
அன்பான விசேஷித்த ஜனங்களாயும், வினோதமானவர்களாயும், அந்நியர்களாயும், ஆவிக்குரிய ஆசாரியத்துவமும், ராஜரீக சந்ததியாயுமிருப்பவர்களே,
முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தி, அவர் தம்முடைய மணவாட்டிக்கு என்னே ஒரு மகிமையான நேரத்தைக் கொடுத்துகொண்டு வருகிறார். நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும் நாம் இதற்கு முன் ஒருபோதும் கேட்காததுபோலவே தோன்றுகிறது. பரலோகத்திலிருந்து இறங்கி வரும் புதிய மன்னாவை நாம் விருந்துண்ணும்போது, நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் சந்தோஷத்தால் நிறைந்துள்ளன. அவர் நமக்கு வெளிப்படுத்துதலுக்குப் பிறகு வெளிப்படுத்துதலை போஷிக்கும்போது, அது விரைவில் வரவிருக்கும் நம்முடைய கலியாண விருந்தின் ஒரு முன்னோட்டத்தைப் போன்றே உணரச் செய்கிறது.
அவருடைய நாமத்தைத் துதிக்கும், நம்முடைய உதடுகளின் கனிகள் மூலம், தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளை செலுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய ஸ்தானங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல எடுத்துள்ளோம்.
அவர் நம்மை உன்னதங்களிலே ஒன்றாக இணைத்து, அவருடைய பரிசுத்த ஆவியை நம்மீது ஊற்றி, அவருடைய அதிசீக்கிர வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளார். நாம் சிந்திக்கக்கூடியது அவ்வளவுதான். நாம் நம்முடைய சிந்தனைகளில் கொண்டிருப்பதும் அவ்வளவுதான். நாம் செய்ய விரும்புவதெல்லாம் வார்த்தையைக் கேட்பதுதான். நாம் அவருடைய மணவாட்டி என்று அவர் நம்மிடத்தில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருளப்பட்ட வழியோடு தரித்திருப்பதன் மூலம் இதுவே அவருடைய பரிபூரண சித்தமாக இருக்கிறது.
நாம் அவருடைய ஒலிநாடா ஊழிய பிரிவில் உள்ள இராணுவ வீரர்கள், நாம் அதைக் குறித்து மிகவும் பெருமை கொள்கிறோம். இது ஒரு கெளரவச் சின்னம். ஆம், நாம் அவர்களில் ஒருவர் என்று அதை சத்தமிட்டு உலகத்திற்கு சொல்ல விரும்புகிறோம்.
நம்மை போஷிக்கும்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆகாரத்தை அவர் அருளியுள்ளார். தேவனுடைய மன்னாவான அவர்தாமே தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசி, நாம் அவருடைய சேனையில் இருக்கிறோம் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
ஆத்துமா மற்றும் சரீரமாகிய இரண்டின் தன்னிச்சையான சுகமளித்தல்கள் வரை, பரிசுத்த ஆவியானவர் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் நிலைநிறுத்தியுள்ளதால், நாம் அப்பேர்ப்பட்ட ஒத்திசைவில் அந்த மகத்தான பரலோகத்தின் காப்புக் குடையின் கீழ் கூடிவருகிறோம்.
நாம் தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு பிசாசையும் அவனுடைய வல்லமையையும் தோற்கடிக்கிறோம். நாம் அந்த வார்த்தையால் அவனை துண்டு துண்டாக வெட்டுகிறோம். நம்முடைய தலைமை தளபதி நம்மிடம்: “நீங்கள் வார்த்தையாயிருக்கிறீர்கள். பயப்படாதீர்கள். பிசாசிடம் நேராகச் சென்று, 'இது எழுதப்பட்டுள்ளதே’ என்று கூறுங்கள்" என்றே நம்மிடம் சொன்னார்.
அவருடைய இராணுவ வீரர்களாக அவர் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையால் அரணிடப்பட்ட, பயிற்சியில் இருந்து வருகிறோம். நாம் இப்போது உடையணிந்து யுத்தத்திற்கு தயாராகிவிட்டோம். நம்முடைய 5 நட்சத்திரங்களைப் பெற்ற தளபதி என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டுள்ளார்: என்னுடைய ஒலிநாடா உபதேசத்தோடு சரியாக தரித்திருங்கள் என்பதேயாகும்.
ஒலிநாடா கூறுகிறதையே கூற, நீங்கள் நிச்சயமுள்ளவர்களாயிருங்கள். வேறொன்றையும் கூறாதீர்கள், புரிகிறதா? காரணம், இதை நான் என் சுயமாய் கூறுகிறதில்லை. இதுவோ அவர் இதைக் கூறுகிறதாய் உள்ளது, நீங்கள் பாருங்கள். அநேக சமயங்களில், ஜனங்கள் எழும்பி, "பாருங்கள், இதற்கு இது-இதுதான் அர்த்தம் என்று இன்னார்—இன்னார் கூறினார்” என்று கூறுவதால், குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஒலிநாடா அதைக் கூறுகிற விதமாக அதை அப்படியே-அப்படியே விட்டுவிடுங்கள்.
இது வில்லியம் பிரான்ஹாம் ஒலிநாடாக்களில் நம்மிடம் கூறிக் கொண்டிருப்பது அல்ல, இது தேவன் தம்முடைய மணவாட்டியிடம் ஒலிநாடாக்களில் கூறிக்கொண்டிருக்கிறதாயுள்ளது. இவைகள் அவருடைய கட்டளைகள். உங்களுடைய 5 நட்சத்திரங்களைப் பெற்ற தளபதியின் இந்த உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து அது இருக்கிறவிதமாக அதை விட்டுவிட ஒரே வழி, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதேயாகும்.
நாம் தேவனுடைய சேனையில் இருக்கிறோம், எனவே நாம் வார்த்தைக்கு வார்த்தை நம்முடைய கட்டளைகளுக்குக் இந்த விதமாய் கீழ்ப்படிய வேண்டும். நாம் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நாம் வீரமுள்ள மனிதர்களாயும், விசுவாச புருஷர்களாயும், வல்லமையுள்ள மனிதர்களாயும், புரிந்துகொள்ளுகிற மனிதர்களாயும், வெளிப்பாட்டின் மனிதர்களாயும் இருக்கிறோம்.
நாம் மீண்டும் பிதாவுடன் பரிபூரண ஐக்கியத்தில் இருந்துகொண்டு, நமக்கு எதிரான பாவத்தின் நினைவுகூருதலேயில்லாமல், பிளவின் மறுபக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். அவருடைய திருப்பளிக்கப்பட்ட ஆதாம்.
இது மீண்டும் ஒருமுறை தேவன் எளிமையில் இருப்பதாகும். இது எல்லோருக்குமானதாயில்லாமல், அவருடைய மணவாட்டிக்கு மாத்திரமேயானதாய், நாம் அதை தெளிவாகவும், வெளிப்படையான பார்வையிலும் காண்கிறோம்.
நான் மீண்டும் ஒருமுறை ஏழு முத்திரைகளைக் கேட்க மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் அவருடைய வார்த்தையின் மகத்தான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வோம்.
இன்னும் பலவற்றை நமக்கு வெளிப்படுத்த அவர் இந்த நாள் வரை காத்திருந்திருக்கிறார். நமக்குத் தேவையான அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, நம்முடைய விரலின் ஒரு தொடுதலினால் கேட்கும்படிக்கு கிடைக்கக்கூடியதாகவே உள்ளது.
இந்த செய்தியானது அந்த ஏழு இடி முழக்கங்கள் மணவாட்டியை பரிபூரணபடுத்தும் என்பதேயாகும்; ஏனென்றால், தேவனுடைய எல்லா இரகசியங்களும் மணவாட்டிக்கு நம்முடைய 7-ம் தூதனாகிய செய்தியாளரால் வெளிப்படுத்தப்படும்.
உலக சரித்திரத்திலேயே இது மிகவும் மகிமையான நேரமாயுள்ளது. நாம் அவருடைய மணவாட்டிக்கான அவருடைய வருகையின் விளிம்பில் இருக்கிறோம். வேதவாக்கியங்களில் உரைக்கப்பட்டிருந்த இந்த எல்லா காரியங்களையும் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது; நடுப்பகலில் சூரியன் அஸ்தமித்தல் போன்று, சம்பவிக்கும்படியான எல்லா விதமான காரியங்களையுமே. ஆனால் அது ஏற்கனவே நடந்துவிட்டது, அவர்களுக்கோ அது தெரியவில்லை.
அது மறை பொருளான ஏழு இடி முழக்கங்களால் முத்தரிக்கப்பட்டுள்ளது என்பது, நினைவிருக்கட்டும். புரிகிறதா?
ஏழு முத்திரைகளின் பேரில் தம்முடைய மணவாட்டிக்கு தேவனுடைய இடி முழக்கம் அதிகமாக வெளிப்படுத்துவதை கேட்கும்படிக்கு மீண்டும் ஒருமுறை நாம் ஒன்று கூடும்போது மகத்தான காரியங்கள் சம்பவிக்கப்போகின்றன.
63-0317M தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் தம்மை அவ்விதமே வெளிப்படுத்துதல் என்ற செய்தியுடன் இந்த சிறந்த செய்தித் தொடரைக் கேட்க ஆரம்பிக்கப்போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.பிரான்ஹாம் கூடாரத்தையும், ஜனங்களையும் சகோதரன் பிரான்ஹாம் தேவனண்டை மீண்டும் மறுப்பிரதிஷ்டை செய்யும்போது, நாமும் நம்மையே, நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், அல்லது நாம் எங்கு கூடுகின்றோமோ அங்கே, அவரிடத்தில் மறுப்பிரதிஷ்டை செய்துகொள்வோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
1 நாளாகமம் 17:1-8
ஏசாயா 35:8 / 40:1-5 / 53:1
மல்கியா 3-வது அதிகாரம்
பரி. மத்தேயு 11:10, 11:25-26
பரி. யோவான் 14:1-6
1 கொரிந்தியர் 13-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 21-வது அதிகாரம்
பிரசங்க மொழிபெயர்ப்புகள்