அன்பான உண்மையும் ஜீவனுமுள்ள மணவாட்டியே,
வார்த்தையாகிய இயேசுதாமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு வந்தபோது, அவர் வருவதாகக் கூறியபடியே, ஒரு தீர்க்கதரிசியாக வந்தார். அவர் மீண்டும் வருவதற்கு முன்பு, இயேசு கிறிஸ்து என்ற நபரின் முழு வெளிப்படுத்துதலும் ஒரு தீர்க்கதரிசியில் மீண்டும் மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் என்று அவருடைய வார்த்தை அறிவிக்கிறது. அந்த தீர்க்கதரிசி வந்திருக்கிறார், அவருடைய பெயர் வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்ததம் நேரடியாக அவர்களிடம் பேசுவதைக் கேட்பது தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல என்பதை எப்படி எவரேனும் அடையாளங்கண்டு கொள்ள முடியாது? வார்த்தை எப்போதும் அவருடைய தீர்க்கதரிசிக்கு வருகிறது என்பதை நாம் அறிவோம்; அது வேறு வழியில் வர முடியாது. அது குறித்து தேவன் நமக்கு முன்னறிவித்த அவருடைய வழித் தடத்தின் வழியாக வர வேண்டும். அதுவே எப்போதும் வரும் ஒரே வழி. தேவன் அதைச் செய்வேன் என்று வாக்குபண்ணின வழியில் அசைவாடுகிறார். அவர் எப்போதும் செய்த அதே விதத்தில் செய்ய அவர் ஒருபோதும் தவறுவதில்லை.
அவர்கள் யாவரும் ஒன்றையே புசித்தனர், அவர்கள் யாவரும் ஆவியிலே நடனமாடினார்கள், அவர்கள் யாவரும் சகலத்தையும் பொதுவாக வைத்திருந்தார்கள்; ஆனால் பிரித்தெடுக்கும் நேரம் வந்த போது, வார்த்தையானது பிரித்தெடுத்தலைச் செய்தது. அது இன்றைக்கும் அவ்விதமாகவே இருக்கிறது! வார்த்தையானது பிரித்தெடுத்தலைச் செய்தது! நேரமானது வந்த போது...
இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கிற அந்த நேரத்தை நாம் காண்கிறோம், வார்த்தையானது வேறு பிரித்துக் கொண்டிருக்கிறது. "இன்றைக்கு மணவாட்டியை வழிநடத்த பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர் என்று தேவன் அழைத்த மற்றவர் இருக்கிறார்கள். வெறும் ஒலிநாடாக்களை விட உங்களுக்கு அதிகம் தேவை. இன்றைக்கு சபையை வழிநடத்த தேவன் மனிதர்களை வைத்திருக்கிறார்" என்று அவர்கள் கூறும்போது, மணவாட்டி தீர்க்கதரிசியை மிதமிஞ்சிய ஸ்தானத்தில் பொருந்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாள்.
"இந்த கூட்டத்திலேயே நீர் ஒருவர் மாத்திரம் தான் என்று நினைக்க முயற்சிக்கிறீர். சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்!” தேவன் அதைப் போல ஒரு போதும் இடைப்பட்டது கிடையாது. அவனுக்கு அதைக் காட்டிலும் இன்னும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவன், “சரி. சபையார் எல்லாரும் பரிசுத்தமுள்ளவர்கள். நீ உன்னையே...முயற்சிககிறாய்.” இப்போது இதை நாம் இன்றைக்கு வீதிப் பேச்சு வழக்கில் வெளிப்பபடுத்துவோமானால்,, “கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல்,”.என்பதாகும்.
மேலும் தேவன் மோசேயை அங்கே அதற்காகத்தான் அனுப்பினார் என்று அவன் அறிந்திருந்தான்.
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களை; அவர்களை கர்த்தர் உரைக்கிறதாவது, தீர்க்கதரிசி செய்தியாரிடம் வழிநடத்தும்படிக்கு உடையவராயிருக்கிறார். செய்தியும் செய்தியாளரும் ஒன்றே. அது தேவன் இன்றைக்கான அருளப்பட்ட வழியை, எப்பொழுதுமே ஒருபோதும் மாற்றுகிறதில்லை என்பதாயுள்ளது.
ஏனென்றால் அவர்கள் ஒரு தவறுக்கு செவிகொடுத்தார்கள். மோசே, தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டவனும், மேலும், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு வழியைக் காண்பிக்கும் தலைவனுமாக இருந்தபோது. அவர்கள் இதுவரையிலும் நல்லவிதமாக வந்திருக்கிறார்கள், ஆனாலும் அப்போது அவர்கள் அவனுடன் ஒத்துப்போகமாட்டோம் என்றார்கள்…இப்போது, விசுவாசிகளால் இதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அவிசுவாசிகளால் அந்த ரூபகாரப்படுத்தப்பட்டதைப் புரிந்துக் கொள்ள முடியாது.
இன்றைய இந்த மகத்தான கடைசிக் கால வெளிப்பாட்டைப் பெற நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டீர்கள் என்பது மாத்திரமல்ல, ஆனால் தேவன், தம்முடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமான ஒலிநாடாக்கள் மூலம், தம்முடைய இனிய இருதயமான மணவாட்டியிடம் மறைப்ப்பொருளில் பேசுகிறார்.
அப்படியானால், நீ ஒரு தேவனுடைய குமாரனாகவோ அல்லது ஒரு தேவனுடைய குமாரத்தியாகவோ இருந்தால், நீ எல்லா சமயமும் தேவனுக்குள் இருந்தாய். ஆனால், நீ எந்த படுக்கையில், எந்த நேரத்தில் விதைக்கப்படுவாய் என்று அவர் அறிந்திருந்தார். ஆகையால் இந்த மணி நேரத்தில் வந்து கொண்டிருக்கிற செய்திக்கு, இந்த மணி நேரத்தின் உண்மையுள்ளவரும் ஜீவிக்கிறவருமான தேவனை ரூபகாரப்படுத்தும்படிக்கு இந்த மணி நேரத்திற்கான சவாலை சந்திக்கும்படியான, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரனாய் அல்லது குமாரத்தியாய், ஒரு தேவனுடைய குமாரனாய், ஒரு சிருஷ்டியாக நீ இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கிறாய். அது உண்மை! நீ உலகத் தோற்றத்திற்கு முன்னே தெரிந்துகொள்ளப்பட்டாய்.
அவருடைய மணவாட்டிக்கு என்னே ஒரு மறைபொருளான அன்பின் மடல் மகிமை!!! உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருந்தார், நம்மைத் தெரிந்து கொண்டார் என்பது மட்டுமல்லாமல், இன்றைக்கான அவருடைய வெளிப்படுத்தப்பட்ட குமாரரும் குமாரத்தியுமாயிருக்கும்படிக்கு அவர் நம்மை தெரிந்து கொண்டார் என்று அவர் இங்கே நமக்கு சொல்லுகிறார். இந்த நேரத்தில் வந்து கொண்டிருக்கிற செய்தியான, இந்த நேரத்தின் உண்மையும் ஜீவனுமுள்ள தேவனை ரூபகாரப்படுத்த இந்த நேரத்தின் சவாலை நாம் சந்திப்போம் என்பதை அவர் அறிந்திருந்ததால், ஆதியில் இருந்த மற்ற எல்லா பரிசுத்தவான்களுக்கும் மேலாக, இன்று அவர் நம்மை இங்கு பூமியில் வைத்தார்.
நாம் தேவனுக்குள், ஒரு மரபணுவாக, ஒரு வார்த்தையாக, ஒரு தன்மையாக, ஆதியிலிருந்தே இருந்தோம், ஆனால் இப்போது கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு, அவருடைய வார்த்தையின் மூலம், அவருடைய வார்த்தையினால் அவருடன் ஐக்கியம் கொள்கிறோம்; ஏனென்றால் நாம் அவருடைய வார்த்தை, அது நம்முடைய ஆத்துமாக்களை போஷித்துக் கொண்டிருக்கிறது.
தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையைத் தவிர வேறு எதையும் நம்முடைய ஜீவியத்தில் செலுத்த முடியாது, புகுத்தவும் மாட்டோம். இது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது என்பதை நாம் விசுவாசித்து, அடையாளம் கண்டு கொள்கிறோம்.
நீங்கள் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்களால் ஆமென் என்று கூற முடிந்த, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமான, ஒரே சத்தத்தை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்துகொள்ள உங்களுக்காக நாங்கள் விருப்பங் கொள்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: தற்கால நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்படுகின்றன 65-1206
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
ஆதியாகமம் 22
உபாகமம் 18:15
சங்கீதம் 16:10 / 22:1 / 22:18 / 22:7-8 / 35:11
ஏசாயா 7:14 / 9:6 / 35:7 / 50:6 / 53:9 / 53:12 / 40:3
ஆமோஸ் 3:7
சகரியா 11:12 / 13:7 / 14:7
மல்கியா 3:1 / 4:5-6
பரி. மத்தேயு 4:4 / 24:24 / 11:1-19
பரி. லூக்கா 17:22-30 / 24:13–27
எபிரெயர் 13:8 / 1:1
பரி. யோவான் 1:1
வெளிப்படுத்தின விசேஷம் 3:14-21 / 10:7
அன்பான தேவனுடைய தன்மைகளே,
இந்தச் செய்தியில் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய மணவாட்டிக்கு எழுதப்பட்ட அன்பின் மடல். பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா நம்மை மிகவும் நேசிக்கிறார் என்று நினைப்பது, நாம் அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும் என்று அவர் விரும்புவது மட்டுமல்லாமல், “நீங்கள் அவருடைய ஜீவனுள்ள வேதவாக்கியமாயும், நான் உலகத்திற்கு வெளிப்படுத்தக்கூடிய என்னுடைய ஜீவனுள்ள தன்மையாயும் இருக்கிறீர்கள்” என்று நமக்குச் சொல்லக்கூடிய அவருடைய சத்தம் நம்முடைய இருதயங்களில் பேசுவதைக் கேட்கவும் அவர் விரும்பினார்.
பின்னர் அவர் பூமியில் செய்த அனைத்து தியாகங்களுக்கும், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவர் நடந்த பாதைக்கும் பிறகு, அவர் ஒரே ஒரு காரியத்தைக் கேட்டார் என்று நினைப்பது:
"அதாவது, நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்.” அவர் நமது ஐக்கியத்தை கேட்டார். அவர் அந்தக் காரியத்தை மாத்திரமே ஜெபத்தில் பிதாவினிடம் கேட்டார், என்றென்றும் உங்களுடைய தோழமையே.
அவருடைய ஐக்கியத்தை, என்றென்றைக்கும் அவருடைய தோழமையை ஏற்றுக் கொள்ளும்படியாக நான் இருக்கும் இடத்தில், "அவருடைய வார்த்தை," நாமும் கூட இருக்க வேண்டும். ஆகையால், நாம் அவருடைய கற்புள்ள வார்த்தை மணவாட்சியாக இருக்கும்படியாக ஒலிநாடாவில் நம்மிடத்தில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் பிழைக்க வேண்டும், அதுவே நம்மை மணவாளனின் பாகமாக்குகிறது.
இந்த காலத்தில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு இதுதான்; இன்னொரு காலத்தில் அவர் எப்படி இருந்தார் என்பது அல்ல, இப்பொழுது அவர் யாராய் இருக்கிறார் என்பதேயாகும். இன்றைக்கான வார்த்தை. இன்றைக்கு தேவன் எங்கே இருக்கிறார். அதுவே இன்றைக்கான வெளிப்பாடாயுள்ளது. அது இப்பொழுது மணவாட்டிக்குள் வளர்ந்துகொண்டு, நம்மை தேவனுடைய குமாரர் மற்றும் குமாரத்திகளின் முழு வளர்ச்சிக்குள்ளாக உருவாக்குகிறது.
நாம் அவருடைய வார்த்தையில் நம்மைப் பார்க்கிறோம். நாம் யார் என்பதை நாம் அறிவோம். நாம் அவருடைய திட்டத்தில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். இது இன்றைக்கான தேவன் அருளின வழியாயுள்ளது. எடுத்துக்கொள்ளப்படுதல் சமீபத்து விட்டது என்பதை நாம் அறிவோம். சீக்கிரத்தில் நம்முடைய அன்பார்ந்தவர்கள் பிரசன்னமாவர். நாம் வந்தடைந்துவிட்டோம் என்பதை அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம். நாம் பரலோகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறோம்…ஆம், பரலோகத்திற்கு, இதைப் போன்ற ஒரு உண்மையான இடத்திற்கே.
நாம் தத்ரூபமான ஓரிடத்துக்கு சென்று செயல் புரியப் போகின்றோம். அங்கு நாம் வாழப் போகின்றோம்; அங்கு நாம் பணிபுரியப் போகின்றோம்; அங்கு நாம் அனுபவித்து மகிழப் போகின்றோம். நாம் ஜீவிக்கப் போகிறோம். நாம் ஒரு ஜீவனுக்கு, உண்மையான நித்திய ஜீவனுக்கு செல்கிறோம். நாம் ஒரு பரலோகத்துக்கு, ஒரு பரதீசுக்கு செல்லப் போகின்றோம், ஆதாமும் ஏவாளும், பாவம் பிரவேசிப்பதற்கு முன்பு, ஏதேன் தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து, புசித்து, எல்லாவற்றையும் அனுபவித்தது போன்று நாமும் அந்த இடத்தை அடைவதற்கு நமது பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அது உண்மை, மறுபடியுமே. முதலாம் ஆதாம் பாவத்தின் மூலம் நம்மை அங்கிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டான்; இப்பொழுது இரண்டாம் ஆதாம் நீதியின் மூலம் நம்மை மறுபடியும் அங்கு கொண்டு செல்கிறார், நம்மை நீதிமான்களாக்கி, உள்ளே கொண்டு செல்கிறார்.
இது நமக்கு என்ன அர்த்தம் என்பதை யாராவது எப்படி வார்த்தைகளில் சொல்ல முடியும்? நாம் நித்தியம் முழுவதும் ஒன்றாக ஜீவிக்க பரதீசுககு செல்கிறோம் என்பதுதான் யதார்த்தம். இனி துக்கம், வேதனை அல்லது துயரம் இல்லை, பரிபூரணத்தின் மேல் பரிபூரணம்.
நம்முடைய இதயங்கள் களிகூர்ந்து கொண்டிருக்கின்றன, நம்முடைய ஆத்துமாக்கள் நமக்குள் அனல்மூட்டப்படுகின்றன. சாத்தான் ஒவ்வொரு நாளும் நம் மீது அதிக அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் நாம் இன்னும் மகிழ்ச்சியடைகிறோம். ஏன்:
• நாம் யார் என்பதை நாம் அறிவோம்.
• நாம் அவரைத் தவறவிட்டதில்லை, தவறவிடமாட்டோம் என்பதை நாம் அறிவோம்.
• அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம்.
• அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.
சகோதரரன் ஜோசப், நீங்கள் ஒவ்வொரு வாரமும் அதையே எழுதுகிறீர்கள். மகிமை, அவர் உங்களை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படியாக அவர் விரும்புகிறபடியால் நான் ஒவ்வொரு வாரமும் அதையே எழுதுவேன். நீங்கள் யார். நீங்கள் எங்கு செல்கிறீர்கள். எதிர்மறையானது நேர்மறையாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வார்த்தையாயும் வார்த்தையாகவுமே மாறிக் கொண்டிருக்கிறீர்கள்.
அன்பான உலகமே, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, "நான்" உங்களை அழைப்பதால் அல்ல, ஆனால் "அவர்" உங்களை அழைப்பதால் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். "நான்" ஒலிநாடாவைத் தேர்ந்தெடுத்ததால் அல்ல, ஆனால் உலகம் முழுவதும் மணவாட்டியின் ஒரு பகுதியுடன் ஒரே நேரத்தில் வார்த்தையைக் கேட்கவே.
மணவாட்டி உலகெங்கிலும், சரியான நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும் என்பதை நாம் உணர முடியுமா? அது தேவனாயிருக்க வேண்டும். தேவன் தம்முடைய தூதன் பூமியில் இருந்தபோது தீர்க்கதரிசியை அதைச் செய்ய வைத்தார். அவர் மணவாட்டியை ஜெபத்தில் ஒன்றுபட ஊக்குவித்தார், அனைவரும் ஒரே நேரத்தில் ஜெபம் செய்ய, ஜெஃபர்சன்வில் நேரம், 9:00, 12;00, 3:00; இப்போது மணவாட்டி ஒன்றாக ஒன்றிணைந்து தேவனுடைய சத்தம் அவர்கள் அனைவரிடமும் ஒரே நேரத்தில் பேசுவதைக் கேட்பது எவ்வளவு பெரியது?
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: இனி வரப்போகும் காரியங்கள் 65-1205
வேதவாக்கியங்கள்:
பரி. மத்தேயு 22:1-14
பரி. யோவான் 14:1-7
எபிரெயர் 7:1-10
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள நிபந்தனையற்ற மணவாட்டியே,
கர்த்தர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தினபடியால் கடந்த வாரம் முகாமில் அவர் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை நமக்குத் தந்தார். அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் நிரூபித்தார், அதுவே நம்முடைய முற்றிலுமானதாய் இருக்கிறது: அவருடைய வார்த்தை, இந்த செய்தி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம், அவை யாவும் மாறாததாயிருக்கின்றன, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
பிசாசு செய்தியை செய்தியாளனிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதை நாம் கேள்விப்பட்டோம், ஆனால் கர்த்தராகிய இயேசுவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக, தேவன் தாமே தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் பேசி நமக்குச் சொன்னார்:
உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியுடன், தேவனால் நியமிக்கப்பட்டு, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதன் வரும்போது, செய்தியும் அதைக் கொண்டு வந்த தூதனும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று நாம் கண்டறிகிறோம். ஏனென்றால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்திக்கு, வார்த்தைக்கு வார்த்தை, அடையாளமாக இருக்கத்தக்கதாக அனுப்பப்பட்டிருக்கிறான், ஆகவே அவனும் அவனுடைய செய்தியும் ஒன்றாக உள்ளது.
அதன் பின்னர் நாம் ஒலிநாடாக்களை கேட்டுக் கொண்டிருக்கும்போது எந்த பூச்சியையும் பிடிக்கும்படி ஒரு வடிகட்டும் கரந்தைத் துணி நமக்குத் தேவையில்லை என்று அவர் நமக்குக் சொன்னார், ஏனென்றால் இந்தச் செய்தியில் பூச்சிகளோ அல்லது பூச்சி சாறுகளோ இல்லை. அது எப்போதும் தூய்மையாகவும் சுத்தமாகவும் பாயும் அவருடைய ஆர்ட்டீசியன் ஊற்றாகும். எப்போதும் பொங்கி எழும்பிக் கொண்டு, ஒருபோதும் வற்றிப் போகாமல், தொடர்ந்து தள்ளிக் கொண்டே தள்ளிக்கொண்டேயிருந்து, நமக்கு அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டை அதிக அதிகமாகத் தருகிறது.
அவர் நம்முடனான அவருடைய உடன்படிக்கை மறுக்க முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படாதது, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நிபந்தனையற்றது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர் நமக்கு நினைவூட்டினார்.
அது அன்பு, ஆதரவு அல்லது சரணடைதல் என எதுவாக இருந்தாலும், ஏதாவது நிபந்தனையற்றதாக இருந்தால் அது முற்றிலுமானது மற்றும் எந்த சிறப்பு விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல: வேறு என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அது நடந்தேதீரும்.
அதன்பின்னர் அவர் மனதில் பதியச் செய்ய விரும்பினார், எனவே இந்த நாளில் அவருடைய வேதவாக்கியங்கள் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அவர் நம்மிடத்தில் சொன்னார்.
கிழக்கில் உதிக்கும் அதே—அதே சூ-ரி-ய-னே மேற்கில் அதே சூ-ரி-ய-னா-க அஸ்தமிக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்திலும் அதே தேவ கு-மா-ர-னாய் இருக்கிறார், இன்றிரவும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற தம்மை, சபையின் மத்தியில் அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். சாயங்கால குமாரனின் வெளிச்சம் வந்துவிட்டது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நமக்கு முன்பாக நிறைவேறியுள்ளது.
அவர் வாக்களித்தபடியே ஒரு மணவாட்டியை வெளியே அழைக்கும்படி, நம்முடைய நாளில் மாம்ச சரீரத்தில் மீண்டும் மனுஷகுமாரன் வந்துள்ளார். அது நம்மிடத்தில் நேரடியாக பேசிக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவாகும், அதற்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை. நமக்குத் தேவையானதெல்லாம், நாம் விரும்புவதெல்லாம், தேவனிடத்திலிருந்து தாமே வருகிற ஒலிநாடாக்களில் பேசுகிற தேவனுடைய சத்தமேயாகும்.
இது உண்மையாக்கப்பட்ட வார்த்தையின் வெளிப்படுத்துதலான வெளிப்பாடாகும். நாம் அந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவரைக் குறித்த ரகசியத்தின் வெளிப்பாடு.
மணவாட்டி என்னே ஒரு மகிமையான நேரத்தை உடையவளாயிருந்து கொண்டு, குமாரனின் பிரசன்னத்தில் கிடந்து, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறாள். கோதுமை மீண்டும் கோதுமைக்குத் திரும்பிவிட்டது, நம்மிடையே புளித்த மா ஏதுமில்லை. சுத்தமான தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசிக்கொண்டு, வனைந்து கொண்டு, வார்த்தையான, கிறிஸ்துவின் சாயலுக்குள் நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம், அவருடைய தன்மையாக இந்த மகத்தான காலத்தில், உலக சரித்திரத்தின் இந்த மகத்தான காலத்தில் தோன்றும்படியாக அவர் முன்குறித்தார். நாம் தவறிப்போக மாட்டோம், நாம் ஒப்புரவாகமாட்டோம் என்றும், ஆனால் நாம் அவருடைய உண்மையான, உண்மையுள்ள வார்த்தை மனவாட்டியாக, வரப்போவதாக அவர் வாக்களித்த ஆபிரகாமின் ராஜிரீக மேம்பட்ட வித்தாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
எடுத்துக்கொள்ளப்படுதல் சமீபித்து விட்டது. நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. குமாரனுடைய பிரசன்னத்தில் அமர்ந்து, அவருடைய மணவாட்டி உடையான அவருடைய சத்தத்தை கேட்டு, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட அவருடைய மனவாட்டிக்காக அவர் வருகிறார். நம்மோடு இருக்கும்படி வாஞ்சித்துக் கொண்டு, காலத்தின் திரைக்கப்பால் காத்துக் கொண்டிருக்கிற நம்முடைய அன்பார்ந்தவர்களை நாம் சீக்கிரத்தில் காணத் துவங்குவோம்.
ஒலிநாடாக்கள் அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளன. இந்த ஒலிநாடாக்கள் மாத்திரமே அவருடைய மனவாட்டியை ஒன்றிணைக்கும். இந்த ஒலிநாடாக்கள் அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கின்றன.
ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் 65-1204 என்ற செய்தியில் சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை குறித்த யாவற்றையும் நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான எங்களோடு நீங்கள் வந்து ஒன்றிணையும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே, நாம் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-1128E பனி வெண்புறா சிறகுகள் மேல் என்ற செய்தியை கேட்பதற்கு ஒன்றுசேருவோமாக.
சகோ.ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான இயேசு கிறிஸ்துவின் குடும்பமே,
உலகம் முழுவதும் கிறிஸ்துவின் மணவாட்டியுடன் இதுவரை இல்லாத அளவுக்கு ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் கேள்விப்பட்ட மற்றும் பார்க்க விரும்பியுள்ள காரியங்கள் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசுத்த ஆவியானவர் செய்வதாக கூறினதுபோல தம்முடைய மணவாட்டியை, இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியான ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தின மூலமாக மாத்திரமே அவர் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.
முன்பு இல்லாத அளவுக்கு அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்திக்கொண்டும், உறுதிப்படுத்திக்கொண்டுமிருக்கிறார்.ஒரு ஆர்டீசியன் ஊற்றைப்போல, வெளிப்படுத்தல் நமக்குள்ளாகப் பொங்கிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது அவருடைய சபையில் நடந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது. அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே. அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து... அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தப்பட்டு நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசி கூறினது போலவே, காரியங்கள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன, நம்மால் அதைத் கணக்கு வைக்கக் கூட முடியவில்லை...மகிமை!!!
நமது நேரம் வந்துவிட்டது. வேதம் நிறைவற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாம்சம் வார்த்தையாக மாறிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசி நடக்கும் என்று. கூறியுள்ளது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஏன் நமக்குத்தானா?
புளித்த மா இல்லை, விளங்காத சத்தம் இல்லை, மனிதனுடைய வியாக்கியானம் நமக்கு மத்தியிலே தேவைப்படவில்லை. தேவன் உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறபோது அவருடைய வாயிலிருந்து வருகிற சுத்தமான பரிபூரண வார்த்தைக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது நாம் அதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையைக் காண்கிறோம், லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்கான இந்த மற்ற வாக்குத்தத்தங்களும் மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவைப்படுகிறதில்லை.
மணவாட்டி, அதைவிட எளிமையாக வேறு எதையும் தெளிவாகத் பெற்றுக்கொள்ள முடியாது. எல்லாம் நம்முடைய சொந்த கண்களினால் காணும்படிக்கு, தம்முடைய சொந்த வார்த்தையை பேசி வியாக்கியானித்து, அதை ஒலிநாடாக்களில் வைத்து, மானிட சரீரத்தில் தம்முடைய மணவாட்டிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிற அது தேவனாயுள்ளது. தேவனால் தாமே பரிபூரண வார்த்தையானது உரைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது, எனவே அதற்கு மனிதனின் எந்த வியாக்கியானமும் தேவையில்லை.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் நேரடியாக ஒலிநாடாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார்.
● தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை ஒலிநாடாக்களில் வியாக்கியானிக்கிறார்.
● தேவன் தம்மை ஒலிநாடாக்களில் வெளிப்படுத்துகிறார்.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உங்களுக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை என்று சொல்கிறார். என்னுடைய மணவாட்டிக்குத் தேவைப்படுகிறதெல்லாம் ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தையே.
நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் இங்கிருந்து சென்றபிறகு, பதரை விட்டுக் கடந்துபோக இப்போது ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் கோதுமை மணிக்குள் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் குமாரனுடைய சமூகத்தில் இருங்கள். நான் சொல்லியிருப்பவைகளோடு கூட்ட வேண்டாம். நான் சொல்லியிருப்பவைகளை எடுத்துப் போடவேண்டாம். ஏனென்றால் பிதா எனக்குக் கொடுத்திருக்கிறபடியே எனக்குத் தெரிந்திருக்கிற வரை நான் சத்தியத்தைப் பேசுகிறேன். புரிகிறதா?
தேவன் செய்யும்படி நமக்குக் கட்டளையிட்டபடி மணவாட்டி செய்வதற்கான ஒரே பரிபூரண வழியை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளார். இன்று வரை இது ஒருபோதும் சாத்தியமில்லை. யூகிக்கவோ, ஆச்சரியப்படவோ, ஏதாவது சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ அல்லது வியாக்கியானிக்கப்படவோ உள்ளதா என்ற கேள்வியே இல்லை. மணவாட்டிக்கு உண்மையான வெளிப்பாடு வழங்கப்பட்டுள்ளது: ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண வழியாய் உள்ளது.
ஒரு வேளை, நான் அதை மீண்டும் கூறட்டும். என்னுடைய வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கேயன்றி, மற்றவர்களுக்கு அல்ல. மணவாட்டிக்கு ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் தேவையில்லை.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருமுறை உண்மையாகவே... அசலான வார்த்தை (வார்த்தை, இயேசு) உங்களுக்குள் வருகிறது, அப்போது, சகோதரனே... செய்தியானது அப்போது உங்களுக்கு இரகசியமாய் இருப்பதில்லை, நீங்கள் அதை அறிவீர்கள், சகோதரனே, அதெல்லாம் உங்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி எனக்கு இரகசியமல்ல. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். எல்லா வானங்களும் பூமியும் இயேசு என்று அழைக்கப்படுகின்றன. இயேசுவே வார்த்தை.
நாமமானது வார்த்தையில் இருக்கிறது. ஏனெனில் அவரே வார்த்தையாக இருக்கிறார். ஆமென்! அப்படியானால் அவர் என்னவாக இருக்கிறார்? வியாக்கியானிக்கப்பட்ட வார்த்தையே தேவனுடைய நாமத்தின் வெளிப்படுத்தலாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து ஒரே குழுவாக கொண்டு வரும்படியாக இன்றைக்கான தம்முடைய சத்தத்தை அவர் ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்துள்ளதன் மூலம் அவருடைய மனவாட்டியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து கொண்டு வரக்கூடிய ஒரே வழியாக இருப்பதை மணவாட்டி பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறாள்.
அவர் இன்று அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்பதைக் காண்பிக்க 60 ஆண்டுகளுக்கு முன்பு அதைச் செய்தார். நாம் "ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அவருடைய சபைகளில் ஒன்றில் இருக்கிறோம்."
நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களிலும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.
பல ஊழியர்கள் தங்களுடைய சபைகளில் "இணைப்பில் இருப்பது" அல்லது "நேரடி ஒலிப்பரப்பில் கேட்பது," , "ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்பது," சபைக்குச் செல்வதுபோல் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர் அப்படித்தான் இருப்பதாகக் கூறினார்! அவர்களுக்கு எளிமையான வார்த்தையும் தெரியாது அல்லது மணவாட்டி வாசிக்கக்கூடிய அன்பின் மடலையும் வாசிக்க முடியாது.
சபை என்றால் என்ன? சகோதரன் பிரான்ஹாம் ஒரு சபை என்று கூறினதைப் பார்ப்போமாக.
அநேக, அநேக சபைகள் இந்த கூடாரத்திலிருந்து இங்கே இந்த வசதியைப் பெற்றுள்ளீர்கள். அது பீனிக்ஸிலும் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது எல்லா இடங்களிலும் ஆராதனைகள் உள்ளன, அது சரியாக வருகிறது…அவர்கள் சபைகளிலும், வீடுகளிலும், அதைப் போன்ற காரியங்களிலும் ஒரு மிக தெளிவான அலை வரிசையின் மூலமாக ஒன்று கூடுகின்றனர்.
சகோதரன் பிரான்ஹாம் தங்களுடைய "வீடுகளில்" மற்றும் "அது போன்ற காரியங்களில்" உள்ள மக்கள் அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றாக இருந்ததாக தெளிவாகக் கூறுகிறார். இவ்வாறு வீடுகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டிடங்கள், அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றுகூடிய குடும்பங்கள் அவர்களை ஒரு சபையாக்கின.
நாம் இன்னும் கொஞ்சம் அன்பின் மடலைக் வாசிப்போமாக.
நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே தொலைபேசி இணைப்பில் இருந்து கொண்டு, சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை அனைவரும் ஒரே நேரத்தில் கேட்கிறோம்; அவர்களோ நாங்கள் ஒரு குழுவாக ஒன்று கூடி, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர்.
ஆனால் நீங்கள் இன்று அப்படிச் செய்தால், அது சபைக்குப் போவதாக இருக்காது, அது தவறு, நாளானது நெருங்கி வருவதைப் பார்க்கும்போது அது இன்னும் அதிகமாக ஒன்றுகூடுவதில்லை என்று சொல்கிறீர்கள், அது சபைக்கு போவதில்லையா?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டும், நீங்கள் உங்கள் சபைக்கு பதிலளிக்கிறீர்கள். சகோதரர் பிரான்ஹாம் இன்று இங்கே சரீரப்பிரகாரமாக இருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அவர் பேசுவதைக் கேட்க நீங்கள் நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ இணைய முடிந்தால், உலகம் முழுவதும் உள்ள மனவாட்டியுடன், போதகர்களே, நீங்கள் தொலைபேசி இணைப்பின் மூலம் சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்பீர்களா அல்லது நீங்கள் பிரசங்கிப்பீர்களா?
உங்களுடைய கடமை உங்களுடைய சபையில் இருக்கிறது என்று சகோதரன் பிரான்ஹாம் தெளிவாகக் கூறுகிறார். நீங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்திருந்தால், சகோதரர் பிரான்ஹாம் ஒரு ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தாலும், உங்கள் சபை கலந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆராதனையை (அப்போது பல ஊழியர்கள் செய்தது போல) நடத்தப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் "உங்கள் சபைக்கு" செல்வீர்களா, அல்லது சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க "பிரான்ஹாம் கூடாரத்திற்கு" செல்வீர்களா?
நான் உங்களுக்கு எனது பதிலைத் அளிப்பேன். நான் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க கூடாரத்திற்குள் செல்ல மழை, பனி அல்லது பனிப்புயலிலும் வாசலில் நின்று கொண்டிருப்பேன். நான் அந்த வேறொரு சபைக்குச் சென்று கொண்டிருந்தால், அன்றிரவு நான் சபைகளை மாற்றுவேன்.
ஆனால் அந்த ஸ்திரீக்கு, தடியில் வல்லமை வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் தேவன் எலியாவில் இருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். தேவன் அங்குதான் இருந்தார்: அவருடைய தீர்க்கதரிசியில். அவள், “நான் உம்மை விடமாட்டேன் என்று கர்த்தருடைய ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றாள்.
தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தானம் 65-1128Mஎன்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போவதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒலிபரப்பு இணைப்பில் உள்ள பிரான்ஹாமுடைய சபைகளில் ஒன்றில் இருக்கும்படி நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்