அன்புள்ள பரலோகத்திற்குரிய பரிசுத்தவான்களே,
பிதா தம்முடைய வார்த்தையால் நம்மை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார், அந்த வெளிப்பாட்டின் ரூபகாரப்படுத்துதல் நமக்குத் ஊக்கத்தை அளிக்கிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மைத் தெரிந்து கொண்டார், ஏனென்றால் நம்முடைய சொந்தத் தெரிந்து கொள்ளுதலின் மூலம் நாம் அவருடைய வார்த்தைக்கு உண்மையாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அது உண்மையாகவே ஆழமாக பதியும்படி, நாம் மீண்டும் கூறட்டும். அவர் காலம் முழுவதும், எல்லா காலத்தின் முடிவு வரையிலும் பார்த்தார், நம்மைப் பார்த்தார்...நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? அவர் உங்களைப் பார்த்தார், அவர் என்னைப் பார்த்தார், நம்மை நேசித்தார், ஏனென்றால் நம்முடைய சொந்தத் தெரிந்து கொள்ளுதல் மூலம், நாம் அவருடைய வார்த்தையுடன் நிலைத்திருப்போம்.
அப்போதே, அவர் தம்முடைய எல்லா தேவதூதர்களையும் கேருபீன்களையும் ஒன்றாக அழைத்து, நம்மைச் சுட்டிக்காட்டி, “அதுதான் அவள், அவள் என் மணவாட்டி, அவர்கள் பேரில் தான் நான் காத்துக் கொண்டிருந்தேன்!” என்றார்.
யோவானைப் போலவே, அந்த காரணத்தினால் தான் நாம் இந்த எல்லா ஆரவாரமிடுதலையும், கூச்சலிடுதலையும், கர்த்தரை துதித்தலையும் செய்து கொண்டிருக்கிறோம், நாம் புது திராட்சை ரசத்தினால் ஊக்கப்படுத்தப்பட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி, நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிவோம்.
இந்த வாரம் ஜெபர்சன்வில்லில் நாம் அனுபவித்து வரும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையைப் போலவே இதுவும் இருக்கிறது...நாமும் கூட உலகிற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புகிறோம்.
மணவாட்டி வெளிப்பாட்டின் இடியுடன் கூடிய மழையைக் கொண்டிருக்கிறாள், மேலும் அது வெளிப்பாட்டின் ஒரு திடீர் வெள்ளத்தை உருவாக்குகிறது. மணவாட்டி தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொண்டு, அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டாள். உடனடியாகப் பாதுகாப்பாகச் செல்லுங்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் இல்லையென்றால் அழிக்கப்படுவீர்கள்.
நாம் சிங்கத்தின் காலத்திலோ, அல்லது காளையின் காலத்திலோ, அல்லது மனித காலத்திலோ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை; நாம் கழுகின் காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், தேவன் தம்முடைய மணவாட்டியை அழைத்து வழிநடத்த மல்கியா 4 என்ற வல்லமைமிக்க கழுகை நமக்கு அனுப்பியுள்ளார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, நான்காவது முத்திரையைக் கேட்டு நாம் ஒன்றாக ஒன்றிணைக்கப்படுவதால், அது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கும். இது தேவனுடைய வல்லமைமிக்க கழுகு தீர்க்கதரிசியின் பிறந்தநாளாக இருக்கும்.
நாம் இந்த அற்புதமான நாளைக் கொண்டாடி, நம்மை அழைத்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த அனுப்பிய அவருடைய கழுகு செய்தியாளரை நமக்கு அனுப்பியதற்காக கர்த்தருக்கு நன்றி கூறுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: நான்காம் முத்திரை 63-0321
நேரம்: பிற்பகல் 12:00 மணி, ஜெபர்சன்வில் நேரம்
ஆயத்தப்படும்படி வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்.
பரி. மத்தேயு 4
பரி. லூக்கா 24:49
பரி. யோவான் 6:63
அப்போஸ்தலர் 2:38
வெளிப்படுத்தின விசேஷம் 2:18-23, 6:7-8, 10:1-7, 12:13, 13:1-14, 16:12-16, 19:15-17
ஆதியாகமம் 1:1
சங்கீதம் 16:8-11
II சாமுவேல் 6:14
எரேமியா 32
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 4
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஆவிக்குரிய ஏவாளே,
இன்றைக்கு என்னுடைய கடிதத்தை தேவனுடைய அணுகுண்டோடு துவங்குவேனாக; .22 என்ற ஒரு துப்பாக்கியோடு அல்ல, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கான அணுகுண்டு.
இப்பொழுது, நீங்கள் அவைகளை குறித்துக்கொள்ள வேண்டுமானால்; உண்மையாகவே, நீங்கள் யாவரும் அவைகளை அறிவீர்கள். இயேசு, யோவான் 14:12; யோவேல், யோவேல்: 2:38; பவுல், 2தீமோத்தேயு 3; மல்கியா 4-வது அதிகாரம்; திவ்வியவாசகனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷம் 10:17, 1-17, சரியாக இப்பொழுது என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள்.
அறிவிப்பும், எச்சரிக்கையும்: நீங்கள் நம்பினால் பின்வரும் மேற்கோள் உங்களுக்காக அல்.
“நாம் தேவனுடைய தீர்க்கதரிசியின் பேரில் மிஞ்சிப் போகிறோம்.” “நீங்கள் தீர்க்கதரிசி பேசுவதற்கு செவி கொடுத்தால், நீங்கள் மணவாட்டியாய் இருக்க முடியாது.” “சபையில் ஒலிநாடக்களை இயக்குவது தவறாய் உள்ளது.” “தீவட்டி அனுப்பப்பட்டுள்ளது; இன்றைக்கு மிக முக்கியமான காரியம் ஊழியத்திற்கு செவி கொடுத்துக் கொண்டிருப்பதாகும்.” “ஒரே நேரத்தில் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது ஒரு ஸ்தாபனமாக உள்ளது.”
சபைக்கு, அது என்னவாயுள்ளது? வார்த்தையானது மறுபடியும் அவருடைய மக்களிடையே மாம்சமானது. புரிகிறதா?
பயங்கரமான வெடி சத்தம்…எனவே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறபோது, மாம்சமாக்கப்பட்ட வார்த்தை நம்மிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது.
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் இதுவல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? மேற்கோளின் இந்தப் பகுதி உங்களுக்கானது.
அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை.
நாம் யார் என்று கர்த்தர் தம்முடைய வார்த்தையிலிருந்து நமக்கு எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அந்த வெளிப்படுத்தலுக்கு வெளியே உள்ள அனைவரும் அவ்வளவு தூரம் விலகிச் செல்கிறார்கள்.
உண்மையாகவே, உங்களுக்கு… பதியவேண்டுமென்று அதை நான் கூறட்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றைக்கு உங்களிடமும் அதே காரியம்தான் காணப்படுகின்றது, பாருங்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமல் இருக்கிறீர்கள்! பார்த்தீர்களா?
இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவன் மனிதர்களை அபிஷேகம் செய்துள்ளார், ஆனால் ஒரே ஒரு முற்றிலுமான வார்த்தை மட்டுமே உள்ளது: வார்த்தை. ஒரு ஊழியக்காரர் அல்லது யாராவது பேசுவதை நீங்கள் கேட்கும்போது, அவர் கூறிக் கொண்டிருப்பது சரியாக தேவனுடைய தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியதுதான் என்று விசுவாசிப்பதற்கு உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தை, அவர்களின் வெளிப்பாடு, அவர்களின் வியாக்கியானம் தவறிப் போகக்கூடும்; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் ஒருபோதும் தவறி போக முடியாது.
இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தேவன் எளிமையில் இருப்பதை குறித்து பேசுகிறோம்...அவர் அதை மீண்டும்கூறுகிறார்.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையினால், மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகிய, அவரை அவர்கள் காணத்தவறுகின்றனர். இவைகளைச் செய்யும்படியாக வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்துள்ளது. கடைசி நாட்களில் இது இவ்வாறு இருக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது.
அவருடைய இடிமுழக்கத்தைக் கேளுங்கள். ஒரு இடிமுழக்கம் என்பது தேவனுடைய சத்தம். வில்லியம் மாரியன் பிரான்ஹாம் இந்தத் தலைமுறைக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறார்.
மணவாட்டிக்கு உண்மையாக எழுப்புதல் இன்னும் நிகழவில்லை. புரிகிறதா? இன்னும் அங்கே எழுப்புதல் இல்லை, மணவாட்டியை அசைத்தெழுப்பும்படியாக தேவனுடைய வெளிப்படுத்துதல் இன்னும் வரவில்லை. பார்த்தீர்களா? நாம் இப்பொழுது அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை இரகசியமாயுள்ள அந்த ஏழு இடிகள் தான், அவளை மறுபடியுமாக எழுப்பும். பாருங்கள், ஆம். அவர் அதை அனுப்புவார். அவர் அதை வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள்.
நீங்கள் விரும்பினால் அதைத் திரிக்கலாம், ஆனால் ஏழு இடி முழக்கங்கள் மணவாட்டிக்கு வெளிப்பாட்டினாலும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தினாலும் ஊக்குவித்தலை அளிக்கும், இது தேவனுடைய தீர்க்கதரிசி மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதன் மூலம் மட்டுமே வருகிறது. இது இப்போது உலகம் முழுவதும் நடைபெறுகிறது. தேவன் தம்முடைய மணவாட்டியை தனது வார்த்தையால் ஊக்குவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே நம்முடைய சத்துருவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
உன்னுடைய கரங்களை அவர்களிடத்திலிருந்து விலக்கி வை. அவர்கள் போகுமிடத்தை அறிந்திருக்கின்னர், ஏனெனில் அவர்கள் என் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். என் எண்ணெயினால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் என் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறார்கள். ‘நான் அவர்களை மறுபடியும் உயிரோடெழுப்புவேன்.’ அதை சேதப்படுத்த வேண்டாம்! அவர்களை குழப்பமுறச் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
அவர் நம்முடைய சத்துருவிடம் அவனுடைய மோசமான கைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் சுகவீனம் இன்னும் நம்மைத் தாக்க முடியுமா? ஆம். நமக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளதா? ஆம். ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்றும் நமக்கும் கூட சொன்னார்.
இது ஆழமானது. மெதுவாகவும் மீண்டும் மீண்டும் படியுங்கள்.
அது வார்த்தையாகுமுன்பு சிந்தையாயிருக்கும். ஒரு சிந்தை என்பது உருவாக்கப்படவேண்டும். சரி. ஆகவே, தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப்பாகிறது. அதாவது, அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தையை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அதன்பின்னர், நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், இது இன்னும் ஒரு சிந்தையாகவே இருக்கின்றது.
அது பேசப்படும்போது அவருடைய சிந்தனைகள் ஒரு சிருஷ்டிப்பாக மாறியது. பின்னர், அவருடைய சிந்தனைகள் வார்த்தையாக வழங்கப்பட்டு, நமக்கு வெளிப்படுத்தப்பட்டன. இப்போது நாம் அதைப் பேசும் வரை அது இன்னும் நம்முடன் ஒரு சிந்தனையாகவே இருக்கும். எனவே நாம் அதைப் பேசுகிறோம்... அதை விசுவாசிக்கிறோம்.
நான் ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. நான் கிறிஸ்துவின் மணவாட்டி. உலகம் தோன்றுவதற்கு முன்பே நான் அவருடைய மணவாட்டியாகத் தெரிந்து கொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டேன், அதை எதுவும் மாற்ற முடியாது. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது. அது எனக்கு அவருடைய வார்த்தை. நான் அந்த வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவாளி. அவர் என் நோய்களை எல்லாம் குணமாக்குகிற தேவனாகிய கர்த்தர். எனக்கு என்ன தேவையோ அது என்னுடன் உள்ளது, தேவன் அவ்வண்ணமாய் கூறினார்.
எளிமையில் தேவன்: வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது.
ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும், தங்களுடைய செய்தியையும் நிரூபிக்க “மேற்கோள்களை” பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான், நானும் அவ்வாறு செய்கிறேன், அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்ல மேற்கோள்களை மட்டுமே தருகிறேன்: ஒலிநாடக்களோடு தரித்திருங்கள்; அந்தக் சத்தத்தைக் கேளுங்கள். அந்த சத்தம் தேவனுடைய சத்தமாய் உள்ளது. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும், வேறு யாரோ கூறுவதை அல்ல. அந்த சத்தமே நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாகும்.
மற்றவர்கள் உங்களை தங்களுடைய ஊழியத்திற்கு, தங்களுடைய சபைக்கு, அவர்களுடைய வியாக்கியானத்திற்கு, அவர்களுடைய வெளிப்பாட்டிற்குக் கொண்டுவர மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். “உங்கள் போதகருடன் தரித்திருங்கள்.” (சரி, எனக்கும் கூட அது பிடிக்கும், ஏனென்றால் நாங்கள் அதை விரும்புகிறோம், ஒரு வித்தியாசமான போதகர்.) “அவர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் அல்ல.” “அவர் ஒருபோதும் சபையில் ஒலிநாடாக்களை இயக்கும்படி கூறவேயில்லை.”
தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்கவேண்டாம். சுத்தமான, கலப்படமில்லாத ஒருவள் அவருக்குத் தேவை, வேறொருவனுடன் சரசம் செய்யும் ஒருவள் அல்ல. என் மனைவி வேறொருவனுடன் சரசம் செய்வதை நான் விரும்பமாட்டேன். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட விவேகத்திற்கு நீங்கள் செவி சாய்த்தால், நீங்கள் சாத்தானுடன் சரசம் செய்கின்றீர்கள் என்று அர்த்தமாகின்றது. ஆமென்! அது உங்களை பக்திபரவசமடையச் செய்கிறதல்லவா? நீங்கள் கலப்படமற்றவராய் இருக்க தேவன் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையில் நிலைநில்லுங்கள். அதனுடன் நிலை நில்லுங்கள். சரி.
நானும் என் வீட்டாருமோவென்றால், நாங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி, அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக மாம்சமாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை பேசுவதை கேட்டு பின்பற்றுவோம். நாங்கள் அதில் எங்களுடைய தனிப்பட்ட வியாக்கியானத்தை சேர்க்க மாட்டோம்; நாங்கள் சரசமாடவோ அல்லது எந்த தக்க அறிவிற்க்கும் செவி கொடுக்க மாட்டோம். ஒலிநாடாக்களில் அது உரைக்கப்பட்டப்படியே அந்த வார்த்தையோடு நாங்கள் தரித்திருப்போம். இது தேவன் எளிமையில் உள்ளதாகும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, மூன்றாம் முத்திரை 63-0320 என்ற செய்தியை நாங்கள் கேட்கும் போது எங்களுக்கு அது என்ன ஒரு மகிமையான நேரமாய் இருக்கப் போகிறது. இன்றைக்கான வார்த்தையின் பேரில் நாங்கள் ஒன்றிணையும்போது நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 25:3-4
பரி. யோவான் 1:1, 1:14, 14:12, 17:17
அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம்
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 4:12, 13:8
1 யோவான் 5:7
லேவியராகமம் 8:12
எரேமியா 32-ம் அதிகாரம்
யோவேல் 2:28
சகரியா 4:12
நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவேனாக. நான் ஐந்து- வகையான ஊழியத்திற்கு எதிரானவன் அல்ல. ஐந்து-வகையான ஊழியத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு ஊழியருக்குச் செவிசாய்ப்பது தவறென்று நான் நினைக்கவில்லை. தேவன் உங்களை எங்கே வைத்திருக்கிறாரோ அங்கு உங்கள் போதகருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால், நம்முடைய காலத்தில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று நான் நம்புகிறேன். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். நான் தவறாக இருக்கலாம், உங்கள் போதகர் தவறாக இருக்கலாம், ஆனால் நாம் (இந்தச் செய்தி உண்மையானது என்றும், சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் நாம் விசுவாசிப்பதாக கூறுவோமேயானால்) ஒப்புக் கொள்ள வேண்டும். ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் செய்தியை விசுவாசிக்கவில்லை. எனவே, நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் இதுவே என்று நான் நம்புகிறேன். நீங்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டியதில்லை, வேறு யாருக்கும் செவி கொடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும்.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஒலிநாடாவை கேட்பவர்களே,
கே: ஒலிநாடாக்களை இயக்கி கேட்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோமா?
ப: ஆம்.
கே: ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை விட மணவாட்டிக்கு அதிகம் தேவைப்படுகிறதா?
ப: இல்லை.
கே: ஒலிநாடாக்களை மாத்திரமே கேட்பதால் நாம் எதையாவது இழுந்து கொண்டிருக்கிறோமா?
ப: இல்லை.
கே: ஒலிநாடாக்களை மாத்திரமே கேட்பதினால் நாம் மணவாட்டியாய் இருக்க முடியுமா?
ப: மிகவும் உறுதியாக, ஆம்!
“கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யார்.” என்பதை இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள்.
இவ்வாறு, நமக்குத் தேவையான அனைத்தும் உரைக்கப்பட்டு, ஒலிநாடாக்களில் உள்ளன; அப்படியில்லையென்றால், அவருடைய ஏழாவது தூதன் பூமிக்குத் திரும்பும்போது, அவர் அப்பொழுது நமக்குச் சொல்வார்.
ஓ மணவாட்டியே, உலகெங்கிலும் கிறிஸ்துவின் மணவாட்டியோடு என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்வோமாக. பிதாவானவர் தம்முடைய மணவாட்டியை தம்முடைய சத்தத்தால் ஒன்றாகக் கூட்டி, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இடி முழக்கங்கள் என்னவாயிருந்தன என்று அவர் நம்மிடம் சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: "ஒரு பலத்தை இடி முழக்கம் தேவனுடைய சத்தமாக இருக்கிறது”. மணவாட்டிக்கு தேவனுடைய சத்தம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய ஏழாவது தூதனாகிய செய்தியாளர், வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் உண்டாகும் என்று அவர் கூறினார். அந்த ஏழு இடி முழக்கங்களினூடாக, அதுவே எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்க்கும்.
கர்த்தருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது. அவருக்கு ஒரு சிறந்த முறைமை இருந்தால், அவர் அதைப் பயன்படுத்தியிருப்பார். அவர் ஆரம்பத்தில் சிறந்த முறைமையைத் தேர்ந்தெடுத்தார், அவரால் மாற்ற முடியாது, மாற்றவும் மாட்டார்.
இவ்வாறு, தேவனுடைய சத்தம், அவருடைய ஏழாம் தூதனின் மூலமாக பேசி, அவருடைய மனவாட்டியை ஒன்று சேர்த்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு அளித்துக்கொண்டிருக்கிறது.
1933-ம் வருடம், நதியண்டை அந்த நாள் முதற்கொண்டு, வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனுடைய சத்தமாயிருந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று முழங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், மணவாட்டியை அழைத்து, ஒன்று சேர்த்து, வழிநடத்த அனுப்பப்பட்டார் என்பதையும் சபையானது சந்தேகித்திருக்கவில்லை.
நம்முடைய கர்த்தராகிய இயேசு புத்தகத்தை திறந்து, முத்திரைகளை உடைத்து, அதை நமக்கு வெளிப்படுத்தும்படி, அவருடைய ஏழாம் தூதனிடத்திற்கு பூமிக்கு அனுப்புகின்றபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் கேட்க வருமாறு நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நாள்: மார்ச் 23, 2025 ஞாயிற்றுக்கிழமை
செய்தி: இரண்டாம் முத்திரை 63-0319
நேரம்: 12:00 பிற்பகல்., ஜெபர்சன்வில் நேரம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
பரி. மத்தேயு 4:8 / 11:25-26 / 24:6
பரி. மாற்கு 16:16
பரி. யோவான் 14:12
2 தெசலோனிக்கேயர் 2:3
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 2:6 / 6:3-4 / 17வது அதிகாரம் / 19:11-16
யோவேல் 2:25
ஆமோஸ் 3:6-7
தொடர்புடைய சேவைகள்
என் அன்பான பரலோகத்தின் ராணியே,
இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்காக நிறைய சேமிப்பில் வைத்திருக்கிறேன். முதலில், நீங்கள் இடி முழக்கத்தைக் கேட்பீர்கள். இது என்னுடைய சத்தமாக இருக்கும், என் மணவாட்டியாகிய, உங்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தம். முன்னெப்போதும் இல்லாத வகையில் என்னுடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்துவேன். நீங்கள் என்னை, உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர், புத்தகத்தை எடுத்து திறந்து, முத்திரைகளை உடைத்து, அதை பூமிக்கு என்னுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளராகிய, வில்லியம் மரியன் பிரான்ஹாமினிடத்திற்கு, உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும்படி பூமிக்கு அனுப்புவதை காண்பீர்கள்!
நான் உங்களிடம் பேசும்போது உலகம் முழுவதிலும் இருந்து சத்தமிடுதலும், ஆரவாரமும், அல்லேலூயாக்களுமாய் இருக்கும். சிங்கம் கர்ஜிக்கும்; அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், வல்லமை, மகிமை, வெளிப்படுத்துதல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். என் ராணியே, நீ, நான் உன்னிடம் பேசி எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை உனக்கு அளிக்கும்போது, நீ உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்திருப்பாய்.
பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை நீங்கள் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களிடத்திற்கு அனுப்பின என்னுடைய தூதனுக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் சொன்னேன்.
அவன், “பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்பக் கொண்டுவர” வேண்டியவனாய் இருக்கிறான். மூல வேத விசுவாசமானது ஏழாம் தூதனால் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டியதாயுள்ளது.
ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், அவனுடைய சுவிசேஷ எக்காளத்தை முழங்குகையில்; அவன் எல்லா தேவனுடைய ரகசியங்களையும் முடிக்க வேண்டியவனாய் இருக்கிறான் என்று என்னுடைய வார்த்தை உங்களுக்கு சொல்கிறது. நான் ஒலிநாடாக்களில் கூறியுள்ளதிலிருந்து ஒரு காரியமும் சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ முடியாது; என்னுடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக நான் பேசியதை அப்படியே கூறுங்கள். நீங்கள் எளிமையாக இயங்கு பொத்தானை அழுத்தி நான் சரியாக என்ன கூறினேன் என்றும், நான் எப்படி கூறினேன் என்றும் கேட்கும்படியாக அதைத்தான் நான் ஒலிப்பதிவு செய்திருந்தேன். அது உங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளிக்கும்.
என் அன்பான ராணியே, என்னுடைய பார்வையில், நீ பரிபூரணமானவளாய், முற்றிலுமானவளாய், எனக்கு முன்பாக பாவமற்றவளாய் இருக்கிறாய். கவலைப்படாதீர்கள், நீங்கள் உபத்திரத்தினூடாக செல்வதில்லை; ஏனென்றால் நீங்கள் என்னுடைய இரத்தத்தை, என்னுடைய வார்த்தையை, என்னுடைய தூதனை, என்னுடைய சத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், எனவே நீங்கள் எனக்கு முன்பாக முற்றிலும் பாவமற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
உங்களுக்காக அப்பேர்ப்பட்ட மகத்தான காரியங்களை சேமிப்பில் நான் வைத்துள்ளேன். ஒவ்வொரு நாளும் உங்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய வார்த்தை வெளிப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று சொல்ல நான் வானத்தில் அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் வருகிறேன், ஆயத்தமாகுங்கள். என் வார்த்தையை, என் சத்தத்தை, உங்களுடைய ஜீவியத்தில் முதலில் வையுங்கள்.
எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள், என் வார்த்தையை விட முக்கியமானது எதுவுமில்லை. சத்துரு உங்களை வீழ்த்த முயற்சிக்கிறான் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்களை உயர்த்துவேன் என்று நான் உங்களுக்கு வாக்களித்தேன். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருக்கிறேன் நான் என்னுடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்தும்போது நீங்களும் நானும் ஒன்றாகிறோம். நீங்கள் உங்களுடைய இருதயத்தில், நீங்கள் என்னுடைய ராணி மணவாட்டியாய் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். நான் உங்களை முன்குறித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களோடு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்களிடத்தில் என்னுடைய தூதன் மூலமாக நான் பேசுவதை நீங்கள் கேட்கும் போது, நான் உங்களுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகமாக வெளிப்படுத்தும் போது, நாம் அப்பேற்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருப்போம். நீங்கள் காண்கிறதை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அல்லது காணாமல் இருக்கலாம், ஆனால் இதுவே என்னுடைய அருளப்பட்ட வழி என்பது உங்களுடைய இருதயத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கிறது.
நான் உங்களுக்காக என்னே ஒரு அடைக்கலத்தை அருளியுள்ளேன். நான் உங்களிடத்தில் பேசுவதை கேட்கும்படி, இரவிலோ அல்லது பகலிலோ, நீங்கள் எந்த நேரத்திலும் எளிமையாய் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க முடியும். நீங்கள் யாராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களிடத்தில் சொல்லி, என்னுடைய வார்த்தையை நான் வெளிப்படுத்தும் போது நான் உங்களுடைய ஆத்துமாவிற்கு ஆறுதலைக் கொண்டு வருவேன். ஒவ்வொரு செய்தியும் உங்களுக்கானதாயும், உங்களுக்காக மாத்திரமேயுள்ளதாயும் உள்ளது. நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாம் ஒன்று சேர்ந்து ஐக்கியங்கொண்டு, ஆராதிக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த மகத்தான ரகசியங்கள் வெளிப்படுவதை கேட்கும்படி உலகம் முழுவதிலும் இருந்து மணவாட்டியின் ஒரு பாகத்தினர் ஒன்று கூட்டப்படுவர். நாங்கள் “முதலாம் முத்திரை - 63-0318” என்ற செய்தியை கேட்கும் போது நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 10:1 / 11:1-14 / 24:6 / 28:19
பரி .யோவான் 12:23-28
அப்போஸ்தலர் 2:38
2 தெசலோனிக்கேயர் 2:3-12
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2 / 10:1-7 / 12:7-9 / 13:16 / 19:11-16
மல்கியா 3-வது மற்றும் 4வது அதிகாரங்கள்
தானியேல் 8:23-25 / 11:21 / 9:25-27
தொடர்புடைய சேவைகள்
அன்பான திரும்பளிக்கப்பட்டவர்களே,
நாம் யாராய் இருக்கிறோம் என்றும், எங்கிருந்து வருகிறோம் என்றும், எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றும், நாம் என்ன சுதந்தரிக்கப் போகிறோம் என்றும், அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும் தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் சொல்வதை கேட்பதை குறித்து நான் ஒருபோதும் களைப்படைவதில்லை.
ஒரு பரிசுத்த ஆசாரியக் கூட்டமாயும், ஒரு ராஜரீக சந்ததியாயுமாயிருந்து தேவனுக்கு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகின்றனர் என்றும், அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவர்கள் செலுத்துகின்றனர்” என்று கூறினார். என்னே—என்னே ஜனங்கள்! அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்.
தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்பதன் மூலம் மட்டுமே நமக்கு ஆறுதலும் சமாதானமும் கிடைக்கிறது, பின்னர் நம் உதடுகளின் கனிகளால் ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தி, அவருடைய நாமத்தைத் துதிப்பதன் மூலம் பிதாவிடம் திரும்ப பேசுகிறோம்.
இந்த முழு உலகமும் தவித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையும் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமும் தவித்துக் கொண்டு, கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் நமக்காக எதையும் வைத்திருக்கவில்லை. நாம் நம்முடைய கல்யாண விருந்துக்கும், அவரோடும், காலத்தின் திரைக்கப்பால், நமக்காக காத்துக் கொண்டு ஏற்கனவே அங்கு சென்றுள்ளவர்களோடு பரலோக வீட்டில் இருக்கும்படிக்கு புறப்பட்டு செல்ல ஆயத்தமாய் இருக்கிறோம்.
நாமே எழுந்து நம்மையே குலுக்கிக் கொள்வோமாக! நம்முடைய மனசாட்சியே குத்தட்டும், இப்போது என்ன நடக்கிறது என்றும், ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்போழுதிலே என்ன சம்பவிக்கப் போகிறது என்பதற்கு நம்மை விழித்தெழச் செய்வோமாக.
உலக வரலாற்றில் கிறிஸ்துவின் மணவாட்டி உலகெங்கிலும் இருந்து ஒன்றுபடுவது ஒருபோதும் சாத்தியமில்லை, ஆனால் ஒரே நேரத்தில், தேவனுடைய சத்தம் பேசுவதையும் அவருடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்க முடியும்.
விசுவாசிகளே, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், எந்த சத்தம், எந்த ஊழியக்காரர், எந்த மனிதன், கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து ஒன்றாகக் கொண்டுவர முடியும்? நீங்கள் கிறிஸ்துவின் மணவாட்டி என்றால், ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு சத்தமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆம், பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரிலும் இருக்கிறார், சபையின் ஒவ்வொரு ஊழியத்திலும் இருக்கிறார், ஆனால் தேவன் தாமே தம் வார்த்தையின் மூலம் உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று நமக்குச் சொன்னார். அவருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசியிடம் வருகிறது என்பதை மணவாட்டி அறிந்திருக்கிறாள். அவருடைய தீர்க்கதரிசி மாத்திரமே அவருடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் உரைத்ததிலிருந்து எதுவும் சேர்க்கப்படவோ அல்லது அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவோ முடியாது. ஒலிநாடாக்களில் உள்ள அந்த வார்த்தையின் மூலமாகவே நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, வேறு வார்த்தையினாலோ அல்லது அந்த வார்த்தையின் வியாக்கியானத்தினாலோ அல்ல.
மணவாட்டியை ஒன்றுபடுத்துவது வேறு எந்தக் சத்தத்திற்கும் சாத்தியமில்லை. ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் மாத்திரமே அவருடைய மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும். மணவாட்டி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வார்த்தை இது மாத்திரமேயாகும். இது மாத்திரமே அவருடைய மணவாட்டிக்கு அவருடைய சத்தமாயிருக்கும்படி தேவன் தாமே ரூபகாரப்படுத்தின ஒரே சத்தமாய் இருக்கிறது. அவருடைய மணவாட்டி அவரோடு ஒருமனப்படும்படி ஏகமனதாய் இருக்க வேண்டும்.
ஊழியக்காரர்கள் ஊழியம் செய்யலாம், போதகர்கள் போதிக்கலாம், மேய்ப்பர்கள் மேய்ப்பரின் பணியைச் செய்யலாம், ஆனால் ஜனங்களுக்கு முன்பாக அவர்கள் வைக்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாக இருக்க வேண்டும். இதுவே மணவாட்டினுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது.
உங்களுக்கு அது பற்றிய ஒரு வெளிப்பாடு இருந்தால், இதுதான் நடக்கப் போகிறது.
ஆதாம் பூமியின் மேலிருந்த தன் சுயாதீனத்தை இழந்து போனான். அது, அவன் யாருக்கு அதை விற்றுப்போட்டானோ, அவன் ஆதிக்கத்தில் சென்றது, சாத்தான். அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைப் பிசாசின் விவேகத்திற்காக விற்றுப்போட்டான். அவன் ஒவ்வொரு காரியத்தையும் சாத்தானுடைய கரங்களுக்கு பறி கொடுத்து விட்டான். அவன் அதை தன் கரத்திலிருந்து சாத்தானுக்கு மாற்றிவிட்டான்.
தேவன் அண்ட சராசரங்களின் தேவன், அவர் எங்குமுள்ளவர். அவர் புத்திரன் இப்பூமியை தன் சொந்த கட்டுக்குள் வைத்திருந்தான். அவன் பேசினான், அவன் பெயரிட்டான். அவன் இயற்கையை நிறுத்தினான். எது வேண்டுமானாலும் அவனால் செய்யமுடிந்தது. அவன் பூமியின் மேல் பரிபூரண அதிகாரம் கொண்டிருந்தான்.
ஆதாம் அனைத்தையும் இழுந்து விட்டான், ஆனால் தேவனுக்கு மகிமை, அவன் இழந்த மற்றும் பறிகொடுத்த அனைத்தையும் நம்முடைய இனத்தான் மீட்பர் மீட்டெடுத்துள்ளார், சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர அது வேறுயாருமல்ல, நம்மில் ஒருவராக இம்மானுவேல் ஆனார். இப்போது, அது நம்முடையது.
நாம் அவருடைய குமாரர்களும் குமாரத்திகளும், அவருடன் அரசாளும் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருக்கிறோம். அவரோடும், நாம் நேசிக்கிற அனைவரோடும் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. இனி சுகவீனமே இல்லை, இனி துக்கமும் இல்லை, மரணமும் இல்லை, யாவும் ஒன்று சேர்ந்து நித்தியமாயுள்ளது.
அதை நினைக்கும் போது, பிசாசு எப்படி நம்மை வீழ்த்த அனுமதிக்க முடியும்? இது நம்முடையது, அங்குதான் நாம் மிக விரைவில் செல்கிறோம். அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய காரியத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த பூமியின் மேலுள்ள இந்த சில நாட்களின் சோதனைகளும் பரிசோதனைகளும் நமக்கு சில நாட்கள் முன்னால் இருக்கும் நம்முடைய மாபெரும் வெற்றியால் விரைவாக மூழ்கடிக்கப்படுகின்றன.
நம்முடைய விசுவாசம் ஒருபோதும் மகத்தானதாக இருந்து வந்ததில்லை. நம்முடைய சந்தோஷம் ஒருபோதும் உயர்ந்ததாக இருந்து வந்ததில்லை. நாம் யாராக இருக்கிறோம் என்றும், நாம் அங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம். அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அறிவோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒலிநாடக்களோடு தரித்திருந்து, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்; எல்லாவற்றையும் புரிந்து கொள்வது அல்ல, ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்…நாம் அவ்வாறு செய்கிறோம்!
விசுவாசம் கேட்பதால், வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. தீர்க்கதரிசியிடம் வார்த்தை வருகிறது. தேவன் அதை உரைத்தார். தேவன் அதை பதிவு செய்தார். தேவன் அதை வெளிப்படுத்தினார். நாம் அதைக் கேட்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை கேட்பதன் மூலமே மாத்திரமே நாம் இந்த வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கிறிஸ்து முடிவில் என்ன செய்வாரென்பது இவ்வாரம் ஏழு முத்திரைகள் உடைக்கப்படும்போது வெளிப்படும். தேவன் நம்மை அறிந்துகொள்ளும்படிச் செய்வார். பாருங்கள்? சரி. அது வெளிப்படுத்தப்படும். அது வெளிப்படுத்தப்படும்பொழுது, முத்திரைகள் உடைக்கப்பட்டு, அது நமக்கு வெளிப்படுத்தப்படும்போது, தேவனுடைய மகத்தான மீட்பின் திட்டம் என்னவென்றும், அது எங்ஙனம் நிகழுமென்றும், அது எப்பொழுது சம்பவிக்குமென்றும் நாம் அப்பொழுது அறிந்துக் கொள்ளலாம். அவையெல்லாம் இந்த இரகசிய புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ளது. அது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ளது, ஆகவே ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே அவைகளை உடைக்க முடியும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பகுதியினர் ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பார்கள். நாம் நம்முடைய ஜெபங்களினாலும் அவரை ஆராதிப்பதினாலும் பரலோகத்தை முற்றுகையிட்டிருப்போம். ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு 63-0317 என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது, நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.
இந்த வார இறுதியில் ஜெபர்சன்வில்லில் நேர மாற்றம் பற்றி மறந்துவிடாதீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்