ஞாயிறு
25 ஜூன் 2023
62-1230E
ஐயா,இதுதான் முடிவின் அடையாளமா?

அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையான மணவாட்டியே,

எந்தத் தீர்க்கதரிசியும், எந்த அப்போஸ்தலனும், ஒருபோதும், எந்தக் காலத்திலும், நாம் இப்பொழுது வாழும் காலத்தைப் போன்ற இப்படிப்பட்ட ஒரு காலத்தில் எப்போதும் வாழ்ந்ததில்லை. இதுவே முடிவாயுள்ளது. அக்கினி ஸ்தம்பம் திரும்பவும் வந்துள்ளது. இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பம்; சவுலை தமஸ்குவிற்குச் செல்லும் அவனுடைய வழியில் கீழே வீழ்த்திய அதே ஒன்று. அதே ஒன்று அதே வல்லமையுடன் வந்து, அதே காரியங்களை செய்துகொண்டு, அதே வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டு, வேதாகமத்தோடு வார்த்தைக்கு வார்த்தை தரித்திருக்கிறது!

மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் யாவும் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. நீங்கள் கவனித்தீர்களா, எல்லா இரகசியங்களுமே. புதிதானது ஒன்றுமே இல்லை, எதுவுமே விடப்பட்டிருக்கவில்லை, வேறு எவரிடமிருந்தும் எதுவும் வெளிப்படப் போவதுமில்லை; அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளருக்கு எல்லாமே வெளிப்படுத்தப்பட்டு, அவருடைய மணவாட்டியாகிய நமக்கு, ஒலிநாடாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மணவாட்டிக்குத் தேவையாயிருப்பதெல்லாம் இதுவே; மீண்டும் கவனியுங்கள், மணவாட்டிக்கு தேவையாயிருக்கிற அனைத்துமே. மற்றவர்களுக்கு மற்ற காரியங்கள் தேவை, அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு என்ன தேவையோ அது ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஒலிநாடாவில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது நமக்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நாமே தேவனாகிய கர்த்தர் அவருக்கு அளித்த சபையாய் இருக்கிறோம். இது அவருடைய தலைமையகம். இங்கேதான் அவர் நம்மை தரித்திருக்கச் சொன்னார். ஒரு கட்டிடத்தில் அல்ல, ஒலிநாடாக்களிலே. நாமே விசுவாசிக்கிற அந்த ஜனக் குழுவாயும், பசியாயிருந்துகொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொண்டிருக்கிறவர்களாயும் இருக்கிறோம். அவரே நம்மை இங்கே தரித்திருந்து, அந்த வெள்ளைக் கல்லை, பாறையை, ஒலிநாடாக்களில் உள்ள வார்த்தையை நோக்கிப் பார்க்கும்படிக்குச் சொன்னார்.

பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் அவரிடம் பேசி, “ஆகாரத்தைக் கொண்டு வா. அதை உள்ளே சேமித்து வை. அவைகளை இங்கே வைத்திருப்பதற்கான ஒரே வழி, அவர்களுக்கு ஆகாரத்தை அளிப்பதற்காகவேயாகும்" என்றுரைத்தது. வேறு எதையாவது தேடுங்கள், அல்லது வேறொருவரிடமிருந்து புதிய வெளிப்பாடுகள் வரும் என்று அவர் கூறவில்லை; ஒலிநாடாவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாரத்தை நோக்கிப் பார்த்து, அங்கேயே தரித்திருங்கள்.

ஆனால் அவர் வெளிப்படுத்திய எல்லா சொப்பனங்களிலும் அவர்கள் செய்தது போலவே, சிலர் அந்த வழியைவிட்டு வெளியே சென்றனர்; சிலர் ஒரு வழியையும், சிலர் வேறு வழியையும் தெரிந்துகொண்டனர். மிக சொற்பமானவர்களே தரித்திருந்து, அவர் அவர்களுக்கு சொல்லியிருந்ததை நோக்கிப் பார்த்தனர்.

இப்பொழுது அதை மற்றவர் கண்ட சொப்பனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒரு தரிசனமாக இருந்தது. ஆகாரம், இங்கே அது உள்ளது. இதுவே அந்த இடம்.

அவர் தம்முடைய மணவாட்டியிடம் அதைவிட வேறெந்த விதத்திலும் தெளிவாக்க முடியாது. இது ஒரு தரிசனமாக இருந்தது, ஒரு சொப்பனம் அல்ல, ஒரு தரிசனம். ஆகாரம் இங்கே உள்ளது: ஒலிநாடாக்கள். இதுதான் இடம்: ஒலிநாடாக்கள். அவர் நம்மிடம் செய்யும்படிச் சொன்னதை நாம் சரியாகச் செய்துகொண்டிருக்கிறோம்: ஒலிநாடாக்களைக் கேளுங்கள்!

இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்ள ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடு தேவைப்படுகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நமக்குச் கூறப்போகும் அனைத்தையும் விசுவாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஆவிக்குரிய வெளிப்பாடு தேவையாயிருக்கப்போகிறது. இது மணவாட்டிக்கான ஒரு மகிமையான நேரமாக இருக்கும்.

இந்தச் செய்தியில் தேவன் நமக்குச் சொல்லிக்கொண்டும் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிற அநேக காரியங்கள் உள்ளன. நான் மேற்கோளுக்குப் பின் மேற்கோளை நகலெடுத்து அதை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன், ஆனால் அவர் உங்களுக்கு ஒவ்வொரு மேற்கோளின் தங்கக் கட்டியையும் வெளிப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் யாராயிருந்தீர்கள் என்று அவர் கூறினதாய் இது உள்ளது:

தேவனாகிய கர்த்தர் எனக்கு அளித்த சபை இதுவே. இதோ எனது தலைமையகம். இங்கே நான் தரித்திருக்கிறேன்...பசியாயிருந்து கொண்டும், பற்றிக்கொண்டும், விசுவாசித்துக்கொண்டும் இருக்கிற ஒரு ஜனக்கூட்டம் இங்கே உண்டு.

பசியாயிருந்துகொண்டும், பற்றிக்கொண்டுமிருக்கிற அந்த குழு நாம் தான். பலர் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டு கேலி செய்கிறார்கள், ஆனால் அது பரவாயில்லை, நாம் நேசித்து, அவர்களுக்காக ஜெபிக்கிறோம்; ஆனால் ஒரே ஒரு சத்தம் மட்டுமே நம்மை வழிநடத்த வேண்டும்.

என்னை மன்னியுங்கள், ஆனால் நான் உங்களுக்கு இந்த மேற்கோளை கொடுக்க வேண்டும்.

“அவன் முழங்க ஆரம்பிக்கையில், அந்த இரகசியம் நிறைவேற்றப்படும்." இப்பொழுது, குறித்துக்கொள்ளுங்கள் அப்பொழுதுதான் வெளிப்படுத்தல் 10-ல் உள்ள ஏழு முத்திரை சத்தங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டிய சமயம் ஆகும். உங்களுக்குப் புரிகின்றதா? புஸ்தகத்தின் எல்லா இரகசியங்களும் முடிவுறுகின்றபோதே! ஆகவே அவன் இரகசியங்களை நிறைவேற்றுவான் என்று, இங்கே, வேதாகமம் கூறியுள்ளது.

இரகசியங்களை யார் நிறைவேற்றுவார்? உங்களுடைய போதகரா? ஒரு குழுவா? நானா? ஏழாம் தூதனாகிய செய்தியாளர்: வில்லியம் மரியன் பிரான்ஹாம். அவருக்கு முன்போ, அந்த நேரத்திலோ, அல்லது பின்போ யாரும் இல்லை. அவரே இரகசியங்களை நிறைவேற்றுவார்.

இது முடிவு காலமாக இருக்கலாம். இது வானவில்கள் ஆகாயம் முழுவதிலும் பரவி, “இனி காலம் செல்லாது" என்று கூறுகிற அறிவிப்பு வானங்களிலிருந்து உண்டாகலாம். அப்படியானால், நண்பர்களே, நம்முடைய தேவனை சந்திப்பதற்கு, நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வோமாக.

ஆம் கர்த்தாவே, நாங்கள் உம்மைச் சந்திக்க ஆயத்தமாயிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்ய விரும்புகிறோம். நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஆயத்தமாயிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பிதாவே தயவு கூர்ந்து எங்களுக்குச் சொல்லுவீரா?

இப்பொழுது இங்கு நிறைய ஆகாரம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் அதைப் பயன்படுத்திக்கொள்வோமாக. இப்பொழுது நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

உம்முடைய மணவாட்டிக்காக நீர் வைத்துள்ள ஆதாரத்திற்காகவும், அதைக் குறித்து வெளிப்பாட்டிற்காகவும் பிதாவே உமக்கு நன்றி. நாங்கள் அதை அனுதினமும் பயன்படுத்தி வருகிறோம்.

இங்கே என்னுடைய சிறு சபையை நான் வழிகாட்டி வழிநடத்துவதற்கு நீர் என்னை அனுப்பினீர் என்பதற்காகவும், அதனுடைய மன்னிப்பிற்காகவும் நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, இவர்களை ஆசீர்வதியும். எனக்கு தெரிந்த வரையில், தரிசனங்களும் சொப்பனங்களும், மற்ற காரியங்களும் கூறியிருக்கிறவிதமாகவே நான் செய்திருக்கின்றேன், கர்த்தாவே, எனக்குத் தெரிந்தவரையில் தேவைக்கேற்ப எல்லா ஆகாரத்தையும் நான் இவர்களுக்காக வைத்திருக்கின்றேன். என்னவாயிருந் தாலும், கர்த்தாவே, நாங்கள் உம்முடையவர்கள்.

எங்களுடைய பிரயாணத்திற்குத் தேவையான எல்லா ஆகாரத்தையும் நீர் வைத்திருக்கிறீர் என்று, நீர் மீண்டும் ஒருமுறை எங்களிடம் சொன்னதற்காக, கர்த்தாவே உமக்கு நன்றி.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, உங்கள் ஒவ்வொருவரோடும், ஐயா, இதுதான் முடிவின் அடையாளமா? 62-1230E, என்ற செய்தியைக் கேட்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத வகையில் காரியங்கள் நமக்கு வெளிப்படும் என்பதை நான் அறிவேன். இது நாம் இதைக் கேட்கும் கடைசி நேரமாக இருக்கலாம்.

எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்திற்குள் எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பதை ஏதோ ஒன்று நம்மை அறிந்துகொள்ளும்படி செய்யுமானால் அது என்ன? அப்படியா? நாம் ஓடி மதில்களைத் தாண்டப்போகிறோமா? இந்த பழைய, அழிவுள்ள, அற்பமான சரீரம் மறுரூபப்படுவதற்காக ஏதாவதொன்று நிகழவிருக்கின்றதா? ஓ! கர்த்தாவே, அதைக் காண நான் உயிரோடிருப்பேனா? நான் காண்பதற்கு அது அவ்வளவு அருகாமையில் உள்ளதா? இந்தத் தலைமுறையிலா? ஐயன்மீர், என்னுடைய சகோதரரே, இது என்ன சமயம்? நாம் எங்கே இருக்கிறோம்?

சகோ. ஜோசப் பிரான்ஹாம்