ஞாயிறு
24 மார்ச் 2024
64-0726M
உன்னுடைய நாளையும் அதன் செய்தியையும் அடையாளங் கண்டு கொள்ளுதல்

அன்புள்ள விலையேறப்பெற்ற, அன்பானவர்களே,

நாம் அவருடைய விலையேறப்பெற்ற, பிரியமான மணவாட்டி என்பதை அறிவது எவ்வளவு அற்புதமானது. நாம் உலகம் முழுவதிலுமிருந்து கூட்டி சேர்க்கப்பட்டு, அவருடைய வார்த்தையின் பேரில் நம்மை ஒன்றிணைத்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு நம்முடைய ஆத்துமாக்களை போஷிக்கிறோம்.

அதன் முழுமையிலும், அதன் ரூபகாரப்படுத்துதலின் மற்றும் வெளிப்பாட்டின் வல்லமையிலும் நாம் அதை ஏற்றுக்கொண்டோம். நாம் அதன் ஒரு பாமாகிவிட்டோம். இது நமக்குள் இருக்கிற ஒன்றாகும். இது நமக்கு ஜீவனைவிட மேலானது.

அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரை: நாம் அடையாளங் கண்டு கொண்டோம்.

சாயங்கால வெளிச்ச செய்தியை: நாம் அடையாளங் கண்டுகொண்டோம்.

நாம் யார் என்பதை: நாம் அடையாளங் கண்டுகொண்டோம்.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசியினுடைய வார்த்தையை எடுத்து நம்மை வெட்டியெடுத்தார். அவர் செய்வதாக வாக்களித்தபடியே, மல்கியா 4-ன் மூலம் அவர் நம்மை வெட்டியிருக்கிறார். நாம் ஒவ்வொரு வார்த்தையையும் நம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம்.

ஜனங்களுக்கு மத்தியிலே ஒரு மகத்தான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்பதன் முக்கியத்துவத்தை அவர்களும் கூட உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்து தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க விரும்புகிறார்கள்.

இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட வழி இது என்று பரிசுத்த ஆவியானவரால் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கேட்க வேண்டிய சத்தம் இதுதான் என்பதை அவர்கள் அடையாளங் கண்டு கொள்கிறார்கள். இது அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துவதற்காக தேவனால் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆகாரமாய் இருக்கிறது.

வார்த்தை அதை வாக்களித்தது. ஒலிநாடாக்கள் அதை அறிவிக்கின்றன. அவர்கள் அதை விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது என்ன செய்தது? ஜனங்கள் சபைகளைவிட்டு வெளியேறிச் செல்வதைப் பார்ப்பது, ஆசாரியர்களை தொல்லைப்படுத்தினது. அவர், “உங்களில் யாராவது அவருடைய கூட்டத்தில் கலந்து கொண்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். நாங்கள் உங்களை ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றுவோம்” என்றார்.

இது நம்பமுடியாதது, ஆனால் இது இன்றைக்கும் அதே காரியமாகிவிட்டது. நீங்கள், "தயவுசெய்து, ஒலிநாடாக்களை இயக்குங்கள்" என்று கூறினால், அவர்கள் உங்களை அவர்களுடைய சபைகளிலிருந்து வெளியேற்றுவார்கள். இது மக்களைப் பிரிக்கும் என்று நாம் எப்போதாவது கற்பனை செய்திருக்க முடியுமா? நம்முடைய சபைகளில் தேவனுடைய சத்தத்தை இயக்கிக் கேட்கிறோமா?

சபை தங்களுடைய தீர்க்கதரிசிகளை மறந்துவிட்டது. அவர்களுக்கு "இனி அவர்கள் தேவையில்லை," என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தேவன் அவர்களை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்; அவர் தம்முடைய வார்த்தையினால் தம்முடைய ஜனங்களை வெட்டுகிறார். ஆனால் இது இந்த நாளில் அவர்களுக்கு மிகவும் பழமையானதாக உள்ளது.

நாம் நம்முடைய தீர்க்கதரிசியுடன் தரித்திருப்போம். இது அவருடைய மணவாட்டியை அழைக்கும் சத்தமாய் இருக்க வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை, எளிமையாக இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைவிட முக்கியமானது எதுவுமில்லை.

ஓ, தேவனுடைய ஆடுகளே, தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள்! "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது."

உன்னுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் அடையாளங் கண்டு கொள்ளுதல் 64-0726M, என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அந்த சத்தத்தை அடையாளங் கண்டுகொள்ள வந்து செவிகொடுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்