அன்புள்ள மணவாட்டியே,
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு அற்புதமான கிறிஸ்மஸைக் கொண்டாடினீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுவை இன்றைக்கு உலகம் காண்கிற தொழுவத்தில் விட்டுவிடவில்லை, ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், தம்முடைய மணவாட்டியின் நடுவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய சத்தத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு நான் இன்று எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நான் ஏற்கனவே அறிவித்தபடி, புத்தாண்டு தினத்தன்று, டிசம்பர் 31 அன்று நம்முடைய வீடுகளில்/சபைகளில் மீண்டும் ஒருமுறை இராப்போஜனத்தை நடத்த விரும்புகிறேன். பங்கேற்க விரும்புவோர், நாம், 62-1231 போட்டி என்ற செய்தியை கேட்டுவிட்டு, செய்தியின் நிறைவில் சகோதரன் பிரான்ஹாம் அறிமுகப்படுத்தும் இராபோஜன ஆராதனைக்குச் செல்வோம்.
உள்ளூர் விசுவாசிகளுக்கு, நாங்கள் இரவு 7:00 மணிக்கு ஒலிநாடாவை இயக்கத் தொடங்குவோம். இருப்பினும், மற்ற நேர மண்டலங்களில் இருப்பவர்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் செய்தியைத் இயக்கத் தொடங்கவும். சகோதரன் பிரான்ஹாம் தனது புத்தாண்டுக்கு முந்தின மாலை செய்தியைக் கொண்டு வந்த பிறகு, பத்தி 59-ன் இறுதியில் ஒலிநாடாவை இடைநிறுத்துவோம், மேலும் நாங்கள் கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்கேற்கும்போது தோராயமாக 10 நிமிட பியானோ இசையைக் கேட்போம். சகோதரன் பிரான்ஹாம் ஆராதனையை முடித்தவுடன் ஒலிநாடாவை மீண்டும் இயக்கத் தொடங்குவோம். இந்த ஒலிநாடாவில், கால்களைக் கழுவும் ஆராதனை பகுதியை அவர் தவிர்க்கிறார், அதை நாமும் கூட தவிர்ப்போம்.
திராட்சை ரசத்தை எப்படிப் பெறுவது என்பதும், இராப்போஜன அப்பத்தை சுடுவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். இணையதளத்தில் இருந்து ஒலிப்பதிவை இயக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம் அல்லது லைஃப்லைன் பயன்பாட்டில் உள்ள வாய்ஸ் ரேடியோவில் இருந்து ஆராதனையை இயக்கலாம் (இது ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 7:00 மணிக்கு ஆங்கிலத்தில் இயக்கப்படும்.)
நம்முடைய கர்த்தருக்கு சேவை செய்யும் மற்றொரு வருடத்தை நாம் நெருங்கும்போது, முதலில் அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் அவருக்கு நம்முடைய அன்பை வெளிப்படுத்துவோமாக, பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்கெடுப்போம். அவருடைய சேவைக்காக நம்முடைய ஜீவியங்களை மீண்டும் அர்ப்பணிக்கும்போது அது எவ்வளவு ஒரு மகிமையான, புனிதமான நேரமாயிருக்கும்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வெண்வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்களே,
தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்கும் போது, நம்முடைய ஆத்துமாவில் ஏதோ காரியம் ஆழமாக சம்பவிக்கிறது. நம்முடைய முழு சரீரமும் மறுரூபமாக்கப்பட்டு நம்மை சுற்றியுள்ள உலகம் மறைந்து போவதாக தென்படுகிறது.
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும் தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும்போது, நம்முடைய இருதயங்களிலும், நம்முடைய சிந்தைகளிலும், நம்முடைய ஆத்துமாக்களிலும் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி ஒருவரால் வெளிப்படுத்த முடியும்?
நம்முடைய தீர்க்கதரிசியைப் போலவே, நாம் மூன்றாம் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக உணரும்போது, நம்முடைய ஆவி இந்த அழிவுள்ள சரீரத்தைவிட்டு வெளியேறுவது போல் தென்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தும்போது நாம் என்ன உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
யோவான் பத்மூ தீவில் வைக்கப்பட்டு, அவன் கண்டதை எழுதி வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், அதனால் அது காலங்களினூடாக செல்லும். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட 7-வது தூதனாகிய செய்தியாளனினூடாக நமக்கு அந்த ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் வரையில் அவைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர் யோவான் தனக்கு மேலே அதே சத்தத்தைக் கேட்டு மூன்றாம் வானத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அந்த சத்தம் அவனுக்கு சபைக் காலங்களையும், யூதர்களின் வருகையையும், வாதைகளின் ஊற்றப்படுதலையும், எடுத்துக்கொள்ளப்படுதலையும், மீண்டும் வருவதையும், ஆயிர வருட அரசாட்சியையும், அவருடைய இரட்சிக்கப்பட்ட நித்திய பரம இல்லத்தையும் காண்பித்தது. அவர் யோவானை அழைத்துச் சென்று, அவர் செய்வேன் என்று அவனுக்கு கூறினது போன்ற முழு காரியத்தின் ஒத்திகையையும் காண்பித்தார்.
ஆனால் யோவான் ஒத்திகையைக் கண்டபோது யார் அவனைப் பார்த்தது? இன்று வரை உண்மையாகவே யாருக்கும் தெரியாது.
வருகையில் அவன் கண்ட முதலாவது காரியம் மோசேயாக இருந்தது. அவன் உயிர்த்தெழுப்பப்படும் மரித்த பரிசுத்தவான்களை பிரதிநிதித்துவப்படுத்தினான்; ஆறு சபைக் காலங்கள் முழுவதிலும் நித்திரையடைந்திருந்தவர்கள்.
ஆனால் அங்கே மோசே மட்டும் நின்று கொண்டிருக்கவில்லை, ஆனால் எலியாவும் கூட அங்கே இருந்தான்.
நின்று கொண்டிருந்த எலியா யார்?
ஆனால் அங்கே எலியா; கடைசி நாளின் தூதன், தன்னுடைய குழுவினரோடு, மறுரூபமாக்கப்பட, எடுத்துக்கொள்ளப்படப் போகிறவர்களோடு இருந்தான்.
மகிமை...அல்லேலூயா…அங்கே நின்று கொண்டிருந்த யோவானைக் கண்டது யார்?
தேவனுடைய 7வது தூதனாகிய செய்தியாளன், வில்லியம் மரியன் பிரான்ஹாம், அவருடைய மறுரூபமாக்கப்பட, எடுத்துக் கொள்ளப்படவுள்ள குழுவாகிய…நம் ஒவ்வொருவரோடும் இருந்த அவரைத் தவிர வேறு யாருமில்லையே!!
எலியாவோ மறுரூபப்படுத்தப்படும் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினான். மோசே தான் முந்தினவன். எலியா அதன்பின் என்பது நினைவிருக்கட்டும். கடைசி நாளுக்குரிய தூதனாயிருக்கும்படி எலியா வைக்கப்பட்டிருந்தான், அவனோடும், அவனுடைய குழுவினரோடும் உயிர்த்தெழுதல்…பாருங்கள், எடுத்துக் கொள்ளப்படுதல் வரும் என்பதையே பொருட்படுத்திக் கூறிகிறேன். மோசே உயிர்த்தெழுதலை பெறும் கூட்டத்தையும், எலியா மறுரூபப்படுத்தப்படும் குழுவினரையும் கொண்டு வருகிறார்கள். அங்கே, அவர்கள் இருவருமே அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
திரைநீக்கப்படுதலையும், வெளிப்படுத்துதலையும், வெளிப்பாட்டையும் குறித்துப் பேசுகிறோம்.
இங்கே அது இருக்கிறது! நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரை இப்பொழுதே நம்மிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். நீங்கள்…அவர் உங்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டும் போதித்துக் கொண்டும், எது சரியானது எது தவறானது என்றும் நீங்கள் கண்டுக் கொள்ளச் செய்ய முயன்று கொண்டும் இருக்கிறார். அது பரிசுத்த ஆவியானவர் தாமே மானிட உதடுகள் மூலம் பேசிக் கொண்டும், மனித இனத்தின் நடுவில் கிரியை செய்து கொண்டும், இரக்கத்தையும் கிருபையையும் காண்பிக்க முயன்று கொண்டும் இருக்கிறார்.
ஜீவ அப்பத்தைப் புசிப்பதற்காக பூமி முழுவதிலுமிருந்து வருகிறதாக அவருடைய தூதன் கண்ட வெண் வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்கள் நாமே. நாம் அவருடன் நிச்சயிக்கப்பட்டு, விவாகம் செய்து கொண்டு, அவருடைய நிச்சயதார்த்த முத்தத்தை நம்முடைய இருதயத்தில் உணர்ந்துள்ளோம். நாம் தாமே அவருக்கு, அவருடைய சத்தத்திற்கு மாத்திரமே உறுதிமொழியளித்தோம். நாம் நம்மை வேறெந்த சத்தத்தோடும் தீட்டுப்படுத்திக் கொண்டதில்லை, தீட்டுப்படுத்தவும் மாட்டோம்.
தேவனுடைய பிரசனத்திற்குள்ளாக; யோவான் சென்றது போல மணவாட்டி மேலே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சபையில் எடுத்துக் கொள்ளப்படுதலில் நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். அது நம்முடைய ஆத்துமாவை எப்படி சுற்றி வளைக்கிறது!
அடுத்து அவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
நியாயத்தீர்ப்புகள்; பதுமராகக் கல், அது எதைக் குறிக்கிறது; அது என்ன பங்கு வகித்தது. வச்சிரக் கல், மற்றும் எல்லா வெவ்வேறு கற்களுமே. அவர் இவை அனைத்தையும் எசேக்கியேல் மூலம் எடுத்துச் சென்று, மீண்டும் ஆதியாகமத்திற்கு வந்து, மீண்டும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வந்து, வேதாகமத்தின் மையத்திற்கு வந்து, அதை ஒன்றாக இணைப்பார்; இந்த எல்லா வெவ்வேறு கற்களையும், நிறங்களையுமே.
அதே பரிசுத்த ஆவியானவர், அதே தேவன், அதே அடையாளங்களை, அதே அற்புதங்களைக் காட்டுகிறார், அவர் வாக்குறுதியளித்தபடியே அதே காரியத்தை செய்கிறார். இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி அவருடைய சத்தத்தை கேட்பதன் மூலம் தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொள்கிறதாயிருக்கிறது.
காலங்களினூடாக மறைக்கப்பட்டிருந்த ரகசியங்களை வெளிப்படுத்த, இந்த கடைசி காலத்திற்கு தேவனுடைய செய்தியாளனாகிய எலியா பேசுவதை கேட்க, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 12:00 மணிக்கு நாங்கள் உன்னதங்களில் வீற்றிருக்கப் போகிறபடியால் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 60-1231 வெளிப்படுத்தின விசேஷம், அதிகாரம் நான்கு பாகம் I
● போட்டி 62-1231: என்ற செய்தியே செவ்வாய் இரவு, நம்முடைய புத்தாண்டினுடைய செய்தி என்பதை நினைவில் கொள்ளவும். புத்தாண்டைத் தொடங்க இதைவிட சிறந்த வழி இல்லை.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திருமதி. இயேசுவே,
ஓ தேவாட்டுக் குட்டியே, நீர் உலகத்திற்கு தேவனுடைய மகத்தான சுற்றப்பட்ட வெகுமதியாய் இருக்கிறீர். எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியாக உம்மையே நீர் எங்களுக்கு அளித்திருக்கிறீர். நீ முதல் நட்சத்திரத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் பூமியை, சந்திரனை, சூரிய குடும்பத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் எங்களை அறிந்து, உம்முடைய மணவாட்டியாக இருக்கும்படி எங்களை தெரிந்து கொண்டீர்.
நீர் எங்களை அப்பொழுது கண்டபோது, நீர் எங்களை நேசித்தீர். நாங்கள் உம்முடைய மாம்சத்தின் மாம்சமும், உம்முடைய எலும்பின் எலும்புமாயிருந்தோம்; நாங்கள் உம்முடைய ஒரு பாகமாக இருந்தோம். நீர் எப்படியாய் எங்களை நேசித்து, எங்களோடு ஐக்கியம் கொள்ள விரும்பினீர். நீர் உம்முடைய நித்திய ஜீவனை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினீர். நாங்கள் உம்முடைய திருமதி. இயேசுவாய் இருப்போம் என்பதை அப்பொழுதே நாங்கள் அறிந்து கொண்டோம்.
நாங்கள் தவறிப் போவோம் என்பதை நீர் கண்டீர், எனவே எங்களை திரும்பவும் மீட்டெடுக்க ஒரு வழியை நீர் அளிக்க வேண்டியதாயிருந்தது. நாங்கள் இழக்கப்பட்டு நம்பிக்கையற்றவர்களாக இருந்தோம். ஒரே ஒரு வழி இருந்தது, நீர் ஒரு “புது சிருஷ்டியாக” வேண்டியதாயிருந்தது. தேவனும் மனிதனும் ஒன்றாக மாறவேண்டியதாயிருந்தது. நாங்கள் உம்மைப் போலாகும்படிக்கு நீர் எங்களைப் போலாக வேண்டியதாய் இருந்தது. இவ்வாறு, நீர் ஏதேன் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உம்முடைய பெரிய திட்டத்தை செயல்படுத்தினீர். உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியான எங்களுடன் இருக்க நீர் மிகவும் வாஞ்சித்தீர், ஆனால் ஆதியிலே இழக்கப்பட்டிருந்த யாவற்றையும் நீர் எங்களுக்கு மீண்டும் திரும்பளிக்க வேண்டியதாய் இருந்தது என்பதை முதலில் நீர் அறிந்திருந்தீர். நீர் உம்முடைய திட்டத்தை முடிக்க இந்நாள் வரை காத்துக் கொண்டேயிருந்தீர்.
அந்த நாளானது வந்துவிட்டது. நீர் ஆதியில் கண்ட அந்த சிறிய குழு இங்கே உள்ளது. எல்லாவற்றைக் காட்டிலும் உம்மையும் உம்முடைய வார்த்தையையும் உம்முடைய இனிய இருதயம் நேசிக்கிறாள்.
நீர் ஆபிரகாமுடன் செய்தது போல, நீர் ஒரு புது சிருஷ்டியானபோது செய்தது போல, இது நீர் மானிட மாம்சத்தில் வந்து உம்மையே வெளிப்படுத்த வேண்டிய நேரமாயிருந்தது. உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த உம்முடைய மகத்தான எல்லா இரகசியங்களையும் நீர் எங்களுக்கு வெளிப்படுத்தும்படியாக இந்த நாளுக்காக நீர் எவ்வளவாய் வாஞ்சித்திருந்தீர்.
நீர் உம்முடைய மணவாட்டியைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறீர். நீர் எப்படி அவளைக் காண்பித்து சாத்தானிடம், “நீ அவர்களுக்கு என்ன செய்ய முயற்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் அசைய மாட்டார்கள்; அவர்கள் என் வார்த்தை, என்னுடைய சத்தத்தின் பேரில் சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் என்னுடைய பரிபூரண வார்த்தை மணவாட்டி” என்று சொல்ல விரும்புகிறீர். அவர்கள் எனக்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாகவும் என்னுடைய வார்த்தைக்கு உண்மையாய் தரித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு நித்திய வெகுமதியை கொடுப்பேன். எனக்கு இருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுக்கிறேன். நாங்கள் ஒன்றாக இருப்போம்.
நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம், “இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை எங்களுடைய வீட்டுக்குள் வரவேற்போமாக. நாங்கள் உமக்கு எண்ணெய் பூசி, உம்முடைய பாதங்களை எங்களுடைய கண்ணீரால் கழுவி, அவைகளை முத்தம் செய்வோம். நாங்கள் எப்படியாய் உம்மை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உமக்கு சொல்வோமாக.”
எங்களுக்கு இருக்கிற எல்லாவற்றையும், நாங்கள் இயேசுவே உமக்கு அளிக்கிறோம். அதுவே உமக்கு எங்களுடைய வெகுமதியாய் உள்ளது. நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை போற்றுகிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசுவை உங்களுடைய வீட்டில், உங்களுடைய சபையில், உங்களுடைய காரில், நீங்கள் எங்கே இருந்தாலும், மனிதனுக்கு எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியான: தேவன் தாமே பேசி உங்களோடு ஐக்கியங்கொள்ளுகிறதை பெற்றுக் கொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
60-1225 தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே,
இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திற்கு முந்தைய மாலை மீண்டும் ஒரு சிறப்பு செய்தியும், இராப்போஜன ஆராதனையும் நடத்த வேண்டும் என்று கர்த்தர் என் இருதயத்தில் வைத்துள்ளார். நண்பர்களே, புத்தாண்டின் தொடக்கத்தில் தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, கர்த்தருடைய இராப்போஜனத்தில் கலந்துகொண்டு, அவருடைய சேவைக்காக நம்முடைய ஜீவியங்களை மீண்டும் அர்ப்பணிப்பதை விட என்ன பெரிய காரியத்தை நாம் செய்ய முடியும். உலகத்தை ஒதுக்கிவிட்டு, இந்த விசேஷமான வார்த்தையில் மணவாட்டியுடன் ஒன்றுபடுவது என்னே ஒரு புனிதமான நேரமாக இருக்கும், “கர்த்தாவே, நாங்கள் ஆண்டு முழுவதும் செய்த எல்லா தவறுகளையும் எங்களுக்கு மன்னியும்; இப்போது நாங்கள் உம்மை அணுகி கொண்டிருக்கிறோம், இந்த வரவிருக்கும் ஆண்டில் நீர் எங்கள் கையைப் பிடித்து எங்களுக்கு வழிகாட்டுவீரா என்று கேட்கிறோம். நாங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு உமக்கு சேவை செய்வோமாக, அது உமது தெய்வீக சித்தத்தில் இருந்தால், அது மகத்தான எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறவிருக்கும் ஆண்டாக இருப்பதாக. கர்த்தாவே, நித்தியத்தினூடாக உம்மோடு ஜிவிக்க நாங்கள் பரமவீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்” என்று நாம் நம்முடைய இருதயத்திலிருந்து சொல்கிறோம். இந்த விசேஷமான மறு பிரதிஷ்டை சேவைக்காக அவருடைய சிங்காசனத்தை சுற்றிக் கூடிவர நான் காத்திருக்க முடியவில்லை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஜெபர்சன்வில் பகுதியில் உள்ள விசுவாசிகளுக்கு, எங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில் இரவு 7:00 மணிக்கு ஒலிநாடாவை இயக்கத் தொடங்க விரும்புகிறேன். நாங்கள் முன்பு செய்தது போல், முழுமையான செய்தியும், இராஜபோஜன ஆராதனையும் அந்த நேரத்தில் வாய்ஸ் ரேடியோவில் இருக்கும். டிசம்பர் 18, புதன்கிழமை அன்று மதியம் 1:00 முதல் 5:00 மணி வரை, நீங்கள் YFYC கட்டிடத்தில் எடுத்துச் செல்வதற்காக எங்களிடம் இராப்போஜன திராட்சை ரசப் பொதிகள் கிடைக்கும்.
ஜெபர்சன்வில் பகுதிக்கு வெளியே வசிக்கும் நீங்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த சிறப்பு ஆராதனையை வைத்துக் கொள்ளுங்கள். செய்தியையும், இராப்போஜன ஆராதனையையும் விரைவில் பதிவிறக்கக்கூடிய இணைப்பு நமக்கு கொடுக்கப்படும்.
நாங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை நெருங்குகையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஒரு அற்புதமான மற்றும் பாதுகாப்பான விடுமுறை காலமும், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் சந்தோஷத்தால் நிரப்பப்பட்ட, ஒரு மகிழ்வார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்... வார்த்தை.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப்
அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,
நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 60-1218 விளங்காத சத்தம் என்ற செய்தியைக் கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்