அன்புள்ள விழித்துக் கொண்டும் & காத்துக் கொண்டுமிருப்பவர்களே,
மணவாட்டி மத்தியில் முன் எப்போதும் இல்லாத ஒரு உற்சாகம் நிலவுகிறது. நாம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம்; நமது ஜூபிலி ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நாள் வருவதற்கு மணவாட்டி நீண்ட நேரம் காத்திருந்தாள். புறஜாதி யுகத்தின் முடிவு வந்துவிட்டது, நம்முடைய கர்த்தருடனான நித்தியத்தின் ஆரம்பம் விரைவில் தொடங்கும்.
நாம் வாழும் காலத்தை வார்த்தையைக் கேட்பதனால் புரிந்து கொள்கிறோம். நேரம் கடந்துவிட்டது. எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான நேரம் சமீபித்துவிட்டது. நாம் வந்துவிட்டோம். பரிசுத்த ஆவியானவர் வந்து அவருடைய மணவாட்டிக்கு எல்லா மகத்தான, ஆழமான, இரகசிய காரியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாம் பதறலில் இருந்து, தேவனைத் தேடுகிறோம்; நம்மை ஆயத்தப்படுத்துகிறோம். இந்த உலகத்தின் எல்லாக் காரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டோம். இந்த வாழ்க்கையின் கவலைகள் நமக்கு ஒன்றுமில்லை. நம்முடைய விசுவாசம் முன்னெப்போதையும் விட அதிக உயரத்தை எட்டியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட அம்மாளை அழைத்துச் செல்லும்படியாய் அவளுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அறுபத்தொன்பது வாரங்கள் சரியாக நிறைவேறிவிட்டன; யூதர்கள் திரும்பிப் போவது சரியாக நிறைவேறிவிட்டது. சபைக் காலம் சரியாக நிறைவேறிவிட்டது. நாம் முடிவுக் காலத்தில், முடிவு காலத்தில் இருக்கிறோம், லவோதிக்கேயா சபையின் காலத்தில், அதன் முடிவில் இருக்கிறோம். நட்சத்திர செய்தியாளர்கள் - தூதர்கள் யாவரும் தங்களுடைய செய்தியைப் பிரசங்கித்துவிட்டனர். அது புறப்பட்டுச் சென்றுவிட்டது. நாம் அருகே நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
என்னே ஒரு நம்ப முடியாத ஆனால் உண்மையான நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும் இல்லாத வகையில் சத்துரு ஒவ்வொருவரையும் தாக்குவது மிகவும் கடினமான காலகட்டம். அவன் தன்னிடம் உள்ள அனைத்தையும் நம் மீது வீசுகிறான். அவன் பதறலில் இருக்கிறான், ஏனென்றால் அவனுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறிவான்.
ஆனால் அதே நேரத்தில், நாம் நம்முடைய ஜீவியங்களில் இதைப் போன்று ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
● நாம் இதைப் போன்று ஒருபோதும் கர்த்தரிடம் நெருங்கியதில்லை.
● பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரையும் நிரப்புகிறார்.
● அவருடைய வார்த்தையின் மீது நமக்குள்ள அன்பு இதைப் போன்று ஒருபோதும் மகத்தானதாக இருந்ததில்லை.
● அவருடைய வார்த்தையின் நம்முடைய வெளிப்பாடு நம்முடைய ஆத்துமாவை நிரப்புகிறது.
● நாம் ஒவ்வொரு சத்துருவையும் வார்த்தையால்தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும், நாம் யார் என்பதில் இதைப் போன்று உறுதியாக இருந்ததில்லை:
• முன்குறிக்கப்பட்டது
● தெரிந்து கொள்ளப்பட்டது
● தேர்ந்தெடுக்கப்பட்டது
● ராஜரீக வித்து
● இனிய இருதயம்
● நித்திய, வெள்ளை அங்கி தரித்த, திருமதி. இயேசு, ஒளிநாடாவைக் கேட்பது, பிரகாசமாக்கப்பட்ட, கற்புள்ள கன்னி, ஆவியால் நிரப்பப்பட்ட, வெல்ல முடியாத, புத்திர சுவிகாரமாக்கப்பட்ட, கலப்படமற்ற, கன்னி வார்த்தை மணவாட்டி.
அடுத்து என்ன வரப்போகிறது? கல் வருகிறது. நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் விழித்துக் கொண்டும், காத்துக் கொண்டும், ஜெபித்துக் கொண்டுமிருக்கிறோம். அவருடைய வருகைக்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.
அது, "நாம் அப்படி நம்புகிறோம்" என்பதில்லை, நமக்குத் தெரியும். இனி சந்தேகங்களே இல்லை. ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் அது முடிந்துவிடும், நாம் நம்முடைய கல்யாண விருந்தில் அவரோடும் நம்முடைய எல்லா அன்புக்குரியவர்களோடும் மறுபுறம் இருப்போம்.
அது தான் ஆரம்பம்...மற்றும் முடிவே இல்லை!!
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பின அவருடைய பலமுள்ள தூதன் மூலமாக பேசி, தேவனுடைய எல்லா இரகசியங்களையும் சொல்லி வெளிப்படுத்தப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் அந்த கலியாண விருந்துக்கு ஆயத்தமாக வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 61-0806 - தானியேலின் எழுபதாம் வாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள களிகூருகிற மணவாட்டியே,
நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நாளையும் வேளையையும் கண்டறிய ஜெபத்திலும் வேண்டுதல்களிலும் நம்முடைய முகங்களை பரலோகத்தை நோக்கியவாறு வைத்துள்ளோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகெங்கிலும் இருந்து உன்னதங்களிலே ஒன்றாக வீற்றிருந்து, தேவன் பேசி, அவருடைய பலமுள்ள தூதுனாகிய செய்தியாளர் மூலமாக அவருடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவதைக் கேட்கிறோம். இந்த கடைசி நாளில் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்த பிதாவானவர் தம்முடைய மணவாட்டிக்கு பூமிக்குரிய தூதனாகிய செய்தியாளரை அனுப்பினார்.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாகிய யூதர்களுக்கு காபிரியேல் தூதனாய் இருக்கிறார். ஆனால் தம்முடைய புறஜாதி மணவாட்டிக்கு, அவர் தம்முடைய அன்பான இனிய இருதயமான மணவாட்டிக்கு அவருடைய எல்லா வார்த்தையும் பேசி வெளிப்படுத்தும் படியாக வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்னும் பெயர் கொண்ட பூமிக்குரிய தூதனில் மாம்ச சரீரத்தினூடாக மெல்கிசேதேக்கு தாமே வந்து பேசினார்.
மணவாட்டி அவருடைய ஆவிக்குரிய ஆகாரத்தை, மறைவான மன்னாவை கடைசி மணி நேரம் வரை ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் தங்களுடைய விரல் நுனியில் வைத்திருக்கும்படியாக, அவர் அதை பதிவுசெய்து, சேமித்து, பாதுகாத்து வைத்திருந்தார்.
தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவதை நாம் கேட்கும்போது, நம்முடைய உள்ளான மனுஷன் அத்தகைய அபிஷேகத்தால் நிரப்பப்படுகிறது. நாம் அவருடைய வார்த்தையை தெளிவாக கண்டு அதனுடைய அர்த்தத்தை புரிந்து கொள்ளும்படியாக எப்படியாய் அவர் வெளிப்படுத்துகிறார். அது நாம் ஜீவித்து கொண்டிருக்கிற வேளையையும், நாம் யாராய் இருக்கிறோம் என்றும், வெகு சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதையும், சீக்கிரத்தில் வரப்போகிற நம்முடைய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலையும் நமக்கு சொல்லி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாம் கலியாண விருந்தில் அவருடன் இருக்கும்போது இங்கே பூமியில் என்ன சம்பவிக்கும் என்பதை அவர் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்திக் கொண்டும் கூட இருக்கிறார். அவர் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களின் குருடாக்கப்பட்ட கண்களை எவ்வாறு திறப்பார்; அவருடைய புறஜாதி மணவாட்டி நிமித்தமாக அவர் குருடாக்கினவர்கள்.
என் நண்பர்களே, நாம் இந்த உலகத்தில் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், நம்மை அழைத்துச் செல்லும்படியான அவருடைய வருகைக்காக ஏங்குகிறோம் என்பதை நான் அறிவேன், ஆனால் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதில் நன்றியுள்ளவர்களாயிருந்து நாமும் கூட களிகூருவோமாக.
நாம் நம்முடைய கரங்களையும், நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சத்தங்களையும் உயர்த்தி களிகூருவோமாக. வெகு சீக்கிரத்தில் அவர் நமக்காக என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, அவர் என்ன வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை குறித்தும், இப்பொழுது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்தும் நாம் களிகூருவோமாக.
அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் ஒன்றாக இணைகிற அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாய் நாம் இருக்கிறோம் என்று அவர் நிமிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய சத்தத்தோடும், அவருடைய வார்த்தையோடும், அவருடைய தூதனோடும் தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நமக்கு உறுதியளித்துக்கொண்டிருக்கிறார், நாம் யார் என்பதை அறிவதிலும், அடையாளங் கண்டு கொள்வதிலும் அவர் நமக்கு விசுவாசத்தை அளித்துள்ளார்:
மாம்சத்தில் ஜீவிக்கிற அவருடைய வார்த்தை.
நாம் பயப்பட ஒன்றுமில்லை; கவலைப்படவும் ஒன்றுமில்லை; வருத்தப்படவும் ஒன்றுமில்லை. அது எனக்கு எப்படி தெரியும்? தேவன் அவ்வண்ணமாய் கூறினார்! எனவே நாம் களிகூர்ந்து, மகிழ்ச்சியாயிருந்து, நன்றியுள்ளவர்களாக இருப்போமாக; ஜீவனுள்ள வார்த்தை நமக்குள் ஜீவித்து வாசம் செய்கிறது. நாம் அவருடைய மேம்பட்ட ராஜரீக வித்தாயிருக்கிறோம்.
நேரம் வந்துவிட்டது என்பதையும், அவருடைய வார்த்தைக்கு உண்மையாகவும், உண்மையாக காத்துக் கொள்வதன் மூலமும் நாம் நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளோம் என்பதை அறிந்து கொள்வதில் கர்த்தரும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன்.
முதன்முறையாக கண்ணாடியில் பார்த்த சிறுவனைப் போல, நாம் அவருடைய வார்த்தைக்குள்ளாக நோக்கி பார்த்துக் கொண்டு, நாம் யாராயிருக்கிறோம் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே...அது நான் தான். நான் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டி. நீர் தெரிந்து கொண்ட ஒருவன் நான் தான். நான் உமக்குள் இருக்கிறேன். நீர் எனக்குள் இருக்கிறீர், நாம் ஒன்றாயிருக்கிறோம்.
பூமியின் மேல் எப்போதும் ஜீவித்தவர்களிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஜனங்களாய் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி நம்மால் கொண்டாடாமல் இருக்க முடியும்?
நமக்கு முன் இருந்த எல்லா பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் இந்த நாளில் ஜீவிக்க விரும்பி, இந்த இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதை காண விரும்பினர். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் எங்களை இங்கே வைத்தார்.
நாம் காத்திருக்க முடியவில்லை:
ப்ர்ர்ர்ர்! என்னே! வூயு! வேறு வார்த்தைகளில் கூறினால், சத்துருவானவன் அடைக்கப்பட்டபொழுது, பாவமானது முடிவுக்குக் கொண்டு வரப்படும் போது, நித்திய நீதியானது வருவிக்கப்படும் பொழுது, சாத்தானானவன் பாதாளக் குழியில் தள்ளியடைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டிருக்கும் போது, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஆமென்! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அது வரப்போகிறது. சகோதரனே, அது வரப் போகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தானியலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள் 61-0730E என்ற செய்தியை தேவனுடைய தூதன், தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வருவதை கேட்கும்படி உலகம் முழுவதிலுமிருந்து நாங்கள் ஒன்று கூடியிருக்கையில், என்னே ஒரு அபிஷேகம் இருக்கப்போகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்பான தீர்மானிக்கப்பட்டவர்களே,
ஏழு சபை காலங்களைப் படித்தபோது என்ன ஒரு அற்புதமான குளிர்காலத்தை நாம் அனுபவித்து வருகிறோம், பின்னர் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுகளின் புத்தகத்தில் தேவன் நமக்கு இன்னும் கூட அதிகமாக வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் எப்படி சபைக் காலங்களாக இருந்தன, பின்னர் யோவான் 4-வது அதிகாரத்தில் எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டான் என்றும், 5-வது அதிகாரத்தில் வரவிருக்கும் காரியங்களையும் நமக்குக் காண்பிக்கிறது.
6 வது அதிகாரத்தில், வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரத்திலிருந்து 19 வது அதிகாரம் வரை நடக்கும் காரியங்களைக் காண யோவான் மீண்டும் பூமியில் எப்படி இறங்கினான் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
தேவனுடைய சத்தம் அவருடைய பலமுள்ள ஏழாம் தூதன் மூலமாக பேசி, அடுத்து என்ன வெளிப்படப் போகிறது என்று நமக்குச் சொல்வதை நாம் கேட்க போகிறபடியால் மணவாட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு ஆசீர்வதிக்கப்படுவாள்.
நாம் தானியேலின் எழுபது வாரங்கள் பற்றிய சிறந்த ஆய்வைத் தொடங்குவோம் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஏழு முத்திரைகளுக்குள் செல்வதற்கு முன்பு அது மீதமுள்ள செய்தியில் இணையும் என்று தீர்க்கதரிசி கூறினார்; ஏழு எக்காளங்கள்; மூன்று ஆபத்துக்கள்; சூரியனில் ஸ்தீரி; சிவப்பான மிருகமாகிய பிசாசு தள்ளப்படுதல்; இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் முத்திரையிடப்படுதல்; இந்த நேரத்திற்கு இடையே யாவும் சம்பவிக்கிறது.
தானியேல் புத்தகம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நேரம் மற்றும் காலத்திற்கான சரியான நாள்காட்டியாகும், அது எவ்வளவு சிக்கலாக்கப்பட்டுள்ளதாக தோன்றினாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவன் அதை உடைத்து நமக்காக அதை எளிதாக்குவார்.
அவருடைய ஜனங்களைத் தேற்றி இப்பொழுது என்ன சமீபமாயிருக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு கூறவும், இன்று இக்காலையில் இங்கே பிரசன்னமாயிருப்பவர்களுக்கும், இந்த ஒலிநாடாக்கள் உலகம் பூராவிலும் போகப் போகிறதே அவ்விடங்களிலுள்ள தேசங்களில் இதைக் கேட்பவர்களுக்கும், நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதைக் கூறத்தக்கதாகவே இப்பொழுது நான் என்னத் தேடிக் கொண்டி ருக்கிறேன் என்பதை தேவன் அறிவார்.
அந்த நாளுக்காகவும் அந்த நேரத்திற்காகவும் ஏங்கி ஜெபித்துக்கொண்டிருக்கும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாய் நாம் இருக்கிறோம். நம்முடைய கண்கள் பரலோகத்தை நோக்கியவாறு இருக்க, அவருடைய வருகைக்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் யாவரும் தானியேலைப் போல் ஜெபத்திலும் வேண்டுதல்களிலும் நம்முடைய முகங்களை பரலோகத்தை நோக்கியவாறு வைத்திருப்போம், வார்த்தையை வாசித்து, அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் கர்த்தருடைய வருகை விரைவில் நெருங்குகிறது என்பதை நாம் அறிந்துள்ள காரணத்தால், நாம் முடிவில் இருக்கிறோம்.
மிக எளிதாக நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பாரத்தையும், ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு சிறிய அவநம்பிக்கையையும் ஒதுக்கி வைக்க பிதாவே எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய நேரம் வரையறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, நாங்கள் பரம அழைப்பின் பந்தய பொருளுக்கான இலக்கை நோக்கி இப்பொழுது தொடருவோமாக.
செய்தியானது புறப்பட்டு சென்று விட்டது. ஒவ்வொரு காரியமும் இப்பொழுது ஆயத்தமாக உள்ளது; நாம காத்துக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டும் இருக்கிறோம். சபையானது முத்தரிக்கப்பட்டுள்ளது. துன்மார்க்கர் இன்னும் அதிகமாக துன்மார்க்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். சபைகள் அதிக சடங்காரச்சாரமுள்ளவளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மண்டை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
தேவனுடைய காரியங்களுக்கு திரும்ப, மூல செய்திக்கு ஜனங்களைத் திரும்ப அழைக்க, வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிற ஒரு சத்தம் நமக்கு உண்டு. இந்த காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கிறதை நாம் வெளிப்பாட்டின் மூலம் புரிந்து கொள்கிறோம்.
நாம் தானியேல் புத்தகத்தின் நம்முடைய மிகச் சிறந்த ஆய்வினைத் துவங்குகையில், தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்குஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன்வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
61-0730M - காபிரியேல் தானியேலுக்கு அறிவித்த கட்டளைகள்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள இளைப்பாறுகிறவர்களே,
இது உண்மையிலேயே நம் ஜீவியத்தின் சிறந்த குளிர்காலம். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்; கிறிஸ்து மரித்த அனைத்தும் நமக்குச் சொந்தமானது என்ற தேவனுடைய அங்கீகார முத்திரையும் உள்ளது.
நாம் இப்பொழுது நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமான, பரிசுத்த ஆவியை பெற்றுள்ளோம். அது நாம் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்ற உறுதியாயும் முன்பணமாயும் உள்ளது. நாம் தேவனுடைய வாக்குதத்தில் இளைப்பாறிக் கொண்டும், அவருடைய சூரிய வெளிச்சத்தின் உஷ்ணத்தில் இருந்துகொண்டும், அவருடைய ரூபுகாரப்படுத்தப்பட்ட வார்த்தையையும் அவருடைய சத்தத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரமாய் இருக்கிறது. நாம் அங்கு செல்கிறோமா இல்லையா என்று நாம் கவலைப்படவில்லை, நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! அது நமக்கு எப்படித் தெரியும்? தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்! தேவன் அதை வாக்களித்தார், நாம் அந்த அச்சாரத்தைப் பெற்றுள்ளோம். நாம் அதைப் பெற்றுள்ளோம், கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டார்.
அதிலிருந்து விலகிப்போக வழியே இல்லை...உண்மையில், நாம் அங்கிருக்கிறோம்! நாம் செய்ய வேண்டியது எல்லாம் காத்திருக்க வேண்டியதுதான்; அவர் இப்பொழுது இங்கே இனத்தான் மீட்பரின் பணியை செய்து கொண்டிருக்கிறார். நாம் இப்பொழுது அதற்கான அச்சாரத்தைப் பெற்றிருக்கிறோம். அவர் நமக்காக திரும்ப வரப்போகிறதான அந்த நேரத்துக்காகவே நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே நாம் யாவரும் கல்யாண விருந்துக்கு சென்றுவிடுவோம்.
நமக்கு முன்னால் இருக்கும் அனைத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்முடைய சிந்தையினால் அனைத்தையும் கிரகித்துக்கொள்ள முடியாது. நாளுக்கு நாள் அவர் தம்முடைய வார்த்தையை அதிகமாக வெளிப்படுத்தி, இந்த மகத்தான வாக்குத்தத்தங்கள் நமக்குச் சொந்தமானவை என்று உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்.
உலகம் விழுந்து போய்க் கொண்டிருக்கிறது; அக்கினிகள், பூமியதிர்ச்சிகள் மற்றும் எங்கும் குழப்பம், ஆனாலும் உலகத்தை காப்பாற்ற ஒரு புதிய மீட்பன் அவர்களுக்கு உண்டு என்றும், அவர்களுடைய பொற்காலத்தை கொண்டு வருவான் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாமோ ஏற்கனவே நம்முடைய இரட்சகரைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய பொற்காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.
இப்போது நாம் வெளிப்படுத்துதலின் 5-வது அத்தியாயத்திற்குள் நுழையும்போது இன்னும் கூடுதலான வெளிப்பாட்டிற்கு அவர் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஏழு முத்திரைகள் திறப்பதற்கு இங்கே ஒரு காட்சியை அமைத்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளிப்படுத்தின விசேஷம் 1 வது அத்தியாயத்தில் செய்தது போலவே, ஏழு சபை காலங்களுக்கான வழியைத் திறந்தார்.
மணவாட்டிக்கான மீதமுள்ள குளிர்காலம் எப்படி இருக்கும்? நாம் ஒரு சிறிய முன்னோட்டத்தைப் பார்ப்போமாக:
இப்பொழுது, எனக்கு நேரமில்லை. இங்கே அதைப்பற்றிய பின்னணியான விவரக்குறிப்பை நான் எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் நம்முடைய அடுத்த கூட்டத்தில் நாம் இதற்குள் செல்வதற்கு முன்… நான் எனது விடுமுறை நாட்கள் முடிந்து இங்கே திரும்ப வரும்போதோ அல்லது பிறிதொரு சமயத்திலோ ஒரு வேளை நான் இந்த தானியேலின் எழுபது வாரங்கள்’ பற்றி எடுத்துக்கொண்டு இங்கே இதனோடே அதை இணைத்து, பெந்தெகொஸ்தே யூபிலிக்கு அது எங்கே எடுத்துச் செல்லுகிறது என்பதை காண்பித்து, பிறகு இந்த ஏழு வாதை-… அந்த ஏழு முத்திரைகள் இடமாக திரும்ப வந்து, நாம் போய்விடுவதற்கு முன்பாக அவற்றைத் திறந்து, அது முடிவு நேரத்தில் இருப்பதைக் காண்பிக்கலாம், இந்த…
கர்த்தர் தம்முடைய மணவாட்டிக்காக எவ்வளவு அற்புதமான நேரத்தை வைத்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துதல். நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நம்மை உற்சாகப்படுத்த அவர் வருகிறார். அவருடைய சத்தத்தோடும் அவருடைய வார்த்தையோடும் தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்லுகிறார்.
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு காரியமும் இல்லை, அப்படியே இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்! இனி பாடுபடுதல் இல்லை, இனி கலக்கம் இல்லை, நாம் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!
61-0618-”வெளிப்படுத்தின விசேஷம் ஐந்தாம் அதிகாரம் பாகம் #II என்ற செய்தியை தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போகிறதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து இளைப்பாறுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள புத்திரசுவிகாரமாக்கப்பட்டவர்களே,
பரிசுத்த ஆவியானவர் மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதால் என்ன ஒரு அற்புதமான குளிர்காலம் நமக்கு இருக்கிறது. நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் கேள்விப்பட்ட, படித்த மற்றும் ஆய்ந்த காரியங்கள் இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் திரைநீக்கப்பட்டு வெளிப்பட்டு வருகின்றன.
இந்த நாளுக்காகவே மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறான். அவர்கள் அனைவரும் நாம் காணும் மற்றும் கேட்கும் காரியங்களைக் கேட்கவும் பார்க்கவும் ஆவலுடன் ஜெபித்தனர். பண்டைய தீர்க்கதரிசிகள் கூட இந்த நாளுக்காக ஏங்கினார்கள். கர்த்தரின் நிறைவையும் வருகையையும் அவர்கள் எப்படியாய் காண விரும்பினார்கள்.
இயேசுவின் சீஷர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மனிதர்கள் கூட, அவருடன் நடந்து பேசி, மறைக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் பார்க்கவும் கேட்கவும் விரும்பினர். இது அவர்களுடைய நாளில், அவர்களுடைய காலத்தில் வெளிப்படுத்தப்பட்டு வெளிப்படும் என்று அவர்கள் ஜெபித்தனர்.
ஏழு சபைக் காலங்கள் முழுவதும், ஒவ்வொரு செய்தியாளரும், பவுல், மார்ட்டின் மற்றும் லூத்தர் ஆகியோர் மறைக்கப்பட்டிருந்த அனைத்து இரகசியங்களையும் அறிய விரும்பினர். வார்த்தையின் நிறைவேற்றம் அவர்களுடைய வாழ்நாளில் நடைபெறுவதைக் காண வேண்டும் என்பதே அவர்களின் வாஞ்சையாயிருந்தது. அவர்கள் கர்த்தருடைய வருகையைக் காண விரும்பினார்கள்.
தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. தேவனுக்கு ஒரு நேரம் இருந்தது. தேவன் ஒரு ஜனத்தை உடையவராயிருந்து, அவர் நம்…பேரில் காத்துக் கொண்டிருந்தார். காலங்களினூடாக, யாவரும் தவறிப் போயிருந்தனர். ஆனால் அவருடைய முன்னறிவினால், ஒரு ஜனம் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்: அவருடைய மகிமையான, பரிபூரண வார்த்தை மணவாட்டி. அவர்கள் அவரைக் கைவிடமாட்டார்கள். அவர்கள் ஒரு வார்த்தையையும் கூட சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் அவருடைய தூய கன்னிகை வார்த்தை மணவாட்டியாக இருப்பார்கள்.
இப்பொழுதே நேரம். இப்பொழுதே காலம். ஆதாம் வீழ்ந்து அவனது உரிமையை இழந்ததிலிருந்து அவர் காத்திருந்து தெரிந்து கொண்டவர்கள் நாமே. நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம்.
நடக்கவிருந்த எல்லாவற்றின் முன்னோட்டத்தையும் தேவன் யோவானுக்குக் காண்பித்தார், ஆனால் அவனுக்கு எல்லா அர்த்தங்களும் தெரியாது. அவன் மேலே அழைக்கப்பட்டபோது, உள்ளும் புறமும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்தில் கண்டான், ஆனால் அந்தப் புத்தகத்தைத் திறக்கப் பத்திரவானாக யாரும் இல்லை.
எல்லாமே இழக்கப்பட்டிருந்த காரணத்தால் யோவான் மனங்கசந்து கூச்சலிட்டு அழுதான், நம்பிக்கையே இல்லாதிருந்தது. ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், மூப்பர்களில் ஒருவன் அவனிடத்தில், “அழவேண்டாம், இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்றான்.
அதுவே நேரமாயிருந்தது. அதுவே காலமாயிருந்தது. அந்த மனிதன் கண்ட எல்லாவற்றையும் எழுதும்படி தேவன் தெரிந்து கொண்டவனாய் அவன் இருந்தான். ஆனால் இன்னமும், அதனுடைய முழு அர்த்தமும் தெரியவில்லை.
தேவனோ காத்துக்கொண்டிருந்தார், அவருடைய மணவாட்டிக்கு அவருடைய சத்தமாய் இருக்கும்படி அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரமான ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தை அவர் உபயோகிக்கும்படியா அவன் பூமிக்கு வருவதற்காகவே காத்துக் கொண்டிருந்தார். எந்த தவறான புரிந்துகொள்ளுதலும் இல்லாதபடிக்கு அவர் உதட்டிலிருந்து செவிக்கு பேச விரும்பினார். அவர் தாமே பேசி தம்முடைய எல்லா இரகசியங்களையும் தம்முடைய அன்பான, முன்குறிக்கப்பட்ட, பரிபூரண இனிய இருதயமான மணவாட்டியாகிய…நமக்கு வெளிப்படுத்த விரும்பினார்!!
இந்த அற்புதமான காரியங்களையெல்லாம் நமக்குச் சொல்ல அவர் எவ்வளவு வாஞ்சித்துள்ளார். எப்படி ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம் அவளை நேசிப்பதாக திரும்ப திரும்ப சொல்லும்போது, அவள் அதைக் கேட்டு ஒருபோதும் சலிப்படைவதில்லையோ, அவ்வாறே அவர் நம்மை நேசிக்கிறார் என்றும், நம்மை தெரிந்து கொண்டார் என்றும், நமக்காக காத்திருந்தார் என்றும், நமக்காகவே இப்பொழுது வரவிருக்கிறார் என்றும், அவர் நம்மிடத்தில் திரும்ப திரும்ப சொல்ல விரும்புகிறார்.
அவர் தன்னுடைய சத்தத்தை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்றும், இதனால் தம்முடைய மணவாட்டி நாள் முழுக்க, ஒவ்வொரு நாளும் இயங்க பொத்தானை அழுத்தி கேட்க முடியும் என்றும், அவர்களுடைய இருதயங்களை அவருடைய வார்த்தை நிரப்புவதைக் கேட்க முடியும் என்பதையும் திரும்பத் திரும்ப அவர் கூறுவதை கேட்பதை நாம் எவ்வளவாய் விரும்புகிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவருடைய வார்த்தையின் பேரில் போஷிக்கப்படுவதனால் அவருடைய அன்பான மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறாள். நாம் அவருடைய சத்தத்தை தவிர, வேறு எதையும் கேட்க மாட்டோம். அருளப்பட்டிருக்கிற அவருடைய தூய வார்த்தையை மாத்திரமே நம்மால் உட்கொள்ள முடியும்.
நாம் மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் இருக்கிறோம். நாம் அதை நம்முடைய ஆத்மாக்களுக்குள்ளே உணர்கிறோம். அவர் வருகிறார். விவாக இசையானது இசைக்கப்படுகிறதை நாம் கேட்கிறோம். மணவாட்டி நடைப்பிரகாரத்தின் இடையில் நடக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறாள். எல்லோரும் நிற்க, மணவாட்டி அவளுடைய மணவாளனோடு வரவிருக்கிறாள். எல்லாமே ஆயத்தமாக்கப்பட்டுள்ளன. அந்த தருணமும் வந்துவிட்டது.
அவர் யாரையுமே நம்மைப் போல் நேசிக்கிறதில்லை. நாம் வேறு எதையும் அவரைப் போல் நேசிப்பதில்லை. நாம் அவருடனும், நாம் நேசிக்கிற அனைவருடனும், நித்தியத்தினூடாக ஒன்றாக இருக்கப் போகிறோம்.
வெளிப்படுத்தின விசேஷம், ஐந்தாம் அதிகாரம் பாகம் 1 61-0611 என்ற செய்தியை தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, கலியாணத்திற்க்காக எங்களோடு உங்களைத்தாமே ஆயத்தம் செய்து கொள்ள வரும்படிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்