ஞாயிறு
24 மே 2026
65-0725E
மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்பான ஒன்றுகூடும் கழுகுகளே,

உலகம் முழுவதும் நடைபெறும் இந்த மகத்தான கவர்ச்சி என்ன? ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடி, தங்களுடைய வீடுகளிலும், தங்களுடைய சபைகளிலும் மகத்தான எதிர்பார்ப்புடன் அமர்ந்து, அவர்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.

வெறும் ஒலிநாடாக்களைக் கேட்பது மட்டும் இந்த உலகத்திற்கு மிகவும் விசித்திரமாகவும் நியாயமற்றதாகவும் தோன்றுகிறது. நாம் எப்போது வேண்டுமானாலும் ஒலிநாடாக்களைக் கேட்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் வெறும் ஒலிநாடாக்களை அல்ல, ஒரு நேரடி ஊழியத்தையோ, ஒரு பிரசங்கியாருக்கோ செவிகொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய பாரம்பரியங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

உலக வரலாற்றில் இது போன்ற ஒன்று நடந்ததே இல்லை. தம்முடைய மணவாட்டியை அழைக்கும் அந்த சத்தத்தைக் கேட்க, இந்த மக்களை ஒரே நேரத்தில் ஒன்றிணைக்க கவர்ந்துள்ளது எது? அது லூக்கா 17:30-ஐ தேவன் நிறைவேற்றுவது. அது வெளிப்படுத்தல் 10:7-ஐ தேவன் நிறைவேற்றுவது. அது எபிரேயர் 13:8-ஐ தேவன் வெளிப்படுத்துவது, ஆபிரகாமுக்கு அவர் செய்ததுபோல, மெல்கிசேதேக்கு மனித மாம்சத்தில் வெளிப்படுவது.

அவர் என்ன சொல்வாரோ என்று அவர்கள் காத்துக் கொண்டும், வியந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர் பேசத் தொடங்கும் போது என்ன நடக்கும்? அவர் சொல்லும் எதையும் கேட்பதற்காக, அவர்கள் அந்தத் தொலைபேசி இணைப்பில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதை விரும்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மணவாட்டியோடு ஒரே நேரத்தில் அதைக் கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் தம்முடைய மணவாட்டியை அழைத்து வழிநடத்துவதற்காக தேவன் அவருடைய சத்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்ட சத்தம் அவரே என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.

நேரத்தில் அவர்கள் பல மணிநேரங்கள் தொலைவில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக, தங்கள் சொந்த சபையிலிருந்து தங்களுக்குப் பேசும் அந்தக் சத்தத்தைக் கேட்க, செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, மேசியாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய இருதயங்கள் வேகமாகத் துடிக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், தம்முடைய மணவாட்டியைச் சேர்க்கவும் தேவன் இந்த நாள் வரை காத்திருந்தார். அது நடந்துகொண்டிருக்கிறது, அவர்களும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதன் யதார்த்தம் அவர்களுடைய இருதயங்களில் இறங்குகிறது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் அதைப் பற்றி வேதத்தில் வாசித்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அது ஒரு யதார்த்தமாக இருக்கிறது. வார்த்தையின் வெளிப்பாடு அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவருடைய வல்லமையுள்ள சத்தத்தின் அந்த மகத்தான அபிஷேகத்தின் கீழ் அவர்கள் அமர்ந்திருக்கும்போது, ஆயத்தமாகும்படி அவர் அவர்களிடம் அறிவிக்கிறார்; ஏனெனில் இன்றிரவு அவர் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கப் போகிறார். அவர் ஜெபிக்கத் தொடங்கும் போது, வியாதியாயிருக்கிறவர்கள்மேல் போய்க் கைகளை வையுங்கள் என்று அவர் நமக்குச் சொல்கிறார்; ஏனெனில் அவர்கள் எங்கிருந்தாலும், டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா, தென் அமெரிக்கா, ஏன் உலகின் மறுபக்கத்திலுள்ள காடுகளிலுள்ள குடிசைகள் வரைக்கும் கூட, தேவனுடைய சர்வவியாபகம் எங்கும் அவர்களுடன் இருக்கிறது. அவர்கள் எங்கிருந்து திரண்டு வந்தாலும், நாம் ஜெபிக்கத் தொடங்கும் போது ஒருவரையொருவர் கைகளை வையுங்கள்; அவர்கள் விசுவாசித்தால், தேவன் அவர்களில் ஒவ்வொருவரையும் குணமாக்குவார், ஏனெனில் அது கர்த்தர் உரைக்கிறதாவது.

ஒவ்வொரு காலத்திலும், இருந்த அல்லது இருக்கப்போகும் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வழியாகவும், அந்தச் செய்தியைக் கேட்க முன்குறிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இருக்கப் போகிறார்கள் என்பதையும், அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்பதையும் அவர்கள் இப்போது புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பார்கள். அது தவறு என்றோ அல்லது தேவன் அருளிய வழி அல்ல என்றோ கூறும் அவிசுவாசியின் விமர்சனத்தையும் அவர்கள் புறக்கணிப்பார்கள். அவர்களுடன் அவர்களுக்கு எந்த வாதமும் இல்லை. அவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு, அது விசுவாசிப்பதும், அதன் ஒவ்வொரு துளியையும் தங்களால் முடிந்தவரை பெற்றுக்கொண்டு, இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்த மரியாளைப் போல அதை உள்வாங்கிக்கொள்வதும்தான். அவர்கள் வெட்கப்படுவதில்லை; தாங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கிற ஒரு ஒலிநாடா பையன் அல்லது ஒரு ஒலிநாடா பெண் என்று சொல்வதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்.

கடைசிக் காலத்தில், பரிசுத்த ஆவியின் மகத்தான அபிஷேகத்தைப் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று அந்த சத்தம் அவர்களை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அவர்கள் தீர்க்கதரிசியையும் அந்த நேரத்தின் செய்தியையும் மேற்கோள் காட்டுவார்கள்; விசுவாசிகள் என்று கூறிக்கொள்வார்கள், ஆனால் அவர்கள் கள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்.

கூடுமானால் தெரிந்துகொள்ள பட்டவர்களையே வஞ்சிக்கும்ளவிற்கு அவர்கள் உண்மையான அபிஷேகத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள், ஆனால், தாங்கள் வஞ்சிக்கப்பட முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள், ஏனெனில் அவர்களே வார்த்தை. அவர்கள் தேவனுடைய சத்தத்துடன் தரித்திருந்த உண்மையான மணவாட்டியாவர்.

இந்த நாளில் அது ஒரு எலுமிச்சையாகவோ, அல்லது ஒரு திராட்சைப்பழமாகவோ இருக்காது என்று அந்தக் சத்தம் அவர்களுக்குப் பிரகடனம் செய்கிறது. வித்தியாசத்தைச் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால் அது ஒரு டேன்ஜெலோவாக, பாதி எலுமிச்சை, பாதி ஆரஞ்சு கலந்த ஒரு கலப்பினமாக இருக்கும். அது பார்ப்பதற்கு ஆரஞ்சுப் பழத்தைப் போலவே இருக்கும், ஆனால் அது அப்படி இருக்காது, ஏனெனில் அந்தப் புதிய கிளை 100% அசல் கிளையைப் போலவே இருக்கும். அவர்கள் அந்த அசல் சத்தத்தின் வார்த்தையுடனேயே தரித்திருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு வாய்ப்பையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டு, அவரே தமது சத்தம், தமது வார்த்தை என்று பிரகடனப்படுத்திய ஒரே தேவனுடனேயே அவர்கள் தரித்திருப்பார்கள்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது?

முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து, அந்த சத்தத்தைப் பின்பற்றி அதற்குக் செவிகொடுப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களுக்கு ஜீவனை விட மேலானது. நீங்கள் அவர்களுடைய ஜீவனைப் பறிக்கலாம், ஆனால் அந்த சத்தத்தை உங்களால் பறிக்க முடியாது.

கவர்ச்சி என்ன?

வழக்கம் போல, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார்.

வாருங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வேதவாக்கியங்கள் வெளிப்படுத்தப்படுவதை நாங்கள் கேட்கும்போது, தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் இந்த நிகழ்வில் நீங்களும் ஒரு பாகமாயிருக்கும்படி வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோதரன். ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 65-0725E "மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?"

வேதவசனங்கள்:

பரி.மத்தேயு 21:1-4
சகரியா 9:9 / 14:4-9
ஏசாயா 29:6
வெளிப்படுத்தின விசேஷம் 16:9
மல்கியா 3:1 / 4ஆம் அதிகாரம்
பரி.யோவான் 14:12 / 15:1-8
பரி.லூக்கா 17:22-30