ஞாயிறு
08 பிப்ரவரி 2026
64-0830M
கேள்விகளும் பதில்களும் #3
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

கிறிஸ்துவுக்குப் பெற்றெடுத்த அன்பானவர்களே,

நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை அறிந்திருப்பதனால் நம்முடைய இருதயங்களில் இருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் வெறும் மனித வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும்? நாம் இதில் எதையும் செய்யவில்லை, ஆனால் அவரே, நான் இருக்கிறேன் என்ற மகத்தானவர், தம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலின்படி, அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மகத்தான காரியமான, நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெறுவதற்காக நம்மை முன்னரே முன்குறித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அவர் நம்மிடத்தில் பேசி கூறும்படியாக காலத்தின் நிறைவு வரும்வரை அவர் காத்திருந்து, நமக்குள்ளே ஜீவ சுவாசத்தை ஊதினார்:

இப்பொழுது, என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக் கூறி ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். புரிகிறதா? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக, அதாவது—அதாவது பிள்ளைகளாக வேண்டுமென்று நான்—நான்—நான் விரும்புகிறேன். பவுல் கூறினவண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் “ஒரு கற்புள்ள கன்னிகையாக” கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க நான் விரும்புகிறேன். உங்கள் இருதயம் “ஆமென்” என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் அந்த வார்த்தையில் கிடையாது.

தேவன், தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் பேசி, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய நம்மை வழிகாட்டி வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நாம் அவருடைய முழுமையான முதிர்ச்சியடைந்த, கற்புள்ள கன்னிகைகளாகிய பிள்ளைகள். மேலும் அவருடைய ஆச்சரியமான கிருபையினால், நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆமென் என்று ஆமோதிக்கிறோம்! அது தெய்வீக ரூபகாரப்படுத்துதலுடன் கூடிய வார்த்தையின் பரிபூரண வியாக்கியானமாயுள்ளது!

  • ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் சத்தம்: வார்த்தையின் பரிபூரண வியாக்கியானமாக இருந்தால், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு வேறு என்ன தேவை?…ஒன்றுமில்லை!

நம்முடைய நாளுக்கான அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைப் பெறுவதற்காக, அவர் தம்முடைய கரங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய கூட்டமாகிய நம்மைத் தெரிந்து கொண்டுள்ளார். ஆயிரம் வருட அரசாட்சியின் போது, மாம்சப் பிரகாரமான சரீரங்களில், பூமியில் இருப்பதற்காக அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நாம்தான்.

என் நண்பர்களே, ஒரு நிமிடம் அதைப் பற்றி சிந்திப்போமாக.

இந்த பூமியிலேயே நமக்கு மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் உண்டாயிருக்கும். நாம் ஆயிரம் வருடங்களுக்கு இப்போது இருப்பது போலவே சாப்பிடுவோம், குடிப்போம், வீடுகளைக் கட்டுவோம், வாழ்வோம். அது மணவாட்டியும் (நாம்) மணவாளனும் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) ஒன்றாக மாறும் நமது தேனிலவு காலமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மகிமையான காலத்திற்காக நாம் பார்த்துக் காத்திருக்கிறோம். அதை நம்மால் தொட்டுவிட முடியும் என்று தோன்றுவதுபோல அது மிகவும் அருகில் இருக்கிறது. இன்று நமக்கு இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன்:

ஓ, இப்பொழுது அவருடைய சபையில், கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு, மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டு, அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே, அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஏன், இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட, குவிந்து அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் அதைக் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை. அவருடைய சபையுடன் ஒன்றாக இணைக்கப்படும்படிக்கு நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருக்கிறோம், அங்கே வார்த்தையே வார்த்தையாக மாறுகிறது.

நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியின் மூலமும், அவர் நமக்கு அதிக வெளிப்பாடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது மிக வேகமாகப் பெருகி வருகிறது, நம்மால் அதைப் பின்தொடரவே முடியவில்லை. வார்த்தை வார்த்தையாக மாறுவதை நாம் முன்னெப்போதையும் விட இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு துளி சந்தேகத்திற்கும் இடமில்லை; வெளிப்பாட்டின் மூலம், நாம் யார் என்பதை நாம் சரியாக அறிவோம்.

அவர் செய்வதாக சொன்னபடியே தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார், நாமும் அதன் ஒரு பாகமாக இருக்கிறோம். அது நிறைவேறுவதை நம்முடைய சொந்தக் கண்களால் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் அதைப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மாட்டார்கள். அது அவர்களுக்கானது அல்ல, அது அவருடைய பெற்றெடுத்த பிள்ளைகளான நமக்கானது.

மணவாட்டிக்கு தீர்க்கதரிசியிடம் கேட்க சில கேள்விகள் இருந்தன.

ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பது மட்டுமே போதுமானதா? தேவன் பதிலளித்து, ஆம்!! என்றார்.

நம்முடைய பிள்ளைகளும் ஒலிநாடாக்களைக் கேட்பதன் மூலம் மட்டுமே கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தேவையான அனைத்தையும் பெற முடியுமா? ஆம்!!

ஆகவே, மணவாட்டிக்குத் தேவையான அனைத்தும் ஒலிநாடாக்களில் உள்ளன.

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக வேறு பல வழிகளையும் அருளியிருக்கிறார் என்பதையும் கூட நாம் அறிவோம்.

“அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள்.” இப்போது, முதலாவதாக வார்த்தை அவ்வாறு கூறுகிறது, அதுவே போதுமானது. ஆனால் வார்த்தையில் நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது சபையில் வரங்கள் உள்ளன; அதை எப்படிப் போதிக்க வேண்டும் என்பதை அறியும்படி தேவனால் ஏவப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதை உங்களுக்கு மிகவும் தெளிவாக விளக்குவார்கள், அதுவே விசுவாசிக்கத் தேவையான விசுவாசத்தையும் தரும்.

சுகமளித்தலையும் அவருடைய வார்த்தையையும் மற்றவர்களுக்குத் தெளிவாகப் போதிக்க எப்படித் தெரியும் என்று தேவனால் ஏவப்பட்ட மனிதர்களை அவர் அருளியுள்ளதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் அவருடைய மணவாட்டி அவருடைய பரிபூரணமான போதுமான அருளப்பட்ட வழியை விரும்புகிறாள். அதுவேநமக்குத் தேவையான அனைத்துமாயுள்ளது.

நாங்கள், கேள்விகளும் பதில்களும் #3 64-0830M என்ற செய்தியைக் கேட்கவிருக்கிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிரான்ஹாம் கூடாரத்தில் எங்களுடன் வந்து சேருமாறு உங்களை அழைக்க விரும்புகிறேன்.

அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெற்றிருப்பதும், நாமே மாம்சமான வார்த்தை என்பதை அறிந்திருப்பதும் எவ்வளவு அற்புதமானது!

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்