காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 25 ஜனவரி, 2025

அன்புள்ள இளைப்பாறுகிறவர்களே,

இது உண்மையிலேயே நம் ஜீவியத்தின் சிறந்த குளிர்காலம். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்; கிறிஸ்து மரித்த அனைத்தும் நமக்குச் சொந்தமானது என்ற தேவனுடைய அங்கீகார முத்திரையும் உள்ளது.

நாம் இப்பொழுது நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமான, பரிசுத்த ஆவியை பெற்றுள்ளோம். அது நாம் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்ற உறுதியாயும் முன்பணமாயும் உள்ளது. நாம் தேவனுடைய வாக்குதத்தில் இளைப்பாறிக் கொண்டும், அவருடைய சூரிய வெளிச்சத்தின் உஷ்ணத்தில் இருந்துகொண்டும், அவருடைய ரூபுகாரப்படுத்தப்பட்ட வார்த்தையையும் அவருடைய சத்தத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரமாய் இருக்கிறது. நாம் அங்கு செல்கிறோமா இல்லையா என்று நாம் கவலைப்படவில்லை, நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! அது நமக்கு எப்படித் தெரியும்? தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்! தேவன் அதை வாக்களித்தார், நாம் அந்த அச்சாரத்தைப் பெற்றுள்ளோம். நாம் அதைப் பெற்றுள்ளோம், கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டார்.

அதிலிருந்து விலகிப்போக வழியே இல்லை...உண்மையில், நாம் அங்கிருக்கிறோம்! நாம் செய்ய வேண்டியது எல்லாம் காத்திருக்க வேண்டியதுதான்; அவர் இப்பொழுது இங்கே இனத்தான் மீட்பரின் பணியை செய்து கொண்டிருக்கிறார். நாம் இப்பொழுது அதற்கான அச்சாரத்தைப் பெற்றிருக்கிறோம். அவர் நமக்காக திரும்ப வரப்போகிறதான அந்த நேரத்துக்காகவே நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே நாம் யாவரும் கல்யாண விருந்துக்கு சென்றுவிடுவோம்.

நமக்கு முன்னால் இருக்கும் அனைத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்முடைய சிந்தையினால் அனைத்தையும் கிரகித்துக்கொள்ள முடியாது. நாளுக்கு நாள் அவர் தம்முடைய வார்த்தையை அதிகமாக வெளிப்படுத்தி, இந்த மகத்தான வாக்குத்தத்தங்கள் நமக்குச் சொந்தமானவை என்று உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்.

உலகம் விழுந்து போய்க் கொண்டிருக்கிறது; அக்கினிகள், பூமியதிர்ச்சிகள் மற்றும் எங்கும் குழப்பம், ஆனாலும் உலகத்தை காப்பாற்ற ஒரு புதிய மீட்பன் அவர்களுக்கு உண்டு என்றும், அவர்களுடைய பொற்காலத்தை கொண்டு வருவான் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாமோ ஏற்கனவே நம்முடைய இரட்சகரைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய பொற்காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

இப்போது நாம் வெளிப்படுத்துதலின் 5-வது அத்தியாயத்திற்குள் நுழையும்போது இன்னும் கூடுதலான வெளிப்பாட்டிற்கு அவர் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஏழு முத்திரைகள் திறப்பதற்கு இங்கே ஒரு காட்சியை அமைத்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளிப்படுத்தின விசேஷம் 1 வது அத்தியாயத்தில் செய்தது போலவே, ஏழு சபை காலங்களுக்கான வழியைத் திறந்தார்.

மணவாட்டிக்கான மீதமுள்ள குளிர்காலம் எப்படி இருக்கும்? நாம் ஒரு சிறிய முன்னோட்டத்தைப் பார்ப்போமாக:

இப்பொழுது, எனக்கு நேரமில்லை. இங்கே அதைப்பற்றிய பின்னணியான விவரக்குறிப்பை நான் எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் நம்முடைய அடுத்த கூட்டத்தில் நாம் இதற்குள் செல்வதற்கு முன்… நான் எனது விடுமுறை நாட்கள் முடிந்து இங்கே திரும்ப வரும்போதோ அல்லது பிறிதொரு சமயத்திலோ ஒரு வேளை நான் இந்த தானியேலின் எழுபது வாரங்கள்’ பற்றி எடுத்துக்கொண்டு இங்கே இதனோடே அதை இணைத்து, பெந்தெகொஸ்தே யூபிலிக்கு அது எங்கே எடுத்துச் செல்லுகிறது என்பதை காண்பித்து, பிறகு இந்த ஏழு வாதை-… அந்த ஏழு முத்திரைகள் இடமாக திரும்ப வந்து, நாம் போய்விடுவதற்கு முன்பாக அவற்றைத் திறந்து, அது முடிவு நேரத்தில் இருப்பதைக் காண்பிக்கலாம், இந்த…

கர்த்தர் தம்முடைய மணவாட்டிக்காக எவ்வளவு அற்புதமான நேரத்தை வைத்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துதல். நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நம்மை உற்சாகப்படுத்த அவர் வருகிறார். அவருடைய சத்தத்தோடும் அவருடைய வார்த்தையோடும் தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்லுகிறார்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு காரியமும் இல்லை, அப்படியே இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்! இனி பாடுபடுதல் இல்லை, இனி கலக்கம் இல்லை, நாம் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!

61-0618-”வெளிப்படுத்தின விசேஷம் ஐந்தாம் அதிகாரம் பாகம் #II என்ற செய்தியை தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போகிறதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து இளைப்பாறுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 18 ஜனவரி, 2025

அன்புள்ள புத்திரசுவிகாரமாக்கப்பட்டவர்களே,

பரிசுத்த ஆவியானவர் மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதால் என்ன ஒரு அற்புதமான குளிர்காலம் நமக்கு இருக்கிறது. நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் கேள்விப்பட்ட, படித்த மற்றும் ஆய்ந்த காரியங்கள் இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் திரைநீக்கப்பட்டு வெளிப்பட்டு வருகின்றன.

இந்த நாளுக்காகவே மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறான். அவர்கள் அனைவரும் நாம் காணும் மற்றும் கேட்கும் காரியங்களைக் கேட்கவும் பார்க்கவும் ஆவலுடன் ஜெபித்தனர். பண்டைய தீர்க்கதரிசிகள் கூட இந்த நாளுக்காக ஏங்கினார்கள். கர்த்தரின் நிறைவையும் வருகையையும் அவர்கள் எப்படியாய் காண விரும்பினார்கள்.

இயேசுவின் சீஷர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மனிதர்கள் கூட, அவருடன் நடந்து பேசி, மறைக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் பார்க்கவும் கேட்கவும் விரும்பினர். இது அவர்களுடைய நாளில், அவர்களுடைய காலத்தில் வெளிப்படுத்தப்பட்டு வெளிப்படும் என்று அவர்கள் ஜெபித்தனர்.

ஏழு சபைக் காலங்கள் முழுவதும், ஒவ்வொரு செய்தியாளரும், பவுல், மார்ட்டின் மற்றும் லூத்தர் ஆகியோர் மறைக்கப்பட்டிருந்த அனைத்து இரகசியங்களையும் அறிய விரும்பினர். வார்த்தையின் நிறைவேற்றம் அவர்களுடைய வாழ்நாளில் நடைபெறுவதைக் காண வேண்டும் என்பதே அவர்களின் வாஞ்சையாயிருந்தது. அவர்கள் கர்த்தருடைய வருகையைக் காண விரும்பினார்கள்.

தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. தேவனுக்கு ஒரு நேரம் இருந்தது. தேவன் ஒரு ஜனத்தை உடையவராயிருந்து, அவர் நம்…பேரில் காத்துக் கொண்டிருந்தார். காலங்களினூடாக, யாவரும் தவறிப் போயிருந்தனர். ஆனால் அவருடைய முன்னறிவினால், ஒரு ஜனம் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்: அவருடைய மகிமையான, பரிபூரண வார்த்தை மணவாட்டி. அவர்கள் அவரைக் கைவிடமாட்டார்கள். அவர்கள் ஒரு வார்த்தையையும் கூட சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் அவருடைய தூய கன்னிகை வார்த்தை மணவாட்டியாக இருப்பார்கள்.

இப்பொழுதே நேரம். இப்பொழுதே காலம். ஆதாம் வீழ்ந்து அவனது உரிமையை இழந்ததிலிருந்து அவர் காத்திருந்து தெரிந்து கொண்டவர்கள் நாமே. நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம்.

நடக்கவிருந்த எல்லாவற்றின் முன்னோட்டத்தையும் தேவன் யோவானுக்குக் காண்பித்தார், ஆனால் அவனுக்கு எல்லா அர்த்தங்களும் தெரியாது. அவன் மேலே அழைக்கப்பட்டபோது, உள்ளும் புறமும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்தில் கண்டான், ஆனால் அந்தப் புத்தகத்தைத் திறக்கப் பத்திரவானாக யாரும் இல்லை.

எல்லாமே இழக்கப்பட்டிருந்த காரணத்தால் யோவான் மனங்கசந்து கூச்சலிட்டு அழுதான், நம்பிக்கையே இல்லாதிருந்தது. ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், மூப்பர்களில் ஒருவன் அவனிடத்தில், “அழவேண்டாம், இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்றான்.

அதுவே நேரமாயிருந்தது. அதுவே காலமாயிருந்தது. அந்த மனிதன் கண்ட எல்லாவற்றையும் எழுதும்படி தேவன் தெரிந்து கொண்டவனாய் அவன் இருந்தான். ஆனால் இன்னமும், அதனுடைய முழு அர்த்தமும் தெரியவில்லை.

தேவனோ காத்துக்கொண்டிருந்தார், அவருடைய மணவாட்டிக்கு அவருடைய சத்தமாய் இருக்கும்படி அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரமான ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தை அவர் உபயோகிக்கும்படியா அவன் பூமிக்கு வருவதற்காகவே காத்துக் கொண்டிருந்தார். எந்த தவறான புரிந்துகொள்ளுதலும் இல்லாதபடிக்கு அவர் உதட்டிலிருந்து செவிக்கு பேச விரும்பினார். அவர் தாமே பேசி தம்முடைய எல்லா இரகசியங்களையும் தம்முடைய அன்பான, முன்குறிக்கப்பட்ட, பரிபூரண இனிய இருதயமான மணவாட்டியாகிய…நமக்கு வெளிப்படுத்த விரும்பினார்!!

இந்த அற்புதமான காரியங்களையெல்லாம் நமக்குச் சொல்ல அவர் எவ்வளவு வாஞ்சித்துள்ளார். எப்படி ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம் அவளை நேசிப்பதாக திரும்ப திரும்ப சொல்லும்போது, அவள் அதைக் கேட்டு ஒருபோதும் சலிப்படைவதில்லையோ, அவ்வாறே அவர் நம்மை நேசிக்கிறார் என்றும், நம்மை தெரிந்து கொண்டார் என்றும், நமக்காக காத்திருந்தார் என்றும், நமக்காகவே இப்பொழுது வரவிருக்கிறார் என்றும், அவர் நம்மிடத்தில் திரும்ப திரும்ப சொல்ல விரும்புகிறார்.

அவர் தன்னுடைய சத்தத்தை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்றும், இதனால் தம்முடைய மணவாட்டி நாள் முழுக்க, ஒவ்வொரு நாளும் இயங்க பொத்தானை அழுத்தி கேட்க முடியும் என்றும், அவர்களுடைய இருதயங்களை அவருடைய வார்த்தை நிரப்புவதைக் கேட்க முடியும் என்பதையும் திரும்பத் திரும்ப அவர் கூறுவதை கேட்பதை நாம் எவ்வளவாய் விரும்புகிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அவருடைய வார்த்தையின் பேரில் போஷிக்கப்படுவதனால் அவருடைய அன்பான மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறாள். நாம் அவருடைய சத்தத்தை தவிர, வேறு எதையும் கேட்க மாட்டோம். அருளப்பட்டிருக்கிற அவருடைய தூய வார்த்தையை மாத்திரமே நம்மால் உட்கொள்ள முடியும்.

நாம் மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் இருக்கிறோம். நாம் அதை நம்முடைய ஆத்மாக்களுக்குள்ளே உணர்கிறோம். அவர் வருகிறார். விவாக இசையானது இசைக்கப்படுகிறதை நாம் கேட்கிறோம். மணவாட்டி நடைப்பிரகாரத்தின் இடையில் நடக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறாள். எல்லோரும் நிற்க, மணவாட்டி அவளுடைய மணவாளனோடு வரவிருக்கிறாள். எல்லாமே ஆயத்தமாக்கப்பட்டுள்ளன. அந்த தருணமும் வந்துவிட்டது.

அவர் யாரையுமே நம்மைப் போல் நேசிக்கிறதில்லை. நாம் வேறு எதையும் அவரைப் போல் நேசிப்பதில்லை. நாம் அவருடனும், நாம் நேசிக்கிற அனைவருடனும், நித்தியத்தினூடாக ஒன்றாக இருக்கப் போகிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம், ஐந்தாம் அதிகாரம் பாகம் 1 61-0611 என்ற செய்தியை தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, கலியாணத்திற்க்காக எங்களோடு உங்களைத்தாமே ஆயத்தம் செய்து கொள்ள வரும்படிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 11 ஜனவரி, 2025

அன்புள்ள நித்தியமானவர்களே,

நம்முடைய ஆடம்பரங்களான அறிவு சார்ந்த சிந்தையை அகற்றிவிட்டு, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனெனில் தேவன் தம்முடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தத் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

கடந்த காலத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்துவார். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் நமக்குச் சொல்வார். வேதாகமத்தில் உள்ள மற்ற அனைவரும் இப்போது பார்த்த அல்லது கேட்டதை, அவர் தம்முடைய வார்த்தையின் ஒவ்வொரு சிறிய விவரத்தையும், அதன் அர்த்தத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார்.

ஜீவனுள்ள சிருஷ்டிகள், கண்ணாடிக் கடல், சிங்கம், காளை, மனிதன், கழுகு, கிருபாசனம், காவலர்கள், மூப்பர்கள், சத்தங்கள், தேரியன், சூன் போன்ற வேதாகமத்தின் சின்னங்களின் அர்த்தத்தை நாம் கேட்டு புரிந்து கொள்ளப் போகிறோம்.

பழைய ஏற்பாட்டின் காவலர்களைப் பற்றிய அனைத்தையும் நாம் கேட்டு புரிந்துகொள்வோம். யூதா: கிழக்கு காவலர்; எப்பிராயீம்: மேற்கு காவலர்; ரூபன்: தெற்கு காவலர்; மற்றும் தாண்: வடக்கு காவலர்.

அக்கோத்திரங்களைத் தாண்டி வேறு எதுவும் அங்கே எந்த இடத்திலும் ஊடுருவி வந்து விட முடியாது. சிங்கம், மனுஷனுடைய விவேகம்; காளை: கடுமையாக உழைக்கும் மிருகம்; கழுகு: அதனுடைய வேகமாக செயல்படுகிற தன்மை.

எப்படி வானத்திலும், பூமியிலும், இடையிலும், சுற்றிலும், அவைகள் காவலர்களாக இருந்தனர். அதற்கு மேலே அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அந்த கோத்திரங்களைக் கடக்காமல் எதுவுமே அந்த கிருபாசனத்தை தொட்டதில்லை.

இப்போது புதிய ஏற்பாட்டின் காவலர்கள் உள்ளனர்: மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான், நேராக முன்னோக்கி செல்கிறார்கள். கிழக்கு வாசல் சிங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது, வடக்கு வாசல் பறக்கும் கழுகினால், யோவானால், சுவிசேஷகனால் பாதுகாக்கப்படுகிறது. பிறகு இந்தப் பக்கத்தில் உள்ள வைத்தியன், லூக்கா, மனிதன்.

இந்நான்கு சுவிசேஷப் புத்தகங்களும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை அவர்கள் என்ன கூறினார்களோ, அவற்றை அப்படியே ஆதரித்து நிற்கத்தக்கதாக, அதை காத்து நின்றன. எனவே இப்பொழுது, இன்றைக்கு, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமானது நான்கு சுவிசேஷப் புத்தகங்களோடு சேர்ந்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை ரூபகாரப்படுத்துகிறது.

தேவனுடைய உண்மையான அபிஷேகம் பெற்றவர் பேசும் போது, அதுவே தேவனுடைய சத்தமாயிருக்கிறது! நாம், “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!” என்று சத்தமிட விரும்புகிறோம்.

அதை விட்டு அகன்று போக வழியேயில்லை. உண்மையில், அதை விட்டு நாம் அகன்று போகவே முடியாது. ஏனெனில், அது நம்மை விட்டு அகன்றிடாது. புரிகிறதா? நாம் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையிடப்படுகின்றோம். வருங்காலமோ, நிகழ்காலமோ, நாசமோசமோ, பசியோ, தாகமோ, மரணமோ, அல்லது வேறு எந்த ஒன்றுமோ, கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமாட்டாது.

இந்த ஒளியைக் காணவும், இந்தச் சத்தத்தைப் பெற்றுக் கொள்ளவும், இந்தச் செய்தியை விசுவாசிக்கவும், நம்முடைய நாளுக்கான பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவும், அதில் நடக்கவும், உலகத் தோற்றத்திற்கு முன்னமே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டன. ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, ஆட்டுக்குட்டியானவரின் பெயர் புத்தகத்தில் எழுதப்பட்ட அதே நேரத்தில் நம்முடைய பெயர்களும் எழுதப்பட்டன. மகிமை!!

எனவே, இந்தச் செய்தியிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது. அந்த சத்தத்திலிருந்து இருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது. இந்த வார்த்தையின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவுமே எடுத்துப் போட முடியாது. அது நம்முடையது. தேவன் நம்மை அழைத்து, நம்மைத் தெரிந்துகொண்டு, நம்மை முன்குறித்தார். ஒவ்வொரு காரியமும் நமக்குச் சொந்தமானதும், நம்முடையதுமாயிருக்கிறது.

இதையெல்லாம் பெற்றுக் கொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் வார்த்தையின் தண்ணீரால் கழுவப்பட வேண்டும். நீங்கள் அங்கு நுழைவதற்கு முன் வார்த்தையைக் கேட்க வேண்டும். நீங்கள் தேவனை அணுகுவதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கிறது, அது விசுவாசத்தின் மூலமேயாகும். விசுவாசம் கேட்பதனால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது, அது மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து காலத்தின் செய்தியாளருக்குள்ளாக பிரதிபலிக்கப்படுகிறது.

எனவே, இங்கே, அந்த தண்ணீரில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிற சபைக் காலத்திற்குரிய தூதனானவனே இங்கேயிருந்து கொண்டு, அவருடைய இரக்கத்தையும், அவருடைய வார்த்தைகளையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும், அவரது நாமத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறவனாயிருக்கிறான். இங்கே யாவும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன, அதை நீங்கள் விசுவாசிப்பதன் மூலம், அங்கே வேறுபிரிக்கப்படுகின்றீர்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

ஒலிநாடாக்களைக் கேட்பதை நிறுத்தி விடாதீர்கள், அதனோடு தரித்திருங்கள். வார்த்தையினால் அதை ஆராய்ந்து பார்த்து, அது சரியா என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது இந்நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகெங்கிலும் இருந்து நாம் ஒன்றுபடும் இந்த குளிர்காலத்தில் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்தி, அவருடைய சத்தத்தைக் கேட்பதை விட மகத்தான அபிஷேகம் வேறுஎதுவுமே இல்லை.

என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து என்னால் கூற முடியும்: உங்கள் ஒவ்வொருவரோடும் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 61-0108 - "வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் III”

நேரம்: பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்.

 

 

சனி, 4 ஜனவரி, 2025

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,

நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 61-0101 வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம், பாகம் II என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

திங்கள், 30 டிசம்பர், 2024

அன்புள்ள மணவாட்டியே,

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு அற்புதமான கிறிஸ்மஸைக் கொண்டாடினீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுவை இன்றைக்கு உலகம் காண்கிற தொழுவத்தில் விட்டுவிடவில்லை, ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், தம்முடைய மணவாட்டியின் நடுவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய சத்தத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு நான் இன்று எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நான் ஏற்கனவே அறிவித்தபடி, புத்தாண்டு தினத்தன்று, டிசம்பர் 31 அன்று நம்முடைய வீடுகளில்/சபைகளில் மீண்டும் ஒருமுறை இராப்போஜனத்தை நடத்த விரும்புகிறேன். பங்கேற்க விரும்புவோர், நாம், 62-1231 போட்டி என்ற செய்தியை கேட்டுவிட்டு, செய்தியின் நிறைவில் சகோதரன் பிரான்ஹாம் அறிமுகப்படுத்தும் இராபோஜன ஆராதனைக்குச் செல்வோம்.

உள்ளூர் விசுவாசிகளுக்கு, நாங்கள் இரவு 7:00 மணிக்கு ஒலிநாடாவை இயக்கத் தொடங்குவோம். இருப்பினும், மற்ற நேர மண்டலங்களில் இருப்பவர்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் செய்தியைத் இயக்கத் தொடங்கவும். சகோதரன் பிரான்ஹாம் தனது புத்தாண்டுக்கு முந்தின மாலை செய்தியைக் கொண்டு வந்த பிறகு, பத்தி 59-ன் இறுதியில் ஒலிநாடாவை இடைநிறுத்துவோம், மேலும் நாங்கள் கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்கேற்கும்போது தோராயமாக 10 நிமிட பியானோ இசையைக் கேட்போம். சகோதரன் பிரான்ஹாம் ஆராதனையை முடித்தவுடன் ஒலிநாடாவை மீண்டும் இயக்கத் தொடங்குவோம். இந்த ஒலிநாடாவில், கால்களைக் கழுவும் ஆராதனை பகுதியை அவர் தவிர்க்கிறார், அதை நாமும் கூட தவிர்ப்போம்.

திராட்சை ரசத்தை எப்படிப் பெறுவது என்பதும், இராப்போஜன அப்பத்தை சுடுவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். இணையதளத்தில் இருந்து ஒலிப்பதிவை இயக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம் அல்லது லைஃப்லைன் பயன்பாட்டில் உள்ள வாய்ஸ் ரேடியோவில் இருந்து ஆராதனையை இயக்கலாம் (இது ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 7:00 மணிக்கு ஆங்கிலத்தில் இயக்கப்படும்.)

நம்முடைய கர்த்தருக்கு சேவை செய்யும் மற்றொரு வருடத்தை நாம் நெருங்கும்போது, முதலில் அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் அவருக்கு நம்முடைய அன்பை வெளிப்படுத்துவோமாக, பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்கெடுப்போம். அவருடைய சேவைக்காக நம்முடைய ஜீவியங்களை மீண்டும் அர்ப்பணிக்கும்போது அது எவ்வளவு ஒரு மகிமையான, புனிதமான நேரமாயிருக்கும்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

சகோதரன் ஜோசப்

 

 

தொடர்புடைய சேவைகள்