
என்னுடைய சிறு மந்தையே,
உங்களுக்கும், தொலைபேசி அமைப்பில் உள்ள உங்களுக்கும் வாழ்த்துக்கள், இது மிக, மிக அருமையாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய வீடுகளில் சரியாக அமைத்து, உங்களுடைய இடங்களில், உங்களுடைய சபைகளில் கூடி, ஆராதனையை கேட்க முடிகிறதற்காக கர்த்தருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய சத்தம் எங்கெல்லாம் வந்து கொண்டிருக்கிறதோ, அந்தச் சிறு குழு ஆசிர்வதிக்கப்படும்.
இன்று, உங்களை உற்சாகப்படுத்த என்னுடைய இருதயத்திலிருந்து ஒரு சிறிய அன்பின் கடிதத்தை எழுத நான் விரும்புகிறேன். இந்த ஒலிநாடாக்களை கேட்கிற நீங்கள்; உலகத் தோற்றத்திற்கு முன்னே அவருடைய மணவாட்டியாக இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்கு மாத்திரமே என்றும், நீங்களே என்னுடைய சபை என்றும், நான் உங்களுக்கு எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். தேவன் மற்ற ஊழியக்காரர்கள் மேய்ப்பராயிருப்பதற்கு அளித்துள்ளதற்கு நான் பொறுப்பல்ல. நான் உங்களுக்கு எந்த வகையான ஆகாரத்தை போஷிக்கிறேன் என்பதற்காக மாத்திரமே நான் பொறுப்பாளியாய் இருக்கிறேன். இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்கானதாய் இருக்கின்றன, தேவன் மேய்ப்பராயிருக்க எனக்கு கொடுத்திருக்கிற, என்னுடைய கூடாரத்துக்கு மாத்திரமே. இது மறைவான மன்னவாக இருக்கிறது, மற்றவர் இதனை எடுத்துக்கொள்ள முடியாது.
இப்போது, சில ஜனங்கள் கலப்பின ஆகாரத்தையும் மற்றும் அங்கே வெளியில் உள்ள பொருளையும் விரும்பினால், அவர்கள் தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் அவர்கள் செய்யும்படி என்ன சொல்லுகிறாரோ, அவர்கள் விரும்புகிறதென்னவோ அதை போஷிக்கட்டும். நானும் அதேக் காரியத்தையே செய்வேன். ஆனால் இந்த செய்திகள் உங்களுக்காக மாத்திரமே உள்ளன.
தேவனிடமிருந்து என்னுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற நீங்கள், வார்த்தையுடன் சரியாக தரித்திருக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் ஆடுகளுக்கு ஆட்டின் ஆகாரம் தேவைப்படுகிறது. "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கின்றன." அதன் மூலமாகவே, புறப்பட்டு வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் பிழைக்கிறோம். அவ்வப்போது ஒரு வார்த்தையினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலுமே. அதன் மூலமாகத்தான் பரிசுத்தவான்களாகிய நீங்கள் ஜீவிக்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் அவர்கள் பற்றிக் கொண்டிருக்க ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். ஏதோ காரியம் ஒரு கட்டுக்கம்பமாக, வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு முடிவானதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு முடிவானதை அல்லது ஒரு முற்றிலுமானதை உடையவர்களாக இருக்க வேண்டும். எனக்கும், நான் கிறிஸ்துவண்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறவர்களுக்கும், கிறிஸ்துவினால், இந்த வேதாகமமே நம்முடைய முடிவானதாகும்.
இப்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை நமக்கு அனுப்பினார் என்பதை நாம் உணருகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியின் உதடுகளின் மூலமாகவே, தம்முடைய வார்த்தையை ஜனங்களிடம் கொண்டு செல்வதற்காக, அவர் கொண்டுள்ள வழி அதுவேயாகும். இப்போது இந்தக் கடைசி நாட்களில், அவர் மீண்டும் பரிபூரணமாக, அவருடைய மாம்சத்திலும், ஆவியிலும் தன்னை வெளிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். அது தேவன் தாமே எழுத்து வடிவிலும், தீர்க்கதரிசி வடிவிலும், மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டதாயுள்ளது.
அவர் என்னக் கூறினாலும் அதை எந்த நேரத்திலும் என்னுடைய எழுதுகோலை கொண்டு எழுத ஆயத்தமாயிருக்க ஆக்கியோனின் பிரசன்னத்தில் நான் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும். அவருடைய சிந்தனைகளின் மேல் என் மனதை வைத்திருக்கிறேன்; மனிதன் என்ன நினைக்கிறான், காலம் என்ன நினைக்கிறது, சபை என்ன நினைக்கிறது, இராஜ்யம் என்ன நினைக்கிறது என்பதில் அல்ல. தேவனுடைய சிந்தனைகளின் பேரில் மாத்திரமே! நான் தேவனுடைய சிந்தனைகளை மாத்திரமே வார்த்தையாக வெளிப்படுத்துகிறேன்.
தேவன் தம்முடைய சிந்தனைகளை எனக்கு வெளிப்படுத்துகிறபோது, நான் அதை வார்த்தையில் உங்களுக்கு ஒலிநாடாவில் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாக வெளிப்படுத்துகிறேன். அது, "நான் உரைக்கிறதாவது" என்பது அல்ல. அது, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதே! உங்களுக்கு வியாக்கியானிக்கும்படி ஆக்கியோன் என்னை அனுமதிக்கும் காரணத்தால் மாத்திரமே என்னால் அதை வியாக்கியானிக்க முடியும்; ஏனென்றால் அது பிழையற்ற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது.
ஆசாரியர்கள், முதலியவர்களைப் போன்று, என்னை பாவனைப்படுத்த முயற்சிக்கிற அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெறும் குழப்பம், அவ்வளவுதான். அவர்களால் அதை செய்ய முடியவில்லை. தேவன் என்னை, அவருடைய தீர்க்கதரிசியாக, அவருடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பினார்; மற்றொரு மனிதனை அல்ல, அல்லது ஒரு மனிதக் குழுவையல்ல.
நான் கூறுகிற வார்த்தைகளும், நான் செயல்படும் விதமும், சிலரைக் குருடாக்கும், ஆனால் வேறு சிலரின் கண்களைத் திறக்கும். நான் அணியும் வஸ்திரம், என் சுபாவம், என் லட்சியம், நான் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே அனைத்தையும் அவர் எனக்கு அணிவித்தார். அவர் என்னை உங்களுக்காகவே பரிபூரணமாக தேர்ந்தெடுத்தார். மற்றவர்கள் நின்று பார்த்து, “சரி, என்னால் முடியாது. இருக்கிறது...என்னால்-என்னால் பார்க்க முடியவில்லை" என்று கூறுவார்கள். அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதை யாரிடம் வெளிப்படுத்துவார் என்பதை அவர் வெளிப்படுத்துவார். அவர் மிகவும் புத்திசாலியான வேத பண்டிதர்களுக்கு, வேதத்தில் தன்னை மறைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை மறைத்து, வேதத்தில் அங்கேயே இருக்க முடியும், மேலும் அவர்கள் நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணாதிருக்க முடியும்; வாழ்நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணாதிருக்க முடியும். அவர் தன்னை மறைத்துக்கொண்டு, அங்கேயே இருக்க முடியும்.
இப்போது முக்கியமானது என்னவென்றால், தங்கள் இருதயங்களில் செய்தியைப் பெறுபவர்கள், முதிர்ச்சியடைவதற்கு, குமாரனின் பிரசன்னத்தில் இருக்க வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்தி, அதன்பின்னர் குமாரன் உங்களிடமிருந்து எல்லா ஈரத்தன்மையையும் உலரச் செய்து, உங்களை முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாக மாற்ற அனுமதிக்கவும்.
அவர் முதன்முறையாக வந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் இரண்டாவது முறை வந்தபோது; ஒரு இரட்டிப்பான பங்குடன், அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் யோவான் ஸ்நானகனின் ரூபத்தில் வந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் இந்த நாளில் வந்து, ஜீவித்து, மீண்டும் ஒரு மனிதனில் தன்னை வெளிப்படுத்துவதாக வாக்களித்தார்; மனுஷ குமாரன் மானிட சரீரத்தில் ஜீவித்தல்.
நாம் இப்போது கண்ணின் காலத்தில், மல்கியா 4-ஐக் குறித்த, தீர்க்கதரிசனத்தில் இருக்கிறோம். அவர் தாமே அதற்குள் அடியெடுத்து வைப்பதைத் தவிர, அது வருவதற்கான வேறெந்த காரியமும் விடப்பட்டிருக்கவில்லை, ஏனென்றால் அதுவே கடைசிக் காரியமாக இருக்கிறது.
உங்களுக்கு மேய்ப்பனாக இருக்கும்படி தேவன் எனக்கு அளித்திருக்கிற, என்னுடைய சிறு ஆட்டுக்குட்டிகளே செவி கொடுங்கள். காலம் தாமதமாகிவிட்டது. அவர் தம்முடைய மணவாட்டியான, உங்களுக்காகவே சீக்கிரம் வருகிறார். அந்த ஒலிநாடாக்களோடு தரித்திருங்கள், அதற்கு வியாக்கியானமே தேவையில்லை.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய மணவாட்டியை ஒன்றுசேர்க்கும் ஒரே காரியமான என்னோடு இணைந்துகொள்ள வரும்படி கழுகுக் குஞ்சுகளாகிய உங்களை நான் அழைக்கிறேன். கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகின்றார் 65-0822M என்ற செய்தியை தேவன் என் மூலமாக பேசி வெளிப்படுத்தும்போது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கேட்பீர்கள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஒலிநாடா ஊழியத்தோடு தரித்திருங்கள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
சகோதரன் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 4:10-12
ஏசாயா 53:1-5
எரேமியா 1:4-9
மல்கியா 4:5
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 1:14 / 7:1-3 / 14:12 / 15:24 / 16:13
கலாத்தியர் 1:8
2 தீமோத்தேயு 3:16-17
எபிரெயர் 1:1-3 / 4:12 / 13:8
2 பேதுரு 1:20-21
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 / 10:1-7 / 22:18-19