
அன்புள்ள இக்காலத்து ஜனங்களே,
பிதாவே, நாங்கள் உம்மை மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் என்ன உணர்கிறோம் என்பதை எப்படி எங்களால் வெளிப்படுத்த துவங்க முடியும்? நீங்கள் எங்களைத் தெரிந்துகொண்டீர், எங்களை முன்குறித்தீர், எங்களுக்காக உம்முடைய ஜீவனை கொடுக்க ஒரு ஜீவனுள்ள மனிதனானீர்.
நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, நீர் உம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக எங்களுக்காக உம்முடைய சிந்தைகளை எழுதினீர். அதன்பின்னர், நீர் வாக்களித்தபடி, உம்முடைய வார்த்தையை வியாக்கியானித்து வெளிப்படுத்த, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்களின் மூலம் நீர் மீண்டும் ஒருமுறை, உம்மையே வெளிப்படுத்த மானிட சரீரத்தில் வந்தீர்.
உம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலினால், இக்காலத்தின் மனிதனாய் இருக்க நீர் வில்லியம் மரியன் பிரான்ஹாமை தெரிந்துகொண்டீர். எங்களுடைய கவனத்தை ஈர்க்க நீர் அவரைத் தெரிந்துகொண்டீர். நீர் அவருடைய கரங்களை அசைத்தீர். தரிசனங்களில் நீர் அவருடைய கண்களை அசைத்தீர். நீர் அவருக்குக் காண்பித்ததைத் தவிர அவரால் வேறு எதையுமே சொல்ல முடியவில்லை.
நீர் அவருடைய வாயில் அருளியதைத் தவிர வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை. அவருடைய நாவு, விரல்கள் மற்றும் அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் நீர் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தீர். அவர் உம்மோடு முழுக் கட்டுப்பாட்டில் இருந்தார்.
அதன்பின்னர், மீண்டும் ஒரு முறை உம்முடைய தெரிந்துகொள்ளுதலினால், இக்காலத்து ஜனங்களாக இருக்கும்படி எங்களை நீர் தெரிந்துகொண்டீர். இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தை, மீண்டும் தோற்றுவிக்க, உம்முடைய வார்த்தையின் ஏவுதலினால் உம்முடைய சிறுபான்மையான கூட்டம் கூடியது. நாங்கள் உம்முடைய வார்த்தையாய் வார்த்தையோடு இணைந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் வேறு எதையும் செய்ய முடியாது.
பிதாவே, நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம்; எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. எங்களுடைய சிந்தனையோ, எங்களுடைய எண்ணங்களோ, அல்லது வேறு எந்த மனிதன் கூறுகிறதோ எங்களுக்குத் தேவையில்லை, உம்முடைய சித்தம் மாத்திரமே தேவை.
நாங்கள் உம்முடைய மணவாட்டியாய் இருக்க வேண்டுமென்று நீர் கூறினதை புரிந்துகொள்ளும்படி உம்முடைய வார்த்தைக்கு நாங்கள் சென்றுள்ளோம். உம்முடைய வார்த்தையால் இந்த உலகத்தை ஒருநாள் நீர் நியாயந்தீர்க்கப்போகிறீர் என்று கூறினீர். உம்முடைய வார்த்தை, உம்மால் முன்குறிக்கப்பட்டு மற்றும் முன்நியமிக்கப்பட்டிருந்த உம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரமே வருகிறது என்று நீர் சொன்னீர்.
அது ஒரு வேதபண்டிதனிடத்திற்கோ அல்லது ஒரு கூட்ட மனிதரிடத்திற்கோ வராமல், உம்முடைய தீர்க்கதரிசியினிடத்திற்கே வருகிறது என்று நீர் எங்களிடத்தில் சொன்னீர். அவர் மாத்திரமே உம்முடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருப்பார். இது அவருடைய எண்ணங்களோ, அவருடைய யோசனைகளோ, அவருடைய வியாக்கியானமோ அல்ல, ஆனால் நீர் அவர் மூலமாக பேசி, உம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறீர்.
ஒவ்வொரு காலத்திலும், ஜனங்கள் உம்முடைய வார்த்தைக்கு மனிதர் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க அனுமதிக்க, அதுவே அவர்கள் குருடாயிருக்க காரணமாகிறது. பரிசேயர் மற்றும் சதுசேயரிடம் அது செய்த அதே காரியத்தையே செய்கிறது. அந்தக் காரணத்தினால் ஜனங்கள் அதை இன்றைக்கு பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். உம்முடைய தீர்க்கதரிசி அவர்களுக்கு செய்யும்படி சொன்னதைப் போன்ற வார்த்தைக்கு செவி கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களோ அதைக் குறித்து வேறு யாரோ சொல்லுகிறதற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாவது நான் என்னுடைய வார்த்தையை அனுப்புகிறேன், அப்பொழுது ஜனங்கள் என்னுடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அப்பொழுது நான் அவர்களுக்கு ஊழியத்தை அனுப்புகிறேன் என்று, நீர் கூறினீர். ஒவ்வொரு காலத்திலும் ஊழியம் வழிதவறி செல்கிறது என்றும்; அவர்கள் எல்லோரும் அல்ல, ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், தாங்களாகவே ஜனங்களை வழி நடத்துகிறார்கள் என்றும் கூட நீர் கூறினீர். நாங்கள் உம்முடைய மூலத் திட்டத்தில் இருக்க விரும்புகிறோம்.
ஊழியக்காரர்கள் தங்களுக்குள்ளே உடன்பட முடியாதபடி, இது மிகவும் குழப்பமாய் இருக்கிறது. சகோ. X- என்பவரோடு சகோ. Y உடன்பட முடியவில்லை; சகோ. Y என்பவர் சகோ. Z என்பவரோடு உடன்படுகிறதில்லை. அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்பட முடியவில்லை. நாம் ஒலிநாடாக்களை சபையில் இயக்கக் கூடாது என்ற, ஒரு காரியத்தில் மாத்திரமே அவர்கள் உடன்படுவதாக தெரிகிறது.
அது மீண்டும் ஒருமுறை மிகுந்த குழப்பமாயுள்ள, பாபிலோனாயுள்ளது. ஒரே ஒரு மாதிரி வடிவம் மாத்திரமே உள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், அந்த மாதிரி வடிவத்திற்கு ஏற்றவாறு நம்மை நாமே வெட்டிக்கொள்ள வேண்டுமேயன்றி, நமக்குப் பொருந்துமாறு அந்த மாதிரி வடிவத்தை வெட்ட முயற்சிக்கக் கூடாது.
எத்தனையோ ஊழியங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களோடும், தங்களுடைய சொந்த வியாக்கியானங்கள் மற்றும் உபதேசங்களோடு எழும்பியிருக்கின்றன. அவை அனைத்துமே பயனற்று போய்விட்டன. நியமிக்கப்பட்ட பெரிய ஊழியர்கள் தாங்கள் பிரசங்கித்துக்கொண்டும் மற்றும் இக்காலத்து செய்தியை மேற்கோள் காட்டிக்கொண்டுமிருப்பதால், அவர்களுடைய ஊழியமே இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாய் இருக்கிறதேயன்றி, ஒலிநாடாக்கள் அல்ல என்று கூறுகிறவர்களாக எழும்பியுள்ளனர்.
அவர்களுடைய சபைகளுக்கு சென்று, பல வருடங்களாக அவர்களுக்கு செவிகொடுக்கிற விசுவாசமுள்ள ஜனங்களை அவர்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வருகை தருகின்ற பல ஊழியக்காரர்களையும், கூட்டங்களையும், எழுப்புதல்களையும் பிரசங்கிப்பதையும், அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதுவே உங்களுடைய அருளப்பட்ட வழியேயன்றி, ஒலிநாடாக்கள் அல்ல என்று கூறுகிறவர்களை உடையவர்களாக இருக்கின்றனர். அதன்பின்னர் ஒருநாள் அவர்கள், செய்தி உண்மையானது அல்ல என்று கூறுகிறார்கள்.
அவர் என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை ஒலிநாடாக்களை கொண்டு அவர்கள் சரிபார்த்துக் கொண்டிருக்கவில்லையா? அவர் கூறினதே வார்த்தையாக இருக்க வேண்டும் என்றும், இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தார்களா? மிக முக்கியமான சத்தமாக தங்களை வைத்துக்கொண்டிருந்ததற்கு பதிலாக, ஜனங்களுக்கான உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தமான, ஒலிநாடாக்களை அவர் இயக்கியிருந்திருப்பாரானால், அப்பொழுது அவர்கள் இந்தக் கடைசி கால உபதேசத்தில் கேட்டுக்கொண்டிருந்தது ஒரு கள்ள அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த ஒன்று என்பதை தெரிந்துகொண்டிருந்திருப்பார்கள்.
உங்களுக்கு ஒரு போதகர் தேவையில்லை என்பது அதன் அர்த்தமல்ல. அவர்கள் அனைவரும் கள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட போதகர்கள் என்றும் அர்த்தமல்ல. சகோதரன் பிரான்ஹாம் கூறினதை சரியாகப் பிரசங்கிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் அர்த்தமல்ல. ஒலிநாடாக்களில் உள்ள செய்தியை நீங்கள் கேட்க வேண்டும் என்பதே மிக முக்கியமான காரியம் என்பதைத்தான் அது பொருட்படுத்துகிறது; அது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.
இது வழிகாட்டுதலாயுள்ளது. இது முற்றிலுமானதாய் உள்ளது. இது முடிவான வார்த்தையாய் உள்ளது. இது மாத்திரமே பரிபூரண வார்த்தையாக உள்ளது. ஒரு மேய்ப்பர், உங்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டி, தன்னுடைய ஜனங்களோடு அந்த சுத்தமான வார்த்தைக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தாலொழிய, ஏதோ தவறு நேரிடும்.
ஊழியத்தில் ஏன் அவர்களுடைய சபைகளில் உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை இயக்கக் கூடாது? இது வார்த்தை என்று தாங்கள் விசுவாசிப்பதாக அவர்கள் கூறும்போது அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? அவர்கள் எல்லா வகையான சாக்குப்போக்குகளையும் கூறி மற்றும் இன்றைக்கான உங்களுடைய அருளப்பட்ட வழி அவர்களுடைய ஊழியமேயன்றி, ஒலிநாடாவில் உள்ள உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் அல்ல என்று ஏன் கூறுகிறார்கள்?
உங்களுடைய சத்தத்தைக் கேட்க "இயங்கு பொத்தானை அழுத்துங்கள்" என்று கூறுவதால், நாம் ஒரு மனிதனை ஆராதித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், நீங்கள் அந்த மனிதனின் மூலம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்றும் சொல்லி ஜனங்களை ஏன் பயமுறுத்துகிறார்கள்?
நாங்கள் பிதாவே உம்மை மாத்திரமே ஆராதிக்கிறோம். நாங்கள் அதை உம்முடைய வார்த்தையைக் கொண்டு மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறோம். இன்றைக்கான உம்முடைய அருளப்பட்ட வழியாய் இது மாத்திரமே உள்ளது: என்று நாங்கள் ஒலிநாடாக்களில் கேட்கிற ஒவ்வொரு செய்தியோடும் உம்முடைய தீர்க்கதரிசி மூலமாக நீர் எங்களுக்குச் சொல்லுகிறீர்.
உம்முடைய வார்த்தைக்கு நேரடியாக செல்வதைத் தவிர உம்முடைய மணவாட்டி வேறெங்கு செல்ல முடியும். நாங்கள் உம்முடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டியாக இருக்கிறோம். நாங்கள் உம்முடைய அக்னி ஸ்தம்பத்தோடு தரித்திருக்க வேண்டும். அதுவே நாங்கள் திருப்தியடையக்கூடிய மற்றும் நாங்கள் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூறக்கூடிய ஒரே ஸ்தலமாயுமுள்ளது.
பிதாவே, நீர் உம்முடைய சபைக்கு புறம்பேயிருந்து உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம், அது எங்களுடைய இருதயத்தை உடைக்கிறது. தாழ்ப்பாளோ உள்ளே இருக்கிறது, நீர் உள்ளே வருவதற்காக நாங்கள் கதவைத் திறந்துள்ளோம். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். நாங்கள் வேறு எதையும் எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் உம்முடைய வார்த்தையால் கர்ப்பந்தரிக்கப்பட்டுள்ளோம்.
உம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டிற்காக பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட உம்முடைய வார்த்தைக்காகவே நாங்கள் இருக்கிறோம். நாங்கள் ஒருநாள் நியாயத்தீர்ப்பில் உமக்கு முன்பாக நிற்போம். "பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிறோம்" என்பதை நாங்கள் எங்களுடைய முழு இருதயத்தோடு கூற விரும்புகிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தத்தைக் கேட்க உங்களுடைய மேய்ப்பரை, உங்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டியை ஊக்கப்படுத்துங்கள். ஒலிநாடாக்களில் கூறுகிற தேவனுடைய வார்த்தையினாலே நீங்கள் ஒருநாளில் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். வேறு ஏதாவது ஒரு வாய்ப்பை நீங்கள் எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்?
தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள் 65-0801e என்ற செய்தியை தேவன் தெரிந்துகொண்ட மனித உதடுகளின் மூலமாக அவர் பேசுவதை கேட்கப்போகின்றபடியால்; இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகின்றீர்கள். அவர் தன்னுடைய வரத்திற்கு, தன்னுடைய பண்பினை அளித்தவர். அவரே இவருக்கு அவருடைய சுபாவத்தை, அவருடைய பாணியை, அது என்னவாக இருந்தாலும், அவர் எப்படி தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், அவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையும் அளித்தார். இக்காலத்து ஜனங்களை கவரும்படி இக்காலத்து மனிதனாய் அவர் வில்லியம் மரியன் பிரான்ஹாமை உருவாக்கினார், மற்றும் நாமே இக்காலத்து ஜனங்களாய் இருக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேதவாக்கியங்கள்:
ஆதியாகமம்: 22:17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41:9
சகரியா 11:12 / 13:7
ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12
மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 15:26
பரி. லூக்கா: 17:30 / 24:12-35
ரோமர்: 8:5-13
எபிரெயர்: 1:1 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம்: 1:1-3 / அதிகாரம் 10