காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 18 பிப்ரவரி, 2023

என்னுடைய சிறு மந்தையே,

உங்களுக்கும், தொலைபேசி அமைப்பில் உள்ள உங்களுக்கும் வாழ்த்துக்கள், இது மிக, மிக அருமையாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய வீடுகளில் சரியாக அமைத்து, உங்களுடைய இடங்களில், உங்களுடைய சபைகளில் கூடி, ஆராதனையை கேட்க முடிகிறதற்காக கர்த்தருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய சத்தம் எங்கெல்லாம் வந்து கொண்டிருக்கிறதோ, அந்தச் சிறு குழு ஆசிர்வதிக்கப்படும்.

இன்று, உங்களை உற்சாகப்படுத்த என்னுடைய இருதயத்திலிருந்து ஒரு சிறிய அன்பின் கடிதத்தை எழுத நான் விரும்புகிறேன். இந்த ஒலிநாடாக்களை கேட்கிற நீங்கள்; உலகத் தோற்றத்திற்கு முன்னே அவருடைய மணவாட்டியாக இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்கு மாத்திரமே என்றும், நீங்களே என்னுடைய சபை என்றும், நான் உங்களுக்கு எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். தேவன் மற்ற ஊழியக்காரர்கள் மேய்ப்பராயிருப்பதற்கு அளித்துள்ளதற்கு நான் பொறுப்பல்ல. நான் உங்களுக்கு எந்த வகையான ஆகாரத்தை போஷிக்கிறேன் என்பதற்காக மாத்திரமே நான் பொறுப்பாளியாய் இருக்கிறேன். இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்கானதாய் இருக்கின்றன, தேவன் மேய்ப்பராயிருக்க எனக்கு கொடுத்திருக்கிற, என்னுடைய கூடாரத்துக்கு மாத்திரமே. இது மறைவான மன்னவாக இருக்கிறது, மற்றவர் இதனை எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போது, சில ஜனங்கள் கலப்பின ஆகாரத்தையும் மற்றும் அங்கே வெளியில் உள்ள பொருளையும் விரும்பினால், அவர்கள் தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் அவர்கள் செய்யும்படி என்ன சொல்லுகிறாரோ, அவர்கள் விரும்புகிறதென்னவோ அதை போஷிக்கட்டும். நானும் அதேக் காரியத்தையே செய்வேன். ஆனால் இந்த செய்திகள் உங்களுக்காக மாத்திரமே உள்ளன.

தேவனிடமிருந்து என்னுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற நீங்கள், வார்த்தையுடன் சரியாக தரித்திருக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் ஆடுகளுக்கு ஆட்டின் ஆகாரம் தேவைப்படுகிறது. "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கின்றன." அதன் மூலமாகவே, புறப்பட்டு வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் பிழைக்கிறோம். அவ்வப்போது ஒரு வார்த்தையினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலுமே. அதன் மூலமாகத்தான் பரிசுத்தவான்களாகிய நீங்கள் ஜீவிக்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் அவர்கள் பற்றிக் கொண்டிருக்க ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். ஏதோ காரியம் ஒரு கட்டுக்கம்பமாக, வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு முடிவானதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு முடிவானதை அல்லது ஒரு முற்றிலுமானதை உடையவர்களாக இருக்க வேண்டும். எனக்கும், நான் கிறிஸ்துவண்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறவர்களுக்கும், கிறிஸ்துவினால், இந்த வேதாகமமே நம்முடைய முடிவானதாகும்.

இப்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை நமக்கு அனுப்பினார் என்பதை நாம் உணருகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியின் உதடுகளின் மூலமாகவே, தம்முடைய வார்த்தையை ஜனங்களிடம் கொண்டு செல்வதற்காக, அவர் கொண்டுள்ள வழி அதுவேயாகும். இப்போது இந்தக் கடைசி நாட்களில், அவர் மீண்டும் பரிபூரணமாக, அவருடைய மாம்சத்திலும், ஆவியிலும் தன்னை வெளிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். அது தேவன் தாமே எழுத்து வடிவிலும், தீர்க்கதரிசி வடிவிலும், மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டதாயுள்ளது.

அவர் என்னக் கூறினாலும் அதை எந்த நேரத்திலும் என்னுடைய எழுதுகோலை கொண்டு எழுத ஆயத்தமாயிருக்க ஆக்கியோனின் பிரசன்னத்தில் நான் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும். அவருடைய சிந்தனைகளின் மேல் என் மனதை வைத்திருக்கிறேன்; மனிதன் என்ன நினைக்கிறான், காலம் என்ன நினைக்கிறது, சபை என்ன நினைக்கிறது, இராஜ்யம் என்ன நினைக்கிறது என்பதில் அல்ல. தேவனுடைய சிந்தனைகளின் பேரில் மாத்திரமே! நான் தேவனுடைய சிந்தனைகளை மாத்திரமே வார்த்தையாக வெளிப்படுத்துகிறேன்.

தேவன் தம்முடைய சிந்தனைகளை எனக்கு வெளிப்படுத்துகிறபோது, நான் அதை வார்த்தையில் உங்களுக்கு ஒலிநாடாவில் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாக வெளிப்படுத்துகிறேன். அது, "நான் உரைக்கிறதாவது" என்பது அல்ல. அது, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதே! உங்களுக்கு வியாக்கியானிக்கும்படி ஆக்கியோன் என்னை அனுமதிக்கும் காரணத்தால் மாத்திரமே என்னால் அதை வியாக்கியானிக்க முடியும்; ஏனென்றால் அது பிழையற்ற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது.

ஆசாரியர்கள், முதலியவர்களைப் போன்று, என்னை பாவனைப்படுத்த முயற்சிக்கிற அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெறும் குழப்பம், அவ்வளவுதான். அவர்களால் அதை செய்ய முடியவில்லை. தேவன் என்னை, அவருடைய தீர்க்கதரிசியாக, அவருடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பினார்; மற்றொரு மனிதனை அல்ல, அல்லது ஒரு மனிதக் குழுவையல்ல.

நான் கூறுகிற வார்த்தைகளும், நான் செயல்படும் விதமும், சிலரைக் குருடாக்கும், ஆனால் வேறு சிலரின் கண்களைத் திறக்கும். நான் அணியும் வஸ்திரம், என் சுபாவம், என் லட்சியம், நான் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே அனைத்தையும் அவர் எனக்கு அணிவித்தார். அவர் என்னை உங்களுக்காகவே பரிபூரணமாக தேர்ந்தெடுத்தார். மற்றவர்கள் நின்று பார்த்து, “சரி, என்னால் முடியாது. இருக்கிறது...என்னால்-என்னால் பார்க்க முடியவில்லை" என்று கூறுவார்கள். அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதை யாரிடம் வெளிப்படுத்துவார் என்பதை அவர் வெளிப்படுத்துவார். அவர் மிகவும் புத்திசாலியான வேத பண்டிதர்களுக்கு, வேதத்தில் தன்னை மறைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை மறைத்து, வேதத்தில் அங்கேயே இருக்க முடியும், மேலும் அவர்கள் நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணாதிருக்க முடியும்; வாழ்நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணாதிருக்க முடியும். அவர் தன்னை மறைத்துக்கொண்டு, அங்கேயே இருக்க முடியும்.

இப்போது முக்கியமானது என்னவென்றால், தங்கள் இருதயங்களில் செய்தியைப் பெறுபவர்கள், முதிர்ச்சியடைவதற்கு, குமாரனின் பிரசன்னத்தில் இருக்க வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்தி, அதன்பின்னர் குமாரன் உங்களிடமிருந்து எல்லா ஈரத்தன்மையையும் உலரச் செய்து, உங்களை முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாக மாற்ற அனுமதிக்கவும்.

அவர் முதன்முறையாக வந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் இரண்டாவது முறை வந்தபோது; ஒரு இரட்டிப்பான பங்குடன், அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் யோவான் ஸ்நானகனின் ரூபத்தில் வந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் இந்த நாளில் வந்து, ஜீவித்து, மீண்டும் ஒரு மனிதனில் தன்னை வெளிப்படுத்துவதாக வாக்களித்தார்; மனுஷ குமாரன் மானிட சரீரத்தில் ஜீவித்தல்.

நாம் இப்போது கண்ணின் காலத்தில், மல்கியா 4-ஐக் குறித்த, தீர்க்கதரிசனத்தில் இருக்கிறோம். அவர் தாமே அதற்குள் அடியெடுத்து வைப்பதைத் தவிர, அது வருவதற்கான வேறெந்த காரியமும் விடப்பட்டிருக்கவில்லை, ஏனென்றால் அதுவே கடைசிக் காரியமாக இருக்கிறது.

உங்களுக்கு மேய்ப்பனாக இருக்கும்படி தேவன் எனக்கு அளித்திருக்கிற, என்னுடைய சிறு ஆட்டுக்குட்டிகளே செவி கொடுங்கள். காலம் தாமதமாகிவிட்டது. அவர் தம்முடைய மணவாட்டியான, உங்களுக்காகவே சீக்கிரம் வருகிறார். அந்த ஒலிநாடாக்களோடு தரித்திருங்கள், அதற்கு வியாக்கியானமே தேவையில்லை.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய மணவாட்டியை ஒன்றுசேர்க்கும் ஒரே காரியமான என்னோடு இணைந்துகொள்ள வரும்படி கழுகுக் குஞ்சுகளாகிய உங்களை நான் அழைக்கிறேன். கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகின்றார் 65-0822M என்ற செய்தியை தேவன் என் மூலமாக பேசி வெளிப்படுத்தும்போது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கேட்பீர்கள்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஒலிநாடா ஊழியத்தோடு தரித்திருங்கள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.

சகோதரன் பிரான்ஹாம்

 

 


 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

யாத்திராகமம் 4:10-12
ஏசாயா 53:1-5
எரேமியா 1:4-9
மல்கியா 4:5
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 1:14 / 7:1-3 / 14:12 / 15:24 / 16:13
கலாத்தியர் 1:8
2 தீமோத்தேயு 3:16-17
எபிரெயர் 1:1-3 / 4:12 / 13:8
2 பேதுரு 1:20-21
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 / 10:1-7 / 22:18-19

 


சனி, 11 பிப்ரவரி, 2023

அன்புள்ள காத்திருக்கும் மணவாட்டியே,

இவ்வுலகை விட்டு நான் கடந்து சென்ற பிறகு, இந்த ஒலிநாடாக்களும் புத்தகங்களும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். வாலிபப் பிள்ளைகளாகிய உங்களில் அநேகர், இதுவே முற்றிலுமான சத்தியமென்பதை, வரப்போகும் நாட்களில் அறிந்து கொள்வீர்கள், ஏனெனில் நான் இதை கர்த்தருடைய நாமத்தினால் உரைக்கிறேன்.

இதை அறியாமலிருக்கிறாய் 65-0815 என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, கழுகுகளாகிய எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 4 பிப்ரவரி, 2023

அன்புள்ள இக்காலத்து ஜனங்களே,

பிதாவே, நாங்கள் உம்மை மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் என்ன உணர்கிறோம் என்பதை எப்படி எங்களால் வெளிப்படுத்த துவங்க முடியும்? நீங்கள் எங்களைத் தெரிந்துகொண்டீர், எங்களை முன்குறித்தீர், எங்களுக்காக உம்முடைய ஜீவனை கொடுக்க ஒரு ஜீவனுள்ள மனிதனானீர்.

நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, நீர் உம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக எங்களுக்காக உம்முடைய சிந்தைகளை எழுதினீர். அதன்பின்னர், நீர் வாக்களித்தபடி, உம்முடைய வார்த்தையை வியாக்கியானித்து வெளிப்படுத்த, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்களின் மூலம் நீர் மீண்டும் ஒருமுறை, உம்மையே வெளிப்படுத்த மானிட சரீரத்தில் வந்தீர்.

உம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலினால், இக்காலத்தின் மனிதனாய் இருக்க நீர் வில்லியம் மரியன் பிரான்ஹாமை தெரிந்துகொண்டீர். எங்களுடைய கவனத்தை ஈர்க்க நீர் அவரைத் தெரிந்துகொண்டீர். நீர் அவருடைய கரங்களை அசைத்தீர். தரிசனங்களில் நீர் அவருடைய கண்களை அசைத்தீர். நீர் அவருக்குக் காண்பித்ததைத் தவிர அவரால் வேறு எதையுமே சொல்ல முடியவில்லை.

நீர் அவருடைய வாயில் அருளியதைத் தவிர வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை. அவருடைய நாவு, விரல்கள் மற்றும் அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் நீர் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தீர். அவர் உம்மோடு முழுக் கட்டுப்பாட்டில் இருந்தார்.

அதன்பின்னர், மீண்டும் ஒரு முறை உம்முடைய தெரிந்துகொள்ளுதலினால், இக்காலத்து ஜனங்களாக இருக்கும்படி எங்களை நீர் தெரிந்துகொண்டீர். இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தை, மீண்டும் தோற்றுவிக்க, உம்முடைய வார்த்தையின் ஏவுதலினால் உம்முடைய சிறுபான்மையான கூட்டம் கூடியது. நாங்கள் உம்முடைய வார்த்தையாய் வார்த்தையோடு இணைந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் வேறு எதையும் செய்ய முடியாது.

பிதாவே, நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம்; எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. எங்களுடைய சிந்தனையோ, எங்களுடைய எண்ணங்களோ, அல்லது வேறு எந்த மனிதன் கூறுகிறதோ எங்களுக்குத் தேவையில்லை, உம்முடைய சித்தம் மாத்திரமே தேவை.

நாங்கள் உம்முடைய மணவாட்டியாய் இருக்க வேண்டுமென்று நீர் கூறினதை புரிந்துகொள்ளும்படி உம்முடைய வார்த்தைக்கு நாங்கள் சென்றுள்ளோம். உம்முடைய வார்த்தையால் இந்த உலகத்தை ஒருநாள் நீர் நியாயந்தீர்க்கப்போகிறீர் என்று கூறினீர். உம்முடைய வார்த்தை, உம்மால் முன்குறிக்கப்பட்டு மற்றும் முன்நியமிக்கப்பட்டிருந்த உம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரமே வருகிறது என்று நீர் சொன்னீர்.

அது ஒரு வேதபண்டிதனிடத்திற்கோ அல்லது ஒரு கூட்ட மனிதரிடத்திற்கோ வராமல், உம்முடைய தீர்க்கதரிசியினிடத்திற்கே வருகிறது என்று நீர் எங்களிடத்தில் சொன்னீர். அவர் மாத்திரமே உம்முடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருப்பார். இது அவருடைய எண்ணங்களோ, அவருடைய யோசனைகளோ, அவருடைய வியாக்கியானமோ அல்ல, ஆனால் நீர் அவர் மூலமாக பேசி, உம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறீர்.

ஒவ்வொரு காலத்திலும், ஜனங்கள் உம்முடைய வார்த்தைக்கு மனிதர் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க அனுமதிக்க, அதுவே அவர்கள் குருடாயிருக்க காரணமாகிறது. பரிசேயர் மற்றும் சதுசேயரிடம் அது செய்த அதே காரியத்தையே செய்கிறது. அந்தக் காரணத்தினால் ஜனங்கள் அதை இன்றைக்கு பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். உம்முடைய தீர்க்கதரிசி அவர்களுக்கு செய்யும்படி சொன்னதைப் போன்ற வார்த்தைக்கு செவி கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களோ அதைக் குறித்து வேறு யாரோ சொல்லுகிறதற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாவது நான் என்னுடைய வார்த்தையை அனுப்புகிறேன், அப்பொழுது ஜனங்கள் என்னுடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அப்பொழுது நான் அவர்களுக்கு ஊழியத்தை அனுப்புகிறேன் என்று, நீர் கூறினீர். ஒவ்வொரு காலத்திலும் ஊழியம் வழிதவறி செல்கிறது என்றும்; அவர்கள் எல்லோரும் அல்ல, ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், தாங்களாகவே ஜனங்களை வழி நடத்துகிறார்கள் என்றும் கூட நீர் கூறினீர். நாங்கள் உம்முடைய மூலத் திட்டத்தில் இருக்க விரும்புகிறோம்.

ஊழியக்காரர்கள் தங்களுக்குள்ளே உடன்பட முடியாதபடி, இது மிகவும் குழப்பமாய் இருக்கிறது. சகோ. X- என்பவரோடு சகோ. Y உடன்பட முடியவில்லை; சகோ. Y என்பவர் சகோ. Z என்பவரோடு உடன்படுகிறதில்லை. அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்பட முடியவில்லை. நாம் ஒலிநாடாக்களை சபையில் இயக்கக் கூடாது என்ற, ஒரு காரியத்தில் மாத்திரமே அவர்கள் உடன்படுவதாக தெரிகிறது.

அது மீண்டும் ஒருமுறை மிகுந்த குழப்பமாயுள்ள, பாபிலோனாயுள்ளது. ஒரே ஒரு மாதிரி வடிவம் மாத்திரமே உள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், அந்த மாதிரி வடிவத்திற்கு ஏற்றவாறு நம்மை நாமே வெட்டிக்கொள்ள வேண்டுமேயன்றி, நமக்குப் பொருந்துமாறு அந்த மாதிரி வடிவத்தை வெட்ட முயற்சிக்கக் கூடாது.

எத்தனையோ ஊழியங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களோடும், தங்களுடைய சொந்த வியாக்கியானங்கள் மற்றும் உபதேசங்களோடு எழும்பியிருக்கின்றன. அவை அனைத்துமே பயனற்று போய்விட்டன. நியமிக்கப்பட்ட பெரிய ஊழியர்கள் தாங்கள் பிரசங்கித்துக்கொண்டும் மற்றும் இக்காலத்து செய்தியை மேற்கோள் காட்டிக்கொண்டுமிருப்பதால், அவர்களுடைய ஊழியமே இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாய் இருக்கிறதேயன்றி, ஒலிநாடாக்கள் அல்ல என்று கூறுகிறவர்களாக எழும்பியுள்ளனர்.

அவர்களுடைய சபைகளுக்கு சென்று, பல வருடங்களாக அவர்களுக்கு செவிகொடுக்கிற விசுவாசமுள்ள ஜனங்களை அவர்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வருகை தருகின்ற பல ஊழியக்காரர்களையும், கூட்டங்களையும், எழுப்புதல்களையும் பிரசங்கிப்பதையும், அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதுவே உங்களுடைய அருளப்பட்ட வழியேயன்றி, ஒலிநாடாக்கள் அல்ல என்று கூறுகிறவர்களை உடையவர்களாக இருக்கின்றனர். அதன்பின்னர் ஒருநாள் அவர்கள், செய்தி உண்மையானது அல்ல என்று கூறுகிறார்கள்.

அவர் என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை ஒலிநாடாக்களை கொண்டு அவர்கள் சரிபார்த்துக் கொண்டிருக்கவில்லையா? அவர் கூறினதே வார்த்தையாக இருக்க வேண்டும் என்றும், இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தார்களா? மிக முக்கியமான சத்தமாக தங்களை வைத்துக்கொண்டிருந்ததற்கு பதிலாக, ஜனங்களுக்கான உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தமான, ஒலிநாடாக்களை அவர் இயக்கியிருந்திருப்பாரானால், அப்பொழுது அவர்கள் இந்தக் கடைசி கால உபதேசத்தில் கேட்டுக்கொண்டிருந்தது ஒரு கள்ள அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த ஒன்று என்பதை தெரிந்துகொண்டிருந்திருப்பார்கள்.

உங்களுக்கு ஒரு போதகர் தேவையில்லை என்பது அதன் அர்த்தமல்ல. அவர்கள் அனைவரும் கள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட போதகர்கள் என்றும் அர்த்தமல்ல. சகோதரன் பிரான்ஹாம் கூறினதை சரியாகப் பிரசங்கிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் அர்த்தமல்ல. ஒலிநாடாக்களில் உள்ள செய்தியை நீங்கள் கேட்க வேண்டும் என்பதே மிக முக்கியமான காரியம் என்பதைத்தான் அது பொருட்படுத்துகிறது; அது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.

இது வழிகாட்டுதலாயுள்ளது. இது முற்றிலுமானதாய் உள்ளது. இது முடிவான வார்த்தையாய் உள்ளது. இது மாத்திரமே பரிபூரண வார்த்தையாக உள்ளது. ஒரு மேய்ப்பர், உங்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டி, தன்னுடைய ஜனங்களோடு அந்த சுத்தமான வார்த்தைக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தாலொழிய, ஏதோ தவறு நேரிடும்.

ஊழியத்தில் ஏன் அவர்களுடைய சபைகளில் உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை இயக்கக் கூடாது? இது வார்த்தை என்று தாங்கள் விசுவாசிப்பதாக அவர்கள் கூறும்போது அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? அவர்கள் எல்லா வகையான சாக்குப்போக்குகளையும் கூறி மற்றும் இன்றைக்கான உங்களுடைய அருளப்பட்ட வழி அவர்களுடைய ஊழியமேயன்றி, ஒலிநாடாவில் உள்ள உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் அல்ல என்று ஏன் கூறுகிறார்கள்?

உங்களுடைய சத்தத்தைக் கேட்க "இயங்கு பொத்தானை அழுத்துங்கள்" என்று கூறுவதால், நாம் ஒரு மனிதனை ஆராதித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், நீங்கள் அந்த மனிதனின் மூலம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்றும் சொல்லி ஜனங்களை ஏன் பயமுறுத்துகிறார்கள்?

நாங்கள் பிதாவே உம்மை மாத்திரமே ஆராதிக்கிறோம். நாங்கள் அதை உம்முடைய வார்த்தையைக் கொண்டு மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறோம். இன்றைக்கான உம்முடைய அருளப்பட்ட வழியாய் இது மாத்திரமே உள்ளது: என்று நாங்கள் ஒலிநாடாக்களில் கேட்கிற ஒவ்வொரு செய்தியோடும் உம்முடைய தீர்க்கதரிசி மூலமாக நீர் எங்களுக்குச் சொல்லுகிறீர்.

உம்முடைய வார்த்தைக்கு நேரடியாக செல்வதைத் தவிர உம்முடைய மணவாட்டி வேறெங்கு செல்ல முடியும். நாங்கள் உம்முடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டியாக இருக்கிறோம். நாங்கள் உம்முடைய அக்னி ஸ்தம்பத்தோடு தரித்திருக்க வேண்டும். அதுவே நாங்கள் திருப்தியடையக்கூடிய மற்றும் நாங்கள் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூறக்கூடிய ஒரே ஸ்தலமாயுமுள்ளது.

பிதாவே, நீர் உம்முடைய சபைக்கு புறம்பேயிருந்து உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம், அது எங்களுடைய இருதயத்தை உடைக்கிறது. தாழ்ப்பாளோ உள்ளே இருக்கிறது, நீர் உள்ளே வருவதற்காக நாங்கள் கதவைத் திறந்துள்ளோம். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். நாங்கள் வேறு எதையும் எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் உம்முடைய வார்த்தையால் கர்ப்பந்தரிக்கப்பட்டுள்ளோம்.

உம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டிற்காக பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட உம்முடைய வார்த்தைக்காகவே நாங்கள் இருக்கிறோம். நாங்கள் ஒருநாள் நியாயத்தீர்ப்பில் உமக்கு முன்பாக நிற்போம். "பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிறோம்" என்பதை நாங்கள் எங்களுடைய முழு இருதயத்தோடு கூற விரும்புகிறோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தத்தைக் கேட்க உங்களுடைய மேய்ப்பரை, உங்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டியை ஊக்கப்படுத்துங்கள். ஒலிநாடாக்களில் கூறுகிற தேவனுடைய வார்த்தையினாலே நீங்கள் ஒருநாளில் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். வேறு ஏதாவது ஒரு வாய்ப்பை நீங்கள் எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்?

தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள் 65-0801e என்ற செய்தியை தேவன் தெரிந்துகொண்ட மனித உதடுகளின் மூலமாக அவர் பேசுவதை கேட்கப்போகின்றபடியால்; இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகின்றீர்கள். அவர் தன்னுடைய வரத்திற்கு, தன்னுடைய பண்பினை அளித்தவர். அவரே இவருக்கு அவருடைய சுபாவத்தை, அவருடைய பாணியை, அது என்னவாக இருந்தாலும், அவர் எப்படி தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், அவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையும் அளித்தார். இக்காலத்து ஜனங்களை கவரும்படி இக்காலத்து மனிதனாய் அவர் வில்லியம் மரியன் பிரான்ஹாமை உருவாக்கினார், மற்றும் நாமே இக்காலத்து ஜனங்களாய் இருக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

வேதவாக்கியங்கள்:

ஆதியாகமம்: 22:17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41:9
சகரியா 11:12 / 13:7
ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12
மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 15:26
பரி. லூக்கா: 17:30 / 24:12-35
ரோமர்: 8:5-13
எபிரெயர்: 1:1 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம்: 1:1-3 / அதிகாரம் 10

 


சனி, 28 ஜனவரி, 2023

அன்புள்ள கிறிஸ்துவினுடைய எளிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே,

நாம் வேறு ஒன்றாக இருக்க முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நமக்கு வேறு எதுவும் தெரியாது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம். சுத்தமான மாமிசம் எங்கு உள்ளதோ, அந்தக் காலத்தின் வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்த, கழுகுகள் ஒன்று கூடும். வார்த்தை நமக்குள் உயிர்ப்பிக்கிறது.

நாம் எல்லோரையும் போல் இல்லை! நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ஜனமாய், கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்களாய், இந்த நாளுக்காக அவருடைய வாக்குத்தத்தத்தின் பலனைக் கொடுப்பதற்காக, வார்த்தைக்கும் தேவனுடைய ஆவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்பதனால் நாம் தொடர்ந்து முழு வளர்ச்சியுடன் முதிர்ச்சியடைந்து வருகிறோம்.

இந்த ஒலிநாடாக்களை மீண்டும் ஆலோசித்துப் பார்க்குமாறு தீர்க்கதரிசி நமக்குக் கூறினார். நீங்கள் ஒரு ஒலிநாடா பதிவு செய்யும் கருவியை வைத்திருந்தால், ஒரு ஜனக் குழுவை ஒன்று சேர்த்து, அதை இயக்கி, மிக கவனமாக கூர்ந்து கேளுங்கள். அவர் நமக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற, அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை; அவரே தம்முடைய சொந்த வியாக்கியானத்தை செய்கிறார். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்."

இதுதான் வேதாகமமாக உள்ளது, இதிலிருந்து ஒரு வார்த்தை எடுக்கப்படவோ அல்லது இதனோடு கூட்டப்படவோ கூடாது. அப்படியே அந்த சத்தத்தோடு தரித்திருங்கள். "அவர்கள் ஒரு அந்நியனுக்குப் பின்செல்லமாட்டார்கள்."

இன்றைக்கு தேவன் அருளியுள்ள வழியை எப்படி யாரும் காணாமல் இருக்க முடியும்? ஆனால் தேவனுக்கு மகிமை, நாம் அதைக் காண முடியும், ஏனென்றால் நாம் அதைக் காணும்படி தெரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். நாம் வஞ்சிக்கப்படமாட்டோம், நாம் வஞ்சிக்கப்பட முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, அது அப்படியே ஒரு நிமிடம் பதியட்டும், நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறோம்!! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று தேவன் தாமே, மானிட உதடுகள் மூலமாக பேசி, நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் பயப்படுவதற்கு முற்றிலுமாக ஒன்றும் இல்லை. நமக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் நம்முடையதாய் இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் கர்த்தர் நம்மிடத்திற்கு வருகை தர வேண்டும் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். எல்லோரையும் உட்கார வைக்க நம்மிடத்தில் இங்கு இடமில்லை, எல்லோரும் ஜெபர்சன்வில்லுக்கு வர முடியாது, எனவே நாம் அவர்களுக்கு இணையதள ஊடகம் மூலம் வார்த்தையை அனுப்ப வேண்டும்.

நாம் நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், நம்முடைய கார்களில், உலகம் முழுவதிலுமிருந்து நம்முடைய சிறிய ஒலிபெருக்கிகளை சுற்றிக் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

அவர்கள் நம்முடன் ஆப்பிரிக்காவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் மெக்சிகோவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா என்று, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

நாம் இங்கே வீட்டில் கூட்டப்படுகிற சபையில், கூடாரத்தில் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் ஒரே குழுவினராக, விசுவாசிகளாக ஒன்று சேர்ந்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய நாமத்திற்காக இப்பொல்லாத காலத்திலிருந்து தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாக இருக்கிறோம். நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று சாத்தானுக்கு சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த மூல மணவாட்டி மரத்தின் பாகமாக இருக்கிறோம். அந்த வார்த்தையினால் நம்முடைய ஜீவியம் வெளிப்படுத்தப்படுகின்றதை நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

அவரில் சம்பவிக்கவிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் இயேசு நேரடியான பதிலாய் இருந்தார் என்று நம்புவது அனைவருக்கும் எளிதானது, ஏனென்றால் அது சம்பவித்ததைக் காண அவர்கள் பின்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பொல்லாத காலத்தில், அதை மற்றொரு விதத்தில் வியாக்கானிப்பதன் மூலம், அப்பொழுது அவர்கள் செய்த அதே காரியத்தை இவர்களும் செய்துகொண்டு, ஒரு பொய்யை விசுவாசிக்கும்படி கொடிய வஞ்சகத்திற்குள்ளாக ஜனங்கள் செல்ல காரணமாகியுள்ளனர். இந்தக் காலத்திற்காக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிற அதே வார்த்தையாக இது உள்ளது என்பதை அவர்கள் மாத்திரம் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்கும்.

இந்த செய்தியே, மணவாட்டியை ஒன்று சேர்க்கக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. இந்த செய்தியே, நாம் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தமே, கர்த்தர் உரைக்கிறதாவது என்று ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தமாய் உள்ளது.

இப்பொழுது, ​​வெறுமனே ஒரு குளிர்ந்த, சம்பிரதாயமான, வெற்றச்சார முறையான சபைகள், முதலியன, மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரம், அது நிலைக்காது; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதற்கு எந்த கவனத்தையும் ஒருபோதும் செலுத்த மாட்டார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட அங்கே ஒரு உண்மையான காரியத்தைப் போலவே இருக்கிறது. நீங்கள் யாவரும் செய்ய வேண்டியது ஒரு வார்த்தையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதேயாகும். வாக்களிக்கப்பட்ட காலமாயும்; மிக மகத்தான நேரமாயுமுள்ளதே! கிறிஸ்தவர்கள், எங்கும், நாம் ஜீவித்துகொண்டிருக்கிற வேளையை கவனித்துக் கொண்டிருக்கிறார்களே! குறித்துக் கொண்டு, வாசித்து, மிகவும் கூர்ந்து செவி கொடுங்கள்.

இப்பொல்லாத காலத்தின் தேவன் அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஜனங்கள் கேட்பதை தடுப்பதன் மூலம் அவர்களை வஞ்சிக்கும்படி அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறான். ஆதியிலே அவன் ஏவாளிடத்தில் செய்ததுபோல, அவர்கள் வெறுமனே ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்யவே அவன் முயற்சிக்கிறான்.

ஆனால் கிறிஸ்துவினுடைய வார்த்தை-மணவாட்டியோ ஒரு தலையண்டைக்கு வந்து கொண்டிருக்கிறாள். நாம் எங்கிருந்து ஆரம்பித்தோமோ அந்தத் துணையுடன் நாம் மீண்டும் இணைந்துகொண்டிருக்கிறோம். யாத்திரையின் நேரம் சமீபித்துவிட்டது. தேவன் தம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிற அவருடைய மணவாட்டிக்காக வருகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இங்கே கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை அழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த காலத்திற்காக, அவளுக்கென அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை ரூபுகாரப்படுத்துவதன் மூலம் அவர் அதைச் செய்துகொண்டு, அது கிறிஸ்து என்று காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

உங்களிடத்தில் நேரடியாக பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்க, உலகெங்கிலுமுள்ள மணவாட்டி ஒன்றிணைவதை விட மகத்தானது எதுவுமில்லை. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சத்தியம் என்று நம்பும்படிக்கு, வியப்புறவோ அல்லது ஜெபிக்கவோ கூட வேண்டியதில்லை. ஏனென்றால் அது மாத்திரமே ரூபகாரப்படுத்தப்பட்ட, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற சத்தமாகும்.

கேட்கும்படிக்கு எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள்:

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M: என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு., ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் கேட்கப்போகிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24-வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14-வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7-வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14

 


சனி, 21 ஜனவரி, 2023

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே, நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0725E மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்