
அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,
உங்களால் இங்கே கூடாரத்திற்கு வர முடியாவிட்டால், எங்காவது சபையைக் கண்டறிந்து; அதற்கு செல்லுங்கள். உங்களால் எங்களுடன் ஒலிநாடாக்களை கேட்க முடியாவிட்டால், எங்காவது ஒலிநாடாக்களைக் கேளுங்கள். ஒரு பிரசங்கியார், போதகர், அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் ஒலிநாடாக்களை இயக்கிக் கேட்பதேயாகும்.
இது என்னுடைய மூல ஆதாரமான வீடு; இது என்னுடைய தலைமையகம்; இங்குதான் நாங்கள் அமைத்துள்ளோம். இப்பொழுது, என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், நீங்கள் ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தாலும், இது தான் நம்முடைய தலைமையகம், இங்கேயே! நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டீர்கள் என்று, என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பக் கேட்டு, அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, அதை நினைவில் கொள்ளுங்கள்!
தீர்க்கதரிசி என்ன செய்து கொண்டிருந்தார்? ஆகாரத்தை சேமித்தார். நாம் புசிக்கும்படியான ஆகாரத்தை சேமித்தார், அதனால் நாம் விருந்துண்ணும்படியான ஒன்றைப் பெற்றுள்ளோம். நாம் நம்முடைய அறையில் வசதியாக நம்முடைய ஒலிநாடாக்களை அமர்ந்து கேட்கிறோம்.
நாடு முழுவதிற்கும் ஒரே ஒரு சிறிய களஞ்சியம், ஒரு சிறிய களஞ்சியம் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார். அவர் போய்விட்டப் பிறகு, நாம் இங்கே தரித்திருந்து கேட்கும்படியாக, அவர் ஏராளமான பொருட்களை வைத்துவிட்டார்; அடையாளம், முற்றிலுமானது, முத்திரைகள், ஏழு சபைக் காலங்கள், வருங்கால வீடு, அவருடைய வார்த்தையை நிரூபித்தல், அனைத்தும் நமக்காகவே.
அவர் வெகு தொலைவில் இருப்பது போல் தென்படுகிறது, ஆனால் இந்தக் காரியங்கள் உண்மை என்று நாம் இன்னமும் நினைவில் கொள்கிறோம். இதுவே நாம் தனித்து நடக்க வேண்டிய ஒரு ஜீவியமாய் உள்ளது.
களஞ்சியங்கள் நிரம்பியுள்ளன. மாசில்லாத தூய்மையான வார்த்தை என்று தேவனால் சான்றளிக்கப்பட்டுள்ள மற்றெந்த எந்த ஆகாரமும் இல்லையே.
நீங்கள் எங்களுடன் விருந்துண்ண விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய விருந்தினராக நாங்கள் மேஜையண்டை வந்து புசிக்கையில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் வரவேற்கிறோம்.
கேள்விகளும் பதில்களும் 64-0823M
சகோ. ஜோசப் பிரான்ஹாம்