ஞாயிறு
29 ஜனவரி 2023
65-0801m
இப்பொல்லாத காலத்தின் தேவன்

அன்புள்ள கிறிஸ்துவினுடைய எளிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே,

நாம் வேறு ஒன்றாக இருக்க முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நமக்கு வேறு எதுவும் தெரியாது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம். சுத்தமான மாமிசம் எங்கு உள்ளதோ, அந்தக் காலத்தின் வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்த, கழுகுகள் ஒன்று கூடும். வார்த்தை நமக்குள் உயிர்ப்பிக்கிறது.

நாம் எல்லோரையும் போல் இல்லை! நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ஜனமாய், கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்களாய், இந்த நாளுக்காக அவருடைய வாக்குத்தத்தத்தின் பலனைக் கொடுப்பதற்காக, வார்த்தைக்கும் தேவனுடைய ஆவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்பதனால் நாம் தொடர்ந்து முழு வளர்ச்சியுடன் முதிர்ச்சியடைந்து வருகிறோம்.

இந்த ஒலிநாடாக்களை மீண்டும் ஆலோசித்துப் பார்க்குமாறு தீர்க்கதரிசி நமக்குக் கூறினார். நீங்கள் ஒரு ஒலிநாடா பதிவு செய்யும் கருவியை வைத்திருந்தால், ஒரு ஜனக் குழுவை ஒன்று சேர்த்து, அதை இயக்கி, மிக கவனமாக கூர்ந்து கேளுங்கள். அவர் நமக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற, அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை; அவரே தம்முடைய சொந்த வியாக்கியானத்தை செய்கிறார். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்."

இதுதான் வேதாகமமாக உள்ளது, இதிலிருந்து ஒரு வார்த்தை எடுக்கப்படவோ அல்லது இதனோடு கூட்டப்படவோ கூடாது. அப்படியே அந்த சத்தத்தோடு தரித்திருங்கள். "அவர்கள் ஒரு அந்நியனுக்குப் பின்செல்லமாட்டார்கள்."

இன்றைக்கு தேவன் அருளியுள்ள வழியை எப்படி யாரும் காணாமல் இருக்க முடியும்? ஆனால் தேவனுக்கு மகிமை, நாம் அதைக் காண முடியும், ஏனென்றால் நாம் அதைக் காணும்படி தெரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். நாம் வஞ்சிக்கப்படமாட்டோம், நாம் வஞ்சிக்கப்பட முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, அது அப்படியே ஒரு நிமிடம் பதியட்டும், நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறோம்!! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று தேவன் தாமே, மானிட உதடுகள் மூலமாக பேசி, நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் பயப்படுவதற்கு முற்றிலுமாக ஒன்றும் இல்லை. நமக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் நம்முடையதாய் இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் கர்த்தர் நம்மிடத்திற்கு வருகை தர வேண்டும் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். எல்லோரையும் உட்கார வைக்க நம்மிடத்தில் இங்கு இடமில்லை, எல்லோரும் ஜெபர்சன்வில்லுக்கு வர முடியாது, எனவே நாம் அவர்களுக்கு இணையதள ஊடகம் மூலம் வார்த்தையை அனுப்ப வேண்டும்.

நாம் நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், நம்முடைய கார்களில், உலகம் முழுவதிலுமிருந்து நம்முடைய சிறிய ஒலிபெருக்கிகளை சுற்றிக் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

அவர்கள் நம்முடன் ஆப்பிரிக்காவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் மெக்சிகோவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா என்று, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

நாம் இங்கே வீட்டில் கூட்டப்படுகிற சபையில், கூடாரத்தில் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் ஒரே குழுவினராக, விசுவாசிகளாக ஒன்று சேர்ந்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய நாமத்திற்காக இப்பொல்லாத காலத்திலிருந்து தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாக இருக்கிறோம். நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று சாத்தானுக்கு சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த மூல மணவாட்டி மரத்தின் பாகமாக இருக்கிறோம். அந்த வார்த்தையினால் நம்முடைய ஜீவியம் வெளிப்படுத்தப்படுகின்றதை நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

அவரில் சம்பவிக்கவிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் இயேசு நேரடியான பதிலாய் இருந்தார் என்று நம்புவது அனைவருக்கும் எளிதானது, ஏனென்றால் அது சம்பவித்ததைக் காண அவர்கள் பின்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பொல்லாத காலத்தில், அதை மற்றொரு விதத்தில் வியாக்கானிப்பதன் மூலம், அப்பொழுது அவர்கள் செய்த அதே காரியத்தை இவர்களும் செய்துகொண்டு, ஒரு பொய்யை விசுவாசிக்கும்படி கொடிய வஞ்சகத்திற்குள்ளாக ஜனங்கள் செல்ல காரணமாகியுள்ளனர். இந்தக் காலத்திற்காக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிற அதே வார்த்தையாக இது உள்ளது என்பதை அவர்கள் மாத்திரம் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்கும்.

இந்த செய்தியே, மணவாட்டியை ஒன்று சேர்க்கக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. இந்த செய்தியே, நாம் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தமே, கர்த்தர் உரைக்கிறதாவது என்று ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தமாய் உள்ளது.

இப்பொழுது, ​​வெறுமனே ஒரு குளிர்ந்த, சம்பிரதாயமான, வெற்றச்சார முறையான சபைகள், முதலியன, மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரம், அது நிலைக்காது; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதற்கு எந்த கவனத்தையும் ஒருபோதும் செலுத்த மாட்டார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட அங்கே ஒரு உண்மையான காரியத்தைப் போலவே இருக்கிறது. நீங்கள் யாவரும் செய்ய வேண்டியது ஒரு வார்த்தையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதேயாகும். வாக்களிக்கப்பட்ட காலமாயும்; மிக மகத்தான நேரமாயுமுள்ளதே! கிறிஸ்தவர்கள், எங்கும், நாம் ஜீவித்துகொண்டிருக்கிற வேளையை கவனித்துக் கொண்டிருக்கிறார்களே! குறித்துக் கொண்டு, வாசித்து, மிகவும் கூர்ந்து செவி கொடுங்கள்.

இப்பொல்லாத காலத்தின் தேவன் அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஜனங்கள் கேட்பதை தடுப்பதன் மூலம் அவர்களை வஞ்சிக்கும்படி அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறான். ஆதியிலே அவன் ஏவாளிடத்தில் செய்ததுபோல, அவர்கள் வெறுமனே ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்யவே அவன் முயற்சிக்கிறான்.

ஆனால் கிறிஸ்துவினுடைய வார்த்தை-மணவாட்டியோ ஒரு தலையண்டைக்கு வந்து கொண்டிருக்கிறாள். நாம் எங்கிருந்து ஆரம்பித்தோமோ அந்தத் துணையுடன் நாம் மீண்டும் இணைந்துகொண்டிருக்கிறோம். யாத்திரையின் நேரம் சமீபித்துவிட்டது. தேவன் தம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிற அவருடைய மணவாட்டிக்காக வருகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இங்கே கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை அழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த காலத்திற்காக, அவளுக்கென அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை ரூபுகாரப்படுத்துவதன் மூலம் அவர் அதைச் செய்துகொண்டு, அது கிறிஸ்து என்று காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

உங்களிடத்தில் நேரடியாக பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்க, உலகெங்கிலுமுள்ள மணவாட்டி ஒன்றிணைவதை விட மகத்தானது எதுவுமில்லை. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சத்தியம் என்று நம்பும்படிக்கு, வியப்புறவோ அல்லது ஜெபிக்கவோ கூட வேண்டியதில்லை. ஏனென்றால் அது மாத்திரமே ரூபகாரப்படுத்தப்பட்ட, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற சத்தமாகும்.

கேட்கும்படிக்கு எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள்:

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M: என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு., ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் கேட்கப்போகிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24-வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14-வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7-வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14