்றனர். அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா…அதையே!! அதன்பின்னர் நீங்கள் செய்தியிலிருந்து செய்தியாளரை, ஊழியர்களை பிரிக்க முடியாது.
நீங்கள் செய்தியாளரை உங்களுடைய சபையில் அவர் கொண்டு வந்த செய்தியோடு அந்த ஸ்தானத்தில் வைக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் முழு செய்தியையும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் மணவாட்டி அல்ல.
ஓ! மீண்டும், இது செய்தியையும் செய்தியாளரையும் ஒன்றாக்குகிறது. ஆவிக்குரிய ஆகாரம் ஆயத்தமாக இருக்கிறது, அது இப்பொழுது இந்த காலமாய் உள்ளது.
நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய வேளையை விசுவாசிக்கிற, நமக்காக, அவர் அனுப்பிய செய்தியாளர், அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும்; இந்த காரியங்கள் மறைவான ஆகாரமாய் இருக்கின்றன.
இந்தச் செய்தியை நாம் எப்படியாய் நேசிக்கிறோம், மேலும் “இதற்குமேல் வேறு எப்படி இருக்க முடியும்?” என்று நீங்கள் நினைக்கும்போது, நாம் இப்பொழுது யார் என்று சொல்வதன் மூலம் அவர் அதில் ஒரு தலைக்கல்லைப் பொருத்துகிறார்.
மணவாட்டியான, ஜீவனுள்ள சபையில் ஜீவனுள்ள தேவனின் அதிகாரத்தை நீங்கள் காணவில்லையா? வியாதியஸ்தர் சுகமாக்கப்படுகின்றனர், மரித்தோர் உயிரோடெழுப்பப்படுகின்றனர், முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் காண்கிறார்கள், சுவிசேஷம் அதனுடைய வல்லமையோடு புறப்பட்டுச் செல்கிறது, ஏனென்றால் செய்தியும் செய்தியாளனும் ஒரே விதமாக இருக்கிறார்கள். வார்த்தை சபையில், அந்த நபரில் இருக்கிறது.
அந்த வார்த்தை நமக்குள் இருக்கிறது. நாம் தான் செய்தி. நாம் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். இந்த செய்தியும் நாமும் ஒன்றாயிருக்கிறோம்!! மேலும் மேலும் மேலும் பொங்கி வழிவதைக் குறித்தேப் பேசுகிறோம்.
மணவாட்டி கணவனின் பாகமாக இருக்கிறாள், சபை அதேவிதமாக கிறிஸ்துவைப் போன்றுள்ளது. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்."
நாம் கணவனின் பாகமாக இருக்கிறோம்!!
நாமும் அதே விதமாக கிறிஸ்துவைப் போன்றவர்கள்!!
இப்பொழுது இது மகத்தானதாய் தொனிக்கிறது என்றும், இந்த மேற்கோள்களை வெறுமனே படிப்பதே உங்களுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி: 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் என்ற செய்தியை நாம் கேட்கும் போது, தேவனுடைய சத்தம் அவைகளை உங்களுக்கு உதட்டிலிருந்து செவிக்கு சொல்வதைக் கேட்கும் வரை காத்திருங்கள்.
நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். உங்களால் சேர்ந்துகொள்ள முடியாவிட்டால், எந்த நேரத்திலாவது இயங்கு பொத்தானை அழுத்தி, எந்த செய்தியையாவது, எங்காவது, தேவனுடைய செய்தியாளர் உங்களுக்கு தேவனுடைய செய்தியைக் கொண்டு வருகிறதைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
இன்றைக்கும் அது அவ்விதமாகவே உள்ளது, பஞ்ச காலத்தில் பிள்ளைகளை ஆதரிக்கும்படி, தேவனுடைய செய்தியை பின்தொடருகிற, ஜீவ அப்பத்தையே அவர்கள் புசிக்கிறார்கள்.
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
1 இராஜாக்கள் 17:1-7
ஆமோஸ் 3:7
யோவேல் 2:28
மல்கியா 4:4
லூக்கா 17:30
பரி. யோவான் 14:12