
அன்புள்ள பிழையற்ற வார்த்தை விசுவாசிகளே,
இந்த ஏழு சபைக் காலங்களை கேட்பதும் வாசிப்பதும் எவ்வளவு அருமையாக உள்ளது. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் படிக்கும் ஒவ்வொரு அதிகாரத்திலும், அவர் நமக்கு அதிகமான வெளிப்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சபைக் காலத்தினூடாகவும் வருகையில்…மூல வார்த்தையுடன் தரித்திருந்த, அவருடைய மணவாட்டியை நாம் தாமே தெளிவாகப் பார்க்கிறோம்.
காலங்கள் முழுவதும் நாம் இரண்டு ஆவிகளை தெளிவாகக் காண்கிறோம்; சாத்தானின் வஞ்சகமும் பொய்யும், தேவனுடைய வார்த்தையை சுற்றித் திரித்து, வஞ்சித்து, ஜனங்களை கறைபடுத்தி, ஜெயங்கொள்கிறான். ஆனால் எல்லா நேரத்திலும் தேவனுடைய விசுவாசமுள்ள சிறு ஜனக் குழுவான, அவருடைய மணவாட்டி, ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொண்டிருந்தாள்.
நீங்கள் வார்த்தையுடன் தரித்திருக்க வேண்டும் என்ற, ஒரு நிலையான எச்சரிக்கையே எப்பொழுதும் ஜனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இரண்டாவது அந்த வார்த்தையிலிருந்து நீங்கள் விலகிச் செல்லும்போது, ஆதியில் ஏவாள் செய்ததுபோல; நீங்கள் சாத்தானின் பெரும் வலையில் சிக்கிக்கொள்கிறீர்கள். அவள் வார்த்தையைப் பயன்படுத்தத் தவறிவிட்டாள். வார்த்தைக்கு நேரடியாக கீழ்ப்படியாமல் ஆதாம் தவறிவிட்டான். ஆனால் இயேசு, தனது சொந்த ஜீவியத்தில், அவர்தாமே போராடி, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் ஜெயங்கொண்டார்.
நாம் அவருடைய சிங்காசனத்தில் அமர விரும்பினால், நாம் அந்த ஜீவிக்கும் வார்த்தையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நம்முடைய ஜெபங்களோ, உபவாசங்களோ, அல்லது நமது மனந்திரும்புதலோ கூட நமக்கு அந்த பாக்கியத்தைப் பெற்றுத் தராது. இது வார்த்தையான மணவாட்டிக்கு மட்டுமே அளிக்கப்படும்.
நான் கூற விரும்புவதோ மிக அதிமாகவே உள்ளன, மேலும் உங்கள் ஒவ்வொருவருடனும் மேற்கோள்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்; அது முடிவற்றது. இந்தச் செய்தி உங்கள் ஒவ்வொருவரின் இருதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என்பதையும், நான் நேசிப்பது போலவே, நீங்களும் ஒவ்வொரு வார்த்தையையும் நேசிக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். நாம் செய்ய விரும்புவதெல்லாம் அதைப் பற்றிப் பேசி ஐக்கியங்கொள்வதுதான். ஆம், நாம் ஒலி நாடாக்களைக் கேட்கிற ஜனங்களாய் இருக்கிறோம் என்று உலகம் அறிந்துகொள்ள நாம் விரும்புகிறோம். ஆம், நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே மணவாட்டியைப் பரிபூரணப்படுத்தப்போகிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோம். ஆம், ஒலிநாடாக்கள் மணவாட்டியை இணைக்கும். ஆம், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே தேவனுடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது. ஆம், நான் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறேன்.
நான் பல கடிதங்களில் இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் நன்றியுள்ளவனாகவும், மிகவும் உறுதியாகவும் இருக்கிறேன்...இது சந்தேகத்திற்கு இடமில்லாதது, இது அவருடைய மணவாட்டிக்கான தேவனுடைய திட்டம்.
நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் வியப்பூற்று ஆச்சரியப்படுவதோ, நாம் கேட்டுக்கொண்டிருப்பதை கேட்கவும் அல்லது படிக்கவும், புரிந்துகொள்ளவும் எப்படி அவர்களால் முடியவில்லை என்பதுதானே? அது அங்கேயே, ஒவ்வொரு ஒலிநாடாவிலும் இருக்கிறது. அது: "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?" என்று இயேசு நிக்கொதேமுவிடம் கூறினதுபோலவே அவர்களிடத்தில் கூறுவதுபோன்றே என்னை உணரச் செய்கிறது.
தூதன் அதை எவ்வளவு எளிமையாகச் கூறுகிறார் என்பதைக் கேளுங்கள்.
மனித இயல்பின் அடிப்படையில் மாத்திரமே, எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தின் ஒரு சிறிய குறிப்புகளில் கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர்.
மனித இயல்பின் அடிப்படையில் மாத்திரமே, எந்த ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலும் தேவைப்படாது, ஒரு பெரிய உபதேசத்தின் ஒரு சிறிய குறிப்புகளில் கூட இரண்டு மனிதர் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எல்லோரும் அறிவர்.
அவர்கள் கூறுவதை ஜனங்கள் செய்யவில்லையென்றால், அல்லது அவர்கள் அவைகளைப் பின்பற்றாமல் விட்டுவிட்டால், அப்பொழுது அழிவானது பின்தொடரும் என்று கூறுவதை அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஒரு உண்மையான தீர்க்கதரிசி எப்பொழுதும் ஒருவரை வார்த்தைக்கு வழிநடத்தி, ஜனங்களை இயேசு கிறிஸ்துவிடம் ஒன்றுசேர்ப்பார், மேலும் அவர் ஜனங்கள் தனக்கோ அல்லது அவர் கூறுவதற்கோ பயப்படும்படி சொல்லமால், வார்த்தை என்ன சொல்கிறது என்பதற்கே பயப்பட வேண்டும் என்று கூறுவார்.
வார்த்தை என்ன கூறுகிறது? நான் உங்களுக்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். சத்தத்தின் நாட்களில். வார்த்தை தீர்க்கதரிசியாக ஒருவரே இருப்பார்…ஒரே ஒருவர்...ஏனென்றால் தேவன் அந்த ஒருவரிடம் மாத்திரமே வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளார். அவரே என்னுடைய மணவாட்டியை திரும்பளிக்கும்படியான ஒருவராயிருப்பார்.
பல சத்தங்கள், பல கருத்துக்கள் மற்றும் மேற்கோள்களுடன், ஒருவர் எப்படி உறுதியாக இருக்க முடியும்?
இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப்போகிறபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்?
பிழையற்ற வல்லமையோடுள்ள ஒருவருக்கே, அந்த ஒருவருக்கே மணவாட்டி செவிகொடுக்க விரும்புகிறாள்; ஏனென்றால் அவரே மணவாட்டியைத் திரும்பளிக்கும்படியான ஒருவராயிருப்பார். அவர் வேறு கருத்துகளைப் கொண்டிருக்கமாட்டார், அவர் வார்த்தையாயிருக்கிறார்.
கேள்வி: கர்த்தாவே, நாங்கள் அறிந்து கொள்ள விரும்புவதோ, பிழையற்ற வார்த்தைகளை கொண்டிருக்கும் அந்த நபர் யார் என்பதே?
அதை யார் உடையவராயிருப்பார் என்பதை நான் உங்களுக்கு சொல்வேன். அது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட, அல்லது ஏனோக்கு முதல் இந்நாள் வரையிலும் எல்லா காலங்களிலும் எந்த தீர்க்கதரிசியும் ரூபகாரப்படுத்தப்படாத விதத்தில் இன்னும் அதிகமாக முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும், ஏனெனில், இந்த மனிதன் தலைக்கல் தீர்க்கதரிசன ஊழியத்தை அவசியம் பெற்றிருப்பார், தேவன் அவரைக் காண்பிப்பார். அவர் தனக்காக பேசவேண்டிய அவசியமே இருக்காது, தேவன் அடையாளத்தின் சத்தத்தினால் அவருக்காக பேசுவார். ஆமென்.
பதில்: வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாகிய உங்களை இன்றைக்கு நான் ஊக்கப்படுத்தட்டும். நீங்கள் ஏமாற்றப்படவோ, நீங்கள் ஏமாற்றமடையவோ முடியாது. நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா? எந்த மனிதனும் உங்களை ஏமாற்ற முடியாது. பவுலே தவறாயிருந்திருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்ட எவரையும் ஏமாற்றியிருக்க முடியாது. முதலாம் சபைக் காலமாகிய எபேசுவிலும் கூட, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஏமாற்றப்பட முடியவில்லை. அவர்கள் கள்ள அப்போஸ்தலர்களையும், கள்ள தீர்க்கதரிசிகளையும் சோதித்தறிந்து, அவர்களை பொய்யர் என்று கண்டு, அவர்களை புறம்பாக்கிப்போட்டனர்.
மகிமை மணவாட்டியே.... நீங்கள் அவருடைய ஆடுகள், நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருக்குப் பின்செல்கிறீர்கள். நீங்கள் ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறீர்கள்!!
இந்த வார்த்தைகளை அறிவதை விட மகத்தானது எதுவுமில்லை. உங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் அறிய, நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் வந்துவிட்டன. மணவாட்டி தன்னை அடையாளங் கண்டுகொண்டு அவருடன் ஒன்றாகிக்கொண்டிருக்கிறாள்; நாம் தேவனுடைய புதிய சிருஷ்டிப்பாயிருக்கிறோம்.
நீங்கள் எங்கே கூடினாலும், ஞாயிற்றுக்கிழமை தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள் என்று, நான் மீண்டும் ஒருமுறை உங்களோடு மன்றாடுகிறேன். நீங்கள் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் வரை நீங்கள் எந்த செய்தியைக் கேட்டாலும் பரவாயில்லை. அந்த சத்தம் தேவன் அழைத்த சத்தமாயும், அவருடைய மணவாட்டியை ஒன்று கூட்டி திரும்ப அளிக்கும்படிக்கு தெரிந்துகொள்ளப்பட்டதாயுமிருந்தது.
லவோதிக்கேயா சபைக் காலம் 60-1211E என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எல்லா சபைகளிலுமுள்ள, எல்லா ஜனங்களுமாகிய, நீங்களும் எங்களோடு கேட்கும்படிக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்