அன்புள்ள குட்டையில் உள்ள லீலிபுஷ்பங்களே,
பிப்ரவரி 28, 1963 அன்று, இடி முழங்கியது. வ்வுயூ-வ்வுயூ, ஏழு தூதர்கள் நித்தியத்திலிருந்து வந்து தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கு தோன்றினர். அவர் கூர்நுனிகோபுர வடிவிலான தூதர்களின் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார். அதன்பின்னர், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட மேகம் அரிசோனா முழுவதும் ஆகாயத்தில் தோன்றியது. ஏழு முத்திரைகளை திறப்பதற்கு தேவன் தம்முடைய ஏழாம் தூதனை திரும்பவும் ஜெபர்சன்வில்லுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதற்கு அது ஒரு அடையாளமாயிருந்தது.
பிப்ரவரி 28, 2025 அன்று, ஏழு கிரகங்கள் ஆகாயத்தில் ஒரே வரிசையில் இருந்தன. மணவாட்டி ஏழு முத்திரைகளைக் கேட்கக் கூடி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துகிற ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டை கேட்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியுடன் கூடிவர நீங்கள் கர்த்தரால் தாமே அழைக்கப்படுகிறீர்கள்.
தீர்க்கதரிசிகளும், ஞானிகளும் காலத்தின் துவக்கத்திலிருந்து ஆவலோடு காத்துக்கொண்டிருந்தது இந்நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய கல்யாண விருந்துக்கு தம்முடைய உண்மையான மணவாட்டியாகிய நமக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு திரும்ப வரும்படியாக, இந்த கடைசி நாட்களில் தேவனுடைய மறைக்கப்பட்ட இரகசியங்களை திறக்கவும் வெளிப்படுத்தவும் தேவன் பலமுள்ள தூதனை பூமிக்கு அனுப்புவதாக கூறினார்.
நான் இப்புதிய சபையில் நுழைந்ததும் என் முதல் வேலையாக, அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபனுக்கும் வாலிபப் பெண்ணுக்கும் விவாகம் செய்து வைத்தேன். அந்நாளின் வைபவத்திற்கென ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரணாக நான் இருப்பேன் என்பதற்கு இது ஓர் அடையாளமாயிருப்பதாக.
இந்த நாளில், இந்த வார்த்தை நிறைவேற்றப்படுகிறது. தேவன் தம்முடைய தூதனின் மூலமாக பேசி, தம்முடைய மணவாட்டியை அந்த நாளின் வைபவத்திற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் அவருடைய அறிவுரைகளை கடிதம் மூலம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறாள்.
சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களின் மூலமாக நாம் என்ன கேள்விப்பட்டிருக்கிறோம்? ஆகாரம், இதோ அது உள்ளது, இதுதான் இடம். ஒரு சத்தம் அவரிடத்தில், “ஆகாரத்தை கொண்டு வந்து, அதை சேமித்து வை. அவைகளை இங்கே வைத்திருப்பதற்கான ஒரே வழி அவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்காகவேயாகும்” என்று கூறினது.
அவர் "வார்த்தையுடன் தரித்திருங்கள்" என்பது தான் அர்த்தம் என்று பலர் நம்புகிறார்கள், அது உண்மைதான், அவர் அதைக் கூறிக் கொண்டிருக்கிறார்; ஆனால் மணவாட்டியோ மணவாளன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற வாக்கியங்களுக்கு இடையேயான மறைபொருளைக் கூட கூர்ந்து கவனித்து வாசிப்பாள்.
இந்த ஸ்தலத்தில் இங்கே தேவன் எனக்கு அருளின தரிசனங்களும்கூட தவறாக அர்த்தங் கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாகத்தான், “ஒலி நாடாக்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் சொல்லுங்கள், தரிசனங்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் கூறுங்கள்” என்று ஒலிநாடாக்களில் நான் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் நன்றாக விழித்திருந்தால் ஒன்றை உங்களால் காணமுடியும். பாருங்கள்? நான் அதை என் கையில் பிடித்து உங்களுக்குக் காண்பிக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.
அவர் தரிசனங்களுக்கு வியாக்கியானங்களை கொடுத்த பிறகும் கூட, தரிசனங்களும் கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தன. அதைத்தான் அவர் நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், நீங்கள் குழப்பமடையவோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லையென்றால், இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தம் என்ன கூறுகிறது என்பதை சரியாக கேளுங்கள்.
வார்த்தை கூட்டு அர்த்தங்களை கொண்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இது என்னுடைய வியாக்கியானம்: சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் அனைத்தும் ஒரே காரியத்தைக் கூறின; ஒலிநாடாக்களுடன் தரித்திருங்கள். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், ஒலிநாடாக்களுக்கு செல்லுங்கள். ஒலிநாடாக்கள் தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமாய் இருக்கின்றன. ஒலிநாடாக்களில் உள்ளதை அப்படியே கூறுங்கள்; அதில் எதையும் சேர்க்காதீர்கள். ஒலிநாடாக்கள் மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளன. வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு தனியாக வருகிறது. தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாயிருக்கிறார். தீர்க்கதரிசி மணவாட்டியை அழைத்து வழிநடத்த வேண்டியதாயிருந்தது. ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளதைக் கொண்டே நான் நியாயந்தீர்க்கப்படுவேன்.
ஒவ்வொரு காரியமும் எனக்கு ஒலிநாடக்களையே சுட்டிக் காட்டுகின்றன.
என்னுடைய அருமையான குட்டையில் உள்ள லீலி புஷ்பங்களே, எனக்கு, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இன்றைக்கான எளிமையில் தேவன் உள்ளதாகும்.
ஒவ்வொரு வாரமும் நான் அதிக உற்சாகமடைகிறேன்; அவருடைய மணவாட்டி செய்தியைக் கேட்க கூடிவருகையில் இன்று என்ன வெளிப்படுத்தப்பட போகிறது? பரிசுத்த ஆவியானவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தும்போது, அவர் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்வார் என்பதை நான் அறிவேன். நான் உணர்கிறேன், எந்த நேரத்திலும், அவர் நம்முடைய கலியாண விருந்துக்கு வந்து நம்மை அழைத்துச் செல்வார்.
நாம் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். நாம், தேவனிடத்திலிருந்து வந்த சந்ததிகளாய் இருக்கிறோம். நாம் பூமியின் சுதந்திர வாளியாயிருக்கிறோம். நாம் இயற்கையை கட்டுப்படுத்துவோம். நாம் சிருஷ்டிக்கும்படி உரைப்போம். நாம் மணவாட்டியாய் இருக்கிறோம்!
நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நாம் நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்கு நம்மை பிரதிஷ்டை செய்வோமாக!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தேதி: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2025
செய்தி: தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல் 63-0317M
நேரம்: பிற்பகல் 12:00, ஜெபர்சன்வில் நேரம்.
அன்புள்ள ஐயன்மீர்,
இது, அடையாளம். இது, நேரம். இது, செய்தியாய் உள்ளது. இது, வார்த்தை. இது, தேவனுடைய சத்தம். இது, மனுஷகுமாரன். இது, தேவன் அருளியிருக்கிற வழி. இதுவே, கடைசி காலம்.
எந்த தீர்க்கதரிசியும், எந்த அப்போஸ்தலனும், ஒருபோதும், எந்தக் காலத்திலுமே, நாம் இப்போது வாழும் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் எப்போதும் வாழ்ந்ததில்லை. இது ஆகாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இது பூமியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செய்தித்தாளிலும் எழுதப்பட்டிருக்கிறது. உங்களால் அந்த கையெழுத்தை வாசிக்க முடிந்தால், இதுவே முடிவாகும்.
காதுள்ளவன், தேவன் என்ன உரைத்தார் என்பதையும், பதிவு செய்ததையும் கேட்கட்டும், அதனால் அது என் வார்த்தையாகவோ, என் எண்ணங்களாகவோ, என் கருத்தாகவோ இருக்காது, ஆனால் தேவனுடைய சத்தம் அவருடைய மணவாட்டிக்கு இன்றைக்கான அவருடைய ஒரே சரியான வழி என்ன என்பதை அறிவுறுத்துகிறது.
செய்தியுடன் தரித்திருக்க, ஒலிநாடாக்களுடன் தரித்திருக்க, வேத வாக்கியங்கள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும், சொப்பனங்களின் வியாக்கியானம் மூலமாகவும், அவர் சொல்லி, நமக்கு வெளிப்படுத்துகிறபடியால் வந்து கேளுங்கள். ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அதை மாத்திரமே கூறுங்கள்.
தேவனிடத்திலிருந்து தாமே தேவனுடைய சத்தத்தைக் கேட்பதைக் காட்டிலும், சிறந்த வழி அல்லது உறுதியான வழி எதுவும் இல்லை. தேவன் தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, இயங்கு பொத்தாளை அழுத்தி கேளுங்கள் என்று நமக்கு சொல்வதன் மூலம் கட்டளையிட்டார், அவ்வளவுதான்.
அதைப் பேசி, அதை பிரசங்கித்து, அது குறித்த சாட்சி பகிர்ந்து, உலகத்திற்கு அதை குறித்து சொல்லுங்கள், ஆனால் மணவாட்டியை பரிபூரணப்படுத்த ஒரே ஒரு பரிபூரண அருளப்பட்ட வழி உண்டு என்று அவர் நமக்கு சொல்லுகிறார்: ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள். உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தால், ஒலிநாடாவை இயக்குங்கள். இது முதன்மையான, மற்றும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாயிருக்க வேண்டும். இது ஒலிநாடாவில் அவர் வைத்துள்ள தம்முடைய பரிபூரண வார்த்தையாக உள்ளது.
இப்போது அதை மற்றவர்களுடைய, சொப்பனங்களுடன் ஒப்பிடுங்கள். இது ஒரு தரிசனமாக இருந்தது. ஆகாரம். இதோ உள்ளது. இதுதான் இடம்.
கேளுங்கள், சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் மணவாட்டிக்கான ஆகாரம் எங்கே? அந்த இடம் எங்கே? மணவாட்டிக்கான செய்தி ஒலிநாடாவில் உள்ளது.
இது எனக்கு வீடு போல் உணரச் செய்கிறது. இதுதான் இடம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், சொப்பனங்களும் அதே காரியத்தை உரைத்தன, ஆகாரம் எங்கே என்று பாருங்கள்.
நாம் அதைப் பெற்றுக்கொண்டோம் என்பதை உறுதிப்படுத்த, மணவாட்டிக்கான ஆகாரம் ஒலிநாடாக்களே என்று மீண்டும் ஒரு முறை அவர் நமக்கு சொல்லுகிறார்.
“இனி காலம் செல்லாது.” அப்படியானால், நண்பர்களே, நம்முடைய தேவனை சந்திக்க நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.
ஆம், கர்த்தாவே, உம்முடைய மணவாட்டியாய் இருந்து, உம்மை சந்திக்க ஆயத்தப்படுவது, அதுவே எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாய் உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் கர்த்தாவே? உம்முடைய அருளப்பட்ட வழி என்றால் என்ன? உம்முடைய திட்டம் என்ன? உம்முடைய பரிபூரண வழி எது? உம்மால் எங்களிடத்தில் பேசி சொல்ல முடிந்த ஒரு தீர்க்கதரிசியை நீர் எங்களுக்கு அனுப்பினீர். தயவு செய்து எங்களுக்கு அறிவுறுத்தும்.
இப்போது நிறைய ஆகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வோமாக. நாங்கள் அதை இப்பொழுதே பயன்படுத்திக் கொள்வோமாக.
ஒருவர் எவ்வளவு குருடராக இருக்க முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்குச் சொல்கிறார்: ஒலிநாடாக்களில் சேமித்து வைக்கப்பட்ட நிறைய ஆகாரங்கள் உண்டு; இப்பொழுதே அவைகளை உபயோகிப்போமாக. இதுவே அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய அறிவுரை.
இந்தச் செய்தியை நீங்கள் விசுவாசிப்பதாக உரிமை கூறினால், மணவாட்டியை அழைக்க தேவனுடைய தீர்க்கதரிசி செய்தியாளராக வில்லியம் மரியம் பிரான்ஹாம் அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும்; அவரைக் குறித்துக் கூறப்பட்ட எல்லா வேத வாக்கியங்களும் அவருடைய ஜீவியத்தை நிறைவேற்றுகிறது என்றும் விசுவாசித்தால்; இது இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்று விசுவாசித்தால், அப்படியானால் அவர்; தேவன், தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவான ஆங்கிலத்தில் மணவாட்டிக்கு சொல்லுகிறார்.
ஒலிநாடாக்களை மாத்திரமே நாம் கேட்கின்ற காரணத்தால் நாம் பரிகசிக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டு, இழிவாக பார்க்கப்பட்டாலும், அவர் நமக்கு செய்யும்படி சொன்னதையே நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம். வெளிப்பாட்டிற்காக கர்த்தாவே உமக்கு நன்றி.
“ஐயா, இதுதான் முடிவு அடையாளமா?”என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ள நான் உலகத்தை அழைக்க விரும்புகிறேன். நாங்கள் எல்லாவற்றையும் பற்றிக் கேட்போம்:
இடி முழக்கங்கள், ஏழு முத்திரைகள், கூர்நுனி கோபுர பாறை, ஆவிக்குரிய ஆகாரம், நித்தியம், தூதர்களின் கூட்டம், என்னுடைய தலைமையகம், தரிசனம், சொப்பனம், தீர்க்கதரிசனம், மறைக்கப்பட்ட இரகசியங்கள், வேத வாக்கியத்திற்கு அடுத்த வேதவாக்கியம்.
தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவதை விட இந்த ஜீவியத்தில் மகத்தானது வேறொன்றுமில்லை.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேத வாக்கியங்கள்:
மல்கியா 4வது அதிகாரம்
பரி. மத்தேயு 13:3-50
ரோமர் 9:33 / 11:25 / 16:25
1 கொரிந்தியர் 14:8 / 15வது அதிகாரம்
கலாத்தியர் 2:20
எபேசியர் 3:1-11 / 6:19/ 5:28-32
கொலோசெயர் 4:3
1 தெசலோனிக்கேயர் 4:14-17
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 13:8
2 பேதுரு 2:6
வெளிப்படுத்தின விசேஷம் 1:20 / 3:14 / 5:1 / 6:1 / 10:1-7 / 17வது அதிகாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள விழித்துக் கொண்டும் & காத்துக் கொண்டுமிருப்பவர்களே,
மணவாட்டி மத்தியில் முன் எப்போதும் இல்லாத ஒரு உற்சாகம் நிலவுகிறது. நாம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம்; நமது ஜூபிலி ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நாள் வருவதற்கு மணவாட்டி நீண்ட நேரம் காத்திருந்தாள். புறஜாதி யுகத்தின் முடிவு வந்துவிட்டது, நம்முடைய கர்த்தருடனான நித்தியத்தின் ஆரம்பம் விரைவில் தொடங்கும்.
நாம் வாழும் காலத்தை வார்த்தையைக் கேட்பதனால் புரிந்து கொள்கிறோம். நேரம் கடந்துவிட்டது. எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான நேரம் சமீபித்துவிட்டது. நாம் வந்துவிட்டோம். பரிசுத்த ஆவியானவர் வந்து அவருடைய மணவாட்டிக்கு எல்லா மகத்தான, ஆழமான, இரகசிய காரியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாம் பதறலில் இருந்து, தேவனைத் தேடுகிறோம்; நம்மை ஆயத்தப்படுத்துகிறோம். இந்த உலகத்தின் எல்லாக் காரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டோம். இந்த வாழ்க்கையின் கவலைகள் நமக்கு ஒன்றுமில்லை. நம்முடைய விசுவாசம் முன்னெப்போதையும் விட அதிக உயரத்தை எட்டியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட அம்மாளை அழைத்துச் செல்லும்படியாய் அவளுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அறுபத்தொன்பது வாரங்கள் சரியாக நிறைவேறிவிட்டன; யூதர்கள் திரும்பிப் போவது சரியாக நிறைவேறிவிட்டது. சபைக் காலம் சரியாக நிறைவேறிவிட்டது. நாம் முடிவுக் காலத்தில், முடிவு காலத்தில் இருக்கிறோம், லவோதிக்கேயா சபையின் காலத்தில், அதன் முடிவில் இருக்கிறோம். நட்சத்திர செய்தியாளர்கள் - தூதர்கள் யாவரும் தங்களுடைய செய்தியைப் பிரசங்கித்துவிட்டனர். அது புறப்பட்டுச் சென்றுவிட்டது. நாம் அருகே நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
என்னே ஒரு நம்ப முடியாத ஆனால் உண்மையான நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும் இல்லாத வகையில் சத்துரு ஒவ்வொருவரையும் தாக்குவது மிகவும் கடினமான காலகட்டம். அவன் தன்னிடம் உள்ள அனைத்தையும் நம் மீது வீசுகிறான். அவன் பதறலில் இருக்கிறான், ஏனென்றால் அவனுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறிவான்.
ஆனால் அதே நேரத்தில், நாம் நம்முடைய ஜீவியங்களில் இதைப் போன்று ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
● நாம் இதைப் போன்று ஒருபோதும் கர்த்தரிடம் நெருங்கியதில்லை.
● பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரையும் நிரப்புகிறார்.
● அவருடைய வார்த்தையின் மீது நமக்குள்ள அன்பு இதைப் போன்று ஒருபோதும் மகத்தானதாக இருந்ததில்லை.
● அவருடைய வார்த்தையின் நம்முடைய வெளிப்பாடு நம்முடைய ஆத்துமாவை நிரப்புகிறது.
● நாம் ஒவ்வொரு சத்துருவையும் வார்த்தையால்தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும், நாம் யார் என்பதில் இதைப் போன்று உறுதியாக இருந்ததில்லை:
• முன்குறிக்கப்பட்டது
● தெரிந்து கொள்ளப்பட்டது
● தேர்ந்தெடுக்கப்பட்டது
● ராஜரீக வித்து
● இனிய இருதயம்
● நித்திய, வெள்ளை அங்கி தரித்த, திருமதி. இயேசு, ஒளிநாடாவைக் கேட்பது, பிரகாசமாக்கப்பட்ட, கற்புள்ள கன்னி, ஆவியால் நிரப்பப்பட்ட, வெல்ல முடியாத, புத்திர சுவிகாரமாக்கப்பட்ட, கலப்படமற்ற, கன்னி வார்த்தை மணவாட்டி.
அடுத்து என்ன வரப்போகிறது? கல் வருகிறது. நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் விழித்துக் கொண்டும், காத்துக் கொண்டும், ஜெபித்துக் கொண்டுமிருக்கிறோம். அவருடைய வருகைக்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.
அது, "நாம் அப்படி நம்புகிறோம்" என்பதில்லை, நமக்குத் தெரியும். இனி சந்தேகங்களே இல்லை. ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் அது முடிந்துவிடும், நாம் நம்முடைய கல்யாண விருந்தில் அவரோடும் நம்முடைய எல்லா அன்புக்குரியவர்களோடும் மறுபுறம் இருப்போம்.
அது தான் ஆரம்பம்...மற்றும் முடிவே இல்லை!!
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பின அவருடைய பலமுள்ள தூதன் மூலமாக பேசி, தேவனுடைய எல்லா இரகசியங்களையும் சொல்லி வெளிப்படுத்தப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் அந்த கலியாண விருந்துக்கு ஆயத்தமாக வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 61-0806 - தானியேலின் எழுபதாம் வாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள களிகூருகிற மணவாட்டியே,
நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நாளையும் வேளையையும் கண்டறிய ஜெபத்திலும் வேண்டுதல்களிலும் நம்முடைய முகங்களை பரலோகத்தை நோக்கியவாறு வைத்துள்ளோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகெங்கிலும் இருந்து உன்னதங்களிலே ஒன்றாக வீற்றிருந்து, தேவன் பேசி, அவருடைய பலமுள்ள தூதுனாகிய செய்தியாளர் மூலமாக அவருடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவதைக் கேட்கிறோம். இந்த கடைசி நாளில் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்த பிதாவானவர் தம்முடைய மணவாட்டிக்கு பூமிக்குரிய தூதனாகிய செய்தியாளரை அனுப்பினார்.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாகிய யூதர்களுக்கு காபிரியேல் தூதனாய் இருக்கிறார். ஆனால் தம்முடைய புறஜாதி மணவாட்டிக்கு, அவர் தம்முடைய அன்பான இனிய இருதயமான மணவாட்டிக்கு அவருடைய எல்லா வார்த்தையும் பேசி வெளிப்படுத்தும் படியாக வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்னும் பெயர் கொண்ட பூமிக்குரிய தூதனில் மாம்ச சரீரத்தினூடாக மெல்கிசேதேக்கு தாமே வந்து பேசினார்.
மணவாட்டி அவருடைய ஆவிக்குரிய ஆகாரத்தை, மறைவான மன்னாவை கடைசி மணி நேரம் வரை ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் தங்களுடைய விரல் நுனியில் வைத்திருக்கும்படியாக, அவர் அதை பதிவுசெய்து, சேமித்து, பாதுகாத்து வைத்திருந்தார்.
தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவதை நாம் கேட்கும்போது, நம்முடைய உள்ளான மனுஷன் அத்தகைய அபிஷேகத்தால் நிரப்பப்படுகிறது. நாம் அவருடைய வார்த்தையை தெளிவாக கண்டு அதனுடைய அர்த்தத்தை புரிந்து கொள்ளும்படியாக எப்படியாய் அவர் வெளிப்படுத்துகிறார். அது நாம் ஜீவித்து கொண்டிருக்கிற வேளையையும், நாம் யாராய் இருக்கிறோம் என்றும், வெகு சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதையும், சீக்கிரத்தில் வரப்போகிற நம்முடைய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலையும் நமக்கு சொல்லி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாம் கலியாண விருந்தில் அவருடன் இருக்கும்போது இங்கே பூமியில் என்ன சம்பவிக்கும் என்பதை அவர் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்திக் கொண்டும் கூட இருக்கிறார். அவர் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களின் குருடாக்கப்பட்ட கண்களை எவ்வாறு திறப்பார்; அவருடைய புறஜாதி மணவாட்டி நிமித்தமாக அவர் குருடாக்கினவர்கள்.
என் நண்பர்களே, நாம் இந்த உலகத்தில் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், நம்மை அழைத்துச் செல்லும்படியான அவருடைய வருகைக்காக ஏங்குகிறோம் என்பதை நான் அறிவேன், ஆனால் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதில் நன்றியுள்ளவர்களாயிருந்து நாமும் கூட களிகூருவோமாக.
நாம் நம்முடைய கரங்களையும், நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சத்தங்களையும் உயர்த்தி களிகூருவோமாக. வெகு சீக்கிரத்தில் அவர் நமக்காக என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, அவர் என்ன வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை குறித்தும், இப்பொழுது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்தும் நாம் களிகூருவோமாக.
அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் ஒன்றாக இணைகிற அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாய் நாம் இருக்கிறோம் என்று அவர் நிமிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய சத்தத்தோடும், அவருடைய வார்த்தையோடும், அவருடைய தூதனோடும் தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நமக்கு உறுதியளித்துக்கொண்டிருக்கிறார், நாம் யார் என்பதை அறிவதிலும், அடையாளங் கண்டு கொள்வதிலும் அவர் நமக்கு விசுவாசத்தை அளித்துள்ளார்:
மாம்சத்தில் ஜீவிக்கிற அவருடைய வார்த்தை.
நாம் பயப்பட ஒன்றுமில்லை; கவலைப்படவும் ஒன்றுமில்லை; வருத்தப்படவும் ஒன்றுமில்லை. அது எனக்கு எப்படி தெரியும்? தேவன் அவ்வண்ணமாய் கூறினார்! எனவே நாம் களிகூர்ந்து, மகிழ்ச்சியாயிருந்து, நன்றியுள்ளவர்களாக இருப்போமாக; ஜீவனுள்ள வார்த்தை நமக்குள் ஜீவித்து வாசம் செய்கிறது. நாம் அவருடைய மேம்பட்ட ராஜரீக வித்தாயிருக்கிறோம்.
நேரம் வந்துவிட்டது என்பதையும், அவருடைய வார்த்தைக்கு உண்மையாகவும், உண்மையாக காத்துக் கொள்வதன் மூலமும் நாம் நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளோம் என்பதை அறிந்து கொள்வதில் கர்த்தரும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன்.
முதன்முறையாக கண்ணாடியில் பார்த்த சிறுவனைப் போல, நாம் அவருடைய வார்த்தைக்குள்ளாக நோக்கி பார்த்துக் கொண்டு, நாம் யாராயிருக்கிறோம் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே...அது நான் தான். நான் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டி. நீர் தெரிந்து கொண்ட ஒருவன் நான் தான். நான் உமக்குள் இருக்கிறேன். நீர் எனக்குள் இருக்கிறீர், நாம் ஒன்றாயிருக்கிறோம்.
பூமியின் மேல் எப்போதும் ஜீவித்தவர்களிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஜனங்களாய் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி நம்மால் கொண்டாடாமல் இருக்க முடியும்?
நமக்கு முன் இருந்த எல்லா பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் இந்த நாளில் ஜீவிக்க விரும்பி, இந்த இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதை காண விரும்பினர். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் எங்களை இங்கே வைத்தார்.
நாம் காத்திருக்க முடியவில்லை:
ப்ர்ர்ர்ர்! என்னே! வூயு! வேறு வார்த்தைகளில் கூறினால், சத்துருவானவன் அடைக்கப்பட்டபொழுது, பாவமானது முடிவுக்குக் கொண்டு வரப்படும் போது, நித்திய நீதியானது வருவிக்கப்படும் பொழுது, சாத்தானானவன் பாதாளக் குழியில் தள்ளியடைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டிருக்கும் போது, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஆமென்! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அது வரப்போகிறது. சகோதரனே, அது வரப் போகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தானியலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள் 61-0730E என்ற செய்தியை தேவனுடைய தூதன், தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வருவதை கேட்கும்படி உலகம் முழுவதிலுமிருந்து நாங்கள் ஒன்று கூடியிருக்கையில், என்னே ஒரு அபிஷேகம் இருக்கப்போகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்பான தீர்மானிக்கப்பட்டவர்களே,
ஏழு சபை காலங்களைப் படித்தபோது என்ன ஒரு அற்புதமான குளிர்காலத்தை நாம் அனுபவித்து வருகிறோம், பின்னர் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுகளின் புத்தகத்தில் தேவன் நமக்கு இன்னும் கூட அதிகமாக வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் எப்படி சபைக் காலங்களாக இருந்தன, பின்னர் யோவான் 4-வது அதிகாரத்தில் எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டான் என்றும், 5-வது அதிகாரத்தில் வரவிருக்கும் காரியங்களையும் நமக்குக் காண்பிக்கிறது.
6 வது அதிகாரத்தில், வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரத்திலிருந்து 19 வது அதிகாரம் வரை நடக்கும் காரியங்களைக் காண யோவான் மீண்டும் பூமியில் எப்படி இறங்கினான் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
தேவனுடைய சத்தம் அவருடைய பலமுள்ள ஏழாம் தூதன் மூலமாக பேசி, அடுத்து என்ன வெளிப்படப் போகிறது என்று நமக்குச் சொல்வதை நாம் கேட்க போகிறபடியால் மணவாட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு ஆசீர்வதிக்கப்படுவாள்.
நாம் தானியேலின் எழுபது வாரங்கள் பற்றிய சிறந்த ஆய்வைத் தொடங்குவோம் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஏழு முத்திரைகளுக்குள் செல்வதற்கு முன்பு அது மீதமுள்ள செய்தியில் இணையும் என்று தீர்க்கதரிசி கூறினார்; ஏழு எக்காளங்கள்; மூன்று ஆபத்துக்கள்; சூரியனில் ஸ்தீரி; சிவப்பான மிருகமாகிய பிசாசு தள்ளப்படுதல்; இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் முத்திரையிடப்படுதல்; இந்த நேரத்திற்கு இடையே யாவும் சம்பவிக்கிறது.
தானியேல் புத்தகம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நேரம் மற்றும் காலத்திற்கான சரியான நாள்காட்டியாகும், அது எவ்வளவு சிக்கலாக்கப்பட்டுள்ளதாக தோன்றினாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவன் அதை உடைத்து நமக்காக அதை எளிதாக்குவார்.
அவருடைய ஜனங்களைத் தேற்றி இப்பொழுது என்ன சமீபமாயிருக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு கூறவும், இன்று இக்காலையில் இங்கே பிரசன்னமாயிருப்பவர்களுக்கும், இந்த ஒலிநாடாக்கள் உலகம் பூராவிலும் போகப் போகிறதே அவ்விடங்களிலுள்ள தேசங்களில் இதைக் கேட்பவர்களுக்கும், நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதைக் கூறத்தக்கதாகவே இப்பொழுது நான் என்னத் தேடிக் கொண்டி ருக்கிறேன் என்பதை தேவன் அறிவார்.
அந்த நாளுக்காகவும் அந்த நேரத்திற்காகவும் ஏங்கி ஜெபித்துக்கொண்டிருக்கும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாய் நாம் இருக்கிறோம். நம்முடைய கண்கள் பரலோகத்தை நோக்கியவாறு இருக்க, அவருடைய வருகைக்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் யாவரும் தானியேலைப் போல் ஜெபத்திலும் வேண்டுதல்களிலும் நம்முடைய முகங்களை பரலோகத்தை நோக்கியவாறு வைத்திருப்போம், வார்த்தையை வாசித்து, அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் கர்த்தருடைய வருகை விரைவில் நெருங்குகிறது என்பதை நாம் அறிந்துள்ள காரணத்தால், நாம் முடிவில் இருக்கிறோம்.
மிக எளிதாக நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பாரத்தையும், ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு சிறிய அவநம்பிக்கையையும் ஒதுக்கி வைக்க பிதாவே எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய நேரம் வரையறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, நாங்கள் பரம அழைப்பின் பந்தய பொருளுக்கான இலக்கை நோக்கி இப்பொழுது தொடருவோமாக.
செய்தியானது புறப்பட்டு சென்று விட்டது. ஒவ்வொரு காரியமும் இப்பொழுது ஆயத்தமாக உள்ளது; நாம காத்துக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டும் இருக்கிறோம். சபையானது முத்தரிக்கப்பட்டுள்ளது. துன்மார்க்கர் இன்னும் அதிகமாக துன்மார்க்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். சபைகள் அதிக சடங்காரச்சாரமுள்ளவளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மண்டை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
தேவனுடைய காரியங்களுக்கு திரும்ப, மூல செய்திக்கு ஜனங்களைத் திரும்ப அழைக்க, வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிற ஒரு சத்தம் நமக்கு உண்டு. இந்த காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கிறதை நாம் வெளிப்பாட்டின் மூலம் புரிந்து கொள்கிறோம்.
நாம் தானியேல் புத்தகத்தின் நம்முடைய மிகச் சிறந்த ஆய்வினைத் துவங்குகையில், தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்குஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன்வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
61-0730M - காபிரியேல் தானியேலுக்கு அறிவித்த கட்டளைகள்