
அன்புள்ள மன்னா பிரியர்களே,
ஒரு எலும்போ அல்லது ஒரு விதையோ இல்லாதிருக்கிருக்கிற ஆகாரத்தை நாம் புசிக்க முடிகின்ற காரணத்தால் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். முழுவதும் பரலோகத்தின் இனிமையினால் நிறைந்திருக்கும் "மன்னா," என்று அழைக்கப்படுகின்ற அப்பங்கள், பரலோகத்திலிருந்தே இறங்கி வருகின்றன.
நாம் விதைகளேயில்லாத இந்த புதிய மன்னாவைப் பெற்றுக்கொள்ள கூடிய ஒரு இடம் மாத்திரமே உண்டு என்பதை ஆவிக்குரிய வெளிப்பாட்டினால், அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்; அது அவர் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற தேவனுடைய சத்தத்தை கேட்பதினாலேயாகும்.
சபைகள் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு காலத்திலும் அவருடைய நிலையான வேண்டுகோளாயுள்ளது. இந்தக் கடைசி காலத்தில், அவருடைய வேண்டுகோள் மற்ற எந்த காலத்தைக் காட்டிலும் அதிக வலியுறுத்தலாயுள்ளது; ஏனெனில் இது கர்த்தருடைய வருகையின் நாளாயுள்ளது. நாம் அவருடைய உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று, முற்றிலும் துரிதத்தோடு, அவர் நம்மை எச்சரித்துள்ளார்.
ஓ, உலகில் பல சத்தங்கள் உள்ளன - பல பிரச்சனைகள் மற்றும் தேவைகள் கவனத்தைக் கவருகின்றன; ஆனால் ஆவியானவரின் சத்தத்தைப் போல பெருமதிப்புடன் கவனிக்கத்தக்க மிக முக்கியமான ஒரு சத்தம் ஒருபோதும் இருக்காது. ஆகையால், "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்."
ஆவியானவருடைய சத்தத்தைக் கேட்பது எவ்வளவு முக்கியமானது என்பது சபைகளுக்கு அவருடைய எச்சரிப்பாய் உள்ளது. அந்த சத்தத்தைக் கேட்கும் முக்கியத்துவத்தை ஜனங்களிடமிருந்து தடுக்க முயற்சிக்க, நிச்சியமாகவே அங்குதான் சத்துரு தாக்குவான்.
பல சத்தங்கள் உள்ளன என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். பல பிரச்சனைகள் மற்றும் தேவைகள், கவனத்தை ஈர்க்கின்றன, ஆனால் ஒருபோதும் மறக்க வேண்டாம், நீங்கள் அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்க வேண்டும்.
நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டேன், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்.
நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்பதே பதிலாய் உள்ளது.
இது அவருடைய மணவாட்டிக்கு மிகவும் தெளிவாக உள்ளது. இது மறைக்கப்பட்டிருக்கவில்லை, அது தெளிவாக உள்ளது; யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அவர் சொல்லாத ஒன்றை நான் ஜனங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை... நான் அதை உருவாக்கவில்லை. நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் என்ன என்பதை அவர் தெளிவாகச் சொல்கிறார். அவருடைய சத்தத்தைக் கேட்பது தேவனுடைய பரிபூரண சித்தமாயுள்ளது மற்றும் அவர் நமக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார்.
சகோதர சகோதரிகளே, உங்களுடைய போதகர்களுக்கு நீங்கள் செவிகொடுக்கக் கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஊழியக்காரர்களாய் இருந்தால் அவர்கள் போலியானவர்கள் என்றோ அல்லது தவறானவர்கள் என்றோ நான் கூறிக்கொண்டிருக்கவில்லை.
மணவாட்டிக்கு ஒரு உதவியாக இருக்கவும், மூல வார்த்தைக்கு திரும்ப உங்களைச் சுட்டிக்காட்டவும் கர்த்தர் எங்களை இங்கு வைத்துள்ளார். நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமாக உங்கள் முன் அந்த சத்தத்தை வைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு திரும்ப வேண்டும். முழுமையாக திருப்பளிக்கப்பட்ட ஆதாம், வார்த்தையின் பின்னால் அரணாக்கப்பட்டவர். தேவன் ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் ஆதாமிடம் உதட்டிலிருந்து செவிகேட்கப் பேசினார், இன்றைக்கும், அவர் அதே காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்.
நாம் இடைவெளியில் நின்று, “நாம் சகோதரர்கள்” என்று கூற வேண்டும். நாம் பிரிந்திருக்கவில்லை, நாம் யாவரும் ஒரே சரீரம்; நம்பிகையிலும், உபதேசத்திலும் நாம் ஒன்றாகவேயிருக்கிறோம், (வேதத்தின் உபதேசத்தில்.)
நாம் சகோதரர்கள். நான் சபைகளைப் பிரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை, மணவாட்டியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே காரியத்துடன் நம்மை ஒன்றிணைக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாம் யாவரும் எந்த ஒன்றோடும், அல்லது ஊழியர்களின் குழுவோடும் உடன்பட முடியாது; அவர்கள் எல்லோரும் வித்தியாசமாயும், வெவ்வேறு காரியங்களையும் கூறுகின்றனர். ஒருவர் மாத்திரமே ஏழாம் தூதனாகிய செய்தியாளராக இருக்கிறார். ஒரே ஒரு தேவனுடைய சத்தம்தான் உண்டு. அவருடைய மணவாட்டிக்காக ஒலிநாடாவில் அந்த சத்தத்தை தேவன் அருளியிருக்கிறார்.
நான் தெளிவாக இருப்பேன். என்னுடைய வெளிப்பாடு: ஒலிநாடாவில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது தேவனுடைய பரிபூரண சித்தம் என்பதே.
சாமுவேலின் நாட்களைப் போலவே, ஜனங்கள் அவரை அணுகி, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று சொன்னார்கள். அது அவருடைய இருதயத்தை துக்கப்படுத்தியது. அவர் தேவனிடம் சென்று அவர்கள் விரும்பியதை அவரிடம் சொன்னார். தேவன் சாமுவேலிடம், அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை, சாமுவேல், நான் அவர்களை ஆளக்கூடாது என்று, அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று சொன்னார்.
அவர் அவர்களை எப்படி ஆளுமை செய்து கொண்டிருந்தார்? அவருடைய தீர்க்கதரிசி, சாமுவேல் மூலமே. அதுவே அவருடைய பரிபூரண சித்தமாயிருந்தது, அவர்கள் அவரை புறக்கணித்துவிட்டனர். அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு திரும்பி வர வேண்டும். நீங்கள் 2 பரிபூரண சித்தங்களைக் கொண்டிருக்க முடியாது.
முழு மணவாட்டியும் ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றிணைவதை நான் எப்படியாய் விரும்புகிறேன். "நான்" அதைக் கூறிக்கொண்டிருப்பதால் அல்ல, ஆனால் தேவன் அதைச் செய்து கொண்டிருப்பதினாலே. இதுவே அவருடைய மணவாட்டியை ஒன்று கூட்டி கொண்டுவரும்படியான ஒரே காரியமாயுள்ளது.
ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி மணவாட்டியின் ஒரு பாகத்தோடு: பத்து கன்னிகைகளும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களும் 60-1211M என்ற செய்தியை செவிகொடுத்துக் கேட்க வரும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.
உங்களால் எங்களுடன் சேர முடியாவிட்டால், இந்த ஞாயிறு காலை உங்களுடைய சபையில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உங்களுடைய போதகரை ஊக்குவியுங்கள். உலகம் முழுவதும் உள்ள மணவாட்டி, ஒவ்வொரு சபையிலும், ஒவ்வொரு வீட்டிலும், அல்லது நீங்கள் எங்கிருந்தாலும், பரலோகத்தில் இனிமையினால் நிறைந்த புதிய மன்னாவைக் கேட்பதை, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்